id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
---|---|---|---|
597578
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D
|
அலி மஸ்ஜித்
|
அலி மஸ்ஜித் (Ali Masjid) என்பது கைபர் கணவாயின் குறுகலான புள்ளியாகும். இது பாக்கித்தானின் கைபர் பக்துன்க்வாவின் கைபர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது லாண்டி கோட்டல் (பெசாவரின் மேற்கு) நகரத்திலிருந்து கிழக்கே 10 மைல் (16 கிமீ) தொலைவில் 3,174 அடி (967 மீ) உயரத்தில் உள்ளது. அலி மஸ்ஜித் அருகே உள்ள கைபரின் அகலம் முன்பு இரண்டு முழுமையாக ஏற்றப்பட்ட ஒட்டகங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல முடியாத அளவுக்கு குறுகலாக இருந்தது. ஆனால் பின்னர் அது அகலப்படுத்தப்பட்டது.
பெயர்த் தோற்றம்
இஸ்லாமிய தீர்க்கதரிசி முகம்மது நபியின் உறவினரான அலீயின் நினைவாக இது பெயரிடப்பட்டது. உள்ளூர் பாரம்பரியத்தின் படி இந்த இடத்திற்கு வருகை தந்த அலியின் நினைவாக இங்கு ஒரு மசூதியும் ஒரு விகாரையும் கட்டப்பட்டுள்ளது. அலியின் கையின் அடையாளங்களைக் கொண்ட ஒரு பெரிய கற்பாறையும் இங்குள்ளது.
வரலாறு
அலி மஸ்ஜித் கைபர் கணவாயில் மிகக் குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. இது முகம்மது நபியின் உறவினரும் மருமகனுமான `அலி இபின் அபி தாலிப் (சுமார் 600-661) சன்னதியைக் கொண்டுள்ளது. கடம் மற்றும் அலி மஸ்ஜித் இடையே வர்த்தகப் பாதையில் செல்லும் போது, பயணிகள் சன்னதியில் பிரார்த்தனை செய்து கொள்ள தங்கள் வாகனத்தை இங்கே நிறுத்துவார்கள்.
இப்பகுதி முதலில் ஆப்கானித்தான் அமீரகத்துக்குள் இருந்தது. 1837 ஆம் ஆண்டில் ஆப்கானிய அமீர், தோஸ்த்து முகமது கான் (1793-1863) என்பவரால் அலி மஸ்ஜித் மேலே ஒரு கோட்டை கட்டப்பட்டது. சன்னதியும் கோட்டையும் மிகவும் கரடுமுரடான நிலப்பரப்பில் ஆழமான பள்ளத்தாக்கைக் கண்டும் காணாத வகையில் அமைந்துள்ளது.
அலி மஸ்ஜித் முதல் போர்
அலி மஸ்ஜித் ஆங்கிலேய-ஆப்கான் போர்களின் போது போர்க்களமாக இருந்தது. 1842 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேய-ஆப்கான் போரின் போது, கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. காபூலில் இருந்து பேரழிவுகரமான பின்வாங்கலின் போது, கர்னல் சார்லஸ் வைல்டின் கீழ் இருந்த ஒரு நிவாரணப் படை, கைபர் கணவாய் நுழைவாயிலில் அக்பர் கானின் ஆப்கான் துருப்புக்களால் தாக்கப்பட்டு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிரிட்டிஷ் படையினர் கோட்டையை காலி செய்து ஜம்ருதுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அலி மஸ்ஜித் இரண்டாவது போர்
நவம்பர் 1878 இல், இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போரின் போது, தளபதி சர் சாமுவேல் பிரவுன் தலைமையிலான பெசாவர் பள்ளத்தாக்கு களப் படை, பயாசு முகம்மதுவின் கீழ் ஆப்கானியர்களிடமிருந்து கோட்டையைக் கைப்பற்றியது .
மே 1879 இல், காண்டமாக் உடன்படிக்கையின் மூலம் கைபர் கணவாய் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன் பிறகு கோட்டை பிரித்தானிய இந்தியாவின் கீழ் இருந்தது. ஆங்கிலேயர்கள் பின்னர் அந்த இடத்தில் தங்கள் சொந்த கோட்டையை நிறுவினர். கைபர் கணவாயின் ஒரு முக்கிய இராணுவக் காவல் இடமாக வைத்திருந்தனர். கோட்டையில் ஒரு சிறிய கல்லறை உள்ளது. இதில் இரண்டாம் ஆப்கானித்தான் போரில் வீழ்ந்த பிரித்தானிய வீரர்களின் கல்லறைகள் ஆகும். பள்ளத்தாக்கு சுவர்கள் இங்கு பணியாற்றிய படைப்பிரிவுகளின் அடையாளங்களைக் கொண்டுள்ளன.
சான்றுகள்
கைபர் பக்துன்வா மாகாணம்
|
597579
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
பனமாலிபூர் சட்டமன்றத் தொகுதி
|
பனமாலிபூர் சட்டமன்றத் தொகுதி (Banamalipur Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மேற்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகும். இத்தொகுதி திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2023
2018 தேர்தல்
மேலும் பார்க்கவும்
திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல்
மேற்கு திரிபுரா மாவட்டம்
மேற்கோள்கள்
திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள்
மேற்கு திரிப்புரா மாவட்டம்
|
597580
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D
|
ஜெரி அல் சமீர்
|
ஜெரி அல் சமீர் (Jeri Al Samir) ( ; ஜெரி அல் சம்மர் மற்றும் ஜெரி அல் சமூர் என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது கத்தாரில் உள்ள உம் சலால் நகராட்சியில் உள்ள ஒரு கிராமம். இது அல் ரயான் நகராட்சியின் எல்லைக்கு அருகில் நகராட்சியின் மத்திய-தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.
சொற்பிறப்பியல்
ஜெரி என்பது கேரி என்ற அரபு வார்த்தையிலிருந்து உருவானது. கிடைக்கும் நீரினை ஒருங்கிணைத்து பல்வேறு தாவரங்களின் வளர்ச்சியை எளிதாக்கும் பகுதியைக் குறிக்கிறது. கிராமத்தின் பெயரின் இரண்டாம் பகுதி, சமீர், என்பது அங்கு வசித்த ஒரு முக்கிய நபரின் பெயர்.
உள்கட்டமைப்பு
2015 ஆம் ஆண்டில், பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சகம் கியூ ஆர் 331 மில்லியன் செலவில் கிராமத்தில் ஒரு தளவாட மையத்தை உருவாக்கத் தொடங்குவதாக அறிவித்தது. சுற்றுப்பாதை நெடுஞ்சாலைக்கு அருகில் அதன் சிறப்பான அமைவிடம் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த செயல்பாட்டு செலவுகள் காரணமாக இந்தப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. முழுமையாக பணிகள் முடிந்ததும், சரக்குப் போக்குவரத்து மையம் வாகன உதிரிபாகங்கள் மற்றும் இயந்திரங்கள், உணவு மற்றும் பானங்கள், கிடங்கு மற்றும் சேமிப்பு மற்றும் கட்டுமானத் துறைகளில் 21 நிறுவனங்களுக்கு வசதிகளை வழங்கும்.
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
கத்தார்
|
597582
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
பரா ஆறு
|
பரா ஆறு அல்லது ஃபரா ஆறு (Farah River) ( ; ) மேற்கு ஆப்கானித்தானில் உள்ள ஒரு ஆறாகும். இந்த ஆறு கோர் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பேண்ட்-இ பயான் மலைத்தொடரில் உருவாகி ஆப்கானித்தான்- ஈரான் எல்லையில் உள்ள எல்மாந்து சதுப்பு நிலங்களை நோக்கி 560 கிலோமீட்டர்கள் (350 மைல்கள்) பாய்கிறது. பாரா நகரம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, இங்கு வறண்ட காலங்களில், அதன் அகலம் சுமார் மற்றும் சுமார் 60 செமீ (24 அங்குலங்கள்) ஆழத்தைக் கொண்டிருக்கும். பரா ஆற்றின் கீழ் பள்ளத்தாக்கு வளமானதாகவும் நன்கு பயிரிடத்தக்கதாகவும் உள்ளது. The lower valley of the Farah Rud is fertile and well cultivated.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஆப்கானிஸ்தானில் வெள்ளம் (நவம்பர் 2006) நாசா புவி கண்காணிப்பகத்தில்
ஆப்கானித்தான் ஆறுகள்
பாரசீக மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
|
597584
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%A9%E0%AF%8D
|
சார்லசு பிலிப் பிரௌன்
|
சார்லஸ் பிலிப் பிரவுன் (Charles Philip Brown) (10 நவம்பர் 1798 - 12 டிசம்பர் 1884) கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரியாக இருந்தார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் பணிபுரிந்தார். மேலும் இவர் தெலுங்கு மொழி இலக்கியத்தில் ஒரு முக்கியமான அறிஞருமாவார்.
18 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு இலக்கியம் செயலற்ற நிலையில் இருந்தது. பல சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காக - படைப்பாற்றல் தெலுங்கு கவிஞர்களின் பற்றாக்குறை, நடைமுறையில் உள்ள கல்வியறிவின்மை மற்றும் தெலுங்கு இலக்கியத்தின் புரவலர்களாக விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி ஆகியவை இதற்கு காரணங்களாக இருந்தது. பிரவுன், பிராந்தியத்தில் அதிகாரியாக, படைப்புகளை சேகரித்து திருத்தினார். தெலுங்கு மொழியின் பாரம்பரியத்தை காப்பாற்றியதாக நம்பினார். தனது சொந்த வார்த்தைகளில் இவ்வாறு கூறுகிறார்;"தெலுங்கு இலக்கியம் அழிந்து கொண்டிருந்தது; சாக்கெட்டில் சுடர் மினுமினுத்தது. 1825 இல், தெலுங்கு இலக்கியம் இறந்து கிடப்பதைக் கண்டேன். 30 ஆண்டுகளில் அதை உயிர்ப்பித்தேன்".
பிரவுனின் வாழ்க்கையை ஆய்வு செய்த ஜனமத்தி அனுமத் சாத்திரி, இவரது நினைவாக கடப்பாவில் ஒரு நூலகத்தை நிறுவினார்.
சுயசரிதை
சார்லசு பிரவுன், 1798 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தை டேவிட் பிரவுன் ஒரு அனாதை இல்லத்தின் மேலாளராகவும், சமசுகிருதம் உட்பட பல மொழிகளில் அறிஞராகவும் இருந்தார். சார்லசு பிரவுன் 1812 இல் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, இந்தியாவில் குடிமைப்பணி பதவிக்கான ஹெய்லிபரி கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக மீண்டும் இங்கிலாந்து சென்றார். ஆகஸ்ட் 4, 1817 அன்று சென்னை திரும்பினார்
1820 ஆம் ஆண்டு, மெட்ராஸ் ஆளுநர் தோமஸ் முன்ரோ, ஒவ்வொரு அதிகாரியும் உள்ளூர் மொழியைக் கற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வெலகபுடி கோதண்டராம பந்துலுவின் வழிகாட்டுதலின் கீழ் பிரவுன் தெலுங்கைத் தேர்ந்தெடுத்தார். மேலும் அந்த ஆண்டு தெலுங்குமொழித் தேர்விலும் இந்திய ஆட்சிப் பணித் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். இவர் கடப்பாவின் ஆட்சியராக இருந்த ஜான் ஹன்பரிக்கு துணை ஆட்சியரானார். ஹன்பரி தெலுங்கில் சரளமாக இருந்த காரணத்தால் பிரவுன் தனது படிப்பைத் தொடர்ந்தார். 1822 இல் மச்சிலிப்பட்டிணத்திற்கும் பின்னர் 1825 இல் ராஜமன்றிக்கும் மாற்றப்பட்டார். 1832-33 பஞ்சத்தின் தொடக்கத்தில் குண்டூருக்கு பணியமர்த்தப்பட்டார்.
பிரவுன் 1834 இல் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்று மீண்டும் இலண்டனுக்குச் சென்று 1835 முதல் 1838 வரை அங்கேயே இருந்தார். 1837 இல் கிழக்கிந்திய நிறுவனத்தின் பாரசீக மொழிபெயர்ப்பாளராக மீண்டும் சென்னை திரும்பினார். மேலும், மெட்ராஸ் கல்லூரி வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்தார். உடல்நலக் காரணங்களால் 1854 இல் ஓய்வு பெற்று மீண்டும் இலண்டனுக்குத் திரும்பினார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் தெலுங்கு பேராசிரியராக சில காலம் பணியாற்றினார்.
மரபு
பன்மொழிப் புலமை இருந்தாலும் பிரவுன் தெலுங்கில் கவனம் செலுத்தினார். பிற மொழிகள் கிரேக்கம், இலத்தீன், பாரசீகம் மற்றும் சமசுகிருதம் ஆகியவை பிரவுன் அறிந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தெலுங்கை மூன்று வழிகளில் ஆதரித்தார் - தனது சொந்த படைப்புகளை உருவாக்கினார். பழைய படைப்புகளை மீட்டெடுத்தார் மற்றும் கண்டுபிடித்தார். தெலுங்கில் புத்தகங்களை அச்சிட்டார். தானே நிதியுதவி செய்தார், சில சமயங்களில் கடன் வாங்கினார். கடப்பாவில் இரண்டு இலவசப் பள்ளிகளையும் மச்சிலிப்பட்டணத்தில் மேலும் இரண்டு பள்ளிகளையும் நிறுவினார்.
இறப்பு
இவர் 1884 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி தனது எண்பத்தேழு வயதில் இறந்தார். மேலும், இலண்டனில் உள்ள கென்சல் பசுமை கல்லறையில் (அனைத்து ஆத்மாக்களின் பொது கல்லறை) அடக்கம் செய்யப்பட்டார்.
இதனையும் காண்க
வேமனா
தியாகராஜர்
ஆர்தர் காட்டன், தெலுங்கு மக்களின் மற்றொரு பிரியமான மேற்கத்திய நாட்டவர், ஒரு கட்டடப் பொறியாளர்
டேனியல் நெஜர்ஸ், தெலுங்கு கலாச்சாரத்தின் மீது ஆர்வம் கொண்ட பிரெஞ்சு நாட்டவர்.
தெனாலி ராமன்
போத்தன்னா
சான்றுகள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
C. P. Brown background
C. P. Brown history from Vepachedu research foundation
The restless British Pandit
Brown's Digital Online dictionary hosted at Univ. of Chicago, 2nd edition 1903
C P Brown Academy, Hyderabad
Extended Brown's online dictionary
Brown's online dictionary
Brown's Verses of Vemana
Cuddapah's pages on Charles Brown
An article about Brown in Popular Telugu Magazine
Rare picture of the legendary C.P.Brown, Reviver of the Telugu literature.( Image now with TTD archives )
தெலுங்கு எழுத்தாளர்கள்
பிரித்தானிய எழுத்தாளர்கள்
கொல்கத்தா எழுத்தாளர்கள்
1884 இறப்புகள்
1798 பிறப்புகள்
|
597586
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF
|
ஜனமத்தி அனுமத் சாத்திரி
|
முனைவர் ஜனமத்தி அனுமத் சாத்திரி (Janamaddi Hanumath Sastri) (1926-2014) ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவைச் சேர்ந்த ஒரு இந்திய எழுத்தாளரும் மொழியியலாளரும் ஆவார். தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ள இவர் கடப்பா எழுத்தாளர்கள் அமைப்பில் நான்கு தசாப்தங்களாக பணியாற்றினார். மேலும், அங்கு சார்லசு பிலிப் பிரௌன் நினைவு நூலகத்தையும் நிறுவினார். இவரது பிரவுன் பற்றிய விரிவான ஆராய்ச்சிக்காக ஞானபீட விருது பெற்ற சி. நாராயண ரெட்டி இவரை பிரவுன் சாஸ்திரி என்று அன்புடன் அழைத்தார்.
இவர் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள இராயதுர்கத்தில் சுப்பண்ணா, ஜனகம்மா தம்பதியருக்கு 1926 இல் பிறந்தார். 1946 ஆம் ஆண்டு பெல்லாரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
எழுத்துகள்
சாத்திரி பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் வெளியீடுகளில் 2,500 கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும், 16 புத்தகங்களையும் எழுதியுள்ளார். குறிப்பிடத்தக்க படைப்புகளில் சி. பி. பிரவுன், மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா, பெல்லாரி ராகவா ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் அடங்கும்.
சான்றுகள்
தெலுங்கு எழுத்தாளர்கள்
அனந்தபூர் மாவட்ட நபர்கள்
2014 இறப்புகள்
1926 பிறப்புகள்
|
597588
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
|
பரணம்
|
பரணம் (Paranam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் செந்துறை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பரணம் கிராமத்தில் 2,337 ஆண்கள் 2,507 பெண்கள் என மொத்தம் 4844 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597590
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
இராயதுர்கம்
|
'இராயதுர்கம் (Rayadurgam) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது ஒரு நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இராயதுர்கம் துணிப் பொருட்கள் மற்றும் உற்பத்தி தொழிலுக்கு பெயர் பெற்றது. ஐதராபாத்திலிருந்து சுமார் 451.6 கிமீ (280.6 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இப்போது முறையான போக்குவரத்து, நவீன வசதிகளுடன் மெல்ல வளர்ச்சியடைந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை 544DD மூலம் நகரம் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் பிற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள பல்லாரி விமான நிலையம் இதன் அருகிலுள்ளது. அதைத் தொடர்ந்து கர்னூல், புட்டபர்த்தி மற்றும் பெங்களூரு நகரங்களும் அருகில் உள்ளது. பெல்லாரி, குண்டக்கல், கூட்டி மற்றும் அனந்தபூர் போன்ற முக்கிய நிலையங்களுடன் இராயதுர்கம் ஒரு தொடர்வண்டி நிலையத்தையும் கொண்டுள்ளது.
மக்கள்தொகை
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 61,749 பேர். மொத்த மக்கள் தொகையில், 0–6 வயதுக்குட்பட்ட 30,911 ஆண்கள், 30,838 பெண்கள் மற்றும் 7,462 குழந்தைகள் என உள்ளனர். சராசரி கல்வியறிவு விகிதம் 69.60% ஆக உள்ளது. 37,781 கல்வியறிவு பெற்றவர்கள், தேசிய சராசரியான 73.00% ஐ விட கணிசமாகக் குறைவு. நகரில் தெலுங்கு ஆட்சி மொழியாகும். கன்னடம் மற்றும் உருது மொழிகளும் இங்கு பரவலாக பேசப்படுகின்றன
சான்றுகள்
Coordinates on Wikidata
ஆந்திரப் பிரதேச நகரங்கள்
|
597591
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
சன்னாவூர் வடக்கு
|
சன்னாவூர் வடக்கு (Sannavur North)என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சன்னாவூர் வடக்கு கிராமத்தில் 729 ஆண்கள் 768 பெண்கள் என மொத்தம் 1497 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597592
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
சன்னாவூர் தெற்கு
|
சன்னாவூர் தெற்கு (Sannavur South) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சன்னாவூரில் தெற்கு 839 ஆண்கள் மற்றும் 894 பெண்கள் என மொத்தம் 1733 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597594
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
தளவாய் வடக்கு
|
தளவாய் வடக்கு (Thalavoi North) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தளவோய் (வடக்கு) கிராமத்தில் 1175 ஆண்கள் மற்றும் 1251 பெண்கள் என மொத்தம் 2426 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597597
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
மூடபித்ரி சட்டமன்றத் தொகுதி
|
மூடபித்ரி சட்டமன்றத் தொகுதி (, ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ளது. தட்சிண கன்னட மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 201 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
குறிப்பு
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
தட்சிண கன்னட மாவட்டம்
|
597599
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
தளவாய் தெற்கு
|
தளவாய் தெற்கு (Thalavoi South) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தளவாய் தெற்கு கிராமத்தில் 1685 ஆண்கள் மற்றும் 1711 பெண்கள் என மொத்தம் 3396 பேர் உள்ளனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597601
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81
|
தழுதாழைமேடு
|
தழுதாழைமேடு (Thaluthalaimedu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தழுதலைமேடு கிராமத்தில் 2487 ஆண்கள் மற்றும் 2415 பெண்கள் என மொத்தம் 4902 மக்கள் வசித்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597603
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88
|
தண்டலை
|
தண்டலை (Thandalai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். தண்டலை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தண்டலை கிராமத்தில் 2729 ஆண்கள் மற்றும் 2581 பெண்கள் என மொத்தம் 5310 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597604
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
கடன் பத்திரம்
|
சட்டத்தில், கடன் பத்திரம் என்பது கடனை உருவாக்கும் அல்லது ஒப்புக் கொள்ளும் ஆவணமாகும். கார்ப்பரேட் நிதியில், இந்த சொல் நடுத்தர முதல் நீண்ட கால கடன் கருவிகளைக் குறிக்கிறது, இது பெரிய நிறுவனங்களால் பணம் கடன் வாங்கப் பயன்படுகிறது. சில நாடுகளில் இந்த சொல் பத்திரங்கள், கடன் பங்குகள் அல்லது குறிப்புகளுடன் ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக கடன் பத்திரங்கள் கடன் பத்திரம் வைத்திருப்பவரால் சுதந்திரமாக மாற்றப்படும். கடன் பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் வட்டி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளில் உள்ள லாபத்திற்கு எதிராக வசூலிக்கப்படுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில்,கடனீட்டுப் பத்திரம் ஒரு பாதுகாப்பற்ற கார்ப்பரேட் பத்திரத்தை குறிப்பிடுகிறது; அதாவது, பத்திரத்தின் முதிர்ச்சியின் போது அசல் திரும்பப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்க நிலையான வருமானம் அல்லது சொத்து அல்லது கருவியின் பங்கு இல்லாத ஒரு பத்திரம். அமெரிக்காவில், பங்குகள் அல்லது பத்திரங்களுக்கு பிணை வழங்கப்படும் கடன்கள் 'அடமானப் பத்திரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
இருப்பினும், ஐக்கிய ராச்சியத்தில் கடன் பத்திரங்கள் பொதுவாகப் பாதுகாக்கப்படுகின்றன. ஆசியாவில், நிலத்தின் மீதான கட்டணத்தின் மூலம் திருப்பிச் செலுத்துதல் பாதுகாக்கப்பட்டால், கடன் ஆவணம் அடமானம் என்று அழைக்கப்படுகிறது; நிறுவனத்தின் பிற சொத்துக்களில் கட்டணம் செலுத்துவதன் மூலம் திருப்பிச் செலுத்துதல் பாதுகாக்கப்பட்டால், ஆவணம் கடன் பத்திரம் என்று அழைக்கப்படுகிறது; எந்த பாதுகாப்பும் சம்பந்தப்படாத இடத்தில், ஆவணம் ஒரு குறிப்பு அல்லது 'பாதுகாப்பற்ற வைப்பு குறிப்பு' என்று அழைக்கப்படுகிறது.
ஒரு யு.எஸ். கார்ப்பரேஷன் கடன் பத்திரங்களை வெளியிடும் போது (பாதுகாக்கப்பட்ட கார்ப்பரேட் பத்திரங்களை வழங்குவதை விட) பயனடைகிறது, ஏனெனில் முதிர்ச்சியின் போது அசல் திருப்பிச் செலுத்துவதில் அதன் இயல்புநிலைக்கு உத்தரவாதம் அளிக்க ஒரு சொத்து அல்லது வருவாயை வழங்க நிறுவனம் அனுமதிக்கிறது. அதனால், தனித்தனி கணக்குகளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கடன் பத்திரத்தை வழங்கும் நிறுவனத்தால் தனி கணக்கில் வைக்கப்படும் சொத்துக்கள் அல்லது நிதிகள் மற்ற நிதி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படலாம்.
பிரிவுகள்
இரண்டு வகையான கடன் பத்திரங்கள் உள்ளன:
மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்கள், இவை மாற்றத்தக்க பத்திரங்கள் அல்லது பத்திரங்கள், அவை முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு வழங்கும் நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளாக மாற்றப்படலாம். "மாற்றுத்திறன்" என்பது, கார்ப்பரேட்கள் தாங்கள் வழங்கும் பத்திரங்களை வாங்குபவர்களை மிகவும் கவர்ந்திழுக்கும் வகையில் சேர்க்கக்கூடிய ஒரு அம்சமாகும். வேறுவிதமாகக் கூறினால், இது கார்ப்பரேட் பத்திரங்களுடன் தொடர்புடைய ஒரு சிறப்பு அம்சமாகும். மாற்றும் தன்மையை வாங்குபவருக்கு கிடைக்கும் நன்மையின் காரணமாக, மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்கள் பொதுவாக மாற்ற முடியாத பெருநிறுவனப் பத்திரங்களைக் காட்டிலும் குறைந்த வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன.
மாற்ற முடியாத கடனீட்டுப் பத்திரங்கள், வெறும் வழக்கமான கடன் பத்திரங்கள், பொறுப்புள்ள நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளாக மாற்றப்பட முடியாது. அவை கடனீட்டுப் பத்திரங்கள், அவற்றுடன் மாற்றத்தக்க வசதிகள் இணைக்கப்படவில்லை. இதன் விளைவாக, அவை பொதுவாக மாற்றத்தக்க சகாக்களை விட அதிக வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன.
மேற்கோள்கள்
கடன்
நிதிக் கூற்றுக்கள்
|
597605
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
கந்ததர் அருவி
|
கந்ததர் அருவி (Khandadhar Falls, Kendujhar) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கேந்துசர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த அருவி உயர அருவியாகும். இது அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் உள்ளது. இந்த அருவி பாறை முகத்தில் கீழே விழும்போது தண்ணீரைத் தெளிப்பதன் மூலம் "புகை போன்ற" தோற்றத்தைக் கொண்டுள்ளது.
அமைவிடம்
கந்ததர் அருவி ஒடிசாவின் கேந்துசர் நகரத்திலிருந்து 54 கி.மீ. தொலைவில் உள்ளது.
கந்ததர் அருவி கேந்துசர் மாவட்டத்தில் உள்ள குன்றுகளில் ஒன்றான கந்ததர் மலையில் அமைந்துள்ளது. மலையின் எதிர்புறத்தில், அதே பெயரில் மற்றொரு அருவியும் உள்ளது. கந்ததர் நீர்வீழ்ச்சி, சுந்தர்கட் மாவட்டத்தின் பனேய் உட்பிரிவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
கேந்துஜர் மாவட்டம்
ஒடிசா அருவிகள்
|
597606
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82
|
தக்கர் பேரூ
|
தக்கர் பேரூ (Thakkar Pheru) அலாவுதீன் கில்சியின் நிதி நிர்வாகப் பொருளாளராக இருந்தாவராவார். இவர் 1291 ஆம் ஆண்டு முதல் 1347 ஆண்டு வரை இப்பணியில் செயல்பட்டார்.
நாணயங்கள், உலோகங்கள் மேலும் ரத்தினங்கள் குறித்த சிறீமால் என்ற வல்லுநனராக அலாவுதீன் கில்சி இவரை நியமித்தார். தனது மகன் ஹேமபாலின் பயன்பாட்டுக்காக இத்துறை தொடர்பான நூல்களை எழுதியிருக்கிறார். 1315 இல் அலாவுதீன் கில்சிஜியின் கருவூலத்தில் தான் கண்ட அளப்பளரிய இரத்தின சேகரிப்புகளைக் பற்றி "இரத்தினப் பரிக்சா" என்ற நூலையும்" 1318 ஆம் ஆண்டில் நாணயத் தயாரிப்பு ஆலையில் கிடைத்த அனுபங்களைக் கொண்டு "திரவியபரிக்சா" என்ற நூலையும் எழுதினார். கியாசுதீன் துக்ளக்கின் ஆட்சி வரை இவர் தொடர்ந்து பணியாற்றினார்.
கணிதம் பற்றி இவர் எழுதிய "கணிதசாரகௌமுதி" என்ற நூலுக்காகவும் அறியப்படுகிறார்.
மேற்கோள்கள்
இந்தியக் கணிதவியலாளர்கள்
|
597607
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
புர்லிஜாரன் அருவி
|
Short description is different from Wikidata
புர்லிஜாரன் அருவி ( ) என்பது இந்தியாவின் ஒடிசாவில் உள்ள களஹாண்டி மாவட்டத்தில் உள்ள பவானிபட்னாவில் உள்ள ஒரு வற்றாத அருவியாகும். இந்த அருவி 16 மீட்டர் உயரமுடையது. சூரிய ஒளியின் பிரதிபலிப்பு காரணமாகச் சிதறிய நீரில் ஏற்படும் பலவண்ண வானவில்லுக்கு இந்த அருவி பெயர் பெற்றது. இது பொழுது போக்கிற்கான சுற்றுலாத்தலமாகும். இந்த அருவி கார்லாபட் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் உள்ளது.
சுற்றுலா
புர்லிஜாரன் ஒடிசா மாநில நெடுஞ்சாலையான 44-ல் பவானிபட்னாவிலிருந்து தொலைவில் உள்ளது. ஒடிசா மாநில சாலை போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பேருந்துகள் பவானிபட்னா மற்றும் அருகிலுள்ள பிற நகரங்களுடன் இந்த அருவிக்குப் போக்குவரத்து சேவையினை வழங்குகின்றன.
படங்கள்
மேற்கோள்கள்
ஒடிசா அருவிகள்
களாஹாண்டி மாவட்டம்
Coordinates on Wikidata
|
597608
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE
|
தோகாரிசஞ்சாரா
|
தோகாரிசஞ்சாரா (; ) இந்தியாவின் ஒடிசாவின் கலஹண்டி, கோக்சரா, காலிகர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலமாகும்.
அருவி
காலாஹண்டி, இந்தியா அல்லது ஒடிசாவின் புகழ்பெற்ற வரலாற்று மற்றும் பழமையான இடங்களில் ஒன்றாகும். தோகாரிசஞ்சாரா என்பது கலஹண்டி மற்றும் நபரங்பூர் மாவட்டத்தின் எல்லையில் உள்ள கோகசரா கிராமத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமாகும். கலாஹண்டியில் உள்ள மற்ற கவர்ச்சிகரமான சுற்றுலா மையங்களை விட இது முற்றிலும் மாறுபட்ட மற்றும் தனித்துவமான இடமாகும். தோகாரிசஞ்சாரா இதன் இரண்டு பிரபலமான நீர்வீழ்ச்சிகளான தோகாகரிதாரா மற்றும் பன்யரகுமாரா (அல்லது பைரவ் தர்) ஆகியவற்றால் பிரபலமானது. மேலும், இதன் அருகாமையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குடஹந்தி குகை இந்த இடத்தை மேலும் முக்கியத்துவப்படுத்துகிறது. ஜவ்வரிசி (குடா) பானை (கந்தி) போல தோற்றமளிப்பதால் குடகந்தி குகை என்று பெயரிடப்பட்டது. இங்கு வரலாற்றுக்கு முந்தைய இலக்கியங்கள், சித்திரக் கல்வெட்டுகள் மற்றும் கல் சுவர்களில் வடிவமைக்கப்பட்ட வரைபடங்களைக் காணலாம்.
சுற்றுலா
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடத்தில் இராமர் கோயில் கட்டப்பட்டது. இதன் காரணமாக ஒடிசா முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இராம நவமி, ஒவ்வொரு ஆண்டும் 9 நாட்கள் இங்கு நடைபெறும் திருவிழாவாகும்.
படங்கள்
குடாகந்தி
தோககாரிசஞ்சாரா அருவி
இராம நவமி
மேற்கோள்கள்
ஒடிசா அருவிகள்
களாஹாண்டி மாவட்டம்
Coordinates on Wikidata
|
597609
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
|
மேவர் குமார் ஜமாத்தியா
|
மேவர் குமார் ஜமாத்தியா (Mevar Kumar Jamatia) திரிபுராவைச் சேர்ந்த திப்ரா இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பிப்லப் குமார் தேவ் அமைச்சகத்தில் பழங்குடியினர் நலம் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சி(மார்க்சிஸ்ட்) வேட்பாளர் அகோர் தெப்பர்மாவை 6,987 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அசராம்பரி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினரானார். 2022 ஆம் ஆண்டு மே 12 ஆம் அன்று இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு திரபுரா பூர்வகுடி மக்கள் முன்னணிக் கட்சியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். மேலும், 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இவர் 8 நவம்பர் 2022 அன்று திரிபுரா சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி 10 நவம்பர் 2023 அன்று திப்ரா மோதா கட்சியில் சேர்ந்தார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
திரிபுரா அரசியல்வாதிகள்
|
597613
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
|
பாபி வம்சம்
|
பாபி வம்சம் (Babi dynasty) ஓர் ஆப்கானிய வம்சமாகும். இது பிரித்தானிய இந்தியாவின் சமஸ்தானங்களின் ஆளும் அரச குடும்பங்களை உருவாக்கியது. ஆப்கானித்தானின் பஷ்தூன் வம்சாவளியைச் சேர்ந்த இச்சமூகம், பெரும்பாலும் இந்தியாவிலும் பாக்கித்தானின் சில பகுதிகளிலும் வசிக்கின்றனர். 1654 ஆம் ஆண்டில் சேர்கான்ஜி பாபி என்பவர் வம்சத்தை இநிறுவினார். பிரித்தானிய இந்திய சமஸ்தானமான ஜூனாகத்தின் கடைசி நவாப், சர் முகம்மது கான்ஜி, இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, ஜூனாகத்தும், பண்டுவ மனவதர் இராச்சியமும் பாக்கித்தானின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டன . 1947 இல். இருப்பினும், இந்தியா இதனை அங்கீகரிக்கவில்லை. பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு சுதேச அரசை தன்னுடன் இணைத்துக் கொண்டது .
வரலாறு
பாபி பழங்குடியினம் என்பது கிழக்கு ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தானின் மேற்குப் பகுதிகளிலிருந்து தோன்றிய பஷ்தூன் பழங்குடியினமாகும். பாபி அல்லது பாபாய் (பஷ்தூன்) கோர்காஷ்ட் அல்லது கர்கஷ்டியின் மகனாவார். முகலாயப் பேரரசர் உமாயூனின் சீடரான உசுமான் கானின் தலைமையில் குராசானிலிருந்து இந்தியா வந்ததாக அவர்கள் கூறுகின்றனர். உசுமான் கானின் மகன் பகதூர் கான்ஜி பாபி, இந்தியாவிற்கு குடிபெயர்ந்து முகலாயர்களின் கீழ் பணியில் சேர்ந்தார். பாபியின் பரம்பரை பட்டம் (பழங்குடி) 1554 ஆம் ஆண்டில் உமாயூனிடமிருந்து சித்தோகாரின் ராணாவுக்கு எதிரான சேவைகளுக்காக" அவருக்கு வழங்கப்பட்டது.
1654 இல் பாபி வம்சத்தை நிறுவிய சேர்கான்ஜி பாபி, ஷாஜகானின் மகனான கத்தியவாரின் இளவரசர் முராத் பக்சியின் சேவையில் சேர்ந்தார். முகலாய ஆதாரங்களில், பாபி பழங்குடியினரின் உறுப்பினர்கள் "குசராத்திகள்" என அங்கீகரிக்கப்படுகிறார்கள். அவர்களின் பிராந்திய "குசராத்தி" அடையாளம், கலப்புத் திருமணம் மற்றும் அதன் கலாச்சாரத்துடன் இணைதல் மற்றும் அவர்களின் குலத்தைப் பற்றிய குறிப்பு முக்கியமாக வெவ்வேறு குசராத்தி துணைக்குழுக்களுக்குள் ஒரு சமூகமாக குறிப்பிடப்பட்டது. எடுத்துக்காட்டாக அகமதாபாத்தின் ஷுஜாத் கான் குஜராத்தி. பௌச்தார் குசராத்திகளில் ஒருவரும் பாபி பழங்குடியினத்தைச் சேர்ந்தவருமான சப்தர் கானுக்கு "சப்தர் கான்-இ சானி" என்ற பட்டம் வழங்கப்பட்டதை ஔரங்கசீப் உருகாத்-இ ஆலம்கிரியில் குறிப்பிடுகிறார். அவர்கள் பெரும்பாலும் நாட்டில் தலைமுறைகளாக வாழ்ந்தவர்கள் அல்லது மதம் மாறியவர்களுடன் அடையாளம் காணப்பட்டனர்.
முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாபிகள் குசராத்தைப் கைப்பற்றுவதற்காக மராட்டியப் பேரரசின் கெய்க்வாட் வம்சத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் . குசராத் முழுவதையும் கட்டுப்படுத்துவதில் மராத்தியர்கள் வெற்றி பெற்ற நிலையில், ஜூனாகத், ரதன்பூர், பாலசினோர், பண்டுவ மண்வதர், பஜோத் மற்றும் சர்தார்காத் ஆகிய சமஸ்தானங்களின் இறையாண்மையை பாபிகள் தக்க வைத்துக் கொண்டனர்.
இந்த வம்சத்தின் உறுப்பினர்கள் ஜூனாகத், ரதன்பூர் மற்றும் பாலசினோர் ஆகிய சமஸ்தானங்களையும், அதே போல் சிறிய மாநிலங்களான பந்த்வா மனவதர், பஜோத் மற்றும் சர்தார்காத்தையும் ஆட்சி செய்தனர்.
பாபி பழங்குடியினர் வடக்கு குசராத் மற்றும் சௌராட்டிரா முழுவதும் காணப்படுகின்றனர். பிரபல பாலிவுட் நடிகை பர்வீன் பாபி பாபி வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆனால் பெரும்பாலான சமகால பாபிகள், சுதேச பரம்பரையைச் சேர்ந்தவர்களைத் தவிர, சாதாரணமான சூழ்நிலையில் உள்ளனர். பலர் சிறு நில உரிமையாளர்கள். ஆனால் இவர்கள் மத்தியிலும் குறிப்பிடத்தக்க நகரமயமாக்கல் உள்ளது. பாபிகள் அகமண பாரம்பரியத்தை கடைபிடித்தாலும், சௌகான் மற்றும் பெக்லிம் சமூகங்களுடன் திருமண உறவுகளும் உள்ளன. மேலும் இவர்கள் சேக்குகள் மற்றும் சன்னி போக்ரர்களிடமிருந்து மருமகள்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.
குறிப்பிடத்தக்கவர்கள்
பர்வீன் பாபி, இந்தியத் திரைப்பட நடிகை.
முகம்மது திலாவர் கான்ஜி: பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் 14வது ஆளுநர் .
முகமது ஜகாங்கிர் கான்ஜி: சிந்து மாகாண முதலமைச்சரின் ஆலோசகர்.
உருஸ்வா மஜலுமி, குஜராத்தி கசல் கவிஞர்
குலாம் மொய்னுதீன் கான்ஜி பண்டுவ மனவதர் இராச்சியத்தின் துடுப்பாட்ட அணித் தலைவர், வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர், பாக்கித்தான் விளையாட்டு ஆலோசகர்.
சர்வத் கிலானி பாக்கித்தானிய நடிகை.
இதனையும் காண்க
பண்டுவ மனவதர் இராச்சியம்
மேற்கோள்கள்
குசராத் வரலாறு
ஜூனாகத் மாவட்டம்
பாக்கித்தான் வரலாறு
|
597614
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D.%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
|
ஒய். நாகப்பா
|
ஒய். நாகப்பா (Y. Nagappa) (1944/1945 - 27 அக்டோபர் 2020 ) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். நாகப்பா, ஒரு மருத்துவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தீவிர அரசியலில் சேருவதற்கு முன்பு ஆவேரி மாவட்டத்தின் ஹங்கல் வட்டத்தில் உள்ள அக்கியாலூரில் பயிற்சி பெற்றார். தீவிர அரசியலில் சேருவதற்கு முன்பு அரிஹர் அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக இருந்தார். இவர் ஹரிஹர் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டு காங்கிரசுக்கான உட்கட்சித் தேர்தலில் பிபி ஹரிஷால் தோற்கடிக்கப்பட்டார். இவர் 27 அக்டோபர் 2020 அன்று தனது 75 வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
2020 இறப்புகள்
இந்திய அரசியல்வாதிகள்
கர்நாடக அரசியல்வாதிகள்
|
597615
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF
|
சீலா குமாரி
|
சீலா குமாரி மண்டல் (Sheela Kumari Mandal) (பிறப்பு 1970) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் உள்ள புல்பரஸ் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றுகிறார். ஐக்கிய ஜனதா தளம் சின்னத்தில் வெற்றி பெற்றார். இவர் தற்போது பீகார் அரசாங்கத்தில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை
சீலா குமாரி மண்டல் 1991-ஆம் ஆண்டில் பொறியாளரான சைலேந்திர குமார் மண்டலை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இவரது மாமனார் தானிக் லால் மண்டலும் ஒரு அரசியல்வாதி மற்றும் இவரது மைத்துனர் பாரத் பூசன் மண்டலும் ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் லௌகாஹா சட்டமன்ற தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேற்கோள்கள்
1970 பிறப்புகள்
வாழும் நபர்கள்
பீகார் அரசியல்வாதிகள்
|
597623
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
|
நசுருல் இசுலாம்
|
நசுருல் இசுலாம் (Nazrul Islam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1949 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். அசாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் 2002 ஆம் ஆண்டு சூன் மாதம் 7 ஆம் தேதி முதல் 20 மே 2016 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி வரை அசாமின் தருண் கோகோய் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார். 1996 ஆம் ஆண்டு முதல் முதல் 2021 ஆம் ஆண்டு வரை இலகரிகாட்டு சட்டமன்ற தொகுதியிலிருந்து ஐந்து முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நசுருல் இசுலாம் 7 ஜனவரி 2023 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் தேதியன்று தனது 73 ஆவது வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
1949 பிறப்புகள்
2023 இறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
அசாம் சட்டமன்ற உறுப்பினர்கள்
|
597625
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF
|
இரானா கோசுவாமி
|
இரானா கோசுவாமி (Rana Goswami) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1959 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். அசாம் மாநில பிரதேச காங்கிரசு கட்சியின் தலைவராகவும் செயல்படுகிறார்.
இரானா கோசுவாமி 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை அசாம் சட்டமன்றத் தேர்தலில் இயோர்காட்டு தொகுதியில் போட்டியிட்டு அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு சூலை மாதம் 24 ஆம் தேதியன்று இவர் அசாம் பிரதேச காங்கிரசு கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1959 பிறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
அசாம் சட்டமன்ற உறுப்பினர்கள்
|
597626
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
|
வடக்கு கலிபோர்னியா
|
வடக்கு கலிபோர்னியா (Northern California), மேற்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் வடக்குப் பகுதியில் அமைந்த பெரிய நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் சேக்ரமெண்டோ ஆகும். வடக்கு கலிபோர்னியா பகுதி 48 கவுண்டிகளும் சான் ஜோஸ், சான் பிரான்சிஸ்கோ, பிரஸ்னோ, சேக்ரமெண்டோ, ஓக்லாண்ட், ஸ்டாக்டோன், பிரீமாண்ட், மொடேஸ்டோ, சாண்டோ ரோசா, சலினாஸ், ஹேவர்டு, சன்னிவேல், விசலியா, சிகோ, ரெட்டிங், சான் மாட்டியோ, சான் ரபேல், யூரேகா மறறும் சூசன்வில்லே போன்ற 19 நகரங்களும் அமைந்துள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் ரெட்வுட் காடுகள், யோசெமிட்டி தேசியப் பூங்கா, தாவே ஏரி, சாஸ்தா மலை, மத்திய சமவெளி, சியேரா நிவாடா மலைத்தொடர் மற்றும் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிகள் உள்ளது.
பொருளாதாரம்
வடக்கு கலிபோர்னியாவின் பொருளாதாரம் மென்பொருட்கள், குறைகடத்திகள், மின்னணுப் பொருட்கள், உயிரி தொழில்நுட்பம், சுற்றுசூழல் பொறியியல், நிதித்துறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் வடக்கு கலிபோர்னியா உலகின் முதலிடத்தில் உள்ளது. மேலும் சுற்றுலா, கப்பல் போக்குவரத்து, உற்பத்தித் துறைகள், வேளாண்மைத் தொழிலிலும் சிறந்து விளங்குகிறது.
தட்ப வெப்பம்
வடக்கு கலிபோர்னியா கோப்பென் காலநிலை வகைப்பாடு கொண்டது. இதன் சியேரா நிவாடா மலைத்தொடர் பகுதிகள் குளிர்ந்த காலநிலையும், குளிர்காலத்தில் பனிப்பொழிவும் கொண்டது.
வடக்கு கலிபோர்னியாவின் கோடை கால வெப்பநிலை 60 முதல் 100 பாகை பாரன்ஹீட்டும், குளிர்கால வெப்ப நிலை 30 முதல் 50 வரை கொண்டிருக்கும். சனவரி மற்றும் பிப்ரவரி போன்ற குளிர்காலத்தில் சியேரா நிவாடா மலைத்தொடரின் 3000 அடிகளுக்கு மேல் உயரத்தில் பனி மூடியிருக்கும்.
மக்கள் தொகை
1850= 86105
1860= 346714
1870= 516089
1880= 772778
1890= 961628
1900= 1147725
1910= 1569141
1920= 2003075
1930= 2632273
1940= 3066654
1950= 4654248
1960= 6318482
1970= 7849575
1980= 9359160
1990= 11490926
2000= 13234136
2010= 14573946
2020= 15775319
சுற்றுலாத் தலங்கள்
யோசெமிட்டி தேசியப் பூங்கா
கோல்டன் கேட் பாலம்
சான் ஜோஸ் பாலாஜி கோவில்
கல்வி நிலையங்கள்
அரசு கல்வி நிலையங்கள்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
கலிபோர்னியா பல்கலைக்கழகம் டேவிஸ்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஹேஸ்டிங்ஸ்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் மெர்சிடு
கலிபோர்னியா பல்கலைக்கழகம் சான்பிரான்சிஸ்கோ
கலிபோர்னியா பல்கலைக்கழகம் சாந்த குரூஸ்
11 கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகங்கள்:
கலிபோர்னியா கடல்சார் அகாதமி
கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், சிக்கோ
கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், கிழக்கு விரிகுடா
கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், மோன்டேரே விரிகுடா
கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், பிரெஸ்னோ
கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், ஹம்போல்ட்
கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், சாக்ரமாண்டோ
கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், சான் பிரான்சிஸ்கோ
கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், சான் ஜோஸ்
கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், சோனோமா
கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம், ஸ்தனிஸ்லஸ்
தனியார் கல்வி நிலையங்கள்
ஸ்டான் போர்டு பல்கலைக்கழகம்
பிராண்ட்மேன் பல்கலைக்கழகம்
இதனையும் காண்க
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி
தெற்கு கலிபோர்னியா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Real Estate Engineering and Architect Service in California.
கலிபோர்னியா
கலிபோர்னியப் புவியியல்
|
597627
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
கல்ஜானி ஆறு
|
கல்ஜானி ஆறு (Kaljani River) ( ) டோர்ஷா நதியின் துணை ஆறாகும், இது இமயமலையின் அடிவாரத்தில் பூட்டானில் உருவாகி (26°50'24"N 89°26'28"E) இது பூட்டான் மற்றும் இந்தியா வழியாக வடக்கிலிருந்து தெற்காக பாய்ந்து (26°16'25"N 89°35'01"E) தோர்ஷா ஆற்றுடன் சங்கமித்து மீண்டும் பிரம்மபுத்திரா ஆற்றுடன் சங்கமிக்கிறது. இது பத்மா நதியுடன் வங்காள விரிகுடாவுடன் கலக்கிறது. கல்ஜானி ஆற்றின் முக்கிய துணையாறுகள் [ ] டிமா, நோனை போன்றவை தூவார்சின் எழில் மிகு பிரதேசங்களாகின்றன. ஆற்றின் பெரும்பகுதி இந்திய மாநிலமான மேற்கு வங்கம் வழியாக பாய்கிறது. 1993 ஆம் ஆண்டில், இதன் கரையில் உள்ள அணையின் தடுப்புச் சுவர் கசிந்து, இடிந்து அலிபுர்துவார், ஹமில்தங்கஞ்ச் போன்ற நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் நகருக்குள் நூற்றுக்கணக்கான மக்களையும் விலங்குகளையும் கொல்லப்பட்டனர்.
கரையில் உள்ள முக்கிய இடங்கள்
புயென்சோலிங், ஜெய்கான், ஹமில்தங்கஞ்ச், நிம்தி, தக்சின் பரஜோர் காடு, அலிப்பூர்துவார், சிலாகனா ஆகியவை கல்ஜானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சில இடங்கள்.
மேற்கோள்கள்
மேற்கு வங்க ஆறுகள்
|
597628
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
மருத்துவ பூச்சியியல்
|
மருத்துவ பூச்சியியல் (Medical entomology) அல்லது பொதுச் சுகாதார பூச்சியியல், மற்றும் கால்நடை பூச்சியியல் ஆகியவை மனித ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பூச்சிகள் மற்றும் கணுக்காலிகள் மீது கவனம் செலுத்தும் துறை ஆகும். கால்நடை பூச்சியியல் இந்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது, ஏனெனில் பல விலங்கு நோய்கள் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக மாறுகின்றன. எடுத்துக்காட்டாக, போவின் என்செபாலிடிசு. மருத்துவ பூச்சியியல், மூட்டுவலி நோய் கடத்திகளின் நடத்தை, சூழலியல் மற்றும் நோய்ப்பரவியல் குறித்த அறிவியல் ஆராய்ச்சியையும் உள்ளடக்கியது. மேலும் பொது பாதுகாப்பு நலன்களுக்காக உள்ளூர் மற்றும் மாநில அதிகாரிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் உட்படப் பொதுமக்களுடன் இத்துறை மிகப்பெரிய தொடர்புடன் உள்ளது.
பொதுச் சுகாதார பூச்சியியல் 2005ஆம் ஆண்டிலிருந்து ஒரு பெரிய எழுச்சியைக் கண்டது. சிமெக்சு லெக்சுலாரியசு என்ற மூட்டைப் பூச்சி எழுச்சி காரணமாக.
மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பூச்சிகள்
மனித ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பல பூச்சிகள் (மற்றும் பிற கணுக்காலிகள்) உள்ளன. இந்த கணுக்காலிகளில் இறுசிறகிப் பூச்சிகள், ஹெமிப்டெரா, தைசனோப்டெரா, பேன் மற்றும் தெள்ளு ஆகியவை அடங்கும். இவை மனிதர்களுக்கு ஒட்டுண்ணியாக, கடித்தல், குத்துதல், ஒவ்வாமை எதிர்வினைகள் மற்றும்/அல்லது நோய்க் கடத்திகளாகச் செயல்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள மருத்துவ பூச்சியியல் வல்லுநர்கள் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக அறியப்பட்ட பூச்சிகளின் பாதிப்புகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
தனிப்பட்ட பூச்சிகள்
தனிப்பட்ட பூச்சிகளான பேன், தெள்ளு, மூட்டைப் பூச்சி, உண்ணி, சொறி, நோய்க்கிருமிகளைப் பரப்பும் பூச்சிகளாக உள்ளன. இவை இரத்தத்தினை உறிஞ்சும் வகையின. அதாவது இவை தங்கள் புரவலரின் இரத்தத்தை உண்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து தனிப்பட்ட பூச்சிகளும் பாதிக்கப்பட்ட புரவலனுடன் நீண்டகால வெளிப்பாட்டின் மூலம் பாதிக்கப்படாத விருந்தோம்பிக்கு நோய்களைக் கடத்தும். பேன், தெள்ளு, மூட்டைப் பூச்சி மற்றும் உண்ணிகள் புற ஒட்டுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன. புற ஒட்டுண்ணிகள் இவற்றின் புரவலன் தோலில் வாழ்கின்றன. இவை புரவலன் உடலிலிருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் தழுவல்களைக் கொண்டுள்ளன. அதாவது தோலை ஊடுருவிச் செல்லும் முறைகள், செரிமான நொதிகளைச் செருகவும் மற்றும் புரவலனிலிருந்து பெறப்பட்ட ஊட்டச்சத்துக்களைச் செரிமானம் செய்யக்கூடிய குடல் நுண்ணுயிர்களைக் கொண்டுள்ளன. இந்த புற ஒட்டுண்ணிகள் உணவு உண்ணும் போது திரவங்களின் பரிமாற்றம் ரிக்கெட்சியே, பிளேக் நோய் மற்றும் லைம் நோய் போன்ற நோய்களைப் பரப்பலாம். மூட்டைப் பூச்சிகள் மஞ்சட் காமாலை நோய்க் கிருமி கடத்திகளாகவும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சொறி பூச்சிகளைப் புற ஒட்டுண்ணிகள் என வகைப்படுத்த முடியாது. சிரங்கு நோயை ஏற்படுத்தும் சொறி, அரிப்புப் பூச்சி என்றும் அழைக்கப்படும் சர்கோப்டெசு இசுகேபி, இது தன் புரவலன் தோலில் துளையிட்டு அக ஒட்டுண்ணியாக மாறுகிறது. தோலில் வாழும் ச. இசுகேபியின் செயல் மற்றும் ஒட்டுண்ணிக்கு ஒவ்வாமை எதிர்வினை ஆகியவை சொறி எனப்படும் நிலையாகும்.
வீட்டு ஈ
வீட்டு ஈ மிகவும் பொதுவான மற்றும் பரவலாகக் காணப்படும் சிற்றினமாகும். இது மனிதனுக்கு நோய்களைக் கடத்துகிறது. அமீபிக் மற்றும் பேசிலரி இரத்தக்கழிசல் ஆகிய இரண்டின் உயிரினங்களும் பாதிக்கப்பட்டவர்களின் மலத்திலிருந்து ஈக்களால் எடுக்கப்பட்டு, ஈக்களின் முடிகளில் அல்லது ஈ உணவுண்ணும் போது வாந்தி எடுப்பதன் மூலம் சுத்தமான உணவுக்கு மாற்றப்படுகின்றன. குடற்காய்ச்சல் கிருமிகள் ஈக்களின் மலத்துடன் உணவில் படியக்கூடும். வீட்டு ஈக்கள் பறங்கி வியாதி புண்ணிலிருந்து சாதாரண புண் வரை கொண்டு செல்வதன் மூலம் பறங்கி வியாதி கிருமிகளைப் பரப்புகிறது. வீட்டு ஈக்கள் நோய்த்தொற்றுடைய மலத்திலிருந்து உணவு அல்லது பானத்திற்கு தீநுண்மிகளை எடுத்துச் செல்வதன் மூலம் இளம்பிள்ளை வாதத்தினைப் பரப்புகின்றன. வாந்திபேதி மற்றும் கல்லீரல் அழற்சி சில நேரங்களில் ஈக்கள் மூலமும் பரவுகின்றன. சால்மோனெல்லா, காச நோய், ஆந்த்ராக்ஸ் மற்றும் சில வகையான கண்ணோய்கள் வீட்டு ஈக்களால் பரவுகின்றன. இவை 100க்கும் மேற்பட்ட நோய்க்கிருமிகளையும் சில ஒட்டுண்ணிப் புழுக்களைக் கடத்துகின்றன. சுகாதர குறைபாடு உள்ள பகுதிகளில் காணப்படும் ஈக்கள் பொதுவாக அதிக நோய்க்கிருமிகளைப் பரப்புகின்றன. சில விகாரங்கள் மிகவும் பொதுவான பூச்சிக்கொல்லிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியினை ஏற்படுத்தியுள்ளன.
கரப்பான்பூச்சி
கரப்பான்பூச்சிகள் உணவினை உண்ணும்போது நோயை உண்டாக்கும் உயிரினங்களை (பொதுவாக இரைப்பை குடல் அழற்சி) பரப்புகின்றன. கரப்பான்பூச்சி மற்றும் வார்ப்பிரும்புத் தோல்கள், கண்களில் நீர் வடிதல், தடிப்புகள், மூக்கடைப்பு மற்றும் ஆத்துமா போன்ற பல ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.
கடிக்கும் பூச்சிகள்
கொசுக்கள், கொசுவினப் பூச்சிகள், மணல் ஈக்கள், கருப்பு ஈக்கள், மாட்டு ஈக்கள் மற்றும் நிலையான ஈக்கள் உட்படப் பல பூச்சிகள் கடிக்கும் தன்மையுடையன. இவை உணவு உண்பதன் மூலம், கடத்திகளாக மனிதர்களுக்குப் பல நோய்களைப் பரப்பலாம். மருத்துவ பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் பிற மருத்துவ வல்லுநர்கள் தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றனர். இவை மனிதர்களுக்கு நோய்கள் சிலவற்றைத் தாக்குவதைத் தடுக்கிறது. கணுக்காலிகள் மனிதர்களைக் கடிக்காமல் தடுக்கும் வழிகளையும் உருவாக்கியுள்ளனர். மே 2018-ல் வெளியிடப்பட்ட நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஆய்வின்படி, பூச்சி கடித்தால் ஏற்படும் நோய்கள் 2004 முதல் 2016 வரை மூன்று மடங்கு அதிகரித்துள்ளன
பூச்சிகளால் பரவும் நோய்கள்
பெரும் பாதிப்பினை ஏற்படுத்துவன
டெங்குக் காய்ச்சல் - கடத்திகள்: ஏடிசு எஜிப்டி (முக்கிய திசையன்) ஏடிசு அல்போபிக்டசு (சிறு கடத்தி). ஆண்டுக்கு 50 மில்லியன் மக்கள் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர், 25,000 பேர் இறக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 2.5 பில்லியன் மக்களை அச்சுறுத்துகிறது.
மலேரியா - கடத்திகள்: அனோபிலிசு கொசுக்கள். ஒவ்வொரு ஆண்டும் 500 மில்லியன் மக்கள் மலேரியாவால் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார்கள். ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.
லெஷ்மேனியாசிஸ் - கடத்திகள்: புதிய உலகில் லுட்சோமியா மற்றும் பழைய உலகில் பிளெபோடோமசு பேரினத்தில் உள்ள சிற்றினங்கள். இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரையாப்பு பிளேக்கு - முதன்மை கடத்தி: ஜெனோப்சில்லா சியோபிசு குறைந்தது 100 தெள்ளுச் சிற்றினங்கள் பிளேக்கினைப் பரப்புகின்றன. பெரும் அச்சுறுத்தல் வருடத்திற்குப் பல ஆயிரம் அதிக நோய்க்கிருமித்தன்மை மற்றும் விரைவான பரவல்.
தூக்க நோய் - கடத்தி: செட்சி ஈ, அனைத்து சிற்றினங்களும் அல்ல. கீழ்மை சகாரா ஆப்பிரிக்காவின் 36 நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களைத் தூக்க நோய் அச்சுறுத்துகிறது
டைபஸ் -–கடத்திகள்: பூச்சிகள், ஈக்கள் மற்றும் உடல் பேன்கள் ஆண்டுக்கு 16 மில்லியன் பாதிப்புகள், இதன் விளைவாக ஆண்டுதோறும் 600,000 இறப்புகள் ஏற்படுகின்றன.
வூச்சிரேரியா பெங்கிரப்டி - மிகவும் பொதுவான கடத்தி: கொசு பேரினங்கள்: கியூலெக்சு, அனோபிலிக்சு, மான்சோனியா மற்றும் ஏடீசு; 120 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கிறது.
மஞ்சள் காய்ச்சல் - முதன்மை நோய்க்கிருமிகள்: ஏடிசு சிம்ப்சோனி, ஏ. ஆப்பிரிகானசு மற்றும் ஏ. எஜிப்தி ஆப்பிரிக்காவில், தென்னமெரிக்காவில் கீமோகாகசு பேரினம் மற்றும் பிரான்சில் சாபெதெசு பேரினத்தில் சில சிற்றினங்கள். ஆண்டுக்கு 200,000 மஞ்சள் காய்ச்சல் (30,000 இறப்புகளுடன்) மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறுதொற்று
ராஸ் ரிவர் காய்ச்சல் - கடத்திகள்: கொசுக்கள், முக்கிய திசையன்கள் ஏடிசு விஜிலாக்சு, ஏடிசு கேம்ப்டோர்ஹைஞ்சசு மற்றும் குயூலெக்சு அனுலிரோசுட்ரிசு
பார்மா வன தீநுண்மி – கடத்தி: அறியப்பட்ட கடத்திகள் குயூலெக்சு அனுலுரிசுரிசு, ஆக்லெராடசு விஜிலாக்சு மற்றும் ஆ. கேம்ப்ட்ரோரைங்கசு மற்றும் குளுக்கோய்ட்சு மர்க்சி
குஞ்சின் மூளையழற்சி (கொசுக்கள்)
முர்ரே பள்ளத்தாக்கு மூளையழற்சி தீநுண்மி- முக்கிய கொசு கடத்தி: குலெக்சு அனுலிரோசுட்ரிசு.
ஜப்பானிய மூளையழற்சி - பல கொசுக் கிருமிகள், மிக முக்கியமானவை குயூலெக்சு டிரைடேனியோரைங்கசு.
மேற்கு நைல் திநுண்மி- கடத்திகள்: புவியியல் பகுதிக்கு ஏற்ப மாறுபடும்; அமெரிக்காவில் குயூலெக்சு பைபென்சு (கிழக்கு ஐக்கிய நாடுகள்), குயூலெக்சு டார்சாலிசு (நடுமேற்கு மேற்கு), மற்றும் குயூலெக்சு குயின்குபேசியேட்டசு (தென்கிழக்கு) ஆகியவை முக்கிய திசையன்களாகும்.
லைம் நோய் - கடத்திகள்: இக்சோட்சு பேரினத்தின் பல சிற்றினங்கள்
அல்குர்மா வைரஸ் - கடத்தி: உண்ணி
க்யாசனூர் காடு நோய் - கடத்தி: ஹீமாபிசாலிசு இசுபைனிகெரா
ப்ரூஜியா திமோரி பைலேரியாசிசு - முதன்மை கடத்தி: அனோபிலசு பார்பிரோசுட்ரிசு
பேபேசியா - வெக்டார்: ஐக்சோட்சு உண்ணி.
கேரியன்ஸ் நோய் - வெக்டர்கள்: லுட்சோமியா இனத்தைச் சேர்ந்த மணல் ஈக்கள்.
சாகஸ் நோய் - வெக்டார்: டிரைடோமினே என்ற துணைக் குடும்பத்தின் கொலைகாரப் பூச்சி முக்கிய கடத்திகள் ட்ரையடோமா, ரோட்னியசு மற்றும் பான்சுட்ராங்கிலசு வகைகளில் உள்ள சிற்றினங்கள் ஆகும்.
சிக்குன்குனியா - நோய்க்கிருமிகள்: ஏடிசு கொசுக்கள்
மனித எவிங்கி எர்லிச்சியோசிசு - கடத்தி: ஆம்ப்லியோம்மா அமெரிக்கன்
மனித கிரானுலோசைடிக் எர்லிச்சியோசிசு - வெக்டார்: ஐக்சோட்சு இசுகபுலாரிஸ்
ரிப்ட் பள்ளத்தாக்கு காய்ச்சல் - கடத்திகள்: ஏடிசு மற்றும் குயூலெக்சு வகைகளில் உள்ள கொசுக்கள்
ஸ்க்ரப் டைபஸ் - கடத்தி: சிக்கர்
லோவா லோவா பைலேரியாசிசு - கடத்தி: கிரைசாப்சு சிற்றினம்.
மேற்கோள்கள்
கல்வித் துறைகள்
மருத்துவச் சிறப்புத் துறைகள்
|
597629
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
பர்ஜாலா சட்டமன்றத் தொகுதி
|
பர்ஜாலா சட்டமன்றத் தொகுதி (Barjala Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மேற்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2023
2018 election
2016 இடைத்தேர்தல்
மேலும் பார்க்கவும்
திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல்
மேற்கு திரிபுரா மாவட்டம்
மேற்கோள்கள்
திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள்
மேற்கு திரிப்புரா மாவட்டம்
|
597630
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
பொன்தலை விசிறிவால் கதிர்க்குருவி
|
பொன்தலை விசிறிவால் கதிர்க்குருவி ( Golden-headed cisticola ) என்பது ஆத்திரேலியா மற்றும் பதின்மூன்று ஆசிய நாடுகளில் காணப்படும் சிஸ்டிகோலிடே குடும்பத்தில் உள்ள போர்ப்லர் இனப் பறவையாகும். இது சுமார் நீளம் வரை வளரும். இது பொதுவாக பழுப்பு மற்றும் பாலேட்டு வெண்மை நிறத்தில் இருக்கும். ஆனால் இனச்சேர்க்கை காலத்தில் வித்தியாசமான தோற்றமாக, தங்க நிற உடலாகவும் குறுகிய வால் உள்ளதாகவும் மாறும். இது ஒரு அனைத்துண்ணியாகும். மேலும் அடிக்கடி பலவிதமான குரல்களை எழுப்புவதாக உள்ளது. "அனைத்து பறவைகளிலும் சிறந்த தையல்காரர்" என்று இது அறியப்படுகிறது, இது தாவரங்கள் மற்றும் சிலந்தி நூல்களிலிருந்து கூட்டை உருவாக்குகிறது. இது மழைக்காலத்தில் இணைசேரும். இப்பறவை மிகப் பெரிய வாழிடப் பரப்பையும் எண்ணிக்கையையும் கொண்டுள்ளது, இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது.
வகைபிரித்தல்
இதில் பன்னிரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:
C. e. tytleri ஜெர்டன், 1863 – தெற்கு நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியா முதல் வடக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு சீனா வரை
C. e. erythrocephalus பிளைத், 1851 - தீபகற்ப இந்தியா
C. e. equicaudatus Baker, ECS, 1924 – கிழக்கு மியான்மர், தாய்லாந்து மற்றும் இந்தோசீனா
C. e. courtoisi La Touche, 1926 - தெற்கு மற்றும் கிழக்கு சீனா
C. e. volitans ( R. Swinhoe, 1859) - தைவான்
சி. ஈ. semirufus Cabanis, 1872 – பிலிப்பைன்ஸ் மற்றும் சூலு தீவுக்கூட்டம்
C. e. rusticus வாலஸ், 1863 - சுலாவெசி மற்றும் தெற்கு மலுக்கு தீவுகள்
C. e. lineocapilla Gould, 1847 – சுமத்ரா, தென்மேற்கு போர்னியோ, சாவகம், சிறிய சுந்தா தீவு மற்றும் வடமேற்கு ஆத்திரேலியா
C. e. diminutus மேத்யூஸ், 1922 – நியூ கினியா, டொரெஸ் நீரிணையில் உள்ள தீவுகள் மற்றும் வடகிழக்கு ஆத்திரேலியா
C. e. alexandrae மேத்யூஸ், 1912 - வடக்கு ஆத்திரேலியாவின் உள் பகுதி
C. e. exilis (Vigors & Horsfield, 1827) - கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆத்திரேலியா
C. e. polionotus மேயர், 1934 - பிசுமார்க் தீவுக்கூட்டம்
விளக்கம்
பொன் தலை விசிறிவால் கதிர்குருவி ஒரு சிறிய இனமாகும். இது வரை நீளமாகவும், எடையிலும் இருக்கும். ஆண் பறவைகளை விட பெண் பறவைகள் சற்று கனமாக இருக்கும். இதன் தோற்றம் கருப்பு-முதுகு கதிர்குருவி ( சிஸ்டிகோலா எக்ஸிமியஸ் ) போலவே இருந்தாலும், பொன் தலை விசிறிவால் கதிர்க்குருவி இனப்பெருக்க காலத்தில் குறுகிய வால் கொண்டிருக்கும். கருங்கொட்டு கதிர்க்குருவிவியும் ( சிஸ்டிகோலா ஜுன்சிடிஸ் ) ஒத்தது, ஆனால் பொன் தலை விசிறிவால் கதிர்க்குருவியைப் போன்று "செழுமையான பொன்" தலை இல்லை.
ஆண் பறவைக்கு பல பண்புகள் உள்ளன, அவை இனப்பெருக்க காலத்தில் மட்டுமே தங்க நிற உடல், தங்க ஆரஞ்சு நிறத் தலை, மங்கிய கன்னம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் அது அப்போது குறுகிய வாலைக் கொண்டிருக்கும்; குறுகிய வால் என்பது ஆணின் இனப்பெருக்க வெற்றியைக் கூட்டுவதாக காட்டப்படுவதால் அது பாலியல் தேர்வின் விளைவாக இருக்கலாம். இனப்பெருக்க காலம் தவிர்த்த சமயத்தில் பெண் பறவைகளும் ஆண் பறவைகளும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும். இவை பாலேட்டு நிற அடிப்பகுதியும், பழுப்பு நிற மேல்பகுதியையும் கொண்டிருக்கும். இவற்றின் உடலின் மேற்பகுதியில் கருப்பு அல்லது அடர் பழுப்பு நிற கோடுகள் இருக்கும். கறுப்பு நிற இறக்கைகளின் விளிம்புகள் மஞ்சள் நிறத்தில் உள்ளன. மேலும் பொன்நிறத் தலையைக் கொண்டிருக்கும். இவற்றின் தொண்டை வெண்மையாகவும், கழுத்தின் பின்புறம் மங்கிய பொன் நிறத்தில் இருக்கும். இளம் பறவைகள் நிறத்தில் சற்று மங்கியதாக முதிர்ந்த பறவைகளின் தோற்றத்திலேயே இருக்கும். சன்ஷைன் கோஸ்ட் கவுன்சிலின் கூற்றுப்படி, இது "டீவிப்" முதல் "வீஸ், விட்-விட்" வரையிலான பல்வேறு வகையான ஒலிகளை பிற பறவைகளிலிருந்து வேறுபட்டு உருவாக்குகிறது.
பரவலும் வாழ்விடமும்
இப்பறவை ஆத்திரேலியா, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோ மக்கள் சனநாயகக் குடியரசு, மியான்மர், நேபாளம், பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், தைவான், தாய்லாந்து, கிழக்கு திமோர், வியட்நாம் ஆகிய மிகப்பெரிய வாழிடப் பரப்பை பொன்தலை விசிறிவால் கதிர்குருவி கொண்டுள்ளது. இது காணப்படும் பரப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது.
இப்பறவை புல்வெளி மலைகள், சவன்னாக்கள், மரக்காடுகள், புதர்க்காடுகள், ஆறுகள், ஈரநிலங்கள் அல்லது நீர்ப்பாசன விவசாய நிலங்கள், புற்கள் உயரமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும் பகுதிகளை வாழ்விடமாக கொண்டுள்ளது. இனப்பெருக்க காலத்தைத் தவிர, இவ்வினம் பெரும்பாலும் தரைக்கு அருகில் இருக்க விரும்புகின்றன. வடக்கு ஆத்திரேலியாவின், புல்வெளிகளில் காட்டுத்தீ ஏற்படலாம், இதனால் இது சில சமயங்களில் வன விளிம்புகளில் வாழும். BioLife என்ற அறிவியல் இதழின் படி, இது அல்லது தற்கும் குறைவான உயரத்தில் வாழ்கிறது. இருப்பினும் உலகப் பறவைகளின் உசாநூல் சானாவில் உயரம் வரையும், உலொம்போ தீவில் உயரம் வரையும் வாழ்கிறது என்று குறிப்பிடுகிறது.
நடத்தை
பொன்தலை விசிறிவால் கதிர்க்குருவி ஒரு அனைத்துண்ணி ஆகும். முதன்மையாக பூச்சிகள், சிறிய நத்தைகள் போன்ற முதுகெலும்பில்லாத உயிரினங்களை உண்கிறது, என்றாலும் புல் விதைகளையும் உண்கிறது. இது பொதுவாக தரையில் உணவு தேடுகிறது, புல் போன்ற பல்வேறு தாவரங்களுக்கு இடையில் தன்னை மறைத்துக் கொண்டு, மெதுவாக நகரும். இது பொதுவாக அதன் வாழ்நாள் முழுவதும் ஒரே பகுதியில் வாழ்கிறது, சில சமயங்களில் வேறு இடத்திற்கு நகரும். நியூ கினியா மற்றும் டாஸ்மேனியாவின் பதிவுகள் இது திசைமாறி அலைந்து திரியும் பறவையாக இருப்பதைக் காட்டுகின்றன. மேலும் இது சீனாவில் பகுதி இடப்பெயர்வு மேற்கொள்வதாக உள்ளது. இனப்பெருக்கம் இல்லாத பருவத்தில் இதைக் கண்டறிவது பெரும்பாலும் கடினமாகும். இது பெரும்பாலும் தனித்தோ அல்லது சிறு கூட்டமாகவோ காணப்படுகிறது.
இனப்பெருக்கம்
பொன்தலை விசிறிவால் கதிர்க்குருவி பொதுவாக மழைக்காலத்தில் இணச்சேர்கையில் ஈடுபடும். இது நாடுகளிடையே மாறுபடும். ஆசியாவில், இனப்பெருக்க காலம் சீனாவில் மே-சூலை, இந்தியாவில் ஏப்ரல்-ஆகத்து, மொலுக்காஸ் மற்றும் சுலவேசியில் செப்டம்பர்-மார்ச், நியூ கினியாவில் திசம்பர்-மார்ச், தென்கிழக்கு ஆசியாவில் ஏப்ரல்-செப்டம்பர் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. வட ஆத்திரேலியாவில் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்கின்றன. அதே நேரத்தில் மேற்கு ஆத்திரேலியாவில் சனவரி முதல் மே வரையிலும், கிழக்கு ஆத்திரேலியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. தென்கிழக்கு ஆத்திரேலியாவில், இனப்பெருக்கம் பொதுவாக செப்டம்பர்-அக்டோபரில் நடக்கிறது. இது அதன் பகுதியைப் பொறுத்து, ஒருதுணை மண அல்லது பலதுணை மண பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. இனப்பெருக்க காலத்தில், ஆண் பறவைகள் சில நேரங்களில் பறந்து விளையாட்டுக் காட்டி குரல் கொடுக்கும். இந்த நிகழ்ச்சிகளில், ஆண் பறவை "உயர எழுந்து, சுமார் 50 மீ உயரத்திற்கு மேல்நோக்கி சென்று ஐந்து நிமிடங்கள் வரை இடமும் வலமுமாக மாறி மாறித் திரும்பிப் பறந்து, இறக்கைகளை மூடுகிறது", பின்னர் செங்குத்தாக தரையில் இருந்து சற்று மேலே இறங்கி வந்து சேர்கிறது. இது உடனடியாக இந்த மாதிரி மீண்டும் செய்யும் அல்லது அதன் பிராந்தியத்தின் மற்றொரு பகுதிக்கு பறந்து பின்னர் அவ்வாறு செய்யும்.
இந்தப் பறவை புதர்கள், புல் மற்றும் பிற வகை தாவரங்களில் தன் கூட்டை கட்டுகிறது. கூடுகளை தரையில் இருந்து க்கு மேலே கட்டுவதில்லை. "அனைத்து பறவைகளிலும் சிறந்த தையல்காரர்" என்று இப்பறவை வர்ணிக்கப்படுகிறது. இது தன் கூடுகளை உருவாக்க, சிலந்தி நூல்களைப் பயன்படுத்தி கூட்டை ஒன்றாக இணைக்கிறது. இரு பாலினத்தவையும் கூடு சேர்ந்து கூடு கட்டும் பணியில் ஈடுபடும், பெண் பறவை கூடு தைக்க, ஆண் பறவை பெண்ண் பறவைக்குத் தேவைப்படும் சிலந்தி வலை நூல்களை கொண்டுவந்து கொடுக்கிறது.
பெண்பறவை மூன்று அல்லது நான்கு முட்டைகள் இட்டு அடைகாக்கிறது, அடைகாத்தல் காலம் 11 நாட்கள் ஆகும். குஞ்சு பொரித்து உயிர்வாழும் முட்டைகளின் விகிதம் 32% ஆகும். குஞ்சு பொரித்த பிறகு, பெண் குஞ்சுகளுக்கு உணவளிக்கிறது, ஆண் கூட்டை பாதுகாக்கிறது, அதன் அருகே வரும் விலங்குகளை விரட்டுகிறது. குஞ்சுகள் 11-13 நாட்கள் கூட்டில் இருக்கும்.
காட்சியகம்
மேற்கோள்கள்
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
ஆத்திரேலியப் பறவைகள்
தென்கிழக்காசியப் பறவைகள்
தென் சீனப் பறவைகள்
இந்தியப் பறவைகள்
பூட்டான் பறவைகள்
தெற்காசியப் பறவைகள்
|
597633
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
|
வேப்பங்குளம்
|
வேப்பங்குளம் (Veppankulam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வேப்பங்குளத்தில் 681 ஆண்கள் மற்றும் 767 பெண்கள் என மொத்தம் 1448 பேர் இருந்தனர். பாலின விகிதம் 1126 ஆக இருந்தது. எழுத்தறிவு விகிதம் 81.18 ஆகும். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் பரப்பளவில் மாநிலத்திலேயே மிகப்பெரியது.
இக்கிராமத்தின் தெற்கே அமைந்துள்ள மாரியம்மன் கோயில், சுற்றுவட்டாரப் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
மேற்கோள்கள்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597634
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
சாமூத்திரி கோபுரம்
|
சாமூத்திரி கோபுரம் (Samoothiri Tower) என்பது தென்னிந்தியாவின் கோழிக்கோடு நகரத்தில் அமையவுள்ள ஒரு பல மாடிக் கோபுரம் ஆகும். மலபாரின் சுற்றுலாத் துறைக்கான தகவல் மையமாக இந்த கோபுரம் கட்டப்படும். சாமூத்திரி கோபுரம் 62 மீ உயரம் கொண்டதாக இருக்கும். முதல் இரண்டு தளங்களில் ஒரு வரலாற்று அருங்காட்சியகமும் 14 ஆவது அடுக்கில் ஒரு பார்வைக் கூடம் இருக்கும். பார்வைக் கூடத்திலிருந்து முழு நகரத்தின் பரந்த காட்சிகளையும் கண்டு அனுபவிக்க முடியும்.
சாமூத்திரி கோபுரம் கோழிக்கோட்டின் புகழ்பெற்ற ஆட்சியாளர்களான சாமூத்திரியின் பெயரால் அழைக்கப்படுகிறது. குங்காலி மரக்கார் என்ற பெயரில் உள்ள தோட்டத்துடன் இந்த கோபுரம் இரட்டையாக அமைக்கப்படும். மேலும் அருகில் உள்ள மனஞ்சிரா சதுக்கத்தில் இருந்து நிலத்தடி அணுகலையும் கொண்டிருக்கும்.
கட்டிடத்தின் வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டு, கேரள அரசு கோபுரத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
இவற்றையும் காண்க
கோழிக்கோடு
மானாஞ்சிறா
சரோவரம் உயிரியல் பூங்கா
மேற்கோள்கள்
கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்
கேரளத்தில் சுற்றுலாத் துறை
|
597637
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF
|
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
|
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (ஆங்கிலம்:Rathinam College of Arts and Science) என்பது கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும். இது 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது. என்ஏஏசி தரமதிப்பீட்டில் ஏ++ பெற்றுள்ளது.
துறைகள்
இக்கல்லூரியில் உள்ள துறைகள்.
கணினி அறிவியல்
வணிகவியல்
உயிர் அறிவியல்
இயற்பியல்
கணிதம்
மனவியல்
அலங்கார வடிவமைப்பு
காட்சி தொடர்பியல்
ஆங்கிலம்
மேலாண்மை
மேற்கோள்கள்
கோயம்புத்தூரிலுள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்
|
597638
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88
|
மராத்து கடற்கரை
|
மராத்து கடற்கரை (Marad Beach) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தில் கல்லாய் அருகே உள்ள ஒரு சிறிய மீன்பிடி கிராமமாகும். கல்லாய் இரயில் நிலையத்திற்கு பின்புறம் மராத்து கடற்கரை அமைந்துள்ளது.
மராத்து சாலை கல்லாய் நகரில் இருந்து தொடங்குகிறது. சாக்கும் கடவு கிராமம் மற்றும் பையனக்கல் கிராமம் வழியாக இச்சாலை செல்கிறது. மராத்து மற்றும் கய்யாடித்தோடு கிராமங்கள் ஒன்றையொன்று ஒட்டியவையாகும்.
வரலாறு
2003 ஆம் ஆண்டில், மதம் சார்ந்த ஒரு சம்பவத்தில் எட்டு இந்துக்களும் ஒரு முசுலீமும் இங்கு கொல்லப்பட்டனர். 2009 ஆம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் 62 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
பொருளாதாரம்
இங்கு மீன்பிடித்தல் முக்கிய பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையாகும்.
அடையாளங்கள்
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பன்னியங்கரையில் பன்னியங்கரை சாலை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்டி முடிந்ததும், மராத்து கடற்கரை பயன்பெறத் தொடங்கும்.
கோதீசுவரம் கோவில்
இவற்றையும் காண்க
கோழிக்கோடு கடற்கரை
பேப்பூர்
மேற்கோள்கள்
கோழிக்கோடு மாவட்டம்
|
597639
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
|
பி. கே. நந்தகுமார்
|
பி கே நந்தகுமார் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு ஓவியரும் கலை வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் பல வருடங்களாக கலைத்துறையில் பணியாற்றிவருபவர்.
வாழ்க்கை பின்னணி
நந்தகுமார் கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு நகரை சேர்ந்தவர். இவர் புனே மாவட்டத்திலுள்ள குபவலி என்ற கிராமத்தில் உள்ள மகீந்திரா ஐக்கிய உலகக் கல்லூரி இந்தியா நிறுவனத்தில் சிற்பக்கலை மற்றும் காட்சிக் கலை ஆசிரியராக பதினேழு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய பின்னர் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள முசோரி மலைவாழிடத்திலுள்ள ''வுட்ஸ்டாக் பள்ளியில் கலைத்துறை தலைவராக ஏழு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.
கண்காட்சிகள்
தில்லி, மும்பை மற்றும் நார்வேயில் இவரது கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
கொச்சி-முஸிரிஸ் பைனாலே: கொச்சி-முசிரிஸ் பைனாலேயில் 'விதை' என்ற நிறுவல் வழங்கப்பட்டிருந்தது. இது மட்டஞ்சேரி டச்சு அரண்மனைக்கு அருகில் உள்ள பழயன்னூர் அம்மன் ஆலயப் பகுதியில் உள்ளது.
குறிப்புகள்
கலைஞர்கள்
|
597648
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
முர்சி மக்கள்
|
முர்சி மக்கள் (Mursi)கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டின் தென்மேற்கில் தெற்கு சூடான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், சுர்மா மொழிக் குடும்பத்தில் ஒன்றான முர்சி மொழி பேசும் பழங்குடி மக்கள் ஆவார். 2007ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முர்சி மக்கள் தொகை 11,500 ஆக இருந்தது. இவர்களில் 848 பேர் நகர்புறங்களில் வாழ்கின்றனர். இம்மக்கள் மலைகளுக்கிடையே பாயும் ஓமோ ஆறு மற்றும் மகோ ஆறுகளுக்கு இடையே, எத்தியோப்பியா நாட்டின் தனிமையான, தொலைதூரப் பகுதியில் வாழ்கின்றனர். இவர்களின் அண்மைப் பகுதிகளில் ஆரி, பன்னா, போடி, காரோ, வெக்கு, யாங்கடோம் மற்றும் சுர்மா பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். எத்தியோப்பிய அரசு இம்மக்களை சுர்மா பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளனர்.
சமயம் & பண்பாடு
முர்சி மக்கள் ஆன்ம வழிபாடு (நீத்தார் வழிபாடு) கடைபிடிக்கின்றனர். நகர்புறங்களில் வாழும் சில முர்சி மக்கள் கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றுகின்றனர்.முர்சி மற்றும் சுர்மா பழங்குடி பெண்கள் 15வது வயதில் உதட்டில் மர வட்டுகள் அணிகின்றனர். மேலும் சிலர் கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அவை அதிகளவில் அணியப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
மேலும் படிக்க
(2000) Pancorbo, Luis: "Los labios del río Omo" en "Tiempo de África", pp. 176–190. Laertes. Barcelona.
(2007) Silvester, Hans: Les Habits de la Nature Editions de la Martinière
வெளி இணைப்புகள்
Mursi Online
People of Africa
The Mursi Language
National Geographic Photo Gallery
Mursi in danger of denial of access or displacement
An anthropologist's comments on the Mursi and the Omo Park situation (also available as a Word file)
African Parks Foundation
Mursi Online page on the Mursi 'Surmic' language (tugo)
Full-text documents and journal articles about the Mursi (Forced Migration Online, Digital Library)
https://www.youtube.com/watch?v=9PUSPE_7ek8&t=4s Walking With The Mursi is an adventure/travel documentary spanning four continents as David Willing hikes 500 km across Ethiopia's remote Omo Valley with Mursi tribes.
ஆப்பிரிக்காவின் பழங்குடிகள்
எத்தியோப்பியா
|
597649
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
செம்பழுப்பு கதிர்க்குருவி
|
செம்பழுப்பு கதிர்க்குருவி (Rufous cisticola)(சிசுடிகோலா ரூபசு) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது புர்க்கினா பாசோ, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், காம்பியா, கானா, கினி, மாலி, நைஜீரியா, செனிகல், சியேரா லியோனி மற்றும் டோகோ ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் தாழ் நிலப் புல்வெளி ஆகும்.
மேற்கோள்கள்
மேற்கு ஆப்பிரிக்கப் பறவைகள்
கதிர்க்குருவி
|
597654
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
சுர்மா மக்கள்
|
சுர்மா மக்கள் (Suri), கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டின் தென்மேற்கில் தெற்கு சூடான் எல்லைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். 1998ல் சுர்மா மக்கள் தொகை 80,000 மற்றும் 2007ல் 1,86,875 ஆக உயர்ந்துள்ளது. சுர்மா மக்கள் தொடர்புடைய பழங்குடிகள் முர்சி மக்கள், சுர்மா மக்கள் மற்றும் வெக்கு மக்கள் ஆவார்.
சமயம் மற்றும் நம்பிக்கைகள்
97% சுர்மா மக்கள் ஆன்ம வாதம் மற்றும் ஆவி வழிபாடு கடைபிடிக்கின்றனர்.சமீப காலத்தில் சிறிய அளவிலான சுர்மா மக்கள் கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றுகின்றனர்.
பொருளாதாரம்
சுர்மா பழங்குடிகள் வேளாண்மையை முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர்.சோளம், பட்டாணி, முட்டைக்கோஸ், புகையிலை பயிரிடுகினர். மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தேன் சேகரிக்கின்றனர்.
பண்பாடு
சுர்மா பழங்குடிப் பெண்கள் காதுகளில் மர வட்டத் தட்டு அணிகின்றனர்
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
Abbink, Jon (1996). The Suri. In: J. Middleton & A. Rassam, volume eds., Encyclopedia of World Cultures, vol. 9 (Africa/Middle East), pp. 323–327. Boston: G.K. Hall.
Abbink, Jon (2009). The fate of the Suri: conflict and group tension the Southwest Ethiopian frontier. In: G. Schlee & E.E. Watson, eds, Changing Identifications and Alliances in Northeast Africa. Volume I: Ethiopia and Kenya, pp. 35–51. Oxford – New York: Berghahn Books.
BBC/Discovery Channel TV-docu series Tribe (UK)/Going Tribal (US) shows British explorer Bruce Parry living among them a few weeks
Abbink, Jon. (1998) "Ritual and political forms of violent practice among the Suri of southern Ethiopia", Cahiers d'études africaines, 38, cah. 150/152, pp. 271–295.
African Parks Foundation
bbc.co.uk
gurtong.org
Wagstaff, Q.A. (2015) "Development, Cultural Hegemonism and Conflict Generation in Southwest Ethiopia: Agro-Pastoralists in Trouble". Bordeaux: Les Afriques dans le Monde, Sciences Po Bordeaux (http://www.lam.sciencespobordeaux.fr/sites/lam/files/note13_observatoire.pdf)
Woods, S. (30 October 2008) "Ethiopia's Nomad Warriors". Rolling Stone, Academic Search Premier database, Retrieved March 6, 2009.
மேலும் படிக்க
Abbink, Jon "Ethnic Conflict in the 'Tribal Zone': The Dizi and Suri in Southern Ethiopia", Journal of Modern African Studies, 31 (1993), pp. 675–682
Abbink, Jon 2004. Converting Pastoralists: Reflections on missionary work and development in southern Ethiopia. In A. Kumar Giri, A. van Harskamp & O. Salemink (eds), The Development of Religion, the Religion of Development 133–142. Delft: Eburon.
Abbink, Jon 2009. Tourism and its discontents: Suri-Tourist encounters in southern Ethiopia. In: S. Bohn Gmelch, ed., Tourists and Tourism: a Reader. Second Edition, pp. 115–136. Long Grove, Ill.: Waveland Press, Inc.
Abbink, Jon, Michael Bryant & Daniel Bambu. 2013. Suri Orature: An Introduction to the Society, Language, and Oral Culture of the Suri People (Southwest Ethiopia). Cologne: Rudiger Köppe Publishers, 203 pp.
வெளி இணைப்புகள்
The Surma People of the Omo Valley : Ethiopia
MOJA AFRIKA (Etiopija; ljubljana - Nairobi. Z motorjem!), video of a 2006 visit to the Surma in Ethiopia
ஆப்பிரிக்காவின் பழங்குடிகள்
|
597660
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF
|
ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
|
ஸ்ரீ நாராயண குரு கல்லூரி (ஆங்கிலம்:Sree Narayana Guru College) என்பது தமிழ் நாடு கோயம்புத்தூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இக்கல்லூரி 1994 ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் சார்பாகத் தொடங்கப்பட்டது..
துறைகள்
இக்கல்லூரியில் உள்ள துறைகள்
மொழித்துறை
கணினி அறிவியல்
வாழ்க்கை அறிவியல்
மேலாண்மை
சமுக அறிவியல்
வணியகவியல்
ஆங்கிலம்
கணிதம்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
அலுவல் தளம்
கோயம்புத்தூரிலுள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்
|
597661
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
|
இராமாயணமொழிசம்பு
|
இராமாயணமொழிசம்பு (ഭാഷാരാമായണചമ്പു) என்பது பூனம் நம்பூதிரியால் இயற்றப்பட்ட மொழிசம்பு வகையை சேர்ந்த கவிதை-வசனம் கலந்த ஒரு படைப்பாகும். மொழிசம்பு படைப்புகளில் இலக்கிய தரம், அளவு, ஆகியவற்றில் இது முதலிடம் பெறுகிறது. இராமாயண மொழிசம்பு இராவணனின் பிறப்பு, இராம அவதாரம், தாடகையின் அழிப்பு, போன்றவையில் துவங்கி சுவர்க்கத்தை அடைதல் வரை இருபது ஆய்வுக்கட்டுரைக்ளை கொண்டதாகும். கிட்டத்தட்ட இரண்டாயிரம் சுலோகங்கள், தண்டுகள், நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட உரைநடைகளையும் கொண்ட இந்த மாபெரும் கிரந்தத்தில் பூனத்தின் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல், இறைபக்தி, தடையற்ற கற்பனை, மற்றும் தகுந்த வார்த்தை பயன்பாடு, மனதின் விழிப்புணர்வு, ஆகியவற்றை காண இயலும்.
இலக்கிய நூலில் சம்புவின் பெருமை
"... இவை அனைத்தையும் விட அவரது மிகப்பெரிய சாதனை படைப்பு பாஷா ராமாயண சம்புவிலுள்ள இராவணன் பிறப்பு முதலான பாகங்களும், மற்றும் 13 சுவாதி திருநாள் சங்கீத கீர்த்தனைகளும் வெளியிடப்பட்டது தான். அதற்கு முன்புவரை இராமாயணசம்பு என்று ஒரு படைப்பு இருந்ததாக யாரும் அறிந்திருக்கவில்லை. இவற்றில் முதல் இரண்டு பகுதிகளுக்கு இராமாயண சம்பு என்றும் மற்ற பகுதிகளுக்கு உத்தர இராமாயண சம்பு என்றும் பெயரிடப்பட்டது." -- இவ்வாறு கேரள இலக்கிய வரலாறு என்ற இலக்கிய நூலில் உள்ளூர் எஸ் பரமேசுவர ஐயர்'''', அறுபத்தி நாலாவது அத்தியாயத்தில் கே. சிதம்பர வாத்தியார் என்பவரை பாராட்டி எழுதியுள்ளார்.
குறிப்புகள்
மலையாள நூல்கள்
|
597664
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF
|
குலாம் மொய்னுதீன் கான்ஜி
|
குலாம் மொய்னுதீன் கான்ஜி (Ghulam Moinuddin Khanji) (22 டிசம்பர் 1911 - 13 பிப்ரவரி 2003) பிரித்தானிய இந்தியாவுடன் தொடர்புடைய சமஸ்தானங்களில் ஒன்றான பண்டுவ மானவதர் மாநிலத்தின் ஆட்சியாளராக இருந்தார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாக்கித்தானுடன் இணைவதற்குத் தேர்வு செய்த போதிலும், அந்த மாநிலம் விரைவில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த வாக்கெடுப்பும் இந்தியாவுடன் இணைவதற்கே வழிவகுத்தது.
ஒரு திறமையான விளையாட்டு வீரரான இவர் மேற்கு இந்தியாவுக்காக முதல்தர துடுப்பாட்டத்தில் விளையாடினார். மேலும் இவரது பிற்கால வாழ்க்கையில் பாக்கித்தான் வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
கான்ஜி 22 டிசம்பர் 1911 அன்று பண்டுவ மனவதர் இராச்சியத்தின் (இன்றைய குசராத்து, இந்தியா) மனவதரில் நவாப் பதேகுதீன் கான்ஜியின் இரண்டாவது மனைவி பாத்திமா சித்திக் பேகம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். மொய்னுதீன் ராஜ்கோட்டில் உள்ள ராஜ்குமார் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.
ஆட்சி
கான்ஜி தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு 1918 அக்டோபர் 19 அன்று மனவதரின் அரியணை ஏறினார். இவருக்கு ஏழு வயதாக இருந்ததால், இவரது தாயார் 1931 ஆம் ஆண்டு வரை ( இவரது 20 வயது வரை) ஆட்சியாளராக செயல்பட்டார்.
1947 இல் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிவினையைத் தொடர்ந்து, சமஸ்தானங்கள் இந்தியா அல்லது பாக்கித்தானில் சேர அல்லது சுதந்திரமாக இருக்க அழைக்கப்பட்டன. செப்டம்பர் 24 அன்று, கான்ஜி பாக்கித்தானின் புதிய அரசுடன் இணைந்தார். இருப்பினும், இந்திய துணைப் பிரதமர் வல்லபாய் படேலின் உத்தரவின் பேரில், இந்தியா அக்டோபர் 22 அன்று மாநிலத்தை இணைத்தது. மனவதர், மங்ரோல் மற்றும் மூன்று மாநிலங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பதிவான 31,434 வாக்குகளில் பாக்கித்தானுக்கு ஆதரவாக 34 வாக்குகளே பதிவாகின.
இவர் ஆரம்பத்தில் சோங்காத் என்னுமிடத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் ராஜ்கோட்டில் கைது செய்யப்பட்டார். 1951 இல், லியாகத்-நேரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இவர் பாக்கித்தானுக்குச் சென்றார்.
விளையாட்டு வீரர்
கான்ஜி, மிர்சா நசிருதீன் மசூத் பயிற்சியளித்த மனவதர் வளைதடி பந்தாட்ட அணியின் நிறுவனர் ஆவார். இவரது தலைமையின் கீழ், அந்த அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 1934 இல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அதே ஆண்டில், மேற்கத்திய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வளைதடிப் பந்தாட்ட அணியில் உறுப்பினராக இருந்தார்.
கான்ஜி துடுப்பாட்டமும் விளையாடினார். 1935 மற்றும் 1941 க்கு இடையில் ரஞ்சிக் கோப்பையில் மேற்கத்திய இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்த பிறகு, பாக்கித்தான் வளைதடிப் பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவரானார்.
சில சமயங்களில் ரஞ்சிக் கோப்பை துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் இருந்தார். மேலும் தேசிய மற்றும் சர்வதேச பயணங்களில் மனவதர் துடுப்பாட்டம்-வளைதடி பந்தாட்ட அணிகளை வழிநடத்தினார்.
சொந்த வாழ்க்கை
கான்ஜி 1933 நவம்பர் 14 அன்று குர்வாய் நவாப்பின் மகளான குத்சியா சித்திக் பேகத்தை தனது முதல் மனைவியாக மணந்தார். பின்னர் ஜூலை 1945 இல் நவாப் அபிதா பேகத்தை இரண்டாவது முறையாக மணந்தார். இவருக்கு ஐந்து மகன்களும் ஆறு மகள்களும் இருந்தனர். இவரது கடைசி மகன் 1963இல் பிறந்தார். இவரது மூத்த மகன் அசுலாம் கானும் ஒரு துடுப்பாட்ட வீரர். கான்ஜியின் பேத்திகளில் ஒருவரான சர்வத் கிலானி ஒரு நடிகை.
இறப்பு
கான்ஜி பிப்ரவரி 13, 2003 அன்று தனது 92 வயதில் சிந்து மாகாணத்தின் கராச்சியில் இறந்தார்.
மேற்கோள்கள்
இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்
இசுலாமியப் பேரரசர்கள்
இந்திய அரசர்கள்
2003 இறப்புகள்
1911 பிறப்புகள்
|
597667
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D
|
மசுமோம்
|
மசுமோம் (அரபு மொழி: مشموم, Machmoum) என்பது அரபு மல்லிகைப் பூக்களால் செய்யப்பட்ட சிறுபூச்செண்டு அல்லது கழுத்தணி சிறுமாலை ஆகும். இம்மலர் பண்பாடு, தூனிசியா நாட்டின் கலாச்சாரம் ஆகும். அந்நாட்டின் நண்பகல் பொழுதிலோ, மாலைப் பொழுதிலோ இவை விற்கப்படுகின்றன. அந்நாட்டின் ஆடவர் காதில் அணிவர். பெண்கள் தன் கைகளிலோ, தங்கள் மார்பகப் பிளவிலோ அணிவர்.
மேற்கோள்கள்
அரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
மல்லிப் பேரினத் தொடர்புடையவை
துனீசியா
|
597669
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%9C%E0%AE%BF.%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF
|
கே. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
|
கே. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (ஆங்கிலம்:KSG College of Arts and Science) என்பது தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. கே.எஸ். கீதா என்பவர் தனது பெயரில் 1997 ஜூலை 4 ஆம் நாள் கே. எஸ். ஜி. கல்வி அறக்கட்டளையினைத் தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் மூலம் 2001 ஆம் ஆண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டது.
பட்டப்படிப்புகள்
இக்கல்லூரியில் இளங்கலைப் படிப்பும் முதுகலைப் படிப்பும் உள்ளன.
இளங்கலை கணினிப் பயன்பாடு
இளங்கலை வணிகவியல்
இளங்கலை கணினி அறிவியல்
இளங்கலை தகவல்தொழில்நுட்பம்
இளங்கலை பல்லூடகம் மற்றும் இணையத் தொழில்நுட்பம்
இளங்கலை உயிரித் தொழில்நுட்பம்
இளங்கலை உணவுத் தயாரிப்பு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மை
இளங்கலை மின்னணுவியல் மற்றும் தொடர்பு சாதனங்கள்
இளங்கலை கணிதம்
இளங்கலை ஆங்கில இலக்கியம்
இளங்கலை தொழில் நிர்வாகவியல்
இளங்கலை உளவியல்
முதுகலை ஆங்கில இலக்கியம்
முதுகலை தகவல் தொழில்நுட்பம்
முதுகலை கணிதம்
முதுகலை உயிரித் தொழில்நுட்பம்
முதுகலை வணிகவியல்
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
கோயம்புத்தூரிலுள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்
|
597671
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF
|
கோயம்புத்தூர் கடலியல் கல்லூரி
|
கோயம்புத்தூர் கடலியல் கல்லூரி (ஆங்கிலம்:Coimbatore Marine College) என்பது தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் கடல்சார்ந்த படிப்புகளையும் பயிற்சிகளையும் அளிக்கும் தனியார் இருபாலர் கல்லூரியாகும். 2001 ஆம் ஆண்டு கோவையின் மயிலேறிபாளையத்தில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. இந்திய கப்பல்துறை இயக்ககத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற இக்கல்லூரி இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது. இக்கல்லூரியில் கடல் அறிவியல், கடல் பொறியியல், கப்பல் மற்றும் போக்குவரத்து நிர்வாகவியல், இளங்கலை வணிக நிர்வாகவியல், முதுகலை வணிக நிர்வாகவியல் போன்ற துறைகள் உள்ளன.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
கோயம்புத்தூரிலுள்ள பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்
|
597675
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81
|
கான் யூனிசு
|
கான் யூனிசு (, translation: Caravansary [of] Jonah) என்பது காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தீனிய நகரமாகும். பாலத்தீனிய புள்ளியியல் நடுவண் செயலகம் அளித்துள்ள தகவலின்படி 2007 ஆம் ஆண்டில் 142,637 பேர்; 2010 ஆம் ஆண்டில் 202,000 பேர்; 2012 ஆம் ஆண்டில் 350,000 பேர் என்பதாக இந்நகரத்தின் மக்கட்தொகை இருந்தது. நடுநிலக் கடலுக்கு கிழக்கே 4 கி.மீ (2.5 மைல்கள்) தொலைவில் அமைந்திருக்கும் இந்நகரில் பாலைவனத்தை ஒத்த தட்பவெப்பநிலை நிலவுகிறது. கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 30°C வெப்பநிலையும், குளிர்காலத்தில் 10°C வெப்பநிலையும் இருக்கும். ஆண்டு மழையளவு 260 மில்லிமீட்டர் (10.2 அங்குலம்) ஆகும்.
கான் யூனிசு தொகுதி, பாலத்தீனிய சட்ட மேலவையில் 5 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் நடந்த பாலத்தீனிய சட்ட மேலவைக்கானத் தேர்தலில், ஹமாஸ் இயக்கத்தின் உறுப்பினர்கள் 3 பேரும், ஃபத்தா இயக்கத்தின் உறுப்பினர்கள் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நகரம் தற்போது ஹமாஸ் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
நூலடைவு
வெளியிணைப்புகள்
Khan Younis, articles from UNWRA
Welcome To The City of Khan Yunis
close-up map of Gaza
Air photo of Khan Yunis, 1946, with key to sites - Eran Laor Cartographic Collection, இசுரேல் தேசிய நூலகம்
காசாக்கரையிலுள்ள நகரங்கள்
|
597679
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
|
பிரம்மதேசம், திண்டிவனம்
|
பிரம்மதேசம் (Brahmadesam) என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்தியக் கிராம ஊராட்சி ஆகும். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொகுதிக்கு உட்பட்ட 56 கிராம ஊராட்சிகளில் இதுவும் ஒன்று. பிரம்மதேசத்திற்கான கிராமக் குறியீடு 10. இது மரக்காணம் பகுதியின் கீழ் வருகிறது (பகுதி குறியீடு.12).
சொற்பிறப்பியல்
பிரம்மதேசம் (பிரம்மாதேசம் என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்ற சொல்லுக்குத் தமிழில் " பிரம்மாவின் நாடு" என்று பொருள். தமிழ்நாட்டில் குறைந்தது ஐந்து கிராமங்கள் இந்தப் பெயரில் உள்ளன. இவை "பிரம்மதேசம்" என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த கிராமங்களில் ஒன்று இதே மாவட்டத்தில் உள்ளது. ஆனால் விழுப்புரம் வட்டத்தில் உள்ளது. மற்ற நான்கும் முறையே திருநெல்வேலி, திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அமைந்துள்ளன.
மக்கள்தொகை
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பிரம்மதேசத்தின் மக்கள் தொகை 3254 ஆகும். இதில் ஆண்கள் 1636, பெண்கள் 1618 ஆவர். பாலின விகிதம் 989. இங்கு மொத்தம் 591 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் கல்வியறிவு விகிதம் 69.82% ஆகும்.
பொருளாதாரம்
பிரம்மதேசத்தில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் விளையும் பயிர்களில் நெல், கரும்பு, சவுக்கு, நிலக்கடலை, பருத்தி மற்றும் சில பயறு வகைகள் அடங்கும். இக்கிராமத்தில் உழவர் சந்தை ஒன்றும் உள்ளது. இங்கு ஒவ்வொரு புதன்கிழமையும் இப்பகுதியில் விளையும் காய்கறிகள், கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. கால்நடை வணிகத்திற்கான முக்கிய மையமாகவும் இந்த சந்தை உள்ளது. இது அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களிலிருந்து கால்நடை வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஈர்க்கிறது.
கல்வி
கிராமப்புற மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் அமைத்துள்ளன. அரசுப் பள்ளிகளைத் தவிர, தனியார் பள்ளிகள் - கார்னர்ஸ்டோன் மழலையர் பள்ளி & தொடக்கப் பள்ளி, மற்றும் சில தனியார்ப் பள்ளிகளும் கிராமத்தில் இயங்கி வருகின்றன.
தபால் அலுவலகம்
பிரம்மதேசம் கிராமத்தில் திண்டிவனம் (தலைமை அலுவலகம்) கீழ் செயல்படும் துணைஅஞ்சல் அலுவலகம் உள்ளது. இந்த கிராமம் விழுப்புரம் மாவட்டத்தின் ஆடவல்லிகுத்தான், ஆலங்குப்பம், கில்சிரிவி, கொளத்தூர், முன்னூர், நகர், ஓமிப்பர், பெருமுக்கல், சிறுவாடி வடநெற்குணம், வாடிப்பாக்கம் ஆகிய 11 கிளை அலுவலகங்களுடன் "604301" என்ற அஞ்சல் குறியீட்டைப் பகிர்ந்து கொள்கிறது.
காவல் நிலையம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் அமைந்துள்ள பிரம்மதேசம் கிராம ஊராட்சி காவல் நிலையம் செயல்படுகிறது.
அரசு மருத்துவமனை
பிரம்மதேசம் கிராமம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகளைக் கவனிப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர், வட்டார விரிவாக்கக் கல்வியாளர், ஒரு பெண் சுகாதார உதவியாளர், ஒரு கூட்டுப்பணியாளர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
போக்குவரத்து
பிரம்மதேசம் மாநில நெடுஞ்சாலையில் (மாநெ-134) அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரமான திண்டிவனத்துடன் (16 கி.மீ. தூரம்) நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை விழுப்புரம் கோட்டம் மூலம் பிரம்மதேசம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பின்வருமாறு
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597680
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
வெளிர் ஈப்பிடிப்பான்
|
வெளிர் ஈப்பிடிப்பான் (Pale flycatcher)(அக்ரிகோலா பாலிடசு) என்பது சகாரா கீழ்மை ஆப்பிரிக்காவில் காணப்படும் பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாபிடேயின் ஒரு குருவி சிற்றினம் ஆகும்.
வகைப்பாட்டியல்
வெளிர் ஈப்பிடிப்பான் முன்பு பிராடோர்னிசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது. ஆனால் 2010-ல் வெளியிடப்பட்ட மூலக்கூறு தொகுதி வரலாறு ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் மெலனோர்னிசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் 2023-ல் வெளியிடப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இது அக்ரிகோலா பேரினத்திற்கு மாற்றப்பட்டது.
சரகம்
இது அங்கோலா, பெனின், போட்சுவானா, புர்கினா பாசோ, புருண்டி, கேமரூன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ஐவரி கோஸ்ட், எரித்திரியா, எசுவாத்தினி, எத்தியோப்பியா, காபோன், காம்பியா, காம்பியா கினிபிசாவ், கென்யா, மலாவி, மாலி, மூரித்தானியா, மொசாம்பிக், நமீபியா, நைஜர், நைஜீரியா, உருவாண்டா, செனிகல், சியரா லியோனி, சோமாலியா, தென்னாப்பிரிக்கா, சூடான், தான்சானியா, டோகோ, ஜிம்பாவே, மற்றும் சாம்பியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
வாழ்விடம்
மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், உலர் சவன்னா மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர் நிலம் ஆகியவை இதன் இயற்கை வாழ்விடங்களாகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
வெளிறிய ஃப்ளைகேட்சர் - தென்னாப்பிரிக்க பறவைகளின் அட்லஸில் உள்ள இனங்கள் உரை .
சகாரா கீழமை ஆப்பிரிக்கப் பறவைகள்
|
597681
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%29
|
பிரம்மதேசம் (பவானி)
|
பிரம்மதேசம் (Brahmadesam) என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்திய ஊராட்சி ஆகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பிரம்மதேசம் கிராமத்தில் 12839 பேர் வசித்தனர். இவர்களில் 6597 பேர் ஆண்கள் 6242 பேர் பெண்கள் பிரம்மதேசம் கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 60.96%.
மேற்கோள்கள்
ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597682
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81
|
பாத்மோசெர்கசு
|
பாத்மோசெர்கசு (Bathmocercus) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை பேரினமாகும். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:
கருந்தலை செம்பழுப்புச் சிலம்பன் (பாத்மோசெர்கசு செர்வினிவென்ட்ரிசு)
கருமுக செம்பழுப்புச் சிலம்பன் (பாத்மோசெர்கசு ரூபசு)
செபோமைக்டர் பேரினத்தைச் சேர்ந்த சிற்றினங்கள் சில நேரங்களில் இந்த பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் இதன் பிரிவை நியாயப்படுத்தப் பல குறிப்பிடத்தக்க உருவ வேறுபாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
பறவைப் பேரினங்கள்
|
597683
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF
|
அக்கரை கொடிவேரி
|
அக்கரை கொடிவேரி (Akkarai Kodiveri) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து சுமார் 15 கி. மீ. தொலைவிலும் மாவட்டத் தலைமையகமான ஈரோட்டிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கிராமம் கோபிசெட்டிபாளையத்தை சத்தியமங்கலத்துடன் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. அக்கரை கொடிவேரியில் சுமார் 2263 மக்கள் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597684
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
|
பாரிஜாதாபகரணம்
|
பாரிஜாதாபகரணம்' (Parijatapaharanamu)(பாரிஜாதம்+அபகரணம்) ( பாரிஜாத மரத்தை எடுத்து வருதல்) என்பது நந்தி திம்மண்ணா என்பவரால் இயற்றப்பட்ட ஒரு தெலுங்கு கவிதையாகும். இது அரி வம்சம் கதையை அடிப்படையாகக் கொண்டது. கிருட்டிணனுக்கும் அவனது துணைவிகளான ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே ஏற்படும் காதல் சண்டைதான் கதை.
கதைச் சுருக்கம்
இந்திரனுக்குச் சொந்தமான பாரிஜாதம் என்ற மரத்திலிருந்து நாரதர், கிருட்டிணருக்கு என்றென்றும் மணம் வீசும் ஒரு மலரைக் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் கிருஷ்ணன் ருக்மணியின் வீட்டில் இருந்ததால் பூவை அவளிடம் கொடுக்கிறார். அவர் ருக்மணிக்கு பூவை கொடுத்ததை அறிந்த சத்தியபாமா பொறாமை கொள்கிறார். கிருஷ்ணர் அந்த மரத்திற்காக தேவதைகளுடன் சண்டையிட்டு, அந்த மரத்தை மீண்டும் சத்யபாமாவிடம் கொண்டு வருகிறார்..
வெளியீடுகள்
பாரிஜாதாபகரமு என்ற பெயரில் 1929 ஆம் ஆண்டு ஆந்திரப் பத்ரிக்கா என்ற பத்திரிகையால் வெளியிடப்பட்டது நாகபுடி குப்புசுவாமியின் பரிமலோல்லாசமு என்ற விரிவான வர்ணனையும் இதில் அடங்கும்.
1933 இல் சுரபி வர்ணனையுடன் வாவில்லா அச்சகம் . இது மீண்டும் 1960 இல் மறுபதிப்பு செய்யப்பட்டது துசி ராமமூர்த்தி சாத்திரி இரண்டு பதிப்புகளுக்கும் முன்னுரை எழுதினார்.
ஆந்திரப் பிரதேச சாகித்ய அகாடமி 1978 முதல் முறையாக அச்சிட்டது.
இதனையும் காண்க
நந்தி திம்மண்ணா
சான்றுகள்
{reflist}}
தெலுங்கு இலக்கியம்
|
597685
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE
|
இரகுநாத் பிரசன்னா
|
பண்டிட் இரகுநாத் பிரசன்னா (Raghunath Prasanna) (1913 - ஜூன் 1999) என்பவர் இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவிகளான செனாய் மற்றும் பன்சூரி ஆகியவற்றை இசைக்கும் கலைஞர் ஆவார். இவர் பன்சூரி வாசிப்பதில் செனாய் நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அறியப்பட்டார். மேலும் குரல் இசையாலும் ஈர்க்கப்பட்டார்.
சொந்த வாழ்க்கை
ரகுநாத் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் 1913 இல் பிறந்தார்.
இவர் சரசுவதி தேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் இருந்தனர். அவர்களில் இராசேந்திர பிரசன்னா என்பவரும் தனது தந்தையைக் போலவே செனாய் மற்றும் பன்சூரி இசைக் கலைஞர். மற்றொரு மகன்களான இரிசப், இராசேசு மற்றும் இரித்தேசு ஆகியோர் பன்சூரி வாசிக்கிறார்கள்.
தொழில்
இரகுநாத் பிரசன்னா, செனாய் இசைக்கலைஞரான தனது தந்தை கௌரி சங்கரிடமும், வாரணாசியைச் சேர்ந்த தௌஜி மிசுராவிடமும் இசைப் பயிற்சி பெற்றார். அதுவரை செனாய் வாசிப்பதற்காக அறியப்பட்ட குடும்ப பாரம்பரியத்தில் பன்சூரி கலையை (திரிபுரா பன்சூரி மற்றும் கிருஷ்ண பன்சூரி) அறிமுகப்படுத்திய முதல் நபராவார்.
சிறு வயதிலேயே, பிரசன்னா இலக்னோ, பிரயாக்ராஜ் மற்றும் ராஞ்சி உள்ளிட்ட பல்வேறு அனைத்திந்திய வானொலி நிலையங்களில் பணியாளர் கலைஞராக பணியாற்றினார். பின்னர், இவர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பயின்றார், இறுதியில் இந்திய அரசின் பாடல் மற்றும் நாடகப் பிரிவில் இடம் பெற்றார். இரகுநாத் திரிபுரா மற்றும் கிருஷ்ணா பன்சூரிகளை வாசிப்பதற்காகவும் அறியப்பட்டார்.
இசையிலாளர் அலைன் டேனிலோ 1955 ஆம் ஆண்டு இந்தியன் கிளாசிக்கல் மியூசிக் என்ற இசைத் தொகுப்பில் இவரது செனாய் மற்றும் திரிபுரா பன்சூரியை பதிவு செய்துள்ளார். பிரசன்னா, 1996 இல் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்
செனாய் இசைக்கலைஞர்கள்
1999 இறப்புகள்
1913 பிறப்புகள்
|
597687
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE
|
இராசேந்திர பிரசன்னா
|
இராசேந்திர பிரசன்னா ( Rajendra Prasanna; பிறப்பு 15 ஏப்ரல் 1956) என்பவர் இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவிகளான செனாய் மற்றும் பன்சூரி ஆகியவற்றை இசைக்கும் கலைஞர் ஆவார்.
இராசேந்திரன் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் பிறந்தார். தனது தந்தை இரகுநாத் பிரசன்னா மற்றும் மாமாக்கள் போலாநாத் பிரசன்னா, விஷ்ணு பிரசன்னா ஆகியோரிடம் இசை கற்றார். எழுபதுகளின் ஆரம்பத்தில் இவரது குடும்பம் தில்லிக்கு குடிபெயர்ந்தது. பின்னர் இவர் அபீசு அகமது கான் மற்றும் சர்பராசு உசைன் கான் ஆகியோரின் சீடரானார். பெனாரசு கரானாவின் பாடகர் மகாதேவ் மிசுராவிடமும் இசையைக் கற்றார்.
நிகழ்ச்சிகள்
எடின்பர்க் திருவிழா ( ஐக்கிய இராச்சியம் ), சிட்னி ஒப்பேரா மாளிகை, இசை, கலை மற்றும் நடன உலகத் திருவிழா ( ஆத்திரேலியா, நியூசிலாந்து ) போன்ற இடங்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 1997 இல் அமெரிக்கா, கனடா மற்றும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற "இந்தியாவின் சுதந்திரத்திற்கான பொன்விழா" கொண்டாட்டத்திற்கான உலக இசை விழாவிலும் இவர் நிகழ்த்தினார். மேலும் இலண்டன் இசைக்கலைஞர் ஜார்ஜ் என்பவரின் நினைவஞ்சலி இசை நிகழ்ச்சியிலும், பிரான்சில் ஓப்பேரா டி லியோனிலும் நிகழ்த்தியுள்ளார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Official website
சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்
செனாய் இசைக்கலைஞர்கள்
வாழும் நபர்கள்
1956 பிறப்புகள்
புல்லாங்குழல் கலைஞர்கள்
|
597688
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
அபீசு அகமது கான்
|
அபீசு அகமது கான் (Hafeez Ahmed Khan) (இறப்பு 2006) இந்திய பாரம்பரிய இசையான இந்துஸ்தானி இசைக் கலைஞர் ஆவார். இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தின் வடக்குப் பகுதிகளில் பிரபலமான ஒரு இசைப் பள்ளியான இராம்பூர்-சகாசுவான் கரானாவின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார். குருகுல முறையில் இசையைக் கற்றார். மேலும், தனது கல்விப் படிப்பை வழக்கமான வழியில் தொடர்ந்தார். அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் மின்னசொட்டா பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். அனைத்திந்திய வானொலியின் துணை இயக்குநராகவும், இசைக்காக அறியப்பட்ட பல்கலைக்கழகமான இந்திரா கலா சங்கீத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தார். இராசேந்திர பிரசன்னா, ரோமா ராணி பட்டாச்சார்யா, சகுந்தலா நரசிம்மன் மற்றும் சுபேந்து கோசு போன்ற பல சீடர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். தான்சேனின் வாழ்க்கையைப் பற்றிய தி ரெயின் மேக்கர் என்ற திரைப்படத்திலும் நடித்தார். 1996 சங்கீத நாடக அகாதமி விருது பெற்றார். இந்திய அரசு 1991 இல் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது புகழ்பெற்ற பாடகர் நிஸ்சார் உசைன் கானின் மகளை திருமணம் செய்தார். 2006 இல் இறந்தார்.
மேலும் பார்க்கவும்
இராசேந்திர பிரசன்னா
சான்றுகள்
வெளி இணைப்புகள்
சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்
2006 இறப்புகள்
பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
|
597689
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE
|
போலாநாத் பிரசன்னா
|
பண்டிட் போலாநாத் பிரசன்னா (Bholanath Prasanna) இந்தியாவைச் சேர்ந்த புல்லாங்குழல் அல்லது பன்சூரி வாசிக்கும் இசைக் கலைஞராவார். வாரணாசியில் பிறந்த இவர் புகழ்பெற்ற புல்லாங்குழல் கலைஞர் ஹரிபிரசாத் சௌரசியா என்பவருக்கு குரு ஆவார்.
தொழில்
போலாநாத் பிரசன்னா தனது தந்தை பண்டிட் கௌரி சங்கரிடமும் தனது சகோதரர் பண்டிட். இரகுநாத் பிரசன்னாவிடமும் இந்தியப் பாரம்பரிய இசையைக் கற்றார். உத்தரப் பிரதேச சங்கீத நாடக அகாதமி விருது (1989) ( செனாய் ) உட்பட பல்வேறு விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்றவர்.
ஹரிபிரசாத் சௌரசியா, இராசேந்திர பிரசன்னா (மருமகன்), நிரஞ்சன் பிரசாத், அஜய் சங்கர் பிரசன்னா(மகன்) போன்ற பலருக்கு பன்சூரியை கற்பித்தார்.
சான்றுகள்
வாழும் நபர்கள்
இசைக் கலைஞர்கள்
புல்லாங்குழல் கலைஞர்கள்
|
597690
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D
|
மல்லிகைத் தேநீர்
|
மல்லிகைத் தேநீர் அல்லது மல்லிப்பூ தேநீர்(茉莉花茶; பின்யின்: மோ லி ஹுவா ச்சா, ஆங்கிலம்:Jasmine tea) சீன மக்களால் பருகப்படும் தேநீர் வகைகளில் ஒன்றாகும். அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர் என்றழைக்கிறார்கள். இந்திய தாயக மலர்களில் ஒன்றான அரபு மல்லி என்று உலகின் பல இடங்களிலும் அழைக்கப்படும் மல்லிகை இனத்திலிருந்து இத்தேநீர் உருவாக்கப்படுகிறது. இதனை சீனர்கள் ஆயிரம் ஆண்டுகளாக தயாரிப்பதாகக் கூறுகின்றனர். தயாரிப்பு முறையானது, பெரும்பாலும், பச்சைத் தேநீர் என்பதன் அடிப்படையிலுள்ளது. ஆனால், சில நேரங்களில் ஓலாங்க் அடிப்படையிலும் தயாரிக்கின்றனர். இதன் தயாரிப்பு முறையானது மிக அதிக கட்டுப்பாடுகளைக் கொண்டது. ஈரிலைஅமைவில்(Bifoliatum) உள்ள தேயிலைகளோடு ஒரு குறிப்பிட்ட அளவு மலர்ந்த மல்லிகைப் பூக்கள் பக்குவபடுத்தப்பட்டு கலக்கப்படுகின்றன.
மல்லிகைப் பூவின் தரம்
உயர்தர மல்லிகை தேயிலையை உற்பத்தி செய்வதற்கு, அதன் அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் தேயிலை இலைகளின் தரத்துடன், மல்லிகைப் பூக்களின் தரமும் முக்கியமானதாகும். தரம் என்பது பூக்களின் தோற்றத்தையும், புத்துணர்ச்சியையும் மட்டும் குறிப்பதல்ல; நறுமணத்தை வெளியிடுவதில் பூக்களின் வளர்ச்சி நிலையையும் குறிக்கிறது. மல்லிகை பூக்கள் ஒரு நாள் மட்டுமே பூத்து, 12 முதல் 20 மணிநேரம் வரை மலர்ந்து இருக்கும் இயல்புடையது. பொதுவாக மாலை 6 முதல் 8 மணி வரை இரவில் பூக்கள் பூத்திருக்கும். மல்லிகை உற்பத்தியாளர்கள் பொதுவாக பகலில் பூ மொட்டுகளைப் பறிப்பார்கள். பறிக்கப்பட்ட பூ மொட்டுகள் சேமித்து வைக்கப்படுவதில்லை, ஆனால் அந்த இரவில் நறுமண செயல்முறைக்காக நேரடியாக தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகின்றன. மல்லிகைப் பூக்களை பறிப்பதில் அனுபவம் தேவை, பறித்த மொட்டுகள் அந்த இரவில் பூக்க வேண்டும். ஏற்கனவே மலர்ந்த மொட்டுகள் பயன்படுத்த முடியாதவை; பறித்த மொட்டுகள் இரவில் மலரா விட்டாலும் அதனை பயன்படுத்தமாட்டர்.
மல்லிகை தேயிலைத் தூள்
மல்லிகை மலரின் வாசம் மற்றும் நறுமணம் ஆகியவற்றை உட்கிரகிப்பதற்குத் தேயிலைக்கு நான்கு மணி நேரங்கள் பிடிக்கும். மிக உயர் தரங்களுக்கு இந்த செய்முறையானது ஏழு முறைகள் வரையிலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும். காரணம், மலர்களின் உள்ளார்ந்த ஈரப்பசையை தேயிலை உட்கிரகித்து விட்டால், அது கெடாதிருக்க அதனை மறுதீயிட வேண்டும். பயன்படுத்தப்பட்ட மலர்களை இறுதிப் பொருளிலிருந்து நீக்கலாம் அல்லது நீக்காமலும் விடலாம். காரணம் இந்த மலர்கள் முழுதும் வறண்டு வாசமற்றே இருக்கும். அடர்த்தி மிகுதியான தேயிலைகளிலிருந்து இதழ்களை ஊதி நீக்குவதற்கு ராட்சசக் காற்றாடிகள் பயன்படுகின்றன. அசாமிய தேநீர் மல்லியும், இத்தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு கலந்து உருவாக்கப்படுகிறது.
இத்தேநீரின் வேதிப்பண்புகள்
ஐட்டன்(Aiton); α-பார்னசீன்(α-farnesene); 3-ஹைட்ராக்ஸி-3-மெத்தில்குளூட்டரில் கோஎன்சைம் ஏ சின்தேஸ்( 3-hydroxy-3-methylglutaryl coenzyme A synthase - HMGS); 3-ஹைட்ராக்ஸி-3-மெத்தில்குளூட்டரில் கோஎன்சைம் ஏ ரிடக்டேஸ் ( 3-hydroxy-3-methylglutaryl coenzyme A reductase - HMGR); ஃபார்னெசில் பைரோபாஸ்பேட் சின்தேஸ் (farnesyl pyrophosphate synthase - FPPS); லோவாஸ்டாடின்(lovastatin); டெர்பீன் சின்தேஸ் (terpene synthase - TPS) ஆகியவை இருப்பதால் உடலுக்கும், மருத்துவ பயன்பாடுகளுக்கும் ஏற்றது.
காட்சிக்கூடம்
மேற்கோள்கள்
பானங்கள்
மல்லிப் பேரினத் தொடர்புடையவை
|
597691
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D
|
சகுந்தலா நரசிம்மன்
|
சகுந்தலா நரசிம்மன் (Sakuntala Narasimhan) (பிறப்பு 30 டிசம்பர் 1939) ஓர் இந்தியப் பத்திரிகையாளரும், நுகர்வோர் உரிமை ஆர்வலரும், இந்துஸ்தானி இசையின் இராம்பூர்-சகாசுவான் கரானாவின் பாரம்பரிய பாடகரும் ஆவார். இவர் அபீசு அகமது கானின் சீடராக இருந்தார். மேலும் தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி ஆகியவற்றில் கர்நாடக மற்றும் இந்துஸ்தானி பாணியில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இசை நிகழ்ச்சியிலும் பாடியுள்ளார். முசிரி சுப்பிரமணிய ஐயர் மற்றும் தஞ்சாவூர் பிருந்தா ஆகியோரிடம் கர்நாடக பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றார். இரண்டு பாணிகளையும் இணைத்து "சுய-ஜுகல்பந்தி" செய்து வருகிறார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சகுந்தலா, பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும், பாரம்பரிய இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மேலும் பெண் கல்வியிலும், இசையியலிலும் முனைவர் பட்டம் பெற்றவர். 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தில்லியில் வாழ்ந்தார். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மும்பைக்கு குடிபெயர்ந்தார். தற்போது பெங்களூரில் வசிக்கிறார். இசையியலில் இவரது முனைவர் பட்ட ஆய்வு கர்நாடக மற்றும் இந்துஸ்தானி பாணிகளின் ஒப்பீட்டு ஆய்வில் இருந்தது. சகுந்தலா அனைத்திந்திய வானொலியில் சிறுவயதிலேயே நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். கடந்த 60 ஆண்டுகளாக இளைஞர்களிடையே இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் உள்ளிட்ட பல அமைப்பாளர்களுக்காக ஒரு நிகழ்ச்சிக் கலைஞராக இருந்து வருகிறார்.
தொழில்
பத்திரிகையாளராக, சகுந்தலா மும்பையில் உள்ள தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றினார். 1995 இல் டெக்கன் ஹெரால்டு பத்திரிகைக்காகவும், 2000 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் நடந்த 23 வது ஐநா பொதுச் சபை அமர்விலும், சீனாவில் பெண்களுக்கான ஐநா உலகளாவிய மாநாடு குறித்தும் இவர் அறிக்கை செய்தார். 2002 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிலையான வளர்ச்சிக்கான உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவும் அதைப் பற்றி எழுதவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இந்திய பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். 2009 வரை 27 ஆண்டுகள் டெக்கான் ஹெரால்டில் இவரது பத்திகள் வெளிவந்தன. மேலும் இவர் தற்போது தி வயர், சிட்டிசன் மேட்டர்ஸ், மற்றும் மனிலைஃப் ஆகியவற்றிற்காக எழுதுகிறார்.
சகுந்தலா மும்பை பல்கலைக்கழகத்தில் இசை கற்பித்துள்ளார். மேலும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுகலை மட்டத்தில் பத்திரிகை, பெண்கள் படிப்பு மற்றும் பொருளாதாரம் கற்பித்துள்ளார். அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம்]], நோர்வே, பாக்கித்தான், கென்யா, உகாண்டா, பிலிப்பீன்சு, இந்தோனேசியா, யப்பான், தாய்லாந்து மற்றும் ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் ஊடகங்கள், இசை மற்றும் பெண்ணிய ஆய்வுகள் தொடர்பான சர்வதேச மாநாடுகளில் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
விருதுகள்
1957 மற்றும் 1958 இல் தும்ரி மற்றும் காயலில் அனைத்திந்திய வானொலி விருதுகள்
5 கியான் சமாஜ் இசை அகாதமி விருதுகள், 1980
1983 இல் சிறந்த பெண் ஊடகவியலாளர்களுக்கான சமேலி தேவி ஜெயின் விருது.
2000 ஆம் ஆண்டில் மக்கள் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் 'மனித உரிமைகளுக்கான பத்திரிகை' விருது.
2016 ஆம் ஆண்டு கர்நாடக இராச்யோத்சவா விருதுகள்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
WorldCat
The Economic and Political Weekly
இந்தியப் பெண் ஊடகவியலாளர்கள்
பெங்களூர் நபர்கள்
வாழும் நபர்கள்
1939 பிறப்புகள்
|
597692
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
|
வி. கார்த்திகேய பாண்டியன்
|
வி. கார்த்திகேய பாண்டியன் (V. K. Pandian) இந்திய ஆட்சிப் பணி மேனாள் அதிகாரியும் தற்போதைய ஒடிசா மாநில அமைச்சரும் ஆவார்.
இளமைக் காலம்
1974 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கூத்தப்பன்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நெய்வேலி விளையாட்டு விடுதியில் தங்கிப் படித்தார். மதுரை ஒத்தக்கடையிலுள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலையும் தில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலையும் படித்தார். தமிழ்நாட்டில் பிறந்த வி. கா. பாண்டியன் ஒடிசாவினைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சுஜாதா என்பவரை மணந்தார்.
இந்திய ஆட்சிப்பணி
வி. கா. பாண்டியன் தமிழ்நாட்டினைச் சேர்ந்த 2000ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி ஆவார். இவர் ஒடிசா ஆட்சிப் பணி அதிகாரியாக 2002ஆம் ஆண்டில் களஹாண்டி மாவட்டத்தில் தரம்கார்க்கில் துணை ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், 2005ஆம் ஆண்டில், மயூர்பஞ்சு மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இங்கு இவரது பணி போராளி குழுக்களின் பரவலைக் குறைக்க நிர்வாகம் எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கு உதாரணமாக செயல்பட்டார். 2007-ல் பாண்டியன் கஞ்சாம் மாவட்ட ஆட்சியராக பணி மாறுதல் பெற்றார். இப்பணிகளில் பாண்டியன் திறமையாகச் செயல்பட்டதன் காரணமாக மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக 2011 முதல் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். 2019ஆம் ஆண்டு நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற பின்னர் கூடுதல் பொறுப்புகள் பாண்டியனுக்கு வழங்கப்பட்டன.
மாநில அமைச்சராக
பாண்டியன் அரசுப் பதவியிலிருந்து அரசியலில் சேரலாம் என எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில் தனது அரசுப் பதவியிலிருந்து 23 அக்டோபர் 2023 அன்று விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் ஒடிசா மாநில மாற்றத்திற்கான முயற்சிகள் நவீன ஒடிசா திட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுகள்
பாண்டியன் சிறப்பாக பணியாற்றியதைத் தொடர்ந்து பல விருதுகள் பெற்றுள்ளார். அவை:
பொதுப்பணித் துறையின் மறுவாழ்வுக்காக இந்தியக் குடியரசுத் தலைவரின் தேசிய விருது.
'ஹெலன் கெல்லர் விருது'
கஞ்சாம் மாவட்ட ஆட்சியராக, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றியதற்கான தேசிய விருது, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய அரசு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தினை செயல்படுத்தி நாட்டின் சிறந்த மாவட்டமாகக் கஞ்சாம் மாவட்டத்திற்கான தேசிய விருது இரண்டு முறை - இந்தியப் பிரதமரால் வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்
ஒடிசா அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
1974 பிறப்புகள்
|
597693
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF
|
மீனாட்சி சௌத்ரி
|
மீனாட்சி சௌத்ரி (Meenakshi Chaudhary) ஒரு இந்திய நடிகையும், வடிவழகியும் அழகுப் போட்டி வெற்றியாளரும் ஆவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். இவர் பெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் அரியானா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதில் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார். மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், இரண்டாம் இடத்தை அடைந்தார். இவர் 2021 இல் தெலுங்கு திரைப்படமான இசட வாகனமுலு நிலுபரடு மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.
மேற்கோள்கள்
இந்திய நடிகைகள்
தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
இந்தி தொலைக்காட்சி நடிகைகள்
|
597694
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம்
|
இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் ( Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth (SPIC MACAY) என்பது இந்தியப் பாரம்பரிய இசை, இந்தியப் பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புற இசை, யோகக் கலை, தியானம், கைவினைப்பொருட்கள் மற்றும் பிற அம்சங்களை மேம்படுத்துவதன் மூலம் இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் அருவமான அம்சங்களை ஊக்குவிக்கும் ஒரு தன்னார்வ இளைஞர் இயக்கமாகும். இந்திய கலாச்சாரத்தின்; இது உலகெங்கிலும் உள்ள 300 நகரங்களில் அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. தில்லியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் 1977 இல் முனைவர் கிரண் சேத் அவர்களால் நிறுவப்பட்டது.
வரலாறு
கரக்பூர், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பட்டதாரியான கிரண் சேத், நியூயார்க்கு நகரிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருந்தபோது, நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் இசை அகாதமியில் உஸ்தாத் நசீர் அமினுதீன் தாகர் மற்றும் உஸ்தாத் ஜியா பரிதுதீன் தாகர் ஆகியோரின் துருபத் கச்சேரியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அபோது இச்சங்கத்தை உருவாக்க அவர் நினைத்தார்.
1976 இல் இந்தியா திரும்பியதும், புது தில்லி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்கினார். அங்கு இவர் மாணவர்களுடன் சேர்ந்து 1977 இல் இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கத்தைத் தொடங்கினார். இதன் முதல் இசை நிகழ்ச்சியாக மார்ச் 28 1978 அன்று தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்றது.
அதன் முக்கிய செயல்பாடுகளில் சில: தொடர் இசை நிகழ்ச்சிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தேசிய மாநாடுகள், தேசியத் தீவிரப் பள்ளி, பூங்காவில் இசை, உதவித் தொகைத் திட்டம், பாரம்பரிய நடைகள், சிறந்த சிந்தனையாளர்களின் பேச்சுக்கள், யோகக் கலை முகாம்கள், பாரம்பரிய திரைப்படங்கள் திரையிடல் முதலியன
சான்றுகள்
வெளி இணைப்புகள்
இந்தியாவில் உள்ள இலாபநோக்கற்ற நிறுவனங்கள்
|
597722
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF
|
ஆலுகுளி
|
ஆலுகுளி (Alukuli) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். ஆலுகுளி கிராமம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும் ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலும் கோபிசெட்டிபாளையத்தைக் கோயம்புத்தூருடன் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. ஆலுகுளியில் சுமார் 6974 மக்கள் இருந்தனர்.
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597724
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
மேவா ஆறு
|
மேவா ஆறு நேபாள நாட்டின் கோசி ஆற்றமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் தாமூர் ஆற்றின் முக்கிய துணை ஆறாகும். கிழக்கு நேபாளத்தின் தாப்லேஜங் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆறு ஹாங்ட்ருங் கிராமத்தின் அருகே தாமூர் ஆற்றில் கலக்கிறது.
பல்லுயிர் பெருக்கம்
மேவா ஆற்றின் பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து 700 மீ முதல் 3900 மீ வரையிலான உயரத்தில் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இந்த ஆற்றின் பள்ளத்தாக்கு வலசைபோதல் காலத்தில் பறவைகளுக்கு தங்குமிடமாகத் திகழ்கிறது.
உள்கட்டமைப்புகள்
இந்த ஆறானது ஒரு பெரிய நீர்மின் உற்பத்தி மையம் மற்றும் கீழ்காணும் பல திட்டங்கள் கட்டுமான நிலையில் உள்ளன.
மீ கோலா நீர்மின் திட்டம் (50 மெகாவாட்)
மத்திய மேவா நீர்மின் திட்டம் (49 மெகாவாட்)
பாலுன் கோலா நீர்மின் திட்டம் (21 மெகாவாட்), (மேவா ஆற்றின் துணை நதியில்)
மேற்கோள்கள்
ஆறுகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்
ஆறுகள்
|
597725
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
|
கோயம்புத்தூர் இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில்
|
இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் நகரின் இராஜ வீதியில் அமைந்துள்ள இராமலிங்க சௌடேசுவரி அம்மன் கோயில் ஆகும். ஐந்து நிலை இராஜகோபுரம் கொண்டு இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.
இக்கோயிலானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 439.3 மீட்டர் (1441 அடி) உயரத்தில், என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
இராமலிங்கேசுவரர், சௌடாம்பிகை அம்மன், விநாயகர், மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள், சிவலிங்கம், காயத்ரி தேவி, அஷ்டலட்சுமிகள், மகிசாசுரமர்த்தினி, தத்தாத்ரேயர், நர்த்தன விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், காமதேனு, கற்பக விருட்சம், ஆஞ்சநேயர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சனீசுவரர், சப்தமாதாக்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
வைகாசி விசாகம், ஐப்பசி பௌர்ணமி (அன்னாபிசேகம்), தைப்பூசம், மகா சிவராத்திரி, நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, ஆவணி அவிட்டம், ஆங்கில வருடப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு, ஆருத்ரா தரிசனம் ஆகியவை இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
GeoHack - கோயம்புத்தூர் இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில்
கோவை இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில்
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்
|
597738
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
அம்மாபாளையம்
|
அம்மாபாளையம் (Ammapalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து 37 கி.மீ. தொலைவிலும்கோபிசெட்டிபாளையத்தை மேவானி வழியாகப் பவானியுடன் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. அம்மாபாளையத்தில் சுமார் 1102 மக்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata
|
597739
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
அஞ்சனூர்
|
அஞ்சனூர் (Anjanur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவிலும் ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கிராமம் கோபிசெட்டிபாளையத்தை புஞ்சைப் புளியம்பட்டியை இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. அஞ்சனூரில் சுமார் 4302 மக்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata
|
597742
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
ஆட்டையாம்பாளையம்
|
ஆட்டையாம்பாளையம் (Attayampalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.
"டெக்சுவேலி", ஜவுளி தொடர்பான வணிக மேம்பாட்டுக்கான தொழில்துறை பகுதி, இந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள இடங்கள்
நசியனூர்
பெருந்துறை
சித்தோடு
லட்சுமி நகர்
பவானி
கொமராபாளையம்
ஈரோடு
திருவாச்சி
மூலக்கரை
அமைவிடம்
ஆட்டையாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை 47-ல் நசியனூர் மற்றும் சித்தோடு இடையே அமைந்துள்ளது.
நிர்வாகம்
ஆட்டையாம்பாளையம் நசியனூர் நகரப் பஞ்சாயத்து, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
மக்கள்தொகை
ஆட்டையாம்பாளையத்தில் 5985 ஆண்கள் 6190 பெண்கள் என மொத்தம் 12175 பேர் வசிக்கின்றனர்.
தொழில்
ஆட்டையாம்பாளையத்தில் சிலர் கைத்தறி பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள ஊர்களான ஈரோடு, பெருந்துறைக்கு வேலைக்குச் செல்கின்றனர். விவசாயம் செய்வோர் மஞ்சள் மற்றும் கரும்பு பயிரிடுகின்றனர்.
மேற்கோள்கள்
ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597745
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87
|
அர்கசு தைலேரே
|
அர்கசு தைலேரே (Argas theilerae) என்பது தெய்லர் ஆப்பிரிக்க வெண்முதுகு பிணந்தின்னிக் கழுகு அர்காசிட் என்று அழைக்கப்படுகிறது. இது அர்காசிடே குடும்பத்தில் உள்ள ஒரு உண்ணி சிற்றினம் ஆகும். இதன் குறிப்பிட்ட பெயர் தென்னாப்பிரிக்க ஒட்டுண்ணி மருத்துவர் கெர்ட்ரூட் தெய்லரைக் கௌரவப்படுத்துகிறது. இது ஆப்பிரிக்க வெண்முதுகு பிணந்தின்னிக் கழுகுகளின் ஒட்டுண்ணி.
1970-ல் ஹூக்ஸ்ட்ரால் & கைசர் மூலம் இந்த இனம் முதன்முதலில் பிரித்து விளக்கப்பட்டது
மேற்கோள்கள்
கணுக்காலிகள்
உண்ணிகள்
|
597754
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D
|
கிரண் சேத்
|
கிரண் சேத் (Kiran Seth; பிறப்பு 1949) ஒரு இந்திய கல்வியாளர் ஆவார். தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசை, இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் பிற அம்சங்களை ஊக்குவிக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கத்தை (1977) இன் நிறுவனராக இவர் மிகவும் அறியப்படுகிறார்.
2009 ஆம் ஆண்டு, கலைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.
ஆரம்ப வாழ்க்கை
1951 இல் நிறுவப்பட்ட கரக்பூர், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கணிதவியலாளரும் முதல் பேராசிரியருமான போஜ்ராஜ் சேத் என்பவருக்கும் பகவதி என்பவருக்கும் மகனாக 27 ஏப்ரல் 1949 இல் பிறந்தார்.
தொழில்
சேத் 1974 இல் நியூ செர்சியில் உள்ள பெல் ஆய்வகங்களில் தொழில்நுட்ப ஊழியர்களில் ஒரு உறுப்பினராகப் பணியாற்றத் தொடங்கினார். 1976 இல் இந்தியாவுக்குத் திரும்பிய இவர் புது தில்லி இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில்உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இங்கு இவர் பணி புர்யும்போதுதான் இவர் 1977 இல் இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கத்தை நிறுவினார்
2012 முதல் 2014 வரை புனேவில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்
இன்று இந்த இயக்கம் தொடர் இசை நிகழ்ச்சிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தேசிய மாநாடுகள், தேசியத் தீவிரப் பள்ளி, பூங்காவில் இசை, உதவித் தொகைத் திட்டம், பாரம்பரிய நடைகள், சிறந்த சிந்தனையாளர்களின் பேச்சுக்கள், யோகக் கலை முகாம்கள், பாரம்பரிய திரைப்படங்கள் திரையிடல் முதலியனவற்ற நடத்துகின்றன.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Kiran Seth at இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி
"Many great civilizations are alive only in museums"
வாழும் நபர்கள்
பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
கொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்
1949 பிறப்புகள்
மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்
|
597757
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
|
திரிபுரா புரஞ்சி
|
திரிபுரா புரஞ்சி (Tripura Buranji) என்பது 1709 மற்றும் 1715 க்கு இடையில் அகோம் பேரரசுக்கும், திரிபுரா இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின் வரலாற்றுப் பதிவாகும். புரஞ்சி 1724 இல் அகோம் அரசின் தூதர்களான இரத்னா கண்டலி சர்மா கடகி மற்றும் அர்ஜுன் தாஸ் பைராகி கடகி ஆகியோரால் எழுதப்பட்டது. இது திவிப்ரா இராச்சியத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று தூதரகப் பணிகள், திரிபுரி தூதர்களுடன் இரண்டு திரும்பும் பயணங்கள், அரண்மனைகள், விழாக்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் தற்செயலான விளக்கங்கள் ஆகியவற்றை விவரிக்கிறது. மேலும் இது திவிப்ரா மன்னன் இரண்டாம் இரத்தி மாணிக்கியா (1684-1712) முதலில் கணாசியாம் தாக்கூர் என்று பெயரிடப்பட்டு பின்னர் மகேந்திர மாணிக்கியா (1712-1714) என்ற பட்டப் பெயருடன் அரியணை ஏறிய அவரது வளர்ப்பு சகோதரர் ஆகியோரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை நேரில் பார்த்த சாட்சிக் கணக்கையும் வழங்குகிறது.
இந்த கையெழுத்துப் பிரதியானது அகோம் இராச்சியத்தின் வரலாற்றை எழுதும் பாரம்பரியமான புரஞ்சிகள் எனப்படும் ஆவணங்களின் தொகுப்பின் கீழ் வருகிறது. இதில் அதிகாரப்பூர்வ மற்றும் குடும்பம் என இரண்டு வகைகள் உள்ளன. திரிபுரா புரஞ்சி, பாட்ஷா புரஞ்சி, கச்சாரி புரஞ்சி மற்றும் ஜெயந்தியா புரஞ்சி ஆகியவை அகோம் அரச சபையால் அங்கீகரிக்கப்பட்டு பதிவுக்காக பராமரிக்கப்படும் அண்டை நாடுகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் ஆகும். இதைத் தொகுத்துள்ள சூர்ய குமார் புயான், மற்ற பல புராஞ்சிகளைப் போலவே, இது போன்ற எழுத்து வகைகளில் இது ஒரு உயர்ந்த இடத்தைப் பெறுவதாகக் கருதினார்.
சௌத்ரி மற்றும் சர்க்கார் போன்ற வரலாற்றாளர்கள் அதிகம் அறியப்படாத இந்த ஆவணத்தை திரிபுராவில் நடந்த நிகழ்வுகளின் குறிப்பிடத்தக்க ஆதாரமாகக் கருதுகின்றனர். என். கே. பட்டாச்சார்யா "மக்கள், தெய்வங்கள் மற்றும் கோவில்களின் நிலப்பரப்பு, பழக்கவழக்கங்கள், உடைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் திரிபுரா அரசவைக்குள் சிம்மாசனத்திற்கான சூழ்ச்சிகள் ஆகியவற்றை விவரிக்கும் காளிதாசனின் மேகதூதம் போன்ற பிற எழுத்துக்களில் காலனித்துவத்திற்கு முந்தைய பயண எழுத்துக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு" என்கிறார்.
கையெழுத்துப் பிரதி
கையெழுத்துப் பிரதி கற்றாழை மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட ஏட்டில் அசாமிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓலைக்கும் இரண்டு பக்கங்களிலும் ஐந்து வரிகள் உரை இருக்கிறது. ஆனால் 108வது ஓலைச்சுவடி இல்லை. முடிவில் ஒரு பொருளடக்கம்மூம் இருக்கிறது. 1842 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி ஜே. ராட் என்பவரிடமிருந்து பிரித்தானிய அருங்காட்சியகத்தால் கையெழுத்துப் பிரதி வாங்கப்பட்டது. கையெழுத்துப் பிரதியை ஆய்வு செய்த புயானின் கூற்றுப்படி, "எழுத்துகள் படிக்கக்கூடியவை, சொற்கள் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவுகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன". மேலும் கையெழுத்து எச்சரிக்கையான எழுத்தாற்றலைக் காட்டுகிறது.
1709 மற்றும் 1715 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், வங்காளத்தில் இருந்து முகலாயர்களை அகற்றுவதற்காக திவிப்ரா இராச்சியத்துடன் ஒரு கூட்டமைப்பை உருவாக்க அகோம் மன்னர் உருத்ர சிங்னின் விருப்பத்தால் இந்த ஆவணத்தில் உள்ள கணக்குகளின் மையமாக இருக்கும் இராஜதந்திர பணிகள் தூண்டப்பட்டன.
உள்ளடக்கம்
இது "மக்கள், தெய்வங்கள் மற்றும் கோவில்களின் நிலப்பரப்பு, பழக்கவழக்கங்கள், உடைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் திரிபுரா அரசவைக்குள் அரியணைக்கான சூழ்ச்சிகள்" ஆகியவற்றை விவரிக்கிறது. அகோம் மற்றும் திவிப்ரா இராச்சியங்களின் இராஜதந்திர பணிகளை நிர்வகிக்கும் கடுமையான நெறிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. திவிப்ரா அரசர் மற்றும் அவரது குடிமக்களால் கொண்டாடப்படும் ஒரு வசந்த விழாவைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்புகள்
சான்றுகள்
திரிபுராவின் வரலாறு
|
597764
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%B7%E0%AE%BE
|
உருக்னுதீன் பர்பக் ஷா
|
உருக்னுதீன் பர்பக் ஷா ( Ruknuddin Barbak Shah) ஆட்சி. 1459-1474) சுல்தான் நசிருதீன் முகமது ஷாவின் மகனும் வாரிசுமாவார். ஆரம்பத்தில் தனது தந்தையின் ஆட்சியின் போது சத்கானின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பார்பக் 1459 இல் வங்காள சுல்தானகத்தின் அரியணை ஏறினார். இவர் அபிசீனிய சமூகத்திற்கு சுல்தானகத்தின் நிர்வாகத்தில் முக்கிய பங்குகளை வழங்கிய முதல் ஆட்சியாளராவார். வங்காளத்தில் நகரமயமாக்கலின் முன்னோடியாக இவர் இருந்ததாக வரலாற்றாசிரியர் அனிருத்தா ரே குறிப்பிடுகிறார்.
ஆரம்ப வாழ்க்கையும் அரியணை ஏற்றமும்
கி.பி.1352 இல் வங்காள சுல்தானகத்தை நிறுவிய இலியாஸ் ஷாஹி வம்சம் என்று அழைக்கப்படும் ஒரு பிரபுத்துவ பெங்காலி முஸ்லிம் சுன்னி இசுலாம் குடும்பத்தில் பர்பக் பிறந்தார். இப்பகுதியில் இவரது குடும்பம் நீண்ட காலமாக இருந்தபோதிலும், பர்பக்கின் மூதாதையர்கள் சிசுதான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இப்போது கிழக்கு ஈரான் மற்றும் தெற்கு ஆப்கானித்தானில் இருந்து வந்தவர்கள். இவரது தந்தை சுல்தான் நசிருதீன் மக்மூத் ஷா இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வங்காளத்தை ஆட்சி செய்தார்.
ஆட்சி
இவரது தந்தையின் ஆட்சியின் போது, பர்பக் சத்கான் பகுதியின் ஆளுநராக பணியாற்றினார். 1455 இல் திரிபெனியில் ஜாபர் கான் காஜி மசூதியை நிறுவினார். கி.பி.1459 இல் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு பர்பக் நாட்டின் அரியணையில் ஏறினார்.
பர்பக் ஷா மிதிலை பிரதேசம் (இன்றைய ஜனக்பூர் ) மீது படையெடுத்து அந்தப் பகுதியைக் கைப்பற்றியதாகவும் அறியப்படுகிறது. கேதார் ராயை அந்தப் பிராந்தியத்தின் ஆளுநராக நியமித்தார். அவர் 1468 இல் திருஹட்டில் உள்ள ஹாஜிகஞ்ச் கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களை ஆக்கிரமித்தார்.
1459 இல், பர்பக் பர்பகாபாத் என்று அழைக்கப்படும் மகிசந்தோஷ் நகரை தங்க சாலையாக மேம்படுத்தினார். இது இவரது இராச்சியத்தை வடக்கே புரிகங்கா ஆறு வரை நீட்டிக்க உதவியது. 1474 இல், இவர் சிட்டகொங்கில் தனது அதிகாரத்தை மீண்டும் நிறுவினார். மால்டா, ராஜசாகி, ரங்க்பூர், சிட்டகொங் , டாக்கா, சில்ஹெட், மைமென்சிங் மற்றும் முதன்முறையாக பரிசால் ஆகிய இடங்களில் ஜேம் மசூதிகள் மற்றும் அரச வாயில்கள் கட்டப்பட்டதை நினைவுகூரும் பல்வேறு கல்வெட்டுகள் மூலம் பர்பக் ஷாவின் இராச்சியத்தின் அளவைக் கண்டறிய முடியும்.
இலக்கியம்
பர்பக் ஷா பெங்காலி மற்றும் பாரசீக இலக்கியங்களின் புரவலர் ஆவார். இவரது காலத்தில் கவிஞர் ஜைனுதீன் தனது ரசூல் பிஜாய் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். இப்ராஹிம் கவ்வாம் பாருக்கி பாரசீக அகராதியான பர்ஹாங்-இ-இப்ராஹிம் ( ஷரப்நாமா என்று அறியப்படுறது) என்பதை இயற்றினார். ரைமுகுடா பிரஹஸ்பதி மிஸ்ரா, மாலாதர் பாசு, கிருட்டிபாஸ் ஓஜா மற்றும் குலாதர் ஆகியோர் அந்த நேரத்தில் வாழ்ந்த மிகவும் பிரபலமான இந்து அறிஞர்கள்.
இறப்பு
15 ஆண்டுகள் வங்காளத்தை ஆண்ட உருக்னுதீன் பர்பக் ஷா 1474 இல் இறந்தார்.
இதனையும் காண்க
வங்காள வரலாறு
இந்திய வரலாறு
மேற்கோள்கள்
வங்காளதேச வரலாறு
|
597765
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9
|
சிறகற்றன
|
சிறகற்றன (Aptery) என்பது எந்த விதமான இறக்கைகளும் இல்லாத ஒரு விலங்கின் உடற்கூறியல் நிலை ஆகும். இந்த நிலையில் உள்ள ஒரு விலங்கு ஏப்டெரசு என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.
பெரும்பாலான விலங்கினங்கள் எப்டெரசு உயிரலகு தொகுதிப் பிறப்பு வம்சாவளியைச் சேர்ந்தவை. இந்த குழுக்கள் முதன்மை சிறகற்றன என்று கூறப்படுகிறது. முதன்மையாகச் சிறகில்லாப் பூச்சிகள் என்ற துணைப்பிரிவைச் சேர்ந்த பூச்சிகள் உள்ளன.
சிறகற்றன என்பது ஒரு பெயரடை. அதாவது பூச்சி அல்லது உயிரினம் இறக்கையற்றது மற்றும் பொதுவாக இறக்கைகள் கொண்ட பூச்சியின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தைக் குறிக்கிறது. பொதுவாக இறக்கைகளைக் கொண்ட ஒரு குழுவில் உள்ள இறக்கையற்ற இனங்களையும் குறிக்கின்றது. எ.கா பல கணுக்காலிகள் (வெட்டுக்கிளிகள் மற்றும் கூட்டாளிகள்) மற்றும் கைமனோப்டெரா உயிரிகள். (குளவிகள்). சில குழுக்களில், ஒரு பாலினமானது சிறகுகளை உடையதாக இருக்கலாம், எ.கா. முட்டிலிடே (மென்பட்டு எறும்புகள்). மற்ற சந்தர்ப்பங்களில், பூச்சியின் ஒரு குறிப்பிட்ட வடிவம் (ஆனால் எல்லா நபர்களும் அல்ல) சிறகற்றனவாக இருக்கும். எ.கா. சில டெட்ரிகிடே (குள்ள வெட்டுக்கிளிகள்). சிறகுகள் கொண்ட உயிரலகின் வம்சாவளியைச் சேர்ந்த இறக்கையற்ற விலங்குகள் இரண்டாம் நிலை சிறகற்றன என்று கூறப்படுகிறது. தெள்ளு மற்றும் நோட்டோப்டெரா போன்ற முழு வரிசையினை உள்ளடக்கிய கணுக்காலிகள். இவை 5% தற்போதுள்ள டெரிகோட்டா ஆகும்.
மேற்கோள்கள்
பூச்சியியல்
உடற்கூற்றியல்
|
597767
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
|
பிடருச்சி
|
பிடருச்சி (Nuchal crest-cephalopod) என்பது தலைக்காலிகளில் தலையின் முதுகுப் பகுதி மற்றும் அதன் பின்பகுதியில் உள்ள பக்கவாட்டுப் பரப்புகளில் பரவியிருக்கும் ஒரு முக்கிய குறுக்கு முகடு ஆகும். இது பெரும்பாலும் பின்பக்க முனையில் பிடரி முகடுக்குச் செங்குத்தாக இருக்கும் தலை ஊடாடலின் நிலையான மடிப்புகளுடன் இணைக்கப்படுகிறது. இவை பிடரி மடிப்புகளாக அறியப்படுகின்றன. இது பின்தலையுச்சி என்றும், தலை மடிப்புகள் என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
உடற்கூற்றியல்
|
597768
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%88
|
நீதாமின் பை
|
நீதாமின் பை (Needham's sac)(விந்தணுப் பை என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தலைக்காலிகளின் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இதில் விந்தணுக்கள் சேமிக்கப்படுகின்றன. விந்தணுக்கள் கயிறுகளுடன் கூடிய விந்தணு கொண்ட சிக்கலான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. சில சிற்றினங்களில் விந்துதள்ளல் உறுப்பு மற்றும் சீமைக்காரை உடல் ஒன்றையும் கொண்டுள்ளது.
நீதாமின் பை மேலங்கி குழியின் இடது பக்கமாகத் திறக்கிறது. சில தலைக்காலி சிற்றினங்களின் இனச்சேர்க்கையின் போது, மாற்றியமைக்கப்பட்ட கரமான கெக்டோகோடைலசு விந்தணுவை நீதாமின் பையிலிருந்து பெண்ணின் மென்மூடிக்குழிக்குள் செலுத்துகிறது. சீமைக்காரை உடல் விந்தணுவைப் பெண் இன உயிரணுடன் ஒட்டிக்கொள்ள உதவுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
TOLWeb இலிருந்து சிரேட் ஆண் இனப்பெருக்க பாதை
உடற்கூற்றியல்
|
597769
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
ஹரி ஆறு
|
ஹரி ஆறு அல்லது ஹெராத் ஆறு (Hari River or Herat River) ஆப்கானித்தானின் நடுவில் உள்ள மத்திய மாகாணமான ஹெராத் மாகாணத்தின் கோ-இ-பாபா எனுமிடத்திலிருந்து ஈரான் வழியாக துருக்மேனிஸ்தானின் காரகும் பாலைவனத்தில் மறைகிறது. இந்த ஆறு 1100 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. ரிக் வேதத்தில் ஹரி ஆறு பற்றிய குறிப்புகள் உள்ளது.
ஆப்கானித்தானின் நடுவில் உள்ள கோர் மாகாணத்தில் உள்ள இந்து குஷ் மலைத்தொடரின் நீட்சியான கோ-இ-பாபா மலைத்தொடரில் ஹரி ஆறு உற்பத்தியாகி மேற்காக பாய்கிறது. பின் ஆப்கானித்தானின் மேற்கில் உள்ள ஹெராத் மாகாணத்தின் தெற்கில் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்ந்து, ஜாம் ஆற்றுடன் கலக்கிறது. பின்னர் ஹரி ஆறு வடமேற்கு திரும்பி, பின் வடக்கு நோக்கி ஈரான் வழியாகப் பாய்ந்து, ஈரான்-துருக்மேனிஸ்தானின் தென்கிழக்கு எல்லையாக அமைகிறது. இப்பகுதியில் ஹரி ஆற்றில் குறுக்கே ஈரான்-துருக்மேனிஸ்தான் நட்புறவு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.
ஹெராத் மாகாணத்தின் சிஸ்டி செரீப் மாவட்டத்தில் பாயும் ஹரி ஆற்றின் குறுக்கே இந்திய அரசு தனது செலவில் சல்மா அணை கட்டி கொடுத்தது. பின் சல்மா அணை என்ற பெயரை மாற்றி இந்தியா-ஆப்கானிஸ்தான் நட்புறவு அணை எனப் பெயரிட்டது.
இந்த அணையில் இந்தியா அமைந்த புனல் மின் நிலையத் திட்டத்தின் மூலம் 42 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். அத்தோடு 75,000 எக்டேர் நிலம் பாசன வசதி பெரும். இந்த அணை இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆப்கான் ஜனாதிபதி ஆகியோரால் ஜூன் 4, 2016 அன்று திறந்துவைக்கப்பட்டது.
இதனையும் காண்க
சல்மா அணை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
UNESCO: Minaret of Jam (Press Release No.2002-41) and Minaret and Archaeological Remains of Jam (World Heritage List entry).
University of Texas: A map showing the river (as 'Hariru').
A mention of the Tedzhen river (inaccessible on 2013-06-26).
ஆப்கானித்தான் ஆறுகள்
|
597771
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
நிடமென்டல் சுரப்பிகள்
|
நிடமென்டல் சுரப்பிகள் (Nidamental gland) என்பது சில அடுக்கச் செவுள் மீன்கள் (எலாசுமோபிரான்ச்கள்) மற்றும் சில மெல்லுடலிகளில் காணப்படும் உள்ளுறுப்புகளாகும். மெல்லுடலிகளில் தலைக்காலி (குறிப்பாக டெகாபோடிபார்ம்சு மற்றும் நாட்டிலசுகள்) மற்றும் வயிற்றுகாலிகளும் அடங்கும்.
தலைக்காலிகளில், நிடமென்டல் சுரப்பிகள் பெரிய, இணை சுரப்பிகளாக அமைந்துள்ளன. இவை மென்மூடிக்குழியில் காணப்படுகின்றன. துணை நிடாமென்டல் சுரப்பிகளும் இருக்கலாம். நிடாமென்டல் சுரப்பிகள் அடுக்குகளால் ஆனவை. இவை முட்டை ஓட்டினை உருவாக்கும் களி போன்ற பொருளைச் சுரப்பதில் ஈடுபட்டுள்ளன.
இவை போரோனிட்களிலும் காணப்படுகின்றன.
சமையல் பயன்பாடு
கணவாய் மீனின் நிடமென்டல் சுரப்பிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உணவாக உண்ணப்படுகின்றன. கணவாய் மீன் முழு விலங்காகவோ அல்லது பகுதி உறுப்புகளாகவோ உட்கொள்ளப்படும். உதாரணமாக, தெற்கு எசுப்பானியாவில், இவை முழுவதுமாக சமைக்கப்பட்டு ஹ்யூவோஸ் டி சோகோ என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இந்த உறுப்புகள் ஆண் கணவாய் மீனின் இனப்பெருக்க உருப்புகள் என்று ஒரு பிரபலமான கருத்து உள்ளது.
மேற்கோள்கள்
மெல்லுடலிகள்
உடற்கூற்றியல்
|
597773
|
https://ta.wikipedia.org/wiki/881%20%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
|
881 ஏவுகணை படைப்பிரிவு
|
881 ஏவுகணை படைப்பிரிவு (881 Missile Regiment (India)) என்பது ஏவுகணை பொருத்தப்பட்ட படைப்பிரிவு ஆகும். இப்படைப் பிரிவு இந்திய ராணுவத்தின் பீரங்கி படையின் ஒரு பகுதியாகும்.
வரலாறு
படைப்பிரிவு இலேசான படைப்பிரிவாக உயர்த்தப்பட்டது. இலேசான படைப்பிரிவு 2011 ஆம் ஆண்டில் ஏவுகணைப் படைப்பிரிவாக மாற்றப்பட்டது. இந்த ஏவுகணைப் பிரிவு தற்போது 41 பீரங்கி படைபிரிவின் ஒரு பகுதியாக உள்ளது.
நடவடிக்கைகள்
1971 இந்தியா-பாக்கித்தான் போர்
மேகதூது நடவடிக்கை
சாதனைகள்
881 ஏவுகணை படைப்பிரிவுக்கு 1999 ஆம் ஆண்டில் இராணுவப் படை தளபதி தகுதியுரை வழங்கப்பட்டது.
881 ஏவுகணை படைப்பிரிவு 2013, 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற பெருமையைப் பெற்றது.
மேற்கோள்கள்
இராணுவப்படை வகைகள்
வகை வாரியாக இராணுவப் படைகள்
|
597775
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D
|
சங்கர்ஷணர்
|
சங்கர்ஷணர் (Saṃkarṣaṇa) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவர் எனப்பொருள் வசுதேவருக்கும் முதல் மனைவி ரோகிணி தேவிக்கும் பிறந்தவர் பலராமன் மற்றும் சுபத்திரை ஆவர். வசுதேவருக்கும்-இரண்டாம் மனைவி தேவகிக்கும் பிறந்தவர் கிருஷ்ணர் ஆவர். பலராமன் எனும் சங்கர்ஷணர் யாதவர்களில் ஒரு பிரிவினரான விருஷ்ணி குலத் தலைவராக அறியப்பட்டார்.விஷ்ணுவின் அவதாரமாக சங்கர்ஷணர் அறியப்பட்டார். பிற்காலத்தில் வைணக் கோயில்களில் சங்கர்ஷணர் வழிபாடு நிலவியது.
பரவாசுதேவர், சங்கர்ஷணர், அனிருத்தன், பிரத்திம்யும்மனன் என்ற பெயர்களில், நாராயணனாகிய பரம்பொருள் தன்னையே இந்நால்வராக்கிக்கொண்டு படைப்பு முதலிய தொழில்களில் ஈடுபடுகிறார்; பரவாசுதேவர் மற்ற மூவருடைய பணிகளுக்கு தலைவராக இருக்கிறார். ஆகமத்தை ஒட்டி நடக்கும் வைணவ ஆலய வழிபாட்டில் இந்த வியூக நிலைக்கும் பெயர்களுக்கும் அதிக இடம் உள்ளது. வைணவக் கோயில்களில் சங்கர்ஷணருக்கு தனிச்சன்னதிகள் உண்டு.
சங்கர்ஷணர் சின்னம் கிமு 100
ஹேலியோடோரஸ் தூண் அருகே அமைந்த பெஸ்நகரத்தில் விருஷ்ணி குல நாயகர்களான கிருஷ்ணன், பலராமன் என்ற சங்கர்ஷணர், அனிருத்தன், பிரத்தியும்மனன் ஆகியோரின் வழிபாடு குறித்தான சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.
ஆத்திபாத பிராமி கல்வெட்டு
இராஜஸ்தான் மாநிலத்தின் ஆத்திபாத பிராமி கல்வெட்டில் கிமு முதல் நூற்றாண்டில் நாராயணனுடன் வாசுதேவர் மற்றும் சங்கர்ஷணர் வழிபாடு குறித்துள்ளது.
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
BHATTACHARYA, Gouriswar: Vanamala of Vasudeva-Krsna-Visnu and Sankarsana-Balarama. In: Vanamala. Festschrift A.J. Gail. Serta Adalberto Joanni Gail LXV. diem natalem celebranti ab amicis collegis discipulis dedicata. Gerd J.R. Mevissen et Klaus Bruhn redigerunt. Berlin 2006; pp. 9–20.
COUTURE, André: The emergence of a group of four characters (Vasudeva, Samkarsana, Pradyumna, and Aniruddha) in the Harivamsa: points for consideration. Journal of Indian Philosophy 34,6 (2006) 571–585.
திருமாலின் அவதாரங்கள்
|
597781
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE
|
அலவத்தேகம
|
அலவத்தேகம என்பது இலங்கையில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மக்கட்டொகை 1881இல் 171 ஆகவும் 1891இல் 135 ஆகவும் காணப்பட்டது.
வரலாறு
ஆச்சிபால்ட் கம்பெல் லோரி தனது 1896இல் வெளியிட்ட தனது இலங்கை பற்றிய குறிப்பில் இந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள் துரையா சாதியின் ஒரு பகுதியான "பன்ன துராயோ" (புல் வெட்டுபவர்கள்) என்ற சாதியினர் என்று விவரிக்கிறார்.
வெளி இணைப்புகள்
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை
மேற்கோள்கள்
கண்டி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்
|
597786
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
மாலிக்-இ-மைதான்
|
மாலிக்-இ-மைதான் (Malik-E-Maidan) (போர்க்களத்தின் இறைவன்) என்பது 16 ஆம் நூற்றாண்டின் பீரங்கி ஆகும். இது இந்தியாவின் பிஜப்பூர் கோட்டையில் சிங்க கோபுரத்தில் (புர்ஜ்-இ-ஷெர்ஸ் ) அமைந்துள்ளது. நீளம் கொண்ட மணி உலோகத்தில் வார்க்கப்பட்டுள்ளது. இது நடுக்காத்திலிருந்து எஞ்சியிருக்கும் மிகப்பெரிய பீரங்கித் தொகுதியாகும்.
வரலாறு
இந்த பீரங்கி 1549 ஆம் ஆண்டு அகமத்நகரின் சுல்தான் முதலாம் புர்கான் நிசாம் ஷாவிடம் பணியாற்றிய துருக்கியப் பொறியாளர் முகமது பின் உசைன் ரூமியால் உருவாக்கப்பட்டது. சுல்தான் பீரங்கியை தனது மருமகனான பிஜப்பூரின் சுல்தான் முதலாம் அலி அதில் ஷாவிற்கு வழங்கினார்.
கி.பி. 1565 இல், பிஜப்பூர் சுல்தான் அலி அதில் ஷா, தலைக்கோட்டை சண்டையில், ஒருங்கிணைந்த தக்காண சுல்தானியப் படையின் ஒரு பகுதியாக விஜயநகரப் பேரரசின் அலிய ராம ராயனை போரில் எதிர் கொள்ளும்போது பீரங்கி பயன்படுத்தப்பட்டது. தக்காண சுல்தான்களின் வெற்றிக்குப் பிறகு பீரங்கிக்கு "மாலிக்-இ-மைதான்" என்று பெயரிடப்பட்டது. அடுத்த 59 ஆண்டுகளில், பீரங்கியின் கட்டுப்பாடு பிஜப்பூர் சுல்தானகத்திலிருந்து அகமதுநகர் சுல்தானகத்திற்கு மாற்றப்பட்டது.
கிபி 1625 இல், அகமத்நகர் சுல்தானகத்தின் பிரதம மந்திரி மாலிக் ஆம்பர், பிஜப்பூர் சுல்தானகத்தின் மீதான தனது படையெடுப்பின் ஒரு பகுதியாக, பயிற்சி பெற்ற போர் யானைகளின் உதவியுடன் மாலிக்-இ-மைதானை தௌலதாபாத் கோட்டையிலிருந்து தெற்கே சோலாபூருக்குக் கொண்டு சென்றார். பிஜாப்பூர் நகரத்தை முற்றுகையிட்டு தோல்வியுற்ற பின் பின்வாங்கியதால், அவர் பீரங்கியை மீண்டும் வடக்கே கொண்டு சென்றார். பின்னர் முகலாயர்கள் மற்றும் பிஜப்பூர் சுல்தானகத்திற்கு எதிராக பட்வாதி போரில் அதைப் பயன்படுத்தினார்.
உலகின் மிகப் பெரிய பீரங்கி, அதன் வகையைச் சேர்ந்தது. கிழக்கிந்திய நிறுவனத்தால் பெரிய பிரித்தானின் போர்க் களத்திற்கு மாற்ற முயற்சித்தது. ஆனால் அதன் பெரிய அளவு மற்றும் நிபந்தனையற்ற போக்குவரத்து உள்கட்டமைப்பு காரணமாக பீரங்கியை கொண்டு செல்ல முடியவில்லை.
கட்டமைப்பு
மாலிக்-இ-மைதான் மணி உலோகத்தால் ஆனது. மேலும், நீளம் கொண்டது. இதன் முகவாய் அளவு ஒட்டுமொத்த விட்டம் மற்றும் 55 டன் எடை கொண்டது. குண்டு தூரம் வரை செல்லக்கூடியது என ஒரு கதை உண்டு.
அலங்காரம்
பீரங்கியின் முகவாய் சிங்கத்தின் தலையை அதன் தாடைகளைத் திறந்து, ஒரு யானையை விழுங்குவது போன்ற ஒரு புடைப்புச் சிற்பத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுகள்
பீரங்கியில் மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு கல்வெட்டுகளின்படி அகமதுநகரின் முதலாம் புர்கான் நிஜாம் ஷா காலத்தில் பொறிக்கப்பட்டவை. இது 1549 இல் முகம்மது பின் உசைன் ரூமியால் அகதுநகரில் மணி உலோகத்திலிருந்து வார்க்கப்பட்டது. மூன்றாவது கல்வெட்டு ஔரங்கசீப் 1685-86 இல் பிஜப்பூரைக் கைப்பற்றியபோது சேர்த்தார்.
இதனையும் காண்க
சார் பீரங்கி
*சார் வெடிகுண்டு
மேற்கோள்கள்
தனிப்பட்ட ஆயுதங்கள்
|
597787
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
மங்களூரு சட்டமன்றத் தொகுதி
|
மங்களூரு சட்டமன்றத் தொகுதி (, ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ளது. தட்சிண கன்னட மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 204 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
தட்சிண கன்னட மாவட்டம்
|
597789
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B7%E0%AE%BE
|
முதலாம் அலி அதில் ஷா
|
{{Infobox royalty
| name = முதலாம் அலி அதில் ஷா
| title = Sultan
| image = Aliadilshah.jpg
| reign = 1558–1579
| full name = அபுல் முசாபர் அலை அதில் ஷா
| predecessor = முதலாம் இப்ராகிம் அதில் ஷா
| successor = இரண்டாம் இப்ராகிம் அதில் ஷா
| spouse = சாந்த் பிபி
| issue = இரண்டாம் இப்ராகிம் அதில் ஷா (தத்தெடுக்கப்பட்டவர்)
| royal house = அலி வம்சம்
| dynasty = பிஜப்பூர் சுல்தானகம்
| father = முதலாம் இப்ராகிம் அதில் ஷா
| mother = Dஆசாத் கான் லாரியின் மகள்
| birth_place =
| death_date = 17 ஆகஸ்ட் 1579<ref>Page 2 of Translator's Preface in the book Tohfut-ul-mujahideen: An Historical Work in the Arabic Language originally written by Zayn al-Dīn b. ʿAbd al-ʿAzīz al- Malībārī (Translated into English by Lt. M.J. Rowlandson</ref>
| death_place = பிஜப்பூர் சுல்தானகம்
| date of burial =
| place of burial = அலி கா ரௌசா
| religion = சியா இசுலாம்
}}
முதலாம் அலி அதில் ஷா ( Ali Adil Shah'' I ; 1558-1579) பிஜப்பூர் சுல்தானகத்தின் ஐந்தாவது சுல்தான் ஆவார்.
இவரது முடிசூட்டு நாளில், அலி சுன்னி நடைமுறைகளை கைவிட்டு, சியா குத்பா மற்றும் பிற நடைமுறைகளை மீண்டும் அறிமுகப்படுத்தினார். பாரசீக மத மருத்துவர்களுக்கு சியா கோட்பாட்டைப் போதிக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. மேலும், அவர்களின் மத நடவடிக்கைகளுக்காக அரசால் ஊதியம் வழங்கப்பட்டது.
திருமணம்
அகமதுநகரைச் சேர்ந்த நிஜாம் ஷாஹியின் மகள் சாந்த் பிபி என்ற புகழ்பெற்ற பெண் வீராங்கனையை மணந்தார். 1595ஆம் ஆண்டில் அக்பர் பேரரசரின் முகலாயப் படைகளுக்கு எதிராக அகமதுநகரைப் பாதுகாப்பதில் சாந்த் பிபி மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார்.
ஆட்சி
அலியின் ஆட்சியின் போது பிஜப்பூர் மற்றும் விஜயநகரம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக இருந்தன. அலி ஒருமுறை விஜயநகரத்துக்கு சென்றபோது அங்கு அலிய ராம ராயன் மிகுந்த ஆடம்பரத்துடனும் மரியாதையுடனும் வரவேற்றார். 1565 ஆம் ஆண்டில், பேரரசின் முக்கிய தளபதி என்ற வகையில் தக்காணத்துச் சுல்தான்களான உசேன் நிசாம் ஷா, முதலாம் அலி அதில் ஷா, இப்ராகிம் குதுப் ஷா ஆகியோரின் கூட்டுப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தலைக்கோட்டைப் போரில் தானே தலைமை தாங்கினான். மிகப் பெரிய படை பலத்தைக் கொண்ட விஜயநகரப் பேரரசுக்கு இலகுவாக வெற்றி கிடைக்கும்போல் தோற்றிய இப் போர், எதிர்பாராத விதமாக, அலிய ராம ராயன் பிடிபட்டுக் கொல்லப்பட்டபோது, அவர்களுக்குப் பேரழிவாக முடிந்தது. இந்தத் தாக்கத்திலிருந்து விஜயநகரப் பேரரசு ஒருபோதும் மீளவே இல்லை. விஜயநகரம் எதிரிப் படைகளினால் பெரும் அழிவுக்குள்ளானது. நகர மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். அரச குடும்பத்தினரும் அழிக்கப்பட்டனர். இந்த போரின் விளைவாக, பிஜப்பூரின் தெற்கு எல்லையானது விஜயநகரம் வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் அது மேலும் தெற்கே பிஜப்பூரின் எதிர்கால விரிவாக்கத்திற்கான வாயில்களைத் திறந்தது. இதன் விளைவாக, அலியின் ஆட்சியின் முடிவில், பிஜப்பூர் இராச்சியம் மேற்கு கடற்கரையில் ஹொனாவர் துறைமுகம் வரை விரிவடைந்தது. மேலும் தெற்கு எல்லை வரதா மற்றும் துங்கபத்ரா வழியாக நீட்டிக்கப்பட்டது.
வளர்ச்சிகள்
அலியின் ஆட்சிக் காலத்தில் முகலாயப் பேரரசர் அக்பருடன் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு தூதர்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டனர்.
பின்வந்தவர்
1579 ஆம் ஆண்டில், அலிக்கு மகன் இல்லாததால், இவரது மருமகன் இப்ராகிமை தனது சகோதரர் தகாமாசிப்பின் மகனாக நியமித்தார். அதே ஆண்டில், அலி ஒரு திருநங்கையாக்கப்பட்ட ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். பீஜாப்பூரில் உள்ள சகாப் ரௌசாவிற்கு அருகிலுள்ள அலி கா ரௌசாவில் அடக்கம் செய்யப்பட்டார்.
சான்றுகள்
Wakiyate Mamlakate Bijapur by Basheeruddin Dehelvi.
Tareekhe Farishta by Kasim Farishta
External Relation of Bijapur Adil Shahis.
1558 பிறப்புகள்
அடில் ஷாஹி பேரரசு
|
597792
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
|
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்பது தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் ஆணையமாகும். தமிழ் நாட்டில் விளையாட்டினையும் உடல் தகுதியினையும் மேம்படுத்தவும் அரசு, விளையாட்டுச் சங்கங்கள் இதர விளையாட்டு அமைப்புகளின் வளங்களை ஒருங்கிணைக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் ஆகிய இரண்டையும் இணைத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற புதிய அமைப்பு 1992 ஜூலை 18 அன்று உருவாக்கப்பட்டது.
நோக்கங்கள்
திறமை கொண்டவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல்
மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளைஞர்களைத் தயார் செய்தல்
போட்டிச் சூழலை உருவாக்கி உடல் தகுதியை மேம்படுத்தல், திறமைசாலிகளை அடையாளம் காணல், போட்டித்திறனை வளர்த்தல்
விளையாட்டிற்கேற்ற உள்கட்டமைப்பை அமைத்து அனைத்து நிலை போட்டிகளுக்கும் தயார் செய்தல்
வீரர்களுக்கான நவீன நுணுக்கங்களைக் கற்றுக் கொடுக்க உரிய பயிற்சி, பயிலரங்கு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளை அமைத்தல்
செயல்பாடுகள்
ஒவ்வொரு விளையாட்டிற்கும் பயிற்சியாளரை நியமித்து இலவசப் பயிற்சி அளிக்கிறது.
விளையாட்டுப் பள்ளிகள்,விடுதிகள் போன்றவற்றை நடத்துகிறது.
இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உடற்திறனாய்வுகளை நடத்திப் பயிற்சி முகாம்களை நடத்துகிறது
அண்ணா பிறாந்தநாளில் சைக்கிள் போட்டி நடத்துகிறது.
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளாவிலான போட்டிகளை நடத்துகிறது
தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கம் வெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது.
மேற்கோள்கள்
தமிழ்நாட்டில் விளையாட்டு
தமிழ்நாடு அரசின் அமைப்புகள்
|
597794
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
மத்திய அனதோலியா பிராந்தியம்
|
மத்திய அனதோலியா பிராந்தியம் (Central Anatolia Region (), துருக்கியின் 7 புவியியல் பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் அங்காரா நகரம். பிற நகரங்கள் கோன்யா, கைசெரி, எஸ்கிசெரி, சிவாஸ் மற்றும் அக்சராய் ஆகும்.
அமைவிடம்
இப்பிராந்தியம் துருக்கியின் நடுப்பகுதியில் உள்ளது. இதன் மேற்கில் ஏஜியன் பிராந்தியம், வடக்கில் கருங்கடல் பிராந்தியம், கிழக்கில் கிழக்கு அனடோலியா பிராந்தியம் மற்றும் தெற்கில் மத்தியதரைக் கடல் பிராந்தியம் உள்ளது.
புவியியல்
இப்பிராந்தியத்தில் உள்ள மத்திய அனதோலியா ஸ்டெப்பிப் புல்வெளிகளை வெப்பமண்ட புல்வெளிகள், சாவன்னா நிலங்கள் மற்றும் புதர் நிலங்கள் என வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் மாகாணங்கள்
அக்சராய் மாகாணம்
கோரக்கலே மாகாணம்
கோரேஹிர் மாகாணம்
நெவ்ஷீர் மாகாணம்
நீட் மாகாணம்
அங்காரா
கான்கியரி மாகாணம்
எஸ்கிசெஹிர் மாகாணம்
கரமன் மாகாணம்
கெய்சேரி மாகாணம்
கொன்யா மாகாணம்
சிவாஸ் மாகாணம்
யோஸ்கட் மாகாணம்
தட்ப வெப்பம்
இதனையும் காண்க
துருக்கியின் பிராந்தியங்கள்
கிழக்கு அனடோலியா பிராந்தியம்
தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம்
மத்தியத்தரைக் கடல் பிராந்தியம்
ஏஜியன் பிராந்தியம்
கருங்கடல் பிராந்தியம்
மர்மரா பிராந்தியம்
அனத்தோலியா
லெவண்ட்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
துருக்கியின் புவியியல்
துருக்கியின் பிராந்தியங்கள்
|
597802
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
|
செம்பரின் உறுப்பு
|
செம்பரின் உறுப்பு (Semper's organ) என்பது மெல்லுடலிகளில் காணப்படும் உடற்கூறியல் அமைப்பு. இது நில நத்தைகள், நுரையீரல் வயிற்றுக்காலிகளின் தலைப் பகுதியில் அமைந்துள்ள சுரப்பு உறுப்பு ஆகும். இந்த உறுப்பிலிருந்து சுரக்கப்படும் சுரப்பு இயக்குநீர் போன்ற செயலைச் செய்கின்றது. இது முதுகெலும்பிலிகளின் உயிரணு உருவாக்கத்தில் பங்கு கொள்கிறது.
இந்த உறுப்புக்கு செருமனிய விலங்கியல் நிபுணர் கார்ல் காட்ஃப்ரைட் செம்பரின் பெயரிடப்பட்டது. இவர் இந்த உடற்கூறியல் அமைப்பு பற்றிய தகவலை 1856-ல் முதலில் வெளியிட்டவர் ஆவார்.
மேற்கோள்கள்
உடற்கூற்றியல்
மெல்லுடலிகள்
|
597803
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
பெலோனியா சட்டமன்றத் தொகுதி
|
பெலோனியா சட்டமன்றத் தொகுதி (Belonia Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
இது தெற்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். பெலோனியா நகரத்தை மையமாகக் கொண்டு இப்பெயர் பெற்றது. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தத் தொகுதியின் தற்போதைய பிரதிநிதியாக திபங்கர் சென் உள்ளார். இவரது பதவிக்காலம் 2028 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு
1963ஆம் ஆண்டு ஒன்றிய பிரதேசங்களின் அரசு சட்டத்தின் மூலம், 1967-ல் திரிபுரா ஒன்றிய பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 30 சட்டமன்றத் தொகுதிகளுள் பெலோனியா சட்டமன்றத் தொகுதியும் ஒன்று. பின்னர், 1971ஆம் ஆண்டில், திரிபுரா யூனியன் பிரதேசம் மாநிலமாக 1971ஆம் ஆண்டின் வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம் மூலம் மாற்றப்பட்டது. இதனால் திரிபுராவில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 60 ஆக உயர்ந்தது. எனவே பெரிய தொகுதிகளின் எல்லை மாற்றங்கள் நடைபெற்றன.
2005-ல் மேற்கொள்ளப்பட்ட கடைசி எல்லை நிர்ணயத்தின்படி, இந்தத் தொகுதியானது பெலோனியா மற்றும் மைச்சரா வட்டம் மற்றும் பர்பதாரி, பைகோரா மற்றும் ராஜாபூர் வட்டங்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
2013
2018
மேலும் பார்க்கவும்
திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல்
தெற்கு திரிபுரா மாவட்டம்
குறிப்புகள்
திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள்
தெற்கு திரிப்புரா மாவட்டம்
|
597806
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
குள்ளம்பாளையம்
|
குள்ளம்பாளையம் (Kullampalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து 1.2 கி.மீ. தொலைவிலும் மாவட்டத் தலைநகர் ஈரோட்டிலிருந்து 34 கி.மீ. தொலைவிலும் கோபிசெட்டிபாளையத்தை ஈரோட்டுடன் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. குள்ளம்பாளையத்தில் சுமார் 2790 மக்கள் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata
|
597807
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D
|
யாசுமினம் உமைல்
|
யாசுமினம் உமைல் (தாவர வகைப்பாட்டியல்: Jasminum humile) என்பது முல்லைக் குடும்பத்தின் தாவரங்களில் ஒன்றாகும். 1753 ஆம் ஆண்டு இது குறித்த முதல் பதிப்பேடு உள்ளது.. பின்பு, 2014 ஆம் ஆண்டு தாவரவியல் ஆய்வாளர்களால், இத்தாவரம் மல்லிப் பேரினத்தில் இருந்து, மற்றொரு பேரினத்திற்கு(Jasminum--> Chrysojasminum) மாற்றப்பட்டது. இந்த கிரைசோயாசுமினம் (Chrysojasminum) பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி, முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. தோட்டங்களுக்குரிய பல பயிரிடும் வகைகள் உருவாக்கப்பட்டன. இதற்காக ஓரினத்திற்கு(J. reevesii ) , விருதும் வழங்கப்பட்டது
வளரியல்பு
உயரம் வளரும்; அகலம் பரந்து இருக்கும். இவற்றின் தண்டு வட்ட வடிவிலும், தடித்தும் அமைந்து செடி பருத்து காணப்படும். இலைகள் அடர் பச்சை நிறமாகவும், ஏறத்தாழ 5 செ.மீ நீளமாகவும், 5-7 இலைத்தாளையும் கொண்டிருக்கும். பனிக்காலங்களில் இதன் மொட்டுகள் உறைந்தும் இருக்கும். கோடை, இளவேனிற் காலங்களில் இதன் பூக்கள் மலரும் இயல்புடையது. ஏறத்தாழ ஆறு பூக்கள் ஒன்றாக பூச்செண்டு போல தோற்றமளிக்கும்.
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
பூக்கும் தாவரங்கள்
மல்லிப் பேரினத்தின் முந்தைய சிற்றனங்கள்
|
597809
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
|
கோபேசுவர் கோவில்
|
கோபேசுவர் கோயில் (Kopeshwar Temple) (கோபமான சிவன்) என்பது மகாராட்டிர மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கித்ராபூரில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவில். இந்த கோவிலை சாங்கிலியிலிருந்தும் அணுகலாம். இது கி.பி.1109 மற்றும் 1178 க்கு இடையில் 12 ஆம் நூற்றாண்டில் சிலகார மன்னர் கந்தராதித்தியனால் கட்டப்பட்டது. இது கோலாப்பூரின் கிழக்கே, கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சிலகாரர்கள் சமணத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் பல்வேறு இந்துக் கோயில்களைக் கட்டி, புதுப்பித்து, அனைத்து மதங்களின் மீதும் அவர்கள் கொண்ட மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தினர். .
கட்டமைப்பு
முழு ஆலயமும் சொர்க்க மண்டபம், சபாமண்டபம், கர்ப்ப கிருகம், அந்தரால மண்டபம்ம் என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சொர்க்க மண்டபம் திறந்த மேற்புறத்துடன் கூடிய முன்மண்டபத்தைக் கொண்டுள்ளது. கருவறை கூம்பு வடிவமாக உள்ளது. வெளிப்புறத்தில் தெய்வங்கள் மற்றும் மதச்சார்பற்ற உருவங்களின் அற்புதமான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. யானை சிலைகள் கோயிலின் எடையை அடிவாரத்தில் தாங்குவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில், விஷ்ணு சிலையும் சிவலிங்கமும் வடக்கு நோக்கி இருக்கிறது. ஆனால் தனியே நந்தி இல்லை. சொர்க்க மண்டபம், மண்டபம், பழைய தூண்கள், கடவுள்களின் சிற்பங்கள் மற்றும் ஆண் மற்றும் பெண் கலைஞர்களின் பல்வேறு தோற்றங்கள் இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. பொருத்தமற்ற வேலைப்பாடுகளுடன் கூடிய உச்சி அரை வட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் முழுமையான 'சிவலீலை' செதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பழமையான மற்றும் கலைநயமிக்க கோபேசுவர கோயில், பழங்கால சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காடாகும்.
வரலாறு
தற்போதைய கோயில் மகாராட்டிராவை பூர்வீகமாகக் கொண்ட சிலகார மன்னர்களால் கட்டப்பட்டது. அவர்கள் இராஷ்டிரகூடர்களின் இதன் பெயர் நகரத்தின் பண்டைய பெயரான "கொப்பம்" என்பதிலிருந்தும் தோன்றியிருக்கலாம். நகரம் இரண்டு பெரிய போர்களைக் கண்டது. முதலாவது கி.பி. 1058 இல் சாளுக்கிய மன்னர் அகவமல்லனுக்கும் சோழ மன்னன் இராசேந்திரனுக்கும் இடையே நடந்தது. இராசேந்திர சோழனின் முடிசூட்டு விழா போர்க்களத்தில் நடந்தது.
இரண்டாவது போர் சிலகார அரசர் இரண்டாம் போஜனுக்கும் தேவகிரி யாதவ மன்னர் முதலாம் சிங்கனுக்கும் இடையே நடந்தது. போரில் போஜன் யாதவர்களால் கைப்பற்றப்பட்டு பன்கலா கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். இந்த நிகழ்வு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கி.பி. 1213 தேதியிட்ட கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போர் சிலகாரர்களின் கோலாப்பூர் கிளையின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இந்தக் கோயிலின் உள்ளேயும் வெளியேயும் சுமார் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டு கல்வெட்டுகள் மட்டுமே தற்போது நல்ல நிலையில் உள்ளன. இந்த கல்வெட்டுகள் சில மன்னர்கள் மற்றும் அவர்களின் அதிகாரிகளின் பெயர்களை வெளிப்படுத்துகின்றன. இந்தக் கல்வெட்டுகளில் ஒன்றைத் தவிர அனைத்து கல்வெட்டுகளும் கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ளன. சமசுகிருத மொழியில் உள்ள ஒரே தேவநாகரி கல்வெட்டு இரண்டாம் சிங்கன் காலத்தைச் சேர்ந்தது. இது கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு அருகில் வெளிப்புற சுவரில் அமைந்துள்ளது.
சொர்க்க மண்டபம்
சொர்க்க மண்டபம், ஒரு வட்ட திறப்புடன் வானத்தை நோக்கியவாறு திறந்த அமைப்புடன் அமைந்துள்ளது. மண்டபத்தைச் சுற்றி, பிள்ளையார், கார்த்திகேயன், குபேரன், யமன், இந்திரன் போன்றவர்களின் சிலைகளும் மயில், எலி, யானை போன்ற விலங்குகளுடன் அழகாக செதுக்கப்பட்ட சிலைகளை நாம் காணலாம். சபா மண்டபத்தின் நுழைவாயிலின் இடது பக்க சுவரில் பிரம்மாவின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. மையத்தில், கர்ப்ப கிருகத்தில் அமைந்துள்ள கோபேசுவர் சிவலிங்கத்தைக் காணலாம். மேலும், இலிங்கத்தின் வலது பக்க சுவரை நோக்கி விஷ்ணு சிலையைக் காணலாம். ஒரே பார்வையில் நாம் 'பிரம்மா, சிவன், விஷ்ணு' ஆகிய மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமையப்பட்டுள்ளது.. கோயிலின் தெற்கு கதவுக்கு கிழக்கே வைக்கப்பட்டுள்ள ஒரு கல் பீடத்தில் சமசுகிருதத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது, இது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. கி.பி. 1136 ஆம் ஆண்டு யாதவ வம்சத்தைச் சேர்ந்த அரசன் சிங்கதேவன் என்பவரால் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்
சாங்கிலி 36 கி.மீ தொலைவிலும், கோலாப்பூர் 60 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது
அருகிலுள்ள தொடர் வண்டி நிலையம்
சாங்லி தொடர் வண்டி நிலையம் 36 கி.மீ தொலைவில் உள்ளது.
புகைப்படங்கள்
ஆதாரங்கள்
Kanhere, Gopal Krishna. The Temples of Maharashtra. Maharashtra Information Centre 1989 p. 105 asif
Deglurkar, G. B. "Koppeshwar (Khidrapur) Mandir Ani Moorti". 2016. Snehal Prakashan, Pune.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Kopeshwar temple in Khidrapur
மகாராட்டிர இந்துக் கோயில்கள்
Coordinates on Wikidata
|
597810
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF
|
மகுசா அமினி
|
மகுசா ஜினா அமினி (Mahsa Amini, ; Kurdish; செப்டம்பர் 21, 1999 – செப்டம்பர் 16, 2022) ஒரு இளம் ஈரானியப் பெண். இவர் தெகுரானில் கட்டாய ஹிஜாபை எதிர்த்து நின்றதற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் காவல்துறையின் கண்காணிப்பில் இறந்தது ஈரான் முழுவதும் எதிர்ப்பு அலைகளைத் தூண்டியது. உலகெங்கிலும் உள்ள மக்களும் அரசாங்கங்களும் இவரது மரணத்திற்கு பரவலாக எதிர்வினையாற்றினர். இவரது மரணம் ஈரானிய சமுதாயத்தில் பரவலான எதிர்ப்பைத் தூண்டியது இதன் விளைவாக ஈரானின் பல்வேறு நகரங்களில் பெரும் எதிர்ப்புகள் மற்றும் உலகம் முழுவதும் இருந்து ஒற்றுமையின் எதிர்வினைகள் ஏற்பட்டன. பெண், வாழ்க்கை, சுதந்திரம் என்ற உலகளாவிய இயக்கமும் இவரிடமிருந்து தொடங்கியது. இவரும் இந்த இயக்கமும் 2023-ஆம் ஆண்டில் சகாரோவ் பரிசுக்கான வேட்பாளர்களாக ஐரோப்பிய பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டன. சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்ததற்காக இந்த விருதை வென்றார்.
ஆரம்ப கால வாழ்க்கை
மகுசா ஜினா அமினி செப்டம்பர் 21, 1999 அன்று வடமேற்கு ஈரானில் உள்ள குர்திஸ்தானில் உள்ள சாக்வெஸ் என்ற இடத்தில் குர்திஷ் குடும்பத்தில் பிறந்தார். மகுசா என்பது அவரது சட்டப்பூர்வ பெயராக இருந்தபோதிலும் (பாரசீக பெயர்கள் ஈரானில் மட்டுமே பதிவு செய்யப்படலாம்), இவரது குர்திஷ் பெயர் ஜினா (ஜினா என்றும் உச்சரிக்கப்படுகிறது), மேலும் இது அவரது குடும்பத்தில் அறியப்பட்ட பெயராகும். பாரசீக மொழியில் "மஹ்சா" என்றால் "சந்திரனைப் போன்றது" மற்றும் குர்திஷ் மொழியில் ஜினா என்றால் "உயிர்" அல்லது "உயிர் கொடுக்கும் நபர்" என்று பொருள். இரண்டு பதின்ம ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறையைப் போலவே, அதிகாரப்பூர்வ ஆவணங்களில் குர்திஷ் பெயரைக் கொண்டிருப்பதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அரசு அதிகாரிகள் இவரது பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயரை மஹ்சா என்று மாற்றினர். காலப்போக்கில், குர்திஷ் பெயர்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் ஜினா மற்றும் மஹ்சா ஆகிய இரண்டும் இருந்தன.
இவர் தனது இடைநிலைப் பள்ளியை ஹிஜாப் என்ற பள்ளியில் முடித்தார். இவர் பட்டயக் கல்வியைப் படிக்க தலேகானி உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றாள். அமினி பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அமினி தனிமையில் இருந்தார், பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கு முன்பு, இவர் தனது பெற்றோர் மற்றும் 17 வயது சகோதரர் அஷ்கானுடன் உறவினர்களைப் பார்க்க தெஹ்ரானுக்குச் சென்றிருந்தார். மருத்துவராக ஆசைப்படுவது முதல் நீச்சலில் பயிற்சிப் பட்டம் பெறுவது மற்றும் நுண்ணுயிரியலில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது வரை, பூமியில் அவருடைய பயணம் தீவிரமான ஆசைகளுடனும் உறுதியுடனும் நிறைந்திருந்தது.
குடும்பம்
இவரது தாயார் ஷாராக் தொடக்கப் பள்ளி, ஹிஜாப் மேல்நிலைப் பள்ளி மற்றும் தலேகானி உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மூன்று ஆண்டுகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் செயலில் உறுப்பினராக இருந்தார். இவருக்கு கியாராஷ் (அஷ்கான்) என்ற ஒரு தம்பி இருந்தார். அமினியின் தந்தை, அம்ஜத் அமினி, ஒரு அரசு நிறுவனத்தில் பணிபுரிபவர் மற்றும் அவரது தாயார், மோஜ்கன் அமினி, ஒரு இல்லத்தரசி ஆவர். இவர் சாக்கஸில் உள்ள தலேகானி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 2018- ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். அமினிக்கு பல உறவினர்கள் இருந்தனர், அவர்களில் சிலர் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவர் எர்பான் மோர்டேசாய், கோமலா கட்சியைச் சேர்ந்த இடதுசாரி அரசியல் ஆர்வலர் மற்றும் ஈராக் குர்திஸ்தானில் தனியாக நாடு கடத்தப்பட்ட பெசுமெர்கா போராளியும் ஆவார். அமினியின் மரணத்திற்குப் பிறகு ஊடகங்களில் அமினியின் குடும்பத்திலிருந்து முதலில் பேசியவர் இவரேயாவார். எர்பானுக்கு அரசியல் தொடர்புகள் இருந்தபோதிலும், அமினிக்கு முன்னதாக அரசியல் இயக்கங்களுடன் தொடர்பிருந்தது என்று கூறிய ஈரானிய அரசாங்கத்தின் கூற்றுக்களை அவர் மறுத்துள்ளார். மாறாக, அமினி தனது ஊரில் "கூச்சப்படும் இயல்புள்ள, தனித்து வசிக்கும் இயல்புடையவர்" என்று விவரிக்கப்படுகிறார் என்பதையும் தெரிவித்துள்ளார். அமினி அரசியலைத் தவிர்த்தே இருந்தார், அமினி பதின்பருவத்தினராக இருந்தபோதும் ஒருபோதும் அரசியல் ரீதியாக செயல்படவில்லை என்றும், அரசியல் ஆர்வலராக இல்லை என்றும் கூறப்படுகிறது. மற்றொரு உறவினரான தியாகோ முகமதி, நார்வேயில் வசிக்கிறார். அவர் அங்குள்ள ஊடகங்களிடம் அமினியைப் பற்றிப் பேசினார். அமினியின் குடும்பத்தினர் அவருக்கு முன் உடல்நலக் குறைவு இல்லாதவர் என்றும், 22 வயதுடைய "ஆரோக்கியமான" நபர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அமினி முன் உடல்நலக் குறைவு கொண்டிருந்தவர் என்ற ஈரானிய அரசாங்கத்தின் கூற்றுக்களுக்கு மாறாக அவருக்கு முன் உடல்நலம் இருந்தது. அமினியின் மாமா சஃபா அவள் இறந்த தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
மேற்கோள்கள்
1999 பிறப்புகள்
2022 இறப்புகள்
பெண்களின் உரிமைகள்
சாகரவ் பரிசு பெற்றவர்கள்
ஈரானிய நபர்கள்
|
597811
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
|
சிலகார வம்சம்
|
சிலகார வம்சம் அல்லது சேலரா இராச்சியம் ( Shilahara/Shelara Kingdom ) ஒரு அரச வம்சமாகும், இது கிபி 8 ஆம் நூற்றாண்டில் வடக்கு மற்றும் தெற்கு கொங்கணில் இராஷ்டிரகூடர்கள் காலத்தில் தன்னை நிறுவியது.
இராச்சியம் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டது:
முதல் கிளை வட கொங்கணை ஆட்சி செய்தது
இரண்டாவது கிளை தெற்கு கொங்கணை ஆட்சி செய்தது (கி.பி.765 மற்றும் 1029 க்கும் இடையே)
மூன்றாவது கிளை கோலாப்பூர், சாத்தாரா மற்றும் பெல்காம் (கி.பி 940 மற்றும் 1215 க்கு இடையில்) பகுதியில் ஆட்சி செய்தது, அதன் பிறகு இவர்கள் யாதவர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.
தோற்றம்
8 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தக்காண பீடபூமியை ஆண்ட இராஷ்டிரகூட வம்சத்தின் அடிமைகளாக இந்த வம்சம் முதலில் தொடங்கியது. சுமார் கி.பி. 800 களில் இராஷ்டிர கூட மன்னன் இரண்டாம் கோவிந்தன், வட கொங்கண் பகுதியை சிலகார குடும்பத்தின் கபார்தின் என்பவருக்கு வழங்கினார் வடக்கு சில்ஹாரா குடும்பத்தின் நிறுவனர். அன்றிலிருந்து வட கொங்கண் பகுதி கபார்தி-திவீபம் அல்லது காவடித்வீபம் என்று அறியப்பட்டது.
வம்சம் தகரா-புராதீசுவரர் என்ற பட்டத்தை கொண்டிருந்தது. இது அவர்கள் முதலில் தகரா ( உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள நவீன தாரா) என்ற பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பதைக் குறிக்கிறது. 1343 இல் சால்சேட் தீவு மற்றும் இறுதியில் முழு தீவுக்கூட்டமும் முசாபரித்து வம்சத்திடம் சென்றது.
இதனையும் காண்க
கொங்கண் மண்டலம்
இந்திய வரலாறு
மகாராஷ்டிர வரலாறு
கர்நாடக வரலாறு
மேற்கோள்கள்
உசாத்துணை
. Written for The Bombay Gazetteer.
வெளி இணைப்புகள்
Silver Coin of Shilaharas of Southern Maharashtra (Coinex 2006 - Souvenir)
இந்திய அரச மரபுகள்
மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்
|
597814
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B7%E0%AE%BE
|
முதலாம் புர்கான் நிசாம் ஷா
|
முதலாம் புர்கான் நிசாம் ஷா (Burhan Nizam Shah I) மத்திய இந்தியாவில் உள்ள அகமதுநகர் சுல்தானகத்தின் ஆட்சியாளராக இருந்தார். நிசாம் சாகி வம்சத்தின் மாலிக் அகமது தனது பெயராய் அகமதுநகரை நிறுவி அதனை தமது சுல்தானகத்தின் தலைநகராகக் கொண்டார்.
தனது ஏழு வயதாக இருந்தபோது புர்கான் 1508 அல்லது 1510 இல் தனது தந்தை முதலாம் அகமது நிசாம் ஷா இறந்தவுடன் அரியணை ஏறினார். இவர் 1553 இல் இறந்தார் . இவருக்குப் பின் முதலாம் உசைன் நிசாம் ஷா ஆட்சிக்கு வந்தார்.
இவர் சியா இசுலாமுக்கு மாறினார். அரச குடும்பத்தாரும், பொது மக்களும் இதைப் பின்பற்றினர். சன்னி இறையியலாளர்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் இதை எதிர்த்தனர். ஆனால் நசுக்கப்பட்டனர். இவரது ஆட்சி மத சகிப்புத்தன்மை, கலை மற்றும் செழிப்பான வர்த்தகத்தால் வகைப்படுத்தப்பட்டது. முகலாயர்கள், பிஜப்பூர் மற்றும் பல்வேறு சிறிய மாநிலங்களுடனான மோதல்கள் இவரது ஆட்சியில் தொடர்ந்தன. அகமதுநகர் நகருக்கு தென்கிழக்கே இரண்டு மைல் தொலைவில் இவரது நினைவாக ஒரு அரண்மனைக் கட்டப்பட்டது. இது இப்போது இடிபாடுகளுடன் காணப்படுகிறது.
குடும்பம்
புர்கான் நிசாம் ஷாவுக்கு பீபி அமினா. பீபி மரியம் என்ற இரண்டு மனைவிகள் இருந்தனர். பிஜப்பூர் இவருக்கு ஆறு மகன்கள் இருந்தனர்:
மேற்கோள்கள்
1553 இறப்புகள்
மகாராட்டிர வரலாறு
|
597816
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF
|
பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தூத்துக்குடி
|
பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் என்பது இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரின் மத்திய பேருந்து நிலையம் ஆகும். இது நகரின் மையப்பகுதியில் மீனாட்சிபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட் பிரிவின் கீழ் இயங்கி வருகிறது, மேலும் இது நகரத்தின் இரண்டு பேருந்து நிலையங்களில் ஒன்றாகும், இது சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் பிரம்மாண்டமான வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்ட தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கா. ந. அண்ணாதுரையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையம் உள்ளூர் மற்றும் புறநகர் சேவைகளை வழங்குகிறது, தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளுக்கு நகர பேருந்தும் திருச்செந்தூர், திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு புறநகர பேருந்தும் இயக்கப்படுகிறது. இப்பேருந்து நிலையம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 1.8 கி.மீ. தொலைவிலும், தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்திலிருந்து 2.1 கி.மீ. தொலைவிலும், தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து 2.5 கி.மீ. தொலைவிலும், மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து 16.1 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
காலவரிசை
16 பிப்ரவரி 2019 அன்று, தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பேருந்து நிலைய கட்டுமானத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி தலைமையில் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முன்னாள் அமைச்சர்கள் பெ. கீதா ஜீவன் மற்றும் சி. த. செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
8 அக்டோபர் 2023 அன்று, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு பேருந்து நிலையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் திறந்து வைத்தார். தமிழ்நாடு சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், தமிழ்நாடு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ. ஜெகன் முன்னிலை வகித்தனர்.
11 அக்டோபர் 2023 அன்று, திறப்பு விழாவுக்குப் பிறகு, அதன் இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் சில உத்தியோகபூர்வ வேலைகளை முடித்த பின்னர், அங்கிருந்து பேருந்து சேவையைப் பயன்படுத்துவதற்காகப் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.
கட்டிட விவரங்கள்
திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் அளவு 3.36 ஏக்கர். ஒரு மேடையோடு கட்டப்பட்ட மொத்த கட்டிடத்தின் பரப்பளவு 13,630 சதுர மீட்டர் மற்றும் அதன் உயரம் 25.3 மீட்டர். இப்பேருந்து நிலையம் சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் 58.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இது தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டது, இது ஒவ்வொரு தளத்திற்கும் குறிப்பிட்ட இடத்தைப் பயன்படுத்தியது: தரை தளத்தில் 5750 சதுர மீட்டர், முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் 4856 சதுர மீட்டர், மூன்றாவது தளத்தில் 2380 சதுர மீட்டர் மற்றும் நான்காவது தளத்தில் 260 சதுர மீட்டர்.
விரிகுடா மற்றும் சேரிடம்
பேருந்து நிலையம் அதன் அரை வட்டமான ஒற்றை நடைமேடையில் 29 விரிகுடாக்களைக் கொண்டுள்ளது.
முக்கியமான அம்சங்கள்
பேருந்து நிலையமானது பயணிகளின் வசதிக்காக விசாலமான இடங்களை ஒதுக்கியுள்ளது. காத்திருப்பு கூடத்தில் அதிக எண்ணிக்கையிலான இருக்கைகள், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, உறை அறை, டிக்கெட் முன்பதிவு அலுவலகம், காவல் கட்டுப்பாட்டு அறை, மின்சாதன அறை, பேருந்து நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டுக்காக தன்னியக்க வங்கி இயந்திரம், மற்றும் பயணிகள் அனைத்து தளங்களையும் எளிதாக அணுகுவதற்கு இரண்டு மின்தூக்கிகள் வசதியும் செய்யப்பட்டது.
வாகன நிறுத்துமிடம்
பேருந்து நிலையமானது வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தைக் கொண்டுள்ளது; பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் 384 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும், இரண்டாவது தளத்தில் 45 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும் உள்ளன.
கடைகள்
பேருந்து நிலையத்தில் மொத்தம் 115 கடைகள் உள்ளன: தரை தளத்தில் 36, முதல் தளத்தில் 43, இரண்டாவது தளத்தில் 19, மூன்றாவது தளத்தில் 17, மற்றும் பேருந்து நிலையத்தின் நான்காவது தளத்தில் உணவகங்கள் மற்றும் பிற வசதிகள் உள்ளன.
தண்ணீர் சுத்தபடுத்தும் கருவி
பயணிகளின் பயன்பாட்டிற்காக பேருந்து நிலையத்தில் நன்கு பொருத்தப்பட்ட ரிவர்ஸ் ஒஸ்மோசிஸ் நீர் வடிகட்டி நிறுவப்பட்டுள்ளது, இது சுத்தமான மற்றும் ஏராளமான தண்ணீரை வழங்குகிறது.
உயர் மின் விளக்குகள்
பேருந்து நிலையத்தின் வளாகத்தில் சிறந்த ஒளிகளை பரப்புவதற்கு தேவையான இடங்களில் நான்கு உயரமான மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கழிவறை
பேருந்து நிலையத்தில், கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஆண்கள், பெண்கள் மற்றும் பிரத்தியேகமாக சவால் உள்ளவர்களுக்கு தனித்தனியாக சுத்தமான மற்றும் நேர்த்தியான கழிவறைகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் பார்க்கவும்
தூத்துக்குடி ரயில் நிலையம்
தூத்துக்குடி விமான நிலையம்
தூத்துக்குடியில் போக்குவரத்து
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம்
வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம்
குறிப்புகள்
தமிழ்நாட்டுப் பேருந்து நிலையங்கள்
|
597818
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
|
மதீரா மல்லி
|
யாசுமினம் ஓடோராடிசிமம் (தாவர வகைப்பாட்டியல்: Jasminum odoratissimum) என்பது முல்லைக் குடும்பத்தின் தாவரங்களில் ஒன்றாகும். 1753 ஆம் ஆண்டு இது குறித்த முதல் பதிப்பேடு உள்ளது.. பின்பு, 2014 ஆம் ஆண்டு தாவரவியல் ஆய்வாளர்களால், இத்தாவரம் மல்லிப் பேரினத்தில் இருந்து, மற்றொரு பேரினத்திற்கு(Jasminum--> Chrysojasminum) மாற்றப்பட்டது. இந்த கிரைசோயாசுமினம் (Chrysojasminum) பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி, முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இத்தாவரயினம், இதன் தாயகமாக மதீரா தீவு கருதப்படுகிறது. இவற்றின் மணம் அதிகமாக இருப்பதால் இப்பெயர் பெற்றது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
பூக்கும் தாவரங்கள்
மல்லிப் பேரினத்தின் முந்தைய சிற்றனங்கள்
|
597822
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
தமோர் ஆறு
|
தமோர் ஆறு நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய ஆறாகும். இது கஞ்சன்ஜங்கா மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகிறது. தமோர் ஆறும், அருண் ஆறும் திரிவேணி படித்துறையில் உள்ள சன் கோசி ஆற்றுடன் இணைந்து மாபெரும் சப்தகோசி ஆறாக உருவெடுத்து மகாபாரத மலைத்தொடரின் வழியாக கங்கை சமவெளியில் பாய்கிறது.
கோசி நதி அமைப்பு
கிழக்கு நேபாளத்தில் கோசி ஆற்றின் வடிநிலப்பகுதிகள் அமைந்துள்ளன. ஏழு ஆறுகள் கிழக்கு-மத்திய நேபாளத்தில் இணைந்து இந்த நதியை உருவாக்குவதால் இது சப்தகோசி என்று அழைக்கப்படுகிறது. கோசி ஆற்றமைப்பை உருவாக்கும் முக்கிய ஆறுகளாவன, சன் கோசி, இந்திராவதி ஆறு, போட் கோசி, துத் கோசி, அருண் ஆறு, பருன் ஆறு மற்றும் தமோர் ஆறு. இவ்வாறு ஒருங்கிணைந்த ஆறானது சத்ரா பள்ளத்தாக்கு வழியாக தெற்கு திசை நோக்கி வெளியேறி இந்தியச் சமவெளிக்குள் பாய்கிறது.
சப்த கோசி ஆற்றின் மொத்த நீரில் 44 சதவீதத்தை சன் கோசியும், அருண் ஆறு 37 சதவீதமும், தமோர் ஆறு 19 சதவீதமும் பங்களிக்கிறது.
மேற்கோள்கள்
நேபாள ஆறுகள்
|
597825
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
சாலசு ஆறு
|
சாலசு ஆறு (Chalus River, பாரசீக மொழி: رود چالوس, உரோமானிய மொழி: Rud-e Čālūs) அல்லது சாலசு ரூட் என்பது மத்திய-வடக்கு ஈரானில் பாயும் முக்கிய ஆறாகும். இது கண்டோவன் மற்றும் தலேகான் மலைகளில் உருவாகி மாசாந்தரான் மாகாணத்தில் உள்ள சாலசு நகரத்தை கடந்து செல்கிறது.
இந்த ஆறு மத்திய அல்போர்சு மலைத்தொடரின் வழியாக வடக்கு நோக்கி பாய்ந்து தெற்கு காஸ்பியன் கடலில் கலக்கிறது.
மேற்கோள்கள்
ஈரானிய ஆறுகள்
|
597827
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D
|
கேமரூன் கார்டன்
|
கேமரூன் கார்டன் (Cameron Gordon) அமெரிக்காவின் ஆசுடனில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். 1945 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். சித் டபிள்யூ. ரிச்சர்ட்சன் அறக்கட்டளை என்ற சமுதாயத் தொண்டு நிறுவனத்தின் அரசப் பிரதிநிதித்துவ தலைவராகவும் இருக்கிறார். கணிதவியலில் முடிச்சுக் கணிதம் அல்லது முடிச்சுக் கருத்தியக் கோட்பாட்டில் ஆற்றிய பணிகளுக்காக இவர் அறியப்படுகிறார். மார்க் குல்லர், இயான் லுக்கே மற்றும் பீட்டர் பாலே ஆகியோரின் முப்பரிமாண இடவியலின் சுழற்சி அறுவை சிகிச்சை தேற்றத்தில் இவரின் குறிப்பிடத்தக்க முடிவுகள் உள்ளன. முடிச்சு கணிதமானது அவற்றின் நிரப்பிகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பது கணிதவியலாளர் லூக்கியுடன் இவரது பணியின் முக்கிய அம்சமாக இருந்தது. கார்டனும் இசுமித்து அனுமானத்தின் தீர்மானத்தில் ஈடுபாடாக இருந்தார். ஆண்ட்ரூ கேசனும் கார்டனும் 'வலுவான குறைக்கவியலா ஈகார்டு பிளத்தல்' குறித்த அடிப்படைத் தேற்றங்களை வரையறுத்து நிரூபித்தார்கள். மேலும் இவர்கள் 'ஈகார்டு பிளத்தலை' நவீனமயமாக்கினர். இவர்கள் இசுலைசு-ரிப்பன் யூகத்திலும் பணியாற்றி, "காசன்-கார்டன் மாற்றமிலி"களைக் கண்டுபிடித்தனர்.
கார்டன் 1999 ஆம் ஆண்டில் குகனெய்ம் உதவித்தொகை பெறும் ஆய்வாளராக இருந்தார். மேலும் 2005 ஆம் ஆண்டில் கார்டன் எடின்பர்க் அரச கழகத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Cameron Gordon's personal webpage, University of Texas at Austin
Cameron McAllan Gordon, Mathematics Genealogy Project
1945 பிறப்புகள்
வாழும் நபர்கள்
அமெரிக்கக் கணிதவியலாளர்கள்
|
597828
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
|
மெத்திலமோனியம் ஆலைடு
|
மெத்திலமோனியம் ஆலைடுகள் (Methylammonium halide) என்பவை [CH3NH3]+X− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம ஆலைடுகளாகும், இங்குள்ள X என்பது மெத்திலாமோனியம் புளோரைடுக்கு F ஆகவும், மெத்திலமோனியம் குளோரைடுக்கு Cl ஆகவும், மெத்திலமோனியம் புரோமைடுக்கு Br ஆகவும் மெத்திலமோனியம் அயோடைடுக்கு I ஆகவும் குறியீடுகள் இடம்பெறும். பொதுவாக இவை வெள்ளை அல்லது வெளிர் நிறத்தில் தூளாக காணப்படுகின்றன.
பயன்பாடுகள்
மெத்திலமோனியம் ஆலைடு உப்புகள் பெரோவ்சுஸ்கைட்டு சூரிய மின்கலங்களின் பகுதி கூறுகளாகும். இவை வணிகமயமாக்கலுக்கு மதிப்பீடு செய்யப்படுகின்றன. அயோடைடு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு அம்மோனியம் ஆலைடுகளின் அடிப்படையில் காந்த-ஒளியியல் தரவு சேமிப்பக கருத்துருக்கள் சோதிக்கப்படுகின்றன.
தயாரிப்பு
மெத்திலமோனியம் ஆலைடு சேர்மங்கள் பொதுவாக சமமான அளவு மெத்திலமீனை பொருத்தமான ஆலைடு அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மெத்திலமோனியம் அயோடைடு 0 °C இல் மெத்திலமீனுடன் ஐதரயோடிக் அமிலத்தைச் சேர்த்து 120 நிமிடங்களுக்கு வினைபுரியச் செய்து 60 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆவியாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
படிகவியல்
மெத்திலமோனியம் ஆலைடுகளின் படிகவியல் மிகவும் ஆய்வுக்கு உட்பட்டதாகும். இயே.எசு. எண்டிரிக்சு 1928 ஆம் ஆண்டில் இவை பற்றிய ஆரம்பகால கட்டுரையை வெளியிட்டார். மெத்திலமோனியம் குளோரைடு மீண்டும் 1946 ஆம் ஆண்டிலும் 1961 ஆம் ஆண்டில் மெத்திலமோனியம் புரோமைடும் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும் காண்க
மெத்திலமோனியம் நைட்ரேட்டு
மேற்கோள்கள்
ஆலைடுகள்
மெத்திலமோனியம் சேர்மங்கள்
|
597830
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
மகாபாத் ஆறு
|
மகாபாத் ஆறு (Mahabad River, பாரசீக மொழி: مهابادرود ) என்பது ஈரானின் மகாபாத் மாவட்டத்தில் உள்ள ஒர் உள்வடிகால் ஆறாகும். இது 36°46′03″N 45°42′06″E என்ற புவியியல் தரவில் அமைந்துள்ளது. கவுடர் மற்றும் பெய்டாஸ் ஆறுகள் சமவெளியின் தெற்கு உயரத்தில் இருந்து உருவாகி இணையாக வடக்கு நோக்கி ஓடுகின்றன. பின்னர் இரு ஆறுகளும் இணைந்து மகாபாத் அணை நீர்த்தேக்கத்தை உருவாக்கி மகாபாத் ஆறாக தொடர்ந்து பாயும் இந்த ஆறு உருமியா உப்பு ஏரியின் தெற்கு முனையில் கலக்கிறது.
மேற்கு அசர்பைசான் மாகாணத்தின் மகாபாத் நகருக்கு அருகில் உள்ள மகாபாத் அணை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
ஈரானிய ஆறுகள்
|
597831
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
|
அது அந்தக்காலம்
|
அது அந்தக்காலம் என்பது 1988 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழித் திரைப்படம், இத்திரைப்படம் வலம்புரி ஜான் இயக்குநராக அறிமுகமாகிய முதல் படமாகும். இப்படத்தில் சரண்ராஜ் மற்றும் லட்சுமி, சரத்பாபு ஆகியோர் முதன்மையான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார்.
நடிகர்கள்
சரண்ராஜ்
லட்சுமி
சரத்பாபு
ஒலிப்பதிவு
இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், "வலம்புரி ஜானின் படம் பாதி நேரம் வரை மோசமாக உள்ளதென்கிறது.... ஸ்லோப்பி கட்ஸ் ஜம்பி ஸ்கிரிப்டை தாங்க முடியாததாக ஆக்குகிறது".
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
1988 தமிழ்த் திரைப்படங்கள்
இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
சந்திரபோஸ் இசையமைத்த திரைப்படங்கள்
லட்சுமி நடித்த திரைப்படங்கள்
சரத் பாபு நடித்த திரைப்படங்கள்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.