text
stringlengths
11
513
இடங்களில் வழிகாட்டுகின்றனர். வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்கின்றனர். உனக்கு இன்னும் ஒரு வியப்பான செய்தியும் சொல்கிறேன் , கேட்கிறாயா ? " " சொல் , கேட்கிறேன் " என்றான் கணியன் ' உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் ' சோபியா '. மேலும் ஐக்கிய நாடுகள் சபை ' புதுமைகளின் வெற்றியாளர் ' என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை. என்னைப் போன்ற எந்திரமனிதருக்கு இப்பட்டம்
வழங்கப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. " இப்படியும் நடக்குமா என்ன ? இனிவரும் காலங்களில் ' சோபியா ' போன்ற எண்ணற்ற எந்திரமனிதர்கள் உருவாக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் மனித இனத்தின் வளர்ச்சிக்கு உதவுவார்கள் " என்றது எந்திரமனிதன். " உங்களைப்பற்றி அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. சரி , என்னுடன் சதுரங்கம் விளையாட வருகிறாயா ? " என்று கேட்டான் கணியன். எந்திரமனிதன் தலையசைத்தது. எந்திரமனிதனுடன் சதுரங்கம் விளையாட மகிழ்வுடன் ஆயத்தமானான் கணியன். m ழ் கற்பவை கற்றபின் உங்களை ஓர் எந்திரமனிதனாகக் கற்பனை செய்துகொண்டு
நண்பர்களுடன் உரையாடுக. ஏம்- மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது அ ) நூலறிவு ஆ ) நுண்ணறிவு இ ) சிற்றறிவு ஈ ) பட்டறிவு 2. தானே இயங்கும் எந்திரம் அ ) கணினி ஆ ) தானியங்கி இ ) அலைபேசி ஈ ) தொலைக்காட்சி 3. ' நின்றிருந்த ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ ) நின் + றிருந்த ஆ ) நின்று + இருந்த இ ) நின்றி + இருந்த ஈ ) நின்றி + ருந்த 4. ' அவ்வுருவம் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ ) அவ்வு + ருவம் ஆ ) அ + உருவம் இ ) அவ் + வுருவம் ஈ ) அ + வுருவம் 3.
மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) மருத்துவம்துறை ஆ ) மருத்துவதுறை இ ) மருந்துதுறை ஈ ) மருத்துவத்துறை I 6. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) செயலிழக்க ஆ ) செயல்இழக்க இ ) செயஇழக்க ஈ ) செயலிலக்க 7. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் அ ) போக்குதல் ஆ ) தள்ளுதல் இ ) அழித்தல் ஈ ) சேர்த்தல் 8. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் அ ) அரிது ஆ ) சிறிது இ ) பெரிது ஈ ) வறிது கோடிட்ட இடங்களை நிரப்புக. 1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை 2.
தானியங்கிகளுக்கும் , எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு 3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் 4.'சோபியா ' ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக. 1. தொழிற்சாலை 2. உற்பத்தி 3. ஆய்வு 4. செயற்கை 5.நுண்ணறிவு குறுவினா 1. ' ரோபோ ' என்னும் சொல் எவ்வாறு உருவானது ? 2. ' டீப் புளூ ' - மீத்திறன் கணினி பற்றி எழுதுக. சிறுவினா 1. எந்திரமனிதனின் பயன்களை விளக்குக. 2. துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம் யாது ? சிந்தனை வினா
உங்களுக்கென ஒரு எந்திரமனிதன் இருந்தால் அதை எதற்கெல்லாம் பயன்படுத்துவீர்கள் எனச் சிந்தித்து எழுதுக. I இயல் மூன்று நுழையும்முன் குழந்தைகளிடமும் மாணவர்களிடமும் மிகுந்த அன்பு காட்டியவர் மறைந்த மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம். மாணவர்கள் முன்னேற பல வழிகளை எடுத்துச் சொன்னவர். எதிர்காலம் பற்றிக் கனவுகண்டு , அதை அடைய வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது. மாணவர்களோடு பேசுவதை மிகவும் விரும்பிய அவரைச் சந்தித்தால் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா ? வாருங்கள் அவரிடம் கேட்டிடலாம் ; அறிவியலைக் கற்றிடலாம். அரங்கப்
பொறுப்பாளர் விரிவானம் இடம் : தொழில்நுட்பக் கண்காட்சி மாணவர்கள் தொழில்நுட்பக் கண்காட்சி அரங்குகளை ஒவ்வொன்றாகப் பார்வையிட்டுக் கொண்டே வருகின்றனர். அங்கிருக்கும் ' கலாம் அரங்கு ' என்னும் பெயர்ப்பலகை அவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அரங்கினுள் ஆர்வத்துடன் நுழைகின்றனர். அங்கு அப்துல் கலாமின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அவற்றைப் பார்வையிட்டு முடித்த நேரத்தில் அங்கே ஒரு பெரிய திரை இருப்பதைக் காண்கின்றனர். அப்போது...... : மாணவர்களே இங்கே வாருங்கள் ! ( மாணவர்கள் அனைவரும் அகன்ற திரையின் முன்
கூடுகின்றனர் ) : அப்துல் கலாம் அவர்களை நீங்கள் காணவேண்டுமா ? அரங்கப் பொறுப்பாளர் மாணவர்கள் அரங்கப் பொறுப்பாளர் மாணவர்கள் ஒளி பிறந்தது அப்துல் கலாமுடன் நேர்காணல் அரங்கப் பொறுப்பாளர் மாணவர்கள் : கலாம் ஐயாவைக் காண்பதா ! எப்படி ? I பொறுங்கள் ! கலாம் அவர்கள் இதோ வருகிறார். ( திரையில் அப்துல் கலாம் தோன்றுகிறார் ) : கலாம் ஐயா , எங்கள் வினாக்களுக்கு விடை தருவாரா ? : நிச்சயம் பதில் தருவார். : நான் கேட்கிறேன். நான்தான் முதலில் கேட்பேன். எது கேட்டாலும் பதில் சொல்வாரா ? ( அங்கே ஒரே ஆரவாரம் ) I அரங்கப் பொறுப்பாளர்
அருண்மொழி தேன்மொழி அப்துல் கலாம் அப்துல்லா 17 அப்துல் கலாம் பொறுங்கள் ! உங்கள் வினாக்களை ஒவ்வொருவராகத் திரையை நோக்கிச் சத்தமாகக் கேளுங்கள். ஐயா பதில் தருவார். முதல் கேள்வியை நான் கேட்கிறேன். வணக்கம் குழந்தைகளே ! அறிவியல் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமான முதல் நிகழ்வு எது ஐயா ? ( அப்துல் கலாம் பதிலளிக்கிறார் ) நான் பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோது என் அறிவியல் ஆசிரியர் பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை விளக்கிக் கூறினார். அன்று முதல் , வானில் பறக்க வேண்டும் என்பது என் வாழ்க்கையின் குறிக்கோள்
ஆகிவிட்டது. அதுவே என் அறிவியல் ஆர்வத்தின் தொடக்கம். அடுத்து நான் கேட்கட்டுமா ? உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது ஐயா ? தமிழில் திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்த நூலாகும். ' அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண் ' என்னும் குறள் என் வாழ்க்கைக்கு வலுசேர்த்தது. அதுபோல் ' லிலியன் வாட்சன் ' எழுதிய , விளக்குகள் பல தந்த ஒளி ( Lights from many lamps ) என்னும் நூலையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் படித்தபோது அறிவு , தன்னம்பிக்கை , மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றேன். : நீங்கள்
பெரிதும் மகிழ்ந்த நிகழ்வு ஏவுகணைச் சோதனைதான் அல்லவா ? : போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக்கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் எனக்குப் பெருமகிழ்வை அளித்தது. ஐயா , சுதந்திர இந்தியாவின் வெற்றிகளாக எவற்றைக் கருதுகிறீர்கள் ? • உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். • தகவல் தொழில்நுட்பத்
துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளோம். • எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது. அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளோம். நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன. பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம். இவற்றையெல்லாம் இந்தியாவின் வெற்றிகளாகக் கருதுகின்றேன். I இந்த அளவிற்கு முன்னேறியுள்ளோம். ஆனால் , மனிதர்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அவற்றிற்கான மருந்துகள் இல்லையே !
அவற்றைக் கண்டுபிடிக்க என்ன மாதிரியான ஆய்வுகள் நடைபெறுகின்றன ஐயா ? அப்துல் கலாம் : கடலுக்கு அடியில் மனிதரால் கண்டறியப்படாத ஏராளமான தாவரங்கள் , உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து புதிய மூலக்கூறுகளைப் பெற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவை வெற்றிபெறும் போது ' எய்ட்ஸ் ' போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு மட்டுமல்லாமல் இனிவரும் புதிய நோய்களுக்கும்கூடத் தடுப்பு மருந்து கண்டறியப்படலாம். 66 : செவ்வாய்க்கோளில் மனிதன் வாழ முடியுமா ? எங்களையெல்லாம் எப்போது நிலவிற்கு அழைத்துச் செல்வீர்கள் ? 525 கிலோ எடையுள்ள
ஆளில்லாச் செயற்கைக்கோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏவூர்திகளில் மனிதர்களை நிலவிற்கு அனுப்புவோம். எனவே , நிலவிற்குச் செல்லத் தயாராக இருங்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்தியா எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள் ஐயா ? மூன்று சிறப்புகளைப் பெற்றிருக்கும் என நம்புகிறேன். 1. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்வி முறை இருக்கும். 2. அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து போயிருக்கும். ஆயினும் , நாம் தயாரித்து அனுப்பிய செயற்கைக்கோள்கள் சூரிய
சக்தியைப் பெற்று நமக்கு அளிக்கும். 3. செவ்வாய்க்கோளில் மனித இனம் குடியேறி இருக்கும். நிலவிற்குச் செல்லலாம் என்றால் சூரியனுக்கும் கூடச் செல்ல முடியுமா ஐயா ? சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால் ஒளியையும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது. தாங்கும் அளவுக்கு இன்றைய சூழலில் வருங்காலத்தில் அதிகபட்ச வெப்பத்தைத் தாங்கும் கருவிகள் கண்டறியப்படலாம். அப்போது மனிதன் சூரியனையும்கூடச் சென்றடையலாம். கவசங்கள் இல்லை. வெப்பத்தையும் அவ்வெப்பத்தைத் : ஐயா , உலகின் முதல் விஞ்ஞானியாக யாரைக் கூறலாம் ? சொல்லுங்களேன் ? :
அறிவியலின் அடிப்படை , கேள்வி கேட்கின்ற மனப்பான்மைதான். அறிவியல் பிறந்தது , வளர்ந்தது , வாழ்வது எல்லாம் இந்தக் கேள்வி கேட்கும் திறனால்தான். குழந்தைகளின் கேள்விகளுக்குத்தான் முடிவே இல்லை. கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான். எனவே குழந்தைகளாகிய நீங்கள்தாம் இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள். சரி. நாங்கள்தான் முதல் விஞ்ஞானிகளா ? அப்படியென்றால் வளரும் இந்தியாவிற்கான எங்கள் பங்கு என்னவாக இருக்க வேண்டும் ஐயா ? மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துக் கற்றாலும் அதில் உயர்ந்த
குறிக்கோளை மனதில் கொள்ளுங்கள். அக்குறிக்கோளுக்கான அறிவையும் அனுபவத்தையும் சேகரித்துக் கொள்ளுங்கள். கடின உழைப்பால் வெற்றியடையுங்கள். உங்கள் வெற்றி இந்தியாவின் வெற்றிக்கு உதவும் : வெற்றியை அடையும் வழி எது ஐயா ? 67 அப்துல் கலாம் : இரண்டு வழிகள் உள்ளன. 1. அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள். 2. வியர்வை ! வியர்வை ! வியர்வை ! ( " நன்றி குழந்தைகளே ! " என்றபடி திரையில் அப்துல்கலாம் கையசைத்து மெல்ல மறைகிறார். மாணவர்கள் வியந்து நிற்கின்றனர். ) அரங்கப் பொறுப்பாளர் மாணவர்கள் I மிக்க மகிழ்ச்சி , நன்றி ஐயா !
மாணவ - மாணவியர் புத்தொளி பெற்றவர்களாக அரங்கைவிட்டு வெளியேறுகின்றனர். 2. கற்பவை கற்றபின் 1. கனவு காணுங்கள் என்பது அப்துல் கலாமின் பொன்மொழி. உங்கள் கனவுகள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக. 3. : என்ன மாணவர்களே ! அப்துல் கலாம் ஐயாவிடம் இருந்து உங்களின் எல்லா வினாக்களுக்கும் விடை கிடைத்ததல்லவா ? மகிழ்ச்சிதானே ? நீங்கள் நேர்காணல் செய்ய விரும்பும் ஒருவரைக் குறிப்பிடுக. அவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களைப் பட்டியலிடுக. நீங்கள் அப்துல் கலாமிடம் கேட்க விரும்பும் வினாக்களை எழுதுக. ஏம் மதிப்பீடு 1. சுதந்திர இந்தியா
அடைந்த வெற்றிகளாக அப்துல் கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார் ? 2. தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது ? 68 I இயல் மூன்று நம் தமிழ் மொழியின் சொற்கள் நாம் எளிதாக ஒலிக்கும் வகையில் உருவானவை. வேற்று மொழிச்சொற்களைப் பேசுகையில் நமக்குத் தடுமாற்றம் ஏற்படுகிறது. நம் மொழியின் சொற்களின் இயல்பையும் மரபையும் அறிந்து கொள்வது தேவையானது. சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் எந்தெந்த எழுத்துகள் வரும் என்பதை அறிந்து கொள்வதால் மொழியை நன்கு பேசமுடியும். கீழே உள்ள சொற்களைக் கவனியுங்கள். நன்றி
மொழி முதல் , இறுதி எழுத்துகள் கற்கண்டு ணன்றி னன்றி இவற்றுள் நன்றி என்பதே சரியான சொல் அல்லவா ? பிழையின்றி எழுத எந்தெந்த எழுத்துகளை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்துகொள்வதும் மிக இன்றியமையாதது. மொழி முதல் எழுத்துகள் தமிழ் எழுத்துகளின் வகை , தொகை பற்றி அறிந்து கொண்டோம். அவற்றுள் எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் வருவதில்லை. சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் எழுத்துகள் பற்றித் தெரிந்துகொள்வோம். மொழி முதல் எழுத்துகள் மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு. சொல்லின் முதலில் வரும்
எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர். உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். * க , ச , த , ந , ப , ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். ங , ஞ , ய , வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும். ங - வரிசையில் ' ங ' என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா - ஙனம் ( இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம் , இங்ஙனம் , எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது. ) ஞ -
வரிசையில் ஞ , ஞா , ஞெ , ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். வரிசையில் ய , யா , யு , யூ , யோ , யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். வ வரிசையில் வ , வா , வி , வீ , வெ , வே , வை , வெள ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் • மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாரா. • ட , ண , ர , ல , ழ , ள , ற , ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது. • ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது. • ங , ஞ , ய ,
வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா. ( எ.கா. ) க - வரிசை எழுத்துகள் கடல் , காக்கை , கிழக்கு , கீற்று , குருவி , கூந்தல் , கெண்டை , கேணி , கைகள் , கொக்கு , கோலம் , கௌதாரி. டமாரம் , ரம்பம் , லண்டன். ஃப்ரான்ஸ் , டென்மார்க் , போன்றவை பிறமொழிச் சொற்கள். இவற்றைத் தமிழில் ஒலி பெயர்த்து எழுதுகிறோம். மொழி இறுதி எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர். • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்
மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும். $ • ஞ் , ண் , ந் , ம் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் , ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். ( உரிஞ் , வெரிந் , அவ் ) மொழி இறுதியாகா எழுத்துகள் சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை. • உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் ணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும். அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும். ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது. க் , ங் , ச் , ட் , த்
, ப் , ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை. உயிர்மெய் எழுத்துகளுள் ' ங ' எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது. கார்த்திக் , ஹாங்காங் , சுஜித் , மார்க்கெட் , திலீப் , மார்ச் போன்ற பிறமொழிப் பெயர்ச்சொற்களில் இவ்வெழுத்துகள் இறுதி எழுத்துகளாக இடம்பெறுவதுண்டு. * எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை. * ஒகர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை. நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில்
வரும் சொல்லின் இடையில் வரும் எழுத்துகள் • மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும். • உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும். • ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும். அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும். அளபெடை பற்றி உயர் வகுப்புகளில் அறிந்துகொள்வீர்கள். கற்பவை கற்றபின் ஞ , ய , வ ஆகிய உயிர்மெய் எழுத்துகள் வரிசையில் மொழிமுதல் எழுத்துகளாக அமைபவை எவை ? அவ்வெழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களை அகராதியைப் பார்த்து எழுதுக. மதிப்பீடு 1. மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய்
எழுத்துகள் யாவை ? 2. மொழிக்கு இறுதியில் வாரா மெய்யெழுத்துகள் யாவை ? 3. சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்துகள் எவை ? | ழ மொழியை ஆள்வோம் ! கண்டும் கேட்டும் மகிழ்க. அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய காணொலிகளைக் கண்டும் கேட்டும் மகிழ்க பேசி வெளிப்படுத்துக. உங்களை ஓர் அறிவியல் அறிஞராகக் கற்பனை செய்து கொண்டு எவ்வகைக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவீர்கள் என்பது குறித்துப் பேசுக. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. 1921 ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில் , ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு , பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார். ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் " இராமன் விளைவு என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல்
நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் " தேசிய அறிவியல் நாள் " எனக் கொண்டாடி மகிழ்கிறோம். அவர் யார் தெரியுமா ? அவர்தான் சர். சி. வி. இராமன். " 1. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார் ? 2. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது ? அ ) கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது ? ஆ ) கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை ? இ ) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது ? ஈ ) கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது ? 3. தேசிய அறிவியல் நாள் எப்போது
கொண்டாடப்படுகிறது ? ஏன் ? 4. இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக. ஆசிரியர் கூறக்கேட்டு எழுதுக. ஈடுபாடு நுண் பொருள் உற்றவன் பெருங்கடல் துருவப் பகுதி குறிக்கோள் கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக. அறிவியல் ஆக்கங்கள் தொழில்நுட்பம் நுண்ணுணர்வு மொழியோடு விளையாடு சொல்வளம் பெருக்குக. பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக. 1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். 2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன். 3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின் களைக்
கண்டுபிடித்தனர். 4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பகிர்க. போலியோ மூலக்கூறுகள் ரோபோக்கள் கண்டுபிடிப்பினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க. கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்துக. 1. விகண்லம் 2. மத்ருதும்வ 3. அவிறில்ய ணினிக 5. எலால்ம் 6. அப்ழைபு வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக. எழுத்துகளை வரிசைப்படுத்தி தமிழக அறிவியல் அறிஞரைக் கண்டுபிடியுங்கள் வாக்கியத்தை நீட்டி எழுதுக. ( எ.கா. ) நான் படிப்பேன். ( அறிவியல் , பாடம் , நன்றாக ) நான் பாடம் படிப்பேன். நான் அறிவியல் பாடம்
படிப்பேன். நான் அறிவியல் பாடம் நன்றாகப் படிப்பேன். 1. அறிந்து கொள்ள விரும்பு. ( எதையும் , காரணத்துடன் , தெளிவாக ) 2. நான் சென்றேன். ( ஊருக்கு , நேற்று , பேருந்தில் ) அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக. ( எ.கா. ) அறி - அறிக , அறிந்து , அறிஞர் , அறிவியல் , அறிவிப்பு 1. பார் 2. செய் 3.தெளி 4. படி மெய் எழுத்து நடுவில் அமையுமாறு சொற்களை உருவாக்கு. ( எ. கா. ) கம்பு இடமிருந்து வலம் 1. அப்துல்கலாமின் சுயசரிதை 3. சிந்தித்துச் செயல்படும் தானியங்கி 10. எந்திரமனிதனுக்குக் குடியுரிமை வழங்கிய
முதல் நாடு 8. வலமிருந்து இடம் 2. ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல். 6. சதுரங்கப் சூழலைக் கையாள்க. மாலையில் பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறீர்கள். அப்போது பேருந்து பழுதாகிப் பாதி வழியில் நின்றுவிடுகிறது. இந்தப் பேருந்தை விட்டால் உங்கள் ஊருக்கு வேறு பேருந்து இல்லை. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் ? . அழ ஆரம்பித்து விடுவேன். யாரிடமாவது உதவி கேட்பேன். அருகில் உள்ளவரிடம் அலைபேசியை வாங்கி வீட்டிற்குத் தகவல் தருவேன். ஊருக்கு நடந்தே செல்லத் தொடங்குவேன். நிற்க அதற்குத் தக... என்
பொறுப்புகள்... அறிவியல் கருவிகளை நன்மைக்கு மட்டும் பயன்படுத்துவேன் கலைச்சொல் அறிவோம். செயற்கை நுண்ணறிவு மீத்திறன் கணினி செயற்கைக் கோள் நுண்ணறிவு பலவகை எந்திர மனிதர்களின் படங்களை இணையத்தில் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக. செயல்பாட்டிற்கான உரலி Google Handwriting இணையச் செயல்பாடுகள் Google Handwriting Input எனும் விசைப்பலகையைப் பயன்படுத்துதல் செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப்பெறும் படம் கல்வியின் சிறப்பையும் பயனையும் உணர்தல் கல்விப்பணி ஆற்றிய பெருமக்களைப் பற்றி அறிதல் நூலகம் பற்றித் தெரிந்து கொள்ளுதல்
நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் சொற்களில் எழுத்துகள் அமையும் முறையை அறிந்து பயன்படுத்துதல் இயல் நான்கு நுழையும்முன் சொல்லும் பொருளும் மாசற் சீர்தூக்கின் தேசம் மன்னற்கு கவிதைப்பேழை மூதுரை மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. * கல்விக்கு எல்லை இல்லை. மனிதன் பிறந்தது முதல் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்கிறான். கல்வி மனிதனை உயர்த்துகிறது. கல்வியும் செல்வமாகக் கருதத் தக்கது. அது
பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும். கல்வியைப் பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது. அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப் பெறுவான். எனவே , நாமும் கற்போம் ; வளம்பெறுவோம். குற்றம் இல்லாமல் ஒப்பிட்டு ஆராய்ந்தால் நாடு மன்னனுக்கு ஔவையார் பாடலின் பொருள் மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர். மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு. நூல் வெளி இந்நூலின் ஆசிரியர்
ஔவையார். இவர் ஆத்திசூடி , கொன்றை வேந்தன் , நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன. 78 1. கல்வியே அழியாச் செல்வம் என்னும் தலைப்பில் பேசுக. 2. கல்வி பற்றிய பழமொழிகள் அல்லது பாடல் அடிகள் எவையேனும் இரண்டனைப் பெரியோர்களிடம் கேட்டு எழுதி வருக. * மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மாணவர்கள் நூல்களை 2. கற்பவை கற்றபின் அ ) மேலோட்டமாக
ஆ ) மாசுற இ ) மாசற ஈ ) மயக்கமுற மெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) இடம் + மெல்லாம் ஆ ) இடம் + எல்லாம் இ ) இட + எல்லாம் + மெல்லாம் 3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) மாச + அற ஆ ) மாசு + அற இ ) மாச + உற கற்க வேண்டும். அ ) குற்றமில்லாதவர் இ ) குற்றமல்லாதவர் ஈ ) மாசு 4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஆ ) குற்றம் இல்லாதவர் ஈ ) குற்றம் அல்லாதவர் 5. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஆ ) சிறப்புடையார் ஈ ) சிறப்பிடையார்
அ ) சிறப்புஉடையார் இ ) சிறப்படையார் குறுவினா கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை ? சிந்தனை வினா 1. கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக. 2. கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள் ? இயல் நான்கு நுழையும்முன் சொல்லும் பொருளும் தூற்றும்படி மூத்தோர் மேதைகள் கவிதைப்பேழை துன்பம் வெல்லும் கல்வி " கல்வி அழகே அழகு " என்பர் பெரியோர். கற்றபடி நிற்பதே அந்த அழகைப் பெறுவதற்கான வழி. கல்வி , அறிவை வளர்ப்பதோடு பண்படுத்தவும் செய்யும். எவ்வளவுதான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் அந்தக் கல்வி
பயனற்றுப் போகும். பண்பட்ட மனிதரின் புகழே பல்லாண்டு நிலைத்திருக்கும். எனவே , படிப்போம் ! பண்பாட்டோடு நிற்போம் ! பார் போற்ற வாழ்வோம் ! ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே - நம் - நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது— பண்பு முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது - தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ சோம்பலைக்
கொல்லும் திறன் பெற்றிட வேணும் வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும் வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும் பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இகழும்படி பெரியோர் அறிஞர்கள் பாடலின் பொருள் நாம் நூல்களைக் கற்ற தே இருந்துவிடக்கூடாது. ர் D பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக்
கூடாது. பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது. கற்றதன் பயனை மறக்கக் கூடாது. நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது. நல்லவர்கள் குறைசொல்லும்படி வளரக் கூடாது. தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலைப் போக்கிட வேண்டும். பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழவேண்டும். அதன்மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறவேண்டும். பெற்ற
தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழவேண்டும். 3. நூல் வெளி எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர். கற்பவை கற்றபின் 1. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடலை இசையுடன் பாடி மகிழ்க. 2. நூலகத்திற்குச் சென்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வேறு பாடல் ஒன்றை எழுதி வருக. ' ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி இல்லை ' என்னும்
தலைப்பில் பேசுக. மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மாணவர் பிறர் அ ) போற்றும்படி ஆ ) தூற்றும்படி 2. நாம் அ ) இளையோர் ஆ ) ஊரார் சொற்றொடரில் அமைத்து எழுதுக 1. மனமாற்றம்_ 2. ஏட்டுக் கல்வி 3. நல்லவர்கள் 4. சோம்பல் குறுவினா நடக்கக் கூடாது. சொல்படி நடக்க வேண்டும். இ ) மூத்தோர் 3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) கையில் + பொருள் ஆ ) கைப் + பொருள் கை + பொருள் ஈ ) கைப்பு + பொருள் 4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) மானம்இல்லா ஆ ) மானமில்லா இ )
மானமல்லா ஈ ) மானம்மில்லா இ ) பார்க்கும்படி ஈ ) வியக்கும்படி 1. நாம் யாருடன் சேரக்கூடாது ? 2. நாம் எதை நம்பி வாழக்கூடாது ? 3. நாம் எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார் ? 4.நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம் ? சிந்தனை வினா நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள் ? ஏன் ? ஈ ) வழிப்போக்கர் இயல் நான்கு கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன. தொடக்கத்தில் ஆசிரியரின் வீட்டிலேயே தங்கி மாணவர்கள் கல்வி கற்றனர். பிறகு நாள்தோறும் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கல்வி கற்றனர். அதன் பிறகு பொதுவான
ஓர் இடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர். இவையே இன்றைய பள்ளிக்கூடங்கள் ஆகும். முன்பு ஒரு சில ஊர்களில் மட்டும் பள்ளிகள் இருந்தன. இன்று பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தகைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவரைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். நுழையும்முன் -ரைநடை உலகம் கல்விக்கண் திறந்தவர் நிகழ்வு - 1 சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த மகிழுந்து ஒன்று அங்கே நின்றது. அதிலிருந்து ஒருவர் கீழே இறங்கினார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களைக் கூப்பிட்டு , அவர்களோடு
உரையாடினார். " என்னடா தம்பிகளா ! பள்ளிக்கூடம் போகாமல் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருக்கீங்க ? ஏன் பள்ளிக்கூடம் விடுமுறையா ? " என்று அவர் கேட்டார். " பள்ளிக்கூடமா ? அதெல்லாம் எங்க ஊரில் கிடையாது " என்றனர் சிறுவர்கள். " அப்படியா ? உங்க ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தா நீங்கள் எல்லாரும் படிப்பீங்களா ? " என்று கேட்டார் அவர். " ஓ ! படிப்போமே ! " என்றனர் சிறுவர்கள். ஊர்தோறும் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் அவர். நிகழ்வு - 2 பள்ளி விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றார் அவர். அப்போது மாணவர்களிடம் "
படிப்பறிவு இருந்தால்தான் நாடு முன்னேற்றம் அடையும். எனவேதான் நாடு முழுக்க ஐம்பதாயிரம் பள்ளிகளைத் திறக்க முடிவு பண்ணியிருக்கோம். குழந்தைங்க நீங்க எவ்வளவு தூரம் நடந்து போவீங்க ? நீண்ட தூரம் நடந்தால் களைச்சுப்போயிடுவீங்க. அப்புறம் எப்படிப் படிக்க முடியும் ? அதனால் ஒரு மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி , மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி , ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி இருக்கணும்னு திட்டம் " என்று பேசினார். நிகழ்வு - 3 பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தேசியக் கொடி ஏற்ற அவரை அழைத்தனர் அவர் கொடி ஏற்றும்போது அனைவரும்
எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர். அப்போது மாணவன் ஒருவன் மயங்கி விழுந்தான். அனைவரும் பதற்றம் அடைந்தனர். தண்ணீர் தெளித்து அவனை எழுப்பினர். மயக்கம் தெளிந்த சிறுவனிடம் அவர் " காலையில் சாப்பிட்டாயா ? " என்று கேட்டார். அவன் " எதுவும் சாப்பிடவில்லை " என்றான். அதற்கு அவர் " ஏன் ? " என்று கேட்டார். மாணவன் " சாப்பிட எதுவும் இல்லை " என்று பதில் கூறினான். இதற்குப் பிறகு படிக்க வரும் மாணவர்களுக்கு ஒரு வேளை உணவாவது வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார் அவர். நிகழ்வு - 4 பரமக்குடி தரைப்பாலத்தைப் பார்த்த போது உடன் வந்த
கல்வி அதிகாரியிடம் பேசினார். ' இந்தக் காட்டாற்றில் தண்ணீர் போகும் போது , இந்தப் பக்கத்து மாணவர்கள் எப்படிப் பள்ளிக்கூடத்திற்குப் போவார்கள் ? " " மழைக்காலத்தில் என்றார். மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள் ஐயா " என்றார் அதிகாரி. " அப்போ ! இந்தப் பக்கம் ஒரு பள்ளிக்கூடம் கட்டலாமே ? " என்றார் அவர். " கல்வித்துறை விதியின்படி மூன்று மைல் தூரத்திற்குள் பள்ளிக்கூடம் இருந்தால் , பக்கத்தில் வேறு பள்ளிக்கு அனுமதி கிடையாதே ! " என்று அதிகாரி கூறினார். அவர் முடிப்பதற்குள் " நீங்க இந்தக் காட்டாற்றைக் காரணம் காட்டுங்க. இந்தப்
பக்கம் ஒரு பள்ளிக்கூடம் கட்டஅனுமதி கேளுங்க. நான் ஏற்பாடு செய்கிறேன் " என்றார் அவர். ஆடு மேய்க்கும் சிறுவர்களையும் பள்ளிக்கூடம் செல்ல வழி செய்தவர் யார் தெரியுமா ? குழந்தைகள் பள்ளி செல்வதற்காக நீண்ட தூரம் நடக்கக்கூடாது என்று எண்ணியவர் யார் தெரியுமா ? பள்ளிக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்க வேண்டும் என்று நினைத்தவர் யார் தெரியுமா ? கல்வித்துறை விதிகளை மாணவர்களின் நலனுக்காக மாற்றி , அவர்கள் வாழும் இடங்களிலேயே பள்ளிக்கூடங்களைத் திறக்கச் செய்த சிந்தனையாளர் யார் தெரியுமா ? அவர்தான் கல்விக் கண்
திறந்தவர் என்று தந்தை பெரியாரால் மனமாரப் பாராட்டப்பட்ட மறைந்த மேனாள் முதல்வர் காமராசர் ஆவார். தெரிந்து தெளிவோம் காமராசரின் சிறப்புப் பெயர்கள் பெருந்தலைவர் படிக்காத மேதை கர்மவீரர் காமராசரின் கல்விப்பணிகள் காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார். மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு
வந்தார். பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார். பள்ளிகளின் வசதிகளைப் பெருக்கப் பள்ளிச்சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார். ܀ கருப்புக் காந்தி ஏழைப்பங்காளர் தலைவர்களை உருவாக்குபவர் மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள் , மருத்துவக் கல்லூரிகள் , கால்நடைமருத்துவக் கல்லூரிகள் , ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார். தமிழ்நாட்டில் பல கிளைநூலகங்களைத் தொடங்கினார். இவ்வாறு கல்விப்புரட்சிக்கு வித்திட்டவர் காமராசரே ஆவார். தெரிந்து
தெளிவோம் காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகள் மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. நடுவண் அரசு 1976 இல் பாரதரத்னா விருது வழங்கியது. + காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் , விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது. சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும்
காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. கற்பவை கற்றபின் 1. காமராசரின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்வு ஒன்றினை அறிந்து வந்து வகுப்பறையில் பேசுக. 2. தற்போது மாணவர்களுக்கு அரசு அளிக்கும் நலத்திட்டங்களைப் பட்டியலிடுக. மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் அ ) ஆடு மேய்க்க ஆள் இல்லை இ ) வழி தெரியவில்லை 2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) பசி + இன்றி ஆ ) பசி +
யின்றி இ ) பசு + இன்றி ஆ ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை ஈ ) பேருந்து வசதியில்லை 3. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) படி + அறிவு ஆ ) படிப்பு + அறிவு இ ) படி + வறிவு ஈ ) படிப்பு + வறிவு காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) காட்டாறு ஆ ) காடாறு இ ) காட்டுஆறு ஈ ) காடுஆறு சொற்றொடரில் அமைத்து எழுதுக. அ ) வகுப்பு ஆ ) உயர்கல்வி இ ) சீருடை கோடிட்ட இடங்களை நிரப்புக. 1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க அறிமுகப்படுத்தினார். 2. காமராசரைக் ' கல்விக் கண் திறந்தவர் ' என
மனமாரப் பாராட்டியவர் ஈ ) பசு + யின்றி குறு வினா 1. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை ? 2. காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி யாது ? சிறு வினா காமராசரின் கல்விப்பணிகள் குறித்து எழுதுக. சிந்தனை வினா நீங்கள் முதலமைச்சரானால் கல்வி முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை வகுப்பீர்கள் ? இயல் நான்கு நுழையும்முன் விரிவானம் நூலகம் நோக்கி... " கற்றது கைம்மண் அளவு , கல்லாதது உலகளவு " என்பர். உலக அறிவை நாம் பெறுவதற்குப் பாடநூல்கள் மட்டும் போதாது. பல்வேறு துறை சார்ந்த
நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். அதற்குத் துணைபுரிவன நூலகங்களே ஆகும். நூலகங்கள் மாவட்ட நூலகம் , கிளை நூலகம் , ஊர்ப்புற நூலகம் , பகுதி நேர நூலகம் , தனியாள் நூலகம் எனப் பலவகைப்படும். ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் நம் தமிழ்நாட்டில் உள்ளது. அதைப்பற்றி அறிந்து கொள்வோம். அண்ணா நூற்றாண்டு நூலகம் ( ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் ஒரு நாள் களப்பயணமாகச் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வருகின்றனர். ] ஆசிரியர் : மாணவர்களே ! இதோ , இதுதான் அண்ணா நூற்றாண்டு நூலகம். மாணவர்கள் : ஆ ! எவ்வளவு பெரிய
நூலகம் ! ஆசிரியர் : ஆம். ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் இதுதான். தரைத்தளத்தோடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர். சரி ! சரி ! வாருங்கள். உள்ளே சென்று பார்க்கலாம். அனுமதிக் கடிதத்தை ஆசிரியர் வரவேற்பாளரிடம் கொடுக்கிறார். அவர் தலைமை நூலகருக்குத் தொலைபேசியில் ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய ' ஆசிரியரும் மாணவர்களும் ' வந்துள்ள நூலகம் சீனாவில் உள்ளது. செய்தியைத் தெரிவிக்கின்றார். தலைமை நூலகர் உதவி நூலகர் ஒருவரை வழிகாட்டியாக அனுப்பிவைக்கின்றார். ] ( சுவரில்
மாட்டப்பட்டிருக்கும் ஒரு படத்தை மாணவர்கள் பார்க்கின்றனர். ) கவிதா : ஐயா , இந்தப் படத்தில் இருப்பவர் யார் ? நூலகர் நூலகர் தெரிந்து தெளிவோம் : இவர்தான் முனைவர் இரா. அரங்கநாதன். நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை ( Father of Indian library science ) என்று அழைக்கப்படுகிறார். மாணவர்களே ! தரைத் தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. அவர்கள் தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்கள் உள்ளன. கேட்டு அறிய ஒலி வடிவ நூல்கள் , குறுந்தகடுகள் வடிவில் உள்ளன. அவர்களுக்கு
உதவி செய்யப் பணியாளர்களும் உள்ளனர். இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது. படியெடுக்கும் வசதியும் உண்டு. பிரெய்லி நூல் என் பக்கத்து வீட்டு அண்ணாவிற்குப் பார்வைக் குறைபாடு இருந்தும் பட்டப்படிப்பு முடித்துள்ளார். அவருக்கு இது மிகவும் பயன்படும். அவரிடம் இந்தத் தகவலைக் கூறப் போகிறேன். கணியன் : இதோ நகரும் படிக்கட்டு. இதில் ஏறி நாம் முதல் தளத்திற்குச் செல்வோம் வாருங்கள். இந்த முதல் தளம் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை
மரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. சிறுவர்கள் மட்டுமல்ல அனைவரின் மனத்தையும் ( குழந்தைகள் பிரிவில் அமைக்கப்பட்டிருந்த நூல் அடுக்குகளையும் விளையாடும் இடத்தையும் மாணவர்கள் பார்த்து மகிழ்ந்தனர். அங்குக் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இருந்த புத்தகங்களை ஆவலுடன் கையில் எடுத்து மகிழ்ச்சியுடன் பார்த்தனர். அப்பிரிவை விட்டுப் பிரிய மனமில்லாமல் மாணவர்கள் நகர்ந்தனர். ) இனியா ( ஒவ்வொரு நூலகர் I கொள்ளைகொள்ளும் பகுதி இது. இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து
வைக்கப்பட்டு உள்ளன. பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன. இந்த ஒரு தளத்தைப் பார்க்கவே இன்று ஒரு நாள் போதாது போலிருக்கிறதே !. ஆம் இனியா , நீ கூறுவது சரிதான். தளமாகப் பார்த்தபடி சென்று ஏழாம் தளத்தை அடைகின்றனர். ) இதுதான் ஏழாம் தளம். இத்தளத்தில் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் உள்ளது. இங்குப் பழைமையான ஓலைச் சுவடிகள் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளன. இதே தளத்தில் வரலாறு , புவியியல் , சுற்றுலா நூல்களும் உள்ளன. இங்கு அனைத்துவகைப் போட்டித் தேர்வுகளுக்கும்
தேவையான நூல்கள் உள்ளன. மின் நூலகமும் உள்ளது. அனைத்துத் துறை சார்ந்த தரமான மின்நூல்களும் மின் இதழ்களும் உள்ளன. தெரிந்து தெளிவோம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்கள் தரைத்தளம் முதல் தளம் இரண்டாம் தளம் மூன்றாம் தளம் நான்காம் தளம் ஐந்தாம் தளம் ஆறாம் தளம் ஏழாம் தளம் எட்டாம் தளம் சொந்த நூல் படிப்பகம் , பிரெய்லி நூல்கள் குழந்தைகள் பிரிவு , பருவ இதழ்கள் தமிழ் நூல்கள் கணினி அறிவியல் , தத்துவம் , அரசியல் நூல்கள் பொருளியல் , சட்டம் , வணிகவியல் , கல்வி கணிதம் , அறிவியல் , மருத்துவம் பொறியியல் , வேளாண்மை ,
திரைப்படக்கலை வரலாறு , சுற்றுலா , அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் கல்வித் தொலைக்காட்சி , நூலகத்தின் அலுவலகப் பிரிவு புத்தகங்களை நாம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியுமா ? முடியாது மாதவி. இங்கேயே அமர்ந்துதான் படிக்க வேண்டும். இந்த நூலகத்தில் எங்கும் ' குளு குளு ' வென உள்ளதே ! மாணவர்கள் : இனி , எங்கள் வீட்டின் கிளை ஆமாம். நூலகம் முழுவதுமே குளிர்பதன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே வசதியுடன் கூட்ட அரங்கு , கலையரங்கு , கருத்தரங்கக் கூடம் , கண்காட்சி அரங்கு போன்றவையும் உள்ளன. : ஆகா ! இத்தனை வசதிகள் நூலகத்தில்
உள்ளனவா ? நன்றி ஐயா. எங்கள் ஊரில் நூலகம் இல்லையே ? நான் என்ன செய்வது ? தெரிந்து தெளிவோம் நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் சிலர் அதற்குத்தான் தமிழக அரசு நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அப்படியானால் , அதை நான் பயன்படுத்துவேன் ஐயா. அருகிலுள்ள நூலகத்தையும் தவறாமல் பயன்படுத்துவோம் ஐயா. அறிஞர் அண்ணா , ஜவஹர்லால் நேரு அண்ணல் அம்பேத்கர் , காரல் மார்க்ஸ் ( மாணவர்களை தெரிந்து தெளிவோம் சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது. அழைத்துச் சென்று தலைமை நூலகரிடமும்
உடன் வந்த துணை நூலகரிடமும் நன்றி தெரிவித்துவிட்டு மாணவர்களைப் பார்த்து ) மாணவர்களே ! மகிழ்ச்சிதானே ! வாருங்கள் புறப்படலாம். கற்பவை கற்றபின் 1. நூலகங்களில் உள்ள புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்தமான நூல்களைப் பட்டியலிடுக. 2. நீங்கள் விரும்பிப் படித்த நூல் குறித்து நண்பனுடன் உரையாடுக. 90 மதிப்பீடு அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக. இயல் நான்கு கற்கண்டு இன எழுத்துகள் சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி , பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன
எழுத்துகள் எனப்படும். ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும். பம ( எ.கா. ) திங்கள் , மஞ்சள் , மண்டபம் , சந்தனம் , அம்பு , தென்றல் இடையின எழுத்துகள் ஆறும் ( ய் , ர் , ல் , வ் , ழ் , ள் ) ஒரே இனமாகும். ஊ ஒள மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும் , நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும். குறில் எழுத்து இல்லாத ஐ
என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும். ஒள என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும். சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும். ( எ.கா. ) ஓஒதல் , தூஉம் , தழீஇ தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை. கற்பவை கற்றபின் தங்கப் பாப்பா வந்தாளே ! சிங்கப் பொம்மை தந்தாளே ! பஞ்சு போன்ற கையாலே ! பண்டம் கொண்டு வந்தாளே ! பந்தல் முன்பு நின்றாளே ! கம்பம் சுற்றி வந்தாளே ! தென்றல் காற்றும் வந்ததே ! தெவிட்டா
இன்பம் தந்ததே ! இப்பாடலில் இடம்பெற்றுள்ள இன எழுத்துச் சொற்களை எடுத்து எழுதுக. ஏதம் மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது ? அ ) மஞ்சள் ஆ ) வந்தான் இ ) கண்ணில் 2. தவறான சொல்லை வட்டமிடுக. அ ) கண்டான் ஆ ) வென்ரான் பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக. பிழை தெண்றல் கன்டம் நன்ரி மன்டபம் குறுவினா இன எழுத்துகள் என்றால் என்ன ? படித்துச் சுவைக்க யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு. மொழியை ஆள்வோம் ! ஆற்றவும் கற்றார் அறிவுடையார்
அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை - அந்நாடு வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல் , பழமொழி நானூறு : 4 தொடர்களை நீட்டித்துப் புதிய தொடர்களை உருவாக்குங்கள். ( எ.கா. ) குறள் எண் : 397 பாடம் படித்தான். வகுப்பில் பாடம் படித்தான். தமிழ் வகுப்பில் பாடம் படித்தான். நேற்று தமிழ் வகுப்பில் பாடம் படித்தான். அவன் நேற்று தமிழ் வகுப்பில் பாடம் படித்தான். இரு பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்கள் அமையுங்கள். ( நூல் , மாலை , ஆறு , படி ) ( எ.கா. ) ஆடை தைக்க உதவுவது நூல் மூதுரை அற நூல்
பின்வரும் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குங்கள். ஆசிரியர் மாணவன் உரையாடலை நிறைவு செய்யுங்கள். மாணவர் வணக்கம் ஐயா. தலைமை ஆசிரியர் : வணக்கம் மதி , உனக்கு என்ன வேண்டும் ? மாணவர் எனக்கு மாற்றுச் சான்றிதழ் வேண்டும் ஐயா. தலைமை ஆசிரியர் மாணவர் தலைமை ஆசிரியர் மாணவர் தலைமை ஆசிரியர் மாணவர் தலைமை ஆசிரியர் மாணவர் என் தந்தைக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது ஐயா. : அப்படியா ! எந்த ஊருக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது ? அங்கு எந்தப் பள்ளியில் சேரப் போகிறாய் ? என் அப்பாவை அழைத்து வந்திருக்கிறேன் ஐயா. கீழே
கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது. ( குழந்தைகள் நாள் , மாணவர் நாள் , ஆசிரியர் நாள் , தேசிய இளைஞர் நாள் , கல்வி வளர்ச்சி நாள் ) 1. காமராசர் பிறந்த நாள் 2. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் 3. அப்துல்கலாம் பிறந்த நாள் 4.விவேகானந்தர் பிறந்த நாள் 5.ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களை வட்டமிடுங்கள். கங்கை , பக்கம் , வண்டு , மண்டபம் , மங்கை , வெந்தயம் , தந்தம் , பஞ்சு , பச்சை , தக்காளி , மஞ்சள் , கம்பளம் , குன்று , காக்கை , செங்கடல் , தேங்காய்
கீழ்க்காணும் சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துகளை எடுத்து எழுதுங்கள். சங்கு , நுங்கு , பிஞ்சு , வஞ்சம் , பண்டம் , சுண்டல் , வண்டி , பந்தயம் , பந்து , கற்கண்டு , தென்றல் , நன்று பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும். காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். " யாரைப் பார்க்க வந்தீங்க ? " என்று அன்புடன் வினவினார். ' எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே.
உங்களைப் பார்த்தால்... " என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் , " அம்மா அனுப்பி விட்டாரா ? " என்று காமராசர் கேட்டார். " இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க " என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். " ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை ( பற்றுச் சீட்டை ) அம்மா உங்களிடம்
காட்டிட்டு வரச் சொன்னாங்க " என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார். 1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் அ ) பெற்றோர் ஆ ) சிறுவன் , சிறுமி இ ) மக்கள் ஈ ) ஆசிரியர்கள் 2. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது ? அ ) ஏழ்மை ஆ ) நேர்மை இ ) உழைப்பு ஈ ) கல்லாமை 3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் 4.சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர் ? 5.காமராசர் செய்த உதவி யாது ? கட்டுரை எழுதுக காமராசர் என்னும் தலைப்பில் கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு
கட்டுரை எழுதுக. முன்னுரை இளமைக் காலம் கல்விப் பணி நிறைவேற்றிய பிற திட்டங்கள் முடிவுரை கல்விக்கண் திறந்த காமராசர் ' இத்தொடரிலுள்ள எழுத்துகளை மட்டும் பயன்படுத்திப் புதிய சொற்களை உருவாக்குங்கள். ( எ.கா. ) கண் முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க. கல்வியின் சிறப்புக் குறித்துக் கூறியுள்ள கல்வியாளர் சிலரின் பெயர்களை இணையத்தில் தேடிப் பட்டியலிடுக. கல்வியால் உயர்ந்தோரின் பெயர்களை இணையத்தில் தேடிப் பட்டியலிடுக. கல்வியின் சிறப்பினைக் கூறும் மேற்கோள்களை இணையத்தில் தேடிப் பயில்க.
5. உலகப் புகழ்பெற்ற புத்தகத் திருவிழாக்கள் குறித்து இணையத்தில் தேடி எழுதுக. இப்போது திரையில் Tamil Alphabet , Numbers , Fruit & Vegetables , Colors , Animals போன்ற தெரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் விரும்பும் தெரிவைத் தேர்ந்தெடுக்கவும். மாள் ! நாய் உதாரணத்திற்கு Animals என்பதைத் தெரிவு செய்தவுடன் விலங்குகளின் பெயர்கள் அடங்கிய கட்டம் தோன்றும். அதன் கீழே இருக்கும் play game என்பதைச் சொடுக்கியதும் விளையாடுவதற்கான அறிவுரைக் கட்டம் தோன்றும். அதன் கீழே இருக்கும் play game என்பதை மீண்டும் சொடுக்கி
விளையாட்டைத் தொடரவும். www.tnpscjob.com செயல்பாட்டிற்கான உரலி http://www.digitaldialects.com/ " கொடுக்கப்பட்டுள்ள படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே நல்லொழுக்கப் பண்புகளை அறிதல் தமிழர் திருநாளின் சிறப்பை உணர்தல் தமிழரின் சிற்பக்கலைச் சிறப்பையும் பிற கலைகளையும் அறிதல் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் வெளிப்படும் நாகரிகம் , பண்பாட்டினை அறிதல் மயங்கொலி வேறுபாடு அறிந்து மொழியைச் சரியாகப் பயன்படுத்துதல் சொல்லும் பொருளும் நன்றியறிதல் ஒப்புரவு நட்டல் கவிதைப்பேழை ஆசாரக்கோவை நல்லொழுக்கமே நல்ல மனிதர்களை உருவாக்கும். நாம்
ஒழுக்க நெறிகளை அறிந்தால்தான் அவற்றைப் பின்பற்றி நல்வாழ்வு வாழ முடியும். இந்த நோக்கத்திற்காகவே நம் முன்னோர் அற நூல்களைப் படைத்தனர். நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை அறநூல்கள் விளக்குகின்றன. அவற்றை அறிவோம் வாருங்கள். நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல் - இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து பெருவாயின் முள்ளியார் பிறர் செய்த உதவியை மறவாமை எல்லோரையும் சமமாகப் பேணுதல் நட்புக் கொள்ளுதல் பாடலின் பொருள் பிறர் செய்த உதவியை
மறவாதிருத்தல் ; பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல் ; இனிய சொற்களைப் பேசுதல் ; எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல் ; கல்வி அறிவு பெறுதல் ; எல்லோரையும் சமமாகப் பேணுதல் ; அறிவுடையவராய் இருத்தல் ; நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும். நூல் வெளி ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு
வெண்பாக்களைக் கொண்டது. கற்பவை கற்றபின் 1. நாம் எந்தெந்த வகையில் பிறருக்கு உதவலாம் என்பது குறித்து நண்பர்களுடன் கலந்துரையாடுக. 2. இந்தப் பாடலில் கூறப்படும் கருத்துகளுக்குப் பொருத்தமான திருக்குறள் அதிகாரங்களின் தலைப்புகளைப் பட்டியலிடுக. 3. " கூடா நட்புக் கேடாய் முடியும் " என்னும் கருத்து அமைந்த கதை ஒன்று கூறுக. மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பிறரிடம் நான் பேசுவேன். -‒‒‒‒‒‒‒ அ ) கடுஞ்சொல் 2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது அ ) வம்பு ஆ ) அமைதி இ ) அடக்கம் ஈ ) பொறை 3. அறிவு
+ உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) அறிவுடைமை ஆ ) அறிவுஉடைமை ஈ ) அறிஉடைமை இன்சொல் இ ) வன்சொல் ஈ ) கொடுஞ்சொல் அ ) பொறுமை + உடைமை இ ) பொறு + யுடைமை இ ) அறியுடைமை 4.இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் அ ) இவைஎட்டும் ஆ ) இவையெட்டும் இ ) இவ்வெட்டும் ஈ ) இவ்எட்டும் 5.நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) நன்றி + யறிதல் ஆ ) நன்றி + அறிதல் இ ) நன்று + அறிதல் ஈ ) நன்று + யறிதல் 6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஆ ) பொறை + யுடைமை ஈ ) பொறை
+ உடைமை குறுவினா 1. எந்த உயிருக்கும் செய்யக்கூடாதது எது ? 2. நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும் ? சிறுவினா ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை ? சிந்தனை வினா ஆகும். 1. உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகளைப் பட்டியலிடுக. 2. நல்ல ஒழுக்கங்களை வித்து எனக் கூறுவதின் காரணத்தைச் சிந்தித்து எழுதுக. 101 இயல் ஐந்து நுழையும்முன் ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ கண்மணியே கண்ணுறங்கு நந்தவனம் கண் திறந்து நற்றமிழ்ப் பூ எடுத்து பண்ணோடு பாட்டிசைத்துப் பார் போற்ற வந்தாயோ ! பாடல்கள் மனத்திற்கு அமைதியையும்
மகிழ்ச்சியையும் தருபவை.பாடலைப் பாடினாலும் மகிழ்ச்சி ; கேட்டாலும் மகிழ்ச்சி. ஏட்டில் எழுதப்படாத இசைப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன. தமிழரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் பாடல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்நாட்டுப்புறப் பாடல்களே தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. தந்தத்திலே தொட்டில் கட்டித் தங்கத்திலே பூ இழைத்துச் செல்லமாய் வந்து உதித்த சேரநாட்டு முத்தேனோ ! வாழை இலை பரப்பி வந்தாரைக் கை அமர்த்திச் சுவையான விருந்து வைக்கும் சோழநாட்டு முக்கனியோ ! குளிக்கக் குளம்
வெட்டிக் குலம்வாழ அணை கட்டிப் பசியைப் போக்க வந்த பாண்டிநாட்டு முத்தமிழோ ! கவிதைப்பேழை கண்ணே கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு ! I சொல்லும் பொருளும் நந்தவனம் - பூஞ்சோலை பார் உலகம் பண் இசை இழைத்து - பதித்து தொகைச்சொற்களின் விளக்கம் முத்தேன் - கொம்புத்தேன் , மலைத்தேன் , கொசுத்தேன் முக்கனி மா , பலா , வாழை முத்தமிழ் - இயல் , இசை , நாடகம் பாடலின் பொருள் தமிழ்ச் சோலையில் பூ எடுத்து , இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ ! தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ ! இல்லம் வந்தவரை
இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியோ ! குளம் வெட்டி , அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ ! கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக ! நூல் வெளி தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று. தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு ( தால் + ஆட்டு ) என்று பெயர்பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு. R5VBY கற்பவை கற்றபின் 1. உங்கள் பகுதியில் பாடப்படும் தாலாட்டுப்பாடல் ஒன்றை அறிந்து
வந்து பாடுக. 2. உங்கள் பகுதியில் பேசப்படும் பழமொழிகளைத் தொகுக்க. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ' பாட்டிசைத்து ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஆ ) பாட்டி + இசைத்து அ ) பாட்டி + சைத்து இ ) பாட்டு + இசைத்து ஈ ) பாட்டு + சைத்து 2. ' கண்ணுறங்கு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) கண் + உறங்கு ஆ ) கண்ணு + உறங்கு ஈ ) கண்ணு + றங்கு இ ) கண் + றங்கு 3. வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) வாழையிலை இ ) வாழைலை 4. கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் அ ) கைமர்த்தி ஆ ) கைஅமர்த்தி இ ) கையமர்த்தி ஈ ) கையைமர்த்தி 3. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல். அ ) மறைந்த ஆ ) நிறைந்த இ ) குறைந்த ஈ ) தோன்றிய குறுவினா ஆ ) வாழைஇலை ஈ ) வாழிலை 1.இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை ? 2. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது ? 3. கண்மணியே கண்ணுறங்கு பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக. சிறுவினா தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள் ? சிந்தனை வினா 1. வாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைத்
தொகுக்க. 2. குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுக்க. இயல் ஐந்து நுழையும்முன் உரைநடை உலகம் தமிழர் பெருவிழா விரும்பிக் கொண்டாடுவது விழா எனப்படும். உறவுகள் ன்றுகூடிக் கொண்டாடும் விழாக்கள் மனத்திற்கு மகிழ்வைத்தரும் ; மனிதரிடையே ஒற்றுமையை வளர்க்கும். தமிழரின் நாகரிகம் , வீரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. விழாக்கள் நமது பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கின்றன. தமிழருக்கே உரிய சிறப்பான விழாவைப் பற்றி அறிவோம் வாருங்கள். இயற்கையோடு
இணைந்து வாழ்வதே தமிழரின் வாழ்க்கைமுறை ஆகும். இயற்கையை வணங்குதல் தமிழர் மரபு. தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன. அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும். இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது. கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத்திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே , இத்திருவிழாவை அறுவடைத்திருவிழா என்றும் அழைப்பர். அந்தச் சமயத்தில் இயற்கை
அன்னை பசுமையான ஆடை உடுத்தி , பல நிறப் பூக்களைச் சூடி இருப்பாள். காயும் கனியும் கரும்பும் எங்குப் பார்த்தாலும் விளைந்து காட்சி தரும். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே , இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். பொங்கல் திருநாள் இரண்டு நாள்கள் முதல் நான்கு நாள்கள் வரை கொண்டாடப்படுகிறது. இது வட்டாரத்திற்கு வட்டாரம் மாறுபடுகிறது. போகித்திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் " ( நன்னூல் நூற்பா -462 ) என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற
பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் ( போக்கி ) போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும். பொங்கல் திருநாள் தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாள் ஆகும். இத்திருநாளன்று வாசலில் வண்ணக் கோலமிடுவர். மாவிலைத் தோரணம் கட்டுவர். புதுப்பானையில் புத்தரிசியோடு வெல்லம் , முந்திரி , நெய் சேர்த்துப் பொங்கலிடுவர். பொங்கல் என்பதற்குப் பொங்கிப்பெருகி வருவது என்று பொருள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் தெரிந்து தெளிவோம் " பொங்கலோ பொங்கல் " என்று மங்கல ஒலி எழுப்பிப் போற்றுவர். " பொங்கல் பொங்கி
வருவதுபோல் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கிப் பெருகும் " என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். பின்னர் , தலைவாழை இலையிட்டுப் பொங்கலைப் படைப்பர். கரும்பு , மஞ்சள் கொத்து , தேங்காய் , பழங்கள் , வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வைத்து வழிபடுவர். விளைச்சலுக்குக் காரணமான கதிரவனை நன்றியோடு வணங்கி மகிழ்வர். சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் அளித்துத் தாமும் உண்டு மகிழ்வர். நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது. தெரிந்து தெளிவோம் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில்
அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கல் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல். மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன. மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு. உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று நீராட்டுவர். மாடுகளை கொம்புகளைச் சீவி வண்ணங்கள் தீட்டுவர். மாடுகளின் கழுத்திலே மணிகளைக் கட்டுவர். பூவும் தழையும் சூட்டுவர். மாட்டுக்கு மஞ்சள் ,
குங்குமம் இடுவர். பொங்கல் , தேங்காய் , பழங்கள் , வெற்றிலை பாக்கு போன்றவற்றைப் படைத்து வழிபடுவர். மாட்டுப்பொங்கல் நாளிலோ அதற்கு அடுத்த நாளிலோ சில ஊர்களில் மஞ்சுவிரட்டு நடைபெறும். மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு மாடுபிடித்தல் , ஜல்லிக்கட்டு , ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது. காணும் பொங்கல் மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். குடும்பத்தினருடன் விரும்பிய
இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர். மேலும் பட்டிமன்றங்கள் , கலைநிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர். தெரிந்து தெளிவோம் திருவள்ளுவர் கி.மு ( பொ.ஆ.மு ) 31 இல் பிறந்தவர். எனவே , திருவள்ளுவராண்டைக் கணக்கிட 31 ஐக் நடைமுறை ஆண்டுடன் கூட்டிக்கொள்ள வேண்டும். ( எ.கா. ) 2018 + 31 = 2049 இயற்கை , உழைப்பு , நன்றியுணர்வு , பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவே பொங்கல் விழா ஆகும். உலகு எங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை
மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். தெரிந்து தெளிவோம் அறுவடைத் திருநாள் ஆந்திரம் , கர்நாடகம் , மராட்டியம் , உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாடப்படுகிறது. குஜராத் , இராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது. கற்பவை கற்றபின் 1. உங்கள் ஊரில் கொண்டாடப்படும் பிற விழாக்கள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக. 2. உங்கள் பள்ளியில் கொண்டாடப்படும் தேசியவிழாக்களின் பட்டியலை உருவாக்குக. 3. தமிழகத்தில் ஏறுதழுவுதல் நடக்கும்
இடங்களின் பெயர்களைத் தொகுக்க. 4. உங்களுக்குப் பிடித்த விழா எது ? ஏன் ? | * மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. கதிர் முற்றியதும் செய்வர். அ ) அறுவடை ஆ ) உரமிடுதல் இ ) நடவு ஈ ) களையெடுத்தல் 2.விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் அ ) செடி ஆ ) கொடி இ ) தோரணம் ஈ ) அலங்கார வளைவு அ ) போகி + பண்டிகை இ ) போகு + பண்டிகை 3. பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) பொங்கலன்று இ ) பொங்கலென்று 4. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஆ ) பொங்கல்அன்று ஈ )
பொங்கஅன்று 3. பழையன கழிதலும் அ ) புதியன ஆ ) புதுமை இ ) புதிய சொற்றொடரில் அமைத்து எழுதுக. அ ) பொங்கல் 4 ) செல்வம் குறுவினா ஆ ) போ + பண்டிகை ஈ ) போகிப் + பண்டிகை புகுதலும். ஈ ) புதுமையான 6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். தரும். பட்டுப் போன மரத்தைக் காண அ ) அயர்வு ஆ ) கனவு பம் ஈ ) சோர்வு 6th 5td Tamil CBSE Pages 77-206.indd 108 1.போகிப்பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது ? 2. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர் ? சிறுவினா காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர் ? பண்பாடு கலைகளும்