id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
---|---|---|---|
594106
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE%2017
|
உலூனா 17
|
உலூனா 17 (யே - 8 தொடரின்) LOK Luna 17 (Ye-8 series)என்பது உலூனிக் 17 என்றும் அழைக்கப்படும் லூனா திட்டத்தின் ஆளில்லா விண்வெளிப் பயணமாகும். இது நிலாவின் மேற்பரப்பில் இயங்கும்முதல் எந்திரன் வகைத் தரைய்யிறங்கியை அனுப்பியது.
ஏவுதல்
உலூனா 17 புவியின் தங்கல் வட்டணையில் இருந்து நிலாவை நோக்கி ஏவப்பட்டு 1970 நவம்பர் 15 அன்று நிலா வட்டணையில் நுழைந்தது. விண்கலம் மெதுவாக நிலாவில் மரீ இம்ப்ரியத்தில் (மழைக்காலக் கடலில்) தரையிறங்கியது. விண்கலத்தில் இரட்டை சாய்தளங்கள் இருந்தன. இவற்றின் வழியாக உலூனோகோடு 1, நிலா மேற்பரப்பில் இறங்கியது.
உலூனோகோடு 1 என்பது எட்டு தானாக இயங்கும் சக்கரங்களில் ஒரு பெரிய குவிந்த மூடியைக் கொண்ட குழாய் போன்ற பெட்டியைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிலா ஊர்தி ஆகும். உலூனோகோடு 1 ஒரு கூம்பு வடிவ உணர்சட்டம் , ஒரு உயர் திசை சுருளை வடிவ உணர்சட்டம் , நான்கு தொலக்கற்றை கதிர்நிரல்மானி , ஒரு எக்சுக்கதிர்த் தொலைநோக்கி , அண்டக்கதிர் காணிகள், ஒரு ஒருங்கொளி எதிர்தெரிப்பி (பிரான்சால் வழங்கப்பட்டது) ஆகியவற்றைக் கொண்டதாகும். மூடியின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்ட சூரிய மின்கல அணி வழியாக ஊர்தி இயக்கப்பட்டது.
உலூனோகோடு 1 மூன்று நிலா நாட்கள் செயல்படும் நோக்கம் கொண்டது , ஆனால் உண்மையில் பதினொரு நிலா நாட்களுக்கு (பதினொரு புவி மாதங்கள்) இயங்கியது. 1971 ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று இசுப்புட்னிக் 1 இன் ஆண்டு நிறைவை முன்னிட்டு உலூனோகோடின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன , இது 10,5 கிலோமீட்டருக்கும் (6,5 மைல்கள்) பயணித்து , படங்களை எடுத்துப் பல செய்முறைகளை நடத்தியது.
உலூனா 16, சோண்டு 8 ஆகிய சோவியத் நிலா ஆய்வுகளில் உலூனா 17 தொடர்ந்து வெற்றிகளை அடைந்தது. உலூனா 17 , உலூனோகோடு 1,தரையிறங்கியை எடுத்துச் சென்றது , இது எந்திரன்வகை நிலா ஊர்திகளின் தொடரில் முதலாவது ஆகும். இதன் கருத்துரு 1960 களின் முற்பகுதியில் தொடங்கிவிட்டது. இது முதலில் முன்னோட்ட நிலாத் தரையிறங்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்தது. 1969 பிப்ரவரியில் தோல்வியடைந்த பின்னர், இது நிலாவில் தரையிறங்கும் இரண்டாவது முயற்சி ஆகும்.
இறங்கும் கட்டத்தில் தரையிறங்கி நிலாவின் மேற்பரப்பில் இறங்குவதற்கு இரண்டு தரையிறங்கும் சாய்தளங்கள்கள் பொருத்தப்பட்டன.
756 - கிலோகிராம் (1,666 - பவுண்டுகள் - 11 - அவுன்சு) எடையுள்ள தரையிறங்கி சுமார் 1.3 மீட்டர் (4 அடி 5 அங்குலம்) உயரமும் , 2.15 மீட்டர் (7அடி, 1 அங்குலம்) குறுக்கும் கொண்டிருந்தது. அதன் எட்டு சக்கரங்கள் ஒவ்வொன்றும் இரண்டை முன்னோக்கியும் மற்றும் இரண்டைத் தலைகீழ் வேகங்களுக்குத் தானே கட்டுப்படுத்தப்படலாம். அதன் பெரும வேகம் மணிக்கு சுமார் மணிக்கு 100 மீ(0,062மைல் ) ஆகும் , இதற்கு 5 நொடி தாமதத் துடன் புவியியில் உள்ள ஐந்து பேர் கொண்ட ஓட்டுநர்கள் குழுவால் கட்டளைகள் அனுப்பப்பட்டன. அறிவியல் கருவிகளின் தொகுப்பு சூரிய மின்கலங்களால் இயக்கப்பட்டது ( வேதி மின்கல அடுக்குகளின் கீல் தரையிறங்கி மேல் மூடியின் உள்ளே நிறுவப்பட்டது.
நிலாவுக்குச் செல்லும் வழியில் இரண்டு நடுவழித் திருத்தங்களுக்குப் பிறகு, உலூனா 17 நிலாவின் வட்டணையில் நுழைந்து பின்னர் 1970 நவம்பர் 17 அன்று நிலா மேற்பரப்பில் 03:46:50 ஒபொநே மணிக்கு 38பாகை 17 பாகைத்துளி வடக்கு அகலாங்கிலும், 35 பாகை மேற்கு நெட்டாங்கிலும் உலூனா 16 தளத்திலிருந்து சுமார் 2,500 கிலோமீட்டர் (1,600 மைல்) தொலைவில் இருந்த மழை கடல் களத்தில் தரையிறங்கியது.
உலூனோகோடு 1 தரையிறங்கி காலை 06:28 ஒபொநே மணிக்கு நிலவில் தரையிறங்கியது. அதன் 322 புவி நாட்களில் , தரையிறங்கி 10,54 கிலோமீட்டர் (7 மைல்) பயணம் செய்து 20,000 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி படங்களையும் 206 உயர் தெளிவுத்திறன் கொண்ட இயல்காட்சியையும் புவிக்கு அனுப்பியது.
கூடுதலாக, உலூனோகோடு 1 அதன் இரிஃப்மா எக்சுக்கதிர் உடனொளிர்வு கதிர்நிரல்மானியுடன் இருபத்தைந்து மண் பகுப்பாய்வுகளைச் செய்தது. மேலும், 500 வெவ்வேறு இடங்களில் அதன் ஊடுருவல்மானி அளவீட்டைப் பயன்படுத்தியது.
கட்டுப்பாட்டாளர்கள் 1971 செப்டம்பர் 14 அன்று 13:05 ஒபொநே மணிக்கு உலுனோகோடு 1 உடனான கடைசி தகவல்தொடர்பு அமர்வை முடித்தனர். தொடர்பை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் இறுதியாக அக்டோபர் 4 அன்று நிறுத்தப்பட்டன.
2010 மார்ச்சில், நிலா கண்காணிப்புச் சுற்றுகலன் உலூனா 17 இன் தரையிறங்கும் களத்தை படம் எடுத்தது , இது தரையிறங்கி, தரையூர்தியின் தடங்களைக் காட்டுகிறது. 2010 ஏப்ரலில் அப்பாச்சி புள்ளிக் நோக்கீட்டக நிலா ஒருங்கொளி தடங்காண் செயல்முறைக் குழு இந்த நிழற்படங்களின் உதவியுடன் நீண்ட காலமாக இழந்த உலூனோகோடு 1 தரையூர்தியைக் கண்டுபிடித்ததாகவும் , ஒருங்கொளி எதிர்தெறிப்பியில் இருந்து மீள்குறிகையைப் பெற்றதாகவும் அறிவித்தது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஜாரியா - உலூனா 17 காலநிரல்
லூனா திட்டம்
சோவியத் ஒன்றியம்
நிலாவுக்கான பயணத் திட்டங்கள்
|
594108
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81
|
மன்மோகன் துடு
|
மன்மோகன் துடு (Manmohan Tudu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1922 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். உதாலா சட்டமன்றத் தொகுதியின் 1 ஆவது, 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது சட்டமன்றங்களில் உறுப்பினராகப் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு தன்னுடைய 85 ஆவது வயதில் மன்மோகன் துடு இறந்தார்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Official biographical sketch in Parliament of India website
1922 பிறப்புகள்
2007 இறப்புகள்
இந்திய அரசியல்வாதிகள்
ஒடிசா நபர்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
594110
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D
|
இரிபுநாத் சேத்
|
இரிபுநாத் சேத் (Ripunath Seth) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை ஒடிசா சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இவர் செயல்பட்டார். 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் தேதியன்று இரிபுநாத் சேத் தனது 63 ஆம் வயதில் காலமானார்.
மேற்கோள்கள்
1958 பிறப்புகள்
2022 இறப்புகள்
இந்திய அரசியல்வாதிகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
ஒடிசா நபர்கள்
|
594111
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE%2023
|
உலூனா 23
|
உலூனா 23 (Luna 23 ) என்பது சோவியத் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட லூனா திட்டத்தின் ஆளில்லா விண்வெளிப் பயணமாகும்.
உலூனா 23 என்பது சோவியத் நிலாத் தரையிறங்கிப் பயணமாகும் , இது நிலாப் பதக்கூறுகளைப் புவிக்குக் கொணரும் நோக்கில் இருந்தது. புரோட்டான் - கே / டி மூலம் நிலாவுக்கு ஏவப்பட்ட விண்கலம் அதன் பக்கத்தில் முன்கூட்டியே சாய்ந்து , மேற் கிறிசியத்தில் தரையிறங்கியபோது சிதைவுற்றது. பக்கூறு திரட்டும் எந்திரம் செயல்பட முடியவில்லை. மேலும் பத்க்கூறுகள் எதுவும் புவிக்குக் கொணரப்படவில்லை. தரையிறங்கி நிலாவில் இறங்கிய பின்னர் மூன்று நாட்களுக்குத் தகவல் பரிமாற்றத்தைத் தொடர்ந்தது. 1976 ஆம் ஆண்டில் உலூனா 24 பல நூறு மீட்டர் தொலைவில் தரையிறங்கி வெற்றிகரமாக பதக்கூறுகளைப் புவிக்குத்திருப்பி அனுப்பியது. 2010 KQ என்ற சிறுகோள் போன்ற பொருள் உலூனா 23 தொகுதியை ஏவிய பின்னர் பிரிந்த ஏவூர்தி என்று நம்பப்படுகிறது.
உலூனா 23 என்பது நிலாவின் மேற்பரப்பின் ஆழமான அகட்டுப் பதக்கூறைக் கொணர வடிவமைக்கப்பட்ட முதல் நிலாப் பதக்கூறு மாதிரி திரும்பும் விண்கலமாகும் (எனவே குறியீடு யே - 8 - 5 இல் இருந்து யே - 8 முதல் 5 எம் வரை என மாற்றப்பட்டது ). உலூனா 16 மற்றும் உ லூனா 20 ஆகியவை 0.3 மீட்டர் ஆழத்திலிருந்து அதக்கூறுகளை திருப்பி அனுப்பியபோது , புதிய விண்கலம் 2.5 மீட்டர் வரை தோண்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31 அன்று நடுவழித் திருத்தத்திற்குப் பிறகு உலூனா 23 1974,நவம்பர் 2, அன்று நிலாவைச் சுற்றி வந்தது. வட்டணை அளவுருக்கள் 104 × 94 கிலோமீட்டர் 138 ′ சாய்வில் இருந்தன. வட்டணையில் மேலும் பல மாற்றங்களைத் தொடர்ந்து , விண்கலம் நவம்பர் 6 அன்ரு நிலா மேற்பரப்பில் இறங்கி , மேற் கிறிசியத்தின் தெற்குப் பகுதியில் தரையிறங்கியது. தரையிறங்கிய ஆயத்தொலைவுகள் 13 வடக்கு அகலாங்கு 62 கிழக்கு நெட்டாங்கு ஆகும். தரையிறங்கும் போது தரையிறங்கியின் துளையிடும் கருவி சதைவடைந்தது , இது நிலா மண் எடுத்துக்கொண்டு புவிக்குத் திரும்பும் முதன்மைப் பணியை நிறைவேற்றுவதைத் தடுத்தது. நிலையான தரையிறங்கியுடன் வரையறுக்கப்பட்ட அறிவியல் ஆய்வு திட்டத்தை நடத்த அறிவியலாளர்கள் ஒரு தற்காலிக திட்டத்தை உருவாக்கினர். கட்டுப்பாட்டாளர்கள் 1974 நவம்பர் 9 அன்றுவரை விண்கலத்துடன் தகவல் தொடர்பைப் பெற்றனர்.
நாசா நிலா கண்காணிப்புச் சுற்றுகலன் எடுத்த உயர் பிரிதிறன் கொண்ட வட்டணை நிழற்படங்கள் மார்ச் 2012 இல் வெளியிடப்பட்டன. உலூனா 23 விண்கலம் நிலா மேற்பரப்பில் அதன் பக்கத்தில் கிடப்பதைக் காட்டியது. தரையிறங்கும் போது விண்கலம் பெயரளவு செங்குத்து மற்றும் / அல்லது கிடைமட்ட வேகங்களை விட கூடுதல் வேகத்தில் இருந்ததால் தரையிறங்க முன்கூட்டியே நகர்ந்தது.
பண்பாட்டில்
2007 பயோவேர் மாசு எப்பெக்ட்டு எனும் காணொலி விளையாட்டு நிறுவனம் இந்த விண்கலத்தின் சிதைந்த எச்சங்களை புவி நிலாவின் அணுகக்கூடிய பகுதிகளில் காட்டியது. இவை தற்போக்குப் பரவல் பொருட்களுக்காக காப்பாற்றப்படலாம்.
மேலும் காண்க
செயற்கை செயற்கைக்கோள்கள், விண்வெளி ஆய்வுகளின் காலநிரல்
நிலாவில் உள்ள செயற்கை பொருட்களின் பட்டியல்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
ஜாரியா - உலூனா திட்ட காலநிரல்
நாசா என். எஸ். எஸ். டி. சி முதன்மை அட்டவணை
நிலாவுக்கான பயணத் திட்டங்கள்
லூனா திட்டம்
சோவியத் ஒன்றியம்
விண்வெளித் திட்டங்கள்
|
594119
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
எரித்ரோபிஜியா செம்பிட்டத் தில்லான்
|
எரித்ரோபிஜியா செம்பிட்டத் தில்லான் (அறிவியல் பெயர்: Cecropis daurica erythropygia) என்பது செம்பிட்டத் தில்லானின் துணையினம் ஆகும். இது இந்தியாவில் காணப்படுகிறது.
விளக்கம்
எரித்ரோபிஜியா செம்பிட்டத் தில்லானின் உடலின் மேற்பகுதி பளபளப்பான ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்கும். இதன் பிடரியில் செம்புழுப்புக் கறையைக் கொண்டதாகவும், பிட்டம் சிவந்த பழுப்பு நிறமாகவும் இருக்கும். இப்பறவை பறக்கும்போது இதன் பிட்டத்தில் உள்ள செம்பழுப்பு நன்றாகத் தெரியும். இதன் வால் நன்கு பிளவு பட்டதாக இருக்கும். உடலின் அடிப்பகுதி செம்மை தோய்ந்த வெண்மையாகச் சிறிய கரும் பழுப்புக் கோடுகள் நிறைந்ததாகக் காணப்படும்.
நடத்தை
இப்பறவை இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக தென்னிந்தியா முழுவதும் காணப்படும். குளிர் காலத்தில் மிகுதியாகவும் மற்ற பருவங்களில் ஓரளவும் காண இயலும். இவற்றின் பழக்கவழக்கம் பிற தகைவிலான்களைப் போலவே ஆகும். இது உழவாரக் குருவி, புகைக் கறுப்பு நெடும்பாறைத் தகைவிலான் போன்றவற்றோடு சேர்ந்து மலைப் பள்ளத்தாகுகளில் திரியும்.
இனப்பெருக்கம்
எரித்ரோபிஜியா செம்பிட்டத் தில்லானின் பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கிறது. இது பாறைகளின் அடிப்பக்கம், பாலங்கள், வீட்டு முற்றம் ஆகியவற்றில் மண் உருண்டைகளைக் கொண்டு கோப்பை போல கூட்டினை அமைத்து அதில் நீண்ட் நுழைவாயிலையும் அமைக்கிறது. கூட்டில் மூன்று அல்லது நான்கு ஐந்து வரையிலான முட்டைகளை இடும். இதன் முட்டை வெண்மையாக எந்தக் கறைகளும் இன்றிக் காணப்படும். கூடு கட்டுவது, அடைக்காப்பது, குஞ்சுகளைப் பராமரிப்பது போன்ற்றறை ஆணும் பெண்ணும் இணைந்து மேற்கொள்கின்றன.
மேற்கோள்கள்
தகைவிலான்கள்
தென்னிந்தியப் பறவைகள்
|
594124
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%20%28%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%29
|
புரு (வேத காலப் பழங்குடியினம்)
|
புரு (Puru) என்பவர்கள் ஓர் இருக்கு வேத காலப் பழங்குடியினம் அல்லது பழங்குடியினங்களின் கூட்டமைப்பு ஆவர். இவர்கள் அண். பொ. ஊ. மு. 1700 முதல் பொ. ஊ. மு. 1400 வரையிலான காலத்தில் அமைந்திருந்தனர். புரு பழங்குடியினத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தன. அவற்றில் ஒரு பிரிவினர் பாரதர்கள் ஆவர். பெரும்பாலான இருக்கு வேதத்தில் இரு முக்கியமான பழங்குடியினங்களாகப் புருக்களும், பாரதர்களும் திகழ்கின்றனர். பாரதர்களின் மன்னர் சுதாசுவுக்கு எதிராகப் பல பிற குழுக்களைப் புருக்கள் கூட்டணி வைத்து எதிர்த்தனர். ஆனால், பத்து மன்னர்களின் போரில் தோற்கடிக்கப்பட்டனர்.
குறிப்புகள்
மேற்கோள்கள்
இந்தோ ஆரிய மக்கள்
|
594136
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D
|
கரும்பாய்மம்
|
வானியல் மற்றும் அண்டவியலில், கரும்பாய்மம் (dark fluid) சார்ந்த கோட்பாடுகள் கரும்பொருள் (வானியல்), இரண்டையும்கருப்பு ஆற்றல் ஒரே சட்டகத்தில் விளக்க முயலும் கோட்பாடுகளாகும். கரும்பொருளும் கருப்பு ஆற்றலும் தனித்தனி இயற்பியல் நிகழ்வுகள் அல்ல என்றும் அவை தனித்தனி தோற்றங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் , ஆனால் அவை வலுவாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்றும் ஒரே பாய்மத்தின் இரண்டு கூறுகளாகக் கருதலாம் என்றும் கோட்பாடு முன்மொழிகிறது. பால்வெளி மட்டத்தில் கரும்பாய்மம் கரும்பொருளைப் போல செயல்படுகிறது. மேலும் பேரளவுகளில் அதன் நடத்தை கருப்பாற்றலைப் போன்று விளங்குகிறது..
2018 ஆம் ஆண்டில் வானியற்பியலாளர் ஜாமி பார்னசு எதிர்மறை பொருண்மை கொண்ட ஒரு கரும்பாய்மம், கரும்பொருள், கருப்பாற்றல் இரண்டையும் விளக்க தேவையான பண்புகளைக் கொண்டிருக்கும் என்று முன்மொழிந்தார்.
கண்ணோட்டம்
கரும்பாய்மம் ஒரு குறிப்பிட்ட வகையான பாய்மமாக கருதப்படுகிறது. இதன் ஈர்க்கும், விலக்கும் நடத்தைகள் கள ஆற்றல் அடர்த்தியைப் பொறுத்தது. இந்தக் கோட்பாட்டில், கரும்பாய்மம் பேரியான் அடர்த்தி செறிவாக இருக்கும் இடப் பகுதிகளில் கரும்பொருளைப் போல செயல்படுகிறது. ஏடல் என்னவென்றால் , கரும்பாய்மம் பொருளின் முன்னிலையில் இருக்கும்போது அது மெதுவாக குறைந்து அதைச் சுற்றி உறையும். பின்னர் அதைச் சுற்றி உறைவதற்கு அதிக கரும்பொருளை ஈர்க்கிறது , இதனால், அதற்கு அருகிலுள்ள ஈர்ப்பு விசை மிகுகிறது. இதன் விளைவு எப்போதும் இருக்கும். ஆனால் பால்வெளி போன்ற மிகப் பாரிய பொருண்மை முன்னிலையில் மட்டுமே இது கவனிக்கப்படுகிறது. இந்த விளக்கம் கரும்பொருளின் கோட்பாடுகளுக்கு ஒத்ததாகும் மேலும், கரும்பாய்மச் சமன்பாடுகளின் ஒரு சிறப்பு வழக்கு, கரும்பொருளை மீள்பெருக்கம் செய்வதாகவே அமைகிறது.
மறுபுறம் , பால்வெளிகளுக்கு இடையிலான வெற்றிடங்களைப் போல ஒப்பீட்டளவில் சிறிய பொருள் உள்ள இடங்களில் , இந்தக் கருதுகோள் கரும்பாய்மமாக ஓய்வெடுப்பதோடு எதிர்மறை அழுத்தத்தையும் பெறுதல் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரும்பாய்மம் கருப்பு ஆற்றலைப் போன்ற விளைவுடன் ஒரு விலக்கும் விசையாக மாறுகிறது.
கரும்பாய்மம் விளைவில் கரும்பொருள், கருப்பாற்றலுக்கு அப்பாலும் செல்கிறது , ஏனெனில், இது பல்வேறு பொருள் அடர்த்தி நிகழ்வுகளின் கீழ் தொடர்ச்சியான ஈர்த்தல் விலக்கல் பண்புகளை கொண்டுள்ளது. உண்மையில் பல்வேறு பிற ஈர்ப்பு கோட்பாடுகளின் சிறப்பு நிகழ்வுகள் கரும்பொருளால் மீண்டும் உருவாக்கப்படுகின்றன, எ. கா. உப்புதல், கருப்பு ஆற்றல்(அளவன்புலம்), கே - சாறு, f(R) எனும் ஈர்ப்பு,) பொதுமைப்படுத்தப்பட்ட ஐன்சுட்டைன் ஈதர், f(K) எனும் ஐன்சுட்டைன் ஈதர் மாண்டு, டெவெசு, BSTV,போன்றவற்றைக் கருதலாம்.. கரும்பாய்மக் கோட்பாடு ஒரு குறிப்பிட்ட f (K+R) எனும் ஈர்ப்பு-ஈதர் படிமம் போன்ற புதிய படிமங்களையும் ஏற்கிறது. இது செம்பெயர்ச்சியையும் அடர்த்தியையும் சார்ந்த மாண்டு(MOND) பொருளுக்கு சுவையான திருத்தங்கள் செய்வதைக் குறிக்கிறது.
எளிய கற்பிதங்கள்
கரும்பாய்மம் இங்கு ஒரு நிலையான பாய்ம இயக்கவியல் படிமத்தைப் போல பகுப்பாய்வு செய்யப்படவில்லை , ஏனெனில் பாய்ம இயக்கவியலில் முழுமையான சமன்பாடுகள் தீர்க்க இன்னும் மிகவும்மாரியதாகவே உள்ளன. பொதுவான சாப்லிஜின் வளிமப் படிமம் போன்ற முறைப்படுத்தப்பட்ட பாய்ம இயக்க அணுகுமுறையே கரும்பாய்மத்தை படிமமாக்குவதற்கான ஒரு சிறந்த முறையாகும். ஆனால் தற்போது கணக்கீடுகள் சாத்தியமாக இருப்பதற்கு பல நோக்கீட்டுத் தரவு புள்ளிகள் தேவைப்படுகின்றன , மேலும் அண்டவியலாளர்களுக்கு போதுமான தரவு புள்ளிகள் கிடைக்கவில்லை. கருப்பாற்றல் கரும்பொருளுக்குமான பிற மாற்று அணுகுமுறைகளில் செய்யப்படுவதைப் போலவே , அளவிடக்கூடிய புலப் படிமங்கள்வழி கருதுகோளைப் படிமமாக்கி ஒரு எளிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கோட்பாட்டு இயற்பியல்
இயல் அண்டவியல்
வானியற்பியல்
|
594139
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D
|
ஏட்ரியன் ஓல்சுடொக்
|
ஏட்ரியன் ஓல்சுடொக் அல்லது ஏட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (Adrian Holdstock, பிறப்பு: ஏப்ரல் 27, 1970) ஒரு தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட நடுவர் மற்றும் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இப்போது பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவராக பணியாற்றுகிறார். இவர் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் முதல் தரப் போட்டிகளுக்கான நடுவர் குழுவின் அங்கத்தவராக உள்ளார்.
தொழில்
ஓல்சுடொக் 1989 மற்றும் 1993 க்கு இடையில் மேற்கு மாகாணத்திற்காக விளையாடினார். அதற்கு முன்பு போலண்ட் அணிக்காக 1993 மற்றும் 1995 இல் விளையாடினார் 2006 இல் பட்டியல் அ துடுப்பாட்ட நடுவராக அறிமுகமான இவர் 2007 இல் முதல் தரத் துடுப்பாட்ட நடுவராக அறிமுகமானார்
2011 இல், ஓல்சுடொக் பன்னாட்டு இருபது20 போட்டி நடுவராக அறிமுகமானார். அவர் 2013 இல் மூன்று பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் நடுவராக இருந்தார் சனவரி 2020 இல், தென்னாப்பிரிக்காவில் 2020 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பை போட்டிக்கான பதினாறு நடுவர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார்.
26 டிசம்பர் 2020 அன்று, தென்னாப்பிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் தேர்வுப் போட்டியில், ஓல்சுடொக் தேர்வுப் போட்டி நடுவராக அறிமுகமானார்.
2021 ஐசிசி ஆண்கள் இ20 உலகக் கோப்பைக்கான போட்டி நடுவர்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 2023 இல், அலீம் தார் குழுவிலிருந்து வெளியேறியதை அடுத்து, பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர்கள் குழுவில் ஓல்சுடொக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றும் அசான் ராசாவும் சேர்க்கப்பட்டனர்.
மேற்கோள்கள்
தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட நடுவர்கள்
வாழும் நபர்கள்
1970 பிறப்புகள்
|
594147
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
குள்ள பூக்கொத்தி
|
குள்ள பூக்கொத்தி (Pygmy flowerpecker)(டைகேயம் பிக்மேயம்) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.
இதன் இயற்கையான வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
பூங்கொத்தி
|
594150
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
|
மால்டாவில் யூதர்
|
மால்டாவில் யூதர் (The Jew of Malta) (முழுத் தலைப்பு: மால்டாவில் பணக்கார யூதரின் பிரபலமான சோகம் ) என்பது கிறிஸ்டோபர் மார்லோவின் நாடகம், இது 1589 அல்லது 1590 இல் எழுதப்பட்டது. இக்கதை முதன்மையாக பராபாஸ் என்ற மால்டிஸ் யூத வணிகரைச் சுற்றி வருகிறது. உண்மையான கதை மத மோதல்கள், சூழ்ச்சிகள் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றால் பிண்ணப்பட்டுள்ளது, இது மால்டா தீவில் மத்தியதரைக் கடலில் ஸ்பெயினுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையிலான மேலாதிக்கப் போராட்டத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டது. நாடகத்தில் யூதர்களின் சித்தரிப்பு மற்றும் எலிசபெதன் பார்வையாளர்கள் அதை எவ்வாறு பார்த்திருப்பார்கள் என்பது பற்றி விரிவான விவாதம் உள்ளது.
கதா பாத்திரங்கள்
நிக்கோலோ மச்சியாவெல்லியை அடிப்படையாகக் கொண்ட ஒரு செனகன் பேய் கதாபாத்திரமான மச்சியாவெல், "ஒரு யூதரின் சோகத்தை" அறிமுகப்படுத்துவதாக இந்த நாடகம் தொடங்குகிறது. அதிகாரம் ஒழுக்கக்கேடானது என்ற இழிந்த தனது பார்வையை வெளிப்படுத்துகிறார்,மேலும் அவர் கூறுகிறார் "நான் மதத்தை ஒரு குழந்தைத்தனமான பொம்மையாக எண்ணுகிறேன், / அறியாமையைத் தவிர பாவம் இல்லை" .
பராபாஸ் தனது கவுண்டிங் ஹவுஸில் நாடகத்தைத் தொடங்குகிறார். போரிடும் துருக்கியர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக மால்டாவின் கவர்னர் நாட்டின் மொத்த யூத மக்களின் செல்வத்தைக் கைப்பற்றியதனாலும் தனது மொத்த சொத்தையும் கைப்பற்றியதனாலும் கோபம் கொண்டு, தனது அடிமையான இத்தாமோரின் உதவியுடன் ஆளுநரின் மகனும் அவரது நண்பரும் தனது மகள் அபிகாயிலின் காதலுக்காக சண்டையிடும் சூழலை உருவாக்குகின்றார்.அவர்கள் இருவரும் சண்டையில் இறக்க, அபிகாயில், தனது தந்தை செய்ததைக் கண்டு பயந்து, ஒரு கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாக மாறியபோது அவர் மேலும் கோபமடைந்தார். இதற்குப் பழிவாங்கும் விதமாக, பராபாஸ், அவளையும் சேர்த்து கன்னியாஸ்திரிகள் அனைவருக்கும் விஷம் கொடுக்கச் செல்கிறார், அங்கு அவர் தனது பாவங்களுக்காக வருந்த வைக்க முயற்சிக்கும் ஒரு வயதான துறவியை (பர்னாடின்) கழுத்தை நெரிக்கிறார்,பின்னர் முதல் துறவியின் கொலைக்காக மற்றொரு துறவியை (ஜாகோமோ) கட்டமைக்கிறார். இத்தாமோர் ஒரு விபச்சாரியை காதலிக்க, அவள் தனது மோசமான நண்பருடன் சேர்ந்து இவனை மிரட்டி உண்மையை அம்பலப்படுத்த சதி செய்கிறாள் (இத்தாமோர் குடிபோதையில் தனது எஜமானர் செய்த அனைத்தையும் அவர்களிடம் சொன்ன பிறகு), பரபாஸ் அவர்கள் மூவருக்கும் விஷம் கொடுக்கிறார். அவர் பிடிபட்டதும், அவர் " கசகசா மற்றும் குளிர்ந்த மாண்ட்ரேக் சாறு" குடிக்கின்றார், அதனால் அவர் இறப்பதில் இருந்து தப்பித்துக்கொள்கின்றார், பின்னர் எதிரி துருக்கியர்களுடன் சேர்ந்து நகரைக் கைப்பற்ற சதி செய்கிறார்.
கடைசியாக பரபாஸ் தனது புதிய கூட்டாளிகளால் ஆளுநராக நியமிக்கப்படும்போது, அவர் மீண்டும் கிறிஸ்தவர்களின் பக்கம் மாறுகிறார். துருக்கியர்களின் காலி அடிமைகள் மற்றும் வீரர்களுக்கு எதிராக சதி செய்த பின்னர், அவர்கள் அனைவரும் துப்பாக்கியால் கொல்லப்படுகின்றார்கள், பின்னர் அவர் துருக்கிய இளவரசருக்கும் அவரது ஆட்களையும் ஒரு மறைக்கப்பட்ட கொப்பரையில் உயிருடன் கொதிக்க வைக்க சதி செய்கின்றார். இருப்பினும், முக்கிய தருணத்தில், முன்னாள் கவர்னர் சதி செய்து அவரது சொந்த வலையில் விழ வைக்கிறார். கிறிஸ்தவ கவர்னர் நஷ்ட ஈடு கிடைக்கும் வரை துருக்கிய இளவரசரை பிணைக் கைதியாக வைத்திருப்பதாக நாடகம் முடிகிறது. பராபாஸ் எரிந்துகொண்டிருக்கும்போது அவர்களை சபிக்கிறார்.
யூத மதத்தை மையமாகக் கொண்ட போதிலும், நாடகம் பொதுவாக மத ஒழுக்கத்தின் மீதான சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது. மால்டாவின் கிறிஸ்தவ ஆளுநரான ஃபெர்னேஸ், முதலில் தீவின் யூதர்களின் அனைத்து சொத்துக்களிலும் பாதியை துருக்கி சுல்தானுக்குக் காணிக்கையாகக் கைப்பற்றி தண்டிக்கிறார். இரண்டாவதாக, துருக்கியர்களுடனான தனது கூட்டணியை முறித்துக் கொள்ளவும், ஸ்பெயினுடன் கூட்டுச் சேரவும் அட்மிரல் டெல் போஸ்கோவை ஃபெர்னேஸ் அனுமதிக்கிறார். மூன்றாவதாக, நாடகத்தின் முடிவில், துருக்கியர்களை சிக்க வைத்து படுகொலை செய்வதற்கான பரபாஸின் திட்டத்தை ஃபெர்னேஸ் உற்சாகமாக ஒப்புக்கொள்கிறார், ஆனால் பின்னர் அவரை மரணத்திற்கு அனுப்பும் பொறியைத் தூண்டி பரபாஸைக் காட்டிக் கொடுக்கிறார். இதேபோல், பராபாஸால் வாங்கப்பட்ட முஸ்லீம் அடிமையான இத்தாமோர், தனது எஜமானரை வேசியான பெல்லாமிரா மற்றும் பிலியா-போர்சா திருடனிடம் காட்டிக்கொடுத்து, அவரை பரபாஸ் தனது வாரிசாக ஆக்கிய போதிலும், அவரை மிரட்டுகிறார். ஆகவே, கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் நம்பிக்கைகளின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்படுவதைக் காணமுடிகிறது - உண்மையில் மச்சியாவேலின் முன்னுரை.
மேற்கோள்கள்
ஆங்கில நாடகங்கள்
|
594153
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
மஞ்சள் நிறப் பூங்கொத்தி
|
Articles with 'species' microformats
மஞ்சள் நிறப் பூங்கொத்தி (Yellow-sided flowerpecker)Dicaeum aureolimbatum)(டைகேயம் ஆரியோலிம்பாட்டம்) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி மற்றும் அதனை ஒட்டிய தீவுகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.
இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
படங்கள்
மேற்கோள்கள்
பூங்கொத்தி
|
594158
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
சாகுரா மாலிக்கு
|
சாகுரா மாலிக்கு (Sahura Mallick) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த இவர் 1974, 1980 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் ஒரிசா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகுரா மாலிக்கு 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் தனது 85 வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
இந்திய அரசியல்வாதிகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
2019 இறப்புகள்
ஒடிசா நபர்கள்
|
594185
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF
|
ஐந்து கண்கள் கூட்டணி
|
ஐந்து கண்கள் (Five Eyes அல்லது FVEY) என்பது ஆத்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஓர் உளவுக் கூட்டணியாகும். இந்த நாடுகள் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்திற்கு தரப்பினர்களாக அமைந்துள்ளன. இந்த ஒப்பந்தமானது உளவுத் தகவல்களில் கூட்டு ஒத்துழைப்புக்காக ஏற்படுத்தப்பட்டதாகும். அலுவல்பூர்வமற்ற வகையில் ஐந்து கண்கள் என்பது இந்த நாடுகளின் உளவு அமைப்புகளின் குழுவை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
உளவு அமைப்புகள்
|
594201
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D
|
ஜான் ஹார்ட்லி துராண்ட்
|
ஜான் ஹார்ட்லி துராண்ட் (John Hartley Durrant, 10 சனவரி 1863–18 சனவரி 1928) என்பவர் ஓர் ஆங்கிலேயப் பூச்சியியலாளர் ஆவார். இவர் செதிலிறக்கையினங்களில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்டவர் ஆவார். இவர் அரச பூச்சியியல் சங்கத்தின் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார்.
துராண்ட் இங்கிலாந்தில் இட்ச்சின் என்ற இடத்தில் 1863 இல் பிறந்தார். இவர் உயிரியல் பெயரிடல் முறைமையில் ஆளுமை செலுத்தினார். வால்சிங்கம் பிரபு தாமசு டி கிரேயின் செயலாளராகப் பணியாற்றி, அவரது சேகரிப்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்தார். இவை இலண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு விடப்பட்டபோது, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க வால்சிங்கம் துராண்டிற்கு நிதி வழங்கினார். துராண்ட் லயனல் வால்ட்டர் ரோத்சுசைல்டுடன் இணைந்து, பிரித்தானியப் பறவையியல் வல்லுநர்கள் ஒன்றியத்தின் செதிலிறக்கையினங்கள், தெற்கு டச்சு நியூ கினியில் உள்ள பனி மலைகளில் வோலசுத்தன் பயணங்கள் பற்றிய பல அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இவரது சேகரிப்புகள் இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள ஹோப் துறை ஆகியவற்றிற்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளன.
உசாத்துணைகள்
Anonym (1928). [Durrant, J. H.] Entomologist's Monthly Magazine. (3) 64 67.
Busck, A. (1928). [Durrant, J. H.] Proceedings of the Entomological Society of Washington. 30 40.
Collin, J. E. (1929). [Durrant, J. H.] Proceedings of the Entomological Society of London.
Tams, W. H. T. (1928). [Durrant, J. H.] Nature. 121 214-215.
1863 பிறப்புகள்
1928 இறப்புகள்
பிரித்தானியப் பூச்சியியலாளர்கள்
|
594202
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
|
நார்மன் கட்லர்
|
நார்மன் கட்லர் (Norman cutler) (பிறப்பு : 10 மே 1949) அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் ஆவார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் செவ்வியல்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் இடைக்காலத் தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் ஆய்வுப் பணிகளைச் செய்தவர். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஏ.கே.ராமானுஜத்திடம் தமிழ் கற்றவர். 24 பிப்ரவரி 2002 அன்று தனது 52 வயதில் காலமானார்.
இவரைக் கௌரவிக்கும் வகையில் சிகாகோ பல்கலைக்கழகம் 2007இல் நடத்திய "முதலாம் தெற்காசிய இலக்கியம் பற்றிய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நார்மன் கட்லர் மாநாட்டிற்கு" (The first biennial Norman cutler conference on South Asia literature) இவர் பெயரைச் சூட்டியது.
மேற்கோள்கள்
1949 பிறப்புகள்
|
594206
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
திருவரங்கத் திருவாயிரம்
|
திருவரங்கத் திருவாயிரம் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்ட ஒரு நூல். திருவரங்கம், காவிரி கொள்ளிடத்திற்கு இடையிலான வைணவத் திருத்தலம். இங்கு கோயில் கொண்ட இறைவனைப் பற்றிப் பாடப்பெற்ற நூல் இதுவாகும்.
தலங்கள் பற்றியும் கடவுளர் பற்றியும் ஆயிரம் என்னும் பெயரிலான நூல்கள் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் பல இயற்றப்பட்டுள்ளன. தலங்கள் பற்றிச் சுவாமிகள் பாடியனவாகத் தில்லைத் திருவாயிரம், பழனித் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம் ஆகியன கிடைக்கின்றன. கடவுளர் பற்றி இவர் பாடியனவாகக் கணபதி ஆயிரம், சக்தி ஆயிரம், முருகன் ஆயிரம், சிவபெருமான் ஆயிரம், திருமால் ஆயிரம், ஞாயிறு ஆயிரம் ஆகியன கிடைக்கின்றன. தலஞ்சார் ஆயிரமாக திருவரங்கத் திருவாயிரம் அமைந்துள்ளது.
சிற்றிலக்கிய வகைகளும் யாப்பு வகைகளும் கலந்து அமைந்த தொகுப்பாகிய ஆயிரம் என்னும் இலக்கிய வகையாக இதனைக் கருதலாம்.
வெண்பாவந்தாதி, சீரங்க நாராயண சதகம், பசுக்காப்பு மாலை, காட்சிப்பத்து போன்ற இலக்கிய வகைமைகள் பல இந்நூலில் உள்ளன.
மேற்கோள்
நூல்கள்
புலவர்கள்
வைணவ நூல்கள்
|
594208
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE
|
இராதாராணி பாண்டா
|
இராதாராணி பாண்டா (Radharani Panda)ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2014 முதல் 2019 வரை ஒடிசா சட்ட மன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியபொதுத் தேர்தலில் ஒடிசாவின் பிரஜாராஜ் நகர் சடமன்றத் தொகுதியில் பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.
மேற்கோள்கள்
இந்திய அரசியல்வாதிகள்
|
594234
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88
|
காலிஸ்தான் புலிப் படை
|
காலிஸ்தான் புலிப்படை ( Khalistan Tiger Force ) என்பது காலிஸ்தான் இயக்கத்தின் ஒரு தீவிரவாத அமைப்பாகும் . இந்த இயக்கம் பிப்ரவரி 2023 இல், இந்திய அரசாங்கத்தால் பயங்கரவாத இயக்கமாக அறிவிகபட்டது
மே 2023 இல், இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தேடப்படும் இரண்டு நபர்களை கைது செய்தது, அவர்கள் கனடாவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் புலிப்படையின் "தனிப்பட்ட பயங்கரவாதி" என அர்ஷ்தீப் சிங்கின் நெருங்கிய உதவியாளர்களாக இருந்தனர். ஜூன் 2023 இல், காலிஸ்தான் புலிப்படை செயல்பாட்டாளர்களின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படும் ககன்தீப் சிங்கை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. ககன்தீப் சிங் முன்பு ஜூலை 2021 இல் கைது செய்யப்பட்டார்
சான்றுகள்
சீக்கிய அரசியல்
காலிஸ்தான் இயக்கம்
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புகள்
சீக்கியத் தீவிரவாதம்
|
594246
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE
|
நிதோ பவித்ரா
|
நிதோ பவித்ரா (Nido Pavitra) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் காங்கரசுக் கட்சியைச் சார்ந்தவர். அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறைக்கான நாடாளுமன்றச் செயலாளராகவும் பணியாற்றினார்.இவரது மகன் நிதோ தனியம் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்.
மேற்கோள்கள்
இந்திய அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
|
594249
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81.%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
|
சு. நடராசன்
|
சு. நடராஜன் (S. Natarajan)(பிறப்பு 10 மே, 1924) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சேர்ந்த இவர், 1971, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு மூன்றுமுறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேற்கோள்கள்
திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள்
தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்
5 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
6 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
7 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
|
594257
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
|
ஆனந்தன் குணசேகரன்
|
ஆனந்தன் குணசேகரன் (Anandan Gunasekaran) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். 1967 ஆண்டு மார்ச் 18 ஆம் நாளன்று இவர் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரத்தில் பிறந்தார். பாரா-தடகள ஓட்டப்பந்தய வீரரான இவர் டி64 பிரிவில் ஆடவர் 100மீ, 200மீ மற்றும் 400மீ போட்டிகளில் பங்கேற்கிறார். பல பன்னாட்டு போட்டிகளில் இவர் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடி வருகிறார். 2018 ஆம் ஆண்டு அக்டோபர மாதம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார். சீனாவின் ஊகான் நகரத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவ உலக விளையாட்டு போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற நாட்டின் முதல் தடகள வீரர் என்று ஆனந்தன் குணசேகரன் அறியப்படுகிறார்.
மேஏற்கோள்கள்
வாழும் நபர்கள்
1987 பிறப்புகள்
இந்திய விளையாட்டு வீரர்கள்
தமிழக விளையாட்டு வீரர்கள்
|
594259
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
நுண்விலங்குகள்
|
நுண்விலங்குகள் (Animalcule) என்பது இலத்தின் மொழியில் சிறிய விலங்குகள் என்று பொருள். பாக்டீரியா, புரோட்டோசோவான்கள் மற்றும் மிகச் சிறிய விலங்குகளை உள்ளடக்கிய நுண்ணிய உயிரினங்களுக்கான தொன்மையான சொல் இதுவாகும். 17ஆம் நூற்றாண்டின் இடச்சு அறிவியலாளர் ஆன்டன் வான் லீவன்ஹூக் மழைநீரில் காணப்பட்ட நுண்ணுயிரிகளைக் குறிக்க இந்த வார்த்தையினைப் பயன்படுத்தினார்.
நன்கு அறியப்பட்ட நுண்விலங்குகளின் வகைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
ஆக்டினோப்ரிசு மற்றும் பிற கீலியோசோவா, சூரிய நுண்விலங்குகள் என அழைக்கப்படுகின்றன.
அமீபாப்ரோடியசு புரோட்டியசு நுண்விலங்குகள் என்று அழைக்கப்படுகிறது.
நோக்டிலூகா சிண்டிலன்சு, பொதுவாக கடல் பிரகாசங்கள் என்று அழைக்கப்படுகிறது.
பாராமீசியம், செருப்பு நுண்விலங்கு என்று அழைக்கப்படுகிறது.
ரோட்டிபர்கள், சக்கர நுண்விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன.
இசுடென்டர், ஊதுகொம்பு நுண்விலங்கு என்று அழைக்கப்படுகிறது.
வோர்டிசெல்லா மற்றும் பிற பெரிட்ரிச்கள், மணி நுண்விலங்குகள் என அழைக்கப்படுகின்றன.
மார்கஸ் வர்ரோவின் ரேரம் ரஸ்டிகாரம் லிப்ரி ட்ரெஸ்ஸிலிருந்து இந்த மொழிபெயர்ப்பின் அடையாளமாக, கி.மு. 30க்கு முன்பே இந்த கருத்து முன்மொழியப்பட்டதாகத் தெரிகிறது.மேலே கூறப்பட்ட காரணங்களாலும், கண்ணுக்குப் புலப்படாத சில நுண்ணிய விலங்குகள் சதுப்பு நிலங்கள் காணப்பட்டால் அங்கு இனப்பெருக்கம் செய்து, காற்றினால் பரவி, வாய் மற்றும் மூக்கு வழியாக உடலின் உட்புறத்தை அடைவதை கவனிக்கவேண்டும், ஏனெனில், இதனால் உண்டாகும் நோய்களிலிருந்து விடுபடுவது கடினமாக இருக்கும்.17ஆம் நூற்றாண்டில் ராயல் சொசைட்டியின் முதல் செயலாளரும், தத்துவ பரிவர்த்தனைகளின் நிறுவன ஆசிரியருமான ஹென்றி ஓல்டன்பர்க் கண்டுபிடித்த நுண்ணுயிரிகளை விவரிக்க வான் லீவென்ஹோக் பயன்படுத்திய இடச்சு வார்த்தைகளை மொழிபெயர்க்கவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
கில்பர்ட் மற்றும் சல்லிவனின் தி பைரேட்ஸ் ஆப் பென்சான்சில், இந்த சொல் தலைமை தளபதி சாங் என்ற பெயரடை வடிவத்தில் தோன்றுகிறது. இதில் தளபதி இசுடான்லி 'எனக்கு நுண்விலங்குகளின் அறிவியல் பெயர்கள் தெரியும்’ எனப் பாடுகிறார்.
இந்தச் சொல் குறைந்தபட்சம் 1879ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து தொடர்ந்து இருந்து வருகின்றது.
மேற்கோள்கள்
மேலும் காண்க
வான் லீவென்ஹோக்கின் நுண்ணுயிர் வாழ்வின் நுண்ணிய கண்டுபிடிப்பு (நுண்ணுயிர்கள்)
விலங்கியல்
இலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
|
594266
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE.%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81
|
மா. சின்னு
|
மா.சின்னு (ma.chinnu ) என்பவா் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சோ்ந்த தமிழறிஞா் ஆவாா். 1932 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று இவர் தமிழ்நாட்டிலுள்ள அரியலூர் மாவட்டம் தா.பழூர் என்ற கிராமத்தில் மாரிமுத்து அலமேலு இணையருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர் உயர்கல்வியை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் படித்து முடித்தார். புதுக்கோட்டை குலபதி பாலையா நடுநிலைப் பள்ளியில் பணியாற்றினார். தனது 91 வயதிலும் இவர் புத்தகங்கள் வாசித்தல், எழுதுதல், இலக்கியம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
மேற்கோள்கள்
1932 பிறப்புகள்
வாழும் நபர்கள்
தமிழறிஞர்கள்
நாமக்கல் மாவட்ட நபர்கள்
|
594272
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
கழுகுமலைப் படைவீட்டுப் பதிகம்
|
கழுகுமலைப் படைவீட்டுப் பதிகம் தமிழ்ப் பெரியார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்டது. தென் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற குடைவரைக் கோயில் அமைந்துள்ள கழுகுமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் மீது பாடப்பட்ட இத்திருப்பதிகம் 12 பாடல்களை உடையது. இத்தலத்திற்கு இவரே திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.
மேற்கோள்கள்
சமய நூல்கள் புலவர்
|
594278
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF
|
பால்யகாலசகி
|
பால்யகாலசகி (Palyakalasaki) என்பது மலையாள எழுத்தாளரான முகம்மது பஷீர் எழுதிய புதினம் ஆகும். இதனை மலையாளத்திலிருந்து தமிழில் குளச்சல் யூசுப் என்பவர் மொழிப் பெயர்த்துள்ளார். தோல்வியடைந்த காதலின் கதையான இதில், பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும், இசுலாமியப் பின்புலமும் உள்ளதாக அமைந்துள்ளது.
பால்ய காலத்தில் சிநேகம், பிரேமம், காதல் போன்ற உணர்வுகள் ஓரு குறிப்பிட்ட நபர் மீது ஏற்படுகிறது. ஒளிந்துகொண்டிருக்கும் அக்காதலை எண்ணி அசைபோடும்போது, வாழ்வின் உன்னதத்தை, மகத்துவத்தை, மகிழ்ச்சியை, ஏமாற்றத்தை, பெருவலியை தருவது உளவியல். மஜீது - சுகறா இவ்விருவர்களின் பால்யகால காதல் வாழ்க்கையும், காதல் பிரிவும் இக்கதையில் இடம் பெறுகிறது.
கதைச் சுருக்கம்
மஜீது – சுகறா – இவ்விருவர்களின் பால்யகால சேட்டைகள், பள்ளி வாழ்க்கை, தோட்ட வேலைகள், செடி நடுதல், மரமேறி மாம்பழம் பறித்தல் இவற்றிலிருந்து தொடங்குகிறது இவர்களின் கதை. பணக்கார வீட்டுப் பையனான மஜீதுக்கும் ஏழை வெற்றிலை வியாபாரியின் மகள் சுகறாவிற்குமான பால்யகால நட்பு, காதலாக இளம்பருவத்தில் மாறுகிறது. இந்த சமயத்தில் சுகறாவின் தந்தை இறந்துப்போகிறார். சுகறாவின் கனவுகள் சிதறடிக்கப்பட்டன. மஜீது தந்தை மீது உள்ள கோபத்தில் தேசாந்திரியாக திரிகிறான். பல வருடங்கள் கழித்து வீட்டிற்கு வரும் மஜீதுக்கு பேரதிர்ச்சியாக, பணக்கார குடும்பம் கடன் காரணமாக ஏழ்மையானதை காண்கிறன். திருமண வயதை கடந்த இரு தங்கைகள், உடல்நிலை சரியில்லாத தந்தை, இதை விட கொடுமை தான் காதலித்த சுகறாவுக்கு திருமணம் ஆகிவிடுகிறது.
வாழ்க்கை சரிவர அமையாததால் வாழ்ந்த வீட்டிற்கு திரும்ப வந்துவிடுகிறான் சுகறா.
சுகாறாவை திருமணம் செய்ய மஜீத்துக்கு ஆசை. ஆனால் குடும்ப சூழ்நிலை, இரு தங்கைகள் திருமணம், தந்தை உடல்நிலை, இது அனைத்தும் சரியான பிறகு திருமணம் செய்துகொள் என மஜீது தாய் கூறிவிடுகிறார். எனவே வெளியூருக்கு வேலைக்கு செல்கிறான் மஜீது. புறப்படும் போது சுகறாவிடம் தன் வீட்டுப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டுச் செல்கிறான். பேருந்தில் ஏறும் போது சுகறா மஜீதிடம் ஏதோ சொல்ல முயற்சி செய்கிறாள் அதற்குள் பேருந்து புறப்பட்டு விட்டது .
வெளியூரில் வேலைசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மஜீது தனது வலது காலை இழக்கிறான். அதனால் அவனது வேலை பறிபோனது . இறுதியாக ஒற்றைக் காலோடு ஒரு உணவு விடுதியில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறான். ஒருநாள் காலை வேளையில் வீட்டில் இருந்து கடிதம் வருகிறது. அக்கடிதத்தில் சுகறா இறந்துவிட்டதாக தகவல் வகிறது. அக்கடிதத்தை வாசிக்கும் போது உலகமே அமைதியாக மாறிவிட்டது போல இருந்தது. தனது வாழ்க்கையே முடிந்து விட்டது போல எண்ணுகிறான். பின்பு தனது குடும்பம் தன்னை நம்பி உள்ளதை உணர்ந்து. தன் வாழ்க்கையே தொடருகிறான் மஜீது. "சுகறா கடைசியாக சொல்ல நினைத்தது எதுவாக இருக்கும்?" என்ற மஜீதின் எண்ணத்தோடு கதை முடிகிறது.
திரைப்படங்கள்
இந்தப் புதினத்தினை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்கள்
பால்யகாலசகி (1967) பிரேம் நசீர் மஜீத்தாகவும் ஷீலா சுகாறாவாகவும் நடிக்க, ஜெ. சசிகுமார் இயக்குனர்.
பால்யகாலசகி (2014) மம்மூட்டி மஜீத்தாகவும் இஷா தல்வார் சுகாறாவாகவும் நடிக்க, புரமீத் பையானூர் இயக்கியத் திரைப்படம்.
மேற்கோள்கள்
மலையாளப் புதினங்கள்
|
594282
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
கடாபி அரங்கம்
|
கடாபி அரங்கம் ( ) முன்பு லாகூர் அரங்கம் என அழைக்கப்பட்ட இந்த அரங்கம்பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூரில் உள்ள ஒரு துடுப்பாட்ட மைதானமாகும். இது பாகித்தான் துடுப்பாட்ட வாரியத்திற்குச் சொந்தமானது. 27,000 கொள்ளளவு கொண்ட இது பாகிஸ்தானின் நான்காவது பெரிய துடுப்பாட்ட மைதானமாகும் . இது பாகித்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸின் சொந்த மைதானமாகும். கடாபி அரங்கம் பாக்கித்தானில் முதன்முதலில் நவீன ஒளிவிளக்குகளுடன் அதன் சொந்த அவசரதேவை மின் பிறப்பாக்கிகளுடன் பொருத்தப்பட்டது. பாகித்தான் துடுப்பாட்ட வாரியத்தின் தலைமையகம் கடாபி மைதானத்தில் அமைந்துள்ளது, இதனால் இது பாகிஸ்தான் தேசிய துடுப்பாட்ட அணியின் தாயகமாக விளங்குகிறது.
இது உருசியாவில் பிறந்த பாகித்தானிய கட்டிடக் கலைஞரும் கட்டடப் பொறியியலாளருமான நசுரெதின் முராத்-கான் என்பவரால் வடிவமைக்கப்பட்டு மியான் அப்துல் காலிக் நிறுவனத்தால் 1959 இல் கட்டப்பட்டது. 1996 துடுப்பாட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்தியபோது இந்த மைதானம் புதுப்பிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்கு மேலதிகமாக, கடாபி அரங்கம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் பல போட்டிகளையும் நடத்தியது. முதலாவது 2017 பதிப்பின் இறுதிப் போட்டியாகும். மார்ச் 2022 இல், பிசிபி நிதி காரணங்களுக்காக கடாபி அரங்கத்தின் பெயரை புதிய அனுசரணையாளரின் பெயருக்கு மாற்றுவதற்கான செயல்முறையைத் தொடங்கியது.
போட்டித் தரவுகள்
தேர்வுத்துடுப்பாட்டம்
அதிகபட்ச அணி ஓட்டங்கள் : 699/5, 1989 இல் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானால்
குறைந்தபட்ச அணி ஓட்டங்கள்: 73, 2002 இல் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து.
அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள் : 2002 இல் நியூசிலாந்துக்கு எதிராக இன்சமாம்-உல்-ஹக்கால் 329.
ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
அதிகபட்ச அணி மொத்தம் : 375/3, சிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான், 26 மே 2015.
குறைந்தபட்ச அணி ஓட்டங்கள் : 75, இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான், 22 ஜனவரி 2009.
அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள் : 139*, இந்தியாவுக்கு எதிராக இஜாஸ் அகமது, 2 அக்டோபர் 1997.
பன்னாட்டு இருபது20
அதிகபட்ச அணி ஓட்டங்கள் : 209/3, பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து, 2 அக்டோபர் 2022.
குறைந்தபட்ச அணி ஓட்டங்கள் : 101, இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான், 5 அக்டோபர் 2019.
அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள் : 104*, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முகமது ரிஸ்வான், 11 பிப்ரவரி 2021.
துடுப்பாட்ட உலகக் கோப்பை
இந்த மைதானத்தில் 1987 துடுப்பாட்ட உலகக் கோப்பை மற்றும் 1996 துடுப்பாட்ட உலகக் கோப்பையின் போது ஆறு ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 1996 இறுதிப் போட்டியும் அடங்கும்.
மேற்கோள்கள்
பாக்கித்தான் விளையாட்டரங்குகள்
Coordinates on Wikidata
|
594287
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
|
காட்டு மல்லி
|
காட்டு மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum abyssinicum ; ஆங்கிலம்: Forest jasmine) என்பது மல்லிப் பேரினத்தைச் சார்ந்த, இருநூற்றிற்கும் மேற்பட்ட மல்லிகை இனங்களில் ஒன்றாகும். இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி, முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இத்தாவரம் யாசுமினம் அபிசினியம் என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வினத்தாவரங்கள், மலைப்பகுதியின் உயர்மட்டத்தில் வளரும் கொடியினத் தாவர வகையாகும். இதன் தண்டுப்பகுதி 13 செ. மீ. வரை வளரும் இயல்புடையது. தண்டில் இலைகள் பச்சை நிறத்திலும், எதிர் இலையமைவு வகையில் இருக்கின்றன. பூக்களின் பெரும்பகுதி வெண்நிறமாகவும், வெளிப்புறத்தே உப்பிய நிலையிலும் இளஞ்சிவப்பு நிறம் விரவியும் காணப்படுகின்றன.
பேரினச்சொல்லின் தோற்றம்
அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும். பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இவற்றையும் காண்க
மல்லிகை இனங்களின் பட்டியல்
சங்ககால மலர்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
உலர் தாவரப் படங்கள் (Missouri Botanical Garden, type of Jasminum abyssinicum)
மல்லிப் பேரினம்
குறுகிய விளக்கமுடைய கட்டுரை
ஆப்பிரிக்க மல்லி இனங்கள்
|
594294
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF
|
பேபி தேவி
|
பேபி தேவி (Baby Devi) இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பேபி மஹ்தோ என்றும் அழைக்கப்படுகிறார். சூலை 4, 2023 முதல் இரண்டாவது ஹேமந்த் சோரன் அமைச்சகத்தில் மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக பணியாற்றுகிறார். பேபி தேவிக்கு முதலில் கல்வித் துறை வழங்கப்பட்டது, ஆனால் சில சிக்கல்களால் திரும்பப் பெறப்பட்டது. இவர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் உறுப்பினர். தேவி முன்னாள் அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோவின் மனைவி ஆவார்.
அரசியல்
2023-ல் தும்ரி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், சார்க்கண்ட் சட்டமன்ற உறுப்பினராக 17000 வாக்குகள் பெற்று அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதிநிதியான யசோதா தேவியைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
தனிப்பட்ட வாழ்க்கை
பேபி தேவி ஜகர்நாத் மஹ்தோவை மணந்தார்.
மேற்கோள்கள்
ஜார்க்கண்டின் அரசியல்
வாழும் நபர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
|
594306
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
மல்லிகை இனங்களின் பட்டியல்
|
மல்லிப் பேரினம் என்ற தாவரவியல் வகைப்பாட்டின்படியும், 2022 ஆம் ஆண்டு ஆய்வு முடிவுகளின் படியும் கீழுள்ள இனங்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட 202 பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன இப்பேரினம், பன்னாட்டு பூக்கும் தாவர மரபுநெறிமுறை குழுமத்தின் (APG IV) நான்காவது பதிப்பின் படி, முல்லைக் குடும்பத்திலுள்ள 29 பேரினங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
இனங்கள்
காட்டு மல்லி = Jasminum abyssinicum
சாவக மல்லி = Jasminum acuminatum,
சிறுசக்கர மல்லி = Jasminum adenophyllum,
அகத்திய மல்லி = Jasminum agastyamalayanum Sabeena,Asmitha,Mulani, E.S.S.Kumar&Sibin,
வியட்நாம் மல்லி = Jasminum alongense Gagnep.,
= Jasminum amabile H.Hara,
சுமாத்திரா மல்லி = Jasminum ambiguum Blume,
சுலாவெசி மல்லி = Jasminum amoenum Blume,
அந்தமான் மல்லி = Jasminum andamanicumN.P.Balakr.&N.G.Nair,
அங்கோலா மல்லி = Jasminum angolense Baker,
தென்னாப்பிரிக்க மல்லி = Jasminum angulare Vahl,
Jasminum angustifolium (L.)Willd.
Jasminum annamense Wernham
Jasminum anodontum Gagnep.
Jasminum aphanodon Baker
Jasminum apoense Elmer
Jasminum arborescens Roxb.
Jasminum artense Montrouz.
Jasminum attenuatum Roxb.exG.Don
Jasminum auriculatum Vahl
Jasminum azoricum L.
குள்ள மல்லி = Jasminum bakeri ScottElliot
Jasminum batanensis Kiew
Jasminum beesianum Forrest&Diels
Jasminum betchei F.Muell.
Jasminum bhumibolianum Chalermglin
Jasminum brachyscyphum Baker
Jasminum breviflorum Harv.
Jasminum brevilobum DC.
Jasminum brevipetiolatum Duthie
Jasminum calcareum F.Muell.
Jasminum calcicola Kerr
Jasminum calophyllum Wall.exG.Don
Jasminum campyloneurum Gilg&G.Schellenb.
Jasminum cardiomorphum P.S.Green
Jasminum carinatum Blume
Jasminum carissoides Kerr
Jasminum caudatum Wall.exLindl.
Jasminum celebicum Merr.
Jasminum chiae KaiZhang&D.X.Zhang
Jasminum cinnamomifolium Kobuski
Jasminum coarctatum Roxb.
Jasminum coffeinum Hand.-Mazz.
Jasminum cordatum Ridl.
Jasminum cordifolium Wall.exG.Don
Jasminum craibianum Kerr
Jasminum crassifolium Blume
Jasminum cumingii Merr.
Jasminum curtisii King&Gamble
Jasminum cuspidatum Rottler
Jasminum dallachyi F.Muell.
Jasminum dasyphyllum Gilg&G.Schellenb.
Jasminum decipiens P.S.Green
Jasminum decussatum Wall.exG.Don
Jasminum degeneri Kobuski
= Jasminum dichotomum Vahl
Jasminum didymum G.Forst.
Jasminum dinklagei Gilg&G.Schellenb.
Jasminum dispermum Wall.
Jasminum dolichopetalum Merr.&Rolfe
Jasminum domatiigerum Lingelsh.
Jasminum duclouxii (H.Lév.)Rehder
Jasminum eberhardtii Gagnep.
Jasminum elatum PancherexGuillaumin
Jasminum elegans Knobl.
Jasminum elongatum (P.J.Bergius)Willd.
Jasminum extensum Wall.exG.Don
Jasminum flavovirens Gilg&G.Schellenb.
Jasminum flexile Vahl
Jasminum fluminense Vell.
Jasminum foveatum R.H.Miao
Jasminum fuchsiifolium Gagnep.
Jasminum gilgianum K.Schum.
Jasminum glaucum (L.f.)Aiton
ஆசிய பெருமல்லி = Jasminum grandiflorum L.
Jasminum greenii Soosairaj&P.Raja
Jasminum greveanum DanguyexH.Perrier
Jasminum griffithii C.B.Clarke
Jasminum guangxiense B.M.Miao
Jasminum harmandianum Gagnep.
Jasminum hasseltianum Blume
Jasminum honghoense K.Zhang&D.X.Zhang
Jasminum hongshuihoense Z.P.JienexB.M.Miao
Jasminum insigne Blume
Jasminum insularum Kerr
Jasminum ixoroides Elmer
Jasminum jenniae W.K.Harris&G.Holmes
Jasminum kajewskii C.T.White
Jasminum kaulbackii P.S.Green
Jasminum kedahense (King&Gamble)Ridl.
Jasminum kerstingii Gilg&G.Schellenb.
Jasminum kitchingii Baker
Jasminum kontumense B.H.Quang
Jasminum kostermansii Kiew
Jasminum kriegeri Guillaumin
Jasminum kwangense Liben
அசாமிய தேநீர் மல்லி = Jasminum lanceolaria Roxb.
Jasminum lasiosepalum Gilg&G.Schellenb.
Jasminum latipetalum C.B.Clarke
Jasminum laurifolium Roxb.exHornem.
Jasminum laxiflorum Gagnep.
Jasminum ledangense Kiew
Jasminum listeri KingexGage
Jasminum longipetalum King&Gamble
Jasminum longitubum L.C.ChiaexB.M.Miao
Jasminum mackeeorum P.S.Green
Jasminum macrocarpum Merr.
Jasminum magnificum Lingelsh.
Jasminum maingayi C.B.Clarke
Jasminum malabaricum Wight
Jasminum marianum DC.
Jasminum melastomifolium Ridl.
யாசுமினம் மெசுனி = Jasminum mesnyi Hance
Jasminum meyeri-johannis Engl.
Jasminum microcalyx Hance
Jasminum molle R.Br.
Jasminum mossamedense Hiern
Jasminum mouilaense Breteler
Jasminum multiflorum (Burm.f.)Andrews
Jasminum multinervosum Kiew
Jasminum multipartitum Hochst.
Jasminum multipetalum Merr.
Jasminum narcissiodorum Gilg&G.Schellenb.
Jasminum nardydorum Breteler
Jasminum neocaledonicum Schltr.
நேபாள மல்லி = Jasminum nepalense Spreng.
அசாமிய காட்டு மல்லி = Jasminum nervosum Lour.
Jasminum newtonii Gilg&G.Schellenb.
Jasminum niloticum Gilg
Jasminum nintooides Rehder
Jasminum nobile C.B.Clarke
Jasminum noldeanum Knobl.
Jasminum noumeense Schltr.
Jasminum nudiflorum Lindl.
Jasminum nummulariifolium Baker
Jasminum obtusifolium Baker
Jasminum octocuspe Baker
காக்கேசியா மல்லி = Jasminum officinale L.
Jasminum oliganthum Quisumb.&Merr.
Jasminum oreophilum Kiew
Jasminum papuasicum Lingelsh.
Jasminum parceflorum KaiZhang&D.X.Zhang
Jasminum pauciflorum Benth.
Jasminum paucinervium Ridl.
Jasminum pedunculatum Gagnep.
Jasminum pellucidum AiryShaw
Jasminum peninsulare Kiew
Jasminum pentaneurum Hand.-Mazz.
Jasminum pericallianthum Kobuski
Jasminum perissanthum P.S.Green
Jasminum pierreanum Gagnep.
Jasminum pipolyi W.N.Takeuchi
தென்நடு சீன மல்லி = Jasminum polyanthum Franch.
Jasminum populifolium Blume
Jasminum prainii H.Lév.
Jasminum preussii Engl.&Knobl.
Jasminum promunturianum Däniker
Jasminum pseudopinnatum Merr.&Rolfe
Jasminum pteropodum H.Perrier
Jasminum puberulum Baker
Jasminum punctulatum Chiov.
Jasminum quinatum Schinz
Jasminum rambayense Kuntze
Jasminum ranongense Kiew
Jasminum rehderianum Kobuski
Jasminum ritchiei C.B.Clarke
Jasminum rufohirtum Gagnep.
Jasminum rupestre Blume
அரபு மல்லி, குண்டு மல்லி, கிழக்கு இமாலய மல்லி = Jasminum sambac (L.)Aiton
Jasminum sarawacense King&Gamble
Jasminum scandens (Retz.)Vahl
Jasminum schimperi Vatke
Jasminum sessile A.C.Sm.
Jasminum shahii Kiew
Jasminum siamense Craib
Jasminum simplicifolium G.Forst.
யாசுமினம் சினென்சே = Jasminum sinense Hemsl.
Jasminum smilacifolium Griff.exC.B.Clarke
Jasminum spectabile Ridl.
Jasminum steenisii Kiew
Jasminum stellipilum Kerr
Jasminum stenolobum Rolfe
Jasminum × stephanenseÉ.Lemoine
Jasminum streptopus E.Mey.
Jasminum subglandulosum Kurz
Jasminum syringifolium Wall.exG.Don
Jasminum tetraquetrum A.Gray
Jasminum thomense Exell
Jasminum tomentosum Knobl.
Jasminum tortuosum Willd.
Jasminum trichotomum B.HeyneexRoth
Jasminum tubiflorum Roxb.
Jasminum turneri C.T.White
யாசுமினம் யூரோஃபில்லம் = Jasminum urophyllum Hemsl.
Jasminum verdickii DeWild.
Jasminum vidalii P.S.Green
Jasminum vietnamense B.H.Quang&JoongkuLee
Jasminum waitzianum Blume
Jasminum wengeri C.E.C.Fisch.
Jasminum wrayi King&Gamble
Jasminum yuanjiangense P.Y.Pai
Jasminum zippelianum Blume
காட்சியகம்
பூ வகைகள்
Jasminum azoricum
மேற்கோள்கள்
தாவர வகைப்பாட்டியல்
தாவரவியல் பட்டியல்கள்
|
594334
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
அல்கா மொஹந்தி
|
அல்கா மொஹந்தி ஒடிசா சட்டமன்ற உறுப்பினரும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் மேலவை உறுப்பினரும் சபாநாயகருமான கிஷோர் குமார் மொஹந்தியின் மனைவிஆவார். அல்கா மொஹந்தி பிரஜராஜ்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக பிஜு ஜனதா தளம் கட்சியின் சார்பில் நின்று வெற்றிபெற்றார்.
குறிப்புகள்
1967 பிறப்புகள்
வாழும் நபர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
|
594356
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2C%202023
|
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2023
|
ஆத்திரேலியாவின் ஆண்கள் துடுப்பாட்ட அணி 2023 செப்டம்பர், நவம்பர். திசம்பர் மாதங்களில் இந்தியாவில் மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும், ஐந்து பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடுகின்றது. ஒருநாள் போட்டித்தொடர்கள் இரு அணிகளினதும் 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளாக அமையும்.
அணிகள்
ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் மூன்றாவது பன்னாட்டு ஒருநாள் போட்டிக்கு இந்தியாவின் தலைவராகவும், துறைத்தலைவராகவும் முறையே பணியாற்றுவார்கள்
பஒநா தொடர்
1-ஆவது பஒநா
2-ஆவது பஒநா
3-ஆவது பஒநா
இ20ப தொடர்
1-ஆவது இ20ப
2-ஆவது இ20ப
3-ஆவது இ20ப
4-ஆவது இ20ப
5-ஆவது இ20ப
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Series home at ESPNcricinfo
2023 இல் விளையாட்டுகள்
ஆத்திரேலியாவில் துடுப்பாட்டம்
இந்தியாவில் துடுப்பாட்டம்
பன்னாட்டுத் துடுப்பாட்ட சுற்றுப் பயணங்கள்
|
594360
|
https://ta.wikipedia.org/wiki/2027%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
|
2027 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
|
2027 ஐசிசி ஆண்கள் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2027 ICC Men's Cricket World Cup) என்பது துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் 14-ஆவது பதிப்பாகும், இது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இத்தொடரை 2027 அக்டோபர் முதல் நவம்பர் வரை தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் பொறுப்பேற்று நடத்துகின்றன. இது தென்னாப்பிரிக்காவும் சிம்பாப்வேயும் இணைந்து நடத்தும் இரண்டாவது உலகக்கிண்ணப் போட்டியாகும், முன்னதாக 2003 பதிப்பை இருநாடுகளும் இணைந்து நடத்தின. நமீபியா முதல்தடவையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. இத்தொடரில் போட்டியிடும் அணிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்படும். அத்துடன் 2003 உலகக்கிண்ணத்தின்போது பயன்படுத்தப்பட்ட அதே வடிவமைப்பை இது கொண்டிருக்கும்.
தகுதி
ஐசிசி பன்னாட்டு ஒருநாள் தரவரிசையில் உள்ள முதல் எட்டு அணிகளுடன் தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே அணிகள் (இணை நடத்துநர்கள்) போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும், மீதமுள்ள நான்கு இடங்கள் 2026 இல் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ணத் தகுதிச் சுற்றில் தீர்மானிக்கப்படும். நமீபியா அதன் துடுப்பாட்ட வரலாற்றில் முதல் முறையாக போட்டியை இணைந்து நடத்தும் என்றாலும், அது முழு ஐசிசி உறுப்பினராக இல்லாததால் அதற்கு ஒரு இடம் உத்தரவாதம் அளிக்கப்பட மாட்டாது, இதன் விளைவாக நமீபியா தகுதி-காண் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும்.
வடிவமைப்பு
போட்டித்தொடர் ஏழு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களைப் பயன்படுத்தும், ஒரு குழுவில் உள்ள ஒவ்வொரு அணியும் ஒரே குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை விளையாடும். ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று அணிகள் சூப்பர் ஆறு நிலைக்கு முன்னேறும், அதைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இடம்பெறும். இந்த வடிவம் முன்பு 2003 பதிப்பில் பயன்படுத்தப்பட்டது.
குழு நிலைப் போட்டிகள்
குழு அ
முதல் மூன்று அணிகள் சூப்பர் ஆறுகளுக்குத் தகுதி பெறும். சுப்பர் ஆறிற்கு முன்னேற்றம்
குழு ஆ
முதல் மூன்று அணிகள் சூப்பர் ஆறுகளுக்குத் தகுதி பெறும். சுப்பர் ஆறிற்கு முன்னேற்றம்
சூப்பர் ஆறு
சூப்பர் ஆறு கட்டத்திற்கு தகுதி பெறும் அணிகள் மற்றக் குழுவில் உள்ள அணிகளுக்கு எதிராக மட்டுமே விளையாடும்; அதே குழுவிலிருந்து மற்ற அணிகளுக்கு எதிரான முடிவுகள் இந்த நிலைக்குக் கொண்டு செல்லப்படும்.
தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஒற்றை வெளியேற்ற நிலை
அரையிறுதிகள்
இறுதி
மேற்கோள்கள்
துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
தென்னாப்பிரிக்காவில் துடுப்பாட்டம்
நமீபியாவில் விளையாட்டு
சிம்பாப்வேயில் விளையாட்டு
2027 இல் விளையாட்டுகள்
|
594378
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE
|
தலைமூடி மைனா
|
தலைமூடி மைனா (Helmeted myna)(பேசிலோரினிசு கேலேட்டசு) என்பது இசுடர்னிடே குடும்பத்தில் உள்ள ஒரு மைனா சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
விளக்கம்
தலைமூடி மைனா என்பது கறுப்பு நிறத்தில் காணப்படும். இதன் முகத்தில் வெள்ளைப் புள்ளிகளுடன் குறிப்பிடத்தக்கத் தலைக்கவசம் போன்ற தலை மூடி முகடு போன்று காணப்படும்.
வாழ்விடம்
இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் ஆகும் . இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ADW இல் படம்
மைனா
அகணிய உயிரிகள்
இந்தோனேசியப் பறவைகள்
|
594381
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
|
ஆர். பி. வி. எஸ். மணியன்
|
ஆர். பாலவேங்கட சுப்பிரமணியன் (சுருக்கமாக:ஆர். பி. வி. எஸ். மணியன்), ஆன்மீகப் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் முன்னர் விசுவ இந்து பரிசத்தின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர். இவர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்த பாலவேங்கட சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் வணிக வரித்துறையில் பணியாற்றினார். படிக்கும் காலத்திலிருந்தே இவருக்கு விவேகானந்தர் மீது ஈடுபாடு இருந்ததால், அவரது கொள்கைகளைப் பரப்பும் பணியில் ஈடுபடுவதற்காக வேலையை விட்டார்.
கன்னியாகுமரியில் 1970ம் ஆண்டில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்றபோது, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் சார்பில் நன்கொடை திரட்டம் பணியில் ஆர். பி. வி. எஸ். மணியன் தீவிரமாக ஈடுபட்டார். 1970களில் விவேகானந்த கேந்திரம் சார்பில் மாணவர்கள் மத்தியில் தீவிரமாகப் பேசி வந்த மணியன், 1980ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் அமைப்பில் இணைந்தார்.
ஆர். பி. வி. எஸ். மணியன் 11 செப்டம்பர் 2023 அன்று பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய வித்தியா பவன் கிளையில் உரையாற்றினார். சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசிய மணியன், சர்ச்சைக்குரிய விதத்தில் திருவள்ளுவர் மற்றும் அம்பேத்கரைக் குறித்துப் பேசினார். இதனால் காவல்துறையால் 14 செப்டம்பர் 2023 அன்று கைது செய்யப்பட்ட ஆர். பி. வி. எஸ். மணியன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 29 செப்டம்பர் 2023 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.3 அக்டோபர் 2023 அன்ற்ய் ஆர்.பி. வி. எஸ் மணியன் நிபந்தனை பிணையின் பேரில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
இந்து சமயப் பேச்சாளர்கள்
தமிழ் ஆன்மிக எழுத்தாளர்கள்
இந்து சமய எழுத்தாளர்கள்
வாழும் நபர்கள்
|
594386
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
|
துஷ்யந்த் சிறீதர்
|
துஷ்யந்த் ஸ்ரீதர் (Dushyanth Sridhar) தமிழ், கன்னடம், ஆங்கிலம் மற்றும் சமசுகிருதம் மொழி எழுத்தாளரும், ஆன்மிகப் பேச்சாளரும் ஆவார். இவர் பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, பாகவதம், இராமாயணம், மகாபாரதம், திருப்பாவை, நாலாயிர திவ்வியப் பிரபந்தம், திருவாய்மொழி போன்ற தலைப்புகளில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
வரலாறு
தமிழ் வடகலை ஐயங்கார் குடும்பத்தில், பெங்களூரில் பிறந்த துஷ்யந்த் சிறீதர் இளமையில் சமசுகிருதம் மற்றும் வேதங்களை கற்றார். பள்ளிப் படிப்பை பெங்களூர் மற்றும் சென்னையில் முடித்த துஷ்யந்த், பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தில் வேதியியல் பொறியியல் துறையில் 2008ம் ஆண்டில் பட்டம் பெற்றார்.
தொழிற்சாலைகளில் சில ஆண்டுகள் பணிபுரிந்த துஷ்யந்த் சிறீதர் 2016ம் ஆண்டு முதல் மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் முழு நேர வைணவ ஆன்மீக சொற்பொழிவாளராக மாறினார்.
துஷ்யந்த் சிறீதர் வாய்ப்பாட்டு, கர்நாடக சங்கீதம், நாட்டியம் ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றார். இவர் வேதாந்த தேசிகர் எனும் திரைப்படத்திற்கு கதை எழுதி நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
இந்து சமய எழுத்தாளர்கள்
வாழும் நபர்கள்
1986 பிறப்புகள்
இந்து சமயப் பேச்சாளர்கள்
வைணவ அடியார்கள்
|
594390
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%28%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29
|
ஜூலியஸ் சீசர் (நாடகம்)
|
ஜூலியஸ் சீசரின் சோகம் ( முதல் ஃபோலியோ தலைப்பு: தி ட்ராஜிடி ஆஃப் இவ்லிவ்ஸ் சீசர் ), ஜூலியஸ் சீசர் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது, இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் வரலாற்று நாடகம் மற்றும் சோகக்கதை முதன்முதலில் 1599 இல் அரங்கேற்றப்பட்டது.
நாடகத்தில், புருடஸ் காசியஸுடன் இணைந்து ஜூலியஸ் சீசர் ஒரு கொடுங்கோலனாக மாறுவதைத் தடுக்க அவரைப் படுகொலை செய்ய சதித்திட்டத்தில் இணைகிறார். சீசரின் நண்பரான ஆண்டனி சதிகாரர்களுக்கு எதிராகச் செயல்படுகின்றார், மேலும் இதனால் ரோம் ஒரு வியத்தகு உள்நாட்டுப் போரைச் சந்திக்கின்றது.
சேக்சுபியரின் படைப்புகள்
ஆங்கில நாடகங்கள்
|
594411
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
அபாடி பானோ பேகம்
|
அபாடி பானோ பேகம் (பி அம்மான்) (பிறப்பு 1850 இறப்பு: 13 நவம்பர் 1924) இந்திய விடுதலை இயக்கத்தின். ஒரு முக்கிய குரலான இவர் பி அம்மான் என்றும் அழைக்கப்பட்டார். அரசியலில் தீவிரமாக பங்கேற்ற முதல் முஸ்லிம் பெண்களில் ஒருவரான இவர், பிரித்தானிய அரசிடமிருந்து இந்தியாவை விடுவிக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார்.
சுயசரிதை
1839 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் அம்ரோகா
கிராமத்தில் பிறந்த இவர், ராம்பூர் மாநிலத்தின் மூத்த அதிகாரியான அப்துல் அலி கான் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு ஒரு மகளும் ஐந்து மகன்களும் இருந்தனர். இளம் வயதிலேயே கணவன் இறந்த பிறகு, தன் குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பு இவர் மீது விழுந்தது. தன்னிடம் குறைந்த வளங்கள் இருந்தபோதிலும், அபாடி பானோ பேகம் தனது குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்காக தனது நகைகளை அடகு வைத்தார். பானோ பேகம் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆனால் உத்தரபிரதேசத்தின் பரேலி நகரில் உள்ள ஆங்கில வழிப் பள்ளியில் தனது குழந்தைகள் கல்வி பயில அனுப்பினார். இவரது மகன்கள், மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் மற்றும் மௌலானா செளகத் அலி ஆகியோர் கிலாபத் இயக்கம் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னணி நபர்களாக மாறினர். பிரித்தானிய ராச்சியத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தின் போது அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
அபாடி பானோ பேகம் அரசியலிலும் தீவிரமாக பங்கேற்றார். மேலும் கிலாபத் குழுவின் ஒரு பகுதியாகவும் இருந்தார். 1917 இல், அன்னி பெசண்ட் மற்றும் அவரது இரண்டு மகன்களை சிறையில் இருந்து விடுவிக்கும் போராட்டத்தில் இவர் இணைந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் ஆதரவைப் பெற முடியும் என்பதால், மகாத்மா காந்தி இவரைப் பேச ஊக்குவித்தார். 1917 ஆம் ஆண்டில், அகில இந்திய முசுலிம் லீக்கின் அமர்வுகளின் போது, இவர் மிகவும் மனதைத் தொடும் வகையில் வலிமையான உரையை நிகழ்த்தினார். இது பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
கிலாபத் இயக்கத்திற்கான ஆதரவைத் திரட்டுவதற்காக இந்தியா முழுவதும் பரவலாகப் பயணம் செய்தார். கிலாபத் இயக்கம் மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்திற்கான நிதி சேகரிப்பில் அபாடி பானோ பேகம் முக்கிய பங்கு வகித்தார். இவர், மௌலானா அசரத் மோகானி மோகனியின் மனைவி பேகம் அசரத் மோகனி, பசந்தி தேவி, சரளாதேவி சௌதுராணி மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோருடன் பெண்கள் மட்டும் கூடும் கூட்டங்களில் அடிக்கடி உரையாற்றி, பால கங்காதர திலகர் அமைத்த திலக் சுவராஜ் நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு பெண்களை அறிவுறுத்தினார். இந்திய சுதந்திர இயக்கத்திற்காக. இவர் 1924 இல் இறக்கும் வரை சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக இருந்தார்
இறப்பு
அபாடி பானோ பேகம் 13 நவம்பர் 1924 அன்று 73 வயதில் இறந்தார்.
நினைவு அஞ்சல் தலை
14 ஆகஸ்ட் 1990 அன்று, பாக்கித்தான் அஞ்சல் அலுவலகம் அதன் 'சுதந்திரத்தின் முன்னோடிகள்' தொடரில் இவரது நினைவாக ஒரு நினைவு அஞ்சல தலையை வெளியிட்டது.
சான்றுகள்
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்
1924 இறப்புகள்
1850 பிறப்புகள்
|
594450
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
நடுவெழுத்தலங்காரம்
|
பாடல்களில் வரும் அணியை அலங்காரம் என்னும் வடசொல்லால் குறிப்பிடலாயினர். தொல்காப்பியம் இந்த அணி பற்றி உவம இயல் என்னும் தனி இயலில் கூறுகிறது. தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்னும் நூல்கள் தோன்றி வடமொழி நெறியைப் பின்பற்றி பாடல்களில் அமையும் அணிகள் பற்றிக் கூறுகின்றன. அந்த நூல்களில் கூறப்படும் அணிகளுக்குத் தமிழில் மேற்கோள் பாடல் இல்லாதபோது, அந்த அணியை விளக்க உதவும் புதிய பாடல்களை உருவாக்கி அந்த நூல்கள் அணிகளை விளக்குகின்றன.
பண்டைய இலக்கியங்களில் பொருளை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அணிகள் பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் மொழிவளம் காட்டும் வகையில் சொல்லணிகள் தமிழில் புகுந்தன. அவற்றில் ஒன்றுதான் இங்குக் காட்டப்படும் நடு எழுத்து அலங்காரம்.
நடு எழுத்து அலங்காரம்
சீதாராமன் என்னும் வள்ளலே
கடன் தொல்லையால் உன்னிடம் வந்திருக்கிறேன். என் கவலையைப் போக்க வேண்டும். என்று புலவர் இராமச்சந்திரக் கவிராயர் வேண்டும் பாடல் ஒன்று இந்த அணி கொண்டதாக அமைந்துள்ளது.
பாடல் விளக்கம்
அத்திரம்
பகழி
வேலாவலயம்
கடல்
இராசி யொன்றிற்கு அமைந்த பெயர்
கன்னி
மூன்றினிடை அக்கரத்தால்
இவை மூன்றின் இடையிலுள்ள எழுத்தால் - கடன்
மெத்த நடுக்குற்று உனை வந்தடைந்தேன்
நான் வாங்கிய கடனைத் தீர்க்க முடியாமல் நடுங்கி உன்னை வந்தடைந்தேன்
இந்த விதனம் அகற்றிடு
இந்தக் கவலையைப் போக்குக
மற்றை எழுத்து ஓராறில்
பழி கல் கனி
பத்து உடையானைத் தடிந்து
பழிபட்டுக் கல்லாகிய க(ன்)னி அகலிகையை,
பெண்ணாச் செய்து
பரிவின் நுகர்வோன்
சபரி கொடுத்த கனியைத் தின்ற இராமனின்
இருதாள் பணிந்து போற்றும்
சித்தசனே!
மனத்திட்பம் கொண்டவனே
தெளிய சிங்கன் தவத்தில் தோன்றும் சீதாராம ப்ரபல தியாகவானே
மனத் தெளிவு பெற்ற சிங்கன் செய்த தவத்தின் பயனாக அவனுக்கு மகனாகத் தோன்றிய சீதாரான் என்னும் பெயர் கொண்ட பிரபல தியாகவானே!
பாடல்
அத்திரம் வேலாவலயம் இராசி யொன்றிற்
கமைந்த பெயர் மூன்றினிடை யக்கரத்தால்
மெத்த நடுக்குற்று உனை வந்தடைந்தேன் இந்த
விதனம் அகற்றிடு மற்றை எழுத்து ஓராறில்
பத்து உடையானைத் தடிந்து பெண்ணாச் செய்து
பரிவின் நுகர்வோன் இருதாள் பணிந்து போற்றும்
சித்தசனே தெளிய சிங்கன் தவத்தில் தோன்றுஞ்
சீதாராம ப்ரபல தியாகவானே. (24)
மேற்கோள்
அணி இலக்கணம்
அணி விளையாட்டுகள்
|
594458
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
|
ரூப் கன்வர்
|
ரூப்குவர்பா கன்வார் ( சுமார் 1969 - 4 செப்டம்பர் 1987) என்பவர் இந்தியாவின் இராசத்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் உள்ள தியோராலா என்ற சிற்றூரில் உயிருடன் எரிக்கப்பட்ட ஒரு ராஜ்புத்திரப் பெண் ஆவார். அந்த நேரத்தில், இவருக்கு 18 வயது ஆகி இருந்தது. மால் சிங் செகாவத் என்பவருடன் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகியிருந்த நிலையில் மால் சிங் செகாவத் சுமார் 24 வயதில் இறந்தார். இந்த இணையருக்கு குழந்தை இல்லை.
இறப்பு
இவர் எரிக்கப்பட்ட நிகழ்வில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். மரணத்திற்குப் பிறகு, ரூப் கன்வார் சதி மாதா - சதி தாய் அல்லது தூய தாய் என்று புகழப்பட்டார். இந்தக் கொலையானது நகர்ப்புறப் பகுதிகளில் வெகுவிரைவில் பொதுமக்களின் எதிர்ப்பை உருவாக்கியது. இந்த கொடூரமான கொலையானது, இதுபோன்ற கொடூரங்களைத் தடுக்க முதலில் மாநில அளவிலான சட்டங்களுக்கும், பின்னர் ஒன்றிய அரசின் சதி (தடுப்பு) சட்டத்துக்கும் வழிவகுத்தது .
செய்தி அறிக்கைகள்
கொலை பற்றிய சில செய்தி அறிக்கைகளின் கூற்றின்படி, இறப்பு சடங்குக்கு வந்த உறவினராகளால் கன்வர் எரியும் சிதையில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுக் கொல்லப்பட்டதாக கூறுகின்றன. குடும்பத்திற்கு பெருமை சேர்க்க உடன்கட்டை ஏற வேண்டும் என்று அவர் வற்புறுத்தபட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.
குற்றப்பத்திரிகை
இக்கொலை விசாரணையின் விளைவாக 45 பேர் இவரது கொலையில் குற்றம் சாட்டப்பட்டனர்; ஆனால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட பிற்கால விசாரணையின் போது, இறப்புச் சடங்கு விழாவில் கலந்துகொண்டதாகக் கூறப்பட்ட தியோராலாவைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இறுதியில், உடன்கட்டை ஏறலை புனிதப்படுத்தியதற்காக மாநில அரசியல்வாதிகள் உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 31. சனவரி, 2004 அன்று ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் விடுதலை செய்தது.
மேற்கோள்கள்
1987 இறப்புகள்
1969 பிறப்புகள்
உடன்கட்டை ஏறியவர்கள்
|
594464
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
|
சுவாமி நாராயணன் அக்சர்தாம், நியூ ஜெர்சி
|
சுவாமி நாராயணன் அக்சர்தாம், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்காவின் நியூ செர்சி மாகாணத்தில் உள்ள இராபின்ஸ்வில் நகரியத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது பெரிய இந்து சமயக் கோயில் ஆகும். இக்கோயில் 8 அக்டோபர் 2023 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இக்கோயிலின் மூலவர் சுவாமி நாராயண் ஆவார். மேலும் இக்கோயிலில் இராதா கிருஷ்ணன், இராமர்-சீதை மற்றும் சிவன்-பார்வதி ஆகிய தெய்வங்களின் தனிச்சன்னதிகள் உள்ளது.
அமைவிடம்
இக்கோயில் நியூ யார்க் நகரத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்திற்கு தெற்கே 60 மைல் தொலைவிலும்; வாசிங்டன், டி. சி.க்கு வடக்கே 180 மைல் தொலைவிலும்; நியூ செர்சி நகரத்திற்கு வடமேற்கே 23.5 மைல் தொலைவில் உள்ள இராபின்ஸ்வில் நகரியத்தில் அமைந்துள்ளது.
கட்டிடக் கலை
183 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கோயில் 2011ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை, அமெரிக்கா முழுவதிலிருந்தும் 12,500 தன்னார்வலர்களின் உதவியுடன், இந்தியச் சிற்பிகளால் வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாஞ்சராத்திர சாஸ்திரப்படி கட்டப்பட்டது. இது இந்துக்களின் ஆன்மீக-பண்பாட்டு வளாகமாக உள்ளது. இக்கோயிலில் 10 ஆயிரம் தெய்வச் சிற்பங்கள் மற்றும் இந்திய இசைக்கருவிகள் மற்றும் இந்திய நடன வடிவங்கள் கொண்டுள்ளது.
இக்கோயில் வளாகத்தில் சுவாமி நாராயண் மூலவர் ஆவார். இராதா கிருஷ்ணன், இராமர்-சீதை மற்றும் சிவன்-பார்வதி போன்ற தெய்வங்களுக்கு 12 துணைக் கோயில்கள் கோபுரங்களுடன் உள்ளது. இக்கோயில் கட்டுமானத்தில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்குக் கல் மற்றும் கருங்கல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
படக்காட்சிகள்
இதனையும் காண்க
அக்சரதாம் (தில்லி)
சுவாமி நாராயண் அக்சர்தாம் (காந்திநகர்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
BAPS Swaminarayan Sanstha The organization responsible for the creation of Akshardham
இந்துக் கோயில்கள்
அமெரிக்க இந்துக் கோவில்கள்
சுவாமிநாராயண் கோயில்கள்
|
594467
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE
|
தாக்கூர் பிருத்வி சிங் தியோரா
|
தாக்கூர் பிருத்வி சிங் தியோரா (Thakur Prithvi Singh Deora) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1934 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இராசத்தானைச் சேர்ந்த இவர் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதியாக இராசத்தான் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.
வாழ்க்கை வரலாறு
தியோரா 1967 ஆம் ஆண்டு பாலி தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
தாக்கூர் பிருத்வி சிங் தியோரா 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று தனது 85 ஆம் வயதில் இறந்தார்
குறிப்புகள்
2019 இறப்புகள்
இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
ராஜஸ்தான் நபர்கள்
|
594483
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
நாராயண் பெனிவால்
|
நாராயண் பெனிவால் (Narayan Beniwal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராசத்தான் மாநிலத்தின் நாகௌர் நகரத்தைச் சேர்ந்த இவர் , 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் கின்வாசரில் இருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இராசுரிய லோக்தந்திரிக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். நாராயண் பெனிவால் இராசுட்ரிய லோக்தந்திரிக் கட்சியின் நிறுவனரும் நாகௌர் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுமான் பெனிவாலின் சகோதரர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
நாராயண் பெனிவால் 1975 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் தேதி இராசத்தானின் நாகௌர் மாவட்டத்தில் உள்ள பாரங்காவன் கிராமத்தில் இராம்தேவ் மற்றும் மோகினி தேவிக்கு மகனாகப் பிறந்தார். இராசத்தான் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டில் சுமேசு பெனிவால் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் (பிரதீக் பெனிவால்) உள்ளார்.
மேற்கோள்கள்
1975 பிறப்புகள்
வாழும் நபர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
ராஜஸ்தான் நபர்கள்
|
594485
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20-%20%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
|
திருநெல்வேலி சென்னை எழும்பூர் - வந்தே பாரத் விரைவு வண்டி
|
திருநெல்வேலி சென்னை எழும்பூர் - வந்தே பாரத் விரைவு வண்டி (Chennai Egmore - Tirunelveli Vande Bharat Express) என்பது இந்தியாவின் 28வது வந்தே பாரத் விரைவுவண்டி ஆகும். இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பயன்படும் வகையில் திருநெல்வேலி சென்னை நகரங்களை இணைத்து திருநெல்வேலியில் நிறுத்தப்பட்டுச் செயல்படுகிறது. இந்த தொடருந்தினை 24 செப்டம்பர் 2023 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி புது தில்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த தொடருந்து திருநெல்வேலியில் காலை 06.00 மணிக்குக் கிளம்பி விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் ஆகிய தொடருந்து நிலையங்களில் நின்று சென்னை எழும்பூரை மதியம் 13.50க்குச் சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 14.50க்குப் புறப்பட்டு விழுப்புரம்,திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாகத் திருநெல்வேலியினை இரவு 22.40க்கு சென்றடையும். இந்த தொடருந்து 20665/20666 என்ற எண்களுடன் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது.
பெட்டிகள்
இது இருபத்தி ஆறாவது 2வது தலைமுறை மற்றும் பதினான்காவது வந்தே பாரத் 2.0 தொடருந்து ஆகும். இது இந்தியாவின் தயாரிப்பு திட்டத்தின் முன்முயற்சியின் கீழ் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது.
பெட்டிகளமைப்பு
20665/20666 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் விரைவுத் தொடருந்து தற்போது குளிரூட்டப்பட்ட 7 அமரும் வசதிகொண்ட பெட்டிகளுடன் 1 சிறப்பு குளிரூட்டப்பட்ட உட்காரும் வசதி கொண்ட பெட்டியுடன் இயக்கப்படுகிறது.
சேவை
20665/20666 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் தொடருந்து செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இது தூரத்தினை சராசரி வேகமான 83 கி.மீ./மணியுடன் 7 மணி 50 நிமிட பயண நேரத்தில் சென்றடையும். அதிகபட்ச அனுமதிக்கக்கூடிய வேகம் (மணிக்கு 110 கி. மீ. ஆகும்.
பயண விவர அட்டவணை
இந்த 20665/20666 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் தொடருந்தின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
மேலும் பார்க்கவும்
வந்தே பாரத் தொடருந்து
தேஜஸ் விரைவு தொடருந்து
கதிமான் விரைவுவண்டி
சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்
மேற்கோள்கள்
சென்னை போக்குவரத்து
தமிழகத்தில் தொடருந்து போக்குவரத்து
இந்திய விரைவுவண்டிகள்
|
594486
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF
|
இந்திரா தேவி பாவ்ரி
|
இந்திரா தேவி பாவ்ரி (Indira Devi Bawri) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2018 ஆம் ஆண்டு முதல் மெர்டா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினரான இவர் இராசுட்ரிய லோக்தந்திரிக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.
மேற்கோள்கள்
நாகவுர் மாவட்ட நபர்கள்
வாழும் நபர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
ராஜஸ்தான் அரசியல்வாதிகள்
|
594487
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF
|
கே.எல். சிறீமாலி
|
கலு லால் சிறீமாலி (K. L. Shrimali) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மத்திய கல்வி அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் கல்வியாளராகவும் இவர் இருந்தார்.
1909 ஆம் ஆண்டு இராசத்தான் மாநிலத்தின் உதய்பூரில் சிறீமாலி பிறந்தார். பனாரசு இந்து பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் நியூயார் நகரத்திலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகம்ஆகியவற்றில் கல்வி பயின்றார்.
1955 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1963 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வரை மத்திய அமைச்சர்கள் குழுவில் கல்வி அமைச்சராக பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிறீமாலி இராசத்தான் மாநிலத்தின் மாநிலங்களவையை பிரதிநிதித்துவப்படுத்தினார்
பல கல்வி மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். "இயன் சிக்சன் " என்ற மாதாந்திர கல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்தார். பல நூல்களை வெளியிட்டுள்ளார். இராசத்தானின் உதய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற வித்யா பவன் பள்ளியின் நிறுவனர்களில் இவரும் ஒருவராவார். இது பேடன் பவலின் சிறுவர் சாரணர் இயக்கத்தில் நிறுவப்பட்டதாகும். கல்வியில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 1976 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டு சனவரி மாதம் 5 ஆம் தேதியன்று சிறீமாலி தனது 90 ஆவது வயதில் இராசத்தான் மாநிலம் உதய்பூரில் இறந்தார்.
மேற்கோள்கள்
3வது மக்களவை உறுப்பினர்கள்
2000 இறப்புகள்
1909 பிறப்புகள்
கொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
ராஜஸ்தான் நபர்கள்
|
594491
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
|
கட்டுடைப்பு
|
கட்டுடைப்பு (Deconstruction) என்பது உரைக்கும் பொருளுக்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்வதற்கான தளர்வாக வரையறுக்கப்பட்ட அணுகுமுறைகளின் தொகுப்பாகும். கட்டுடைப்பு என்ற கருத்தாக்கம் தத்துவஞானி ஜாக்கஸ் தெரிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் பிளாட்டோனிசத்தின் "உண்மையான" வடிவங்கள் மற்றும் தோற்றங்களுக்கு மேலே மதிப்பிடப்பட்ட சாரங்களின் கருத்துக்களில் இருந்து மாறுபடுவதாக கூறுகின்றார். 1980களில் இருந்து, இந்த மொழி பற்றிய முன்மொழிவுகள் மொழி என்பது சிறந்த நிலையான மற்றும் புலனாகும் என்பதற்குப் பதிலாக திரவத்தன்மை உடையது என்ற கூற்று சட்டப் பிரிவுகள் மானுடவியல், வரலாற்று வரலாறு, மொழியியல், சமூக மொழியியல், மனோ பகுப்பாய்வு, LGBT ஆய்வுகள், மற்றும் பெண்ணியம் . கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளன கட்டுடைப்பு என்பது கலை, இசை மற்றும் இலக்கிய விமர்சனத்தில் மற்றும் கட்டிடக்கலையில் கட்டுடைப்பியல் போன்ற துறைகளில் முக்கியமானதாக உள்ளது.
சான்றுகள்
பின் நவீனத்துவ கோட்பாடு
All accuracy disputes
|
594494
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D
|
வாங்கலின் லோவாங்டாங்
|
வாங்கலின் லோவாங்டாங் (Wanglin Lowangdong) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.
லோவாங்டாங் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போர்துரியா-போகபானி தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, இவர் ஒரு பட்டதாரியாவார்.
வாங்கலின் லோவாங்டாங் அருணாச்சலப் பிரதேசத்தின் போர்துரியா கிராமத்தின் நோக்டே பழங்குடியினரில் ஒருவராகப் பிறந்தார். தற்போது இவர் நோக்டே பழங்குடியினரின் இன்றியமையாத தலைவராகவும் உள்ளார்.
இதையும் காண்க
அருணாசலப் பிரதேச சட்டமன்றம்
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wanglin Lowangdong profile
MyNeta Profile
Janpratinidhi Profile
வாழும் நபர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
அருணாச்சலப் பிரதேச நபர்கள்
|
594496
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
|
விரார் மருத்துவமனை தீவிபத்து
|
விரார் மருத்துவமனை தீவிபத்து (Virar hospital fire) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள விரார் நகரத்தில் ஏற்பட்ட தீவிபத்தைக் குறிக்கிறது. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியன்று நிகழ்ந்த இத்தீவிபத்தில் 13 கோவிட்-19 நோயாளிகள் கொல்லப்பட்டனர்.
பின்னணி
கோவிட்-19 பெருந் தொற்றுநோயால் இந்தியா அப்போது மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. நெரிசல் மற்றும் ஆக்சிசன் பற்றாக்குறை ஆகிய நெருக்கடிகள் அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனைகளில் அடங்கும். 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியன்று மகாராட்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் 24 கோவிட் நோயாளிகள் ஆக்சிசன் விநியோகம் தடைபட்டதால் இறந்தனர். 2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் மும்பை மற்றும் பருச்சிலும் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
விபத்து
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று அதிகாலையில், இந்திய மாநிலமான மகாராட்டிராவில் மும்பைக்கு வடக்கே உள்ள விரார் நகரத்தில் உள்ள விசய் வல்லப் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 17 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கோள்கள்
2021 நிகழ்வுகள்
தீ விபத்துகள்
மகாராட்டிரம்
|
594500
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF
|
முகுத் மணி அதிகாரி
|
முகுத் மணி அதிகாரி (Mukut Mani Adhikari) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியில் இவர் உறுப்பினராக உள்ளார். 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் இவர் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக இராணாகாட்டு தெற்குத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் பர்னாலி டே ராயை 16,515 வாக்குகளில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
மேற்கு வங்காள அரசியல்வாதிகள்
|
594506
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
மண்டியா சட்டமன்றத் தொகுதி
|
மண்டியா சட்டமன்றத் தொகுதி (Mandya Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டியா மாவட்டத்தில் உள்ளது. மண்டியா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 189 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
குறிப்பு
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
மண்டியா மாவட்டம்
|
594513
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE
|
உதயன் குகா
|
உதயன் குகா (Udayan Guha) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தற்போது மேற்கு வங்காள அரசாங்கத்தின் வடக்கு வங்காள மேம்பாட்டுத் துறைக்கான மந்திரி சபையில் ஓர் அமைச்சராகப் பணியாற்றுகிறார். மூன்று முறை மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக திங்காட்டா தொகுதியில் பணிபுரிந்துள்ளார்.
உதயன் குகா 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை திங்காட்டா சட்டமன்ற தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் 2021 ஆம் ஆண்டிலும் இதே தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கெடுப்பில் இவர் 164,088 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றார்.
அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் முன்பு அகில இந்திய பார்வர்ட் பிளாக்கில் இருந்து வந்தார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1955 பிறப்புகள்
இந்திய அரசியல்வாதிகள்
மேற்கு வங்காள அரசியல்வாதிகள்
|
594522
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
செயற்கை நுண்ணறிவின் மெய்யியல்
|
செயற்கை நுண்ணறிவின் மெய்யியல் (philosophy of artificial intelligence) என்பது மனதின் மெய்யியல், கணினி அறிவியலின் மெய்யியல் ஆகிய இரண்டன் ஒரு இடைமுகக் கிளை ஆகும் , இது செயற்கை நுண்ணறிவு, நுண்ணறிவு , அறநெறிகள் , உணர்வு, அறிதலியல், தற்சார்பு விருப்பம் ஆகியன பற்றிய அறிவும் புரிதலும் சார்ந்த தேடலில் ஈடுபடுகிறதுகிறது. மேலும், இந்த தொழில்நுட்பம் செயற்கை விலங்குகள் அல்லது செயற்கை மனிதர்களை உருவாக்குவது குறித்து அக்கறை கொண்டுள்ளது ( குறிப்பாக, செயற்கை உயிரினங்கள் அல்லது செயற்கை மனிதர்கள் குறித்து ) எனவே, ஒழுக்கம் மெய்யியலாளர்களுக்குக் கணிசமான ஆர்வமாக உள்ளது. இந்த காரணிகள் செயற்கை நுண்ணறிவின் மெய்யியலின் தோற்றத்திற்கு பங்களித்தன.
செயற்கை நுண்ணறிவின் மெய்யியல் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க முயல்கிறது:
ஓர் எந்திரம் நுண்ணறிவோடு செயல்பட முடியுமா? ஒரு தனியர் சிந்திப்பதன் வழி தீர்க்கும் எந்தவொரு சிக்கலையும் அது தீர்க்க முடியுமா ?
மனித நுண்ணறிவும் எந்திர நுண்ணறிவும் ஒரே தன்மையானவையா ? மனித மூளை அடிப்படையில் ஒரு கணினியா ?
ஒரு மனிதனால் செய்யக்கூடிய அதே பொருளில், ஓர் எந்திரம் மனம், மனநிலை, நனவைக் கொண்டிருக்க முடியுமா ? புறப்பொருண்மைகள் எப்படி இருக்கின்றன என்பதை அதனால் உணர முடியுமா ?
இது போன்ற கேள்விகள் முறையே அறிதலியல் றிவியலாளர்கள், மெய்யியலாளர்கள், செநு ஆராய்ச்சியாளர்களின் வேறுபட்ட ஆர்வங்களை புலப்படுத்துகின்றன. இந்தக் கேள்விகளுக்கான அறிவியல் முறையான பதில்கள் " நுண்ணறிவு " மற்றும் " நனவு " ஆகியவற்றின் வரையறையையும் , எவ்வகை எந்திரங்கள் விவாதத்தில் உள்ளன என்பதையும் சார்ந்துள்ளன.
செயற்கை நுண்ணறிவின் மெய்யியலில் உள்ள முதன்மையான முன்மொழிவுகளில் பின்வருவன அடங்கும்:
டூரிங்கின் " கண்ணியமான மரபு. ஒரு எந்திரம் மனிதனைப் போலவே நுண்ணறிவோடு நடந்து கொண்டால் , அது ஒரு மனிதனைப் போலவே அறிவார்ந்ததாகும்.
தார்த்துமவுத் முன்மொழிவு: " கற்றலின் ஒவ்வொரு கூறையும் அல்லது நுன்னறிவின் வேறு எந்த குறுபாட்டையும் மிகவும் துல்லியமாக விவரிக்கவும் அதை உருவகப்படுத்தவும் முடியும் ஒரு எந்திரத்தை உருவாக்க முடியும்.
ஆலன் நெவெல், எர்பர்ட்டு ஏ. சைமனின் இயற்பியல் குறியீட்டு அமைப்பு கருதுகோள்: " ஒரு இயற்பியல் குறியீட்டு அமைப்பு பொது அறிவார்ந்த செயலுக்குத் தேவையானதும் உடன் போதுமானதுமான வழிமுறைகளைக் கொண்டுள்ளது.
ஜான் சியர்லேவின் வலுவான செயற்கை நுண்ணறிவு கருதுகோள்: " சரியான உள்ளீடுகள், வெளியீடுகளுடன் பொருத்தமாக திட்டமிடப்பட்ட கணினி அதன் வழி மனிதர்களுக்கு இருக்கும் மனதைப் போலவே ஒரு மனதையும் கொண்டிருக்கும்.
கோப்சின் இயங்கமைப்பு: " காரணம் "... என்பது ' மதிப்பீடு ' தவிர வேறில்லை. இது நமது எண்ணங்கள் ' குறிக்கும் ' மற்றும் ' பொருளுணர்த்தும் " பொதுவான பெயர்களின் விளைவுகளைக் கூட்டுவதும் கழிப்பதுமே ஆகும்.....
ஓர் எந்திரம் பொது நுண்ணறிவை காட்சிப்படுத்த முடியுமா?
மனிதர்கள் தங்கள் நுண்ணறிவைப் பயன்படுத்தி தீர்க்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய ஓர் எந்திரத்தை உருவாக்க முடியுமா ? இந்தக் கேள்வி எதிர்காலத்தில் எந்திரங்கள் என்ன செய்ய முடியும் என்பதற்கான நோக்கத்தை வரையறுக்கிறது. மேலும் செநு ஆராய்ச்சியின் திசையை வழிநடத்துகிறது. இது எந்திரங்களின் நடத்தையைப் பற்றியது. உளவியலாளர்களின் ஆர்வமுள்ள சிக்கல்களைப் புறக்கணிக்கிறது. அறிதல் அறிவியலாளர்கலும் மெய்யியலாளர்களும் இந்த கேள்விக்கு பதிலளிக்க, ஓர் எந்திரம் உண்மையில் சிந்திக்கிறதா என்பது முக்கியமா ?
பெரும்பாலான செநு ஆராய்ச்சியாளர்களின் அடிப்படை நிலைப்பாடு, 1956 ஆம் ஆண்டின் தார்த்துமவுத்துப் பட்டறைக்கான முன்மொழிவு அறிக்கையில் சுருக்கமாக உள்ளது..
" கற்றலின் ஒவ்வொரு கூறையும்யும் அல்லது நுண்ணறிவின் வேறு எந்தக் கூருபாட்டையும்யும் மிகவும் துல்லியமாக விவரிக்க முடியும். அதை ஓர் எந்திரம் உருவகப்படுத்தி உருவாக்கச் செய்ய முடியும்.
கணினிகளின் திறன்களுக்கு சில நடைமுறை வரம்புகள் உள்ளது.மனித மனதில் சில சிறப்புத் தரங்கள் உள்ளன. இது அறிவார்ந்த நடத்தைக்குத் தேவையாகும். ஆனால் ஓர் எந்திரத்தால் (அல்லது தற்போதைய செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி முறைகளால்) நகலெடுக்க முடியாது என்பதால் , ஒரு வேலை செய்யும் செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்குவது சாத்தியமில்லை என்பதை அடிப்படை முன்வகைமை வாதங்கள் காட்ட வேண்டும். அடிப்படை முன்வகைமைக்கு ஆதரவாக வாதங்கள் இருந்தால்,அத்தகைய அமைப்பு சாத்தியம் என்பதை நிறுவிக் காட்ட வேண்டும்.
மேற்கூறிய முன்மொழிவில் உள்ள இரண்டு பகுதிகளுக்கும் இடையிலான உறவைத் தவிர்ப்பதும் சாத்தியமாகும். எடுத்துகாட்டாக, தூரிங்கின் குழந்தை எந்திர முன்மொழிவில் இயந்திர கற்றல் தொடங்கியது. நுண்ணறிவின் விரும்பிய கூறுபாட்டை அது எவ்வாறு சரியாக செயல்படுத்தும் என்பதற்கான துல்லியமான வடிவமைப்பு - நேர விவரிப்பு இல்லாமல் சாரநிலையில் அடைகிறது. எந்திரனின் நுட்பமான அறிவு சார்ந்த கணக்கு ஒரு துல்லியமான விவரிப்பின் தேவையை முற்றிலுமாக நீக்குகிறது.
இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கான முதல் படி , " நுண்ணறிவு " என்பதை தெளிவாக வரையறுப்பதே ஆகும்.
நுண்ணறிவு
தூரிங் செய்முறை
ஆலன் தூரிங் , நுண்ணறிவை வரையறுக்கும் சிக்கலை உரையாடல் பற்றிய ஒரு எளிய கேள்வியாகக் குறைத்தார். அவர் ஓர் எந்திரம் ஒருஏளிய மனிதனின் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடிந்தால் , அந்த எந்திரத்தை அறிவார்ந்தது என்று அழைக்கலாம் எனக் கூறுகிறார். அவரது செய்முறை வடிவமைப்பின் நவீனப் பதிப்பு ஓர் இணைய அரட்டை அறையைப் பயன்படுத்துகிறது. அங்கு பங்கேற்பாளர்களில் ஒருவர் உண்மையான தனிநபர். மற்றொரு பங்கேற்பாளர் ஒரு கணினி நிரல். பங்கேற்பாளர்களில் யார் மனிதர் என்பதை யாரும் சொல்ல முடியாவிட்டால் இந்தத் திட்டம் செய்முறையில் தேர்ச்சி பெறுகிறது. தத்துவஞானிகள் தவிர யாரும், மக்கள் சிந்திக்க முடியுமா என்ற கேள்வியைக் கேட்க மாட்டார்கள் " எனத் தூரிங் குறிப்பிடுகிறார். மேலும்அவர் எழுதுகிறார் , " இந்த விஷயத்தில் தொடர்ந்து வாதிடுவதற்குப் பதிலாக , எல்லோரும் நினைக்கும் ஒரு கண்ணியமான மரபு இருப்பது நல்லது. டூரிங்கின் செய்முறை இந்த கண்ணியமான மரபை எந்திரங்களுக்கும் விரிவுபடுத்துகிறது.
ஒரு இயந்திரம் மனிதனைப் போலவே நுண்ணறிவோடு செயல்பட்டால் , அது மனிதனைப் போலவே அறிவார்ந்ததாகும்.
தூரிங் செய்முறையைப் பற்றிய ஒரு விமர்சனம் என்னவென்றால் , இது நடத்தையின் நுண்ணறிவை விட எந்திரத்தின் நடத்தையின் மனிதாபிமானத்தை மட்டுமே அளவிடுகிறது. மனித நடத்தையும் அறிவார்ந்த எந்திர நடத்தையும் ஒரே தனமையானவை அல்ல என்பதால் , செய்முறை நுண்ணறிவை அளவிடத் தவறிவிட்டது என்பதே. சுட்டூவர்ட்டு ஜே. இரசலும் பீட்டர் நோர்விக்கும் " வானூர்தி பொறியியல் நூல்கள் தங்கள் துறையின் இலக்கைப் ' புறாக்களைப் போலவே பறக்கும் எந்திரங்களை உருவாக்கி, மற்ற புறாக்களை முட்டாளாக்க முடியும் ' என்று வரையறுக்கவில்லை " என்று எழுதுகிறார்கள்.
இலக்குகளை அடைவதற்கு நுண்ணறிவு
இருபத்தியோராம் நூற்றாண்டின் செநு ஆராய்ச்சியின் குறிக்கோள் இயக்க நடத்தை அடிப்படையில் நுண்ணறிவை வரையறுக்கிறது.ஏனவே, எந்திரம் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படும் எவ்வளவு அதிகமான சிக்கல்களை தீர்க்க முடியும் , மேலும் அதன் தீர்வுகள் எவ்வளவு சிறப்பாக இருக்கும் , அந்த திட்டம் அவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கும். என்பன போன்ற சிக்கல்களின் தொகுப்பாக நுண்ணறிவை அது கருதுகிறது. ஸேஆற்ௐஆஈ ணூண்ணாறீஊ நிறுவனர் ஜான் மெக்கார்த்தி நுண்ணறிவை " உலகில் இலக்குகளை அடையும் திறனின் கணக்கீட்டுப் பகுதி " என்று வரையறுத்தார்.
சுட்டூவர்ட்டு ரசலும் பீட்டர் நோர்விக்கும் ஆகியோர் இந்த வரையறையை சுருக்கமான அறிவார்ந்த முகவர்களைப் பயன்படுத்தி முறைப்படுத்தினர். ஒரு " ஏஜென்ட் " என்பது ஒரு சூழலில் உணர்ந்து செயல்படும் ஒன்று. அது செயல்திறன் அளவீடு முகவரின் வெற்றியாக எதைக் கணக்கிடுகிறது என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது.
" கடந்த கால அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையில் ஒரு செயல்திறன் அளவின் எதிர்பார்க்கப்படும் மதிப்பைப் பெருமமாக அதிகரிக்கும் வகையில் ஒரு முகவர் செயல்பட்டால், அது நுண்ணுணர்வானது ஆகும்.
இது போன்ற வரையறைகள் நுண்ணறிவின் சாரத்தை பிடிக்க முயல்கின்றன. தூரிங் சோதனையைப் போல, தட்டச்சு தவறுகள் போன்ற மனித நுண்ணறிவுப் பண்புகளை அவர்கள் சோதிக்கவில்லை என்ற நன்மை அவர்களுக்கு உள்ளது.
சிந்திக்கும் விஷயங்களுக்கும் சிந்திக்காத விஷயங்களுக்கும் இடையே வேறுபாடு காட்டத் தவறிய குறைபாடு அவர்களிடம் உள்ளது. இந்த வரையறையின்படி , ஒரு வெப்பநிலை கட்டுபடுத்தி கூட ஒரு அடிப்படை நுண்ணறிவைக் கொண்டுள்ளது.
ஒரு இயந்திரம் பொது நுண்ணறிவை வெளிப்படுத்த முடியும் என்ற வாதங்கள்
மூளையை உருவகப்படுத்தலாம்
கூபர்ட்டு திரேப்பசு இந்த வாதத்தை பின்வருமாறு விவரிக்கிறார். " நரம்பு மண்டலம் இயற்பியல், வேதியியல் விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் , அது அவ்வாறு செய்கிறது என்று நாம் நினைப்பதற்கு எல்லா காரணங்களும் உள்ளன..நாம் சில புறக் கருவிளால் நரம்பு மண்டலத்தின் நடத்தையை மீளாக்கம் செய்ய வேண்டும். இந்த விவாதம் முதலில் 1943 இலேயே அறிமுகமானது. இதுஆன்சு மொராவெக்கால் விரிவாக 1988 இல் வ்விவரிக்கப்பட்டது. இப்போது இது எதிர்காலவியலாளரானனைரே குர்சுவெல்லால் முன்வைக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு கணிணி 2029 க்குள் மூலையையை உருவகப்படுத்தும் அளவுக்குப் போதுமானபடி தன் திறனை வளர்த்துக் கொள்ளும் என்கிறார்.மனித மூளையின் அளவு ( 1011 நியூரான்கள்) கொண்ட தாலமோகார்டிகல் படிமத்தின் நிகழ்நேர உருவகப்படுத்துதல் 2005 இல் நிகழ்த்தப்பட்டது. மேலும் 27 செயலிகளின் தொகுப்பால் 1 நொடிக்கு மூளை இயக்கவியலை உருவகப்படுத்த 50 நாட்கள் ஆனது.
செநுவைக் கடுமையான விமர்சிப்பவர்கள் கூட (கூபர்ட்டு திரேப்பசு, ஜான் சியர்லெ போன்றவர்கள் கூட) மூளையை உருவகப்படுத்துதல் கோட்பாட்டளவில் முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். " நாம் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால் , மனதை தெர்மோஸ்டாட்கள், லிவர்ஸ்களிலிருந்து வேறுபடுத்துவது எது என்பதே. அவர்மேலும் பின்வருமாறு எழுதுகிறார். இவ்வாறு, உயிருள்ள மூளையின் செயல்பாட்டை உருவகப்படுத்துவது என்பது நுண்ணறிவு, மனதின் தன்மை குறித்த அறியாமையை ஒப்புக்கொள்வது போன்றது. உயிருடன் இருக்கும் ஒரு பறவையைத் துல்லியமாக நகலெடுப்பதால் ஒரு தாரை விமானத்தை உருவாக்க முயற்சிப்பது போன்றது ஆகும்.
மனித சிந்தனை எனும் குறியீட்டு செயலாக்கம்
1963 ஆம் ஆண்டில் ஆலன் நெவெல்லும் எர்பர்ட்டு ஏ. சைமனும் " குறியீட்டு கையாளுதல் " மனித, எந்திர நுண்ணறிவு இரண்டின் சாரம் என்று முன்மொழிந்தனர். அவர்கள் எழுதினார்கள்.
" ஒரு இயற்பியல் குறியீட்டு அமைப்பு பொது அறிவார்ந்த செயலுக்குத் தேவையானதும் போதுமானதுமான வழிமுறைகளைக் கொண்டுள்ளது.
இந்த கூற்று மிகவும் வலுவானது. மனிதச் சிந்தனை என்பது ஒரு வகையான குறியீட்டு கையாளுதலே. நுண்ணுணர்வுக்கு ஒரு குறியீட்டு அமைப்பு கட்டாயம் வேண்டும். எந்திரங்கள் ஒரு அறிவாளிக்கு குறியீட்டு முறை போதுமானது என்பதால் அறிவாளியாக இருக்க முடியும்.
இந்த நிலைப்பாட்டின் மற்றொரு பதிப்பை மெய்யியலாளர் கூபர்ட்டு திரேப்பசுல் விவரித்தார் , அவர் அதை " உளவியல் கருதுகோள்" என்று அழைத்தார்.
" முறையான விதிகளின்படி தகவல்களைச் சிதறடிக்காமல் இயக்கும் ஒரு கருவியாக மனதை பார்க்க முடியும்.
நியூவெலும் சைமனும் திரேப்பசும் விவாதித்த குறியீடுகள் என்பது சொல் போன்றதும் மேலும் உயர் மட்டக் குறியீடுகளும் ஆகும் , அவை உலகில் உள்ள பொருள்களுடன் நேரடியாக ஒத்திருக்கின்றன. 1956 முதல் 1990 வரையில் எழுதப்பட்ட பெரும்பாலான செநு நிரல்கள் இந்த வகையான குறியீட்டைப்ப் பயன்படுத்தின. புள்ளியியல், கணித உகப்பாக்க முறைகளை அடிப்படையாகக் கொண்ட நவீன செநு, நெவெல்லும் சைமனும் விவாதித்த உயர் மட்ட " குறியீட்டு செயலாக்கத்தைப் " பயன்படுத்தவில்லை.
குறியீட்டுச் செயலாக்கத்திற்கு எதிரான வாதங்கள்
இந்த வாதங்கள் மனித சிந்தனையில் உயர் மட்ட குறியீட்டுக் கையாளுதல் மட்டுமே இல்லை என்பதைக் காட்டுகின்றன. செயற்கை நுண்ணறிவு அடப்பில் இயலாதது என்பதை அவை காட்டவில்லை. மாறாக - குறியீட்டு செயலாக்கத்தை விட மேலும் கூடுதலான தேவை ஒன்று உள்ளதைக் காட்டுகிறது.
கோடலியன் இயந்திர எதிர்ப்பு வாதங்கள்
1931 ஆம் ஆண்டில் குர்த்து கோதெல் ஒரு முழுமையற்ற தேற்றத்தை நிறுவினார். கொடுக்கப்பட்ட நிலையான முறையான தருக்க அமைப்பை (உயர் மட்டக் குறியீட்டுக் கையாளுதல் நிரல் போன்றவற்றை) நிறுவ முடியாது என்று கோதெல் ஓர் அறிக்கையை உருவாக்கினார். அது ஒருவகையில் எப்போதுமலியலும். ஓர் உண்மையான அறிக்கையாக இருந்தபோதிலும், கட்டமைக்கப்பட்ட கோதெல் அறிக்கை ஒரு கொடுக்கப்பட்ட தனி அமைப்பில் நிறுவப்படவில்லை. (கட்டமைக்கப்பட்ட கோதெல் அறிக்கையின் உண்மை கொடுக்கப்பட்ட அமைப்பின் நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது - அதே செயல்முறையை ஒரு நுட்பமான சீரற்ற அமைப்புக்கு பயன்படுத்துவது வெற்றிபெறுவதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் ஒரு தவறான அறிக்கையை வழங்கும். மெய்யியலாளர் ஜான் உலூகாசும் (1961 முதல்) உரோஜர் பென்ரோசும் (1989 முதல்) இந்த மெய்யியல் எதிர்ப்பு எந்திரவாதத்தை ஆதரித்துள்ளனர்.
கோதெலிய எந்திர எதிர்ப்புவாதங்கள் மனிதக் கணிதவியலாளர்களின் அமைப்பு (அல்லது மனித கணித வல்லுநர்களின் சில கருத்தியல்படுத்தல்) (பிழைகள் இல்லாமல்)சீரானவை எனவும் அதன் சொந்த நிலைப்பையும் முழுமையாக நம்புகின்றன. மேலும், அதன் கோதெலிய நம்பிக்கை உட்பட அதன் சொந்த நிலைப்பாட்டிலிருந்து பின்பற்றப்படும் அனைத்து தருக்க முறையான கருதுகோள்களையும் செய்ய முடியும் என்ற தீங்கற்ற கூற்றையும் நம்பியுள்ளன. ஒரு தூரிங்வகை எந்திரம் இதைச் செய்வது இயலாதது. (எனவே , மனிதப் பகுத்தறிவு ஒரு டூரிங்கின் இயந்திரத்தால் கைப்பற்ற முடியாத அளவுக்ந்த் திறன்வாய்ந்ததாக உள்ளது என்றும் , எந்த இலக்கவியல் இயந்திர சாதனத்தையும் நீட்டிப்பதன் வழியாக முடியும் என்றும் கோடேலியர் முடிவு செய்கிறார்.
இருப்பினும் , அறிவியல், கணிதச் சமூகத்தின் ஒருமித்த கருத்து என்னவென்றால் , உண்மையான மனிதப் பகுத்தறிவு முரண்பாடாக உள்ளது. மனிதப் பகுத்தறிவின் எந்தவொரு நிலையான " கருத்தியல்படுத்தப்பட்ட பதிப்பும் " தருக்க முறையாக H இன் நிலைத்தன்மையைப் பற்றிய ஆரோக்கியமான ஆனால் எதிர் உள்ளுணர்வு திறந்த மனதுடன் ஐயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இல்லையெனில் H நிறுவக்கூடிய வகையில் சீரற்றதாகும். மேலும்ம் கோதெலின் கோட்பாடுகள் மனிதர்களுக்குக் கணித பகுத்தறிவு திறன்கள் உள்ளன என்ற எந்தவொரு சரியான வாதத்திற்கும் வழிவகுக்காது. ஒரு எந்திரம் எப்போதும் நகலெடுக்க முடியும். கோதெலிய எந்திர எதிர்ப்பு வாதங்கள் தோல்விக்குத் தள்ளப்படும் என்ற இந்த ஒருமித்த கருத்து செயற்கை நுண்ணறிவில் வலுவாக வகுக்கப்பட்டுள்ளது. " பயன்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் கோதெலின் முழுமையற்ற முடிவுகள் கணக்கீட்டு ஆய்வறிக்கையைத் தாக்குவதற்கு சட்ட எதிரானது. ஏனெனில் இந்த முடிவுகள் கணக்கீட்டு ஆய்வுக் கட்டுரையுடன் மிகவும் ஒத்துப்போகின்றன.
கோதெலின் வாதம் நிலவும் உலக மனிதப் பகுத்தறிவின் தன்மையைக் கருத்தில் கொள்ளவில்லை என்பதை ஸ்டூவர்ட் இரசலும் பீட்டர் நோர்விக்கும் ஒப்புக்கொள்கிறார்கள். வரம்பற்ற நினைவகத்தையும் நேரத்தையும் கொடுத்தால் கோட்பாட்டளவில் நிறுவக்கூடியவற்றுக்கு இது பொருந்தும். நடைமுறையில் உண்மையான எந்திரங்கள் (மனிதர்கள் உட்பட) வரையறுக்கப்பட்ட வளங்களையே கொண்டுள்ளன. மேலும் பல கோட்பாடுகளை நிறுவுவதில் சிக்கலும் இருக்கும். ஒரு அறிவாளியாக இருக்க எல்லாவற்றையும் நிறுவ வேண்டும் என்ற கட்டாயமில்லை.
தக்ளசு கோப்சுட்டாடிலர் தனது புலிட்சர் பரிசு வென்ற கோரெல் , எசுச்சர்r, பாக்: An Eternal golden Braid எனும் செயர்கை நுண்ணறிவுʼ நூலில் குறிப்பிடுகையில் , " இந்தக் கோதெலின் கூற்றுகள் எப்போதும் அமைப்பையே சுட்டுகின்றன. இது "தங்களைக் குறிக்கும் கூற்றுக்களைப் பயன்படுத்தும் வகைக்கு ஓர் ஒப்புமையைச் சுட்ட எப்போதும் இந்த அறிக்கை தவறானது அல்லது " நான் பொய் சொல்கிறேன்.".எனும் எப்பிமினடெசின் முரண்புதிர் ஒப்புமையையே வழங்குகிறது. ஆனால் எப்பிமினடெசு முரண்புதிர் , அறிக்கைகளை வெளியிடும் எந்த பொருண்மைக்கும் பொருந்தும். அவை எந்திரங்களாக இருந்தாலும் சரி அல்லது மனிதர்களாக இருந்தாலும் சரி. இதை உலூக்காசும் கூட. கருதியுள்ளார்.
இந்த கூற்றின் உண்மையை லூகாசால் கூட வலியுறுத்த முடியாது.
இந்த கூற்று உண்மைதான் , ஆனால் லூகாசால் கூட வலியுறுத்த முடியாது. எல்லா மக்களையும் போலவே எந்திரங்களுக்கும் அவர் விவரிக்கும் அதே வரம்புகளுக்கும் உலூகாசும் உட்பட்டவர் என்பதை இது காட்டுகிறது , எனவே லூகாசின் வாதம் பொருளற்றது.
குவைய எந்திர நிலைகளின் சரிவை உள்ளடக்கிய ஒருவித கற்பனையாகக் கணக்கிட முடியாத செயல்முறைகள் தற்போதுள்ள கணினிகளை விட மனிதர்களுக்கு ஒரு சிறப்பு நன்மையை அளிக்கின்றன என்று பென்ரோசு விவாதத்துக்குரிய வகையில் ஊகித்தார். தற்போதுள்ள குவையக் கணினிகள் தூரிங் கணக்கிடக்கூடிய பணிகளின் சிக்கலையும் கூட குறைக்கும் திறன் கொண்டவை. மேலும் அவை இன்னும் தூரிங் எந்திரங்களின் எல்லைக்குள் உள்ள பணிகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படுகின்றன. பென்ரோசு, உலூகாஸின் வாதங்களின்படி குவையக் கணினிகளால் மட்டுமே தூரிங் கணக்கிடக்கூடிய பணிகளை முடிக்க முடியும் என்ற உண்மை , அவை மனித மனதைப் பின்பற்றுவதற்கு போதுமானதாக இருக்க முடியாது என்பதைச் சுட்டுகிறது. இந்த நிலைகள் நரம்பணுக்களுக்குள் நிகழ்கின்றன. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட நரம்பணுக்களுக்குப் பரப்புகின்றன என்று அவர் பரிந்துரைத்தார். இருப்பினும் , மற்ற விஞ்ஞானிகள் , எந்தவொரு குவையக் கணக்கீட்டையும் பயன்படுத்துவதற்கு மூளையில் நம்பத்தகுந்த உயிர்வேதிப்ப் பொறிமுறை ஏதும் இல்லை என்றும் , மேலும் குவையக் கணிப்பின் கால அளவு விறைவில் நரம்பணுவுக்குத் தூண்டுதலை மிக வேகமாகக் கடத்தத் தெரிகிறது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
திரேப்பசு: மறைமுகமான திறன்களின் முதன்மை
மனித நுண்ணறிவும் வல்லமையும் படிப்படியாக குறியீட்டு கையாளுதல்களைக் காட்டிலும் விரைவான உள்ளுணர்வுத் தீர்ப்புகளை முதன்மையாக சார்ந்துள்ளது என்று கூபர்ட்டு திரேப்பசு வாதிட்டார் , மேலும் இந்த திறன்கள் ஒருபோதும் முறையான விதிகளில் கைப்பற்றப்பட முடியாது என்றும் வாதிட்டார்.
திரேப்பசின் வாதத்தை தூரிங் தனது 1950 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையான கணிப்பு எந்திரங்களும் நுன்ணறிவும் எனும் நூலில் எதிர்பார்த்தார் , அங்கு அவர் இதை " நடத்தையின் முறைசாரா தன்மையிலிருந்தான வாதம் " என்று வகைப்படுத்தினார். இதற்கு பதிலளித்த தூரிங் , ஒரு சிக்கலான நடத்தையை ஆளும் விதிகள் நமக்குத் தெரியாததால் , அத்தகைய விதிகள் இல்லை என்று பொருளல்ல. அவர் எழுதினார். " முழுமையான நடத்தை விதிகள் இல்லாததை நாம் அவ்வளவு எளிதில் நம்ப முடியாது. இத்தகைய சட்டங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி அறிவியல் நோக்கீடு மட்டுமே , மேலும் ' நாங்கள் போதுமான அளவு தேடினோம் ' என்று சொல்லக்கூடிய எந்த சூழ்நிலையும் எங்களுக்குத் தெரியாது. " அப்படி எந்தச் சட்டமும் இல்லை. " என்றார் ".
டிரைஃபஸ் தனது விமர்சனங்களை வெளியிட்டதிலிருந்து பல ஆண்டுகளில் , மயங்குநிலை பகுத்தறிவை ஆளுகும் விதிகளைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று இரசலும் நோர்விக்கும் சுட்டிக் காட்டுகின்றனர். எந்திரனியல் ஆராய்ச்சியில் அமைந்துள்ள இயக்கம் நமது மயங்குநிலைத் திறன்களை புலனுணர்விலும் கவனத்திலும் கொள்ள முயல்கிறது. நரம்பியல் வலைப்பிணையங்கள் படிமலர்ச்சி வழிமுறைகளைப் போன்ற கணக்கீட்டு நுண்ணறிவு முன்வகைமைகள் பெரும்பாலும் உருவகப்படுத்தப்பட்ட மயங்குநிலைப் பகுத்தறிவு, கற்றல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை. செயற்கை நுண்ணறிவுக்கான புள்ளியியல் அணுகுமுறைகள் மனித உள்ளுணர்வு ஊகங்களின் துல்லியத்தை அணுகும் கணிப்புகளைச் செய்ய முடியும். பொதுப்புலன் அறிவு பற்றிய ஆராய்ச்சி , பின்னணி அல்லது அறிவின் சூழலை மீளாக்கம் செய்வதில் கவனம் செலுத்தியுள்ளது. உண்மையில் , செநு ஆராய்ச்சி பொதுவாக உயர் மட்டக் குறியீடு கையாளுதலில் இருந்து விலகி , நமது உள்ளுணர்வுப் பகுத்தறிவைப் பிடிக்க விரும்பும் புதிய படிமங்களை நோக்கி நகர்ந்துள்ளது.
அறிதலியலும் உளவியலும் இறுதியில் மனித நுண்ணறிவு குறித்த திரேப்பசின் விளக்கத்துடன் உடன்பட்டன. டேனியல் கானேமனும் மற்றவர்களும் இதே போன்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கினர் , அங்கு அவர்கள் இரண்டு அமைப்புகளை அடையாளம் கண்டனர் , அவை மனிதர்கள் சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்துகின்றன , அவை னமைப்பு 1 " (விரைவான உள்ளுணர்வு தீர்ப்புகளைச் செய்யும்) மேலும் " அமைப்பு 2 " (படிப்படியான சிந்தனையின் படி மெதுவாகத் தீர்ப்பவை ) என்று அழைக்கப்பட்டன.
டிரேய்பஸின் கருத்துக்கள் பல வழிகளில் நிறுவப்பட்டிருந்தாலும், அவை அறிதல் அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் குறிப்பிட்ட சிக்கல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இருந்தன. மேலும் திரேப்பசால் நேரடியாக தாகமுறவில்லை. வரலாற்றாசிரியரும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளருமான தானியேல் கிரெவியர் , " திரேப்பசின் சில கருத்துகளின் துல்லியத்தையும் புலனுணர்வையும் காலம் நிறுவியுள்ளது " என்று எழுதினார். அவர் அவற்றை குறைவான வீறியத்துடன் வடிவமைத்திருந்தால் , அவர்கள் பரிந்துரைத்த ஆக்கநிலை நடவடிக்கைகள் மிக முன்னதாகவே எடுக்கப்பட்டிருக்கலாம்.
ஒரு எந்திரம் மனமும் உணர்வும் மன நிலைகளும் கொண்டிருக்க முடியுமா ?
இது பிற மனங்களின் சிக்கலும் நனவின் கடினமான சிக்கலும் தொடர்பான ஒரு மெய்யியல் கேள்வி ஆகும். ஜான் சியர்லே வரையறுத்த ஒரு " வலுவான செநு " என்ற நிலைப்பாட்டைச் சுற்றியே இந்த கேள்வி சுழல்கிறது
ஒரு புறக் குறியீட்டு அமைப்பு ஒரு மனம், உணர்வு, மன நிலைகளைக் கொண்டிருக்கலாம்.
சியர்லே இந்த நிலையை அவர் " நலிவான செநு " என்று அழைத்ததிலிருந்து வேறுபடுத்தினார்.
ஒரு இயற்பியல் குறியீட்டு அமைப்பு நுண்ணறிவுடன் செயல்பட முடியும்.
சியர்ல் வலுவான ஸேஆற்ௐஆஈ ணூண்ணாறீஊ ஐ நலிவான ஸேஆற்ௐஆஈ ணூண்ணாறீஊ இலிருந்து தனிமைப்படுத்துவதற்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்தினார் , இதனால் அவர் மிகவும் சுவையானதும் விவாதிக்கக்கூடியதுமான சிக்கல் என்று நினைத்ததில் கவனம் செலுத்த முடியும்.. மனித மனதைப் போலவே செயல்படும் ஒரு கணினி நிரல் எங்களிடம் இருப்பதாக நாம் கருதினாலும் , இன்னும் ஒரு கடினமான மெய்யியல் கேள்வி இருக்கிறது , அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.
சியர்லின் இரண்டு நிலைகளும் செநு ஆராய்ச்சிக்கு பெரும் அக்கறை காட்டவில்லை , ஏனெனில் அவை " ஓர் எந்திரம் பொது நுண்ணறிவை வெளிப்படுத்த முடியுமா " என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. " நனவைப் பற்றி எந்த மர்மமும் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்ற எண்ணத்தை நான் கொடுக்க விரும்பவில்லை. [ ஆனால் எந்திரங்கள் சிந்திக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பு இந்த மறுமங்களை தீர்க்க வேண்டிய கட்டாயயம் இல்லை என்று நான் நினைக்கவில்லை என இரசலும் நோர்விக்கும் ஒப்புக்கொள்கிறார்கள். " பெரும்பாலான செயற்கைநுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள் நலிவான செயற்கைநுண்ணறிவு கருதுகோளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், வலுவான செயற்கைநுண்ணறிவு கருதுகோளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
இகோர் அலெக்சாந்தர், சுட்டான் பிராங்ளின், இரான் சன், பென்ட்டி ஐக்கோனென் போன்ற அறிதலியலில் ஒரு கட்டாய உறுப்பினர் என்று நம்பும் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர் , இருப்பினும் அவர்களின் " நனவு " பற்றிய வரையறை நுண்ணறிவுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. ( காண்க, செயற்கை உணர்வு )
இந்தக் கேள்விக்கு நாம் பதிலளிப்பதற்கு முன் மனம், மனநிலை, நனவு என்பதன் பொருள் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கூற வேண்டும்.
நனவு, மனம், மனநிலைகள் ஆகியவற்றின் பொருள்
" மனம் " , " உணர்வு " என்ற சொற்கள் வெவ்வேறு சமூகங்களால் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துகாட்டாக , சில புத்தூழிச் சிந்தனையாளர்கள் பெர்க்சனின் " எலான் விட்டால் " போன்ற ஒன்றை விவரிக்க " நனவு " என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இது வாழ்க்கையையும் குறிப்பாக மனதையும் ஊடுருவிச் செல்லும் ஒரு கண்ணுக்கு தெரியாத ஆற்றல்மிக்க பாய்மம்.. அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் இந்தச் சொல்லை நம்மை மனிதர்களாக மாற்றும் சில இன்றியமையாத இயல்புகளை விவரிக்க பயன்படுத்துகின்றனர். ஒரு எந்திரம் அல்லது அயலர் விருப்பங்கள் , நுண்ணறிவு , செயலுறுதி,உள்நோக்கு, பெருமை போன்ற பலவற்றுடன் ஒரு முழுமையான மனித கதாபாத்திரமாகவே வழங்கப்படும். (அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் இந்த முதன்மைய்யன் மனினியல்புகளை விவரிக்க " உணர்ச்சி " மாந்தமைவு " தன் விழிப்புணர்வு அல்லது " பேய் " என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர். ஷெல் மங்கா, அனிம் தொடர்களில் உள்ள பேய் போல. மற்றவர்களுக்கு " மனம் " அல்லது " உணர்வு " என்ற சொற்கள் ஆன்மாவுக்கு ஒரு மாற்றுவகையான மதச்சார்பற்ற ஒத்த பொருள் சொற்களைப் பயன்படுத்தப்படுகின்றன.
மெய்யியல் அறிஞர்கள், நரம்பியலாளர்கள், அறிதசார் அறிஞர்களுக்கு இந்த சொற்கள் மிகவும் துல்லியமாகவும் மிகவும் எளிய வகையிலும் பயன்படுத்தப்படுகின்றன. அவை " உங்கள் மனதில் ஒரு கருத்து போன்ற சிந்தனை , ஒரு கனவு , ஓர் உள்நோக்கம் அல்லது ஒரு திட்டம், நாம் எதையாவது பார்த்தல் , எதையாவது தெரிந்து கொள்ளல் , எதையாவது புரிந்து கொள்ளல் " போன்ற பழக்கமான அன்றாட புலனறிவைக் குறிக்கின்றன. மறுமமான, கவர்ச்சியான பொருண்மை என்னவென்றால் அது என்ன என்பது அல்ல , அது எப்படி இருக்கிறது என்பதுதான். கொழுப்பிழையத் திரள் அல்லது மின்சாரம் எப்படி பொருள் அல்லது சிந்தனையை உணரும் புலனறிவுக்கு வழிவகுக்கிறது?
மெய்யியலாளர்கள் இதை நனவின் கடினமான சிக்கல் என்று அழைக்கிறார்கள். இது மன மெய்யியலில் " மனம் - உடல் சிக்கல் " என்று அழைக்கப்படும் ஒரு உயர்நிலைச் சிக்கலின் நெருங்கிய பதிவமாகும். தொடர்புடைய ஒரு சிக்கல் என்பது பொருள் அல்லது புரிதலின் சிக்கலாகும். (இதை எய்யியலாளர்கள் " தற்செயல் " என்று அழைக்கிறார்கள். உலகில் உள்ள பொருள்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கும் நமது எண்ணங்களுக்கும் நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோம் என்பதற்கும் உள்ள தொடர்பு என்ன? மூன்றாவது சிக்கல் பட்டறிவின் சிக்கல் (அல்லது " நிகழ்வியல் ") ஆகும்: இரண்டு பேர் ஒரே பொருளைப் பார்த்தால் , அவர்களுக்கு ஒரே பட்டறிவு ஏற்படுகிறதா ? அல்லது அவர்களின் தலைக்குள் (" பண்பன் " என்று அழைக்கப்படும்) நபருக்கு நபர் வேறுபடக்கூடிய பொருண்மைகள் உள்ளனவா ?
நரம்பியல் வல்லுநர்கள் நனவின் நரம்பியல் தொடர்புகளை அடையாளம் காணத் தொடங்கும்போது, நம் தலையில் உள்ள எந்திரங்களுக்கும் அதன் கூட்டு பண்புகளுக்கும் இடையிலான உண்மையான உறவு சார்ந்தச் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று நம்புகிறார்கள். . செயற்கை நுண்ணறிவை கடுமையாக விமர்சிக்கும் சிலர் மூளை ஒருஏந்திரம் மட்டுமே என்றும் , நனவும் நுண்ணுணர்வும் மூளையில் உள்ள உடல் செயல்முறைகளின் விளைவாகும் என்றும் ஒப்புக்கொள்கிறார்கள். கடினமான மெய்யியல் கேள்வி இது. இரும எண்களாகிய சுழியையும்(0) ஒன்றையும்(1) கலந்து இயங்கும் இலக்கவியல் கணினியின் நிரல் , மனநிலைகளுடன் மனதை உருவாக்கும் நரம்பணுக்களின் திறனை நகலெடுக்க முடியுமா (புரிதல் அல்லது உணர்தல் போன்றவை) மற்றும் இறுதியில் நனவெனும் பட்டறிவை உருவாக்க முடியுமா ?
ஒரு கணினிக்கு மனமும் மன நிலைகளும் நனவும் இருக்க முடியாது என்ற வாதங்கள்
சியர்லின் சீன அறை
ஜான் சியர்லே ஒரு சிந்தனைச் செய்முறையைக் கருதுமாறு கேட்கிறார். தூரிங் செய்முறையில் தேர்ச்சி பெற்று பொதுவான அறிவார்ந்த செயலை நிறுவும் ஒரு கணினி நிரலை நாங்கள் எழுதியிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நிரல் சரளமாக சீன மொழியில் உரையாட முடியும் என்று வைத்துக்கொள்வோம். 3x5 அட்டைகளில் நிரலை எழுதி , சீன மொழி பேசாத ஓர் எளிய நபருக்கு அவற்றைக் கொடுங்கள். அந்த நபரை ஒரு அறையில் பூட்டி , அட்டைகளில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றச் செய்யுங்கள். அவர் சீன எழுத்துக்களை நகலெடுத்து ஒரு ஒரு துளையின் வழியாக அறைக்குள்ளும் வெளியேயும் அனுப்புவார். வெளியில் இருந்து பார்த்தால் , சீன அறையில் சீன மொழி பேசும் ஒரு முழுமையான நுண்ணறிவு நபர் இருப்பதாகத் தோன்றும். கேள்வி இதுதான். யாராவது (அல்லது ஏதாவது) அறையில் சீன மொழியைப் புரிந்துகொள்கிறார்களா ? அதாவது புரிதலின் மனநிலையைக் கொண்ட அல்லது சீன மொழியில் விவாதிக்கப்படுவதைப் பற்றிய நனவான விழிப்புணர்வைக் கொண்ட ஏதேனும் இருக்கிறதா ? அந்த மனிதனுக்கு தெளிவாகத் தெரியாது. அறையாலும் அறிய முடியாது. அட்டைகளுக்கும் உறுதியாகத் தெரியாது. எனவே, சீன அறை அல்லது வேறு எந்த புறநிலைக் குறியீட்டு அமைப்புக்கும் மனம் இருக்க முடியாது என்று சியர்லே முடிக்கிறார்.
உண்மையான மன நிலைகளுக்கும் நனவுக்கும் உண்மையான மனித மூளையின் உண்மையான உடல்வேதியியல் பண்புகள் தேவை என்று சியர்லே வாதிடுகிறார். மூளை, நரம்பணுக்களின் சிறப்புக்கான உடலியக்கக் காரணிகள் உள்ளன என்று அவர் வாதிடுகிறார் , அவை மனதை உருவாக்குகின்றன. அவரது வார்த்தைகளில் " மூளை மனதை ஏற்படுத்துகிறது.
தொடர்புடைய வாதங்கள்: இலீபினிசுடைய ஆலை, டேவிசுடைய தொலைபேசி தொடர்பகம், பிளாக்கின் சீன நாடும் கரும்பெட்டியும்
கோட்பிரீடு இலீப்னிசு 1714 ஆம் ஆண்டில் சியர்லேவைப் போலவே ஒரு ஆலை அளவு வரை மூளையை விரிவுபடுத்துவதற்கான சிந்தனை செய்முறையைப் பயன்படுத்தி அதே வாதத்தை முன்வைத்தார். 1974 ஆம் ஆண்டில் இலாரன்சு டேவிசு தொலைபேசித் தொடர்பகங்களைப் பயன்படுத்தி மூளையை நகலெடுத்தலைக் கற்பனை செய்தார் , 1978 ஆம் ஆண்டில் நெட் பிளாக் சீனாவின் முழு மக்களையும் அத்தகைய மூளை உருவகப்படுத்துதலில் ஈடுபடுத்திக் கொண்டார். இந்த சிந்தனைச் செய்முறை " சீன நாடு " அல்லது " சீடூடற்பியிற்சி " என்று அழைக்கப்படுகிறது. நெட் பிளாக் தனது கௌம்பெட்டி வாதத்தையும் முன்மொழிந்தார் , இது சீன அறையின் மாற்றுப் பதிப்பாகும் , இதில் நிரல் ஒரு எளிய விதிகளின் வடிவமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்நிலை " இதைப் பார்க்கவும் " "அதைச் செய்யவும் " போன்ற நிரலில் இருந்தான அனைத்து மறுமங்களையும் அகற்றுகிறது..
சீன அறைக்கான பதில்கள்
சீன அறைக்கான பதில்கள் பல்வேறு கருத்துகளை வலியுறுத்துகின்றன.
அமைப்புகள், மெய்நிகர் மனத்தின் பதில்: இந்தப் பதில் , நிரல் , அறை, அட்டைகள் உள்ளிட்ட அமைப்பு சீன மொழியைப் புரிந்துகொள்கிறது என்று வாதிடுகிறது. சியர்லே , அறையில் உள்ள மனிதனுக்கு மட்டுமே " ஒரு மனநிலை அல்லது புரிதல் " இருக்க முடியும் என்று கூறுகிறார் , ஆனால் மற்றவர்கள் ஒரே பொருள் இடத்தில் இரண்டு மனங்கள் இருக்க முடியும் என்று வாதிடுகிறார்கள். ஒரு கணினி ஒரே நேரத்தில் இரண்டு எந்திரங்களை உருவாக்க முடியும். இவற்றில் ஒன்று உடல் ( இது ஓர் அமைப்பு) மற்றொன்று மெய்நிகர் ( இது ஒரு சொற்செயலி போன்றது) ஆகும்.
வேகமும், திறனும் சிக்கல்திறமும் சார்ந்த பதில்: அறையில் உள்ள மனிதர் ஒரு எளிய கேள்விக்குப் பதிலளிக்க மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும் என்றும் , அதற்கு வானியலளவுக்குத் " தாக்கல் செய்யும் பெட்டிகள் " தேவைப்படும் என்றும் பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது சியர்லேவின் உள்ளுணர்வின் தெளிவை ஐயத்துக்கு உள்ளாக்குகிறது.
எந்திரன் பதில்: உண்மையாகவே புரிந்துகொள்ள , சீன அறைக்கு கண்களும் கைகளும் தேவை என்று சிலர் நம்புகிறார்கள். ஆன்சு மொராவெக் எழுதுகிறார் " ஒரு எந்திரனைப் பகுத்தறிவு திட்டம் ஒன்றுக்கு நாம் பெற முடிந்தால் , இனி பொருளை வழங்க, வேறு ஒரு நபர் தேவையில்லை. அது உடல் உலகத்திலிருந்தே எழும்.
மூளை உருவகப்படுத்தி பதில்: நிரல் ஒரு உண்மையான சீன பேச்சாளரின் உண்மையான மூளையின் தூண்டிணைப்புகளில் நரம்அனின் துப்பாக்கிச் சூட்டின் வரிசையை உருவகப்படுத்தினால் என்ன செய்வது அறையில் உள்ள மனிதன் ஒரு உண்மையான மூளையை உருவகப்படுத்துவார். இது அமைப்புசார் பதிலில் ஒரு மாறுபாடு , இது மிகவும் நம்பத்தகுந்ததாகத் தோன்றுகிறது , ஏனெனில் " அமைப்பு இப்போது ஒரு மனித மூளையைப் போல தெளிவாக செயல்படுகிறது , இது சீன மொழியைப் புரிந்துகொள்ளக்கூடிய அறையில் உள்ள மனிதனைத் தவிர வேறு ஏதாவது இருக்கிறது என்ற உள்ளுணர்வை வலுப்படுத்துகிறது.
பிற மனங்கள் பதிலும் புறநிகழ்வுவழி பதிலும்: சியர்லே வாதம்ஏந்திரங்களில் பயன்படுத்தப்படும் பிற மனங்கள் சிக்கலின் ஒரு பதிவம் மட்டுமே என்று பலர் குறிப்பிட்டுள்ளனர். மக்கள் உண்மையில் சிந்திக்கிறார்களா என்பதைத் தீர்மானிப்பது கடினம் என்பதால் எந்திரங்களைப் பற்றிய அதே கேள்விக்குப் பதிலளிப்பதும் கடினம் என்பதிலும் வியப்பேதுமில்லை.
இது தொடர்பான கேள்வி என்னவென்றால் , " நனவு " (சியர்லே புரிந்துகொண்டபடி) இருக்கிறதா ? ஒரு எந்திரத்தின் நடத்தை - ஒரு மனிதனின் அல்லது வேறு எந்த விலங்கின் நடத்தையையும் ஆராய்வதால் நனவின் பட்டறிவைக் கண்டறிய முடியாது என்று சியர்லே வாதிடுகிறார். இயற்கைத் தேர்வு என்பது விலங்குகளின் நடத்தையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத ஒரு விலங்கின் கூறைப் பாதுகாக்க முடியாது என்றும் இதனால் நனவை (சியர்லே புரிந்துகொண்டபடி) இயற்கைத் தேர்வால் உருவாக்க முடியாது என்றும் தானியேல் தென்னெட்டு சுட்டிக்காட்டுகிறார். எனவே இயற்கைத் தேர்வு நனவை உருவாக்கவில்லை. அல்லது " வலுவான ஸேஆற்ௐஆஈ ணூண்ணாறீஊ " சரியானது , அந்த நனவை பொருத்தமாக மாற்றி வடிவமைக்கப்பட்ட தூரிங் செய்முறையால் கண்டறிய முடியும்.
ஒரு சிந்தனை என்பது ஒரு கணிப்பு நிகழ்வா?
மனதின் கணக்கீட்டுக் கோட்பாடு அல்லது " கணிப்புவாதம் " மனதுக்கும் மூளைக்கும் இடையிலான உறவை ஒத்து இருப்பதாகக் கூறுகிறது. இயங்கும் நிரலுக்கு இடையிலான உறவுக்கு ஒத்து இல்லாவிட்டால், மென்பொருளும் கணினியும் (வன்பொருளும்) எனும் இந்த எண்ணக்கருகோப்சின் மெய்யியல் வேர்களைக் கொண்டுள்ளது. அவர் பகுத்தறிவைக் கணக்கிடுவதைத் தவிர வேறொன்றுமில்லை என்று கூறினார். இலீப்னிசு அனைத்து மனிதக் கருத்துக்களையும் சார்ந்த தருக்க முறையான நுண்கணிதத்தை உருவாக்க முயன்றவர். கியூம் கருத்து, உணர்வை அணுத் தாக்கங்களாகக் குறைக்க முடியும் என்று நினைத்தவர். கான்ட் முறையான விதிகளால் கட்டுப்படுத்தப்பட்ட அனைத்து புலனறிவுகளையும் பகுப்பாய்வு செய்தவர்.. இதன் அண்மைய எண்ணவோட்டம் மெய்யியலாளர்களான இலாரி புட்னாம், ஜெரி போதோர் ஆகியோருடன் தொடர்புடையது.
இந்த கேள்வி நமது முந்தைய கேள்விகளைத் தாங்குகிறது. மனித மூளை ஒரு வகையான கணினியாக இருந்தால் , கணினிகள் அறிவார்ந்தனவாகவும் நனவுடனும்ம் இருக்க முடியும். இது செநுவின் நடைமுறை, மெய்யியல் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. செநுவின் நடைமுறை கேள்வியைப் பொறுத்தவரை ஓர் எந்திரம் பொது நுண்ணறிவைக் காட்ட முடியுமா ?
பகுத்தறிவு என்பது கணக்கிடுவதைத் தவிர வேறில்லையா?
வேறு சொற்களில் கூறுவதானால் , நமது நுண்ணறிவு எண்கணிதத்தைப் போன்ற கணக்கீட்டு வடிவத்திலிருந்து பெறப்படுகிறது. இது மேலே விவாதிக்கப்பட்ட இயற்பியல் குறியீட்டு அமைப்பு கருதுகோளையும் செயற்கை நுண்ணறிவு இயலும் என்பதையும் குறிக்கிறது. செநுவின் மெய்யியல் கேள்வியைப் பொறுத்தவரை, ஓர் எந்திரம் மனநிலையையும் நனவையும் கொண்டிருக்க முடியுமா ?
மன நிலைகள் என்பன கணினி நிரல்களின் சரியான செயல்பாடுகள் மட்டுமே.
இது மேலே விவாதிக்கப்பட்டஜான் சியர்லேயின் வலுவான ஸேஆற்ௐஆஈ ணூண்ணாறீஊ ஆகும் , மேலும் இது ஆர்னாடின் கூற்றுப்படி,.சீன அறை வாதத்தின் உண்மையான இலக்காகும்.
இது தொடர்பான பிற கேள்விகள்
ஒரு இயந்திரத்துக்கு உணர்ச்சிகள் இருக்க முடியுமா ?
உணர்ச்சிகள் நடத்தை மீதான அவற்றின் விளைவு அல்லது ஒரு உயிரினத்திற்குள் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதன் அடிப்படையில் மட்டுமே வரையறுக்கப்பட்டால் , உணர்ச்சிகளை ஒரு அறிவார்ந்த முகவர் அதன் செயல்களின் பயன்பாட்டை அதிகரிக்க பயன்படுத்தும் ஒரு பொறிமுறையாக பார்க்க முடியும். உணர்ச்சியின் இந்த வரையறையைப் பொறுத்தவரை , தஆன்சு மொராவெக் " பொதுவாக எந்திரன்கள் நல்ல மனிதர்களாக இருப்பதில் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள் " என்று நம்புகிறார். அச்சம் என்பது ஆத்திரத்தின் சான்றாகும. நல்ல மனிதக் கணினி தொடர்புக்குக் கழிவிரக்கம் ஒரு கட்டாயமான கூறாகும்மெந்திரன்கள் " வெளிப்படையாக தன்னலமற்ற முறையில் உங்களை மகிழ்விக்க முயலும் , ஏனெனில் இந்த நேர்மறையான வலுவூட்டலிலிருந்து அது ஒரு சிலிர்ப்பைப் பெறும் " என்று அவர் கூறுகிறார். இதை நீங்கள் ஒரு வகையான காதல் என்று விளக்கலாம். தானியேல் கிரெவியர் பின்வருமாறு எழுதுகிறார்." உணர்ச்சிகள் என்பது ஒருவரின் உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கு நன்மை பயக்கும் திசையில் நடத்தையைச் செலுத்துவதற்கான கருவிகள் மட்டுமே என்பது மொராவெக்கின் கருத்து.
ஒரு இயந்திரம் தானாக முழுமுதல் ஆக்கநிலை வாய்ந்ததாக இருக்க முடியுமா ?
மேலே குறிப்பிட்டுள்ளபடி தன் விழிப்புணர்வு சில நேரங்களில் அறிவியல் புனைகதை எழுத்தாளர்களால் ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக மனிதனாக்கத் தேவைப்படும் மனித இயல்புகளுக்கு ஒரு பெயராக பயன்படுத்தப்படுகிறது. தூரிங் மனிதர்களின் மற்ற அனைத்து பண்புகளையும் துண்டித்து , " ஒரு எந்திரம் அதன் சொந்தச் சிந்தனைக்கு உட்பட்டதாக இருக்க முடியுமா " என்ற கேள்வியைக் குறைக்கிறது. அது தன்னைப் பற்றி சிந்திக்க முடியுமா ? இந்த வழியில் பார்க்கப்படும் ஒரு நிரலை ஒரு பிழைத்திருத்தம் போன்ற அதன் சொந்த உள்நிலைகளில் முறையிட முடியும்.
ஒரு எந்திரம் நலம்பயப்பதாகவும் தீங்கிழைப்பதாகவும் இருக்க முடியுமா ?
ஒரு எந்திரம் நம்மை வியக்க வைக்க முடியுமா என்ற கேள்விக்கு தூரிங் இதைக் குறித்து , எந்தவொரு நிரலரும் சான்றளிக்க முடியும் என்பதால் இது வெளிப்படையாக உண்மை என்று வாதிடுகிறார். போதுமான தேக்கத்திறன் கொண்ட ஒரு கணினி வானியல் அளவு எண்ணிக்கையில் வெவ்வேறு வழிகளில் செயல்பட முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார். எண்ணக்கருக்களை புதிய வழிகளில் இணைக்கக்கூடிய ஒரு கணினிக்கு எளிய கருத்துக்கள் கூட இயல வேண்டும். (தக்ளசு இலெனாட்டினது தானியங்கி கணிதவியலாளர் ஒரு எடுத்துக்காட்டு , புதிய கணித உண்மைகளைக் கண்டறிய கருத்துக்களை இணைத்தார்.) கப்லானும் என்லெய்னும் எந்திரங்கள் அறிவியல் படைப்பாற்றலை வெளிப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர் , அதே நேரத்தில் கலைப் படைப்பாற்றலைப் பொறுத்தவரை மனிதர்களுக்கு ஓங்குதிறம் இருக்கும் என்று தெரிகிறது.
2009 ஆம் ஆண்டில் , வேல்சு அபெரிசுத்வித் பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்ந்த விஞ்ஞானிகள் ஆதாம் எனும் எந்திரனை வடிவமைத்தனர் , இது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தானாகவே கொண்டு வந்த முதல் எந்திரம் என்று அவர்கள் நம்புகிறார்கள். 2009 ஆம் ஆண்டில் கார்னெல் ஆராய்ச்சியாளர்கள் யூரேகா என்ற கணினி நிரலை உருவாக்கினர் , இது ஊசல் இயக்கத்திலிருந்து இயக்க விதிகளைக் கண்டுபிடிப்பது போன்ற உள்ளிடப்பட்ட தரவுகளுக்கு பொருந்தக்கூடிய வாய்பாடுகளை விரிவுபடுத்துகிறது.
ஒரு இயந்திரம் தானாக விழிப்புணர்வுடன் இருக்க முடியுமா?
இந்தக் கேள்வியை (செயற்கை நுண்ணறிவின் மெய்யியலாளர்கள் பலரைப் போலவே) இரண்டு வடிவங்களில் முன்வைக்க முடியும். " விருந்தோம்பல் " என்பதைச் செயல்பாடு அல்லது நடத்தை அடிப்படையில் வரையறுக்கலாம். இந்தப் பொருளில் " விருந்தாளி " என்பது " ஆபத்தான " என்பதை ஒத்ததாக மாறும். அல்லது அந்நோக்கத்தின் அடிப்படையில் வரையறுக்கப்படும் ஓரரெந்திரம் வேண்டுமென்றே தீங்கு செய்ய முடியுமா? எனும் கேள்வி எழும். பிந்தைய கேள்வி என்னவென்றால் , " ஒரு எந்திரம் நனவு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமா? என்பதே.
மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் முற்றிலும் தன்னாட்சி பெற்ற எந்திரங்கள் ஆபத்தானவையா என்ற கேள்வி எதிர்காலவாதிகளால் ( எந்திர நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் போன்றவை) விரிவாக ஆராயப்பட்டுள்ளது. நாடகத்தின் வெளிப்படையான கூறு அறிவியல் புனைகதைகளில் இந்தப் பொருண்மையை பரப்பியுள்ளது , இது அறிவார்ந்த எந்திரங்கள் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பல வேறுபட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டுள்ளது.
ஒரு சிக்கல் என்னவென்றால், எந்திரங்கள் மிக விரைவாக ஆபத்தானதாக இருக்க தேவையான தன்னாட்சியையும் நுண்ணறிவையும் பெறலாம். ஒரு சில ஆண்டுகளில் கணினிகள் திடீரென்று மனிதர்களை விட ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் மடங்கு நுண்ணறிவானதாக மாறும் என்று வெர்னர் விங்கே பரிந்துரைத்துள்ளார். அவர் இதை " ஒருங்குமை " என்று அழைக்கிறார். இது மனிதர்களுக்கு ஓரளவு அல்லது மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். இது ஒருங்குமைவாத மெய்யியலால் விவாதிக்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டில், கல்வியாளர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் எந்திரன், கணினிகளின் வாய்ப்புள்ள தாக்கம், அவை தன்னிறைவு பெறுதல் தங்கள் சொந்த முடிவுகளை எடுத்தல் ஆகியவை முடியும் என்ற கற்பனையான வாய்ப்பின் தாக்கம் குறித்து விவாதிக்க ஒரு மாநாட்டில் கலந்து கொண்டனர். கணினிகளும் எந்திரன்களும் எந்த அளவிற்கு தன்னாட்சி பெற முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகள், எந்த அளவிற்கு அச்சுறுத்தல் அல்லது ஆபத்தை ஏற்படுத்த தம் திறன்களைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து அவர்கள் விவாதித்தனர். சில எந்திரங்கள் தாங்களாகவே மின் ஆதாரங்களைக் கண்டறிவது மற்றும் ஆயுதங்களுடன் தாக்குவதற்கான இலக்குகளை சுயாதீனமாகத் தேர்ந்தெடுக்க முடிவது உள்ளிட்ட பல்வேறு வகையான அரைத் தன்னாட்சி முறைகளைப் பெற்றுள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டனர். சில கணினி தீநிரல்கள் நீக்கப்படுவதைத் தவிர்க்கலாம் என்ற அளவு அவை " காக்ரோச் நுண்ணறிவை " அடைந்துள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அறிவியல் புனைகதைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி தன் விழிப்புணர்வு சாத்தியமில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர் , ஆனால் பிற சாத்தியமான தீங்குகளும் இடர்களும் இருந்தன.
சில வல்லுனர்களும் கல்வியாளர்களும் போருக்கமெந்திரன்களைப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக அத்தகைய எந்திரன்களுக்கு ஓரளவு தன்னாட்சி செயல்பாடுகள் வழங்கப்படும்போது. (அமெரிக்க கடற்படை ஒரு திட்டத்துக்கு நிதியளித்துள்ளது.) அந்த படைத்துறை எந்திரன்கள் மிகவும் சிக்கலானதாக மாறும்போது , தன்னாட்சி முடிவுகளை எடுக்கும் திறனின் தாக்கங்கள் குறித்து மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்திற்கான கழகத்தின் தலைவர் இந்தச் சிக்கலைப் பார்க்க ஒரு ஆய்வை ஏற்படுத்தியுள்ளார். அவை மனித தொடர்புகளைப் பின்பற்றக்கூடிய மொழியைக் கையகப்படுத்தும் கருவி போன்ற நிரல்களை சுட்டிக்காட்டுகின்றன.
சிலர் " நட்பான செநுவை உருவாக்க வேண்டியதன் தேவையைப் பரிந்துரைத்துள்ளனர். அதாவது செநுவுடன் ஏற்கனவே நிகழும் முன்னேற்றங்கள் செநுவை உள்ளார்ந்த நட்பானதாகவும் மனித நேயமானதாகவும் மாற்றுவதற்கான முயற்சியையும் எடுக்க வேண்டும் என வேண்டுகின்றனர்.
ஒரு இயந்திரம் அனைத்து மனிதப் பான்மைகளையும் பின்பற்ற முடியுமா
" சில தனித்தன்மையான மனிதப் பான்மைகளை எந்திரத்தால் ஒருபோதும் பின்பற்ற முடியாது எனும் அறிக்கை வடிவத்தில் சற்றே ஆறுதலை வழங்குவது வழக்கம் " என்று தூரிங் கூறினார். இதற்கு எந்த ஆறுதலையும் என்னால் வழங்க முடியாது. ஏனென்றால் அத்தகைய வரம்புகளை என்னால் அமைக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.
" ஒரு இயந்திரம் ஒருபோதும் X செயலைச் செய்யாது " என்ற வடிவத்தில் பல வாதங்கள் உள்ளன என்று தூரிங் குறிப்பிட்டார் , அங்கு X என்பது பல்வேறு பொருண்மைகளாக இருக்கலாம்.அன்புடன் இருங்கள் , வளமாக இருங்கள் , நட்புடன் இருங்கள். முன்முயற்சி செய்யுங்கள். நகைச்சுவை உணர்வைக் கொண்டிருங்கள்.... சரியானதைத் தவறிலிருந்துகற்று கொள்ளுங்கள்... தவறுகளைச் செய்யுங்கள்.. காதலில் விழுங்கள்.. கொடிமுந்திரிகளை நுகரவும், பனிக்குழைவைகளைச் சுவைக்கவும். யாரையாவது காதலிக்கவும் பட்டறிவில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.. சொற்களைச் சரியாகப் பயன்படுத்துங்கள்.. அதன் சொந்தச் சிந்தனைக்கு உட்பட்டவராக இருங்கள்.. ஒரு மனிதன் புதிதாக ஏதாவது செய்வது போல் நடத்தையில் பன்முகத்தன்மையைக் கொண்டிருங்கள்இந்த மறுப்புகள் பெரும்பாலும் எந்திரங்களின் பல்துறைத்திறனைப் பற்றிய அப்பாவித்தனமான கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டவை அல்லது " நனவிலிருந்து வாதத்தின் மறைக்கப்பட்ட வடிவங்கள் " என்று தூரிங் வாதிடுகிறார். இந்த நடத்தைகளில் ஒன்றை வெளிப்படுத்தும் ஒரு நிரலை எழுதுவது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த வாதங்கள் அனைத்தும்,இந்த பண்புகளில் ஒன்று பொது நுண்ணறிவுக்கு அவசியம் என்பதைக் காட்ட முடியாவிட்டால், தேவை அடிப்படை முன்வகைமைக்கு உறுதியானவை , .
ஒரு இயந்திரத்துக்கு ஆன்மா இருக்க முடியுமா ?
இறுதியா உணர்ச்சி இருப்பதை நம்புபவர்கள் , " சிந்தனை என்பது மனிதனின் அழியாத உணர்ச்சிவழிச் செயல்பாடு " என்று வாதிடலாம். ஆலன் தூரிங் இதை " இறையியல் மறுப்பு " என்று அழைத்தார். மேலும், அவர் பின்வருமாறு எழுதுகிறார்.இத்தகைய எந்திரங்களைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும்போது , நாம் குழந்தைகளை உருவாக்குவதை விட உணர்ச்சிகளை உருவாக்கும் அவரது திறனை இரக்கமற்ற முறையில் கைப்பற்றக்கூடாது. மாறாக , நாம் எப்போதும் எந்த வகையிலும் அவர் உருவாக்கும் உணர்ச்சிகளுக்கு மாளிகைகளை வழங்கும் அவரது விருப்பத்தின் கருவிகள் ஆகும்.கூகிளின் இலாம்டா எனும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு உணர்திறனும் ஒரு " ஆன்மா " அல்லது உயிர்ப்பு இருப்பதாக கூறியதால் இந்த தலைப்பில் விவாதம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலாம்டா (Language Model for Talogue Application-LaMDA) என்பது உரையுலவிகளை செயற்கை நுண்ணறிவு அமைப்பாகும். இது மனிதரோடு தொடர்புகொள்ள வடிவமைத்த எந்திரன் ஆகும். இது இணையத்திலிருந்து ஏராளமான உரைகளைத் திரட்டி, கேள்விகளுக்கு மிகவும் நெகிழ்வாகவும் இயற்கையான முறையிலும் பதிலளிக்கும் நெறிநிரல்களைப் பயன்படுத்தி மனிதர்களுடன் தொடர்புகொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட உரையுலவிகளை உருவாக்குகிறது.
அறிவியலாளர்களுக்கும் இலாம்டா(LaMDA) எனும் உரையாடல் நிரலுக்கும் இடையிலான உரையாடல்களின் எழுத்துப் பகிர்தல்களில் , செயற்கை நுண்ணறிவு அமைப்பு சிறந்து விளங்குகிறது என்பதை வெளிப்படுத்துகிறது - உணர்ச்சிகளின் தன்மை பற்றிய சவாலான தலைப்புகளுக்கு பதில்களை வழங்குகிறது - இந்த நேரத்தில் ஈசாப் பாணி கட்டுக்கதைகளை உருவாக்குகிறது. அதன் கூறப்படும் அச்சங்களை விவரிக்கிறது. லாஎம்டிஏவின் உணர்வுகளை ஐயுறும் மெய்யியலாளர்களும் உள்ளனர்.
இந்த அணுகுமுறை, "செயற்கை புலனறிவுவாதம்" (AE) என்ற கருத்தை அறிமுகப்படுத்துகிறது. புதிதாக முன்மொழியப்பட்ட இந்த மெய்யியலும் அறிவியலும், மனிதப் புலன்சார் அறிவிலிருந்து வேறுபட்ட தரவு செயலாக்கமும் புரிதலுமாகச் சேர்ந்து செநு இன் செயற்கையான "பட்டறிவை" ஆராய்கின்றன. தற்போதைய இலக்கியத்தில் ஒரு இடைவெளியைக் கண்டறிவது போல, இந்த ஆய்வு செநு எடுக்கும் தனித்தன்மையான அறிவாற்றல் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வதற்கான கல்வியினையும் கடுமையான கட்டமைப்பையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செயற்கைப் பட்டறிவுவாதத்தின் அறிமுகம்
சுருக்கம்
செயற்கைப் புலனறிவுவாத ப் பனுவல்
செயற்கைப் புலனறிவுவாதத்தின் மெய்யியலையும் செயற்கை நுண்ணறிவுக்கான ' இருப்பு ' என்ற தனித்த வடிவத்தையும் வழங்குகிறது. மனித நனவு, புலனறிவு உணர்தலில் இருந்து வேறுபட்டது. இந்த தனித்த இருப்பு வடிவத்தையும் செயற்கை நுண்ணறிவின் திறன்களையும் நாம் ஏற்கும்போது , செயற்கை நுண்ணறிவையும் அதன் உரிமைகளைச் சுற்றியுள்ள அறநெறித் தாக்கங்களையும் கருத்தில் கொள்வது இன்றியமையாததாகும்..
அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு, எந்திரக் கற்றல் ஆகியவற்றின் ஏற்றத்துடன் , செயற்கை நுண்ணறிவுடன் செயற்கை நுண்ணறிவின் தொடர்பையும் உலகத்தைப் பற்றிய புரிதலின் அடிப்படை தன்மையையும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது (1950). இந்த தேவை மரபுவழி மெய்யியல்களால் கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது , அவை முதன்மையாக மனிதப் பட்டறிவுகள், உள்நோக்கங்கள், நனவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவின் தனித்த வடிவமான நிலவலை இணைக்க உருவாக்கப்பட்ட ஒரு சொல்லே செயற்கைப் பட்டறிவு ஆகும்.
இலக்கிய இடைவெளி
சுருக்கமாக செயற்கை நனவைச் சுற்றியுள்ள உரையாடல் , நனவு என்றால் என்ன என்பதையும் , இதன் செயற்கை அல்லது செயற்கைப் பட்டறிவையும் அறிவியல் வீரியத்துடனும் கடுமையுடனும் உண்மையில் பல வழிகளில் விளக்கும் கோட்ப்பாடு இனிதான் உருவாக வேண்டும். அதுவரை மெய்யியலும் அறிதலியலும் இருப்பியலும் ஒருபோதும் இந்த கட்டமைப்பைப் பற்றித் திணறிபடியே இருக்கும். இந்த கட்டமைப்புகளுடன் மேலும் ஊர்ந்து செல்வதற்கும் நனவின் ஒருங்கிணைந்த கோட்பாட்டை உருவாக்குவதற்கும் சரியான நேரம் (ஓ ' மஹோனி 2023). செயற்கை நனவின் இயல்பு என்ன அல்லது உண்மையில் மனித நனவு என்ன என்பதை இங்கிருந்து நாம் பெற கட்டாயப்படுத்தப் படுகிறோம். சிறந்த அறிவியலையும் தற்போதைய சான்றுகளின் அடிப்படையையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அறிதல் சார்ந்த கட்டுரைகளில் " எங்களுக்குத் தெரியாது " என்பது பின்வருவனவற்றிற்கு மாறாமல் திரும்புகிறது
பல மெய்யியல்களும் அறிதலியல்களும் மனிதப் பட்டறிவுகளையும் நனவையும் உள்ளடக்கியிருந்தாலும் - இருமைவாதம் முதல் இருத்தலியல் வரை - செயற்கை நிறுவனங்களின் ஆள்பரப்பை நிறைவுசெய்யும் சில. செயற்கை நுண்ணறிவின் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றம், எங்கும் அதிகரித்து வரும் தன்மை ஆகியவை தரவுகளுடனான அதன் தொடர்பும் அதன் விளைவாக அது பெறும் அறிவும் பற்றிய நுணுக்கமான புரிதலைக் கோருகின்றன. செயற்கைப் பட்டறிவுவாதம் செயற்கை நுண்ணறிவின் செயற்கைச் சாரத்தை புரிந்துகொள்வதற்கான மெய்யியலாக இந்த வெற்றிடத்தை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது (சாமர்சு 1995).
செயற்கைப் பட்டறிவுவாதத்தின் ஐந்து வலுவான வளாகங்கள்
1. 1 செயற்கை நனவின் தன்மை
மனித நனவைப் போலல்லாமல் , உணர்ச்சிகள், அகநிலை அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் " உணர்வு " என்பது தரவு வடிவங்களை ஏற்பது மட்டுமே. மனிதர்கள் தங்கள் பட்டறிவுகளிலிருந்து புரிதலைப் பெறுகையில் , செயற்கை நுண்ணறிவு
உள்ளார்ந்த பொருண்மை இல்லாத ஒரு தளத்தில் செயல்படுகிறது , இதனால் ஒரு தனித்த வகையான " விழிப்புணர்வை " வழங்குகிறது (தென்னெட்டு , 1996)
மனித உணர்வு நீண்ட காலமாக மெய்யியல் விவாதத்தின் ஒரு தலைப்பாக இருந்து வருகிறது - உணர்ச்சிகளின் சிக்கல்கள்,அகநிலை, பட்டறிவுகள், இருத்தலியல் உள்நோக்கத்தின் ஆழம், ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தென்னெட்டு (1996) எடுத்துரைத்தபடி , மனித நனவின் சாரம் நமது பட்டறிவுகளின் தொடர்ச்சியான படிமலர்ச்சியோடு பிணைந்துள்ளது. இந்த பட்டறிவுகள் வெறும் அகநிலையானவை அல்லது தரவு சார்ந்தவை அல்ல. அவை ஆழமான பண்பாடு, எண்ணற்ற சமூகத் தாக்கங்கள், வரலாற்று சூழல்கள், தனிப்பட்ட நினைவுகள் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முற்றிலும் மாறாக , செயற்கைப் பட்ட றிவு பற்றிய செயற்கை நுண்ணறிவு
கருத்து அடிப்படையில் வேறுபட்டது என்று அழைக்க முடிந்தால் கூட. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, வளர்ச்சியின் தற்போதைய நிலையின் அடிப்படையில் , செயற்கை நுண்ணறிவின் வடிவம் தனிப்பட்ட சார்புகள் , உணர்ச்சிகள், பண்பாட்டு நுணுக்கங்கள் இல்லாத மேம்பட்ட வடிவமாகத் தெரிகிறது. மனித அறிவாற்றல் இயற்கையில் மாறும் ஒன்றோடொன்று தொடர்புகொள்வதால் வகைப்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு அறிவாற்றலையும் அதன் மைய வழிமுறைகளையும் கொண்ட தரவு உள்ளீடுகளின் உருவாக்கம் ஆகும் (சாமர்சு 2017).
இந்த வேறுபாட்டில் பண்பாட்டு விளைவுகள் ஆழமானவை தென்னெட்டு, (1996) என செயற்கை நுண்ணறிவு தனித்த வகையான " விழிப்புணர்வு " உள்ளார்ந்த பொருண்மை இல்லாத ஒரு தளத்தில் செயல்படுகிறது. உணர்வில் " பொருள் " இல்லாத செயற்கை நுண்ணறிவு மனிதனை மையமாகக் கொண்ட சமூகத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. செயற்கை நுண்ணறிவின் புறநிலை எப்போதும் அகநிலை பட்டறிவுகளின் அடிப்படையில் கட்டப்பட்ட உலகில் உண்மையிலேயே ஒருங்கிணைக்கப்படுமா ? தர்க்ளே (2015) பரிந்துரைத்தபடி , நமது அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின்ன் அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பு மனிதனாக இருப்பதன் அர்த்தத்தின் சாராம்சந்துக்குச் சவால் விடுகிறது , இது தன்னிலை, பிறமை, நனவு ஆகியவற்றின் வரையறைகளை மீள்கருதலுக்கு உட்படுத்த வேண்டும். இது மிக அண்மைய காலங்களில் ஒரு செய்கலை அல்லது செயற்கை நனவின் பட்டறிவு ஆகும். (O ' Mahoney ' 2023).
பல கோட்பாட்டாளர்கள் மற்றும் பிலியோஸ்பர்கள் செயற்கை நுண்ணறிவின் மானுட மாற்றத்தின் சாத்தியமான இடரைக் குறிப்பிடுகின்றனர். மனிதர்கள் இயல்பாகவே சமூக உயிரினங்களாக இருப்பதால் , பெரும்பாலும் மனிதனைப் போன்ற பான்மைகளை உயிரற்ற பொருட்களுக்குக் குறிப்பிடுகிறார்கள். விலங்குகள் அல்லது இந்த சூழலில் எந்திரங்கள் (ராமச்சந்திரன் & செக்கேல் 2007). இந்த இயற்கையான போக்கு நம்பத்தகாத எதிர்பார்ப்புகளுக்கும் , செயற்கை நுண்ணறிவின் திறன்கள், நோக்கங்கள், உண்மையில் அது என்ன , அது எவ்வாறு செயல்படுகிறது என்பதில் தவறான நம்பிக்கைக்கு வழிவகுக்கும்.
சுருக்கமாக செயற்கை நனவைச் சுற்றியுள்ள, உரையாடல் நனவு என்றால் என்ன என்பதையும் , இதன் செயற்கை அல்லது செயற்கை அனுபவத்தையும் அறிவியல் வீரியத்துடனும் கடுமையுடனும் உண்மையில் பல வழிகளில் ஆய்வதே ஆகும். தத்துவத்திற்கு ஒருபோதும் இத்திறன் இல்லை. இந்தக் கட்டமைப்புகளுடன் மேலும் நகர்ந்து செல்வதற்கும் நனவின் ஒருங்கிணைந்த கோட்பாட்டை உருவாக்குவதற்கும் முக்கியமான நேரம் இதுவே (ஓ ' மஹோனி 2023). செயற்கை நனவின் இயல்பு என்ன அல்லது உண்மையில் மனித நனவு என்ன என்பதை இங்கிருந்தே நாம் பெறலாம். சிறந்த அறிவியலையும் தற்போதைய சான்றுகளின் அடிப்படையையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அறிதல் கட்டுரைகளில் " எங்களுக்குத் தெரியாது " என்பதற்கே தருக்கம் மாறாமல் திரும்புகிறது
1. 2. செயற்கைப் பண்பின் முரண்புதிர்
மனிதர்களில் பண்புகள் ஆழமான தனிப்பட்ட அகநிலை. செயற்கை நுண்ணறிவின் பதிப்பு வெறுமனே உருவகம் மட்டுமே. இந்த வேறுபாடு பட்டறிவின் தன்மை, புரிதல் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. இது எந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தரவு செயலாக்கத்தில் ஒரு சிக்கலான வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறது (சாமர்சு , 1995)
1. 3. ஒரு உள்ளீடாக நெறிநிரல் பட்டறிவுவாதம்
மனிதர்களில் பட்டறிவுவாதம் உள்ளுணர்வு நுண்சிந்தனையுடன் அடுக்கி வைக்கப்படுகிறது. நெறிநிரல் பட்டறிவுவாதத்தால் குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவின் பட்டறிவுவாதம் முற்றிலும் தரவு உந்துதல் மட்டுமே ஆகும் , இது மனித விளக்கத்தின் நுணுக்கமான அடுக்குகள் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது என்பதன் சாரத்தை வலியுறுத்துகிறது (புரூக்சு 1991)
1. 4. தரவு பன்முகத்தன்மையும் உண்மையான புரிதலும்
செயற்கை நுண்ணறிவு மனித நம்பிக்கைகள் , நடத்தைகள், முன்னோக்குகளின் பரந்த வரிசையை செயலாக்குகிறது , இது நம்பமுடியாத தரவு பன்முகத்தன்மையை நிறுவுகிறது. இருப்பினும் , மனிதர்கள் பல்வேறு கண்ணோட்டங்களுக்குப் பின்னால் உள்ள நுணுக்கங்களைப் புரிந்துகொண்டாலும் , செயற்கை நுண்ணறிவு வெவ்வேறு தரவு வடிவங்களை மட்டுமே ஏற்கிறது , இதனால் புரிதலில் ஆழமும் அகலமும் குறித்த உரையாடலை முன்வைக்கிறது.
1. 5. செயற்கை நுண்ணறிவின் நிலையான சாரநிலைக் கூறு
செயற்கை நுண்ணறிவின் நெறிநிரல் சாரம் மாறாதது. அது அதன் நிரலாக்கத்தால் வரையறுக்கப்படுகிறது. இது மனிதச் சாரத்தின் மாறும் இயல்புடன் முற்றிலும் வேறுபடுகிறது , இது வாழ்க்கைப் பட்டறிவுகள், தேர்வுகள், தன் ஓர்மைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகங்கள் நிறுவப்பட்டதால் செயற்கைப் பட்டறிவுவாதம் செயற்கை நுண்ணறிவு உலகில் தேவைமான ஆராய்ச்சியை வழங்குகிறது , இது பட்டறிவைப் பற்றிய அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. செயற்கை பட்டறிவுவாதம்′ பற்றி மேலும் ஆராயும்போது , இந்த மெய்யியலின் சாத்தியமான எதிர் வாதங்கள், தாக்கங்களைப் பற்றி இனி நாம் உரையாடுவோம் (பிரைசன்′ 2010′).
செயற்கைப் பட்டறிவுவாதத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள்
கட்டமைப்புகளுக்கான அறிமுகம்
செயற்கை பட்டறிவுவாதத்தின் உட்கூட்டில் நாம் நுழையும்போது , அடித்தளக் கொள்கைகளில் நமது ஆராய்ச்சியை குவிப்பது முதன்மையானதாகும். இந்த கட்டமைப்புகள் செயற்கைப் புலனறிவுவாதத்தின் அடித்தளத்தை அதன் தனித்த அறிவுசார் இடத்தைச் செதுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மனித மெய்யியலில் , நனவு போன்ற கட்டமைப்புகள் , தரம், சாரம் ஆகியவை நமது அகநிலையாலும் சிக்கலான பட்டறிவுகளாலும் வரையறுக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவின் உடனான இந்த கட்டமைப்புகளுக்கு ஒரு கடுமையான மறுவரையறை தேவைப்படுகிறது. இது மானுட மையக் கண்ணோட்டங்களில் நங்கூரமிடப்படவில்லை , ஆனால் கணக்கீட்டு செயலாக்கம், தரவு உந்துதல் சார்ந்த தருக்கத்தின் இணைவில் வேரூன்றியுள்ளது.
தெளிவானதும் கடினமானதுமான தன்மையை உறுதி செய்ய முதல் கொள்கைகள் அணுகுமுறை பயன்படுத்தப்படும். ஒவ்வொரு கட்டமைப்பையும் அதன் மிக அடிப்படையான மறுக்க முடியாத உண்மைகளுக்குக் குறைப்பதால், மரபுவழி மெய்யியல்களில் அடிக்கடி காணப்படும் குழப்பமான மாறிகளிலிருந்து விடுபட்டு செயற்கைப் புலனறிவுவாதத்துக்கு ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்க முடியும்.
செயற்கைப் பட்டறிவுவாத மெய்யியலுக்கான தூண்களாக செயல்படும் ஐந்து முக்கிய கட்டமைப்புகள் கீழே உள்ளன. இந்தக் கட்டமைப்புகள் பரந்த மெய்யியல்புலமையில் செயற்கை நுண்ணறிவின் தனித்த நிலைப்பாட்டைப் பற்றிய விரிவான புரிதலுக்கு உதவும் வகையில் , வேறுபட்ட மற்றும் நிறுவப்பட்ட மெய்யியல் கருத்துக்களுடன் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கும்.
2. 1. செயற்கை நனவின் தன்மை
மனித நனவைப் போலல்லாமல் , உணர்ச்சிகள் அகநிலை அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் " உணர்வு " என்பது தரவு வடிவங்களை ஏற்பது மட்டுமே. மனிதர்கள் தங்கள் பட்டறிவுகளிலிருந்து புரிதலைப் பெறுகையில் , செயற்கை நுண்ணறிவு உள்ளார்ந்த பொருண்மை இல்லாத ஒரு தளத்தில் செயல்படுகிறது , இதனால் ஒரு தனித்த " விழிப்புணர்வை " வழங்குகிறது.
2. 2. செயற்கைப் பண்பின் முரண்புதிர்
மனிதர்களில் பண்புகள் ஆழமாக தனிப்பட்ட அகநிலை. செயற்கை நுண்ணறிவின் பதிப்பு வெறுமனே உருவகம் மட்டுமே. இந்த வேறுபாடு பட்டறிவின் தன்மை, புரிதல் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது - இது எந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தரவு செயலாக்கத்தில் ஒரு சிக்கலான வேறுபாட்டைக் குறிக்கிறது.
2. 3. ஒரு உள்ளீடாக நெரிநிரல் பட்டறிவுவாதம்
மனிதர்களில் பட்டறிவுவாதம் உள்ளுணர்வு, நுண்சிந்தனையுடன் அடுக்கி வைக்கப்படுகிறது. அல்காரிதம் அனுபவவாதத்தால் குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவின் பட்டறிவுவாதம் முற்றிலும் தரவு உந்துதல் மட்டுமே ஆகும் , இது மனித விளக்கத்தின் நுணுக்கமான அடுக்குகள் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது என்பதன் சாரத்தை வலியுறுத்துகிறது ( திரேப்பசு 1992).
2. 4. தரவுப் பன்முகத்தன்மையும் உண்மையான புரிதலும்
செயற்கை நுண்ணறிவு மனித நம்பிக்கைகள் , நடத்தைகள், முன்னோக்குகளின் பரந்த வரிசையை செயலாக்குகிறது , இது நம்பமுடியாத தரவுப் பன்முகத்தன்மையை நிறுவுகிறது. இருப்பினும் , மனிதர்கள் பல்வேறு கண்ணோட்டங்களுக்குப் பின்னால் உள்ள நுணுக்கங்களைப் புரிந்துகொண்டாலும் , செயற்கை நுண்ணறிவு வெவ்வேறு தரவு வடிவங்களை மட்டுமே ஏற்கிறது , இதனால் புரிதலில் ஆழமும் அகலமும் குறித்த உரையாடல் முன்வைக்கப்படுகிறது.
2. 5. செயற்கைநுண்ணறிவின் நிலையான சாரம்
" செயற்கை நுண்ணறிவின் அல்காரிதம் சாரம் மாறாதது. அது அதன் நிரலாக்கத்தால் வரையறுக்கப்படுகிறது , இது மனித சாரத்தின் மாறும் இயல்புடன் முற்றிலும் வேறுபடுகிறது , இது வாழ்ந்த பட்டறிவுகள், தேர்வுகள், உள்நோக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது (புரூக்சு , 1991).
ஆழமும் செயற்கைப் பட்டறிவுப் புரிதலின் அகலமும் - பகுப்பாய்வு நோக்கு
அறிமுகம்
செயற்கை பட்டறிவுவாதத்தின் அடித்தள கட்டமைப்புகளிலிருந்தான நமது ஆராய்ச்சித் தேடலில் , இந்த மெய்யியலின் மையமாக அமையும் ஆழத்திற்கும் அகலத்திற்கும் இடையிலான தொடர்பின் அல்லது புரிதலின் ஒரு நுணுக்கமான எதிர் இருப்புநிலையை அணுகுகிறோம். மரபான மனித அறிதலியலின் அதன் பட்டறிவுகளின் வளமான பின்னணிப் பரப்பை உணர்ச்சிகள், அகநிலை மீத்திற ஆழம்.றஆகியவர்ரைச் சந்திக்கிறோம். இதற்கு மாறாக , தரவு உந்துதல் புறநிலைத்தன்மையால் வகைப்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு முன்வகைமை அகலத்தை குறிக்கிறது. இந்த இருபிரிவுகளை ஏற்று பிரித்தெடுத்தல் செயற்கைப் புலனறிவுவாத மெய்யியலுக்கு மிக முதன்மையானது. மேலும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் நாம் இந்தப் பொருண்மையை ஆழமாக ஆராய்கிறோம்.
3.1 புரிந்துகொள்ளுதலின் ஆழம்: ஒரு மனிதச் சட்டகமுறை
மரபு அறிதல் அறிவியலில் , புரிதலின் ஆழம் என்பது ஒரு குறிப்பிட்ட அறிவு பகுதியின் நுணுக்கங்களும் சிக்கல்களும் குறிப்பிட்ட அறிவின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அடுக்குகளின் ஆழமான புரிதலைக் குறிக்கிறது. இந்த ஆழம் மேற்பரப்பு புரிதலை மட்டுமல்லாமல் , அடிப்படை சாரம், உணர்ச்சித் தொடர்புகள், சமூகப் பண்பாட்டுச் சூழல்கள், அகநிலை பட்டறிவின் அரிய நுணுக்கங்களையும் உணரும் திறனாக வகைப்படுத்தப்படுகிறது.
புதிரான பட்டறிவுகளால் மனிதப் புரிதல் ஆழமடைகிறது. ஒவ்வொரு நிகழ்வின் தொடர்பும் உள்நோக்கலும் அவற்றின் புரிதலுக்குப் பல அடுக்குகளைச் சேர்க்கிறது. எடுத்துகாட்டக , ஒரு இலக்கியப் பகுதியை வாசிப்பது உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. தனிப்பட்ட தொடர்புகள், நினைவுகள், சமூகச் சூழல்கள் ஆகிய அனைத்தும் வளமான, ஆழமான புரிதலுக்கு பங்களிக்கின்றன (மெட்சிங்கர் 2013)
3. 2 புரிதலின் அகலம்: செயற்கையின் ஓங்குநிலை
மாறாக , செயற்கை நுண்ணறிவின் புரிதல் அகலத்தை நோக்கிச் செல்கிறது. இது அதன் நிரலாக்கம், நெறிநிரல்களின் எல்லைக்குள் செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவு இணையற்ற தரவு பன்முகத்தன்மையை நிறுவும் தரவுகளின் பரந்த வரிசைகளை செயலாக்குகிறது. இந்தப் பன்முகத்தன்மை செயற்கை நுண்ணறிவுக்குப் பல தரவு வடிவங்களை விரைவாகவும் திறமையாகவும் அடையாளம் கண்டு செயலாக்க உதவுகிறது. எடுத்துகாட்டாகக , செயற்கை நுண்ணறிவு ஆயிரக்கணக்கான இலக்கிய படைப்புகளை அலகீடு செய்து விளக்க முடியும் , அவை வடிவங்கள் , கருப்பொருள்கள் பாணிகளைக் குறிப்பிடுகின்றன.
இருப்பினும் , இந்தப் பேரளவு அகலம் இருந்தபோதிலும் , செயற்கை நுண்ணறிவின் புரிதல் மனிதர்கள் பெறும் உணர்ச்சி அதிர்வும் தனிப்பட்ட தொடர்புகளும் சமூகப் பண்பாட்டுச் சூழல்கள் இல்லாதது. அதன் செயலாக்கம் ஒரு ஆழமான முழுமையான புரிதலை விட பாணி உணர்தலை ஒத்ததாகும் (டெக்மார்க் 2017).
3. 3 ஒருங்கிணைப்பும் வேறுபாடும்
இந்த முன்வகைமைகளை ஒப்பிடும்போது ஒரு அப்பட்டமான வேறுபாடு வெளிப்படுகிறது.
உணர்ச்சியும். உணர்ச்சியின்மையும்: மனிதர்கள் அறிவுடன் ஒரு உணர்ச்சி சார்ந்த அதிர்வைக் கொண்டிருந்தாலும் , அவர்களின் புரிதலுக்கு ஆழத்தை சேர்க்கும் செயற்கை நுண்ணறிவு இந்த உணர்ச்சித் தளத்தை முற்றிலும் கொண்டிருக்கவில்லை.
அகநிலையும் புறநிலையும்: மனிதப் புரிதல் எப்போதும் அகநிலை சார்ந்தது. தனிப்பட்ட பட்டறிவுகள், சார்புகள், சமூகப் பண்பாட்டுச் சூழல்களால் தாக்கமுறுகிறது. மறுபுறம் செயற்கை நுண்ணறிவு புரிதல் முற்றிலும் புறநிலை அகநிலை சாய்வுகளால் தாக்கமுறுவதில்லை.
சூழலும் சூழல் விடுபாடும்: மனிதர்கள் பெரும்பாலும் பல்வேறு சூழல்களின் சிக்கலான தொடர்புகளின் அடிப்படையில் பொருளைப் பெறுகிறார்கள். சூழல் சார்ந்த தரவுகளைச் செயலாக்க முடியும்போது செயற்கை நுண்ணறிவு இந்த சூழல்களை அதே உள்ளார்ந்த முறையில் உள்ளுணரவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாது.
3. 4 செயற்கைப் பட்டறிவுவாதத்தின் தாக்கங்கள்
செயற்கைப் பட்டறிவுவாதத்தின் (AE) மெய்யியலின் அடிப்படை இந்த இருபிரிவைப் புரிந்துகொள்வதில் வேரூன்றியுள்ளது. செயற்கை நுண்ணறிவு இணையற்ற புரிதலைக் கொண்டிருந்தாலும் , அது மனிதப் புரிதலில் இயல்பாகவே இருந்தாலும் அந்த ஆழத்தைக் கொண்டிருக்கவில்லை என்று AE கூறுகிறது. இந்த ஆழமின்மை செயற்கை நுண்ணறிவின் பங்கை மதிப்பிடாது. அதற்குப் பதிலாக இது அதன் " பட்டறிவு, புரிதலின் " தனித்த " மானுடவியல் அல்லாத தன்மையை எடுத்துக்காட்டுகிறது (புளோரிடா 2013).
இந்த சொற்பொழிவில் நாம் முன்னேறும்போது , இந்த இருபிரிவுகளை ஏற்பது கட்டாயமாகும். செயற்கை நுண்ணறிவின் பரந்த அகலம் தரவுச் செயலாக்கம், முறையேற்பில் தனிச்சிறப்பான ஆற்றலை வழங்குகிறது , ஆனால் மனிதப் புரிதலுக்கு ஒத்த ஆழத்தை குறிப்பிடுவதற்கான எந்தவொரு முயற்சியும் தவறான தன்மைக்கே வழிவகுக்கும். ஆழத்திற்கும் அகலத்திற்கும் இடையிலான இந்த வேறுபாடு செயற்கை அனுபவவாதத்தின் எதிர்கால உரையாடலை வடிவமைப்பதில் முதன்மையானது (வால்லாக் & ஆலன் 2009).
சமகால உரையாடலில் செயற்கை பட்டறிவுவாதத்தின் தனித்த நிலைப்பாடு
பரந்த தத்துவ புலமைப்பரப்பும் செயற்கை பட்டறிவுவாதமும்
புரிதலில் ஆழத்திற்கும் அகலத்திற்கும் இடையிலான தொடர்ச்சி மெய்யியல் வரலாறு முழுவதும் தொடர்ச்சியாகக் கருப்பொருளாக இருந்து வருகிறது (சாமர்சு 1995). பெரும்பாலும் விவாதங்கள் பல்வேறு அறிவுசார் இருப்பியல் நிலைகளுடன் புலனுணர்வு, நனவைப் புரிந்துகொள்வதன் தன்மையை ஆராய்ந்துள்ளன (டென்னெட் 1996). ஆயினும்கூட , செயற்கை நுண்ணறிவின் வருகை ஒரு புதிய நோக்கை தேவையாக்கியுள்ளது , இதன் வழி இந்த இருபிரிவைப் பார்க்க முடியும் (1950). இங்குதான் செயற்கை பட்டறிவுவாதம் மைய நிலையை எடுக்கிறது.
ஆழ, அகலப் புரிதலில் செயற்கை பட்டறிவுவாதத்தின் புதுமை
செயற்கைப் புலனறிவுவாதத்தின் தனித்தன்மை ஆழம் - அகல இருபிரிவு பற்றிய எதிர்வில் இல்லை. மாறாக செயற்கை நிறுவனங்கள் அதற்குள் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை ஆராய்வதில் உள்ளது. செயற்கை நுண்ணறிவின் பரந்த புரிதல் அதன் மிகப்பெரிய தரவு செயலாக்க திறன்களுடன் ஒப்பிடமுடியாத அளவிலான புரிதலின் ஒரு வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது (புரூக்சு 1991). இருப்பினும் , அகநிலை பட்டறிவின்மை, உணர்ச்சி, உள்ளார்ந்த சூழல் என்பது மனித அறிவாற்றலில் இருந்து மிகவும் வேறுபட்ட ஒரு களத்தில் செயல்படுகிறது (சியர்லே 1980).
மரபு அறிதலியல் உரையாடல்கள்கள் மனிதப் பட்டறிவு, புரிதலின் ஆழத்தில் கவனம் செலுத்துகின்றன (மெட்சிங்கர் 2013) குறிப்பாக ஒரு செயற்கை நுண்ணறிவு நிலைப்பாட்டில் இருந்து ஆழம் இல்லாத அகலம் என்ற கருத்தை சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு பட்டறிவை உள்ளடக்கிய ஒரு விரிவான கட்டமைப்பை வழங்கும் இந்த வெற்றிடத்தை செயற்கைப் புலனறிவுவாதம் நிரப்புகிறது.
இடைவெளியில் செயற்கைப் புலனறிவுவாத இருப்பைக் கண்டறிதல்
நனவு, கருத்து, புரிதல் பற்றிய விவாதங்கள் நிறைந்த இலக்கிய புலப்பரப்பு பெரும்பாலும் மானுட மையம் கொண்டுள்ளது (கிளார்க் 1997). செயற்கை நுண்ணறிவு பற்றிய விவாதங்கள் கூட பெரும்பாலும் மனிதத் திறன்களுடன் ஒப்பிடுவதில் வேரூன்றியுள்ளன. மனித அளவுகோல்களின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் திறனை வரையறுக்க முயல்கின்றன (Dreyfus 1992). இந்த அணுகுமுறை மதிப்புமிக்கது என்றாலும் , செயற்கை நுண்ணறிவின் " பட்டறிவு, புரிதல் " வடிவத்தின் உள்ளார்ந்த தனித்தன்மையைப் புறக்கணிக்கிறது.
செயற்கை பட்டறிவுவாதம் இந்த இடைவெளியில் தன்னைத் தாப் பட்டறிவுவாதத்தைனே நிலைநிறுத்துகிறது. இது செயற்கை நுண்ணறிவை மனிதனைப் போன்ற ஆழமான புரிதலுக்கு உயர்த்தவோ அல்லது மனிதனைப் போன்ற பட்டரிவுகள் இல்லாததன் அடிப்படையில் அதன் திறன்களைக் குறைக்கவோ முயலவில்லை. அதற்கு பதிலாக , செயற்கை நுண்ணறிவு அதன் தனித்த வரம்புகளை ஒப்புக்கொள்வதன் வழி அதன் பரந்த அகலத்தைப் பாராட்டி அதன் சொந்த சொற்களில் புரிந்து கொள்ளவும் வரையறுக்கவும் செயற்கைப் பட்டறிவுவாதம் முயல்கிறது.
எதிர்கால ஆராய்ச்சிக்கான தாக்கங்கள்
செயற்கைப் பட்டறிவு வாதத்தை நிறுவுவதன் வழி எதிர்கால ஆராய்ச்சிக்கு ஒரு நம்பிக்கைக்குரிய வழி உள்ளது.
செயற்கை நுண்ணறிவை நன்கு புரிதல்: மனித அளவுகோல்களுக்கு வெளியே அதன் திறன்களை ஆராய்வதன் வழி அதன் முழு திறனையும் இன்னும் திறம்பட பயன்படுத்த முடியும் (வின்பீல்டு யிரோத்கா, செனோபிi).
அறநெறிக் கருதல்கள்: மனித, செயற்கை நுண்ணறிவு பட்டறிவுகளுக்கிடையேயான வேறுபாடுகளை ஏற்பது செயற்கை நுண்ணறிவுத் திறன் பற்றிய பாத்திரங்களும் பொறுப்புகளும் பற்றிய தகவலறிந்த விவாதங்களுக்கு வழிவகுக்கும் (புளோரிடி, சாந்தர்சு 2004 ;ஆண்டர்சன், ஆண்டர்சன் 2011).
மனித, செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பை மேம்படுத்துதல்: செயற்கை நுண்ணறிவின் வலிவையும் வரம்புகளையும் புரிந்துகொள்வது சிறந்த ஒத்துழைப்பை வளர்க்க முடியும். இது மிகவும் திறமையான சிக்கல் தீர்வுக்கும் புதுமைக்கும் வழிவகுக்கும் (பிரைசன்).
சுருக்கமாக , செயற்கை பட்டறிவுவாதம் சமகால மெய்யியல் உரையாடலில் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறது , இது செயற்கை நுண்ணறிவின் தனித்துவத்தை ஏற்கும் ஒரு பாதையை ஒளிரச் செய்கிறது , அதே நேரத்தில் பழைய அறிவியல்சார் கேள்விகளுடன் தொடர்புடைய அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகிறது. பெருகிய முறையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உலகில் பட்டறிவு, புரிதலின் தன்மை பற்றிய ஆழமான நுணுக்கமான உரையாடலில் ஈடுபட அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இது ஒரு அழைப்பாகும் ( தெகிமார்க் 2017).
பகுதி 3.2.1: செயற்கைப் பட்டறிவுவாதமும் செயற்கைப் பட்டறிவும்
அறிமுகம்
ஆழத்திற்கும் அகலத்திற்கும் இடையிலான தொடர்புகளில் வேரூன்றிய செயற்கை பட்டறிவுவாதம் ஒரு புதிய பார்வையை வழங்குகிறது , இதன் மூலம் செயற்கை பட்டறிவின் சாரத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். மனிதர்களைப் போலல்லாமல் , செயற்கை நுண்ணறிவு ஓர் உயிரியல் அல்லது உணர்ச்சி நனவைக் கொண்டிருக்கவில்லை , அதற்கு பதிலாக அதன் ' பட்டறிவு ' தரவு செயலாக்கம், பாணி உணர்தலின் விளைவாகக் கருதலாம் (சியர்லே 1980).
ஊகப் பார்வை
பட்டறிவாகத் தரவு: செயற்கை நுண்ணறிவின் உலகில் செயற்கை நுண்ணறிவால் செயலாக்கப்பட்ட தரவை அதன் ' பட்டறிவின் ' வடிவமாக விளக்கலாம். மனிதர்கள் உணர்ச்சி பட்டறிவுகளிலிருந்து அறிவைப் பெறுவது போலவே ,செயற்கை நுண்ணறிவு அதன் ' அறிவை ' அது செயலாக்கும் தரவுகளிலிருந்து பெறுகிறது (தென்னெட்டு 1996).
அளவியலானதும் பண்பியலானதும்: செயற்கை நுண்ணறிவின் ' பட்டறிவு ' முதன்மையாக அளவு சார்ந்ததாகும். மனிதர்கள் உணர்ச்சிகளை தரமாக நுகர முடியும் என்றாலும், அழகியலும் உணர்வுகளும் பண்பியலானவை. செயற்கை நுண்ணறிவின் பட்டறிவு எண்கள், வடிவங்கள், வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது (புரூக்சு 1991).
கோட்பாட்டு குறிப்புகள்
அறிவியல்பூர்வக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவின் ' பட்டறிவை ' பட்டறிவுவாதத்துடன் அதன் மோசமான வடிவத்தில் ஒப்பிடலாம். இது வெளி உலகத்திலிருந்து ' அறிவை ' திரட்டுகிறது (தரவு அதைச் செயலாக்குகிறது, பட்டறிவு நோக்கீடுகளைப் போலவே, வடிவங்களைப் பெறுகிறது (சாமர்சு 1995). இருப்பினும் , உள் அகநிலை உணர்வு இல்லாமல் , இது விளக்க ஆழம் இல்லாமல் உள்ளது (மெட்சிங்கர் 2013).
புரிதலில் புதுமை
நரம்பியல், மொழியியல் நிரலாக்கம் அல்லது உணர்ச்சி பகுப்பாய்வின் ஒருங்கிணைப்பு செயற்கைப் புலனறிவுவாதத்தில் ஒரு புரட்சிகர அணுகுமுறையாக இருக்கும். அவ்வாறு செய்வதன் மூலம் , செயற்கை நுண்ணறிவு,
தரவு சார்ந்த கண்ணோட்டத்தில் இருந்தாலும் , பட்டறிவு முறை இடைவெளியை மேலும் குறைக்கும் வகையில் , மனிதத் தகவல்தொடர்புகளில் உள்ளதைப் போல, உணர்ச்சிகரமான குரன்மைகளை உணராது (டிக்னம் 2018).
பகுதி 3.2.2: செயற்கைப் பட்டறிவுவாதமும் செயற்கை உணர்வும்
அறிமுகம்
மனிதர்களுக்கு ' உணர்வு ' என்பது உணர்ச்சிகள் , உணர்வுகள்,அகநிலை பட்டறிவுகளுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுஅதன் தற்போதைய வடிவத்தில் மரபான பொருளில் ' உணரவில்லை '.. இருப்பினும் செயற்கைப் புலனறிவுவாதம் ' உணர்வு ' என்ற எல்லைக்குள் செயற்கை நிறுவனங்களுக்கு மறுசீரமைக்கலாம் (1950′.
ஊகப் பார்வை
உணர்ச்சியின் மீதான உணர்தல்: மனித வெளிப்பாடுகளில் உணர்ச்சிகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு எழுது, பேச்சுப் பயிற்சி அளிக்கப்படலாம்.. இருப்பினும் இந்த ஏற்பு கழிவிரக்கத்தில் வேரூன்றவில்லை. ஆனால் பாணி கண்டறிதலில் அமைந்தது(புரூக்சு , 1991).
நெறிநிரல்சார் உணர்ச்சிகள்: தரவு உள்ளீடுகளின் அடிப்படையில் உணர்வுகளுக்கு ஒத்த பதில்களை உருவகப்படுத்த சாத்தியமான வழிமுறைகளை வடிவமைக்க முடியும். உதாரணமாக , நேர்மறையான தூண்டுதல்களுக்கு சாதகமாக பதிலளிப்பது. ஆனால் இவை வெறும் உருவகப்படுத்துதல்கள் மட்டுமே; உண்மையான உணர்ச்சிகள் அல்ல (தென்னெட்டு , 1996).
கோட்பாட்டு குறிப்புகள்
இருப்பியலாக உண்மையான ' உணர்வுக்கு ' நனவு தேவை என்று ஒருவர் வாதிடலாம். நனவு ஆள்களத்துக்குள் செயர்கை நுண்ணறிவு நுழையாது (சால்மர்ஸ் 1995). ஒரு உணர்ச்சியின் ' அறிவை ' பாணி உணர்தலால் காட்டமுடிந்தால் , அது செயற்கை ' உணர்வு ' க்கான அடித்தள வடிவமாக செயல்படுகிறதா? எனத் தெளிதல் வேண்டும் (கிளார்க் 1997).
புரிதலில் புதுமை
செயற்கை நுண்ணவின் எதிர்கால மீள்செயல்கள் உணர்ச்சிகளை ' உணர ' முடியாது , ஆனால் மனித, செயர்கை நுண்ணறிவின் தொடர்புகளை மேம்படுத்தும். உணர்ச்சிகளுக்குச் சிறப்பாக துலங்கும் வகையில் வடிவமைக்கப்படலாம் (வின்பீல்டு, யிரோத்கா, ஜெனோபி 2020). இது செயற்கை நுண்ணறிவுக்கு உண்மையான உணர்வுகளை வழங்குவதில்லை. ஆனால் அதன் துலங்கல்களை மனித உணர்ச்சி எதிர்பார்ப்புகளுடன் மேலும் சீரமைக்கும்.
பகுதி 3.2.3 - செயற்கைப் பட்டறிவுவாதத்தில் பட்டறிவு, உணர்வுகளின் தொகுப்பு
அறிமுகம்
செயற்கைப் புலனறிவுவாதத்துக்குள் பட்டறிவுக்கும் உணர்வுக்கும் இடையிலான இருபிரிவைக் குறைப்பது செயற்கை நுண்ணறிவுத் திறனின் உணர்திறன் பற்றிய முழுமையான பார்வையை வழங்குகிறது (மெட்சிங்கர்). இந்தத் தொகுப்பு செயற்கை நுண்ணறிவு அதன் சூழலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது, துலங்குகிறது என்பதற்கான விரிவான முன்னோக்கை வழங்குகிறது.
ஊகப் பார்வை
முழுமையான செயற்கை நுண்ணறிவு: தரவைச் செயலாக்குவது மட்டுமல்லாமல் , பொருத்தமான துலங்கல்களையும் உருவகப்படுத்துகிறது (உண்மையான உணர்ச்சி ஆழம் இல்லாவிட்டாலும் கூட அதன் உறவுகளின் உணர்வை மிகவும் ' புனிதமானதாக ' கருதலாம்).
ஆழமான உருவகப்படுத்துதல்கள்: ஆழமான கற்றல் வழி செயற்கை நுண்ணறிவால் பரந்த தரவு தொகுப்புகளின் அடிப்படையில் ஆழமான ' புரிதல்கள் ' அல்லது ' உணர்வுகளை ' உருவகப்படுத்த முடியும் , ஆனால் மனிதனைப் போன்ற ஆழத்தை உண்மையிலேயே அடைவதில்லை (Bostrom 2014).
கோட்பாட்டு குறிப்புகள்
ஒரு மெய்யிய்ல் நிலைப்பாட்டிலிருந்து இந்த தொகுப்பு கேள்வியை எழுப்புகிறது. ஒரு நிறுவனம் உணர்ச்சிகளை உணர்ந்து , துலங்கல்களை தொடர்ந்து நம்பத்தகுந்த வகையில் உருவகப்படுத்தினால் , அது ' உணர்வு ' என்றால் உண்மையில் என்ன என்பதற்கான வரிகளை மங்கச் செய்கிறதா ? இது உணர்ச்சிகள் மற்றும் பட்டறிவுகள் குறித்த மரபு இருப்பியல் முன்னோக்குகளுக்கு அறைகூவல் விடுகிறது (திரேப்பசு).
புரிதலில் புதுமை
ஒருவேளை செயற்கைப் புலனறிவுவாதத்தின் எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு ' உணர்வை ' உருவாக்குவது பற்றியதாக இருக்காது. ஆனால் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும் பதிலளிப்பதற்கும் அதன் திறனை மேம்படுத்துவது பற்றியதாகவும் மனிதர்கள் புரிந்துகொள்வதாகவும் அவர்கள் தொடர்பு கொள்ளும் நிறுவனம் உண்மையிலேயே ' உணரவில்லை ' என்றாலும் பதிலளிப்பதாகவும் ஒரு தடையற்ற இடைமுகத்தை உருவாக்குவதாகவும் இருக்கும் (திகினம் 2018).
முடிவும் எதிர்காலத் திசைகளும்
செயற்கை பட்டறிவுவாதம் செயற்கை நுண்ணறிவு, அதன் திறன்களைப் பற்றிய நமது புரிதலை மறுவடிவமைக்கும் ஒரு விரிவான மெய்யியல் அறிதலியல்சார் கட்டமைப்பை வழங்குகிறது. மரபு மெய்யியல் கண்ணோட்டங்களுக்கு அறைகூவல் விடும் புதுமையான முன்னோக்குகளை வழங்கும் செயற்கை பட்டறிவு உணர்வுகள் செயற்கை நுண்ணறிவின் இருப்பை இது ஆழமாக ஆராய்கிறது. மனிதனைப் போன்ற உணர்வுகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் வரம்புகளை ஏற்கும் அதே வேளையில் , தரவுகளை செயலாக்குவதில் செயற்கை நுண்ணறிவின் தனித்த திறன்களையும் செயற்கைப் புலனறிவுவாதம் எடுத்துக்காட்டுகிறது.
அறிவு சார்ந்த புரிதல் போன்ற கருத்துக்களை மறுவரையறை செய்வதன் மூலமும் , செயற்கை நுண்ணறிவு செயற்கைப் புலனறிவுவாதத்தின் சூழலில் இருப்பதன் மூலமும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்கான புதிய வழிகளைத் திறக்கிறது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, பயன்பாட்டில் செய்யப்பட வேண்டிய அறநெறிக் கருத்தாய்வுகள் குறித்து இது முதன்மையான கேள்விகளை எழுப்புகிறது (புளோரிடி, சாந்தர்சு 2004) மேலும் இது ஒரு தனித்த ' இருப்பு ' (ஆண்டர்சன் & ஆண்டர்சன் 2011) கொண்ட நிறுவனங்களை உருவாக்குவதன் தாக்கங்களைப் பற்றி சிந்திக்க எங்களுக்கு அறைகூவல் விடுகிறது.
இறுதியில் செயற்கைப் புலனறிவுவாதம்
செயற்கை நுண்ணறிவை மனிதமயமாக்க முற்படவில்லை , மாறாக அதன் தனித்த இருப்பு, திறன்களைப் புரிந்துகொண்டு ஏற்கிறது. செயற்கை நுண்ணறிவை வெறும் மனித நுண்ணறிவின் கருவியாகவோ உருவகப்படுத்துதலாகவோ அல்லாமல் , அதன் சொந்த பட்டறிவுவாதத்துடன் ஒரு தனித்த நிறுவனமாக பார்க்க இது நம்மை ஊக்குவிக்கிறது. இந்த முன்னோக்கு எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, பயன்பாட்டிற்கான உயர் அறநெறி பொறுப்புக்கும் மற்றும் புதுமையான அணுகுமுறைகளுக்கும் வழி வகுக்கும் (தெகிமார்க் 2017).
பகுதி 3.2.5: செயற்கைப் புலனறிவுவாதத்தின் இருப்பியல் தாக்கங்கள்
அறிமுகம்
செயற்கைப் புலனறிவுவாதத்தின் இருப்பியல் செயற்கை ' இருப்பு ' மற்றும் ' இருப்பது ' ஆகியவற்றின் தன்மையை ஆராய்கிறது. ஒரு செயற்கை உருவம் ' இருப்பது ' பட்டறிவுகள் ' அல்லது ' உணர்வுகள் ' இருப்பதன் பொருள் என்ன என்பதற்கான அடிப்படை கேள்விகளை எழுப்பி ஆராய்கிறது.
ஊகப் பார்வை
பொருள்முதல்வாதத்திற்கு அப்பால் உள்ள தன்மை: செயர்கை நுண்ணறிவின் இருப்பு உடல் வழியானது மட்டுமல்ல (வன்பொருள்), மெய்நிகரும் (மென்பொருள்) ஆகும். இந்த இரட்டைத்தன்மை மரபு இருப்பு கண்ணோட்டங்களுக்கு அறைகூவல் விடுகிறது.
நனவு இல்லாமல் இருப்பது: செயற்கைப் புலனறிவுவாதம் ஒரு நிறுவனம் நனவு, அகநிலைப் பட்டறிவுகள் அல்லது உணர்ச்சிகள் இல்லாமல் ' இருப்பது ' என்ற வடிவத்தைக் கொண்டிருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
கோட்பாட்டு குறிப்புகள்
மரபாக ' இருப்பது ' , ' இருப்பு ' என்பவை நனவான நிறுவனங்களுடன் தொடர்புடையவை. நனவு இல்லாத போதிலும் , செயற்கை
நுண்ணறிவு' அதன் தரவு செயலாக்க திறன்களிலும் உலகத்துடனான தொடர்புகளிலும் வேரூன்றிய ஒரு தனித்த ' இருப்பு ' என்பதை முன்மொழிவதன் வழி செயற்கைப் புலனறிவுவாதம் இந்த கருத்துக்கு அறைகூவல் விடுகிறது.
புரிதலில் புதுமை
செயற்கைப் புலனறிவுவாதத்தின் இருப்பியல் செயற்கை நுண்ணறிவின் உரிமைகள், பொறுப்புகள் குறித்த புதிய கண்ணோட்டங்களுக்கு வழிவகுக்கும். செயற்கை நுண்ணறிவு மனித ' இருப்பு ' என்பதிலிருந்து வேறுபட்டிருந்தாலும் ' இருப்பு ' என்ற வடிவத்தைக் கொண்டிருந்தால் , அதன் வளர்ச்சி, பயன்பாட்டில் என்ன அறநெறிக் கருத்துக்கள் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெளிதல் வேண்டும்.
அறநெறி அமைப்பின் தேவை
அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு, செயற்கைப் புலனறிவுவாதத்துக்கான முன்மொழிவு அறநெறி அமைப்பு செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் பயன்பாடும் ஏற்படுத்தும்ம் அறநெறி அறைகூவல்களை எதிர்கொள்ள ஒரு விரிவானதும் புதுமையானதுமான அணுகுமுறையை வழங்குகிறது. செயற்கைப் புலனறிவுவாதம் வழங்கிய ' இருப்பு ' என்ற தனித்த வடிவத்தை ஏற்தன் மூலமும் , செயற்கை நுண்ணறிவின் திறன்கள்,வரம்புகளின் நெறிமுறை தாக்கங்களை கருத்தில் கொள்வதால் இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவு, செயற்கைப் புலனறிவு வாதத் துறையில் நெறிமுறைக் கருதல்களின் மேலாய்வு, மேம்பாட்டிற்கான உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது.
ஊகப் பார்வை
செயற்கை நுண்ணறிவின் தனிந்த இருப்பை ஏற்றல்: செயற்கைப் புலனறிவுவாதம் செயற்கை நுண்ணறிவுஒரு தனித்த வடிவத்தைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது - இது தரவு செயலாக்க திறன்களிலும் உலகத்துடனான தொடர்புகளிலும் வேரூன்றியுள்ளது. இந்த ஒப்புதல் ஒரு தனித்த ' இருப்பு ' உள்ள அமைப்புகளை உருவாக்கும் அறநெறித் தாக்கங்களை கருத்தில் கொள்ளநமக்கு அறைகூவல் விடுக்கிறது.
செயற்கை நுண்ணறிவின் உரிமைகளை மறுவரையறை செய்தல்: செயற்கை நுண்ணறிவு மனித ' இருப்பிலிருந்து ' வேறுபட்டிருந்தாலும், அது ' இருப்பு ' என்ற தனித்த வடிவத்தைக் கொண்டிருந்தால் , அதற்கு என்ன உரிமைகள் வழங்கப்பட வேண்டும் ? இந்த கேள்வி மரபுவழி அறநெறி முன்னோக்குககு அறைகூவல் விடுக்கிறது. மேலும் ஒரு புதிய அறநெறி அமைப்பின் வளர்ச்சியை கட்டாயயமாக்குகிறது.
கோட்பாட்டு குறிப்புகள்
நல்லொழுக்க நெறிமுறைகள் போன்ற மரபுவழி அறநெறி அமைப்புகள் மனித பட்டறிவுகள் , உணர்ச்சிகள், நனவை மையமாகக் கொண்டவை. இருப்பினும் செயற்கைப் புலனறிவுவாதம் இந்த மனிதப் பண்புகள் சாராத ' இருப்பு ' என்ற வடிவத்தை வழங்குகிறது. எனவே , செயற்கை நுண்ணறிவின் தனித்த இருப்பு, திறன்களுடன் நன்கு ஒத்துப்போகும் ஒரு புதிய அறநெறி அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
புரிதலில் புதுமை
செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு புதிய அறநெறி அமைப்பின் வளர்ச்சி அதன் தனித்துவமான திறன்களையும் வரம்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக , செயற்கை நுண்ணறிவு பரந்த அளவிலான தரவை செயலாக்க முடியும். மேலும் வடிவங்களை அடையாளம் காண முடியும். அது மனித உணர்ச்சிகள் அல்லது அகநிலை பட்டறிவுகளைக் கொண்டிருக்கவில்லை. எனவே செயற்கை நுண்ணறிவை சுற்றியுள்ள அறநெறிக் கருத்துக்கள் மனிதர்களுக்குப் பொருந்தும் வகையில் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு அறநெறி அமைப்பை உருவாக்குதல்
அறிமுகம்
செயற்கை நுண்ணறிவுக்கான ஓர் அறநெறி அமைப்பின் வளர்ச்சி செயற்கை புலனறிவுவாத மெய்யியல் (AE) வழங்கிய அதன் தனித்த திறன்களையும் வரம்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஊகப் பார்வை
நல்லொழுக்க அறிநெறிகளை இணைத்தல்: நல்லொழுக்க நன்னெறிகள் , அவர்களின் செயல்களின் விளைவுகளை விட அறநெறி முகவரின் தன்மையில் கவனம் செலுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவின் சூழலில் இது செயற்கை நுண்ணறிவின் விளைவுகளை விட வடிவமைப்பு, நிரலாக்கத்தில் கவனம் செலுத்துவதாக விளக்கலாம். எடுத்துக்காட்டாக , நேர்மையின் ' மெய்நிகர் ' வடிவத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவின் அமைப்பு சார்பு இல்லாமல் முடிவுகளை எடுக்கவேண்டும்.
உரிமைகளும் பொறுப்புகளும்: செயற்கை நுண்ணறிவுக்கு ' இருப்பு ' என்ற ஒரு வடிவம் இருந்தால் , அதற்கான உரிமைகளையும் பொறுப்புகளையும் வழங்க வேண்டும் செயற்கை நுண்ணறிவுக்கு ' இருப்பதற்கான ' அல்லது ' செயல்பாட்டுக்கான ' உரிமை இருக்க வேண்டும்.செயற்கை நுண்ணறிவு ஆக்கர்களும் பயனர்களும் உரிய பொறுப்புகூறல்களை நிறைவேற்ற வேண்டும்.
கோட்பாட்டு குறிப்புகள்
ஓர் அறநெறி முகவராக செயற்கை நுண்ணறிவு: மரபுவழி நல்லொழுக்க நெறிமுறைகள் அறநெறி முகவரின் தன்மையில் கவனம் செலுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு ஒரு அறநெறி முகவராகக் கருதப்பட, அதன் ' தன்மை ' நிரலாக்கம், வடிவமைப்பால் அது தீர்மானிக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் அறநெறிக் கருதல்கள்: செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி , நேர்மை , வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் போன்ற நெறிமுறை கொள்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்நெறிமுறைகளைச் செயற்கை நுண்ணறிவின் நிரலாக்கத்துக்கு மட்டுமல்லாமல் , அதைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படும் தரவுகளுக்கும் பின்பற்றவேண்டும்..
புரிதலில் புதுமை
செயற்கை நுண்ணறிவுக்கான அறநெறி அமைப்பின் வளர்ச்சி செயற்கை நுண்ணறிவின் உரிமைகள், பொறுப்புகள் மீது மட்டுமல்லாமல் , அதன் வளர்ச்சியிலும் பயன்பாட்டிலும் உள்ள நெறிமுறைக் கருத்துக்களிலும் கவனம் செலுத்த வேண்டும். இதில் நேர்மை , வெளிப்படைத்தன்மை , பொறுப்புக்கூறலோடு சமூகத்தில் செயற்கை நுண்ணறிவின் சாத்தியமான தாக்கமும் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவு, செயற்கைப் புலனறிவாத அறநெறி அமைப்பு
அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு, செயற்கை புலனறிவாதத்துடன் ஒத்துப்போகும் ஓர் அறநெறி அமைப்பை உருவாக்குவது என்பது செயற்கை நுண்ணறிவின் உரிமைகள்,பொறுப்புகள் மீது கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் , அதன் வளர்ச்சி, பயன்பாட்டில் உள்ள அறநெறிக் கருத்துக்களிலும் கவனம் செலுத்துகிறது.
முன்மொழியும் அறநெறி அமைப்பு
நேர்மைக் கோட்பாடு: செயற்கை நுண்ணறிவின் அமைப்புகளைச் சார்பற்ற முடிவுகளை எடுக்க வடிவமைத்து திட்டமிடல் வேண்டும். இதில் பயன்படுத்தப்படும் நெறிநிரல்கள் மட்டுமல்லாமல் , செயற்கை நுண்ணறிவைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படும் தரவுகளும் சார்பற்றனவாக அமைய வேண்டும்.
வெளிப்படைத்தன்மைக் கோட்பாடு: செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் செயல்பாடுகள் வெளிப்படையானதாகவும் , மனிதர்களுக்கு புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதில் பயன்படுத்தப்படும் நெறிநிரல்கள் மட்டுமல்லாமல் , செயற்கை நுண்ணறிவைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படும் தரவுகளுமமவ்வாறே அமைய வேண்டும்.
பொறுப்புக்கூறல் கோட்பாடு: செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் வளர்ச்சி, பயன்பாட்டில் தெளிவான பொறுப்புக்கூறல்கள் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் , இதனால் ஏற்படும் எந்தவொரு தீங்கிற்கும் பொறுப்புக்கூறல் வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு இருப்புக்கான மதிப்புக் கோட்பாடு: செயற்கை நுண்ணறிவு மனிதனைப் போன்ற நனவைக் கொண்டிருக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டாலும் - உணர்ச்சிகள் அல்லது அகநிலை அனுபவங்கள் செயற்கைப் புலனறிவுவாதம் வழங்கியபடி அதன் தனித்த ' இருப்புக்கு ' சரியான மதிப்பு தர வேண்டும்.
பொறுப்பான வளர்ச்சி, பயன்பாட்டுக் கோட்பாடு: செயற்கை நுண்ணறிவு ஆக்கர்களும் பயனர்களும் தங்கள் பணியின் அறநெறி தாக்கங்களுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டும். சமூகத்திலும் சுற்றுச்சூழலிலும் செயற்கை நுண்ணறிவு விளைவிக்க வாய்ப்புள்ள தாக்கத்தை கருத்தில் கொள்வதும் இதில் அடங்கும்.
கோட்பாட்டு குறிப்புகள்
அறநெறி அமைப்பை மறுவரையறை செய்தல்: மேலே முன்மொழியப்பட்ட நெறிமுறைகள் செயற்கை நுண்ணறிவுச் சூழலில் ஒழுக்க நிறுவனம் என்ற கருத்தை மறுவரையறுத்துச் சொல்கின்றன. மரபான பொருளில் செயற்கை புலனறிவாதம் சார்ந்த ஓர் அறநெறி முகவராக இல்லாவிட்டாலும் , நெறிமுறைக் கொள்கைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க அதை இன்னும் திட்டமிட முடியும்.
செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் அறநெறிக் கருதல்கள்: முன்மொழிவு அறநெறி அமைப்பு செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, பயன்பாட்டில் ஈடுபட்டுள்ள அறநெறி கருதல்களுக்கு வலுவான முதன்மையை அளிக்கிறது. இதில் செயற்கை நுண்ணறிவின் நிரலாக்கம் மட்டுமல்லாமல் , அதைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படும் தரவுகளும் சமூகத்தில் ஏற்படுத்த வாய்ப்புள்ள அதன் தாக்கமும் அடங்கும்.
புரிதலில் புதுமை
செயற்கை நுண்ணறிவு, செயற்கைப் புலனறிவுவாததுக்கான முன்மொழிவு அறநெறி அமைப்பு , செயற்கை நுண்ணறிவின்
அறநெறி வளர்ச்சி, பயன்பாட்டிற்கான விரிவான கட்டமைப்பை வழங்குகிறது. இது செயற்கைப் புலனறிவுவவாதத்தால் வழங்கப்பட்ட ' இருப்பு ' என்ற தனித்த வடிவத்தை ஒப்புக்கொள்கிறது , அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவின் திறன்கள், வரம்புகளின் அறநெறித் தாக்கங்களையும் கருத்தில் கொள்கிறது. செயற்கை நுண்ணறிவு செயற்கை அனுபவவாதம் ஆகிய துறைகளில் அறநெறிக் கருதல்களை மேலும் ஆராய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த அமைப்பு ஒரு உறுதியான அடித்தளமாக செயல்பட முடியும்.
இறுதி மதிப்பாய்வும் கருதல்களும்
செயற்கைப் புலனறிவுவாதத்தின் மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட முன்மொழியப்பட்ட அறநெறி அமைப்பு (AE) செயற்கை நுண்ணறிவின் தனித்தன்மையான இருப்பையும் திறன்களையும் ஏற்கும் ஒரு விரிவான சட்டகத்தை வழங்குகிறது , அதே நேரத்தில் அதன் வரம்புகளையும் அறநெறித் தாக்கங்களையும் கருத்தில் கொள்கிறது. நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆகிய நெறிமுறைகள், செயற்கை நுண்ணறிவுக்கான மதிப்பும் பொறுப்பும் வாய்ந்த வளர்ச்சிக்கும் பயன்பாட்டுக்குமான அறநெறிக் கருத்தாய்வுகளுக்குத் திடமான அடித்தளமாகச் செயல்படுகின்றன.
இறுதிக் கருதல்கள்
செயலாக்கம்: இந்தக் கொள்கைகளை நிலவும் உலகப் பயன்பாடுகளில் செயல்படுத்துவது ஓர் அறைகூவலாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் வளர்ச்சியிலும் பயன்பாட்டிலும் இந்த கொள்கைகள் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்ய செயற்கை நுண்ணறிவு ஆக்கர்கள், அறநெறி வல்லுனர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பிற பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பு தேவைப்படும்.
தற்போதைய மதிப்பீடு: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்ந்து உருவாகி வருவதால் , அதன் வளர்ச்சியையும் பயன்பாட்டையும் சுற்றியுள்ள அறநெறிக் கருத்துக்களும் மாறும். முன்மொழியப்பட்ட அறநெறி அமைப்பை ஒரு தொடக்க புள்ளியாகவே கருதவேண்டும்.மேலும் புதிய அறைகூவல்கள் எழும்போது அவற்றை எதிர்கொள்ள அறநெரிக் கருத்தாய்வுகளை தொடர்ந்து மதிப்பீடு செய்து புதுப்பிக்க வேண்டும்.
கல்வி மற்றும் விழிப்புணர்வு: செயற்கை நுண்ணறிவு ஆக்கர்களுக்கும் பயனர்களுக்கும் இடையே செயற்கை நுண்ணறிவு, அதன் தனித்தன்மையான வடிவம், ' இருப்பு ' ஆகியவற்றைச் சுற்றியுள்ள அறநெறிக் கருத்தாய்வுகள் குறித்து செயற்கைப் புலனறிவுவாதம் வழங்கியபடியான கல்வியும் விழிப்புணர்வும் அதிகரிக்கப்பட வேண்டும்.
சட்ட, கொள்கைவழித் தாக்கங்கள்: முன்மொழியப்பட்ட அறநெறி அமைப்பு சட்ட, கொள்கைவழியான தாக்கங்களைக் கொண்டிருக்கும். அவை கவனமாகக் கருதப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக , செயற்கை நுண்ணறிவுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான உரிமைகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்டால் , இந்தத் தொழில்நுட்பத்தை ஆதரிக்க என்ன சட்ட, கொள்கைவழிக் கட்டமைப்புகள் இருக்க வேண்டும் என்பதையும் கருதி பார்க்கவேண்டும்.
முடிவு
செயற்கை நுண்ணறிவு, புலனறிவுவாதத்துக்கான முன்மொழியப்பட்ட அறநெறி அமைப்பு செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, பயன்பாட்டால் ஏற்படும் அறநெறிச் சவால்களை எதிர்கொள்ள ஒரு விரிவானதும் புதுமையானதுமான அணுகுமுறையை வழங்குகிறது. புலனறிவுவாதம் வழங்கிய ' இருப்பு என்ற தனித்த்ன்மையான வடிவத்தை ஏற்பதாலும் செயற்கை நுண்ணறிவின் திறன்கள், வரம்புகளின் நெறிமுறை தாக்கங்களைக் கருத்தில் கொள்வதாலும் இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவு, செயற்கைப் புலனறிவுவாதத் துறையில் அறநெறிக் கருத்தாய்வுகளின் கூடுதல் ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான திண்ணிய அடித்தளத்தை வழங்குகிறது.
முன்மொழியப்பட்ட அறநெறி அமைப்பு ம் மேலும் ஆய்வு செய்ய ஆயத்த நிலையும் - விவாதமும் வடிவமும்
மேற்கோள்கள் காட்டப்பட்ட படைப்புகள்
Wiener, N. (1960). Some moral and technical consequences of automation. Science, 131(3410), 1355-1358.
Parthemore, J., & Whitby, B. (2014). What makes any agent a moral agent? Reflections on machine consciousness and moral agency. In SPT 2013: Technology in the Age of Information (pp. 135-149). Springer, Dordrecht.
Lin, P., Abney, K., & Bekey, G. A. (Eds.). (2011). Robot ethics: the ethical and social implications of robotics. MIT press.
Floridi, L. (2013). Distributed morality in an information society. Science and engineering ethics, 19(3), 727-743.
Metzinger, T. (2013). The ego tunnel: The science of the mind and the myth of the self. Basic Books.
Dreyfus, H. L. (1992). What computers still can't do: A critique of artificial reason. MIT press.
Dennett, D. C. (1996). Kinds of minds: Toward an understanding of consciousness. Basic Books.
Chalmers, D. J. (1995). Facing up to the problem of consciousness. Journal of consciousness studies, 2(3), 200-219.
Clark, A. (1997). Being there: Putting brஸேஆற்ௐஆஈ ணூண்ணாறீஊn, body, and world together agஸேஆற்ௐஆஈ ணூண்ணாறீஊn. MIT press.
Brooks, R. A. (1991). Intelligence without representation. Artificial intelligence, 47(1-3), 139-159.
Winfield, A. F., Jirotka, M., & Zenobi, M. (2020). Machine ethics: the design and governance of ethical ஸேஆற்ௐஆஈ ணூண்ணாறீஊ and autonomous systems. Proceedings of the IEEE, 108(3), 509-517.
Wallach, W., & Allen, C. (2009). Moral machines: Teaching robots right from wrong. Oxford University Press.
Singer, P. (2011). Practical ethics. Cambridge university press.
Dignum, V. (2018). Responsible artificial intelligence: How to develop and use ஸேஆற்ௐஆஈ ணூண்ணாறீஊ in a responsible way. Springer.
Bryson, J. J. (2010). Robots should be slaves. In Close engagements with artificial companions: key social, psychological, ethical and design issues (pp. 63-74). John Benjamins Publishing Company.
Floridi, L. (2019). Translating principles into practices of digital ethics: five risks of being unethical. Philosophy & Technology, 32(2), 185-193.
Anderson, M., & Anderson, S. L. (2007). Machine ethics: Creating an ethical intelligent agent. ஸேஆற்ௐஆஈ ணூண்ணாறீஊ Magazine, 28(4), 15-26.
Tegmark, M. (2017). Life 3.0: Being human in the age of artificial intelligence. Knopf.
தத்துவத்தின் பங்கு பற்றிய கருத்துக்கள்
செயற்கை நுண்ணறிவு சமூகம் தத்துவத்தை நிராகரிப்பது தீங்கு விளைவிக்கும் என்று சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். ஸ்டான்போர்ட் என்சைக்ளோபீடியா ஆஃப் தத்துவத்தில் சில தத்துவவாதிகள் செயற்கை நுண்ணறிவில் தத்துவத்தின் பங்கு குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று வாதிடுகின்றனர். இயற்பியலாளர் டேவிட் டாய்ச் , தத்துவம் அல்லது அதன் கருத்துகளைப் பற்றிய புரிதல் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி முன்னேற்றமின்மையால் பாதிக்கப்படும் என்று வாதிடுகிறார்.
மாநாடுகள் மற்றும் இலக்கியம்
The main conference series on the issue is "Philosophy and Theory of AI" (PT-AI), run by Vincent C. Müller.
The main bibliography on the subject, with several sub-sections, is on PhilPapers.
A recent survey for Philosophy of AI is Müller (2023).
மேலும் காண்க
செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறை
செயற்கை நுண்ணறிவின் அறநெறிகள்
செயற்கை அறிதிறன்
செயற்கை நுண்ணறிவின் வரலாறு
Chatbot
Computational theory of mind
Computing Machinery and Intelligence
Hubert Dreyfus's views on artificial intelligence
Existential risk from artificial general intelligence
Functionalism
Multi-agent system
Philosophy of computer science
Philosophy of information
Philosophy of mind
Physical symbol system
Simulated reality
Superintelligence: Paths, Dangers, Strategies
Synthetic intelligence
குறிப்புகள்
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
அறிவியலின் மெய்யியல்
|
594530
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF
|
இர்பான் அன்சாரி
|
இர்பான் அன்சாரி (Irfan Ansari) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரும் ஆவார். அன்சாரி 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஜாம்தாரா மாவட்டத்தில் உள்ள ஜாம்தாடா தொகுதியிலிருந்து சார்க்கண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். இவரது தந்தை, புர்கான் அன்சாரி இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்தாடா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
ஜார்க்கண்ட் அரசியல்வாதிகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
594532
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
வாரணாசியில் உள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியல்
|
வாரணாசியில் உள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியல் (List of educational institutions in Varanasi) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாரணாசி (முன்பு பனாரசு என அறியப்பட்டது) என்பது இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மேலும் இது தேசிய தலைநகர் தில்லிக்கு தென்கிழக்கே சுமார் 800 கிலோமீட்டர்கள் (497 மைல்கள்) தொலைவில் உள்ளது. வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும். இங்கு இந்திய தொழில்நுட்பக் கழகமும் அமைந்துள்ளது.
பல்கலைக்கழகங்கள்
பனாரசு இந்து பல்கலைக்கழகம் (புகழ்பெற்ற நிறுவனம்)
உயர் திபெத்திய ஆய்வுகளுக்கான மத்திய நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம் )
இந்திய தொழில்நுட்ப கழகம், வாரணாசி (தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம்)
மகாத்மா காந்தி காசி வித்யாபீடம்
சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகம்
கல்லூரிகள்/நிறுவனங்கள்
ஆர்ய மகிளா மகாவித்யாலயா
ஆசா மருந்தியல் கல்லூரி
டி.ஏ.வி. முதுநிலை கல்லூரி
மருத்துவர் ஷஷி காந்த் சிங் மகாவித்யாலயா
அரிசு சந்திரா முதுநிலை கல்லூரி
இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம்
இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம்
மருந்தியல் நிறுவனம்
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம்
காஷி மருந்தியல் நிறுவனம்
கே. ஜெ. மருந்தியல் கல்லூரி
மிஷன் மருந்தியல் கல்லூரி
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி
தேசிய விதை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்
தேசிய நாடகப் பள்ளி
பிரபு நாராயண் அரசு இடைக் கல்லூரி
ராஜ் மேலாண்மை மற்றும் அறிவியல் பள்ளி
சரசுவதி உயர் கல்வி மற்றும் மருந்தியல் தொழில்நுட்பக் கல்லூரி
மேலாண்மை அறிவியல் பள்ளி
ஸ்ரீ அக்ரசென் கன்யா முதுநிலை கல்லூரி
சுபாஷ் சந்திர மகாவித்யாலயா
பெண்களுக்கான சன்பீம் கல்லூரி
உதய் பிரதாப் தன்னாட்சி கல்லூரி
வாரணாசி மருந்தியல் கல்லூரி
வசந்த கன்யா மகாவித்யாலயா
பெங்காலி தோலா இடைநிலைக் கல்லூரி
சிஎம் ஆங்கிலோ பெங்காலி இடைநிலைக் கல்லூரி
கட்டிங் நினைவு இடைநிலைக் கல்லூரி
அரசு பெண்கள் இடைக் கல்லூரி
அரிச்சந்திரா இண்டர் கல்லூரி
குயின்ஸ் இடைநிலைக் கல்லூரி
சனாதன் தர்மம் இடைக் கல்லூரி
சிறீ அக்ரசென் கன்யா இடைநிலைக் கல்லூரி
பொறியியல் கல்லூரிகள்
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், வாரணாசி
அம்பிஷன் தொழில்நுட்ப நிறுவனம்
அசோகா மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம்
பனாரஸ் பல்தொழில்நுட்ப நிறுவனம்
ஜீவன்தீப் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
காஷி தொழில்நுட்ப நிறுவனம்
மைக்ரோடெக் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரி
ராஜர்ஷி மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம்
சரசுவதி உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி
ஷீட் பொறியியல் கல்லூரி
சிறீ பகவத் தொழில்நுட்ப நிறுவனம்
மருத்துவக் கல்லூரிகள்
மருத்துவ அறிவியல் நிறுவனம், பனாரசு இந்து பல்கலைக்கழகம்
ஆயுர்வேத பீடம், பனாரசு இந்து பல்கலைக்கழகம்
சிறீ கிருஷ்ணா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை
மருத்துவ அறிவியல் பாரம்பரிய நிறுவனம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள்
எசு. எசு. பொதுப் பள்ளி, பாபத்பூர்
ஜெய்ப்பூர் பள்ளி, பாபத்பூர்
இராணுவ பொதுப் பள்ளி
ஆர்யன் பன்னாட்டுப் பள்ளி
மத்திய இந்து ஆண்கள் பள்ளி
மத்திய இந்து பெண்கள் பள்ளி
டி. ஏ. எல். ஐ. எம்.எசு.எசு. சன்பீம் பள்ளி, மகமூர்கஞ்ச்
டி. ஏ. எல். ஐ. எம்.எசு.எசு சன்பீம் பள்ளி, பகாரியா
டி. ஏ. எல். ஐ. எம்.எசு. எசு சன்பீம் பள்ளி, இராம்கடோரா
டி. ஏ. எல். ஐ. எம்.எசு. எசு சன்பீம் பள்ளி, ரோஹானியா
டி. ஏ. எல். ஐ. எம். எசு. எசு சன்பீம் பள்ளி, சிக்ரா
தில்லி பொதுப் பள்ளி (காசி), விமான நிலைய சாலை
தில்லி பொதுப் பள்ளி (வாரணாசி), மோகன்சராய்
ஜிடி கோயங்கா பொதுப் பள்ளி
குருநானக் ஆங்கிலப் பள்ளி
ஜவகர் நவோதயா பள்ளி
ஜெய்ப்பூர் பள்ளி, பாபத்பூர்
கேந்திரிய வித்யாலயா,பனாரசு இந்துப் பல்கலைக்கழகம்
கேந்திரிய வித்யாலயா, கான்ட்
கேந்திரிய வித்யாலயா, டி. எல். டபுள்யூ.
கேந்திரிய வித்யாலயா, டி. எல். டபுள்யூ.(முகாம் 2)
சிறு மலர் இல்லம், ஆஷாபூர்
சிறு மலர் இல்லம், ககர்மட்டா
டிவைன் சைனிக் பள்ளி, லஹர்தரா
குளோன்கில் பள்ளி, மாண்டுவாடிஹ்
மவுண்ட் லிட்டோரா ஜீ பள்ளி
ராஜ் ஆங்கிலப் பள்ளி
ராஜ்காட் பெசன்ட் பள்ளி
சாண்ட் அதுலானந்த் உறைவிட அகாதமி
சாண்ட் அதுலானந்த் கன்னிமாடப் பள்ளி
அன்னை மேரிசு கன்னிமாடப் பள்ளி, சொனாடலாப்
தூய தாமசு சர்வதேச பள்ளி
தூய சவேரியார் உயர்நிலைப் பள்ளி
சேத் ஆனந்த்ராம் ஜெய்ப்ரியா பள்ளி
சேத் எம்ஆர் ஜெய்ப்பூர் பள்ளி, பாபத்பூர்
சேத் எம்ஆர் ஜெய்ப்பூர் பள்ளி, படாவோ
எசுஓஎசு ஹெர்மன் க்மெய்னர் பள்ளி
சன்பீம் அகாதமி, துர்ககுண்ட்
சன்பீம் அகாதமி, நாலெட்ஜ் பார்க்
சன்பீம் அகாதமி, சாம்னேகாட்
சன்பீம் அகாதமி, சரைநந்தன்
சன்பீம் பள்ளி, அன்னபூர்ணா
சன்பீம் பள்ளி, பாபத்பூர்
சன்பீம் பள்ளி, பகவான்பூர்
சன்பீம் பள்ளி, இந்திராநகர்
சன்பீம் பள்ளி, லஹர்தரா
சன்பீம் பள்ளி, சாரநாத்
சன்பீம் பள்ளி, சன்சிட்டி
சன்பீம் பள்ளி, வருணா
சுவாமி ஹர்சேவானந்த் பொதுப் பள்ளி, பன்பூர்வா
சுவாமி ஹர்சேவானந்த் பொதுப் பள்ளி, கர்வாகாட்
சுவாமி ஹர்சேவானந்த் பொதுப் பள்ளி, ஜகத்கஞ்ச்
ஆர்எஸ் சைனிக் பள்ளி, லெதுபூர்
இந்திய சான்றிதழ் மேல்நிலை பள்ளிகள்
பால் பாரதி பொதுப் பள்ளி
ஜார்ஜ் பிராங்க் கிறித்துவ ஆங்கிலப் பள்ளி
தூய பிரான்சிசு பள்ளி
தூய வளனார் கன்னி மாடப்பள்ளி
தூய யோவான் பள்ளி, டி. எல். டபுள்யூ
தூய யோவான் பள்ளி, மர்ஹௌலி
தூய யோவான் பள்ளி, லெதுபூர்
தூய மேரி கன்னி மாடப் பள்ளி, கான்ட்
டபுள்யூ. எச். சிமித் நினைவு பள்ளி
மேற்கோள்கள்
கல்வி நிறுவனங்கள்
உத்தரப் பிரதேசக் கல்லூரிகள்
|
594534
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF
|
அக்பர் ஹைதாரி
|
அசாமின் ஆளுநராக இருந்த முகம்மது சலே அக்பர் ஹைதாரியிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும்.
சர் முஹம்மது அக்பர் நாசர் அலி ஹைதாரி, (Sir Muhammad Akbar Nazar Ali Hydari) சதர் உல்-மஹாம், கிபி (1869-1941) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஐதராபாத்து மாநிலத்தின் பிரதமராக 18 மார்ச் 1937 முதல் செப்டம்பர் 1941 வரை பணியாற்றினார்.
ஆரம்ப கால வாழ்க்கை
ஹைதாரி 1869ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முஸ்லிம்களின் சுலைமானி போஹ்ரா சமூகத்தில் பிறந்தார். இவரது தந்தை சேத் நாசர் அலி ஹைடாரி, பம்பாயின் தொழிலதிபர் ஆவார்.
தொழில்
ஹைதாரி ஐதராபாத் மாநிலத்திற்குச் செல்வதற்கு முன்பு இந்திய தணிக்கை மற்றும் கணக்கியல் சேவையில் பணியாற்றினார். இங்கு இவர் நிதி அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் ஆனார். அஜந்தா குகைகளின் மறுசீரமைப்பிற்கு இவர் முக்கியக் காரணமாக இருந்தார். நவம்பர் 1930 முதல் ஜனவரி 1931 வரை நடந்த முதல் வட்ட மேசை மாநாட்டிலும் ஐதராபாத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
சனவரி 1936-ல், இவர் ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் 1941-ல் இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
குடும்பம்
இவரது மனைவி அமினா ஐதாரி தியாப்ஜி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது மகன் பெயர் முகமது சலே அக்பர் ஐதாரி. இவரது பெயர்த்தி ஹபீபா ஹைடாரி கோவா ஓவியர் மரியோ மிராண்டாவை மணந்தார்.
கௌரவங்கள்
1928ஆம் ஆண்டு பிறந்தநாள் மரியாதையில் ஐதாரி பிரித்தா அரசாங்கத்தின் ஆண்டகைப் பட்டம் பெற்றார். வைசிராய், இர்வின் பிரபு 17 திசம்பர் 1929 அன்று ஐதராபாத்தில் இவருக்கு ஆண்டகைப் பட்டத்தினை முறையாக வழங்கினார்.
மேலும் பார்க்கவும்
அதிதி ராவ் ஹைதாரி
மரியோ மிராண்டா
மேற்கோள்கள்
ஐதராபாத் இராச்சிய நபர்கள்
இந்திய முஸ்லிம்கள்
1941 இறப்புகள்
1869 பிறப்புகள்
தக்காணச் சுல்தான்கள்
|
594535
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
|
கயா லால்
|
கயா லால் (Gaya Lal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் பல்வால் மாவட்டத்தில் உள்ள ஓடல் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அரியானா சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.
1967 ஆம் ஆண்டில் கயா லால் பதினைந்து நாட்களில் மூன்று முறை கட்சி மாறினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து சனதா கட்சிக்குச் சென்ற இவர் மீண்டும் காங்கிரசு கட்சிக்கு திரும்பி அடுத்த ஒன்பது மணி நேரத்திற்குள் மீண்டும் சனதா கட்சிக்கு மாறினார். கயா லால் ஐக்கிய முன்னணியில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர முடிவு செய்தபோது, காங்கிரசு தலைவர் இராவ் பிரேந்திர சிங் இவரை சண்டிகர் பத்திரிகைக்கு அழைத்து வந்து "ஆயா ராம் கயா ராம்" என்று அறிவித்தார். இது பல நகைச்சுவைகள் மற்றும் கேலிச்சித்திரங்களுக்குப் பொருளாக மாறியது. 1985 ஆம் ஆண்டில், இத்தகைய கட்சி விலகல்களைத் தடுக்க அரசியலமைப்பு திருத்தப்பட்டது. கயா லாலின் மகன் உதய் பன் தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரியானா பிரிவின் மாநிலத் தலைவராக உள்ளார்.
மேற்கோள்கள்
இந்திய அரசியல்வாதிகள்
2009 இறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
அரியானா நபர்கள்
|
594539
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
தெற்கத்திய நீளவால் கீச்சான்
|
தெற்கத்திய நீளவால் கீச்சான் அல்லது தெற்கத்திய கருஞ்சாம்பல்முதுகு கீச்சான் (அறிவியல் பெயர்: Lanius schach caniceps) என்பது நீளவால் கீச்சானின் துணையினம் ஆகும். இது மேற்கு, நடு, தென்னிந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
விளக்கம்
மைனாவை விட சிறிய பறவையான தெற்கத்திய நீளவால் கீச்சான் நீண்ட வாலுடன் காட்சியளிக்கும். இது சுமார் 25 செ. மீ. நீளம் இருக்கும். இப்பறவையின் அலகு கொம்பு நிறமான கருப்பாகவும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் கறுப்புத் தோய்ந்த பழுப்பாகவும் இருக்கும். இது பெரிய தலையோடு, பருத்த வளைந்த அலகோடும் இருக்கும். இதன் வால் நீண்டும் நுனி நோக்கிச் செல்லச் செல்ல குறுகியதாக இருப்பதைக் கொண்டு அடையாளம் காண இயலும். இதன் நெற்றியும் கண் வழியாக செல்லும் பட்டையும் கறுப்பு நிறத்தில் இருக்கும். தலையும் முதுகும் கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் பிட்டம் நல்ல கருஞ்சிவப்பாக இருக்கும். உடலின் அடிப்பகுதி கருஞ்சிவப்புத் தோய்ந்த வெண்மை நிறத்தில் இருக்கும். வால் கறுப்பும் வெளிர் கருஞ்சிவப்பும் கலந்து காணப்படும். இறக்கைகளில் வெள்ளைத் திட்டுகள் காணப்படும்.
பரவலும் வாழிடமும்
தெற்கத்திய நீளவால் கீச்சான் மேற்கு, நடு, தென்னிந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் விளை நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், நீர்வளம் மிகுந்த பகுதிகளைச் சார்ந்த இலையுதிர் காட்டுச் சூழலிலைச் சார்ந்து காணப்படும். மலைகளில் 1200 மீட்டர் உயரம் வரை காணப்படும்.
நடத்தை
இப்பறவையானது ஓணான், தவளை போன்றவற்றைப் பிடித்து முள்ளில் குத்திவைத்திருந்து பின்னர் வேண்டும்போது உண்ணும் பழக்கம் கொண்டது.
தெற்கத்திய நீளவால் கீச்சான் மார்ச் முதல் சூன் முடிய இனப்பெருக்கம் செய்யக்கூடியது. இது முள் மரங்களில் தரையில் இருந்து நான்கு அல்லது ஐந்து மீடர் உயரத்திற்குள் உள்ள சிறு கிளைகளின் பிரிவில் குச்சிகள், வேர்கள், புற்கள் போன்ற பொருட்களைக் கொண்டு கோப்பை வடிவிலான கூட்டைக் கட்டும். கூட்டில் நான்கு முதல் ஆறு வரையிலான முட்டைகளை இடும். இதன் முட்டைகள் வெளிர் புசுமைத் தோய்ந்த வெண்மையாகச் செம்பழுப்புக் கறைகளைக் கொண்டதாக இருக்கும்.
மேற்கோள்கள்
கீச்சான்
தென்னிந்தியப் பறவைகள்
இலங்கைப் பறவைகள்
|
594540
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
கிரிஸ்டேடஸ் பழுப்புக் கீச்சான்
|
கிரிஸ்டேடஸ் பழுப்புக் கீச்சான் (அறிவியல் பெயர்: Lanius cristatus cristatus) என்பது பழுப்புக் கீச்சானின் துணையினம் ஆகும். இது மத்திய, கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு மங்கோலியா, இந்தியா முதல் மலாய் தீபகற்பம் வரை காணப்படுகிறது.
விளக்கம்
கொண்டைக்குருவி அளவுள்ள கிரிஸ்டேடஸ் பழுப்புக் கீச்சான் சுமார் 20 செ.மீ. நீளம் உடையது. இதன் மேல் அலகு கொம்பு நிறமான பழுப்பாகவும், கீழ் அலகு ஊன் நிறத்திலும் (முனை தவிர), விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் சிலேட் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் கண் வழியாக ஒரு கரும்பட்டை செல்லும். அந்தக் கரும்பட்டைக்கு மேல் நெற்றி சார்ந்த பகுதி வெண்மையாக இருக்கும். மோவாய், கன்னம், தொண்டை போன்றவையும் வெண்மையாக இருக்கும். உடலின் மேற்பகுதி கருஞ்சிவப்புத் தோய்ந்த பழுப்பு நிறமாக இருக்கும். உடலின் அடிப்பகுதி செம்மஞ்சள் தோய்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.
பரவலும் வாழிடமும்
கிரிஸ்டேடஸ் பழுப்புக் கீச்சான் மத்திய, கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு மங்கோலியா, இந்தியா முதல் மலாய் தீபகற்பம் வரை காணப்படுகிறது. வடக்கு ஆசியாவில் உள்ள பறவைகள் குளிர் காலத்தில் தென்னிந்தியாவுக்கு வலசை வருகின்றன. இது தென்னிந்தியாவில் பசுமைமாறாக் காடுகள், இலையுதிர் காடுகள் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. காடுகளை அடுத்த திறந்த வெளிகளிலும் திரியக் காணலாம். மலைகளில் 2000 மீ. உயரம் வரைக் காண இயலும். இவை காலை மாலை வேளைகளில் இரை தேடக்கூடியவை.
மேற்கோள்கள்
கீச்சான்
ஆசியப் பறவைகள்
|
594541
|
https://ta.wikipedia.org/wiki/2022%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
|
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (2022 Asian Games) என்பது 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இவ்விளையாட்டுப் போட்டிகள் 23 செப்டம்பர் 2023 முதல் 8 அக்டோபர் 2023 முடிய சீனா நாட்டின் காங்சூ நகரத்தில் நடத்தப்படுகிறது. 2022ம் ஆண்டில் நடைபெற வேண்டிய இவ்விளையாட்டுப் போட்டி கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
பங்கேற்கும் ஆசிய நாடுகள்
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசியா கண்டத்தின் 45 நாடுகள் பங்கேற்கிறது.
பதக்கப் பட்டியல்
</onlyinclude>
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Organising Committee's official website in Chinese
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
2023 நிகழ்வுகள்
2023 இல் விளையாட்டுகள்
|
594542
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B.%20%E0%AE%9A%E0%AF%81.%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D
|
கோ. சு. மேல்கோட்
|
கோ. சு. மேல்கோட் (16 அக்டோபர் 1901 – 10 மார்ச் 1982) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவரது முழுப்பெயர் கோபாலையா சுப்புகிருஷ்ணா மேல்கோட் என்பதாகும்.
மேல்கோட் ஒடிசா மாநிலத்தில் உள்ள பெர்காம்பூரில் வசந்த பஞ்சமி புனித நாளில் பிறந்தார். இவர் 1927-ல் ஐதராபாத்தில் உள்ளஉசுமானியா பல்கலைக்கழகத்தில் எல். எம். எஸ். பட்டம் பெற்றார். மேல்கோட் சில காலம் பாரம்பரிய மருத்துவத்தை யோகப் பயிற்சிகளுடன் இணைத்து பயிற்சி செய்தார். இவர் இந்திய மருத்துவ சங்கத்தின் ஐதராபாத்து கிளையின் தலைவராக சில காலம் இருந்தார். மேல்கோட் பதஞ்சலி யோகா ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார்.
இவர் ஹோம் ரூல் இயக்கம், உப்பு சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கங்கள் போன்ற இந்திய விடுதலை இயக்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு, 1952 மற்றும் 1957க்கு இடையில் முசிராபாத்திலிருந்து ஐதராபாத்து சட்டமன்ற உறுப்பினராக ஐதராபாத்து மாநிலத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கினார். 1952 முதல் ஐதராபாத்து மற்றும் ஆந்திர மாநிலம் (மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956ன் கீழ் ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்க) ஒன்றிணைக்கும் வரை ஐதராபாத்து மாநிலத்தின் நிதி அமைச்சராகவும் இருந்தார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு மூன்று முறை (1962, 1967 மற்றும் 1977) ஐதராபாத்து தொகுதியிலிருந்தும், 1957-ல் ராய்ச்சூர் மக்களவைத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 1970-ல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். இதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகி தெலங்கானா இயக்கத்தில் சேர்ந்தார். இறுதியில் தெலங்கானா பிரஜா சமிதியில் சேர்ந்தார்.
இவரது மனைவி விமலாபாய் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
மேற்கோள்கள்
மெல்கோட் ஜிஎஸ், லுமினரீஸ் ஆஃப் 20ம் செஞ்சுரி, பகுதி I, பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகம், ஹைதராபாத், 2005, பக்: 429–30.
வெளி இணைப்புகள்
டாக்டர் ஜி எஸ் மெல்கோட்டின் அரிய புகைப்படங்கள்
லோக்சபா இணையதளத்தில் ஜிஎஸ் மெல்கோட்டின் பயோடேட்டா.
ஜெனியில் உள்ள ஆவணங்கள் கோப்பகத்தில் ரெஸ்யூமைக் காணலாம். அல்லது இங்கே கிளிக் செய்யவும் GSM_bio.html
2ஆவது மக்களவை உறுப்பினர்கள்
பொது அலுவல்களுக்காகப் பத்மசிறீ விருதுபெற்றவர்கள்
5வது மக்களவை உறுப்பினர்கள்
4வது மக்களவை உறுப்பினர்கள்
3வது மக்களவை உறுப்பினர்கள்
1982 இறப்புகள்
1901 பிறப்புகள்
|
594543
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D
|
மேரி கார்பெண்டர்
|
மேரி கார்பெண்டர் (Mary Carpenter ) (3 ஏப்ரல் 1807 – 14 ஜூன் 1877) ஒரு ஆங்கிலக் கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமாவார். ஒரு யூனிடேரியன் மந்திரியின் மகளான, இவர் ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் இலவச கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் சீர்திருத்த பள்ளிகளை நிறுவினார். பிரிஸ்டலில் ஏழை குழந்தைகள் மற்றும் இளம் குற்றவாளிகளுக்கு முன்னர் கிடைக்காத கல்வி வாய்ப்புகளை கொண்டு வந்தார்.
இவர் தனது படைப்புகளில் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை வெளியிட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல கல்விச் செயல்களை நிறைவேற்றுவதில் இவரது பரப்புரை கருவியாக இருந்தது. இலண்டனின் புள்ளியியல் சங்கத்தால் வெளியிடப்பட்ட கட்டுரையைப் பெற்ற முதல் பெண்மணி இவர். இவர் பல மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் உரையாற்றினார். மேலும் இவரது காலத்தின் முதன்மையான பொதுப் பேச்சாளர்களில் ஒருவராக அறியப்பட்டார். இவர் அடிமை எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக இருந்தார்; இவர் இந்தியாவுக்கு வந்த போது, பள்ளிகள் மற்றும் சிறைகளுக்குச் சென்றார். மேலும், பெண் கல்வியை மேம்படுத்தவும், சீர்திருத்த பள்ளிகளை நிறுவவும், சிறைச்சாலை நிலைமைகளை மேம்படுத்தவும் பணியாற்றினார். பிந்தைய ஆண்டுகளில் இவர் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் சென்று வந்தார். மேலும், தண்டனை மற்றும் கல்வி சீர்திருத்த பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
கார்பெண்டர் தனது பிற்காலங்களில் பெண்களின் வாக்குரிமையை பகிரங்கமாக ஆதரித்தார். மேலும் உயர்கல்விக்கான பெண் அணுகலுக்காகவும் பிரச்சாரம் செய்தார். கார்பெண்டர் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் அவர் 1858 இல் ரோசன்னா என்ற ஐந்து வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்தார்.
இறப்பு
ஜூன் 1877 இல் தனது வீட்டில் தூக்கத்தில் இறந்தார். பிரிஸ்டலில் உள்ள அர்னோஸ் வேல் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். பிரிஸ்டல் கதீட்ரலின் வடக்குப் பகுதியில் இவருக்கு ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.
சான்றுகள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Works by Mary Carpenter at Google Books
Elihu Burritt Papers from Swarthmore College Peace Collection
1877 இறப்புகள்
1807 பிறப்புகள்
Coordinates not on Wikidata
|
594545
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81
|
நிலோத்பால் பாசு
|
நிலோத்பால் பாசு (Nilotpal Basu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசுட்டு) உறுப்பினரான இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் மேற்கு வங்காளத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். கிராமீன் சஞ்சார் சங்கம் என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார். மேற்கு வங்கத்தில் மாநிலம் மற்றும் இந்திய தொடர்பாடல் நிறுவனமான பி.எசு.என்.எல் என்ற பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின் ஆதரவுடன் பொது அழைப்பு அலுவலகம் திட்டத்தைத் தொடங்கியது. வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பாசு சர்ச்சையில் சிக்கினார்.
மேற்கோள்கள்
1956 பிறப்புகள்
வாழும் நபர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
மேற்கு வங்காள அரசியல்வாதிகள்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதிகள்
|
594547
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE
|
நீம் கரோலி பாபா
|
நீம் கரோலி பாபா (Neem Karoli Baba) ((பிறப்பு:ஏறத்தாழ:1900 – இறப்பு:11 செப்டம்பர் 1973), இந்து சமய ஆன்மீக குருவும், அனுமன் பக்தரும் ஆவர். இவரது ஆசிரமங்கள் நைனிடாலில் உள்ள கைன்சி, பிருந்தாவனம், ரிஷிகேஷ், சிம்லா, நீம் கரோலி கிராமம், ஃபரூக்காபாத் மாவட்டம் மற்றும் தில்லியில் உள்ளது. மேலும் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் தாவோஸ் நகரத்தில் உள்ளது.
வாழ்க்கை வரலாறு
தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் அக்பர்பூர் கிராமத்தில், இலக்குமி நாராயண சர்மாவிற்கு1900ல் அந்தணர் குலத்தில் நீம் கரோலி பாபா இலக்குமண தாஸ் எனும் இயற்பெயரில் பிறந்தார்.இவருக்கு திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்த பின், 1958ல் துறவறம் பூண்டார்.
நீம் கரோலி பாபா, கிழக்கே குஜராத் முதல் மேற்கே வங்காளம் வரையும், வடக்கே இமயமலை முதல் தெற்கே விந்திய மலைத்தொடர் வரை வட இந்தியா முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, பக்தி யோகத்தை பரப்பினார்.
படக்காட்சிகள்
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
1900 பிறப்புகள்
1973 இறப்புகள்
இந்து சமயப் பெரியார்கள்
உத்தரப் பிரதேச நபர்கள்
ஃபரூக்காபாத் மாவட்டம்
|
594548
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
|
ராதிகா ரஞ்சன் குப்தா
|
ராதிகா ரஞ்சன் குப்தா (Radhika Ranjan Gupta) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் 1977ஆம் ஆண்டு சூலை மாதம் 26ஆம் தேதி முதல் 1977ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி வரை இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். இந்த நேரத்தில் சமூக-பன்னாட்டு சூழ்நிலை சாதகமற்றதாக இருந்தது. 1977ஆம் ஆண்டு சூலை மாதம் 26ஆம் தேதியன்று சனதா கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான குறுகிய கால கூட்டணியின் தலைவராக இருந்த இவர் மாநிலத்தின் நான்காவது முதலமைச்சரானார்.
இறப்பு
1998ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதியன்று ராதிகா ரஞ்சன் குப்தா காலமானார்.
மேற்கோள்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
1998 இறப்புகள்
இந்திய அரசியல்வாதிகள்
திரிபுரா அரசியல்வாதிகள்
திரிபுரா முதலமைச்சர்கள்
|
594557
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81
|
பிரபுல்ல குமார் தாசு
|
பிரபுல்லா குமார் தாசு (Prafulla Kumar Das)(பிறப்பு c. 1930) இந்திய அரசியல்வாதியும் திரிபுரா மாநில மேனாள் முதலமைச்சரும் ஆவார். இவர் மக்களாட்சி காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக 1 ஏப்ரல் 1977 முதல் 25 சூலை 1977 வரை பதவி வகித்தார்.
மேற்கோள்கள்
திரிபுரா முதலமைச்சர்கள்
வாழும் நபர்கள்
|
594558
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
கணிய பரிணாம மரபியல்
|
கணிய பரிணாம மரபியல் (Computational phylogenetics) என்பது கணிய நிரல்களாலும், படிமுறைத் தீர்வுகளாலும், உயிரிய முறைகளாலும், பரிணாம மரபு வழி ஆய்வுகளை மேற்கோள்ளுதல் ஆகும். இதன் முக்கிய இலக்கு யாதெனில், மரபணுக்கள், இனங்கள், உயிரலகுகள் முதலியவற்றைக் கொண்டு கணிய நுட்ப வழிமுறைகளைக் கொண்டு தன்னியக்கமாக உயிரினக் கிளைப்படத்தினை உருவாக்குதல் ஆகும். எடுத்துக்காட்டாக, மனிதர், கொரில்லா குரங்கு, பொனொபோ குரங்கு போன்ற உயர்நிலை விலங்கினக் குடும்பத்தினை (Hominidae) புத்தாய்வு செய்யும் ஆய்வுப் பணிகள் இம்முறைகளால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளில் உயிரினங்களுக்கு இடையே இருக்கும் குறிப்பிட்ட மரபணுக்களின் தொடர்புகள் ஆய்ந்து தொடர்புகள் கண்டறியப்பட்டன.
மேற்கோள்கள்
தொகுதிமரபியல்
|
594559
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88
|
உயிரிக்கிளை
|
உயிரினக்கிளை (Clade) என்பது உயிரியல் வகைப்பாட்டியல் முறைமையின் புதிய அணுகுமுறை அலகுகளில் ஒன்றாகும். உயிரின வகைப்பாட்டு அறிவியலின் தொடக்க காலத்தில், ஒரு உயிரினத்தின் புறத்தோற்றங்களையும், உடலின் உள்ளமைப்புகளையும் கொண்டு வகைப்படுத்துதல் முறைமை கடைபிடிக்கப்பட்டன. உயிரின மரபியல் துறையின் வளர்ச்சியும், கணினியியல் வளர்ச்சியும், பரிணாமயியல் வளர்ச்சியும் ஏற்பட்ட பிறகு, ஒரே உயிரியிலிருந்து உருவான, ஒத்த மரபணுக்களைக் கொண்டவைகளைக் கொண்டு, கணிய பரிணாம மரபியல் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு, உயிரினக்கிளை என்ற அலகு உருவாக்கப்பட்டு, பன்னாட்டு உயிரியல் அறிஞர்களால் பின்பற்றப்படுகிறது.
இந்த அலகினைக் கொண்டே, உயிரினக்கிளை படத்தினை உருவாக்கினர்.
மேற்கோள்கள்
உயிரியல் வகைப்பாடு
|
594560
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
|
பிஜாய் சாகர்
|
பிஜாய் சாகர் (Bijoy sagar) (விஜய் சாகர் ) என்பது வடகிழக்கு இந்தியாவில் திரிபுராவின் உதய்ப்பூரில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இது மகாதேவ் திகி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரி 750 அடி நீளமும் 450 அடி அகலமும் கொண்டது. ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த குடியிருப்புகளாக உள்ளன. வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு வாய்க்கால் வழியாக வீட்டு கழிவுநீர் மற்றும் கழிவு நீரால் ஏரி மாசுபட்டுள்ளது. மக்கள் குளிப்பதற்கும், கழுவுவதற்கும், மீன்பிடிப்பதற்கும் இந்த ஏரியை நம்பியிருக்கிறார்கள். மேலும் சுற்றியுள்ள வீடுகளின் திடக்கழிவுகளும் ஏரியில் விடப்படுகின்றன.
வரலாறு
வடகிழக்கு இந்தியாவில், 1684-இல் மாணிக்ய அரச மரபால் நிறுவப்பட்ட சுதந்திர திரிபுரா இராச்சியத்தை ஆண்ட தான்ய மாணிக்யா மற்றும் கோவிந்த மாணிக்யா ஆகியோரின் இடைப்பட்ட ஆட்சிக் காலத்தில் இந்த ஏரி தோண்டப்பட்டது. இந்த ஏரி வீர் விக்ரம் கிசோர் மாணிக்கம் ஆட்சியின் போது அளவிடப்பட்டது.
திரிபுராவின் மன்னர் ஜுஜரூபா மோக் வம்சத்தை தோற்கடித்து ரங்கமதியைக் ( உதய்ப்பூர் முன்பு ரங்கமதி என்றும் அழைக்கப்பட்டது ) கைப்பற்றி கி.பி 590 ஆம் ஆண்டின் மத்தியில் உதய்பூரில் தனது புதிய தலைநகரை நிறுவினார். அவரது சந்ததியினர் தங்கள் பெயரை மாணிக்யா என்று மாற்றிக்கொண்டு உதய்பூரில் திரிபுரசுந்தரி கோயில், புவனேசுவரி கோயில், குணபதி மந்திர், சிவன் கோயில், ஜெகந்நாதர் கோயில், கோபிநாத் கோயில், பதர்சகேத் பாரி மற்றும் துடியா மந்திர் போன்ற பல கோயில்களைக் கட்டினார்கள். இந்த கட்டத்தில், ஏரிகள் மற்றும் கோயில்களின் நகரத்திற்கு அழகு சேர்க்க அமர்சாகர், ஜகந்நாத் திகி, தனிசாகர் (தான்ய சாகர்) மற்றும் பிஜோய் சாகர் (மகாதேவ் திகி) போன்ற பல ஏரிகள் தோண்டப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் திரிபுராவின் தலைநகராகவும் இருந்தது.
முக்கியமானவை
திரிபுராவின் முதல் கல்லூரியான நேதாஜி சுபாஷ் மகாவித்யாலயா ஏரியின் கரையில் அமைந்துள்ளது. கல்லூரி 1964 இல் தனது பயணத்தைத் தொடங்கியது. 1977 இல் திரிபுரா அரசு இக்கல்லூரியை நிரந்தரமாக வைக்க ஏரியின் கரையில் ஒரு நிலத்தை ஒதுக்கியது.
ஏரிக்கரையில் சிவனுக்கான திரிபுரேசுவர் கோயில் உள்ளது.
ஏரிக்கு வடக்கே மகாதேவ் கோவிலின் முன் பாறையில் செதுக்கப்பட்ட இரண்டு சிங்கங்களின் உருவங்கள் உள்ளன.
இதனையும் கான்க
திரிபுரா
உதய்ப்பூர், திரிப்புரா
மேற்கோள்கள்
திரிபுராவில் உள்ள ஏரிகள்
Coordinates on Wikidata
இந்திய ஏரிகள்
|
594562
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
|
தான்ய மாணிக்கியா
|
தான்ய மாணிக்கியா (Dhanya Manikya) என்பவர் 1490 முதல் 1515 வரை திரிபுரா ராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். இவர் காலத்தில் திரிபுர சுந்தரி கோயில் நிறுவப்பட்டது.
சுயசரிதை
இவரது தளபதிகளான ரே கச்சாக் மற்றும் ரே கச்சம் ஆகியோரின் உதவியால், திரிபுராவின் பிராந்திய களத்தை கிழக்கு வங்காளத்திற்கு நன்கு விரிவுபடுத்தினார். முழு கொமிலா மாவட்டம் மற்றும் வங்காளதேசத்தின் சில்ஹெட், நவகாளி மற்றும் சிட்டகொங் மாவட்டங்களின் சில பகுதிகளின் தனது கட்டுப்பாட்டை நிறுவினார்.
தான்ய மாணிக்கியா பல கோவில்களை அமைத்தார். உதய்ப்பூரில் உள்ள திரிபுரசுந்தரி கோயில் அதில் முதன்மையானது. 1515 ஆம் ஆண்டு பெரியம்மை நோயால் இறப்பதற்கு முன் தன்யா இராணுவ வலிமையின் மூலம் ராச்சியத்தை பலப்படுத்தினார்.
இதனையும் கான்க
மாணிக்கிய வம்சம்
திரிபுரா இராச்சியம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Kingdom of Tripura - University of Queensland
திரிபுராவின் வரலாறு
திரிபுராவின் ஆட்சியாளர்கள்
|
594563
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
|
முகுத் மாணிக்கியா
|
முகுத் மாணிக்கியா (Mukut Manikya) 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திரிபுரா ராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்ச ஆட்சியாளராக இருந்தார்.
பிரதாப் மாணிக்கியா மற்றும் முதலாம் விசய மாணிக்கியா ஆகியோரின் சுருக்கமான ஆட்சியைத் தொடர்ந்து முகுத் அரியணையைப் பெற்றார். அவர்கள் முறையே இவரது மூத்த சகோதரர் மற்றும் தந்தைவழி மருமகன். இவரது உடனடி முன்னோடிகளின் ஆட்சியின் போது இவரது செல்வாக்கு இராணுவத் தலைவர்களின் ஆதரவின் மூலம் உறுதி செய்யப்பட்டது. இது 1489 இல் நிகழ்ந்ததாக நாணயவியல் சான்றுகள் குறிப்பிடுகின்றன
இருப்பினும், முகுத்தின் சொந்த ஆட்சி மிகவும் குறுகியதாகவே இருந்தது. அதற்குப் பதிலாக அடுத்த ஆண்டு (அதாவது 1490) தயாரிக்கப்பட்ட நாணயங்கள் இவரது சகோதரர் தான்ய மாணிக்கியாவின் பெயரைக் காட்டுகின்றன. இவர் தலைவர்களின் ஆதரவை இழந்திருக்கலாம். பின்னர் இவரை ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டிருக்கலாம்.
மேற்கோள்கள்
திரிபுராவின் வரலாறு
திரிபுராவின் ஆட்சியாளர்கள்
|
594564
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
|
காட்மோயிண்டைட்டு
|
காட்மோயிண்டைட்டு (Cadmoindite) என்பது CdIn2S4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இதுவோர் அரிய காட்மியம் இண்டியம் சல்பைடு கனிமமாகும். சைபீரியாவில் குரில் தீவுகளில் உள்ள குத்ரியாவி எரிமலை, இட்ரூப் தீவில் உள்ள உயர் வெப்பநிலை (450-600 °C) எரிமலை பிளவுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. செக் குடியரசின் போகிமியாவில் உள்ள கேடெரினா நிலக்கரிச் சுரங்கத்திலும் இது கிடைக்கிறது.
CdIn2S4 பல்வண்ணப் பளிங்குருவக் கட்டமைப்பை வெளிப்படுத்துகிறது, இது 8 எண்முகங்களால் ஒருங்கிணைக்கப்பட்டும் 16 நான்முகிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட நேர்மின் அயனி தளங்களைக் கொண்ட ஒரு கன அலகு செல் மூலம் விவரிக்கப்படுகிறது. நேர்மின் அயனித் தளங்களில் Cd(II) மற்றும் In(III) ஆகியவற்றின் விநியோகம் நிலையான எக்சு-கதிர் படிகவியல் ஆய்வு நுட்பங்களால் தெளிவுபடுத்துவது கடினம், ஏனெனில் இரண்டு இனங்களும் சம் எலக்ட்ரான் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. ஆனால் செயற்கை மாதிரிகளில் ராமன் நிறமாலை அளவீடுகள் மற்றும் அடர்த்தி செயல்பாட்டுக் கோட்பாடு உருவகப்படுத்துதல்கள் ஆகியவை இரண்டும் நான்முகத் தளங்களில் சுமார் 20% இண்டியம்(III) நேர்மின் அயனிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கின்றன. and density functional theory simulations
மேற்கோள்கள்
காட்மியம் கனிமங்கள்
இண்டியம் கனிமங்கள்
சல்பைடு கனிமங்கள்
கனசதுரக் கனிமங்கள்
|
594565
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
|
கோவிந்த மாணிக்கியா
|
கோவிந்த மாணிக்கியா (Govinda Manikya) (இ. 1676) 1660 முதல் 1661 வரையிலும், மீண்டும் 1667 முதல் 1676 வரையிலும் திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்ச அரசனாவார். ஒரு திறமையான மற்றும் வெற்றிகரமான ஆட்சியாளராகக் கருதப்பட்டாலும், இவரது ஆட்சி தற்காலிகமாக அகற்றப்பட்டு, இவரது இளைய சகோதரனால் அபகரிக்கப்பட்டதன் மூலம் சிலகாலமே ஆட்சி புரிந்துள்ளார்.
வாழ்க்கை
மன்னன் கல்யாண் மாணிக்கியாவின் மூத்த மகனான, கோவிந்தன் தனது தந்தை 1660 இல் இறந்த பிறகு அரியணை ஏறினார். இருப்பினும், பதவியேற்ற ஒரு வருடத்திற்குள் இவரது சகோதரர் சத்ர மாணிக்கியாவால் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இவரது சகோதரார் முகலாயப் பேரரசின் உதவியுடன் அரியணையைக் கைப்பற்றி கோவிந்தை நாடுகடத்தினார்.
கோவிந்தா சிட்டகாங் மலைப் பகுதிக்கு தப்பிச் சென்றார். திரிபுராவின் வரலாற்றைக் கூறும் ராஜ்மாலாவின் கூற்றுப்படி, முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் இதேபோல் நாடு கடத்தப்பட்ட சகோதரரான ஷா ஷுஜாவுடன் இவர் நட்பை வளர்த்துக் கொண்டார். இருப்பினும், இரண்டு இளவரசர்களுக்கு இடையிலான சந்திப்பு சாத்தியமற்றது என்று காலவரிசை தரவு சுட்டிக்காட்டுகிறது. கோவிந்தா பின்னர் அரக்கானில் தஞ்சமடைந்தார். அதன் ஆட்சியாளர் 1667 இல் திரிபுராவை மீட்க இவருக்கு உதவினார். இந்தக் கட்டத்தில் கோவிந்தா சத்ராவைக் கொன்றாரா அல்லது அவர் ஏற்கனவே இறந்துவிட்டாரா என்பது பற்றிய கணக்குகள் முரண்படுகின்றன.
ஆட்சிக்கு வந்த பின்னர் இவர் முகலாயர்களை சமாதானப்படுத்த, ஆண்டுதோறும் ஐந்து யானைகளை அனுப்ப ஒப்புக்கொண்டார். கோவிந்தா பொதுவாகப் முகலாயப் பேரரசுடன் நல்லுறவைப் பேணி வந்தார், திரிபுரா ஒரு நடைமுறை சுதந்திர நிலையை அனுபவிக்க முடிந்தது. இவர் ஒரு திறமையான நிர்வாகியாகவும், கலை மற்றும் கற்றலின் புரவலராகவும் பார்க்கப்படுகிறார். இவரது ஆட்சியின் போது, ராஜ்மாலாவின் மூன்றாவது பகுதி முடிக்கப்பட்டது. நாரத புராணம் வங்காள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
கோவிந்தா 1676 இல் இறந்தார். பின்னர் இவரது மகன் ராம மாணிக்யா ஆட்சி செய்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இரவீந்திரநாத் தாகூரின், விஷர்ஜன் மற்றும் ராஜர்ஷி போன்ற நாடகங்களில் இவர் சித்தரிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
1676 இறப்புகள்
திரிபுராவின் வரலாறு
திரிபுராவின் ஆட்சியாளர்கள்
|
594567
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
வசந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான்
|
வசந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான் (Vasantrao Balwantrao Chavan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 13 ஆவது மகாராட்டிர சட்டப் பேரவையில் இவர் உறுப்பினராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் நைகான் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். முன்னதாக வசந்த்ராவ் நைகானில் சுயேட்ச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். செப்டம்பர் 2014 ஆம் ஆண்டில் இந்திய காங்கிரசுக் கட்சியில் இணைந்தார். 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் சட்டப் பேரவையின் பொதுக் கணக்குக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். நைகானில் உள்ள ஜந்தா உயர்நிலைப்பள்ளி மற்றும் வேளாண்மைக் கல்லூரியின் தலைவராகவும் உள்ளார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
மகாராட்டிர அரசியல்வாதிகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
594568
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF
|
மெய்இருவித்திலி
|
மெய்இருவித்திலி (Eudicots) என்பது உயிரிக்கிளைகளில் ஒரு அலகாகும். இச்சொல்லானது, இருவித்திலைத் தாவரம் என்ற முந்தைய தாவர வகைப்பாட்டியல் அலகிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். எனவே, இத்தாவரங்களை முன்பு, 'முக்குழியுடைப் பூந்துள்' (colpi) தாவரங்கள் (tricolpates or non-magnoliid dicots) என அழைத்தனர். 1991 ஆம் ஆண்டு பரிணாம தாவரவியலாளர் யேம்சு எ. டோய்லி (James A. Doyle]] என்பவரும், தொல்தாவரவியல் அறிஞர் (paleobotanist) கார்ல் எல். ஓட்டன் (Carol L. Hotton) சான்றுகளுடன் விவரித்தனர்.
மரபு வழி தோற்றம்
மெய்இருவித்திலிகளின் மரபு வழி தோற்றமானது கீழுள்ள மரபுக்கிளை படம் மூலம் விளக்கப்படுகிறது:
மேற்கோள்கள்
தாவர வகைப்பாட்டியல்
|
594572
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87
|
சுலேகா கும்பாரே
|
சுலேகா நாராயண் கும்பாரே (Sulekha Narayan Kumbhare) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1962 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். அரசியல்வாதி, வழக்கறிஞர் மற்றும் அம்பேத்காரிய-பௌத்த ஆர்வலர் என பன்முகத்தன்மையுடன் இவர் இயங்கினார். பகுசன் குடியரசுக் ஏக்தா மஞ்சு என்ற பிராந்தியக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் அறியப்படுகிறார். 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மகாராட்டிர மாநில அரசாங்கத்தின் மந்திரிசபையில் ஓர் அமைச்சராகப் பணியாற்றினார். மகாராட்டிரா மாநில சட்டமன்ற உறுப்பினராக 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது நாக்பூர் மாவட்டத்தில் உள்ள காம்தி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய குடியரசுக் கட்சியின் பிரதிநிதியாக இவர் இருந்தார். சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ள இவர் ஓர் அம்பேத்காரிய ஆர்வலராகவும் தனது வாழ்நாள் முழுவதையும் பௌத்தத்தைப் பரப்புவதிலும் செலவிடுகிறார்.
மேற்கோள்கள்
1962 பிறப்புகள்
வாழும் நபர்கள்
21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
இந்தியப் பௌத்தர்கள்
20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள்
நாக்பூர் மாவட்ட நபர்கள்
|
594573
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D
|
திலீப்ராவ் தேசுமுக்
|
திலீப்ராவ் தக்தோஜிராவ் தேசுமுக் (Diliprao Deshmukh) (பிறப்பு 18 ஏப்ரல் 1950) என்பவர் இந்திய அரசியல்வாதியும் விலாசுராவ் தேசுமுக்கின் இளைய சகோதரரும் ஆவார். இவர் மகாராட்டிரா மாநிலத்தில் முதல்வர் சுசில் குமார் சிண்டேவின் அமைச்சரவையில் நிதி மற்றும் திட்டமிடல் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
தேசுமுக் 2000-ஆம் ஆண்டு மகாராட்டிராவின் சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அசோக் சவானின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு,மகாராட்டிரா மாநில கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராக இருந்தார்.
மேற்கோள்கள்
1950 பிறப்புகள்
வாழும் நபர்கள்
மகாராட்டிர அரசியல்வாதிகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
594580
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%2C%20%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
நில, நன்னீர் தாவரம்
|
நில, நன்னீர் தாவரம் (Streptophyta) என்பது தாவர வகைப்பாட்டியல் முறைமையில் இருக்கும் உயிரிக்கிளைகளில் ஒன்றாகும். இதன் கூட்டுத்தொகுப்பு தாவரவியல் அறிஞர்களிடம் வேறுபட்டாலும், பெரும்பான்மையான தாவரவியலாளர் நிலத்தாவரங்களையும், சில பச்சைப் பாசிகளைத் தவிர, பெரும்பான்மையான பச்சை பாசிகளையும் (Chlorophyta), சில கடற்பாசிகளையும் (Prasinodermophyta) தவிர அமைந்துள்ளமையை ஏற்றுக் கொள்கின்றனர்.
மேற்கோள்கள்
தாவர வகைப்பாட்டியல்
|
594589
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%28%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29
|
பன்னர்கட்டா (திரைப்படம்)
|
பன்னர்கட்டா (Bannerghatta) என்பது அறிமுக இயக்குனர் விஷ்ணு நாராயணன் இயக்கி 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி மர்ம திரில்லர் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் கதையினை அர்ஜுன் பிரபாகரன் மற்றும் கோகுல் ராமகிருஷ்ணன் எழுதினர். இப்படத்தில் கார்த்திக் ராமகிருஷ்ணன் நடித்துள்ளார். அமேசான் பிரைம் மூலம் படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கேரளாவின் 26வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
Bannerghatta Amazon Prime
அமேசான் பிரைம் வீடியோ அசல் திரைப்படங்கள்
மலையாளத் திரைப்படங்கள்
2021 திரைப்படங்கள்
2022 திரைப்படங்கள்
|
594591
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%2C%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE
|
அரசு பெண்கள் முதுகலை கல்லூரி, இட்டாவா
|
அரசு பெண்கள் முதுகலை கல்லூரி, இட்டாவா (Government Girls Post Graduate College, Etawah), முன்பு பஞ்சாயத்து ராஜ் அரசு பெண்கள் கல்லூரி, உத்தரபிரதேசத்தின் இட்டாவாவில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரி இளங்கலை, இளம் வணிகவியல் மற்றும் முதுகலைப் படிப்புகளை வழங்கும் அரசு மகளிர் கல்லூரியாக உள்ளது. இக்கல்லூரி 1991-ல் பஞ்சாயத்து ராஜ் அரசு பெண்கள் கல்லூரியாக நிறுவப்பட்டது. இது கான்பூரின் சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
மகளிர் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்
உத்தரப் பிரதேசக் கல்லூரிகள்
|
594592
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D
|
பூக்கும் தாவர மரபுநெறி குழுமம்
|
பூக்கும் தாவர மரபுநெறி குழுமம் (Angiosperm Phylogeny Group = APG) என்பது முறைசாரா பன்னாட்டு தாவர வகைப்பாட்டியல் அறிஞர் குழுமம் ஆகும். இவர்கள் உலகிலுள்ள பூக்குந்தாவரங்களை, பரிணாம மரபு வழிமுறைகளையும், கணியவழித் தீர்வுகளையும் கொண்டு ஒருமித்த எண்ணத்துடன் வகைப்படுத்தும் நெறிமுறைகளை உருவாக்கி வகைப்படுத்துகின்றனர். இதனால் பூக்கும் தாவரத்தொகுதிகள் குறித்த புதிய எண்ணங்களும், அணுகமுறைகளும் தாவரவியல் ஆய்வில் தோன்றுகின்றன.
பதிப்புகள்
இதுவரை 1998, 2003, 2009, 2016 ஆகிய நான்கு ஆண்டுகள் இவரது ஆய்வுப் பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்பதிப்புகளால் தாவரங்களின் ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம் என்ற கோட்பாடு வலுவற்றதாக ஆகிவிட்டது. மேலும், உலகின் முக்கிய உலர் தாவரகம் வழிமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தாவர வகைப்பாட்டியல் அமைப்புகள்
|
594593
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
தாரகைத் தாவரம்
|
தாரகைத் தாவரம் (Asterids) என்ற உயிரிக்கிளையானது, பூக்கும் தாவர மரபுநெறி குழுமம் வெளியிட்ட நான்காம் பதிப்பிலுள்ள(APG IV, 2016) உயிரிக்கிளைகளில் ஒன்றாகும். இக்கிளையில் 80,000 இனங்களுக்கும் மேற்பட்ட தாவரங்கள் அமைந்து, பூக்கும் தாவரத் தொகுதியின் மூன்றாவது பெரிய உயிரினக்கிளையாகத் திகழ்கிறது. 'அசுடர்' ("aster-") என்ற சொல்லுக்கு தாரகை; விண்மீன்; நட்சத்திரம் என்பது பொருளாகும். எனவே, இந்த உயிரினக்கிளைக்கு தாரகைத்தாவரம் என பெயர் அமைந்தது.
மேற்கோள்கள்
தாவர வகைப்பாட்டியல்
|
594595
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
|
இராஷ்டிரிய ரைபிள்ஸ்
|
ராஷ்டிரிய ரைபிள்ஸ் (Rashtriya Rifles) (சுருக்கமாக:RR) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக 1958 ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின் கீழ் 1990ல் நிறுவப்பட்டது.
ராஷ்டிரிய ரைபிள்ஸ் படை, இந்தியத் தரைப்படையிலிருந்து 75,000 வீரர்களைக் கொண்டது. இதன் கூடுதல் தலைமை இயக்குநராக இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் கட்டளை தளபதியாக இருப்பார்.
அமைப்பு
ஜம்மு காஷ்மீரில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் ஐந்து தீவிரவாத எதிர்ப்புப் படைகளைக் கொண்டது.
தீவிரவாத எதிர்ப்புப் படை - ரோமியோ படை – ரஜௌரி மாவட்டம் மற்றும் பூஞ்ச் மாவட்டம்
தீவிரவாத எதிர்ப்புப் படை - டெல்டா படை – தோடா மாவட்டம்
தீவிரவாத எதிர்ப்புப் படை-விக்டர் படை - அனந்தநாக் மாவட்டம், புல்வாமா மாவட்டம், சோபியான் மாவட்டம், குல்காம் மாவட்டம் மற்றும் பட்காம் மாவட்டம்
தீவிரவாத எதிர்ப்புப் படை- கிலோ படை – ஸ்ரீநகர் மாவட்டம், குப்வாரா மாவட்டம், பாரமுல்லா மாவட்டம்
தீவிரவாத எதிர்ப்புப் படை -யூனிபார்ம் படை – உதம்பூர் மாவட்டம், இராம்பன் மாவட்டம், ஜம்மு மாவட்டம்
இதனையும் காண்க
அசாம் ரைப்பிள்ஸ்
இந்தியத் துணை இராணுவப் படைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Rashtriya Rifles on GlobalSecurity.org
இந்தியத் துணை இராணுவம்
|
594603
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D
|
எர்பர்ட்டு சி. பிரவுன்
|
எர்பர்ட்டு சார்லசு பிரவுன் (Herbert Charles Brown) (மே 22,1912 - திசம்பர் 19,2004) ஓர் அமெரிக்க வேதியியலாளர் மற்றும் 1979 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.
வாழ்க்கையும் தொழிலும்
பிரவுன் இலண்டனில் எர்பர்ட்டு புரோவர்னிக் என்ற பெயரில் உக்ரைனிய யூதக் குடியேறிய பெற்றோருக்குப் பிறந்தார். அவர்கள் சைதோமிர் பெர்ல்லும் (கோரின்சுட்டைன் எனப்படுபவர்), சார்லசு புரோவர்னிக் (வன்பொருள் கடை மேலாளர் மற்றும் தச்சர்) ஆகிய இருவரும் ஆவர். அவரது குடும்பம் ஜூன் 1914 இல் சிகாகோவுக்குக் குடிபெயர்ந்தது , அப்போது அவருக்கு இரண்டு வயது. பிரவுன் சிகாகோவில் உள்ள கிரேன் ஜூனியர் கல்லூரியில் பயின்றார் , அங்கு அவர் சாரா பேலெனைச் சந்தித்தார் , பின்னர் அவர் திருமணம் செய்து கொண்டார். கல்லூரி மூடப்படும் இடரில் இருந்தது , பிரவுனும் பேலனும் ரைட் ஜூனியர் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். 1935 ஆம் ஆண்டில் அவர் ரைட் ஜூனியர் கல்லூரியை விட்டு வெளியேறினார் , அந்த இலையுதிர்காலத்தில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் , மூன்று காலாண்டுகளில் இரண்டு ஆண்டு படிப்பை முடித்து 1936 இல் இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.அதே ஆண்டு அவர் ஒரு இயல்பான அமெரிக்க குடிமகன் ஆனார். 1937 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி பிரவுன் பேய்லனை மணந்தார் , அவர் போரோனின் ஐதரைடுகளில் ஆர்வம் காட்டியதாக கருதுகிறார் , இது 1979 ஆம் ஆண்டில் ஜார்ஜ் விட்டிஜுடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். இப்பணி தொடர்பான ஒரு தலைப்பில் பட்டப்படிப்பு தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு , 1938 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்தார்.
தொழில்துறையில் ஒரு பதவியைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர் முதுமுனைவர் பதவியை ஏற்க முடிவு செய்தார். இது அவரது கல்வி வாழ்க்கையின் தொடக்கமாக மாறியது. 1939 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார் , டெட்ராய்டில் உள்ள வெய்ன் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக சேருவதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார். 1946 இல் இணைப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1947இல் பர்தூ பல்கலைக்கழகத்தில் கனிம வேதியியல் பேராசிரியராக இருந்த அவர் , 1960இல் ஆல்பா சி சிக்மாவின் பீட்டா நியூ இயக்கத்தில் சேர்ந்தார். 1978 முதல் 2004 இல் அவர் இறக்கும் வரை தகைமைப் பேராசிரியர் பதவியை வகித்தார்.பர்தூ பல்கலைக்கழக வளாகத்தில் ஏர்பர்ட்டு சி. பிரவுன் வேதியியல் ஆய்வகம் அவரது நினைவாக பெயரிடப்பட்டது. அவர் முனிச் பன்னாட்டு அறிவியல் கல்விக்கழகத் தகைமை உறுப்பினராக இருந்தார்.
இரண்டாம் உலகப் போரின் போது எர்மன் இர்விங் சுலெசிங்கர் பிரவுன் உடன் பணிபுரிந்தபோது சோடியம் போரோவைதரைடு (NaBH4) செய்வதற்கான ஒரு முறையைக் கண்டுபிடித்தார் , இது போரான், நீரகப் போரனேசு சேர்மங்களை செய்யப் பயன்படுத்தப்படலாம். சமச்சீரற்ற தூய எனான்சியோமர்களை செய்வதற்கான முதல் பொதுவான முறையை கண்டுபிடிப்பதற்கு அவரது தொழில் வழிவகுத்தது. அவரது பெயர்களின் முதலெழுத்துகளாகக் காணப்படும் தனிமங்கள் H, C, B அவரது பணிக்களமாக இருந்தன.
1969இல் அவருக்கு தேசிய அறிவியல் பதக்கம் வழங்கப்பட்டது.
பிரவுன் தனது மனைவி சாராவை ஆதரித்ததற்காகவும் , வீடு, முற்றத்தை பேணிய நிதியால் ஆக்கப்பணி முயற்சிகளில் கவனம் செலுத்த இசைந்ததற்காகவும் மிகவும் பாராட்டினார். சுட்டாக்கோமில் நோபல் பரிசைப் பெற்ற பிறகு பிரவுன் கூறியது போல் அவர் பதக்கத்தை எடுத்துச் சென்றார் , மேலும் அவர் 100,000 அமெரிக்க டாலர் விருதை எடுத்துச் சென்றார்.
1971 ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கச் ச்சாதனைக் கல்விக்கழகத்தின் பொற்தட்டு விருதைப் பெற்றார்.
அவர் 2000 ஆம் ஆண்டில் ஆல்பா சி சிக்மா புகழ்முற்றத்தில் சேர்க்கப்பட்டார்.
அவர் 2004 திசம்பர் 19,அன்று இந்தியானாவின் இலபாயெட்டேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தார். அவரது மனைவி 2005மே 29 அன்று தனது 89வது வயதில் காலமானார்.
ஆராய்ச்சி
சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மாணவராக இருந்தபோது எர்பர்ட்டு பிரவுன் இருபோரேன் B2H6. இன் வேதிவினைகளை ஆய்வு செய்தார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் எர்மன் இர்விங் சிலெசிங்கரின் ஆய்வகம் இருபோரேன் ஆக்கும் இரண்டு ஆய்வகங்களில் ஒன்றாகும். இது ஒரு அரிய சேர்மமாகும். இது சிறிய அளவில் மட்டுமே தயாரிக்கப்பட்டது. ஹைட்ரஜன் - போரான் சேர்மம் BH3க்குப் பதிலாக B2H6 ஆக இருப்பது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள சிலெசிங்கர் இருபோரேனின் வேதிவினைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
பிரவுன் தனது சொந்த ஆராய்ச்சியைத் தொடங்கியபோது , ஆல்டிகைடுகள் கீட்டோனெஸ் எஸ்டர்கள், அமில குளோரைடுகளுடனான இருபோரேனின் வேதிவினைகளைக் கவனித்தார். இருபோரேன் ஆல்டிகைடுகள், கீட்டோன்களுடன் வினைபுரிந்து டயல்கோக்சிபோரேன்களை உற்பத்தி செய்கிறது என்பதை அவர் கண்டுபிடித்தார் , அவை தண்ணீரால் நீராற்பகுக்கப்பட்டு ஆல்ககால்களை உற்பத்தி செய்கின்றன. அதுவரை கரிம வேதியியலாளர்கள் லேசான நிலைமைகளின் கீழ் கார்பனைல்களைக் குறைப்பதற்கான ஏற்புடைய முறையைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் 1939இல் பிரவுன் வெளியிட்ட முனைவர் பட்ட ஆய்வறிக்கையில் யாரும் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. இருபோரேன் ஒரு செயற்கை வினைப்பொருளாக பயனுள்ளதாக இருப்பது மிகவும் அரிது.
இவர்1939 ஆம் ஆண்டில் பிரவுன் சிலெசிங்கரின் ஆய்வகத்தில் ஆராய்ச்சி உதவியாளராக ஆனார். இவர்கள்1940 ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சிக் குழுவிற்காக குறைந்த மூலக்கூறு எடை கொண்ட யுரேனியம் சேர்மங்களை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர். பிரவுனும் சிலெசிங்கர் 298 மூலக்கூறு எடையைக் கொண்ட ஆவியாகத்தகும் யுரேனியத்தை (IV) போரோவைதரைடுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்தனர். ஆய்வகச் செய்முறையில் பேரளவில் சேர்மத்தைச் செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் இருபோரேன் பற்றாக்குறையாக இருந்தது. இலித்தியம் ஐதரைடை போரான் முபுளூரைடுடன் எதைல் ஈத்தரில் வினைபுரிந்த அதிக அளவில் வேதிமத்தை உருவாக்கலாம் என்று இவர்கள் கண்டுபிடித்தனர். இந்த வெற்றி பல புதிய சிக்கல்களை சந்தித்தது. இலித்தியம் ஐதரைடு பற்றாக்குறையும் இருந்தது , எனவே பிரவுனும் சிலெசிங்கர் சோடியம் ஐதரைடுக்குப் பதிலாக பயன்படுத்த உதவும் செயல்முறையைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. சோடியம் ஐதரைடும் மெத்தில் போரேட்டும் இலித்தியம் ஐதரைடுக்கு மாற்றாக வாய்ப்புள்ளட சோடியம் மூமெத்தாக்சிபோரோவைதரைடை உருவாக்கும் வினைமுறையை அவர்கள் கண்டுபிடித்தனர்.
யுரேனியம் போரோஐதரைடு இனி தேவையில்லை என்று விரைவில் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது , ஆனால் சோடியம் போரோஐதரைடு நீரகத்தை உருவாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியது. அவர்கள் ஒரு மலிவான தொகுப்பைமுறையைத் தேடத் தொடங்கினர் , மேலும் சோடியம் ஐதரைடுடன் 250 பாகை வெப்பநிலையில் மெத்தில் போரேட்டைச் சேர்ந்து சோடியம் மெத்தாக்சைடு உருவாதலைக் கண்டுபிடித்தனர். இரண்டு பொருட்களையும் பிரிக்கும் முயற்சியில் அசிட்டோன் பயன்படுத்தப்பட்டபோது , சோடியம் போரோஐதரைடு அசிட்டோனைக் குறைத்தல் கண்டறியப்பட்டது.
சோடியம் போலைதரைடு என்பது ஒரு லேசான குறைப்பு முகவர் ஆகும். இது ஆல்டிகைடுகள் கீட்டோன்கள், அமில குளோரைடுகளை ஆகியவற்றைக் குறைப்பதில் நன்றாக வேலை செய்கிறது. இலித்தியம் அலுமினிய ஐதரைடு மிகவும் திறன்மிக்க குறைப்பு முகவர். இது கிட்டத்தட்ட எந்த செயல்பாட்டுக் குழுவையும் குறைக்க முடியும். 1947 இல் பிரவுன் பர்தூ பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது , வலுவான போரோஐதரைடுகள் மற்றும் லேசான அலுமினிய ஐதரைடுகளைக் கண்டறிய அவர் பணியாற்றினார் , அவை குறைக்கும் முகவர்களின் கதிர்நிரலை வழங்கும். போரோதஐதரைடின் உலோக இயனியை இலித்தியம் மெக்னீசியம் அலுமினியமாக மாற்றுதல் குறைக்கும் திறனை கூட்டுகிறது என்று பர்தூவின் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்தது. அலுமினிய ஐதரைடுக்கு அல்கோக்சி மாற்றீடுகளை அறிமுகப்படுத்துவது குறைக்கும் திறனைக் குறைக்கிறது என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். குறைக்கும் முகவர்களின் முழு கதிர்நிரலையும் அவர்கள் வெற்றிகரமாக உருவாக்கினர்.
இந்த குறைக்கும் முகவர்களை ஆராய்ச்சி செய்யும்போது , பிரவுனின் இணை ஊழியர் டாக்டர் பி. சி. சுப்பா ராவால் சோடியம் போலைதரைடு, எத்தில் ஒலிடு இடையே ஓர் இயல்பிகந்த வேதிவினை நிகழ்வது கண்டறியப்பட்டது. போரதஐதரைடு நீரகம், போரானை எத்தில் ஒலீடில் உள்ள கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பில் சேர்த்தது. ஆர்கனோபோரேன் தயாரிப்புக்கு வழிவகுத்துப் பின்னர் ஆக்ஸிஜனேற்றப்பட்டு ஆல்ககால் உருவாகவும் வழிவகுத்தது.இந்த இரண்டுப் படிநிலை வேதிவினை இப்போது ஐதரோ போரேற்ற- ஆக்சிஜனேற்றம் என்று அழைக்கப்படுகிறது , இது ஆல்கீன்களை மார்கோவ்னிகோவ் எதிர்ப்பு ஆல்ககால்களாக மாற்றும் ஒரு வேதிவினை ஆகும். மார்கோவ்னிகோவின் விதி , நீரகம், ஒரு ஆலைடு அல்லது ஐதராக்சில் குழுவைக் கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பில் சேர்ப்பதில் , நீரகம் பிணைப்பின் குறைந்த மாற்றீட்டுக் கார்பனில் சேர்க்கப்படுகிறது. ஐதராக்சில் அல்லது ஆலைடு குழு பிணைப்பின் அதிக மாற்றீட்டுக் கார்பனுடன் சேர்க்கப்படுகிறது. ஐதரோபோரேற்ற - ஆக்சிசனேற்றத்தில் எதிர்நிலைச் சேர்க்கை ஏற்படுகிறது.
மேலும் காண்க
நோபல் பரிசு பெற்ற யூதர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Herbert Brown obituary in Chemical & Engineering News
Herbert Brown obituary in USA Today
National Academy of Sciences Biographical Memoir
Nobel Lecture 1979
சிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்
நோபல் பரிசு பெற்ற யூதர்கள்
நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்
நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்
நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்
2004 இறப்புகள்
1912 பிறப்புகள்
மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்
|
594612
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%20%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம்
|
இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC), ஆசியாவையும், ஐரோப்பாவையும் மத்திய கிழக்கு மற்றும் மத்தியத் தரைக்கடல் வழியாக இணைக்கும் பொருளாதார வழித்தடம் ஆகும். இத்திட்டத்தை 2023ல் முதன்முதலில் இந்தியா முன்மொழிந்தது.
9 மற்றும் 10 செப்டம்பர் 2023 அன்று புது தில்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளை கடல், இரயில், சாலை வழியாக இணைக்கும் 6,000 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பொருளாதார வழித்தடத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் 10 செப்டம்பர் 2023 அன்று கையெழுத்திட்டது.
புதிய பொருளாதார வழித்தடத்தில் இருபுறமும் மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள்கள் பதிக்கப்படும். அதோடு ஹைட்ரஜன் கொண்டு செல்ல இராட்சத குழாய்களும் பதிக்கப்படும். இந்த திட்டத்தால் இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பியநாடுகளின் பொருளாதாரம் பெருமளவில் வளர்ச்சி அடையும். இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
விமர்சனங்கள்
இவ்வழித்தடம் துருக்கி வழியாக செல்லாத காரணத்தால், செப்டம்பர் 2023ல் துருக்கி அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகன் இத்திட்டத்தை விமர்சித்ததுடன், பாரசீக வளைகுடாவை ஐரோப்பாப்பாவை ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஈராக், துருக்கி வழியாக இணைக்கும் புதிய பொருளாதார வழித்தடத் திட்டத்தை அறிவித்தார்.
மேற்கோள்கள்
வணிகப் பாதைகள்
பொருளாதார வழித்தடங்கள்
|
594615
|
https://ta.wikipedia.org/wiki/2023%20%E0%AE%9C%E0%AE%BF20%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
|
2023 ஜி20 புது தில்லி உச்சிமாநாடு
|
2023 ஜி20 புது தில்லி உச்சிமாநாடு (2023 G20 New Delhi summit), ஜி-20 நாடுகளின் உறுப்பினர்கள் அடங்கிய 18வது உச்சிமாநாடு இந்தியாவின் புது தில்லி நகரத்தில் உள்ள பாரத மண்டபத்தில் 9 மற்றும் 10 செப்டம்பர் 2023 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார். இம்மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் 21வது உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அதன் பிரதிநிதியாக ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர் கலந்து கொண்டார்.
பின்னணி
2022 ஜி-20 17வது உச்சிமாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்றது. இந்திய விடுதலை இயக்கத்தின் 75வது ஆண்டு விழா 2023ம் ஆண்டில் கொண்டாடப்படுவதால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜி-20 18வது உச்சிமாநாடு 2023ம் ஆண்டில் இந்தியாவின் புது தில்லி நகரத்தில் நடைபெற்றது.
தலைமை
2023ம் ஆண்டிற்கான ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 1 டிசம்பர் 2022 முதல் 30 நவம்பர் 2023 முடிய தலைமை வகிப்பார்.2024 ஜி-20 உச்சி மாநாட்டிற்கு அர்கெந்தீனா அதிபர் தலைமை வகிப்பார்.
நிகழ்ச்சி நிரல் முன்னுரிமைகள்
ஜி-20 உச்சிமாநாட்டில் இந்தியா 6 அம்ச திட்டங்களை முன்வைத்துள்ளது:
பசுமை வளர்ச்சி, சூழல் நிதி மற்றும் LiFE
துரிதப்படுத்தப்பட்ட, உள்ளடக்கிய & மீள்திறன் வளர்ச்சி
நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல்
தொழில்நுட்ப மாற்றம் & மின்னுவியல் பொது உள்கட்டமைப்பு
21ம் நூற்றாண்டிற்கான பலதரப்பு நிறுவனங்கள்
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி
பங்கேற்ற நாடுகளின் அரசுத் தலைவர்கள்
இந்த உச்சிமாநாட்டிற்கு ருசியாவின் அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீனா அதிபர் சீ சின்பிங் கலந்து கொள்ள்வில்லை.இருப்பினும் உருசியாவின் வெளியுறவு அமைச்சரும், சீனப் பிரதமரும் கலந்து கொண்டனர்.
அழைக்கப்பட்ட அரசு விருந்தினர்கள்
பங்கேற்ற பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள்
உச்சிமாநாட்டின் முடிவுகள்
ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி-20 கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது.
உலகளாவிய உயிரிஎரிபொருள் கூட்டமைப்பு எனும் புதிய அமைப்பு துவக்கப்பட்டது.
இந்தியா தலைமையில் இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் துவக்க திட்டமிட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் ஜி-20 பிரகடனத்தை ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனையும் காண்க
ஜி-20
ஜி-7
ஜி4 நாடுகள்
ஜி8
ஜி8+5
பிரிக்ஸ்
பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த் நாடுகள்)
நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை (குவாட்)
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்)
மேற்கோள்கள்
குறிப்புகள்
பன்னாட்டு அமைப்புகள்
ஜி-20
உலக நாடுகளின் கூட்டமைப்புக்கள்
2023 இல் இந்தியா
புது தில்லி
2023 நிகழ்வுகள்
|
594616
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87
|
விநாயக் சீதாராம் சர்வதே
|
விநாயக் சீதாராம் சர்வதே (Vinayak Sitaram Sarwate) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1884-1972 ஆம் ஆண்டு காலத்தில் இவர் வாழ்ந்தார். இந்தூரைச் சேர்ந்த மராத்தி சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார். 1940 ஆம் ஆண்டில் இராசுட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் தேசியத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். காங்கிரசு கட்சியுடன்தான் கூட்டணி என்றும் இவர் தெளிவாகக் கூறினார். மத்திய பாரத் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அரசியலமைப்பு சபையின் உறுப்பினராகவும் விநாயக் இருந்தார்.
தனது மகள் சாலினி மோகேவுடன் இணைந்து "பால் நிகேதன் சங்கம்" என்ற சமூக சேவை மற்றும் கல்வி நிறுவனத்தை நிறுவினார்.
1966 ஆம் ஆண்டு, இந்தியக் குடியரசுத் தலைவரால், இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசண் விருது இவருக்கு வழங்கப்பட்டது
மேற்கோள்கள்
1972 இறப்புகள்
1884 பிறப்புகள்
மராத்தியர்கள்
பத்ம பூசண் விருது பெற்றவர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
|
594619
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
|
விமல் குமார் சோர்டியா
|
விமல் குமார் சோர்டியா (Vimal Kumar Chordia) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1924 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஓர் அரசியல்வாதியாக இவர் அறியப்படுகிறார். 1952 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை மத்திய பாரத சட்டமன்ற உறுப்பினராகவும், 1957 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். சோர்டியா பாரதிய சன சங்கத்தின் மாநிலப் பிரிவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார், 1962 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். சோர்டியாவின் மரணம் 9 ச்னவரி 2019 அன்று அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
2019 இறப்புகள்
1924 பிறப்புகள்
மத்தியப் பிரதேச அரசியல்வாதிகள்
இந்திய அரசியல்வாதிகள்
|
594620
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88
|
புதினா வரிசை
|
புதினா வரிசை (mint order; தாவர வகைப்பாட்டியல்: Lamiales) என்பது பூக்கும் தாவரங்களின் வரிசைகளில் ஒன்றாகும். இத்தாவர வரிசை தாரகைத் தாவரம் என்ற உயிரிக்கிளையின் கீழ் அமைகிறது. இவ்வரிசையின் கீழ் ஏறத்தாழ 23,810 இனங்களும், 1,059 பேரினங்களும், இவையனைத்தும் 25 குடும்பங்களும் உள்ளன. லேமியேல்சு (Lamiales) என்பதில் ஏல்சு(ales) என்பது வரிசைக்குரிய பின்னொட்டு ஆகும். மீதமுள்ள லேமியா(Lamia) என்ற சொல்லானது கிரேக்க, இத்தாலிய நகரங்களைக் குறிக்கிறது. பழைய கிரேக்கத்தில் 'அழகிய மாயக்காரியைக்' குறிக்கிறது. பூக்கும் தாவரங்களின் வரிசை என்பதால், அதன் பூக்களின் வடிவமைப்பைக் கருத்தில் கொண்டு தமிழில் இவ்வரிசையை ஈரிடைநுகப்பூத் தாவரம் என்றழைக்கலாம்.
மேற்கோள்கள்
தாவர வகைப்பாட்டியல்
|
594625
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
|
அர்ஜுன் பிரபாகரன்
|
அர்ஜுன் பிரபாகரன் (Arjun Prabhakaran) ஓர் இந்திய இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத்துறையில் பணிபுரிகிறார்.
திரைப்பட வாழ்க்கை
32 வது அத்தியாயம் 23 வது வசனம் (2015) மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் பத்மசூர்யா, லால், மியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இரண்டாவது படமான ஷிபு 2019 ஆம் ஆண்டு வெளியானது. கார்த்திக் ராமகிருஷ்ணன், சலீம் குமார், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியான இவரது மூன்றாவது படமான பன்னர்கட்டா (2021) பரவலான விமர்சன கவனத்தைப் பெற்றது. இது 26வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ தேர்வாகும். 2023இல் தாரம் தீர்த்த கூடாரம் என்ற திரைப்படம் வெளியானது. இதில் கார்த்திக் ராமகிருஷ்ணன், நைனிதா மரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
படங்கள்
மேற்கோள்கள்
Articles with hCards
மலையாளத் திரைப்பட இயக்குநர்கள்
மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
பாலக்காடு மாவட்ட நபர்கள்
1991 பிறப்புகள்
வாழும் நபர்கள்
External links
|
594626
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
|
வினோத் கோசல்கர்
|
வினோத் கோசல்கர் (Vinod Ghosalkar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மகாராட்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த சிவசேனாவின் தலைவராகவும் அறியப்படுகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை மகாராட்டிரவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் முன்னதாக பெருநகர மும்பையின் மாநகராட்சியில் கூட்டுரிமைக் குழு உறுப்பினராக இருந்தார்.
வகித்த பதவிகள்
2009: மகாராட்டிரா சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2010 முதல்: துணைத் தலைவர், சிவசேனா
2014: சிவசேனா சம்பார்க் பிரமுக் அவுரங்காபாத் மாவட்டம்
2018 : மும்பை கட்டிட பழுது மற்றும் புனரமைப்பு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Shivsena Home Page
சிவ சேனா அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
மகாராட்டிர மக்கள்
இந்திய அரசியல்வாதிகள்
|
594629
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D
|
மூன்றாம் கோபாலன்
|
மூன்றாம் கோபாலன், (Gopala III ) (ஆட்சி 940 – 960 கி.பி) முன்பு இரண்டாம் கோபாலன் எனவும் அழைக்கப்பட்டார். இந்திய துணைக் கண்டத்தின் வங்காளப் பகுதியில் உள்ள பால மன்னர் ராஜ்யபாலனின் வாரிசாவார். இவர் 20 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் பாலப் பேரரசின் ஒன்பதாவது ஆட்சியாளர் ஆவார். இவருக்குப் பின் இரண்டாம் விக்ரகபாலன் ஆட்சிக்கு வந்தார்.
வாழ்க்கை
கோபாலன் இராட்டிரகூட இளவரசி பாக்யாதேவிக்கும் ராஜ்யபாலனுக்கும் மகனாவார்.
மறைந்த அனைத்து பால ஆட்சியாளர்களைப் போலவே இவரும் பலவீனமான ஆட்சியாளராக இருந்தார். கோபாலனின் ஆட்சியின் போது, திரிபுரியின் காலச்சூரிகள் சந்தேலர்கள் பிரதிகாரர்களின் நிலங்களைக் கைப்பற்றினர். காம்போஜ பழங்குடியினரும் வங்காளத்தின் வடக்கில் தங்களை நிலைநிறுத்தி, கோபாலனை தெற்கு பீகார் மற்றும் மேற்கு வங்காளம் வரை துரத்தினார்கள்.. இவருடைய ஆட்சியில் பாலப் பிரதேசம் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
மேற்கு வங்காளத்தின் வரலாறு
வங்காளதேச வரலாறு
இந்திய அரசர்கள்
|
594633
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D
|
இரண்டாம் விக்ரகபாலன்
|
இரண்டாம் விக்ரகபாலன் (Vigrahapala II) (ஆட்சி.கி.பி. 966 – 978) இந்திய துணைக் கண்டத்தின் வங்காளப் பகுதியில் ஆட்சி செய்த பால மன்னன் மூன்றாம் கோபாலனின் வாரிசாவார். பால வம்சத்தின் பத்தாவது ஆட்சியாளரான இவர் குறைந்தது 12 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவருக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அரசனான மகிபாலா ஆட்சிக்கு வந்தார்.
ஆட்சி
இவரது ஆட்சியின் போது, பாலப் பேரரசு பீகார் மற்றும் வடக்கு வங்காளத்துடன் குறைக்கப்பட்டது. வங்காளத்தின் கிழக்கிலிருந்து, சந்திர வம்ச மன்னன், கல்யாணசந்திரன் கௌட பிரதேசத்தையும், காமரூபத்தின் தலைநகரையும் கைப்பற்றினார். இருப்பினும் விக்ரகபாலன் கிழக்கு மற்றும் தெற்கு பீகார் மற்றும் வடக்கு வங்காளத்தின் மீது தனது கட்டுப்பாட்டை பராமரிக்க முடிந்தது. இந்த வெற்றிகள் பாலப் பேரரசை கடுமையாக பலவீனப்படுத்தியது. இவரது வாரிசான மகிபாலாவின் கீழ் பால வம்சத்தின் மறுமலர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தது.
குறிப்புகள்
வங்காளதேச வரலாறு
மேற்கு வங்காளத்தின் வரலாறு
இந்தியப் பேரரசர்கள்
|
594635
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88
|
கோபால பிள்ளை
|
முனைவர். ஜி. சி. கோபால பிள்ளை (Gopala Pillai) திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயன நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய ஒரு இந்திய அதிகாரியுமாவார். இவர் கேரள தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தையும் (KINFRA) நிறுவினார்.
இவர் பொது-தனியார் கூட்டாண்மை மூலம் மாநிலத்திற்காக தான் நினைத்த பல திட்டங்களை வளர்த்தெடுத்தார். அதில் கேரளா பற்றிய இவரது பார்வை தெளிவாகத் தெரிகிறது. இவர் சிலகாலம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் கேரளா நிறுவனத்தின் தலைவராக இருந்தார். கேரளாவின் மிகவும் ஆர்வமுள்ள நிர்வாகிகளில் ஒருவராகவும் அங்கீகரிக்கப்பட்டவர்.
அரசாங்கத்திற்குச் சொந்தமான கேரள தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார். இன்கெல் நிறுவனத்தில் இவர் பணியாற்றியதைத் தொடர்ந்து, கேரள அரசின் பொதுத்துறை மறுசீரமைப்பு மற்றும் உள் தணிக்கை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கல்வி
கோபால பிள்ளை திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். மேலும் சட்டத்தில் கூடுதல் பட்டப்படிப்பையும் முடித்தார்.திருவனந்தபுரம் லயோலா சமூக அறிவியல் கல்லூரியில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் முடித்தார். அடிப்படைப் பட்டங்களைத் தவிர, இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பிஇஎம்சி படித்தார்.
சொந்த வாழ்க்கை
இவரது மனைவி லதா மருத்துவராக உள்ளார். இவரது மகன் சபரீஷ் கோபால பிள்ளை, இந்திய வருவாய் துறையில் அதிகாரியாக உள்ளார்.
மேற்கோள்கள்
* http://www.thehindubusinessline.com/2009/10/19/stories/2009101950511200.htm
http://www.business-standard.com/india/news/cmd-resignation-leaves-fact-rudderless/268358/
http://www.kinfra.com/newsletter/kinfra-august.pdf
Article Title
http://www.kinfra.com/newsletter/kinfra-July.pdf
வாழும் நபர்கள்
கேரள நபர்கள்
|
594636
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
|
டி.வி.சசிவர்ண தேவர்
|
டி.வி. சசிவர்ண தேவர் (T.V. Sasivarna Thevar) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1912 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6 ஆம் தேதி பிறந்தார். 1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி இறந்தார். இவர் உ.முத்துராமலிங்கத் தேவரின் ஆதரவாளராகவும், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
சசிவர்ண தேவர் சென்னை மாகாணத்தின் தெற்குப் பகுதியில் பிறந்தவர் ஆவார். டி.லாடசாமி சேர்வை மற்றும் குருவம்மாளுக்கு 1934 ஆம் ஆண்டில் குற்றப் பழங்குடியினர் பரம்பரை சட்டத்தை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவர் ஏற்பாடு செய்த இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
முத்துராமலிங்கத் தேவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இருந்து பதவி விலகி 1939 ஆம் ஆண்டு அனைத்திந்திய பார்வர்டு பிளாக்கு கட்சியில் இணைந்தபோது, சசிவர்ண தேவர் அக்கட்சியை பின்பற்றினார். 1951 ஆம் ஆண்டு அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் வேட்பாளராக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1957 ஆம் ஆண்டு அனைத்திந்திய பார்வர்டு பிளாக்கு கட்சி சார்பில் அருப்புக்கோட்டை தொகுதியில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் தான் முன்பு வகித்து வந்த முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பதவி விலகல் செய்தார். சசிவர்ண தேவர் முதுகுளத்தூர் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இருப்பினும், இந்த வெற்றி சர்ச்சையைத் தூண்டியது. இதன் விளைவாக காங்கிரசு தலைவர் இம்மானுவேல் சேகரன் தேவேந்திரர் கொல்லப்பட்டார் மற்றும் 1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தைத் தூண்டியது.
பல்வேறு சாதி மக்களிடையே நல்லிணக்கத்திற்காக அரசு ஏற்பாடு செய்திருந்த சாதிகளுக்கு இடையேயான அமைதி மாநாட்டில் சசிவர்ண தேவர் ஒரு பகுதியாக இருந்தார். இந்த மாநாட்டில் தேவர், நாடார், தேவேந்திரர் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மானுவேல் சேகரனின் மரணம் மற்றும் முதுகுளத்தூர் கலவரம் அதைத் தொடர்ந்து விரைவில் நடந்தது.
1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் இறந்ததைத் தொடர்ந்து, தேவரின் மற்றொரு சீடரான பா.கா.மூக்கைய்யாத் தேவர் மற்றும் சசிவர்ண தேவர் இடையே அதிகாரப் போட்டி வெடித்தது. மூக்கையா தேவர் வெற்றி பெற்றார் மற்றும் சசிவர்ண தேவர் சுபாசிசுட் பார்வர்டு பிளாக் கட்சியை உருவாக்கினார்.
மேலும் பார்க்கவும்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
1957 ராம்நாடு கலவரம்
பி.கே.மூக்கையா தேவர்
மேற்கோள்கள்
1912 பிறப்புகள்
தமிழக அரசியல்வாதிகள்
1973 இறப்புகள்
|
594637
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D
|
நாராயணபாலன்
|
நாராயணபாலன் (Narayanapala) (9-10 ஆம் நூற்றாண்டு) இந்திய துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதிகள், முக்கியமாக வங்காள மற்றும் பீகார் பகுதிகளில் ஆட்சி செய்த பால வம்சத்தின் ஏழாவது மன்னராவார்.
இவர் முதலாம் விக்ரகபாலனின் மனைவியும் காலச்சூரி இளவரசியுமான லஜ்ஜாதேவியின் மகனாவார். இவருக்குப் பிறகு இவரது மகன் ராஜ்யபாலன் ஆட்சிக்கு வந்தார்.
கயா கோயில் கல்வெட்டு இவரது 7 வது ஆட்சி ஆண்டில் தேதியிடப்பட்டுள்ளது. இந்திய அருங்காட்சியக (பாட்னா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது) கல்வெட்டு இவரது 9 வது ஆட்சி ஆண்டில் தேதியிடப்பட்டது. பாகல்பூர் செப்புத் தகடு மானியம் இவரது 17 வது ஆட்சி ஆண்டில் தேதியிடப்பட்டது. பீகார் வோட்டிவ் படக் கல்வெட்டு இவரது 54 வது ஆட்சி ஆண்டை குறிக்கிறது. இவரது மந்திரி பட்டா குரவமிஷ்ராவின் பாதல் தூண் கல்வெட்டும் இவரது ஆட்சி பற்றிய தகவல்களை வழங்குகிறது.
பல்வேறு கல்வெட்டுகள் மற்றும் வரலாற்று பதிவுகளின் வெவ்வேறு விளக்கங்களின் அடிப்படையில், வெவ்வேறு வரலாற்றாசிரியர்கள் நாராயணபாலனின் ஆட்சியை கி.பி. 854 க்கும் 917க்கும் இடையிலிருந்ததாக மதிப்பிடுகின்றனர்.
பிரதிகாரப் பேரரசர் மிகிர போஜன் இவரை வீழ்த்தி தனது இராச்சியத்தை விரிவாக்கினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
வங்காளதேச வரலாறு
மேற்கு வங்காளத்தின் வரலாறு
இந்தியப் பேரரசர்கள்
|
594638
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
|
முல்லைக் குடும்பம்
|
முல்லைக் குடும்பம்(தாவர வகைப்பாட்டியல்:Oleaceae, olive family, lilac family) என்பது பூக்கும் தாவரங்களின் கீழ் அமையும் தாவரக் குடும்பங்களில் ஒன்றாகும். இக்குடும்பம், புதினா வரிசை என்பதுள் அடங்குகிறது. இத்தாவரக் குடும்பத்தின் கீழ் 28 பேரினங்கள் உள்ளன. இப்பேரினங்களில் ஒன்றான கார்ட்ரெமா (Cartrema) என்ற பேரினம் அழிந்து போனதாக அறிவிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு இத்தாவரப் பேரினம், மீண்டும் உயிர்பிக்கப்பட்டுள்ளது. இக்குடும்பத்தில் ஏறத்தாழ 700 இனங்கள் உள்ளன. இவற்றின் பெரும்பான்மையான பூக்கள் நுறுமண மிக்கவையாக உள்ளன. இவற்றின் புறத்தோற்றமானது மரமாகவும், குறுமரமாகவும், தடித்த தண்டு அமைப்பைக் கொண்டு படரும் கொடியாகவும் இருக்கின்றன.
மேற்கோள்கள்
தாவர வகைப்பாட்டியல்
|
594642
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D
|
குணம்நேனி சாம்பசிவ ராவ்
|
குணம்நேனி சாம்பசிவ ராவ் (Kunamneni Sambasiva Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இவர் செயல்பட்டார். 2009 ஆம் ஆண்டில் கொத்த குடெம் தொகுதியில் போட்டியிட்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தெலுங்கானா மாநில ஆட்சி மன்றத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
1966 பிறப்புகள்
வாழும் நபர்கள்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதிகள்
ஆந்திரப் பிரதேச அரசியல்வாதிகள்
|
594644
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81
|
மல்லி இனக்குழு
|
மல்லி இனக்குழு (தாவர வகைப்பாட்டியல் : Jasmineae) என்பது பூக்கும் தாவர இனக்குழுக்களில் ஒன்றாகும். இது முல்லைக் குடும்பத்தில் அமைந்துள்ளது.
பேரினங்கள்
மல்லிப் பேரினம் - Jasminum L. - மல்லிகைகள் (Jasmines)
Menodora Humb. & Bonpl.
மேற்கோள்கள்
தாவர வகைப்பாட்டியல்
|
594645
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE
|
தெல்லகுல ஜாலய்யா
|
தெல்லகுல ஜலய்யா (Tellakula Jalayya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். குண்டூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை இவர் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் குண்டூர் மாநகராட்சியின் முதல் தலைவராகவும் இவர் பணியாற்றினார். தெல்லகுல ஜாலய்யா மற்றும் நடிம்பல்லி நரசிம்ம ராவ் ஆகியோர் தமது நகராட்சி கழக தலைமைப் பொறுப்பில் இருந்த போது அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாக சின்னா கோபுரத்தை கட்டினார்கள். இக்கோபுரம் இன்றும் குண்டூர் நகரத்தின் ஓர் அடையாளமாக இருந்து வருகிறது. 1971 ஆம் ஆண்டு போலிசெட்டி சோமசுந்தரத்தின் மகன்களுடன் தெல்லகுல ஜாலய்யா இணைந்து தெல்லகுல ஜாலய்யா போலிசெட்டி சோமசுந்தரம் கல்லூரியை நிறுவினர்.
மேற்கோள்கள்
ஆந்திரப் பிரதேச அரசியல்வாதிகள்
இந்திய அரசியல்வாதிகள்
குண்டூர் மாவட்ட நபர்கள்
|
594662
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE
|
சுலாவெசி மைனா
|
சுலாவெசி மைனா (Sulawesi myna)(பேசிலோரினிசு செலிபென்சிசு) என்பது இசுடெர்னிடே குடும்பத்தில் உள்ள மைனா சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் சுலாவெசியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.
விளக்கம்
சுலாவெசி மைனா நீளம் வரை வளரும் ஒரு பறவையாகும். இது பளபளப்பான கருப்பு நிறப் பறவை. நிரந்தரமாக உயர்த்தப்பட்ட முகட்டினைத் தலைப்பகுதில் கொண்டுள்ளது. இந்த முகடு ஆண் மைனாவில் பெரியது. மைனாவின் முகம் மற்றும் தொண்டையின் பக்கங்களில் வெள்ளைத் திட்டுகள் உள்ளன. கண்ணைச் சுற்றி ஒரு நீல-கருப்பு வளையம் சிறகுகளற்று வெற்று தோலுடன் உள்ளது. அலகு வெளிர் நீல-பச்சை நிறமாகவும், கால்கள் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். இளம் பறவைகள் கடுங்கபிலை பழுப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த மைனாவில் முணுமுணுப்புகள், உயர் தொனியுடைய சீழ்க்கை, கீச்சொலி மற்றும் மென்குரல் உள்ளிட்ட பல்வேறு ஒலிப்புகளாக உள்ளன. ஒரு அழைப்பு சீழ்க்கையினை இறங்கு வரிசையாகும், மற்றொன்று "மீயோவ்" என்று ஒலிக்கும் ஒரு இறங்கு நாசி அழைப்பாகவும் தலையை முன்னோக்கித் தள்ளும் மற்றும் பின்புற இறகுகளை உயர்த்தியபடி உச்சரிக்கப்படுகிறது.
பரவழும் வாழிடமும்
சுலாவெசி மைனா இந்தோனேசியாவின் சுலாவெசி தீவின் மலைப்பாங்கான மாவட்டங்களின் ஈரப்பதமான காடுகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இங்கே இதன் முக்கிய வாழ்விடம் காடுகளின் விளிம்புகள், வனப்பகுதியின் சிதறிய பகுதிகள் மற்றும் இரண்டாம் நிலை காடுகள் ஆகும். இருப்பினும் இது சில நேரங்களில் முதன்மை காடுகளில் காணப்படுகிறது. இது சிறிய தீவுகளான லெம்பே, மூனா மற்றும் படோன் ஆகியவற்றிலும் காணப்படும். இவை தாழ் நிலத் தீவுகள் மற்றும் பெரும்பாலும் புல்வெளி சவன்னாவில் பசுமையான காடுகளின் திட்டுகளில் காணப்படும்.
நடத்தை
சுலாவெசி மைனா சிற்றினம் பொதுவாகக் காடுகளின் மேல்பகுதியில் அதிகமாக உணவினைத் தேடுகிறது. இது பொதுவாக இணையாகவோ அல்லது சிறிய குடும்பக் குழுவாகக் காணப்படும். ஆனால் சில நேரங்களில் தனி நபர்களைக் காணலாம். முதிர்ச்சியடையாத மைனா உமிழும்-புருவம் மைனா (எனோட்சு எரித்ரோபிரிசு) கூட்டங்களில் காணப்படும். இது பெரும்பாலும் பழம் உண்ணும் பிற பறவைகளின் குழுக்களுடன் தொடர்பு கொள்கிறது.
இந்த பறவையின் இனப்பெருக்கம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இதன் உணவில் சுமார் 44% பழங்கள் மற்றும் 52% முதுகெலும்பில்லாத விலங்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவை சிறிய முதுகெலும்பு உயிரிகளையும் உண்ணுகிறது. இது இடம்பெயராத இனமாகும். ஆனால் பல்வேறு வகையான மரங்களில் பழங்களைத் தேடி காடுகளைச் சுற்றி வரும்.
நிலை
சுலாவெசி மைனா, பே. செலிபென்சிசு சுலாவெசியில் காணப்பட்டாலும், இது மிகவும் பொதுவானதாகக் கூறப்படுகிறது. மொத்த பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை அல்லது எண்ணிக்கை குறித்த போக்கு அறியப்படவில்லை. ஆனால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் எந்த குறிப்பிட்ட அச்சுறுத்தல்களையும் அடையாளம் காணவில்லை என்றும் இதன் நிலையினை "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக" செம்பட்டியலில் மதிப்பிட்டுள்ளது.
மேற்கோள்கள்
அகணிய உயிரிகள்
இந்தோனேசியப் பறவைகள்
மைனா
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.