id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
593411
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
ரேடியம் நைட்ரேட்டு
ரேடியம் நைட்ரேட்டு (Radium nitrate) என்பது Ra(NO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. வெள்ளை நிறத்தில் ஒரு திண்மமாக இது உருவாகிறது. ஆனால் இதன் பழைய உப்பு மாதிரிகள் மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். பேரியம் நைட்ரேட்டை விட இது குறைந்த கரைதிறன் கொண்டது. 280 ° செல்சியசு வெப்பநிலையில் பேரியம் நைட்ரேட்டு சிதைவடைந்து ரேடியம் ஆக்சைடாக மாறுகிறது. தயாரிப்பு ரேடியம் கார்பனேட்டு அல்லது ரேடியம் சல்பேட்டுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ரேடியம் நைட்ரேட்டு உருவாகும்.: RaCO3 + HNO3 → Ra(NO3)2 + CO2 + H2O மேற்கோள்கள் ரேடியம் சேர்மங்கள் நைட்ரேட்டுகள்
593412
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
ரேடியம் அயோடேட்டு
ரேடியம் அயோடேட்டு (Radium iodate) என்பது Ra(IO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், அயோடின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இயற்பியல் பண்புகள் நிறமற்ற படிகங்களாக ரேடியம் அயோடேட்டு உருவாகிறது. ரேடியம் அயோடேட்டு தண்ணீரில் மிகச் சிறிதளவே கரையும். மேற்கோள்கள் ரேடியம் சேர்மங்கள் அயோடேட்டுகள்
593414
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
அம்பா பிரசாத்து
அம்பா பிரசாத்து (Amba Prasad (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சார்கண்ட்டு மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பர்ககானில் போட்டியிட்டு சார்க்கண்ட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் இவர் இளைய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். ஆரம்ப கால வாழ்க்கை அம்பா பிரசாத்து பார்ககாவுன் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யோகேந்திர சாவோவின் மகளாவார். இவரது தாயார் நிமலா தேவியும் பர்ககாவுன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்தார். அம்பா பிரசாத்து 2007 ஆம் ஆண்டில் அசாரிபாக்கிலுள்ள கார்மல் பெண்கள் பள்ளியில் தொடக்கக் கல்வியும் 2009 ஆம் ஆண்டில் அசாரிபாக்கில் உள்ள டி.ஏ.வி பொதுப் பள்ளியில் இடைநிலைப் படிப்பையும் முடித்தார். 2014 ஆம் ஆண்டில் சேவியர் சமூக சேவை நிறுவனத்தில் மேலாண்மை பாடத்தில் முதுநிலை பட்டயம் படித்து தேர்ச்சி பெற்றார். மேலும் இவர் 2017 ஆம் ஆண்டில் அசாரிபாக்கு வினோபா பாபே பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டம் முடித்தார் மேற்கோள்கள் ஜார்க்கண்ட் அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் இந்திய அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
593420
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%29
இரவிதாசன் (கவிஞர்)
இரவிதாசன் (Ravidasan) என்பவர் ஓர் எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். வாழ்க்கைச் சுருக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடலூரில் முத்து மற்றும் நீலாவதி தம்பதியினருக்கு 1975 மே 26 அன்று மகனாகப் பிறந்தார். இவருக்கு இந்திராணி தேவராஜ் என்ற சகோதரியும், சந்திரன், கண்ணப்பன் என்ற இரண்டு சகோதரர்களும் உள்ளனர். இவர் உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். படைப்புகள் புதுக்கவிதை நூல்கள் இரவைத் தேடும் நிலவுகள் (1992) நிர்வாணப் பூக்கள் (1995) தமிழ்க்கடலின் ஓரத்தில் தீத்துண்டுகள் மரபுக்கவிதை நூல்கள் தீர்ப்பைத் திருத்திய தீர்ப்புகள் இது கவிதையல்ல இமயம் இடையளவு மாமேதை மகாகாவியம் நூல்கள் வெற்றி வெளியே இல்லை இளைஞர் வேதம் ஏன் வேண்டும் இடஒதுக்கீடு காலத்தை வென்ற கலைஞர் ஒரு கிராமத்து ராஜா பண்டிதரும் பாரதியும் விருதுகள் உவமைக்கவிஞர் சுரதா அவர்களால் வழங்கப்பட்ட "கவிதை முதல்வர்" விருது முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களால் வழங்கப்பட்ட கவிவாணர் விருது கவிஞர் மல்லை மணிவாசகம் அவர்களால் வழங்கப்பட்ட "வெண்பா வேந்தன்" விருது பாரதிதாசன் விருது கண்ணதாசன் விருது சுரதா விருது மேற்கோள்கள் 1975 பிறப்புகள் வாழும் நபர்கள் காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள் தமிழக எழுத்தாளர்கள் தமிழ்க் கவிஞர்கள்‎ தமிழகக் கவிஞர்கள்
593448
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86.%20%E0%AE%9A%E0%AF%80.%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D
செ. சீ. பத்ரிநாத்
Articles with hCards செங்கமேடு சீனிவாச பத்ரிநாத் (S. S. Badrinath)(பிறப்பு: பிப்ரவரி 24, 1940) என்பவர் இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இவர் தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார். இவர் 1996-ல் இந்தியக் குடியரசில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருதினைப் பெற்றார். பத்மசிறீ மற்றும் மரு. பி. சி. ராய் விருது உட்படப் பல விருதுகளையும் பெற்றார். ஆரம்ப கால வாழ்க்கை செங்கமேடு சீனிவாச பத்ரிநாத் இந்தியாவின் சென்னையின் புறநகர்ப் பகுதியான திருவல்லிக்கேணியில் பிறந்தார். இவரது தந்தை செ. வி. சீனிவாச ராவ், பொறியாளர் ஆவார். சென்னை அரசுப் பணியில் பணியாற்றியவர். இவரது தாயார் லட்சுமி தேவி, தமிழகத்தின் நெரூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரின் மகள். பதின்ம வயதிலேயே பெற்றோர் இருவரையும் இழந்த இவர், தந்தையின் மறைவுக்குப் பிறகு கிடைத்த காப்பீட்டுத் தொகையில் மருத்துவப் படிப்பை முடித்தார். சிறுவயது நோய் காரணமாக 7 வயதில் தனது கல்வியைத் தாமதமாகத் தொடங்கிய பத்ரிநாத், மயிலாப்பூரில் உள்ள பி. எசு. உயர்நிலைப் பள்ளியிலும், சென்னை சிறீ இராமகிருஷ்ணா மடம் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். இவர் 1955 மற்றும் 1957க்கு இடையில் லயோலா கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார் மருத்துவ வாழ்க்கை பத்ரிநாத் 1963-ல் மதராசு மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். நியூயார்க்கில் உள்ள கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் தனது உள்ளக பயிற்சி மற்றும் ஒரு வருட உள் மருத்துவப் படிப்பை முடித்தார். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் கண் மருத்துவத்தில் அடிப்படை அறிவியலைப் படித்ததைத் தொடர்ந்து, நியூயார்க்கின் புரூக்ளின் கண் மற்றும் காது மருத்துவமனையில் கண் மருத்துவத்தில் படிப்பினைத் தொடர்ந்தார், மேலும் பாஸ்டன், மாசசூசெட்ஸ், மாசசூசெட்ஸ் கண் மற்றும் காது மருத்துவமனையின் விழித்திரை சேவையில் சார்லஸ் ஸ்கெபன்ஸுடன் இணைந்து ஆய்வு நிதி பெற்றார். இவர் 1969-ல் கனடாவின் அரச அறுவையிலாளர் கல்லூரியின் சகாவாகவும், 1970-ல் அமெரிக்கக் கண் மருத்துவ வாரியத்தின் பிரிவுத் தலைவராகவும் ஆனார். இவர் 1970-ல் இந்தியாவுக்குத் திரும்பினார். 1970 முதல், ஆறு ஆண்டுகள், சென்னை தன்னார்வ சுகாதார சேவைகளில் ஆலோசகராகப் பணியாற்றினார். இவர் எச். எம். மருத்துவமனை (1970 முதல் 1972 வரை) மற்றும் சென்னை விஜயா மருத்துவமனை (1973 முதல் 1978 வரை) ஆகியவற்றில் கண் மருத்துவம் மற்றும் விழித்திரை அறுவை சிகிச்சையில் தனியாகப் பயிற்சியைத் தொடங்கினார். இவர் 60க்கும் மேற்பட்ட சக மதிப்பாய்வு கட்டுரைகளை வெளியிட்டு உள்ளார். விருதுகளும் கௌரவங்களும் 1996: பத்ம பூசண் 1983: பத்மசிறீ 1991: மரு. பி. சி. ராய் ராய் தேசிய விருது 1992: பால் ஹாரிஸ் சகா விருது 2009: வி. கிருஷ்ணமூர்த்தி சிறப்புக்கான விருது 2009: மதராசு நகரக் கண் மருத்துவ சங்கம்- வாழ்நாள் சாதனையாளர் விருது 2014: வாழ்நாள் சாதனையாளர் விருது- விழியக விழித்திரை சமூகம், இந்தியா சங்கர நேத்ராலயா 1978ஆம் ஆண்டில், பத்ரிநாத், பரோபகாரிகள் குழுவுடன் சேர்ந்து, 1978ஆம் ஆண்டில் சென்னையில் சங்கர நேத்ராலயா எனும் மருத்துவ மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளைகளை நிறுவினார். இது ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இலாப நோக்கற்ற கண் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு பிரிவாகும். சராசரியாக, 1200 நோயாளிகள் மருத்துவமனை நாள்தோறும் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 100 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. சங்கர நேத்ராலயா 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, கண் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு பெற்றவர்களுக்கு விழியக-விழித்திரை அறுவை சிகிச்சை, கருவிழிப்படலம், ஓக்குலோபிளாஸ்டி, கண்விழி விறைப்பு, குழற்படலம் மற்றும் பொதுவான கண் மருத்துவம் ஆகியவற்றில் நிதியுதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கண் மருத்துவத்தில் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது. மேற்கோள்கள் பத்மசிறீ விருது பெற்ற மருத்துவத்துறையினர் வாழும் நபர்கள் 1940 பிறப்புகள் பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள் மரு. பி. சி. ராய் விருது பெற்றவர்கள்
593450
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
தானியேல் புயல்
தானியேல் புயல் (Storm Daniel) அல்லது சூறாவளி தானியேல் (Cyclone Daniel) என்பது இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக மோசமானதும், அதிக சேதத்தை உண்டுபண்ணியதுமான ஒரு நடுநிலக் கடல் வெப்பமண்டலச் சூறாவளியும், 2023 இன் இன்றுவரை மிக மோசமான வானிலை நிகழ்வுமாகும். 2023 செப்டம்பர் 4 இல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவான இப்புயல், கிரேக்கம், பல்காரியா, துருக்கி ஆகிய நாடுகளை விரிவான வெள்ளத்துடன் பாதித்தது. புயல் பின்னர் ஒரு நடுநிலக் கடல் தாழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டு தானியேல் புயல் எனப் பெயரிடப்பட்டது. இது விரைவில் அரை வெப்பமண்டலப் பண்புகளைப் பெற்று லிபியாவின் கடற்கரையை நோக்கி நகர்ந்து, அங்கு அது பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. புயல் ஒரு ஒமேகா தொகுதியின் விளைவாக உயர் அழுத்த மண்டலமாக உருவான இப்புயல், இரண்டு குறைந்த அழுத்த மண்டலங்களுக்கு இடையில் மாறி, கிரேக்க எழுத்தான Ω வடிவமான ஐசோபார்களாயின. கிரேக்கத்தில், அதன் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமான புயலாகக் கருதப்பட்டது, கடுமையான மழை வெள்ளத்திற்கு இது வழிவகுத்தது, 2 பில்லியன் யூரோக்களுக்கு மேல் சேதத்தை ஏற்படுத்தியது. லிபியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது, மழை பெய்வதால் டெர்னா நகருக்கு அருகில் இருந்த இரண்டு அணைகளும் இடிந்து விழுந்தன. இது 10,000 இற்கும் அதிகமானோரின் இறப்புகளுக்கு வழிவகுத்தது, 10,000 முதல் 100,000 பேர் வரை காணாமல் போயினர், இருப்பினும் சரியான புள்ளிவிவரங்கள் ஆதாரத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. இத்தகைய பேரழிவுகளுக்கு லிபியாவின் பெரும் பாதிப்பு அதன் 2014-2020 உள்நாட்டுப் போரில் குற்றம் சாட்டப்பட்டது, இப்போரினால் லிபியாவின் முக்கியமான உள்கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டு, புயலுக்கு முன் மோசமான நிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து, நடுநிலக் கடலில் உள்ள பல நாடுகள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்குவதாக உறுதியளித்தன. தாக்கம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 2023 விபத்துகள் பல்கேரியா துருக்கி லிபியா எகிப்து இயற்கை அழிவுகள் வெப்ப மண்டலச் சூறாவளிகள்
593453
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%2C%202026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே 2026 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021 முதல் ஆட்சியில் உள்ளார். பின்னணி முந்தைய சட்டமன்றத் தேர்தலில், பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் 133 தொகுதிகளை வென்றது, அதேசமயம் அதன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மொத்தம் 159 தொகுதிகளில் வெற்றி கண்டது. இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றியது, இதில் அதிமுக 66 தொகுதிகளை கைப்பற்றியது. மற்ற கட்சிகள், கூட்டணிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் எந்த இடத்தையும் பெறவில்லை. ஒரு தசாப்தத்தை எதிர்க் கட்சியாகக் கழித்த பிறகு, தொடர்ந்து இரண்டு முறை (2011-2021) மாநிலத்தை ஆண்ட அ.தி.மு.க.விடம் இருந்து தமிழகத்தை வென்றது தி.மு.க. வெற்றிக்கு பின் மு.க.ஸ்டாலின் மாநிலத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்றார். பதினாறாவது தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக எதிர்க்கட்சியாகப் பொறுப்பேற்றது. அட்டவணை மேலும் பார்க்கவும் தமிழகத்தில் தேர்தல் தமிழக அரசியல் மேற்கோள்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்
593456
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
சாரணியக் குறிக்கோளுரை
சாரணிய இயக்கத்தின் சாரணியக் குறிக்கோளுரையான (Scout Motto) "தயாராயிரு" எனும் சொற்றொடரின் நெருக்கமான மொழிபெயர்ப்பைப் பரவலாக அனைத்து இயக்கங்களும் பயன்படுத்துகின்றன. இந்தக் குறிக்கோளுரை 1907 முதல் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான சாரணர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களின் உலக சங்கத்தின் (WAGGGS) பெரும்பாலான உறுப்பினர் அமைப்புகளும் இதே பொன்மொழிகளைப் பகிர்ந்து கொள்கின்றன. சான்றுகள் மேலும் வாசிக்க சாரணியக் குறிக்கோள்கள்
593465
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கருங்கழுத்து தையல்சிட்டு
கருங்கழுத்து தையல்சிட்டு (Dark-necked tailorbird)(ஆர்த்தோமசு அட்ரோகுலரிசு) பாடும் பறவை சிற்றினம் ஆகும். முன்பு இது " பழைய உலக கதிர்க்குருவி" கூட்டமைப்பில் வைக்கப்பட்டது. இப்போது இது சிசுடிகோலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது வங்காளதேசம், வடகிழக்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தென்கிழக்காசியப் பறவைகள் வடகிழக்கு இந்தியப் பறவைகள் வங்காளதேசப் பறவைகள்
593466
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
செவ்வால் தையல்சிட்டு
செவ்வால் தையல்சிட்டு (rufous-tailed tailorbird)(ஆர்த்தோமசு செரிசெசு) என்பது "பழைய உலக தையல்சிட்டு" கூட்டமைப்பில் முன்பு வைக்கப்பட்ட ஒரு பறவை சிற்றினம் ஆகும். ஆனால் இப்போது அது சிசிடிகோலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது . இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலக் காடுகள் ஆகும். மேற்கோள்கள் மலேசியப் பறவைகள்
593467
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பிலிப்பீன்சு தையல்சிட்டு
Articles with 'species' microformats பிலிப்பீன்சு தையல்சிட்டு (Philippine tailorbird)(ஆர்த்தோமசு காசுடானிசெப்சு) என்பது ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது முன்பு "பழைய உலக கதிக்குருவி" கூட்டமைப்பில் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது சிசுடிகோலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் தாயகம் மேற்கு பிலிப்பீன்சு ஆகும். இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலக் காடுகள் ஆகும். மேற்கோள்கள்
593469
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
தெற்கத்திய கருஞ்சிவப்பு மரங்கொத்தி
தெற்கத்திய கருஞ்சிவப்பு மரங்கொத்தி (southern Rufous woodpecker, அறிவியல் பெயர்: Micropternus brachyurus jerdonii) என்பது கருஞ்சிவப்பு மரங்கொத்தியின் துணையினம் ஆகும். இது தென்னிந்தியாவில் காணப்படுகிறது. விளக்கம் மைனா அளவுள்ள தெற்கத்திய கருஞ்சிவப்பு மரங்கொத்தி சுமார் 25 செ. மீ. நீளம் இருக்கிறது. இதன் மேல் அலகு கறுப்பாகவும், கீழ் அலகு வெள்ளையாகவும் இருக்கும். விழிப்படலம் பழுப்புத் தோய்ந்த சிவப்பாகவும், கால்கள் நீலந்த் தோய்ந்த பச்சை நிறத்திலும் இருக்கும். உடலின் மேற்பகுதி கருஞ்சிவப்பாகக் கறுப்புக் குறுக்குக் கோடுகளுடன் காணப்படும். கழுத்தின் தூவிகள் செதில் போன்ற தோற்றம் தரும். மார்பும் வயிறும் கருஞ்சிவப்பாக குறுக்குக் கோடுகள் இன்றி காணப்படும். ஆண் பறவைக்கு கண்களுக்குக் கீழே பிறை வடிவமாக ஆழ்ந்த சிவப்பு நிறத் தூவிகள் வளர்ந்திருக்கும். பரவலும் வாழிடமும் தெற்கத்திய கருஞ்சிவப்பு மரங்கொத்தியானது தென்னிந்தியாவின் கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களிலும் இலங்கையிலும் மலைத் தொடர்களைச் சார்ந்த மூங்கில் காடுகளுடன் கூடிய இலையுதிர் காட்டுப் பகுதிகளில் சமவெளி முதல் மலைகளில் 1000 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது. நடத்தையும் சூழலியலும் எறும்புகள் நிறைந்த காடுகளில் இதனை இணையாக காண இயலும். எறும்புகளும், எறும்புகளின் முட்டையுமே இதன் முதன்மை உணவாகும். செவ்வெறும்பு முதலான எறும்புகளே முதன்மையாக உண்பதாக அறியப்படுகிறது. மரங்களில் கூடுகட்டி வாழும் இந்த எறும்புகளை சற்று நேரம் கொத்திக் கலைத்த பின்னர் வேறு ஒரு கிளையில் சென்று அமர்ந்து இறக்கைளில் ஒட்டிக்கொண்டுள்ள எறும்புகளைப் பிடித்து உண்ணும். இதன் தலை, வயிறு, வால் முனை ஆகியவற்றில் ஒருவகை நாற்றம் கொண்ட பசையுள்ளது. அதில் எறும்புகள் ஒட்டிக் கொள்ளும். அவற்றை இது பிடித்து உண்ணும். ஒன்றின் வயிற்றில் 2600 எறும்புகள் இருந்தததாக எண்ணியுள்ளனர். சிலசமயங்களில் பழங்களையும் உண்ணும். மூங்கில்களையும் அடிமரங்களையும் அலகால் விடாது தட்டி அதிர்வொலியை உண்டாக்கும். இவை பெப்ரவரி முதல்ஏப்ரல் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். எறும்புகள் கூடுகட்டி வாழும் மரங்களில் அவை கூடுகட்டியுள்ள இடத்திலேயே குடைந்து பொந்து செய்து இரண்டு அல்லது மூன்று வெள்ளை முட்டை இடும். சிலசயமங்களில் மரங்களில் பிற மரங்கொத்திகளைப் போல பொந்து குடைவதும் உண்டு. மேற்கோள்கள் தென்னிந்தியப் பறவைகள் இலங்கைப் பறவைகள் மரங்கொத்திகள்
593470
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF
பாபு மணி
பாபு மணி (Babu Mani)(c. 1963 - 19 நவம்பர் 2022) என்பவர் இந்தியக் கால்பந்து வீரர் ஆவார். இவர் 1984 ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் ஆசியக் கோப்பையில் முன்கள வீரராக இந்தியாவுக்காக விளையாடினார். இவர் மோகன் பாகனுக்காகவும் விளையாடினார். சையது நயீமுதீனின் பயிற்சியின் கீழ் கிழக்கு வங்காளத்திற்காகவும் விளையாடியுள்ளார். மணி 1984 நேரு கோப்பையில் அர்ஜென்டினாவுக்கு எதிராகச் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். 1984ஆம் ஆண்டு ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஆசியக் கோப்பைக்குத் தகுதிபெற்றுப் பங்கேற்ற அணியில் ஒருவராக இருந்தார். கௌரவங்கள் இந்தியா தெற்காசிய விளையாட்டு தங்கப் பதக்கம்: 1985, 1987 வங்காளம் சந்தோஷ் கோப்பை: 1986–87, 1988–89 முகமதிய விளையாட்டு கூட்டமைப்புக் கோப்பை: 1983–84 மோகன் பாகன் கல்கத்தா கால்பந்து சுழல் போட்டி: 1984, 1986, 1992 இந்தியக் கால்பந்து சங்கக் கேடயம்: 1987 டியூரான்டு கோப்பை : 1984, 1985, 1986 ரோவர்சு கோப்பை : 1985, 1992 கூட்டமைப்புக் கோப்பை : 1986–87, 1987–88, 1992, 1993 கிழக்கு வங்காளம் கல்கத்தா கால்பந்து சுற்றுப் போட்டி: 1991 இந்தியக் கால்பந்து சங்கக் கேடயம் : 1990, 1991 டியூரான்டு கோப்பை: 1990, 1991 ரோவர்சு கோப்பை : 1990 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் புள்ளிவிவரங்கள் 2022 இறப்புகள் 1963 பிறப்புகள் காற்பந்தாட்ட வீரர்கள்
593471
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
அடெல்பர்ட் நோங்ரம்
அடெல்பெர்ட் நோங்ரம் (Adelbert Nongrum) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வடக்கு சில்லாங்கு தொகுதியை மக்கள் கட்சியின் குரல் என்ற கட்சியின் உறுப்பினராகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். முன்பு வடகிழக்கு இந்தியாவின் மேகாலயாவில் உள்ள அரசியல் கட்சியான குன் இனிவுட்ரெப் தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவராக பணியாற்றினார். வடக்கு சில்லாங்கு தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், 2018 ஆம் ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து மேகாலயா சட்டப் பேரவையில் கட்சியின் ஒரே பிரதிநிதியாக இருந்தார். 2022 ஆம் ஆண்டில் நோங்ரம் மக்கள் குரல் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார். மேலும் 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்காக போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். 2023 ஆம் ஆண்டு சனவரி மாதம்12 ஆம் தேதியன்று நோங்ரம் சட்டமன்றத்தில் இருந்து பதவி விலகினார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்கள் குரல் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் கூறினார். மேற்கோள்கள் 1976 பிறப்புகள் மேகாலயா நபர்கள் மேகாலயா அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் இந்திய அரசியல்வாதிகள்
593473
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நிலாச் சுழல்கள்
நிலாச் சுழல்கள் (Lunar swirls )என்பது நிலா மேற்பரப்பு முழுவதும் காணப்படும் புதிரான கூறுபாடுகளாகும். அவை ஒளியியல் அடிப்படையில் முதிர்ச்சியடையாத (அதாவது ஒப்பீட்டளவில் இளம் மண்படிவு) மற்றும் (பெரும்பாலும்) குழி வடிவ ஒளியியல் பண்புகளைக் கொண்டுள்ளன. அவற்றின் வளைவான வடிவம் பெரும்பாலும் குறைந்த வெளிர் பகுதிகளால் காட்டப்படுகிறது , அவற்றின் ஒளிர்வுமிக்க சுழல்களுக்கு இடையில் காற்று வீசுகின்றன. அவை நிலா மேற்பரப்பை பள்ளங்கள், வெளியேற்றும் வைப்புகளில் மேல்நிலைப்படுத்தியதாகத் தோன்றுகின்றன , ஆனால் கவனிக்கக்கூடிய நிலப்பரப்பை வழங்காது. நிலா கடல், மலைப்பகுதிகளில் சுழல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன - அவை ஒரு குறிப்பிட்ட பாறையியல் உட்கூறுடன் தொடர்புடையவை அல்ல. மரியாவில் சுழல்கள் வலுவான வெளிர் பிறழ்வுகள், சிக்கலான குழி உருவவியல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன , அதேசமயம் மேட்டுநில நிலப்பரப்பில் உள்ளவை குறைவான சிறப்பு வாய்ந்தவையாகத் தோன்றுகின்றன; மேலும் அவை ஒற்றைச் சுழல்கள் அல்லது பரவலான ஒளிர்புள்ளிகள் போன்ற எளிய வடிவங்களை வெளிப்படுத்துகின்றன. காந்தப் பிறழ்வுகளுடன் தொடர்பு சந்திர சுழல்கள் சந்திரனின் காந்தப்புலத்தின் பகுதிகளுடன் ஒத்துப்போகின்றன. அவை ஒரு கோள் உடலில் ஒப்பீட்டளவில் அதிக வலிமையைக் கொண்டுள்ளன. அவை ஒருபோதும் அதன் சொந்த காந்தப்புலத்தை உருவாக்கும் செயலில் உள்ள மைய மின்னியக்கியைக் கொண்டிருக்காது. ஒவ்வொரு சுழலுக்கும் ஒரு தொடர்புடைய காந்த ஒழுங்கின்மை உள்ளது , ஆனால் ஒவ்வொரு காந்த ஒழுங்கின்மையும் அடையாளம் காட்டக்கூடிய ஒரு சுழலைக் கொண்டிருக்கவில்லை. அப்பல்லோ 15, 16 செயற்கைக்கோள்கள் நிலாமுனையம், காகுவாவின் வட்டணைசார் காந்தப்புல வரைபடம் களக் காந்தப்புலப் பகுதிகளைக் காட்டுகிறது. நிலவின் தற்போதைய செயலில் உள்ள உலகளாவிய காந்தப்புலம் இல்லாததால் , இந்தக் களப் பிறழ்வுகள் எச்சக் காந்தவியல் பகுதிகளாகும். அவற்றின் தோற்றம் விவாதத்துக்குரியதாகவே உள்ளது. உருவாக்கப் படிமங்கள் சுழல் உருவாக்கத்திற்கு மூன்று முன்னணி படிமங்கள் உள்ளன. ஒவ்வொரு படிமமும் நிலாச் சுழல்கள் உருவாவதன் இரண்டு பண்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் - அதாவது, சுழலின் ஒளியியல் அடிப்படையில் முதிராமைக்கும் மேலும் அதன் காந்த ஒழுங்கின்மைக்கும் சரியான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும். நிலாச் சுழல்களுடன் தொடர்புடைய காந்தப் பிறழ்வுகளை உருவாக்குவதற்கான படிமங்கள் , பல காந்தப் பிறழ்வுகள் நிலாவில் உள்ள இளைய பெரிய மொத்தல் படுகைகளுக்கு எதிரானவையாக உள்ளதைக் குறிப்பிடுகின்றன. வால்மீன் மொத்தல் படிமம் இந்த கோட்பாடு சுழல்களின் உயர்வெளிர்வு வால்மீனின் மொத்தலின் விளைவாகும் என்று வாதிடுகிறது. இந்த மொத்தல் வாலின் பகுதியின் கொந்தளிப்பான வளிம, தூசியின் ஓட்டம் மேற்பரப்பு மண்ணடுக்கில் தேம்ஹ்கும். இது புதிய பொருளைப் பரப்பி, தனித்தனி வைப்புகளில் நன்றாக தேய்ந்த நுண்பொருளைக் குவித்தது. இந்தப் படிமத்தின்படி, அதனுடன் தொடர்புடைய வலுவான காந்தப் பிறழ்வுகள், மீவேக வளிம மோதல்கள், வாலின் நுண்தூசிகளும் நிலா மேற்பரப்பைத் தாக்கி, அந்த நுண்தாக்கங்களால் கியூரி வெப்பநிலைக்கு மேலே வெப்பமடைய செய்யும் மேற்பரப்புப் பொருட்களின் காந்தமயமாக்கலின் விளைவாகும். வால்வெள்ளி மொத்தல் படிமத்தை ஏற்பவர்கள் முதன்மைப் படுகைகளில் சுழல்கள் எதிர்முறைமை நிகழ்வைத் தற்செயலாகவோ அல்லது சுழல் இடங்களின் முழுமையற்ற பகுதியின் கள விளைவாகவோ ஏற்படுவனவாகக் கருதுகின்றனர். சூரியக் காற்றுக் கவசப் படிமம் காந்த ஒழுங்கின்மை காரணமாக, சூரியக் காற்றிலிருந்து வெளிர்நிற நிலா மண் பாதுகாக்கப்படுவதால் சுழல்கள் உருவாகின்றன என்று இந்தக் கோட்பாடு வாதிடுகிறது. சுழல்கள் வெளிப்படும் சிலிக்கேட்டுப் பொருட்களைக் நோக்குகின்றன. அவற்றின் வெளிர்வுகள் சூரியக் காற்று இயனித் திரள்வீச்சின் விலகல் மூலம் விண்வெளி வானிலை விளைவுகளிலிருந்து காலப்போக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தப் படிமத்தின்படி, வெளிப்படும் சிலிக்கேட் மேற்பரப்புகளின் ஒளியியல் முதிர்ச்சி சூரியக் காற்று இயனித் திரள்வீச்சின் விளைவாகும். இந்தப் படிமவகைச் சுழல் உருவாக்கம் என்பது காந்த ஒழுங்கின்மை உருவாக்கப்பட்ட பிறகு தொடங்கிய ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகும் என்று கூறுகிறது. 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணித உருவகப்படுத்தல்கள் , எரிமலைக் குழம்புவழிகள் குளிர்ச்சியடையும்போது காந்தமாக மாறியிருக்கலாம் என்பதைக் காட்டின. இவை நிலாச் சுழல்களின் நோக்கீடுகளுடன் ஒத்துப்போகும் காந்தப்புலத்தை வழங்குகின்றன. தூசி இயக்கப் படிமம் இந்தக் கோட்பாடு , மேலோட்டுக் காந்தப் பிறழ்வுகளுக்கும் சூரியக் காற்றின் மின்மத்துக்கும் இடையிலான தொடர்புகளால் உருவாக்கப்பட்ட மென்மின் புலங்களால் மின்னூட்டம் அடைந்த நுண்தூசியை ஈர்க்கும் அல்லது விரட்டும் என்று வாதிடுகிறது. உயர்வெளிர்வுள்ள பெல்ட்சுபாரியப் பொருள் நிலா மண்ணின் மிகச்சிறந்த துகள்களின் பரவலின் கூறாகும். நிலாமுனைக் கடப்புகளின்போது மேற்பரப்புக்கு மேலே உயர்த்தப்பட்ட தூசியின் நிலைமின்னழுத்த இயக்கம் இந்தப் பொருளைக் குவித்து ஒளிர் சுழல் வடிவங்களை உருவாக்கக்கூடும். செயற்கைக்கோள் அளவீடுகள் நிலாச் சுழல்களின் காந்த நோக்கீடுகள் கிளெமென்டைன், லூனார் ப்ராஸ்பெக்டர் உள்ளிட்ட பல நிலா விண்கலங்களால் நடத்தப்பட்டுள்ளன. இந்த நோக்கீடுகளின் முடிவுகள் வால்மீன் தாக்கப் படிமத்துடன் பொருந்தாது. நிலா மதிப்பீட்டுச் சுற்றுகலனின் நோக்கீடுகள் சூரியக் காற்று காந்தப்புலத்தால் திசைதிருப்பப்படுகிறது என்ற கோட்பாட்டைக் குறிக்கின்றன. சந்திரயான் - 1 இல் உள்ள நிலாக் கனிமவியல் வரைவி எடுத்த கதிர்நிரல் நோக்கீடுகள் , இலகுவான நிறப் பகுதிகளில் ஐதராக்சைடு குறைபாடு இருப்பதை உறுதிப்படுத்தின , இது வெளிர் பகுதிகளில் சூரியக் காற்று திசைதிருப்பப்படுகிறது என்ற கருதுகோளை குறிக்கிறது. ஆம் ஆண்டளவில் நாசாவில் ஆய்வில் உள்ள கியூபுசாட்(CubeSat) திட்டக் கருத்துவடிவம், நிலாச் சுழல்கள் உருவாக்கத்தைப் புரிந்துகொள்ளும் இலக்குடையதாகும். முன்மொழியப்பட்டுள்ள நிலாச் சுழல்களுக்கு மேலுள்ள வளிமண்டலத்தின் இருகோள்வழி நோக்கீடுகள் அல்லது போலாசு திட்டம் இரு செயற்கைக்கோள்களைக் கொண்டதாகும். இதில் ஒன்று 25 கிமீ உயரத்தில் உயர்வட்டணையிலும் மற்றொன்று 6 கிமீ உயரத்தில் தாழ்வட்டணையிலும் சுற்றிவரும். கள ஆய்வுகள் நாசா , அங்குள்ள மேற்பரப்பு பொருட்களின் கள நோக்கீடுகளைப் பெற இரெய்னர் காம்மா பகுதிக்கு ஒரு தரையூர்தியை அனுப்ப முன்மொழிந்துள்ளது. ஜான்சு ஆப்கின்சு பயன்முறை இயற்பியல் ஆய்வகத்தால் நடத்தப்படும் நிலா சுழிப்பு அல்ல்லது சுழல் திட்டம் ஒரு தரையிறங்கியையும் தரையூர்தியையும் 2024 பயணத்தில் அனுப்ப திட்டமிடுகிறது. பல்வகை நுண்ணோக்கியை சுமந்து செல்லும் தரையூர்தி மேற்பரப்பு துகள்களின் கரடுமுரடான தன்மையையும் ஒளிர்வுத் தன்மையையும் தீர்மானித்து அத்தரவை த்ரையிரங்கிக்கு அனுப்பும் , இது புவித்தளக் கட்டுபாட்டு நிலையத்துடன் (கையாளுபவர்களுடன்) தொடர்பு கொள்ளும். மேலும் காண்க நிலாவின் பெயர்நிலை நிகழ்வுகள் என்பன நிலாப் பரப்பில் தோன்றும் குறுநேர ஒளி, நிற, மாற்றங்களின் தோற்ற நிகழ்வுகளாகும் வெளிர்வுக் கூறுபாடுகள் என்பன சுற்றியுள்ள சூழலை விட ஒளிர்மை வேறுபடும் நிலப்பரப்புப் பகுதியாகும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேலும் காண்க நிலா பெயர்நிலை நிகழ்வு நிலா சார்ந்த அறிவியல் நிலாப் புதிர்கள் விண்வெளி அறிவியல்
593480
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
புள்ளித்தொண்டை மரங்கொத்தி
புள்ளித்தொண்டை மரங்கொத்தி (Spot-throated flameback)(தைனோபியம் எவெரெட்டி) என்பது பிசிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது பலாபாக், புசுவாங்கா மற்றும் கலாமியன் மற்றும் பலவான் தீவுகளில் பலவான் மாகாணத்தில் மட்டுமே காணப்படுகிறது. இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது சில நேரங்களில் மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தியின் துணையினமாகக் கருதப்படுகிறது. இது முதன்மை, இரண்டாம் நிலை காடுகள் மற்றும் தோட்டங்கள் உட்பட ஈரமான தாழ் நிலக் காடுகளில் காணப்படுகிறது. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. விளக்கம் ஈபேர்டு இந்தப் பறவையை "பலவான் மற்றும் அண்டை தீவுகளில் உள்ள மரங்கள் நிறைந்த வாழ்விடங்களின் காணப்படும் ஒரு பெரிய மரங்கொத்தி எனவும், இதன் அடிப்பகுதி வெண்மை நிறத்தில் கருப்பு வரிகளுடனும், மேற்பகுதி தங்க-ஆலிவ் நிறத்திலும், பின்புறத்தில் பரவலான சிவப்பு நிற குறியுடன் மெல்லிய புள்ளிகள் கொண்டும், வெளிர் நுரை நிற தொண்டையுடன், கோண முகடு கொண்டும், பெண்களில் இது சிவப்பு முனையுடன் கருப்பு நிறமாகவும், ஆண்களில் முற்றிலும் சிவப்பு நிறமாகவும் இருக்கும்” எனத் தெரிவிக்கின்றது. மேலும் இந்த மரங்கொத்தி சிறிய சிவப்பு மீசையையும் கொண்டுள்ளது. வாழ்விடம் தென்னந்தோப்புகள் உட்படக் காடுகளிலும் திறந்த வனப்பகுதிகளிலும் புள்ளித்தொண்டை மரங்கொத்தி காணப்படுகிறது. இது மனிதனால் மாற்றப்பட்ட வாழ்விடத்திலும் வாழக்குடியது. ஆனால் அசாதாரணமாகக் காணக்கூடியதாகக் கருதப்படுகிறது. இது பொதுவாக தாழ் நிலங்களில் வாழ்கிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பாதுகாப்பு நிலை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் இந்த பறவையை அச்சுறு நிலையை அண்மித்த நிலையில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2,500 முதல் 9,999 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இனத்தின் முக்கிய அச்சுறுத்தல் வாழ்விட இழப்பு ஆகும். தாழ் நிலக் காடு இழப்பு, சீரழிவு மற்றும் துண்டு துண்டாகப் பலவான் பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது. தீவில் மீதமுள்ள பெரும்பாலான வனப்பகுதிகளிலும் மரம் வெட்டுதல் மற்றும் சுரங்கம் அமைத்தல் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமான மரக்கட்டைகள் தென்பகுதி முழுவதும் கடத்துவது தொடரும் என்று கருதப்படுகிறது. இதன் துல்லியமான சூழலியல் தேவைகள் மற்றும் சீரழிந்த மற்றும் துண்டு துண்டான வாழ்விடங்களில் நிலைத்து நிற்கும் திறனைத் தீர்மானிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. தற்போதுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பயனுள்ள பாதுகாப்பை உறுதி செய்யவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேற்கோள்கள் மேலும் காண்க Collar, N.J. 2011. Species limits in some Philippine birds including the Greater Flameback Chrysocolaptes lucidus. Forktail number 27: 29–38.
593482
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
ஜிதேந்திர மோகன் அன்சு
Articles with hCards ஜிதேந்திர மோகன் அன்சு (Jitendra Mohan Hans) என்பவர் இந்திய காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் குரல்வளை புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேச்சு மறுவாழ்வுக்கான பேச்சு அடைப்பிதழைக் கண்டுபிடித்தவர் ஆவார். இவர் இந்தியாவின் செயற்கை உள்காது பொருத்தும் அறுவை சிகிச்சை குழுமத்தின் நிறுவனர் உறுப்பினராகவும், 2014-ல் உள்நாட்டு பயோனிக் காதை உருவாக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் திட்டக் குழுவின் பகுதியாகவும் இருந்துள்ளார். கல்வி அன்சு 27 நவம்பர் 1955 -ல் பிறந்தார். இவர் 1978-ல் மீரட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். மருத்துவ பணி இவர் இந்தியப் பிரதமரின் கெளரவ காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றியுள்ளார். அகில இந்தியப் பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனம், மைசூர் மற்றும் அலி யஜுர் ஜங் தேசிய காதுகேளாமை நிறுவனத்தில் மருத்துவராக அரசாங்க பதவி நியமனம் பெற்றார். இவர் உட்செவிச்சுருள் பதியம் நுட்பங்களுக்கான முன்னோடியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. விருதும் கவுரவுமும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். மருத்துவத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு 2005ஆம் ஆண்டு பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது. மேற்கோள்கள்   பத்மசிறீ விருது பெற்ற மருத்துவத்துறையினர் வாழும் நபர்கள் 1955 பிறப்புகள்
593488
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
ஓசுமியம் டெட்ராசல்பைடு
ஓசுமியம் டெட்ராசல்பைடு (Osmium tetrasulfide) என்பது OsS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியம் மற்றும் கந்த்கமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தயாரிப்பு ஓசுமியம் டெட்ராக்சைடின் அமிலமயமாக்கப்பட்ட கரைசல்கள் வழியாக ஐதரசன் சல்பைடை அனுப்புவதன் மூலம் ஓசுமியம் டெட்ரசலபைடை உருவாக்கலாம். இயற்பியல் பண்புகள் ஓசுமியம் டெட்ராசல்பைடு அடர் பழுப்பு நிற படிகங்களாக உருவாகிறது. இது குளிர்ந்த நீரில் கரையாது. நீர்த்த நைட்ரிக் அமிலத்தில் கரையும். நீரேற்றுகளை உருவாக்கும். உருகுநிலைக்கு சூடுபடுத்தினால் ஓசுமியம் டெட்ராசல்பைடு சிதைவடையும். மேற்கோள்கள் ஓசுமியம் சேர்மங்கள் சல்பைடுகள் கந்தகச் சேர்மங்கள்
593489
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D
நுண்செய்கோள்
நுண்செய்கோள் அல்லது கியூப்சாட் (CubeSat) என்பது 10 செமீ பருமன் வடிவ அளவில் செய்யப்பட்ட விண்கலத்தின் அல்லது செயற்கைக்கோளின் ஒரு வகையாகும். கியூப்சாட்டு ஒன்றின் பொருண்மை 2 கிலோகிராமுக்கு மேல் இல்லை , மேலும் பெரும்பாலும் அவற்றின் மின்னனியலுக்கும் கட்டமைப்பிற்கும் வணிகவியலாக கிடைக்கும் ஆயத்த (COTS) உறுப்புகளையே பயன்படுத்துகின்றன. கியூப்சாட்டுகள் பன்னாட்டு விண்வெளி நிலைய ஏவுபவர்களால் வட்டணையில் வைக்கப்படுகின்றன அல்லது ஓர் ஏவூர்திவழி இரண்டாம் நிலை ஏற்புச் சுமைகளாக ஏவப்படுகின்றன. 2021 ஆகத்து நிலவரப்படி, 1,600 க்கும் மேற்பட்ட கியூப்சாட்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. 1999 ஆம் ஆண்டில் கலிபோர்னியா மாநிலப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (கால்பாலி பேராசிரியர் ஜோர்டி புயிக் சூரியும் இசுட்டான்போர்டு பல்கலைக்கழக விண்வெளி அமைப்புகள் மேம்பாட்டு ஆய்வகத்தின் பேராசிரியரான பாப் துவிக்சும் கியூப்சாட் வடிவமைப்புக் குறிப்புகளை உருவாக்கினர் , இது தாழ் புவி வட்டணைக்கு வடிவமைக்கப்பட்ட சிறிய செயற்கைக்கோள்களின் செய்முறைக்கு தேவையான திறன்களை மேம்படுத்தவும் அறிவியல் ஆராய்ச்சிவழி புதிய விண்வெளி தொழில்நுட்பங்களை ஆராயவும். கியூப்சாட் ஏவுதல்கள் பெரும்பான்மைக் கல்விக்கழக முயற்சியாகவே அமைந்தன. 2013 வரை பாதிக்கும் மேற்பட்ட ஏவுதல்கள் கல்வி அல்லாத நோக்கங்களுக்காகவும் அமைந்தன , மேலும் 2014 வாக்கில் புதிதாக பயன்படுத்தப்பட்ட கியூப்சாட்டுகள் வணிக அல்லது பயில்நிலைத் திட்டங்களுக்காக அமைந்தன. செயல்பாடுகள் பொதுவாக சிற்றளவில் செய்யக்கூடிய அல்லது புவிக் கண்காணிப்பு அல்லது பயில்நிலை வானொலி போன்ற நோக்கங்களுக்காக சேவை செய்யக்கூடிய செய்முறைகளை உள்ளடக்கியன. சிறிய செயற்கைக்கோள்களுக்கான விண்கல தொழில்நுட்பங்களை நிறுவ அல்லது அவை கேள்விக்குரிய சாத்தியக்கூறுகளை நிறுவ அல்லது ஒரு பெரிய செயற்கைக்கோளின் விலையை ஏற்க இயலாத நிலையில் கியூப்சாட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன . நிறுவப்படாத அடிப்படை கோட்பாட்டுடன் கூடிய அறிவியல் செய்முறைகளும் கியூப்சாட்டுகளில் அனுப்புவதைக் காணலாம் , ஏனெனில் அவற்றின் குறைந்த செலவு அதிக இடர்களை ஏற்க முடியும். உயிரியல் ஆராய்ச்சி அறிவியல்கருவிகள் பல இப்பயணங்களில் பறக்கவிடப்பட்டுள்ளன - மேலும் திட்டமிடப்பட்டுள்ளது. நிலாவுக்கும் அதற்கு அப்பாலும் பல பயணங்கள் கியூப்சாட்டுகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. ஆழமான விண்வெளியில் முதல் கியூப்சாட்டுகள் மார்க்கோ விண்வெளிப் பயணத்தில் பறக்கவிடப்பட்டன , அங்கு மே 2018 இல் இரண்டு கியூப்சாட்கள் வெற்றிகரமான இன்சைட் விண்வெளிப்பயணத்துடன் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டன. சில கியூப்சாட்டுகள், பல்கலைக்கழகங்கள், அரசுக்குச் சொந்தமானவையாக அல்லது தனியார் நிறுவனங்களால் ஏவப்பட்ட நாடுகளின் முதல் செயற்கைக்கோள்களாக மாறிவிட்டன. தேடக்கூடிய மீநுண் செயற்கைக்கோள், நுண் செயற்கைக்கோள்களின் தரவுத்தளம் 1998 முதல் ஏவப்பட்ட அல்லது தொடங்க திட்டமிடப்பட்ட 3,200 அளவுக்கும் மேற்பட்ட கியூப்சாட்டுகளை பட்டியலிடுகிறது. மேலும் காண்க பயில்செய்கோள்((ஆம்சாட்) என்பது பயில்நிலை நுண்செய்கோள் ஆகும். கனடிய மேம்பட்ட மீநுண் விண்வெளி ஆய்வு திட்டம் நுண்தரையூர்தி நுண்செய்கோள் போன்ற கருத்தை சிறிய தரையூர்திகளுக்குப் பயன்படுத்துகிறது நுண்செய்கோள் விண்வெளி நெறிமுறை இஸ்ரேலிய மீநுண் செயற்கைக்கோள் கழகம் நுண்செய்கோள்களின் பட்டியல் மீநுண் செய்கோள் ஏவுதல் அமைப்பு வானொலி பயில்செய்கோள்( ஆசுக்கார்). குவைக்கலம்(PocketQube) 5x5x5 செமீ பருமன் அளவுள்ள சிறிய வடிவ விண்கலம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கியூப்சாட் தரவுத்தளம் மற்றும் நானோ செயற்கைக்கோள்கள் - 1998 முதல் தொடங்க திட்டமிடப்பட்ட 2,000 க்கும் மேற்பட்ட கியூப்சாட்டுகளை பட்டியலிடுகின்றன கியூப்சாட் டெவலப்பர் வளங்கள் மற்றும் ஒழுங்குமுறை தரவு கியூப்சாட்ஸை உருவாக்குவதற்கான திறந்த மூல தளமான லிப்ரிக்யூப் திறந்த மூல கியூப்சாட் பணிமனை (OSCW) NEN கியூப்சாட் ஆதரவு (NASA) விண்கலங்கள் விண்வெளித் திட்டங்கள் நுண்தொழில்நுட்பம் விண்வெளித் தொழில்நுட்பம் மீநுண் தொழில்நுட்பம்
593492
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF
வினய் குல்கர்னி
வினய் ராசசேகரப்பா குல்கர்னி (Vinay Rajashekharappa Kulkarni) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1967 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். கர்நாடக அரசாங்கத்தில் சுரங்கம் மற்றும் புவியியல் துற அமைச்சராக இருந்தார். தார்வாடு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கர்நாடகாவில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினராக இயங்கினார். குல்கர்னி தொழில் ரீதியாக ஒரு விவசாயி மற்றும் வணிக பால் பண்ணையில் ஈடுபட்டார். மேற்கோள்கள் புற இணைப்புகள் Profile 1967 பிறப்புகள் வாழும் நபர்கள் இந்திய அரசியல்வாதிகள் கர்நாடக அரசியல்வாதிகள்
593499
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
நிலா பெயர்வுநிலை நிகழ்வு
ஒரு மாறும் நிலா பெயர்நிலை நிகழ்வு (transient lunar phenomenon (TLP))என்பது நிலாவின் மேற்பரப்பில் ஒளி, நிறம் அல்லது தோற்றத்தில் ஏற்படும் குறுகிய கால மாற்றம் ஆகும். இந்த சொல் பேட்ரிக் மூர் என்பவரால் 1968 இல் வெளியிடப்பட்ட நாசா தொழில்நுட்ப அறிக்கை ஆர் - 277 காலவரிசை அட்டவணை அறிக்கையிடப்பட்ட சந்திர நிகழ்வுகளின் இணை ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. குறுகிய கால நிலா பெயர்நிலை நிகழ்வுகளின் கூற்றுக்கள் குறைந்தது 1,000 ஆண்டுகளுக்கு முந்தையவை , சில பல சான்றுகளுள்ளவை அல்லது புகழ்பெற்ற அரிவியலாளர்களால் நோக்கீடுகள் செய்யப்பட்டுள்ளவை. இருப்பினும் , பெரும்பாலான மாறும் நிலா பெயர்நிலை நிகழ்வு அறிக்கைகள் மறுசீரமைக்கப்பட முடியாதவையும் அவற்றின் தோற்றத்தை விளக்க மாற்று கருதுகோள்களை வேறுபடுத்திப் பார்க்கப் பயன்படுத்தக்கூடிய போதுமான கட்டுப்பாட்டுச் செய்முறைகள் இல்லாதவை. பெரும்பாலான நிலா அறிவியலாளர்கள் புவியியல் நேரத்தில் வளிம வெளியேற்றம், மொத்தல் குழிப்பள்ளம் போன்ற நிலையற்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இத்தகைய நிகழ்வுகளின் நிகழ்வெண்ணில் தான் விவாதம் உள்ளது. நிகழ்வுகளின் விவரம் தற்காலிக நிலா பெயர்வுநிலை நிகழ்வுகளின் அறிக்கைகள் மூடுபனி திட்டுகள் முதல் நிலா மேற்பரப்பின் நிலையான மாற்றங்கள் வரை உள்ளன. கேமரூன் இவற்றை மூடுபனி மற்றும் பிற வகையான தெளிவற்ற தன்மைகளை உள்ளடக்கிய (1) வளிமப் பனிமூட்டம்) (2) சிவப்பு நிறங்கள் (3 பசு நீலம் , (4)ஊதா, (5) இருண்ட நிறம் என வகைப்படுத்துகிறார். நிலையற்ற சந்திர நிகழ்வுகளின் இரண்டு விரிவான பட்டியல்கள் உள்ளன , மிக அண்மைய 2,254 நிகழ்வுகள் 6 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகின்றன. </ref> இந்த நிகழ்வுகளில் மிகவும் நம்பகமானவற்றில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு அரிசுட்டார்க்கசு மேட்டுச்சமவெளி அருகிலிருந்து வந்தவை. விளக்கங்கள் மாறும் நிலா பெயர்நிலை நிகழ்வுகளுக்கான விளக்கங்கள் வளிம வெளியேற்றம், மொத்தல் நிகழ்வுகள், நிலைமின் நிகழ்வுகள், சரியர்ர நோக்கீட்டு நிலைமைகள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. வளிம வெளியேற்றம் சில டிஎல்பிகள் நிலத்தடி குழிகளில் இருந்து வெளியேறும் வாயுவால் ஏற்படலாம். இந்த வாயு நிகழ்வுகள் ஒரு தனித்துவமான சிவப்பு நிறத்தை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகின்றன , மற்றவை வெள்ளை மேகங்களாகவோ அல்லது தெளிவற்ற மூடுபனியாகவோ தோன்றியுள்ளன. பெரும்பாலான டி. எல். பி. க்கள் நிலவு - உடைந்த பள்ளங்களுடன் தொடர்புடையதாகத் தோன்றுகிறது - சந்திர மரியாவின் விளிம்புகள் அல்லது புவியியலாளர்களால் எரிமலை நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்ட பிற இடங்களில். இருப்பினும் , சந்திரனைப் பார்க்கும்போது இவை மிகவும் பொதுவான இலக்குகளில் சிலவாகும் , மேலும் இந்த தொடர்பு ஒரு அவதானிப்பு சார்பாக இருக்கலாம். வெளிக் வாயுக் கருதுகோளுக்கு ஆதரவாக , சந்திர புரோஸ்பெக்டர் ஆல்பா துகள் நிறமாலையிலிருந்து பெறப்பட்ட தரவுகள் , சமீபத்தில் ரேடான் மேற்பரப்பில் வெளியேறியதைக் குறிக்கின்றன. குறிப்பாக இந்த இரண்டு ஆண்டு பயணத்தின் போது அரிஸ்டார்சஸ் மற்றும் கெப்ளர் பள்ளங்களுக்கு அருகிலிருந்து ரேடான் வாயு வெளிப்பட்டது என்பதை முடிவுகள் காட்டுகின்றன. இந்த அவதானிப்புகளை மேற்பரப்பில் வாயுவின் மெதுவான மற்றும் பார்வைக்கு புலப்பட முடியாத பரவல் அல்லது தனித்துவமான வெடிப்பு நிகழ்வுகள் மூலம் விளக்க முடியும். வெடிக்கும் வாயு வெளியேற்றத்திற்கு ஆதரவாக , சந்திர மேற்பரப்பின் தோராயமாக 3 கிமீ (1.9 மைல்) விட்டம் கொண்ட பகுதி " சமீபத்தில் ஒரு வாயு வெளியீட்டு நிகழ்வால் மாற்றியமைக்கப்பட்டது " என்று கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் வயது சுமார் 1 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது , இது போன்ற பெரிய நிகழ்வுகள் அரிதாகவே நிகழ்கின்றன என்பதைக் குறிக்கிறது. மொத்தல் நிகழ்வுகள் சந்திர மேற்பரப்பில் தாக்க நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்கின்றன. மிக பொதுவான நிகழ்வுகள் மைக்ரோமீட்டோரைட்களுடன் தொடர்புடையவை , அவை விண்கல் மழையின் போது எதிர்கொள்ளப்படலாம். இத்தகைய நிகழ்வுகளின் தாக்கப் பிரகாசங்கள் பல மற்றும் ஒரே நேரத்தில் பூமியை அடிப்படையாகக் கொண்ட அவதானிப்புகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன. வீடியோ கேமராக்களால் பதிவு செய்யப்பட்ட தாக்கங்களின் அட்டவணைகள் 2005 முதல் பல ஆண்டுகளாக உள்ளன , அவற்றில் பல விண்கல் மழையுடன் தொடர்புடையவை. மேலும் , ESA - வின் SMART - 1 விண்கலம் - இந்தியாவின் மூன் இம்பாக்ட் ப்ரோப் மற்றும் நாசாவின் LCROSS விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தாக்க மேகங்கள் கண்டறியப்பட்டன. தாக்க நிகழ்வுகள் மேற்பரப்பில் காணக்கூடிய வடுக்களை விட்டுச் செல்கின்றன , மேலும் போதுமான உயர் தெளிவுத்திறனின் புகைப்படங்களுக்கு முன்னும் பின்னும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் இவற்றைக் கண்டறிய முடியும். கிளெமென்டைன் (உலகளாவிய தீர்மானம் 100 மீட்டர்) தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் 7 - 20 மீட்டர் மற்றும் ஸ்மார்ட் - 1 (தீர்மானம் 50 மீட்டர்) பயணங்களுக்கு இடையில் எந்த தாக்க பள்ளங்களும் உருவாகவில்லை. நிலைமின்னியல் நிகழ்வுகள் நிலைமின்னியல் மின்னூட்ட வெளியேற்றம் தொடர்பான விளைவுகள் சில நிலையற்ற சந்திர நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு சாத்தியக்கூறு என்னவென்றால் , மேற்பரப்புக்கு அருகிலுள்ள பொருட்களின் எலும்பு முறிவு தொடர்பான எலக்ட்ரோடைனமிக் விளைவுகள் பொருத்தப்பட்ட சூரியக் காற்று அல்லது கதிரியக்க மகள் தயாரிப்புகள் போன்ற எந்த வாயுக்களையும் சார்ஜ் செய்யக்கூடும். இது மேற்பரப்பில் ஏற்பட்டால் , இந்த வாயுவிலிருந்து அடுத்தடுத்த வெளியேற்றத்தால் பூமியில் இருந்து காணக்கூடிய நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும். மாற்றாக , வாயு மூலம் பரவும் தூசி மேகத்திற்குள் உள்ள துகள்களின் ட்ரைபோ எலக்ட்ரிக் சார்ஜ் பூமியில் இருந்து தெரியும் நிலைமின்னியல் வெளியேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. இறுதியாக , முனையத்திற்கு அருகில் தூசியின் நிலைமின்னழுத்த மின்னழுத்தம் பூமியில் இருந்து காணக்கூடிய ஒருவித நிகழ்வுக்கு வழிவகுக்கும். சரியற்ற நோக்கீட்டு நிலைமைகள் பல நிலையற்ற நிகழ்வுகள் சந்திரனுடன் தொடர்புடையதாக இல்லாமல் இருக்கலாம் , ஆனால் பூமியுடன் தொடர்புடைய சாதகமற்ற கண்காணிப்பு நிலைமைகள் அல்லது நிகழ்வுகளின் விளைவாக இருக்கலாம். உதாரணமாக , சில குறிப்பிடப்பட்ட நிலையற்ற நிகழ்வுகள் பயன்படுத்தப்படும் தொலைநோக்கிகளின் தீர்மானத்திற்கு அருகிலுள்ள பொருட்களுக்கானவை. பூமியின் வளிமண்டலம் குறிப்பிடத்தக்க தற்காலிக சிதைவுகளுக்கு வழிவகுக்கும் , அவை உண்மையான சந்திர நிகழ்வுகளுடன் குழப்பமடையக்கூடும் (வானியல் பார்வை என்று அழைக்கப்படும் ஒரு விளைவு. பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கற்களைப் பார்ப்பது அல்லது அவதானிப்பு பிழை ஆகியவை சந்திரன் அல்லாத பிற விளக்கங்களில் அடங்கும். நிலா பெயர்நிலை நிகழ்வுகளின் விவாதிப்பு நிலைமைகள் நிலையற்ற சந்திர நிகழ்வுகள் பற்றிய அறிக்கைகளை எதிர்கொள்ளும் மிக முக்கியமான சிக்கல் என்னவென்றால் , இவற்றில் பெரும்பாலானவை ஒரு பார்வையாளரால் அல்லது பூமியில் ஒரு இடத்தில் (அல்லது இரண்டும்) செய்யப்பட்டன. சந்திரனில் ஒரே இடத்தில் நிகழும் நிலையற்ற நிகழ்வுகளுக்கான ஏராளமான அறிக்கைகள் அவற்றின் இருப்பை ஆதரிக்கும் சான்றுகளாகப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும் , ஒரே நிகழ்வுக்கு பூமியில் பல இடங்களில் பல பார்வையாளர்களிடமிருந்து நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாத நிலையில் , இவை எச்சரிக்கையுடன் கருதப்பட வேண்டும். மேலே விவாதிக்கப்பட்டபடி , இந்த நிகழ்வுகளில் சிலவற்றிற்கான சமமான நம்பத்தகுந்த கருதுகோள் என்னவென்றால் , அவை நிலப்பரப்பு வளிமண்டலத்தால் ஏற்படுகின்றன. பூமியில் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஒரு நிகழ்வு காணப்பட்டால் , இது வளிமண்டல தோற்றத்திற்கு எதிரான சான்றாக பயன்படுத்தப்படலாம். தற்காலிக நிகழ்வுகள் குறித்த அறிக்கைகளுடன் மேற்கூறிய சிக்கல்களை சமாளிக்க ஒரு முயற்சி கிளெமென்டைன் பணியின் போது ஒரு தன்னார்வ வானியலாளர்கள் வலையமைப்பால் செய்யப்பட்டது. பல நிகழ்வுகள் தெரிவிக்கப்பட்டன , அவற்றில் நான்கு விண்கலத்தால் முன்னும் பின்னும் புகைப்படம் எடுக்கப்பட்டன. இருப்பினும் , இந்த படங்களை கவனமாக பகுப்பாய்வு செய்வது இந்த தளங்களில் தெளிவான வேறுபாடுகளைக் காட்டவில்லை. சந்திர மேற்பரப்பில் வெளிப்புற வாயு நிகழ்வுகள் ஒரு புலப்படும் அடையாளத்தை விட்டுச் செல்லாமல் போகலாம் , ஆனால் இவை உண்மையான சந்திர நிகழ்வுகள் என்ற கருதுகோளுக்கு ஊக்கமளிக்கவில்லை என்பதால் இந்த அறிக்கைகள் அவதானிப்பு பிழையின் விளைவாக இருந்தன என்பதை இது குறிக்கவில்லை. கடந்த காலத்தில் நிலையற்ற சந்திர நிகழ்வுகள் பதிவாகிய இடங்களை மறு ஆய்வு செய்வதற்காக சந்திர மற்றும் கிரக பார்வையாளர்கள் சங்கம் மற்றும் பிரிட்டிஷ் வானியல் சங்கம் ஆகியவற்றால் தற்போது அவதானிப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்த அம்சங்களின் தோற்றத்தை அதே வெளிச்சம் மற்றும் லிப்ரேஷன் நிலைமைகளின் கீழ் ஆவணப்படுத்துவதன் மூலம் , சில அறிக்கைகள் வெறுமனே பார்வையாளர் ஒரு அசாதாரணமானதாகக் கருதியதைப் பற்றிய தவறான விளக்கத்தால் ஏற்பட்டதா என்பதை தீர்மானிக்க முடியும். மேலும் டிஜிட்டல் படங்களுடன் , வளிமண்டல நிறமாலை சிதறல் - வானியல் பார்வை மங்கலானது மற்றும் ஒளி சிதறல் ஆகியவற்றை நமது வளிமண்டலத்தால் உருவகப்படுத்த முடியும் , இந்த நிகழ்வுகள் அசல் டி. எல். பி அறிக்கைகளில் சிலவற்றை விளக்க முடியுமா என்பதை தீர்மானிக்க. இலக்கியம் வில்லியம் ஆர். கார்லிஸ்ஃ மர்மமான பிரபஞ்சம் வானியல் முரண்பாடுகளின் கையேடு (The Sourcebook Project) 1979. வில்லியம் ஆர். கார்லிஸ்ஃ சந்திரனும் கிரகங்களும் வானியல் முரண்பாடுகளின் பட்டியல் (தி சோர்ஸ் புக் ப்ராஜெக்ட்) 1985. தாமஸ் வில்லியம் வெப்ஃ பொதுவான தொலைநோக்கிகளுக்கான வான பொருள்கள் தொகுதி 1: சூரிய குடும்பம் (டோவர் வெளியீடுகள் 1962). வால்டெமர் ஆக்செல் ஃபிர்சோஃப்ஃ தி ஓல்ட் மூன் அண்ட் தி நியூ (சிட்ஜ்விக் & ஜாக்சன் - லண்டன் , 1969). A. J. M. Wanders: Op Ontdekking in het Maanland (ஹெட் ஸ்பெக்ட்ரம் 1949). Harry de Meyer: Maanmonografieen (வெரிங்கிங் வூர் ஸ்டெரன்கண்டே வி. வி. எஸ். 1969). Patrick Moore: New Guide to the moon (1976). ஹரோல்ட் ஹில்ஃ சந்திர வரைபடங்களின் ஒரு போர்ட்ஃபோலியோ (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பிரஸ் 1991). டான் ஈ. வில்ஹெல்ம்ஸ்ஃ டூ எ ராக்கி மூன் - ஒரு புவியியலாளரின் சந்திர ஆய்வின் வரலாறு (அரிசோனா பல்கலைக்கழகம் பிரஸ் 1993). வில்லியம் பி. ஷீஹன் & தாமஸ் ஏ. டோபின்ஸ்ஃ எபிக் மூன் (Epic moon) தொலைநோக்கி யுகத்தில் சந்திர ஆய்வின் வரலாறு (Willmann Bell) (2001). மேலும் காண்க நிலாப் புவியியல் நிலா அனற்குழம்பு குழல்கள் நிலா மண் (பார்க்க, நிலா தூசி ஊற்றுகள், நிலைமின்னழுத்த இழுவை) நிலாச் சுழல்கள் நிலாவை நோக்குதல் திட்டம் A119 திட்டம் நிலாச் சிமிட்டல், 1960 களில் நாசா மாறும் நிலாவின் பெயர்நிலை நிகழ்வுகள் பற்றிய ஆய்வு நிலாவியல் நிலா பிளவுறல் மேற்கோள்கள் மேற்கோள் காட்டப்பட்ட குறிப்புகள்பொது மேற்கோள்கள் Patrick Moore , on the moon , Cascel & Co. , 2001 ISBN . வெளி இணைப்புகள் மாறும் நிலாவின் பெயர்நிலை நிகழ்வு நாசா சிறப்புக் கதை மாறும் நிலா பெயர்நிலை நிகழ்வுகள், நிலா, கோள் நோக்கீட்டாளர்களின் கழகம் நாசா - நிலா மொத்தல் கண்காணிப்பு திட்டம்   ஜூலியஸ் - மாக்சிமிலியன்சு - வுர்ஜ்பெர்கு பலகலைக்கழகத்தின் விண்வெந்த் தொழில்நுட்பப் பேராசிரியர் கக்கன் கயால் (JMMU) செருமனியில் உள்ள பவேரியாவில் - மாறும் நிலா நிகழ்வுகளை ஆராய, இசுப்பெயினில் நிலாத் தொலைநோக்கி அமைக்கப்பட்டது நிலாவில் மின்னல் நிலா பெயர்நிலை நிகழ்வு கண்டறிதல் காட்சிப்பதிவு வானியல் நிலாப் புதிர்கள் நிலா நிலா நோக்கீடுகள் மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்
593516
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
மங்களூரு நகர தெற்கு சட்டமன்றத் தொகுதி
மங்களூரு நகர தெற்கு சட்டமன்றத் தொகுதி (Mangalore City South Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ளது. தட்சிண கன்னட மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 203 ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள் தட்சிண கன்னட மாவட்டம்
593519
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
தஞ்சாவூர் வடக்கு அலங்கம் பாலதண்டாயுதபாணிசுவாமி கோயில்
தஞ்சாவூர் வடக்கு அலங்கம் பாலதண்டாயுதபாணிசுவாமி கோயில் தஞ்சாவூர் நகரில் வடக்கு அலங்கம் பகுதியில் உள்ள முருகன் கோயிலாகும. மூலவர் இங்குள்ள மூலவர் பாலதண்டாயுதபாணி என்றழைக்கப்படுகிறார். சிறப்பு இந்தக் கோயில் மன்னர் சரபோஜி காலத்தில் கட்டப்பட்டதாகும். இப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் அடிக்கடி பழனியிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வந்துள்ளனர். அப்படி சென்று வர பல நாட்கள் ஆனதால், அங்கிருப்பது போல இங்கும் ஒரு கோயிலை அமைக்க முடிவு செய்தனர். முருகன் கனவில் வந்து சொன்னதை அடுத்து, பழனி மலையின் அடிவாரத்தில் இருந்து ஒரு முருகன் சிலையை இங்கு கொண்டு வந்து அமைத்துள்ளார்கள். தஞ்சாவூர் அறுபடை வீடு தஞ்சாவூரில் உள்ள அறுபடைவீடுகளாக மேல அலங்கம் முருகன் கோயில் (திருப்பரங்குன்றம்), வடக்கு அலங்கம் முருகன் கோயில் (பழமுதிர்சோலை), குறிச்சித் தெரு முருகன் கோயில் (திருத்தணி), ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில் (பழனி), பூக்காரத்தெரு முருகன் கோயில் (திருச்செந்தூர்) ஆகியவற்றைக் கூறுகின்றனர். சுமார் 40 வருடங்களாக இப்பகுதியிலுள்ள முருக பக்தர்கள் ஒரே நாளில் இந்த அனைத்து முருகன் கோயில்களுக்கும் பாத யாத்திரையாகச் சென்று வருகின்றனர். மேற்கோள்கள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்கள் கௌமாரம்
593524
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81
கே.பி. அரிதாசு
Articles with hCards கே. பி. அரிதாசு (K. P. Haridas) என்பவர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணராவார். இவர் திருவனந்தபுரத்தில் சிறப்பு மருத்துவ சுகாதார நிறுவனமான லார்ட்சு மருத்துவமனையின் தலைவரின் நிறுவனர் ஆவார். திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையினை வெற்றிகரமான நிகழ்த்தி பெருமை சேர்த்தவர். அரிதாசு பிரித்தானியத் தென்னிந்திய வர்த்தக குழும வாழ்நாள் சாதனையாளர் விருது (2014) மற்றும் மருத்துவர் பால்சலாம் நினைவு விருது முதலானவற்றைப் பெற்றவர். 2015ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நாட்டின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருதினை வழங்கி கௌரவித்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலையாள நபர்கள் வாழும் நபர்கள் பத்மசிறீ விருது பெற்ற மருத்துவத்துறையினர்
593527
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D
தனிப் பெயர்ச்சொல்
ஒரு தனிப் பெயர்ச்சொல் (Proper noun) அல்லது உரித்தான பெயர்ச்சொல் என்பது ஒரு குறிப்பிட்ட நபர் (சரண்யா), இடம் (சிவகாசி, ஒரு கண்டம்) அல்லது சிறப்புப் பெயர்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட ஒன்றை அடையாளம் காணும் ஒரு பெயர்ச்சொல் ஆகும். இதன் விரிவான வரையறை சிக்கலானதும், விரிவாக்கக்கூடியதுமாகும். இவை நடைமுறை மரபுகளால் நிர்வகிக்கப்படுகிறது. உரித்தான பெயர்கள் தற்போதைய மொழியியலானது உரித்தான பெயர்ச்சொற்கள் மற்றும் உரித்தான பெயர்களிடையே ஒரு வேறுபாட்டை உருவாக்குகிறது, ஆனால் இந்த வேறுபாடு உலகளவில் கவனிக்கப்படவில்லை மற்றும் சில நேரங்களில் இது கவனிக்கப்பட்டாலும் கடுமையான விதியாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்த வேறுபாட்டின்போது உரித்தான பெயர்ச்சொற்கள் ஒற்றை வார்த்தைகளை மட்டுமே உள்ளடக்குகிறது ஆனால், உரித்தான பெயர் அனைத்து உரித்தான பெயர்ச்சொற்களையும், பெயர்த் தொடர்களையும் (ஐக்கிய இராச்சியம், வெள்ளை மாளிகை) உள்ளடக்குகிறது. தலைப்பெழுத்து ஆங்கிலத்தில் தனிப்பெயர்சொற்களின் முதல் எழுத்து தலைப்பெழுத்துக்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. செருமானிய மொழியில் அனைத்துப் பெயர்ச்சொற்களும் தலைப்பெழுத்துகளில் எழுதப்படுகின்றன. டேனிஷ் மொழியில், 17 ஆம் நூற்றாண்டிலிருந்து 1948 ஆம் ஆண்டில் எழுத்துச் சீர்திருத்தம் ஏற்படும் வரை, அனைத்து பெயர்ச்சொற்களும் தலைப்பெழுத்தாக்கப்பட்டன. மேலும் பார்க்கவும் பெயர் குறிப்புகள் சான்றுகள் வெளி இணைப்புகள் விக்கிப் பல்கலைக்கழகம்:சரியான பெயர் பெயர்ச் சொல்
593528
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF
பிரகாசு நானாலால் கோத்தாரி
Articles with hCards பிரகாசு நானாலால் கோத்தாரி (Prakash Nanalal Kothari) இந்திய மருத்துவரும் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை மற்றும் மும்பை சேத் கோர்தந்தாஸ் சுந்தர்தாஸ் மருத்துவக் கல்லூரியில் பாலியல் மருத்துவத் துறையின் தலைவரும் ஆவார். மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். கோத்தாரி பாலினவியல் பற்றிய பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். உலக பாலினவியல் சங்கம் இவரை 1989ஆம் ஆண்டில் ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுத்தது. 2002ஆம் ஆண்டில் இந்திய அரசால் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பாலியல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை இந்தியாவில் பரப்புவதற்காக ஆணுறை வணிக நிறுவனத்துடன் இவர் இணைந்து பணியாற்றினார். மேலும் பார்க்கவும் பாலியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வாழும் நபர்கள் பத்மசிறீ விருது பெற்ற மருத்துவத்துறையினர்
593531
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%20%282023%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29
மார்க் ஆண்டனி (2023 திரைப்படம்)
மார்க் ஆண்டனி (Mark Antony) 2023 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி நாடகத் திரைப்படமாகும். மினி சுடுடியோஸ் பதாகையின் பேரில் வினோத் குமார் தயாரித்துள்ள இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். விஷால், ரிது வர்மா, எஸ். ஜே. சூர்யா, செல்வராகவன், சுனில் வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியானது. நடிகர்கள் மார்க் (மகன்), ஆண்டனி (அப்பா) என இரட்டை வேடத்தில் விஷால் ஜாக்கி பாண்டியன் (அப்பா), மதன் பாண்டியன் (மகன்) என இரட்டை வேடத்தில் எஸ். ஜே. சூர்யா ரம்யாவாக ரிது வர்மா, மார்க்கின் காதலி சிரஞ்சீவியாக செல்வராகவன் ஏகாம்பரம் வேடத்தில் சுனில் வர்மா மார்க்கின் அம்மாவாகவும், ஆண்டனியின் மனைவியாகவும் அபிநயா நிழல்கள் ரவி ரெடின் கிங்ஸ்லி ஒய். ஜி. மகேந்திரன் சில்க் ஸ்மிதாவாக விஷ்ணு பிரியா காந்தி சென்ட்ராயன் பில்லி முரளி வசனகர்த்தாவாக கார்த்திக் இசை நான் சிகப்பு மனிதன் (2014) படத்திற்குப் பிறகு விஷாலுடன் இரண்டாவது முறையாகவும், திரிஷா இல்லனா நயன்தாரா (2015) படத்திற்குப் பிறகு ஆதிக்கின் இரண்டாவது கூட்டணியிலும் ஜி. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசை இசையமைத்துள்ளார். முதல் தனிப்பாடலான "அதிருதா" 15 ஜூலை 2023 அன்று வெளியிடப்பட்டது. மற்றும் இரண்டாவது பாடலான "ஐ லவ் யூ டி" ஆகஸ்ட் 23 அன்று வெளியிடப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் காலப் பயணம் பற்றிய திரைப்படங்கள் 2023 தமிழ்த் திரைப்படங்கள் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் விஷால் நடித்த திரைப்படங்கள் நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
593532
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
நடுப் பெயர்
பல்வேறு கலாச்சாரங்களில், நடுப் பெயர் (middle name) அல்லது மத்தியப் பெயர் என்பது ஒரு நபரின் இயற்பெயருக்கும் அவரது குடும்பப் பெயருக்கும் இடையில் எழுதப்பட்ட முழுப் பெயரின் ஒரு பகுதியாகும். ஒரே மாதிரியான முழுப் பெயர் மற்றும் இயற்பெயர் கொண்டவர்களை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகவோ அல்லது அதனைப் பொருபடுத்தாமலோ ஒருவருக்கு நடுப் பெயர் வழங்கப்படலாம். சில கலாச்சாரங்களில் குடும்பப் பெயருக்கு பின்பாகவோ அல்லது முழுப்பெயருக்கு முன்பாகவோ வழங்கப்படும் பெயர்கள் நடுப்பெயர்கள் என அழைக்கப்படுகிறது. பல்வேறு மொழிகளில் பயன்பாடு ஆங்கிலம் அரச குடும்பம் மற்றும் பிரபுத்துவத்தில், 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நடுப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவில், நடுப் பெயர் பெரும்பாலும் மத்திய முதலெழுத்துக்களாகச் சுருக்கப்படுகிறது (எ.கா மேரி லீ பியாஞ்சி என்பது மேரி எல். பியாஞ்சி என பயன்படுத்தப்படுகிறது). இது வழக்கமாக கையொப்பமிடும் சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது அல்லது அன்றாட பயன்பாட்டில் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது (எ.கா. மேரி பியாஞ்சி என்று மட்டும் பயன்படுத்தப்படுகிறது). ஐக்கிய இராச்சியத்தில் ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நடுத்தர பெயர்கள் இருக்கலாம் அல்லது நடுப்பெயர்களே இல்லாமலும் இருக்கலாம். பிரிட்டனில், பாரம்பரியமாக உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே இரண்டுக்கும் மேற்பட்ட நடுப்பெயர்கள் பயன்படுத்துவது மிகவும் பொதுவானதாகும். மேலும் பார்க்கவும் இயற்பெயர் முழுப் பெயர் சான்றுகள் பெயரிடல் மரபு
593539
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
வசந்த தேசாய்
வசந்த் தேசாய் (Vasant Desai) (1912-1975) ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். வி. சாந்தாராமின் ஜனக் ஜனக் பயல் பாஜே (1955), தோ ஆங்கேன் பரா ஹாத் (1957), விஜய் பட்டின் கூஞ்ச் உத்தி ஷெஹ்னாய் (1959) , சம்பூர்ண ராமாயண் (1961), ஆஷிர்வாத் (1968) மற்றும் இருசிகேசு முகர்ஜியின் குட்டி (1971) போன்ற படங்களில் தனது இசைக்காக மிகவும் நினைவுகூரப்பட்டார். ஆரம்ப கால வாழ்க்கை தேசாய், 1912 இல் மராத்தியப் பேரரசின் போன்சலே வம்சத்தவர்கள் ஆண்ட சாவந்த்வாடி இராச்சியத்தில் சோனாவாடே கிராமத்தில் ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்தார். தொழில் பிரபலமான திரைப்படநிறுவனமான பிரபாத் பிலிம் கம்பெனி படங்களைத் தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து தேசாய் அதில் இருந்தார். அவர்கள் தயாரித்த தர்மாத்மா மற்றும் சந்த் ஞானேஷ்வர் போன்ற படங்களில் நடித்தார். பாடினார் மற்றும் சில சமயங்களில் பாடல்களை இயற்றினார். இசை அமைப்பில் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட பிறகு, 1940 களில் இருந்து தனியே இசையமைக்க ஆரம்பித்தார். தேசாயின் மறக்கமுடியாத பாடல்களாக, இந்தி திரைப்பட பக்திப் பாடல், 1957 ஆம் ஆண்டு தோ ஆங்கேன் பரா ஹாத்தின் ஏ மாலிக் தேரே பந்தே ஹம் மற்றும் பின்னணிப் பாடகி, வாணி ஜெயராமின் முதல் பாடலான, குட்டி (1971) இல் இருந்து போல் ரே பாபிஹாரா போன்றவை அமைந்தது. காஞ்சி மடத்தைச் சேர்ந்த துறவி சந்திரசேகர சரசுவதியால் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட மைத்ரீம் பஜதா என்ற பாடலை இவர் ராகமாலிகாவாக அமைத்தார். இது ஐக்கிய நாடுகள் அவையில் அக்டோபர் 23, 1966 அன்று ஐ.நா. தினத்தை முன்னிட்டு பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களால் பாடப்பட்டது. கடைசி பதிவு டிசம்பர் 22, 1975 அன்று எச்எம்வி ஸ்டுடியோவில் இந்திரா காந்தியைப் புகழ்ந்து பேசும் வகையில் உயர்தர இசைக்கலைஞர்கள் கலந்து கொண்ட சிறப்பு இசை நிகழ்ச்சியின் முழு நாள் பதிவுக்குப் பிறகு வசந்த தேசாய் வீடு திரும்பினார். இவர் தனது அடுக்குமாடி கட்டிடத்தின் மின்தூக்கியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கி இவர் உயிர் துறந்தார். சான்றுகள் வெளி இணைப்புகள் Vasant Desai 1975 இறப்புகள் 1912 பிறப்புகள் பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
593545
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தி
தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தி (அறிவியல் பெயர்: Dinopium benghalense puncticolle) என்பது பொன்முதுகு மரங்கொத்தியின் துணையினம் ஆகும். இது கேரளம் நீங்கலாக தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறது. விளக்கம் தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தியானது மைனாவை விடப் பெரியதாக சுமார் 29 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கொம்பு போன்ற கறுப்பு நிறமாகும். இதன் விழிப்படலம் சிவந்த பழுப்பு நிறமாகவும், கால்கள் சாம்பல் தோய்ந்த இலைப் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் உச்சியும் கொண்டையும் ஆழ்ந்த சிவப்பாக இருக்கும். உடலின் மேற்பகுதி பொன் நிறமான மஞ்சளாகவும் ஓரங்கள் கறுப்பாகவும் இருக்கும். உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாகக் கறுப்புக் கோடுகளோடு காட்சியளிக்கும். தொண்டையும் தலையின் பக்கங்களும் கறுப்பாகச் சிறு வெண் புள்ளிகளோடு காட்சியளிக்கும். பரவலும் வாழிடமும் தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தி கேரளம் நீங்கலாக தென்னிந்தியா முழுவதும் இலையுதிர்க்காடுகளிலும் தோப்புகள், தோட்டங்கள், சாலை ஓர மரங்கள் ஆகியவற்றைச் சார்ந்து எங்கும் சாதாரணமாக காணப்படுகிறது. நடத்தை தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தி பொதுவாக இணையாக மரத்திற்கு மரம் தாவி மரங்களில் கொத்தி இரை தேடக்கூடியது. கரிச்சான் முதலிய பிற பூச்சி பிடிக்கும், இரைதேடும் பறவைக் கூட்டங்களுடன் இணைந்து இரை தேடுவதும் உண்டு. தாவித் தாவி அடிமரங்களில் கொத்தி மரப்பட்டைகளை அலகால் தட்டி இரைத்தேடும் இப்பறவை பின்னோக்கி இறங்கவும் வல்லது. இப்பறவை பெப்ரவரி முதல் சூலை வரை இனப்பெருக்கம் செய்கிறது. மரங்களில் மூன்று முதல் ஆறு மீட்டர் வரை உயரத்தில் பொந்து குடைந்து அதில் மூன்று முட்டைகள் இடும். மா, இலந்தை, முள்முருக்கு, தென்னை, பனை முதலான மரங்களில் பொந்து குடையும். மேற்கோள்கள் மரங்கொத்திகள் தென்னிந்தியப் பறவைகள்
593547
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%2C%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
அரசு ஆயுர்வேத கல்லூரி, குவுகாத்தி
அரசு ஆயுர்வேதக் கல்லூரி, குவுகாத்தி (Government Ayurvedic College, Guwahati) என்பது வடகிழக்கு இந்தியாவின் அசாமில் உள்ள ஜலுக்பாரியில் உள்ள ஆயுர்வேத நிறுவனம் ஆகும். 1948-ல் நிறுவப்பட்ட இந்த கல்லூரி முதலில் குவகாத்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 2010-ல் சிறீமந்த சங்கரதேவா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. வரலாறு லோக்பிரியா கோபிநாத் பர்தலை, லோக்பந்து புவனேஸ்வர் பருவா மற்றும் நிறுவனர் அதிபர் ஜகதீசு சந்திர பட்டாச்சார்யா ஆகியோரின் முயற்சிகளால் இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு இக்கல்லூரி நிறுவப்பட்டது. இந்தக் கல்லூரி 1948ஆம் ஆண்டு திசம்பர் 20ஆம் தேதி அசாம் மாநிலத்தின் அப்போதைய முதல்வர் லோக்பிரியா கோபிநாத் போர்டோலாய் என்பவரால் உசான் பஜாரில் ஒரு வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. சூலை 1959-ல், அசாமின் ஜலுக்பாரியில் உள்ள தற்போதைய இடத்திற்குக் கல்லூரி நிரந்தரமாக மாற்றப்பட்டது. படிப்புகள் பட்டதாரி கல்வி வழங்கப்படும் பட்டம்: இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை: 63 இடங்கள் படிப்புக் காலம்: ஒரு வருட உள்ளகப் பயிற்சி உட்பட ஐந்தரை ஆண்டுகள். இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவ மாணவச் சேர்க்கையானது தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலானது. முதுகலை கல்வி முதுநிலை மருத்துவம்/அறுவையியல் படிப்பிற்கான சேர்க்கை, தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வின் அடிப்படையிலானது. இடங்கள் பகிர்வு முதுநிலை மருத்துவம் காயா சிகிட்சா (ஆயுர்வேதம்). 6 இடங்கள் சம்கிதா சித்தாந்தத்தில் முதுநிலை மருத்துவம் (ஆயுர்வேதம்). 6 இடங்கள் சல்ய தந்திரத்தில் முதுநிலை அறுவையியல் (ஆயுர்வேதம்). 3 இடங்கள் பிரசுதி தந்திரம் & ஸ்திரீ ரோகாவில் முதுநிலை அறுவையியல் (ஆயுர்வேதம்): 4 இடங்கள் ரோக நிதானத்தில் முதுநிலை மருத்துவம் (ஆயுர்வேதம்). 3 இடங்கள் ஷாரிர் ரச்சனாவில் முதுநிலை மருத்துவம் (ஆயுர்வேதம்). 2 இடங்கள் மற்ற படிப்புகள் முனைவர் துறைகள் கயா சிகிட்சா (மருந்து) சல்யா (பொது அறுவை சிகிச்சை) சலாக்யா (காது, மூக்கு, தொண்டை & கண் மருத்துவம்) சமசுகிருதம், சம்கிதா மற்றும் சித்தாந்தம் (அடிப்படை கோட்பாடுகள்) பிரசுதி தந்திரம் & ஸ்ட்ரிரோகா (மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்) பால ரோகா (குழந்தை மருத்துவம்) பஞ்சகர்மா (இயன்முறை சிகிச்சை) ஸ்வஸ்தவ்ரித்தா (தடுப்பு மற்றும் சமூக மருத்துவம்) திரவியகுணா (மருந்தியல்) இராசாசாத்திரம் & பைசஜ்யா கல்பனா (புத்துணர்ச்சி மற்றும் மருந்து அறிவியல்) அகடா தந்திரம் & விதி சாத்திரம் (நச்சுயியல் மற்றும் தடயவியல் மருத்துவம்) ரோகா நிதன் & விக்ரிதி விக்யான் (நோயறிதல் மற்றும் நோயியல் அறிவியல்) இரச்சனா சாரிர் (உடற்கூறியல்) கிரியா சரிர் (உடலியல்) மேற்கோள்கள் Coordinates on Wikidata ஆயுர்வேதம்
593549
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
மொசிபுர் ரகுமான்
மொசிபுர் ரகுமான் (Mozibur Rahman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஆசிரியராகவும் இவர் பணிபுரிந்துள்ளார். மேகாலயா சட்டப் பேரவையில் ராசபாலா தொகுதியின் தொடக்க உறுப்பினராக பதவி வகித்தார். வாழ்க்கை ரகுமான் மேகாலயாவின் கரோ கில்சில் உள்ள இல்லிடாய்கஞ்ச் பகுதியில் உள்ள கசரிபாரா கிராமத்தில் ஒரு பெங்காலி முசுலிம் குடும்பத்தில் பிறந்தார். சுயேச்சை வேட்பாளராக இருந்த போதிலும், இவர் 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு கோர்சேதுர் ரகுமான் கானை தோற்கடித்தார். இதனால் மேற்கு கரோகில்சு மாவட்டத்தின் ராசபாலா தொகுதியில் ஒரு இடத்தை வென்றார். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற மேகாலயா சட்டமன்றத் தேர்தலிலும் இவர் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். சம்சர் அலி எச் எசு பள்ளியில் ஓர் ஆசிரியராகவும் ரகுமான் பணியாற்றினார். மேற்கோள்கள் மேகாலயா அரசியல்வாதிகள்
593557
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பன்முகப் பயனர் நிலவறை சொற்களஞ்சியம்
இது பன்முகப் பயனர் நிலவறையில்(பபநி-MUD) ( பன்முக விளையாட்டு மெய்நிகர் உலகங்கள்) பொதுவாகப் பயன்படும் சொற்களின் சொல்விளக்கக் களஞ்சியம் ஆகும். நூல்தொகை கணினித் துறைச்சொற்கள்
593558
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
சார்க்கண்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல்
இது சார்க்கண்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியல் (List of institutions of higher education in Jharkhand) ஆகும். மத்தியப் பல்கலைக்கழகம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தேசிய சட்ட பல்கலைக்கழகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாநில பல்கலைக்கழகங்கள் தனியார் பல்கலைக்கழகங்கள் விவசாயம், பால் மற்றும் மீன்வள அறிவியல் வேளாண் கல்லூரி, கர்வா மீன்வள அறிவியல் கல்லூரி, கும்லா ரவீந்திர நாத் தாகூர் விவசாயக் கல்லூரி, தியோகர் தில்கா மஞ்சி விவசாயக் கல்லூரி கோடா புலோ ஜானோ முர்மு பால் தொழில்நுட்பக் கல்லூரி, அன்சுதிகா (தும்கா) தோட்டக்கலை கல்லூரி, சாய்பாசா பாதுகாப்பு வன மேபாட்டு பள்ளி, நெதர்ஹாட், மாநில காவல்துறை மற்றும் ம.தொ.பா.ப. பாதுகாப்பு பயிற்சிக்கான பாதுகாப்பு கல்லூரி. பட்டபடிப்பு கல்லூரிகள் தூய கொலும்பா கல்லூரி ஆனந்தா கல்லூரி, ஹசாரிபாக் மார்க்கம் வணிகவியல் கல்லூரி, ஹசாரிபாக் செயின்ட் சேவியர் கல்லூரி, ராஞ்சி கட்ராஸ் கல்லூரி, கட்ராஸ், தன்பாத் மார்வாரி கல்லூரி, ராஞ்சி டோராண்டா கல்லூரி, ராஞ்சி கோஸ்னர் கல்லூரி, ராஞ்சி கோஸ்னர் இறையியல் கல்லூரி, ராஞ்சி ஜே.என் கல்லூரி, துருவா (ராஞ்சி) மார்வாரி கல்லூரி, ராஞ்சி மௌலானா ஆசாத் கல்லூரி, ராஞ்சி நிர்மலா கல்லூரி, ராஞ்சி ராஞ்சி மகளிர் கல்லூரி, ராஞ்சி புனித பால்சு கல்லூரி, ராஞ்சி, ராஞ்சி மதுபூர் கல்லூரி, ஜார்க்கண்ட் சஞ்சய் காந்தி நினைவு கல்லூரி, ராஞ்சி சூரஜ் சிங் நினைவு கல்லூரி, ராஞ்சி இராம் இலக்கன் சிங் யாதவ் கல்லூரி ராஞ்சி லயோலா கல்வியியல் கல்லூரி, ஜாம்ஷெட்பூர் ஏபிஎம் கல்லூரி, ஜாம்ஷெட்பூர் பெண்களுக்கான பட்டதாரி பள்ளி கல்லூரி, ஜாம்ஷெட்பூர் ஜாம்ஷெட்பூர் கூட்டுறவு கல்லூரி ஜாம்ஷெட்பூர் மகளிர் கல்லூரி ஜாம்ஷெட்பூர் தொழிலாளர் கல்லூரி, நிறு. 1959 ஜே. கே. எசு. கல்லூரி, ஜாம்ஷெட்பூர் கரீம் சிட்டி கல்லூரி, ஜாம்ஷெட்பூர் (இரண்டு வளாகங்கள்) லால் பகதூர் சாஸ்திரி நினைவு கல்லூரி, ஜாம்ஷெட்பூர் ராஜா சிவ பிரசாத் கல்லூரி, ஜாரியா, estb. 1949 இல் ஜாரியாவின் ராஜாவால் எசு எசு எல் என் டி மகளிர் கல்லூரி, தன்பாத் குருநானக் கல்லூரி, தன்பாத் போலராம் சிபல் கார்கியா கல்லூரி, மைத்தான் (தன்பாத்) பி.கே.ராய் நினைவு கல்லூரி, தன்பாத் கே.எஸ்.ஜி.எம். கல்லூரி நிர்சா, தன்பாத் புனித சேவியர் கல்லூரி, தும்கா பொகாரோ இரும்பு நகர கல்லூரி கிரிஸ்லி கல்வியியல் கல்லூரி, ஜும்ரி-திலையா ஸ்ரீ ராம் கிருஷ்ணா மகிளா கல்லூரி, கிரிடிஹ் கிரிதி கல்லூரி அம்தாரா கல்லூரி சாஹேப்கஞ்ச் கல்லூரி கோடா கல்லூரி தியோகர் கல்லூரி ஏ. எசு. கல்லூரி, தியோகர் பைத்யநாத் கமல் குமாரி சமசுகிருத கல்லூரி ரமா தேவி பஜ்லா மகிளா மகாவித்யாலயா, தியோகர் டாட்டா கல்லூரி, சாய்பாசா சிம்தேகா கல்லூரி செயின்ட் சேவியர் கல்லூரி, சிம்டேகா ஜிசி ஜெயின் வணிகக் கல்லூரி கார்த்திக் ஓரான் கல்லூரி, கும்லா கணேஷ் லால் அகர்வால் கல்லூரி, டால்டோங்கஞ்ச் யோத் சிங் நாம்தாரி மகிளா மகாவித்யாலயா சுக்தேயோ சகாய் மாதேஷ்வர் சஹாய் பட்டக் கல்லூரி, தர்காசி பொறியியல் கல்லூரிகள் கே. கே. பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, கோபிந்த்பூர் பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், தியோகர் ஆர். வி. எசு. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஜம்சேத்பூர் குரு கோவிந்த் சிங் கல்விச் சங்கத்தின் தொழில்நுட்ப வளாகம், காந்த்ரா (பொகாரோ) தும்கா பொறியியல் கல்லூரி ராம்கர் பொறியியல் கல்லூரி சாய்பாசா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஹசாரிபாக் பி. ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஜாம்ஷெட்பூர் கேம்பிரிட்ஜ் தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி வித்யா நினைவு தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி ராம் தஹல் சவுத்ரி தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி டிஏவி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், மேதினிநகர் நிலாய் குழும நிறுவனங்கள் மேரிலாண்ட் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனம், ஜாம்ஷெட்பூர் பொகாரோ தொழில்நுட்ப நிறுவனம் சட்டக் கல்லூரிகள் பீஷ்ம நரேன் சிங் சட்டக் கல்லூரி, பாலமு சோட்டாநாக்பூர் சட்டக் கல்லூரி, ராஞ்சி இமாம்-உல்-ஹக் கான் சட்டக் கல்லூரி, பொகாரோ ஸ்டீல் சிட்டி ஜார்கண்ட் கூட்டுறவு சட்டக் கல்லூரி ஜார்கண்ட் விதி மகாவித்யாலயா, கோடெர்மா சட்டக் கல்லூரி தன்பாத் ராதா கோவிந்த் சட்டக் கல்லூரி, ராம்கர் மேலாண்மை ஜிடி பகாரியா மேலாண்மை நிறுவனம், கிரிதிஹ் இந்திய நிலக்கரி மேலாண்மை நிறுவனம், ராஞ்சி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், ராஞ்சி அறிவியல் மற்றும் மேலாண்மை நிறுவனம், ராஞ்சி கெஜ்ரிவால் மேலாண்மை நிறுவனம், ராஞ்சி வணிகவியல் & மேலாண்மைத் துறை, நேதாஜி சுபாஸ் பல்கலைக்கழகம், ஜாம்ஷெட்பூர் மருத்துவக் கல்லூரிகள் செவிலியர் நர்சிங் பள்ளி (பொகாரோ பொது மருத்துவமனை) நர்சிங் பள்ளி (டாடா முதன்மை மருத்துவமனை), ஜாம்ஷெட்பூர் செவிலியர் கல்லூரி, ரிம்ஸ், ராஞ்சி நர்சிங் கல்லூரி (மத்திய மருத்துவமனை), தன்பாத் தன்பாத் செவிலியர் கல்லூரி (அஸ்ரஃபி மருத்துவமனை) புளோரன்ஸ் செவிலியர் கல்லூரி, இர்பா (ராஞ்சி) பாராமெடிக்கல் துறை, நேதாஜி சுபாஸ் பல்கலைக்கழகம், ஜாம்ஷெட்பூர் பழங்குடியினர் நர்சிங் கல்லூரி, நமக்கும் (ராஞ்சி) மெட்டாஸ் அட்வென்டிஸ்ட் கல்லூரி (செவன்த்-டே அட்வென்டிஸ்ட் மருத்துவமனை), ராஞ்சி செயின்ட் பர்னபாஸ் மருத்துவமனை செவிலியர் கல்லூரி, ராஞ்சி மகாதேவி பிர்லா செவிலியர் நிறுவனம், மஹிலாங் (ராஞ்சி) பாலிடெக்னிக் & சிறுகுறு கல்வி நிறுவனங்கள் அல் கபீர் பல்தொழில்நுட்ப நிறுவனம், ஜாம்ஷெட்பூர் பாலிடெக்னிக் துறை, நேதாஜி சுபாஸ் பல்கலைக்கழகம், ஜாம்ஷெட்பூர் அரசு பெண்கள் பாலிடெக்னிக், பொகாரோ அரசு பெண்கள் பல்தொழில்நுட்ப நிறுவனம், கம்ஹாரியா அரசு பாலிடெக்னிக், குத்ரி, பொகாரோ அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம், தன்பாத் அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம், நிர்சா அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம், பாகா (முந்தைய சுரங்க நிறுவனம் பாகா), நிறு. 1905. மதுபூர் பல்தொழில்நுட்ப நிறுவனம், கல்லூரி அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம், ஆதித்யபூர் அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம், கர்சவான் கண்டோலி தொழில்நுட்ப நிறுவனம், கிரிடிஹ் பெமியா ரிஷிகேசு தொழில்நுட்ப நிறுவனம் வித்யா நினைவு தொழில்நுட்ப நிறுவனம் சேவியர் பல்தொழில்நுட்ப நிறுவ்னம், நம்கும் சுபாஷ் தொழில்நுட்ப நிறுவனம், கிரிதிஹ் கும்லா பல்தொழில்நுட்ப கல்லூரி சந்தில் பல்தொழில்நுட்ப பள்ளி சில்லி பல்தொழில்நுட்ப நிறுவனம் பாகூர் பல்தொழில்நுட்ப நிறுவனம் ராம்கோவிந்த் தொழில்நுட்ப நிறுவனம், கோடெர்மா இந்தோ-டானிஷ் கருவி அறை, ஜாம்ஷெட்பூர் ஜார்கண்ட் எம். எசு. எம். ஈ. கருவி அறை, தடிசில்வாய் (ராஞ்சி) அரசு கருவி அறை மற்றும் பயிற்சி மையம், தும்கா பானோ மாதிரி பட்டக் கல்லூரி, பானோ அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம், ஜாம்ஷெட்பூர் பெண்களுக்கான அரசாங்க தொழில்துறை பயிற்சி மையம் ஜமேஷத்பூர் ஆர். டி. டாட்டா தொழில்நுட்ப கல்வி மையம், ஜம்சேத்பூர் டாட்டா எக்கு தொழில்நுட்ப நிறுவனம், ஜம்சேத்பூர் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சி மையம், ராஞ்சி - கிழக்கு பிராந்தியத்திற்கான இவேஆக ஆராய்ச்சி வளாகம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ராஞ்சி வளாகம்) இந்திய வேளாண் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி இந்திய இயற்கை பிசின்கள், பசைகள் ஆய்வுக் கழகம் தேசிய உலோகவியல் ஆய்வகம், 38 அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் ஆய்வகங்களில் ஒன்றாகும். சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம், தன்பாத் டாக்டர் ராம் தயாள் முண்டா பழங்குடியினர் நல ஆராய்ச்சி நிறுவனம், ராஞ்சி மத்திய நெகிழி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி பீகார் சுரங் ஆய்வு நிறுவனம், ராஞ்சி மேலும் பார்க்கவும் இந்தியாவில் கல்வி மேற்கோள்கள் ஜார்க்கண்ட் தொடர்புடைய பட்டியல்கள்
593560
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
கேரள பொன்முதுகு மரங்கொத்தி
கேரள பொன்முதுகு மரங்கொத்தி (அறிவியல் பெயர்: Dinopium benghalense tehminae) என்பது பொன்முதுகு மரங்கொத்தியின் துணையினம் ஆகும். இந்த துணையினத்திற்கு சாலிம் அலியின் மனைவியின் பெயர் இடப்பட்டது. இப்பறவை கேரளத்திலும், கருநாடகத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. விளக்கம் கேரள பொன்முதுகு மரங்கொத்தியானது தோற்றத்திலும் அளவிலும் பெரும்பாலும் தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தியை ஒத்ததாக இருக்கும். இதன் முதுகு ஆலிவ் கலந்த பொன் மஞ்சளாக இருக்கும். முன்னதன் முதுகு ஆரஞ்சு தோய்ந்த பொன் மஞ்சளாக இருக்கும். பழக்க வழக்கங்கள், இனப்பெருக்கம் போன்றவை தென்னிந்தியப் பொன்முதுகு மரங்கொத்தியைப் போன்றே இருக்கும். மேற்கோள்கள் மரங்கொத்திகள் தென்னிந்தியப் பறவைகள்
593562
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88
மருத்துவமனை பிரசவ அடிப்படையில் இந்திய மாநிலங்கள் தரவரிசை
மருத்துவமனை பிரசவ அடிப்படையில் இந்திய மாநிலங்கள் தரவரிசை (Indian states ranking by institutional delivery) என்பது மருத்துவமனையில் பிரசவிக்கும் குழந்தைகளின் சதவீத அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட இந்திய மாநிலங்களின் பட்டியல். இந்தத் தகவல் 2015-16 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பிலிருந்து சேகரிக்கப்பட்டது. இச்சேவைக் கேரளாவில் அதிகமாகவும் (99.8%) நாகாலாந்தில் (32.8%) மிகக் குறைவாகவும் உள்ளது. பட்டியல் மேற்கோள்கள் மருத்துவம்
593563
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81
வடக்கு வல்லூறு
வடக்கு வல்லூறு என்பது இரண்டு சிற்றினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெரிய வல்லூறு, அசிபிட்டர் ஜெண்டிலிசு அமெரிக்கவல்லூறு, அசிபிட்டர் அட்ரிகாபில்சு
593565
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கமலாசாகர் சட்டமன்றத் தொகுதி
கமலாசாகர் சட்டமன்றத் தொகுதி (Kamalasagar Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதி மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2023 2018 மேலும் பார்க்கவும் மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி மேற்கோள்கள் மேற்கு திரிப்புரா மாவட்டம்
593566
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
ஓசுமியம் ஆக்டாபுளோரைடு
ஓசுமியம் ஆக்டாபுளோரைடு (Osmium octafluoride) என்பது OsF8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. சில சான்றுகள் ஓசுமியம் ஆக்டாபுளோரைடை கருத்தியலான சேர்மமாகவே கருதுகின்றன. OsF8 தயாரிப்பின் ஆரம்ப கால அறிக்கையானது விளைபொருளானது OsF6 இன் தவறான அடையாளமாகக் காட்டப்பட்டது. கோட்பாட்டு பகுப்பாய்வு முடிவு ஓசுமியம் ஆக்டாபுளோரைடு தோராயமாக சதுர தளம் கொண்ட எதிர்ப்பட்டக மூலக்கூறு வடிவவியலைக் கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறது. தயாரிப்பு ஓசுமியத்தையும் புளோரினையும் சேர்த்து வேகமாக குளிரூட்டப்பட்டால் ஓசுமியம் ஆக்டாபுளோரைடு உருவாகும்.: மேற்கோள்கள் ஓசுமியம் சேர்மங்கள் புளோரைடுகள் உலோக ஆலைடுகள் கோட்பாட்டு வேதியியல் கருத்தியலான வேதிச் சேர்மங்கள்
593567
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
ஓசுமியம் எழுபுளோரைடு
ஓசுமியம் எழுபுளோரைடு (Osmium heptafluoride) என்பது OsF7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ஓசுமியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. முதன்முதலில் 1966 ஆம் ஆண்டில் 600 ° செல்சியசு வெப்பநிலையில் 400 வளிமண்டல் அழுத்தத்திக்ல் புளோரின் மற்றும் ஓசுமியம் ஆகியவை வினைபுரிந்ததால் ஓசுமியம் எழுபுளோரைடு உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளால் இந்த சேர்மத்தை மீண்டும் உருவாக்க முடியவில்லை. இயற்பியல் பண்புகள் ஓசுமியம்(VII) புளோரைடு நீல-மஞ்சள் நிறத்தில் நீருறிஞ்சும் பொருளாக உருவாகிறது. மிகவும் நிலைப்புத்தன்மையற்று காணப்படுகிறது. -100 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையத் தொடங்குகிறது. திரவ நைட்ரசனின் வெப்பநிலையில் ஒரு நிக்கல் பாத்திரத்தில் இதை சேமிக்க வேண்டும். வேதிப்பண்புகள் ஓசுமியம் எழுபுளோரைடை சிறிதளவு சூடாக்கினால் சிதைவடைந்து ஓசுமியம் அறுபுளோரைடாக மாறுகிறது. மேற்கோள்கள் ஓசுமியம் சேர்மங்கள் புளோரைடுகள் உலோக ஆலைடுகள் கருத்தியலான வேதிச் சேர்மங்கள் கனிம வேதியியல் சேர்மங்கள்
593568
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
சுமித்ரா சரத் ராம்
சுமித்ரா சரத் ராம் (Sumitra Charat Ram) 17 நவம்பர் 1914 - 8 ஆகஸ்ட் 2011) ஒரு குறிப்பிடத்தக்க இந்திய கலை புரவலரும், புது தில்லியில் 1952 இல் நிறுவப்பட்ட ஸ்ரீராம் பாரதிய கலா கேந்திராாவின் நிறுவனரும் ஆவார். சுதந்திரத்திற்குப் பிந்தைய சகாப்தத்தில் கலைநிகழ்ச்சிகள், குறிப்பாக கதக் ஆகியவற்றின் மறுமலர்ச்சியில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இதற்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இவர் டிசிஎம் ஸ்ரீராம் குழுமத்தின் தொழிலதிபர் லாலா சரத் ராமின் மனைவியாவார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி 1917 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் ராஜா ஜ்வாலா பிரசாத் மற்றும் ராணி பாக்யவதி ஆகியோருக்கு ஐக்கிய மாகாணங்களில் உள்ள மீரட்டில் பிறந்தார். (தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ளது). இவரது தந்தை ஐக்கிய மாகாணத்தின் கால்வாய்கள் மற்றும் நீர்ப்பாசனத்தின் தலைமைப் பொறியாளர் ஆவார். இவர் தனது ஐந்து உடன்பிறப்புகளில் இளையவர். இவரது மூத்த சகோதரர் தர்ம வீரா (1906-2000) ICS (1906-2000) இல் சேர்ந்தார். மேலும், இந்திய அரசாங்கத்தின் கேபினட் செயலாளராகவும், பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகாவின் ஆளுநராகவும் இருந்தார். லாலா ஸ்ரீராமின் மகன் லாலா சரத் ராமுடனான திருமணத்திற்குப் பிறகு, இவர் படிப்படியாக கலைகளின் புரவலராக மாறினார். 1947 இல், ரவிசங்கரின் ஆலோசனையின் பேரில், தனது மாமனாரிடம் இருந்து ரூ.10,000-த்தை கடனாகப் பெற்று தில்லியில் ஜாங்கர் குழுவைத் தொடங்கினார். இந்தியாவின் சுதந்திரத்தின் தொடக்கத்தில், சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டன. இது ஏராளமான இசைக்கலைஞர்களையும் நடனக் கலைஞர்களையும் ஆதரவில்லா நிலைமைக்கு இட்டுச் சென்றது. இவர் ஜாங்கர் இசைக் கச்சேரிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அக்கால முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஆதரவை வழங்கினார். இதில் சித்தேஸ்வரி தேவி, ரவிசங்கர், அபீஸ் அலிகான், பாபா அல்லாவுதீன் கான், ஷம்பு மகாராஜ், சுந்தர் பிரசாத், பிர்ஜு மகராஜ், துர்கா லால் மற்றும் அமினுதீன் தாகர் ஆகியோர் அடங்குவர். இவர் 1952 ஆம் ஆண்டில் ஸ்ரீராம் பாரதிய கலா கேந்திரா என்ற கலை மற்றும் இசைப் பள்ளியை நிறுவினார். அந்த நேரத்தில் குறிப்பிடப்பட்ட குருக்கள் ஆசிரியர்களாக இருந்தனர், இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் இந்திய பாடகர் நைனா ரிப்ஜித் சிங் என்றும் அழைக்கப்பட்ட நைனா தேவி அதன் இயக்குநராக செயல்பட்டார். 1950கள் முழுவதும், இந்த மையம், அந்தக் காலத்தின் சிறந்த நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு, குறிப்பாக கதக் கரானாக்களின் முன்னணி குருக்களுக்கு ஒரு மையப் புள்ளியாக இருந்தது. மேலும் தில்லி கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் புதிய படைப்புகளின் மையமாகவும் மாறியது. தேசிய கதக் நடன நிறுவனம் அல்லது கதக் கேந்திரா முதலில் 1955 இல் ஸ்ரீராம் பாரதிய கலா கேந்திராவின் கதக் பிரிவாக நிறுவப்பட்டது. பின்னர் 1964 இல் இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாடமியான சங்கீத் நாடக அகாடமியால் கையகப்படுத்தப்பட்டது பிப்ரவரி 2011 இல், ஸ்ரீ ராம் பாரதிய கலா கேந்திராவால் நிறுவப்பட்ட முதல் 'வாழ்நாள் சாதனைக்கான சுமித்ரா சரத் ராம் விருது' பண்டிட் பிர்ஜு மகாராஜுக்கு வழங்கப்பட்டது. விருதுகள் கலைக்கான இவரது பங்களிப்புகளுக்காக, 1966 இல், இந்திய அரசாங்கத்தால் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதுகளான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. உசாத்துணை சான்றுகள் வெளி இணைப்புகள் Shriram Bharatiya Kala Kendra, Official website Shri Ram Centre for Performing Arts, website பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் 2011 இறப்புகள் 1914 பிறப்புகள்
593569
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE
யசோதா வர்மா
யசோதா நிலாம்பர் வர்மா (Yashoda Nilamber Verma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சத்தீசுகர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான யசோதா இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். அரசியல் வாழ்க்கை தேவ்வ்ரத் சிங்கின் மரணத்திற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, யசோதா இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். பதிவான மொத்த வாக்குகள் 1,65,407 வாக்குகள் ஆகும். இவ்வாக்குகளில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் கோமல் இயாங்கேல் 67524; காங்கிரசு வேட்பாளர் யசோதா வர்மா 87,690; சத்தீசுகர் சனதா காங்கிரசு வேட்பாளர் நரேந்திர சோனி 1,218 வாக்குகள் பெற்ற்னர். மேலும் 2,480 பேர் நோட்டாவை அழுத்தியிருந்தனர். தனிப்பட்ட வாழ்க்கை யசோதா 1986 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் கைராகர்-சூய்காடன்-கண்டாய் மாவட்டத்தின் கைராகர் தாலுகாவில் உள்ள தேவரிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1986 பிறப்புகள் இந்திய அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் சத்தீசுகர் நபர்கள் சத்தீசுகர் அரசியல்வாதிகள்
593574
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
விண்மீன் எழுச்சி
சூரிய எழுச்சி (heliacal rising) (]] ) அல்லது விண்மீன் எழுச்சி, விண்மீன்களில், ஆண்டுதோறும் நிகழ்கிறது அல்லது சூரிய எழுச்சிக்கு சற்று முன்பு விடியற்காலையில் கிழக்கு அடிவானத்திற்கு மேலே காணக்கூடியபோது (ஒரு வெள்ளிக் கோளொத்த) விண்மீன் எழுச்சி நிகழ்கிறது (இது சூரியனைச் சுற்றி புவியின் முழுமையான வட்டணைக்குப் பிறகு காலை விண்மீனாக மாறுகிறது). வரலாற்றியலாக மிக முதன்மையான அத்தகைய எழுச்சி சிரியசு விண்மீன் எழுச்சி ஆகும். இது எகிப்திய நாட்காட்டி, வானியல் வளர்ச்சியின் முதன்மைக் கூறாகும். கார்த்திகை விண்மீன் எழுச்சி பண்டைய கிரேக்க பாய்மரக்கலப் பயணத்தின் தொடக்கத்தையும் வேளாண்மைப் பருவத்தையும் வான(விண்மீன்) வழிகாட்டுதலைப் பயன்படுத்தி அறிவித்தது. (ஹெசியடு காப்பியம் தனது பணிகளிலும் நாட்களிலும் இதை உறுதிப்படுத்தியது). விண்மீன் எழுச்சி என்பது பல வகையான வான்பொருள் எழுச்சிகளிலும் அமைப்புகளிலும் ஒன்றாகும். பெரும்பாலும் அவை காலை அல்லது மாலை எழுச்சிகளாக அமைகின்றன. இவை வான்பொருட்களின் தொகுதி அட்டவணைகளிலும் தொகுக்கப்பட்டுள்ளன. மாலையிலும் பின்னர் காலையிலும் நிறைவடைதல் ஓர் அரை ஆண்டில் ஒதுக்கப்ப்பட, மறுபுறம் மாலையிலும் பின்னர் காலையிலுமான எழுச்சிகளும் அமைப்புகளும் நிலநடுவரைக்கு மட்டுமே உரிய அரை ஆண்டில் ஒதுக்கப்படுகின்றன. காரணமும் சிறப்பும் சூரியனைச் சுற்றிய புவியின் சுழற்சி ஏற்பாட்டால் சுமார் 365 நாட்கள் எடுக்கும் ஒரு முழுமையான சுழற்சியில் 360 பாகை இருப்பதால் , சூரிய நிலநடுக்கோட்டுத் தடவழியில் ஒரு நாளைக்கு ஒரு பாகை வரை சூரியன் கிழக்கு நோக்கி நகர்வதாகத் தோன்றுகிறது. நிலநடுக்கோட்டுப் பட்டையில் உள்ள எந்த தொலைதூர நட்சத்திரமும் இரவில் ஆண்டின் பாதியில் மட்டுமே தெரியும் , அது எப்போதும் அடிவானத்திற்கு கீழே இருக்கும். ஆண்டின் மற்ற பாதியில் இது அடிவானத்திற்கு மேலே இருப்பதாகத் தோன்றும் , ஆனால் பகலில் சூரிய ஒளி மிகவும் பொலிவாக இருப்பதால் தெரியவில்லை. விடியற்காலையில் கிழக்கு அடிவானத்தில் விண்மீன் தோன்றும். புவி அதன் சுற்றுப்பாதையில் ஒரு புள்ளிக்கு நகரும் போது விண்மீனெழுச்சி ஏற்படும். சூரிய ஒளி மறைவுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் விண்மீன் சற்று முன்னதாகவே எழும்ம் , மேலும் எழும் சூரியனின் ஒளி அதை மூழ்கடிப்பதற்கு முன்பு நீண்ட நேரம் தெரியும். அடுத்த நாட்களில் இந்த விண்மீன் மேலும் மேலும் மேற்கு நோக்கி நகரும் (சூரியனை விட ஒரு நாளைக்கு சுமார் ஒரு பாகை), இது ஏற்கனவே மேற்கு அடிவானத்திற்கு கீழே அமைந்திருப்பதால் சூரிய எழுச்சியின் போது வானத்தில் தெரிவதில்லை. இது அண்டமுறை மறைவு என்று அழைக்கப்படுகிறது. அதே விண்மீன் அதன் முந்தைய எழுச்சிக்குப் பிறகு சுமார் ஒரு வருடம் கழித்து விடியற்காலையில் கிழக்கு வானத்தில் மீண்டும் தோன்றும். வானத் தளத்துக்கு நெருங்கிய விண்மீன்களுக்கு சூரியனுக்கும் விண்மீன் ஆண்டுகளுக்கும் இடையேயாச்சுத் தலைடாட்டத்தால் உள்ள சிறிய வேறுபாடு காரணமாக அவற்றின் சூரிய ஒளி உயர்வினால் ஒரு விண்மீன் ஆண்டு (சுமார் 365.2564 நாட்கள்) மீண்டும் நிகழும். வானத் தளத்துக்கு மிக விலகிய விண்மீன்களுக்கு காலம் சற்றே வேறுபட்டும் மெதுவாகவும் மாறுபடும் , ஆனால் எப்படியிருந்தாலும் , விண்மீன் எழுச்சி சமப் பகலிரவுப் புள்ளிகளின் தலையாட்ட நகர்வு காரணமாக சுமார் 26,000 ஆண்டுகளில் ஓரை வழியாக சூரிய எழுச்சி நகரும். சூரியனின் எழுச்சி பொருளின் நோக்கீட்டைப் பொறுத்தது என்பதால் , அதன் சரியான நேரம் வானிலை நிலைமைகளைப் பொறுத்தமையும். விண்மீன் நிகழ்வுகளும் வரலாறு முழுவதும் அவற்றின் பயன்பாடும் அவற்றை தொல்வானியல் சார்ந்த குறிப்புகளில் பயனுள்ள புள்ளிகளாக மாற்றியுள்ளன. முனைவட்ட விண்மீன்களுக்கு பொருந்தாதது சில விண்மீன்ள் நிலநடுகோட்டுக்கு அப்பாலான அகலாங்குகளிலிருந்து பார்க்கும்போது அவை எழுவ்தோ அல்லது மறைவதோ இல்லை. இவை எப்போதும் வானத்தில் இருக்கும் அல்லது ஒருபோதும் இல்லாமல் போகும். எடுத்துக்காட்டாக , வட விண்மீன் ஆத்திரேலியாவில் தெரிவதே இல்லை, தென்குறுக்கு ஐரோப்பாவிலும் காணப்படுவதில்லை , ஏனெனில் அவை எப்போதும் அந்தந்த எல்லைக்குக் கீழே இருக்கும். முனைவட்ட என்ற சொல் வடக்கிறுதி கடப்புக்கும் நிலநடு கோட்டுக்கும் இடையில் ஓரளவு நிலவும் களமாகும். தெற்கு முனை விண்மீன் குழுக்களின் ஆண்டுதோறுமான காட்சி குறுகிய காலமுறையைக்(அதாவது விண்மீன் எழுச்சி, அண்டமுறை மறைவைக்) கொண்டுள்ளன. எதிர் இயக்கநிலையில், வெப்ப மண்டலத்தைப் பொறுத்தவரை மற்ற முனைய விண்மீன் குழுகளுக்கும் இது பொருந்தும். வரலாறு. எழும்பும், மறையும் நிகழ்வுகளைக் கொண்ட விண்மீன்கள் தொடக்க கால நாட்காட்டிகளில் அல்லது ஓரைகளில் காட்டப்பட்டன. சுமேரியர்கள், பாபிலோனியர்கள் எகிப்தியர்கள், கிரேக்கர்கள் அனைவரும் வேளாண்மை நடவடிக்கைகளின் நேரத்திற்காக பல்வேறு விண்மீன்களின் எழுச்சிகளைப் பயன்படுத்தினர். பண்டைய எகிப்தில் பிரகாசமான நட்சத்திரமான சிரியசின் எழுச்சி , மறைவு ஏற்படுவதற்கு சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததால் , சரியாக ஒரு விண்மீன் ஆண்டில் ஏற்படவில்லை , ஆனால் " சோதிக் ஆண்டு " என்று அழைக்கப்படும் ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்தது. நாகரிகத்தின் வளர்ச்சியிலிருந்து இது கெய்ரோவில் ஜூலியன் நாட்காட்டியில் தோராயமாக ஜூலை 19 அன்று நிகழ்ந்துள்ளது. குறைந்த - ஆல்பா 1 அதன் வருகை நைல் ஆற்றின் ஆண்டுதோறும் நிகழும் வெள்ளத்தின் தொடக்கத்துடன் தோராயமாக ஒத்திருந்தது , இருப்பினும் வெள்ளம் வெப்பமண்டல ஆண்டை அடிப்படையாகக் கொண்டது , எனவே ஜூலியன் அல்லது சோதிக் ஆண்டில் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு நாளின் முக்கால்வாசி முன்னதாக ஏற்படும். (ஜூலியன் நாட்காட்டியில் கிமு 1000 ஜூலை 19) கிரிகோரியன் நாட்காட்டியில் ஜூலை 10 ஆகும். அந்த நேரத்தில் சூரியன் லியோவில் உள்ள ரெகுலஸுக்கு அருகில் எங்காவது இருக்கும் , அங்கு அது 2020 களில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இருக்கும்.) பண்டைய எகிப்தியர்கள் தங்கள் 365 நாள் பொது நாட்காட்டியை வெப் ரென்பெட் என்பவர் அதன் புத்தாண்டு சிரியசு இரவு வானத்திற்கு திரும்பிய நேரத்தில் உருவாக்கியதாகத் தெரிகிறது. இந்த நாட்காட்டியின் லீப் ஆண்டுகள் இல்லாததால் இந்த நிகழ்வு ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு நாள் மாற்றப்பட்டது. இந்த நாள் இடப்பெயர்ச்சி பற்றிய வானியல் பதிவுகள் சோதிக் சுழற்சியைக் கண்டுபிடிக்க வழிவகுத்தன. இது பின்னர் மிகவும் துல்லியமான ஜூலியன், அலெக்ஸாண்ட்ரிய நாட்காட்டிகளை நிறுவ உதவியது. எகிப்தியர்கள் 36 பதின்ம விண்மீன்களின் எழுச்சிகளின் அடிப்படையில் இரவில் நேரத்தைச் சொல்லும் ஒரு முறையையும் உருவாக்கினர் , இது இராசி வட்டத்தின் 360 பாகையில் ஒவ்வொரு 10 வது பிரிவுக்கும் ஒன்று வீதம் அதாவது அவர்களின் பொது நாட்காட்டியின் பத்து நாள் வாரத்துக்கு ஒத் துப்போவதாகும். நியூசிலாந்தின் மாவோரிக்கு கார்த்திகை விண்மீன் மாத்தாரிகி என்று அழைக்கப்படுகிறது. மேலும் அவர்களின் விண்மீன் எழுச்சி புதிய ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது (ஜூன் மாதத்தில்). தென் அமெரிக்காவின் மாப்புச்சே மக்கள் கார்த்திகை விண்மீனை நாகுபோனி என்று அழைக்கின்றனர் , இது வி டிரிபான்டுவின் (மாப்புச்சே புத்தாண்டு) அருகே மறைந்துவிடும் , இது இயற்கையில் புதிய வாழ்க்கை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கிழக்கில் விடியற்காலையில் தோன்றும். நாகுபோனியின் விண்மீன் எழுச்சியாக, அதாவது குளிர்கால வட கடப்புக்குச் சுமார் 12 நாட்களுக்கு முன்பு, சூரிய எழுச்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அடிவானத்தில் கார்த்திகை விண்மீன் தோன்றியது. ஒரு கோளில் சூரியன் எழும்போது சூரியனுக்கு முன்கூட்டியே இணைகிறது. இணைப்பின் வகையைப் பொறுத்து , சூரியனின் ஒரு சிஜிகி ,ஒளிமறைப்பு, கடப்பு அல்லது மறைதல் அமையலாம். காலமுறையும் அண்டமுறையும் சூரிய மறைவின் போது கிழக்கு அடிவானத்திற்கு மேலே ஒரு கோள் எழுவது அதன் காலமுறை எழுச்சி என்று அழைக்கப்படுகிறது , இது ஒரு பெருங்கோளுக்கு எதிர்ப்பைக் குறிக்கிறது - மற்றொரு வகை சிஜிகி. நிலாவின் காலமுறை எழுச்சியின்போது அது முழுநிலவின் போது ஆண்டில் இருமுறை அல்லது மும்முறை ஏற்படும். , இதனால் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை ஒரு குறிப்பிடத்தக்க நிலா மறைப்பு ஏற்படும். அண்டமுறை என்பது சூரிய எழுச்சியுடன் எழுவது அல்லது சூரிய மறைவுடன் மறைவது அல்லது காலை அந்தி நேரத்து முதல் மறைவைக் குறிக்கலாம். எழுச்சிகளும் மறைவுகளும் மேலும் தோற்றவகை (மேலே விவாதிக்கப்பட்டவை), உண்மைவகை என வேறுபடுகின்றன. கண்ணோட்டம் அண்டவியல் மற்றும் சுருக்கெழுத்து என்ற சொற்களின் பயன்பாடு சீராக இல்லை. பின்வரும் அட்டவணை எழுச்சி, மறைவு நிகழ்வுகளுக்கான சொற்களின் வெவ்வேறுவகைப் பயன்பாட்டை வழங்குகிறது. மேலும் காண்க கோடைக்கால நாய் நாட்கள் வழிநடத்தும் விண்மீன் குறிப்புகள் மேற்கோள்கள்   வானியலில் நேரம் உடுக்கண வானியல் காட்சிப்பதிவு வானியல் மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்
593575
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28III%29%20%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
ரோடியம்(III) சல்பேட்டு
ரோடியம்(III) சல்பேட்டு (Rhodium(III) sulfate) என்பது Rh2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரோடியம் மற்றும் கந்தகம் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இது சிவப்புநிற படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. தயாரிப்பு 1929 ஆம் ஆண்டு ரோடியம்(III) ஐதராக்சைடு மற்றும் கந்தக அமிலம் ஆகியவற்றை சேர்த்து வினை புரியச் செய்து ரோடியம்(III) சல்பேட்டை உற்பத்தி செய்வதற்கான முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மஞ்சள் நிறத்தில் டெட்ராடெக்காநீரேற்று ஒன்று மற்றும் சிவப்பு நிற டெட்ராநீரேற்று ஒன்று என இரண்டு வெவ்வேறு வகையான நீரேற்றுகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். கட்டமைப்பு ஆதாரம் இல்லாததால் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அறுநீரேற்று மற்றும் டெட்ராடெக்காநீரேற்று ஆகியவற்றின் மீது கூடுதலாக எக்சுகதிர் விளிம்பு விலகல் ஆட்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2009 ஆம் ஆண்டில் முதல் கட்டமைப்புத் தெளிவுபடுத்தல்கள் செய்யப்பட்டதன் மூலம் இச்சேர்மத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் 2016 ஆம் ஆண்டில் மிகவும் திறமையான உற்பத்தி முறை அறிவிக்கப்பட்டது. இந்த முறையில் ரோடியம் (III) சல்பேட்டை உருவாக்க ரோடியம் உலோகம் மற்றும் கந்தக அமிலம் பயன்படுத்தப்பட்டன. இரண்டு சேர்மங்களூம் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு 400 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்தப்பட்டால் நீரிலி வடிவம் உருவாகியது. இதே கல்வை 475 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்தப்பட்டால் இருநீரேற்று உருவானது. மேற்கோள்கள் ரோடியம்(III) சேர்மங்கள் சல்பேட்டுகள்
593579
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE%2018
உலூனா 18
உலூனா 18 (யே - 8 - 5 தொடர்) (Luna 18), part of the Ye-8-5 series)) என்பது லூனா திட்டத்தின் ஆளில்லா விண்வெளி பயணமாகும். கண்ணோட்டம் உலூனா 18 ஏவப்பட்ட பிறகு புவியின் தங்கல் வட்டணையில் வைக்கப்பட்டு பின்னர் நிலாவைநோக்கி அனுப்பப்பட்டது. 1971 செப்டம்பர் 7 அன்று இது நிலா வட்டணையில் நுழைந்தது. ஒடுக்க ஏவூர்திகளைப் பயன்படுத்தி நிலா மேற்பரப்பை நோக்கி அனுப்பப்படுவதற்கு முன்பு விண்கலம் 85 தகவல் தொடர்புகளையும் 54 நிலா வட்டணைகளையும் நிறைவு செய்தது. இது 1971 செப்டம்பர் 11 அன்று 3 பாகை 34 பாகைத்துளிகளில் 56 டிகிரி 30 நிமிடங்களில் நிலவை மொத்தியது. மொத்தும் தருணத்தில் குறிகைகள் நிறுத்தப்பட்டன. நிலாவின் மேற்பரப்பில் இருந்து மண் பதக்கூறுகளை மீட்டெடுப்பதற்கான ஏழாவது சோவியத் முயற்சியாகவும் உலூனா 16 இன் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாகவும் இந்த பணி அமைந்தது. 1971 செப்டம்பர் 4 மற்றும் 6 ஆம் தேதிகளில் இரண்டு நடுத்தர திருத்தங்களுக்குப் பிறகு , உலூனா 18 செப்டம்பர் 7 அன்று சந்திரனைச் சுற்றி 100 கிலோமீட்டர் உயரத்தில் 35 பாகை சாய்வுடன் ஒரு வட்ட வட்டணையில் நுழைந்தது. செப்டம்பர் 11 அன்று மேலும் பல வட்டணைத் திருத்தங்களுக்குப் பிறகு , விண்கலம் நிலா மேற்பரப்பில் இறங்கத் தொடங்கியது. நிலாவில் தரையிறங்கும் முன்னர் தீர்மானிக்கப்பட்ட இடத்தில் 07:48 மணிக்கு விண்கலத்துடனான தொடர்பு இழக்கப்பட்டது. மொத்தல் ஆயத்தொலைவுகள் 3′34 ' வடக்கு அகலாங்கு, 56′30 ' கிழக்கு நெட்டாங்கு ஆகியவை மேர் பெகுண்டிடாடிசு (வளமைக் கடல்) விளிம்பிற்கு அருகில் அமைந்தன. " சிக்கலான மலைப்பாங்கான சூழ்நிலையில் நிலாவில் தரையிறங்குவது சாதகமற்றது என்பதை நிறுவியது " என்று சோவியத் ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பின்னர் 1975 இல் சோவியத்து ஒன்றியம் உலூனா 18 இன் தொடர்ச்சியான அலை ரேடியோ உயர அளவீட்டிலிருந்து தரவை வெளியிட்டன , இது நிலா மேற்பரப்பு மண்ணின் சராசரி அடர்த்தியை தீர்மானித்தது. மேலும் காண்க நிலாவில் உள்ள செயற்கை பொருட்களின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஜாரியா - உலூனா திட்ட காலநிரல் நாசா என். எஸ். எஸ். டி. சி மாசுட்டர் அட்டவணை நிலாவுக்கான பயணத் திட்டங்கள் லூனா திட்டம் சோவியத் ஒன்றியம்
593581
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE%2019
உலூனா 19
உலூனா 19 (அ. கா. லூனிக் 19 ( ஈ - 8 - LS தொடர்) Luna 19 (a.k.a. Lunik 19) (E-8-LS series)) என்பது லூனா திட்டத்தின் ஆளில்லா விண்வெளி பயணமாகும். நிலா ஈர்ப்பு விசைகள், மாஸ்கான்களின் இருப்பிடம் பற்றிய முறையான ஆய்வை உலூனா 19 விரிவுபடுத்தியது. இது நிலாக் கதிர்வீச்சு, நிலாவின் சூழலில் நிலா மேற்பரப்பு காம்மாக்கதிர் தாக்கம், சூரியக் காற்று ஆகியவற்றையும் ஆய்வு செய்தது. ஒரு தொலைக்காட்சி அமைப்பு வழி புகைப்படங்களும் பெறப்பட்டன. கண்ணோட்டம் லூனா 19 என்பது மேம்பட்ட சந்திர சுற்றுப்பாதைகளில் முதல் , அதன் வடிவமைப்பு அடிப்படையாக கொண்டது இந்த ஆர்பிட்டர்களுக்கு யே - 8எல்எஸ் என்று பெயரிடப்பட்ட அடிப்படை லேண்டர் ஸ்டேஜ் ஒரு சக்கரமற்ற லூனோகோட் போன்ற சட்டகத்தால் முதலிடத்தில் இருந்தது , இது அனைத்து அறிவியல் கருவிகளையும் ஒரு அழுத்தப்பட்ட கொள்கலனில் வைத்திருந்தது. லூனா 19 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி பூமியின் வாகன நிறுத்த சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது , மேலும் இந்த சுற்றுப்பாதையில் இருந்து சந்திரனை நோக்கி அனுப்பப்பட்டது. லூனா 19 செப்டம்பர் 29 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் இரண்டு நடுத்தர திருத்தங்களுக்குப் பிறகு 1971 அக்டோபர் 2 அன்று சந்திரனைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையில் நுழைந்தது. ஆரம்ப சுற்றுப்பாதை அளவுருக்கள் 140 x 140 கிலோமீட்டர்கள் 40.58 ′ சாய்வில் இருந்தன. அதன்பிறகு , விண்கலம் அதன் முக்கிய இமேஜிங் பணியைத் தொடங்கியது - சந்திரனின் மலைப்பாங்கான பகுதியின் பரந்த படங்களை 30 மற்றும் 60 தெற்கு அட்சரேகைக்கும் 20 மற்றும் 80 கிழக்கு தீர்க்கரேகைக்கும் இடையில் வழங்கியது. சந்திர ஈர்ப்பு விசையின் வடிவம் மற்றும் வலிமை மற்றும் சின்னங்களின் இருப்பிடங்கள் குறித்த விரிவான ஆய்வுகள் பிற அறிவியல் சோதனைகளில் அடங்கும். 1972 மே மற்றும் ஜூன் மாதங்களில் நடந்த மறைபொருள் ஆய்வுகள் , 10 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள மின்னூட்டப்பட்ட துகள்களின் செறிவை விஞ்ஞானிகள் தீர்மானிக்க அனுமதித்தன. சூரியக் காற்று பற்றிய கூடுதல் ஆய்வுகள் செவ்வாய் 2 மற்றும் 3 சுற்றுப்பாதைகள் மற்றும் வெனெராஸ் 7 மற்றும் 8 ஆகியவற்றால் நிகழ்த்தப்பட்டவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டன. லூனா 19 உடனான தொடர்புகள் ஒரு வருட செயல்பாடு மற்றும் சந்திரனைச் சுற்றி 4,000 க்கும் மேற்பட்ட சுற்றுப்பாதைகளுக்குப் பிறகு 1 நவம்பர் 1972 அன்று இழக்கப்பட்டன. மேலும் காண்க செயற்கைக்கோள்கள், விண்வெளி ஆய்கலங்களின் காலநிரல் வெளி இணைப்புகள் NASA. gov Archived January 2021 at the Wayback Machine சூரியக் குடும்ப ஆய்வு மையம் (NASA) மேற்கோள்கள் லூனா திட்டம் சோவியத் ஒன் றியம் நிலாவுக்கான பயணத் திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்
593592
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D
தெபாகி போஸ்
தெபாகி போஸ் (Debaki Bose;1898-1971), தெபாக்கி குமார் போஸ் என்றும் அழைக்கப்படும் இவர் இந்திய இயக்குனரும், எழுத்தாளரும், நடிகரும் ஆவார். இவர் பாலிவுட் மற்றும் வங்காளத் திரைப்படங்களில் தனது பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டார். 1898 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்திலிருந்த வர்தமானிலுள்ள அகல்போஷ் என்ற இடத்தில் (இப்போது கிழக்கு வர்த்தமான்) பிறந்தார். இவர் இந்தியத் திரைப்படங்களில் ஒலி மற்றும் இசையின் புதுமையான பயன்பாட்டிற்காக அறியப்படுகிறார். முதலில் தீரன் கங்குலியின் பிரிட்டிஷ் டொமினியன் பிலிம்ஸ் பதாகையின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் பிரமாதேஷ் பருவாவின் பருவா பிக்சர்ஸ் உடன் பணியாற்றினார். இறுதியாக 1932 இல் நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர், 1945 இல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான தெபாகி புரொடக்சன்ஸைத் தொடங்கினார். ஆரம்ப கால வாழ்க்கை தெபாகி போஸ் வர்த்தமானில் ஒரு வழக்கறிஞரின் மகனாகப் பிறந்தார். வித்யாசாகர் கல்லூரியில் பட்டம் பெற்றார. ஒத்துழையாமை இயக்கத்திற்கான மகாத்மா காந்தியின் அழைப்பால் ஈர்க்கப்பட்ட இவர், பல்கலைக்கழத்திலிருந்து வெளியேறி, சொந்தமாக வாழத் தொடங்கினார். அவர் உள்ளூர் சந்தையில் துண்டுகள் விற்கும் ஒரு கடையைத் திறந்தார். மேலும் சக்தி என்ற உள்ளூர் வார இதழின் ஆசிரியராகவும் இருந்தார். கொல்கத்தாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரான தீரன் கங்குலியைச் சந்தித்தார். இவரது எழுத்துத் திறனைப் பற்றி அறிந்த கங்குலி, திரைப்பட வசனங்களை எழுத கொல்கத்தாவுக்கு அழைத்தார். இந்த முயற்சி பிரிட்டிஷ் டொமினியன் பிலிம்ஸ் தயாரித்த கமோனர் அகுன் (அல்லது ஃபிளேம்ஸ் ஆஃப் ஃப்ளெஷ் ) என்ற முதல் திரைப்படமாக உச்சக்கட்டத்தை அடைந்தது. இறப்பு 17 நவம்பர் 1971 அன்று இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தாவில் இறந்தார். சான்றுகள் வெளி இணைப்புகள் A page on Debaki Bose in abasar.net சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் வங்காள ஆண் நடிகர்கள் 1971 இறப்புகள் 1898 பிறப்புகள்
593595
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%29
சஞ்சய் குமார் (இராணுவ வீரர்)
சுபேதார் மேஜர் சஞ்சய் குமார் (Sanjay Kumar) பரம வீர சக்கரம் (பிறப்பு 3 மார்ச் 1976 ) இந்திய இராணுவ அதிகாரியும் இந்தியாவின் படைத்துறையில் வழங்கப்படும் மிக உயர்ந்த |இராணுவ விருதான பரம வீர சக்கரம் பெற்றவருமாவார். ஆரம்ப கால வாழ்க்கை சஞ்சய் குமார் இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கலோல் பக்கேன் கிராமத்தில் பிறந்தார். இராணுவத்தில் சேர்வதற்கு முன், தில்லியில் வாடகை வாகன ஓட்டுநராக பணிபுரிந்தார். இறுதியாக இராணுவத்தில் சேரத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் இவரது விண்ணப்பம் மூன்று முறை நிராகரிக்கப்பட்டது. இராணுவ வாழ்க்கை 4 ஜூலை, 1999 இல், 13வது பட்டாலியன், ஜம்மு &amp; காஷ்மீர் ரைபிள்ஸின் உறுப்பினராக, கார்கில் போரின் போது, ஏரியா பிளாட் முனையைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவின் முன்னணி வீராவார். அப்பகுதி பாக்கித்தான் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள எதிரியின் பதுங்கு குழியிலிருந்து இவர்கள் மீது இயந்திர துப்பாக்கியால் சுடப்பட்டது. விளைவுகளையும், பிரச்சனையின் அளவையும் உணர்ந்த குமார், தனியாக ஊர்ந்து சென்று, ஒரு எதிரி பதுங்கு குழியை நோக்கிச் சென்றார். எதிரிகள் இவரை நோக்கி சுட்டதில் இவரது மார்பிலும் முன்கையிலும் இரண்டு குண்டுகள் பாய்ந்து காயம் ஏற்பட்டது. காயங்களில் இருந்து ரத்தம் வழிந்தாலும், இவர் பதுங்கு குழியை நோக்கி தொடர்ந்து முன்னேறினார். சண்டையில், இவர் மூன்று எதிரி வீரர்களைக் கொன்றார். பின்னர் இவரது குழுவினர் அப்பகுதியை கைப்பற்றினர். பிப்ரவரி 2022 இல், இவர் சுபேதார் மேஜர் பதவியைப் பெற்றார். மேலும், புனேவுக்கு அருகிலுள்ள கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு கழகத்தில் பணியமர்த்தப்பட்டார். விருதுகள் இவரது தொழில் வாழ்க்கையின் போது, கார்கில் போரில் இவரது பங்கிற்காக இவருக்கு பரம வீர சக்கரம் ( சுதந்திர தினம் 1999) வழங்கப்பட்டது. சான்றுகள் குறிப்புகள் வாழும் நபர்கள் 1976 பிறப்புகள்
593597
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
ரவிசங்கர் ராவல்
ரவிசங்கர் ராவல் (Ravishankar Raval;1892-1977) இந்தியாவின் குசராத்தைச் சேர்ந்த ஒரு ஓவியரும், கலை ஆசிரியரும், கலை விமர்சகரும், பத்திரிகையாளரும், கட்டுரையாளரும் ஆவார் விசாமி சாதி என்ற பத்திரிகையில் 1921 இல் சேர்ந்த இவர் அது மூடப்படும் வரை பணியாற்றினார். பின்னர் குமார் என்ற கலாச்சார இதழை நிறுவினார். வாழ்க்கை ரவிசங்கர் ராவல், ஆகஸ்ட் 1, 1892 அன்று பவநகரில் (இப்போது இந்தியாவில் குசராத்தில் உள்ளது ) ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மகாசங்கர் ராவல் பிரித்தானிய தகவல் பணியில் அதிகாரியாக இருந்தார். இவரது தந்தையின் பணி மாறுதல் காரணமாக இவர் தனது குழந்தைப் பருவத்தை பல நகரங்களில் கழித்தார். தனது கலை உள்ளுணர்வை தனது தாயிடமிருந்து பெற்றதாக எழுதியுள்ளார். 1909 இல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். கல்லூரியில், கல்லூரி நாடக விழாவிற்கான மேடை சீலைகளை வரையத் தொடங்கினார். இவரது கலைத் திறமையால் மகிழ்ச்சியடைந்த இவரது பேராசிரியை சஞ்சனா கலைப் பள்ளியில் சேருமாறு அறிவுறுத்தினார். இவரது தந்தையின் ஒப்புதல் பெறாமல், இவர் மும்பையிலுள்ள சர் ஜேஜே கலைப் பள்ளியில் சேர்ந்து அப்பள்ளியின் முதல்வர் செசில் பர்ன்ஸ் என்பாரின் கீழ் பயிற்சி பெற்றார். இந்திய பாரம்பரிய ஓவிய மரபுகளால் ஈர்க்கப்பட்டு இவர் தனக்கென சொந்த பாணியை உருவாக்கினார். ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டார். தாகூரின் முறைசாரா திறந்த அரங்கங்களாலும் ஈர்க்கப்பட்டார். இறப்பு இவர் 9 டிசம்பர், 1977 அன்று அகமதாபாத்தில் உள்ள "சித்ரகூட்" என்ற தனது இல்லத்தில் இடத்தில் காலமானார். நூல் பட்டியல் குறிப்புகள் வெளி இணைப்புகள் Art World of Ravishankar Raval Bibliography at WorldCat பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் 1977 இறப்புகள் 1892 பிறப்புகள்
593601
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
திரிபுரா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
திரிபுரா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் (Liபகு of conபகுituencies of the Tripura Legislative Assembly) என்பது இந்திய மாநிலமான திரிபுராவின் சட்டமன்றத் தொகுதிகளின் தொகுப்பாகும். மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவில் சட்டமன்றம் அமைந்துள்ளது முன்னதாக கலைக்கப்படாவிட்டால், சட்டப் பேரவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது, ஒற்றை ஆசன தொகுதிகளிலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 உறுப்பினர்களைத் திரிபுரா சட்டமன்றம் கொண்டுள்ளது. வரலாறு தொகுதிகள் 2008ஆம் ஆண்டு சட்டமன்றத் தொகுதிகளின் மிக சமீபத்திய எல்லை நிர்ணயத்தின்படி திரிபுரா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு. மேற்கோள்கள் மேலும் பார்க்கவும் மாநிலச் சட்டப்பேரவை திரிபுரா சட்டமன்றம் திரிபுராவில் அரசியல்
593602
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
மலபார் பொன்முதுகு மூன்று விரல் மரங்கொத்தி
மலபார் பொன்முதுகு மூன்று விரல் மரங்கொத்தி (அறிவியல் பெயர்: Dinopium javanense malabaricum) என்பது மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தியின் துணையினம் ஆகும். இப்பறவை தென்னிந்தியாவின் மேற்குப் பகுதிகளில் கேரளத்திலும், கருநாடகத்திலும் காணப்படுகிறது. விளக்கம் மலபார் பொன்முதுகு மூன்று விரல் மரங்கொத்தியானது மைனாவை விடச் சற்றுப் பெரியதாக சுமார் 28 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு சிலேட் பழுப்பு நிறத்திலும், விழிப்படலம் சிவந்த பழுப்பு நிறத்திலும், கால்கள் சாம்பல் தோய்ந்த பச்சை நிறத்திலும் இருக்கும். பெண் பறவைகளின் உச்சந்தலையும் கொண்டையும் கறுப்பு நிறத்தில் இருக்கும். பொதுவாக பொன்முதுகு மரங்கொத்தியை ஒத்த தோற்றம் கொண்ட மலபார் பொன்முதுகு மூன்று விரல் மரங்கொத்தியின் முதுகின் பொன்மஞ்சள் நிறத்தில் ஆழ்ந்த சிவப்புத் தோய்ந்திருக்கக் காணலாம். இதன் கீழ்முதுகும் பிட்டமும் ஆழ்ந்த சிவப்பாக இருக்கும். ஆனால் பொன்முதுகு மரங்கொத்தியின் கீழ்முதுகும் பிட்டமும் கறுப்பாக வேறுபட்டு இருக்கும். இதன் பழக்கவழகங்களும் இனப்பெருக்கமும் பொன்முதுகு மரங்கொத்திக்கு உரியதைப் போலவே இருக்கும். மேற்கோள்கள் மரங்கொத்திகள் தென்னிந்தியப் பறவைகள்
593611
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
கனு தேசாய்
கனு தேசாய் (Kanu Desai) என்கிற கன்னையாயலால் குகுமத்ராய் தேசாய் (Kanhaiyalal Hukumatrai Desai), (12 மார்ச் 1907 - 9 டிசம்பர் 1980) ஒரு இந்திய கலைஞரும், கலை இயக்குனரும் ஆவார். இவர் மேடை அலங்கார கலைக்கு பங்களித்தார். திரைப்படங்களுக்கான படங்கள் வரைந்து கொடுத்தார். மேலும் மகாத்மா காந்தி எழுதிய பல புத்தகங்களுக்கு படங்களை வரைந்துள்ளார். வாழ்க்கை கனு தேசாய் 1907 இல் பம்பாய் மாகாணத்தில் உள்ள பச்சில் பிறந்தார். பின்னர் இவரது குடும்பம் அகமதாபாத்தில் உள்ள இவரது தாய் மாமன் வீட்டிற்கு மாற்றப்பட்டது. 1920 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் மகாத்மா காந்தி உரையாற்றிய இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் தொண்டாற்றினார். 1922 இல் கலையைக் கற்க ரவிசங்கர் ராவலிடம் சேர்ந்தார். 1925 ஆம் ஆண்டு குஜராத் வித்யாபீடத்தின் உதவித்தொகை மூலம் நந்தாலால் போஸின் கீழ் படிக்க சாந்திநிகேதனுக்கு அனுப்பப்பட்டார். அங்கு போஸ், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரால் ஈர்க்கப்பட்டார். 1930 இல், காந்தியுடன் தண்டி அணிவகுப்பில் இணைந்தார். அந்த நிகழ்வைப் பற்றிய பல ஓவியங்களை வரைந்தார். பின்னர் நிழற்படங்களை வரையத் தொடங்கினார். 1937 ஆம் ஆண்டில், ஹரிபுராவில் நடந்த காங்கிரசு மாநாட்டு மேடையை அலங்கரிக்க இவர் அழைக்கப்பட்டார். இவரது ஓவியங்கள் ஜீவன் மங்கள் மற்றும் நிருத்ய மஞ்சரி என்ற தலைப்புகளில் காதல் தொகுப்புகளாக வெளியிடப்பட்டன. புத்தகங்களின் அட்டைப் பக்கங்களை வடிவமைத்த பிறகு, மும்பையில் திரைப்படங்களுக்கான அரங்கங்களை வடிவமைக்கத் தொடங்கினார். ராம் ராஜ்ஜியம் (1945) என்ற திரைப்படத்திற்காக (1945) அரங்கங்களை உருவாக்கினார். பைஜு பாவ்ரா, நவ்ரங், பாரத் மிலாப், ஜனக் ஜனக் பாயல் பாஜே உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றினார். 1980 இல் இவர் இறந்தார் விருதுகள் இவர் 1938 இல் குஜராத்தி கலாச்சாரத்தின் மிக உயரிய ரஞ்சித்ராம் சுவர்ண சந்திரக் என்றா விருதைப் பெற்றார் 1957 இல் ஜனக் ஜனக் பாயல் பஜே'' படத்திற்காக இவருக்கு சிறந்த கலை இயக்கத்திற்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது. 1965 இல், குஜராத் மாநில லலித் கலா அகாடமியில் இருந்து குஜராத் கௌரவ் புரஸ்கார் பெற்றார். சான்றுகள் வெளி இணைப்புகள் Shrungarika (1945) Rang Lahari (1941) 1980 இறப்புகள் 1907 பிறப்புகள் கலைகளுடன் தொடர்புடையவர்கள்
593616
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
இலத்திகா பிரதான்
இலத்திகா பிரதான் (Latika Pradhan) ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பிஜு ஜனதா தளத்தின் உறுப்பினராக கபிசூரியாநகரில் இருந்து ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறப்பு மற்றும் வாழ்க்கை இலத்திகா பிரதான் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் நித்யானந்த பிரதான் ஆகும். இவரது கணவர் பெயர் சக்திபிரசாத் பிரதான். இலத்திகா முதலில் இளங்கலை அறிவியல் பட்டமும் பின்னர் சட்டத்துறையில் பட்டப்படிப்பும் பயின்றார். அரசியல் வாழ்க்கை இலத்திகா பிரதான் பிஜு ஜனதா கட்சியின் உறுப்பினராக ஒடிசா அரசியலில் தீவிரமாக உள்ளார். 2019 ஆம் ஆண்டு ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், கவிசூரியா நகர சட்டப் பேரவைத் தொகுதியில் பிஜு ஜனதா கட்சியின் வேட்பாளராக இலத்திகா போட்டியிட்டார். இவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று 16வது ஒடிசா சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ஆம் ஆண்டு முதல் இந்த சட்டப் பேரவையில் பணியாற்றி வருகிறார். குறிப்புகள் வாழும் நபர்கள் ஒடிசா அரசியல்வாதிகள்
593619
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
இந்திய வெள்ளை வயிற்று மரங்கொத்தி
இந்திய வெள்ளை வயிற்று மரங்கொத்தி அல்லது இந்தியப் பெரிய கருப்பு மரங்கொத்தி (அறிவியல் பெயர்: Dryocopus javensis hodgsonii) என்பது வெள்ளை வயிற்று மரங்கொத்தியின் துணையினம் ஆகும். விளக்கம் இந்திய வெள்ளை வயிற்று மரங்கொத்தியானது காக்கையைவிடப் பெரியதாக சுமார் 48 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு சிலேட் கறுப்பு நிறமாகவும், விழிப்படலம் மஞ்சள் தோய்ந்த வெண்மை நிறமாகவும், கால்கள் சாம்பல் சிலேட் நிறமாகவும் இருக்கும். ஆண் பறவையின் நெற்றி, உச்சி, கொண்டை, கன்னங்கள் ஆகியன நல்ல ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி வெண்பிட்டம் தவிர கறுப்பு நிறமாக இருக்கும். கீழ்ப்பகுதியான வயிறும் வாலடியும் வெண்மையாக இருக்கும். மற்ற பகுதிகள் கறுப்பாக இருக்கும். பெண் பறவையின் பிடரியில் மட்டும் ஆழ்ந்த சிவப்பு நிறம் காணப்படும். எஞ்சிய உடல் தோற்றம் ஆணைப்போலவே இருக்கும். பரவலும் வாழிடமும் இந்திய வெள்ளை வயிற்று மரங்கொத்தியானது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் முதன்மையாகக் காணப்படுகிறது. ஆனால் மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிலும் உள்ளதாக அறியப்படுகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த மழை மிகுந்த மூங்கிற் காடுகளிலும் ஏலக்காய் தோட்டங்களிலும் காணப்படுகின்றன. மலைகளில் சுமார் 1200 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன. நடத்தை இந்திய வெள்ளை வயிற்று மரங்கொத்தியானது இணையாகவோ, மூன்று நான்கு பறவைகள் சேர்ந்த ஒரு குடும்பமாகவோ திரியக் காணலாம். மரக்கிளைகளில் தனித்து இரை தேடும்போது ஒன்றுக்கொன்று குரல் கொடுத்தபடி தொடர்பு கொள்ளும். ஒன்றன் பின் ஒன்றாக மரம் விட்டு மரம் பறந்து செல்லும். சீராக இறக்கையடித்துக் காக்கைப் போல பறக்கும் இயல்புடையது. இதன் முதன்மை உணவாக எறும்புகள், கரையான்கள், அவற்றின் முட்டைகள் போன்றவை உள்ளன. ஒரு பறவையின் வயிற்றில் இருந்து தேனீக்கள் கண்டுக்கப்பட்ட குறிப்பு உண்டு. 'ச்சியாங்' என ஒற்றைக் குரலில் கணீர் என குரல் எழுப்பும். இனப்பெருக்க காலத்தில் மரங்களில் அதிர்ச்சி தரத்தக்கதாக தட்டி தட்டி ஒலி உண்டாக்கும் பழக்கம் உண்டு. ஒரு பறவை ஓரிடத்தில் இவ்வாறு தட்டும்போது அதற்கு பதில் கூறுவதுபோல வேறொரு பறவை தொலைவில் தட்டுவது உண்டு. இவை சனவரி முதல் மே வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. முக்கியமாக பெரிய காய்ந்து பட்டுப்போன மரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. பெரும்பாலும் ஆண்டுதோறும் ஒரே மரத்தைப் பயன்படுத்துகின்றன. மரங்களில் 14 செ.மீ. விட்டமுள்ள பொந்துகளைக் குடைந்து அதில் இரண்டு வெள்ளை முட்டைகளை இடும். இதன் பொந்தானது 50 முதல் 60 செ. மீ ஆழமுள்ளதாக, மரங்களில் எட்டு முதல் 16 மீட்டர் உயரத்தில் அமைக்கின்றன. மேற்கோள்கள் மரங்கொத்திகள் தென்னிந்தியப் பறவைகள்
593623
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE%2021
உலூனா 21
உலூனா 21 (Ye - 8 தொடர்) (Luna 21) (Ye-8 series)என்பது 1973 ஆம் ஆண்டில் லூனிக் 21 என்றும் அழைக்கப்படும் லூனா திட்டத்தின் ஒரு ஆளில்லா விண்வெளி பயணமாகும். விண்கலம் நிலாவில் தரையிறங்கி இரண்டாவது சோவியத் நிலாத் தரையூர்தி உலூனோகோட் 2 ஐ அனுப்பியது. இந்த பயணத்தின் முதன்மை நோக்கங்கள் நிலா மேற்பரப்பின் படங்களை திரட்டல் , நிலாவில்ல் இருந்து வானியல் நோக்கீடுகளி சாத்தியக்கூறுகளை தீர்மானிக்க சுற்றுப்புற ஒளி நிலைகளை ஆய்வு செய்தல் , புவியிலிருந்து ஒருங்கொளி செய்முறைகளைச் செய்தல் , சூரிய எக்சுக்கதிர்களைக் கவனித்தல் , களக் காந்தப்புலங்களை அளவிடுதல், நிலா மேற்பரப்பு பொருளின் இயக்கப் பண்புகளை ஆய்வு செய்தல் ஆகிய்னவாகும். திட்டப் பணி உலூனா 21 இரண்டாவது வெற்றிகரமான சோவியத் நிலாத் தரியூர்தி உலூனோகோட் 2 ஐ எடுத்துச் சென்றது , இது கடைசி அப்பல்லோ நிலாத் தரையிறங்கிய ஒரு மாதத்திற்குள் ஏவப்பட்டது. புரோட்டான் - கே / டி ஏவுகணை விண்கலத்தை புவியின் தங்கல் வட்டணையில் வைத்தது , அதைத் தொடர்ந்து நில்லப் பெயரும் ஊசி செலுத்தப்பட்டது. 1973 ஜனவரி 12 அன்று லூனா 21 , 90 × 100 கிமீ வட்டணையில் 60 அடி சாய்வில் நிலாவைச் சுற்றி வந்தது. ஜனவரி 13 , 14 ஆம் தேதிகளில் நிலாவண்மை 16 கிமீ உயரத்திற்கு குறைக்கப்பட்டது. ஜனவரி 15 அன்று 40 வட்டணைகளுக்குப் பிறகு, ஒடுக்க ஏவூர்தி 16 கிமீ உயரத்தில் வீசப்பட்டது., மேலும் விண்கலம் கட்டற்று வீழ்ச்சியடைந்தது. 750 மீட்டர் உயரத்தில் முக்கிய உந்துவிசை குண்டுகள் வீசத் தொடங்கி, 22 மீட்டர் உயரத்தை அடையும் வரை வீழ்ச்சியை மெதுவாக்கியது. இந்க்த கட்டத்தில் முக்கிய உந்துபொறிகள் மூடப்பட்டு , இரண்டாம் நிலை பொரிகள் எரியத் தொடங்கின , இறங்கு கலம் துண்டிக்கப்பட்டதும் மேற்பரப்பில் இருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில் இருக்கும் வரை வீழ்ச்சியை குறைத்தது. இலே மோனியர் பள்ளத்தில் 23:35 மணிக்கு 25:85 N 30:45 E′ இல் மரே செரினிடடிசு (Serenity), தாரசு மலைகள் இடையே தரையிறங்கியது. தரையிறங்கி விளாடிமிர் லெனின் பொறிப்புப் பட்டயாத்தினையும், சோவியத் படையணியின் மேலுறையையும் எடுத்துச் சென்றது. மூன்று மணி நேரத்திற்குள் ஜனவரி 16 அன்று 01:14 மணிக்குத் தரையிறங்கி நிலா மேற்பரப்பில் இறங்கியது. 840 கிலோகிராம் உலூனோகோட் 2 அதன் முன்னோடியின் மேம்படுத்திய பதிப்பாகும். மேலும் இதில் மூன்றாவது டிவி கேமரா, மேம்படுத்தப்பட்ட எட்டு சக்கர இழுவை அமைப்பு, கூடுதல் அறிவியல் கருவி ஆகியன அஐந்தன. அதன் முதல் நிலா நாளின் முடிவில் உலூனோகோட் 2 ஏற்கனவே அதன் முழு செயல்பாட்டு வாழ்க்கையிலும் உலூனோகோட் 1 ஐ விட அதிகமாக பயணம் செய்திருந்தது. மே 9 அன்று தரையிறங்கி கவனக்குறைவாக ஒரு பள்ளத்தில் உருண்டு , அதன் சூரியப் பலகங்களையும் கதிர்வீசிகளையும் தூசி மூடியது , இதனால் ஊர்தியின் வெப்பநிலை பாதிக்கப்பட்டது. தரையிறங்கியைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன , ஜூன் 3 அன்று சோவியத் செய்தி நிறுவனம் அதன் பணி முடிந்துவிட்டதாக அறிவித்தது. கடைசி தொடர்புக்கு முன்பு , தரையிறங்கி 80,000 தொலைக்காட்சி படங்களையும் 86 பரந்த புகைப்படங்களையும் எடுத்தது. மண்ணின் நூற்றுக்கணக்கான எந்திர, வேதியியல் ஆய்வுகளை நடத்தியது. 1973 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை மாஸ்கோவில் நடந்த கோள் ஆய்வு குறித்த மாநாட்டின் போது ( உலூனா 21 தரையிறங்கிய பின்னர்) ஒரு அமெரிக்க விஞ்ஞானி உலூனா 21 இறங்கும் தளத்தைச் சுற்றியுள்ள நிலா மேற்பரப்பின் புகைப்படங்களை உலூனோகோட் 2 பணிக்கு பொறுப்பான சோவியத் பொறியாளரிடம் வழங்கியதாக சோவியத்து ஒன்றியம் பின்னர் வெளிப்படுத்தியது. அப்பல்லோ 17 தரையிறங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் பின்னர் சந்திரனில் அதன் பயணத்தில் புதிய தரையிறங்கியை வழிநடத்த க்லவலவ்ர் குழுவால் பயன்படுத்தப்பட்டன. ரேவுத்ல் தேதி / நேரம்: 1973 - 01 - 08 மணிக்கு 06:55:38 ஒபொநே வட்டணையில் உலர் பொருண்மை: 4850 கிலோ தற்போதைய உரிமை உலூனா 21 உலூனோகோட் 2 ஆகியவை 1993 திசம்பரில் நியூயார்க்கில் நடந்த சோதேபியின் ஏலத்தில் இரிச்சர்டு கேரியட் என்பவரால் வாங்கப்பட்டன. மேலும் காண்க உலூனோகோட் 2 உலூனோகோட் திட்டம் செயற்கை செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி ஆய்வுகளின் காலவரிசை சந்திரனில் உள்ள செயற்கை பொருட்களின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஜாரியா - உலூனா 21 காலநிரல் லூனா திட்டம் சோவியத் ஒன்றியம் நிலாவுக்கான பயணத் திட்டங்கள்
593625
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D
எஸ்பிபிபிகே சத்தியநாராயண ராவ்
ஸ்ரீ பலுசு பிரபாகர புச்சி கிருஷ்ண சத்யநாராயண ராவ், எஸ்பிபிபிகே சத்யநாராயண ராவ் (23 செப்டம்பர் 1921 - 21 ஜனவரி 2011) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு தெலுங்கு இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி மற்றும் கபிலேஸ்வரபுரத்தின் பெருநிலக்கிழார் ஆவார். இவர் மத்திய அமைச்சராகவும் இந்தியாவின் வடக்கு சர்க்கார் மாவட்டங்களில் தீவிர செயல்பாட்டாளராகவும் இருந்தார். 1999 முதல் 2001 வரை இரண்டு ஆண்டுகள் வாஜ்பாய் அரசில் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் 1958 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் வடக்கு சர்க்கார் மாவட்டங்களின் பட்டதாரிகள் தொகுதியில் இருந்து ஆந்திரப்பிரதேச சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது. ஆரம்ப கால வாழ்க்கை எஸ்பிபிபிகே சத்யநாராயண ராவ் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கபிலேஸ்வரபுரம் சமஸ்தானத்தின் பெருநிலக்கழாரான ஸ்ரீ பலுசு புட்சி சர்வராயுடு மற்றும் அவரது மனைவி எஸ்பி லட்சுமி வெங்கட சுப்பம்மா ராவ் ஆகியோருக்கு 23 செப்டம்பர் 1921 அன்று பிறந்தார் இவருக்கு எஸ்.பி.பி பட்டாபி ராம ராவ் என்ற சகோதரர் இருந்தார், இவர் ஆந்திரப் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாகாண அமைச்சராகவும், ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலிருந்து 5 வது மக்களவை, 6 வது மக்களவை, 7 வது மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். தொழில் எஸ்பிபிபிகே சத்தியநாராயண ராவ் 1953 முதல் 1964 வரை கிராமத் தலைவராகவும், 1959 முதல் 1964 வரை பஞ்சாயத்து ஒன்றியத் தலைவராகவும், 1964 முதல் 1976 வரை கிழக்கு கோதாவரி மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் பணியாற்றினார் பின்னர், ராவ் 1958 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் வடக்கு சர்க்கார் மாவட்ட பட்டதாரிகள் தொகுதியில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாஜகவின் உறுப்பினராக ராஜமுந்திரியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் மத்திய விவசாயத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார். எஸ்பிபிபிகே சத்யநாராயண ராவ் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் ஜனதா கட்சிக்கு மாறினார், என்.டி.ராமராவ் பதவி வகித்த காலத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் (டிடிபி) சேர்ந்தார், பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் (பிஜேபி) இணைந்தார். எஸ்பிஎஸ்பிபிகே சத்தியநாராயண ராவ் 1967 இல் பெத்தபுரத்தில் எஸ்ஆர்விபிஎஸ்ஜெபி மகாராணி கல்லூரியையும் நிறுவினார் கபிலேஸ்வரபுரத்தில் தனது தந்தையின் பெயரில் சர்வராய ஹரிகதா பாடசாலையை நிறுவினார். நன்கு அறியப்பட்ட ஹரிகதா கலைஞர்களின் போதனைகள் மூலம் இளம் கலைஞர்களுக்கு ஹரிகதா கலையில் பயிற்சி அளிப்பதற்காக இந்த ஹரிகதா பாடசாலா அறியப்படுகிறது. ராவ் நிறுவிய இந்த நிறுவனத்தில் சமஸ்கிருதத்தில் நிகழ்த்திய ஒரே பெண் அரிகதா கலைஞரான தலிபர்த்தி உமா மகேஸ்வரி போன்ற அரிகதா கலைஞர்கள் பயிற்சி பெற்றனர். ராவ் தனது குடும்பத்தினரால் நிறுவப்பட்ட கபிலேஸ்வரபுரத்தில் வேத பாடசாலையையும் ஆதரித்தார். சர்வராயா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்த அவர், தெலுங்கு கவிஞர் போத்தனாவின் ஆந்திர பாகவதம் உட்பட இந்து இலக்கியப் படைப்புகளை அச்சிட 1991 இல் ஸ்ரீ சர்வராய தர்மிகா வித்யா அறக்கட்டளையை நிறுவினார். எஸ்பிபிபிகே சத்யநாராயண ராவ் மற்றும் கபிலேஸ்வபுரம் பாலுசு பெருநிலக்கிழார் குடும்பத்தைச் சேர்ந்த பிற உறுப்பினர்கள் 1959 ஆம் ஆண்டு காக்கிநாடாவில் உள்ள செல்லேரு மற்றும் சர்வராயா டெக்ஸ்டைல்ஸில் நூற்பு ஆலைகளைக் கட்டி ஸ்ரீ சர்வராயா சுகர்ஸ் நிறுவனத்தை நிறுவினர். மேற்கோள்கள் இந்திய அமைச்சர்கள் 13வது மக்களவை உறுப்பினர்கள் 2011 இறப்புகள் 1921 பிறப்புகள் மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்
593637
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28III%29%20%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
தாலியம்(III) ஐதராக்சைடு
தாலியம்(III) ஐதராக்சைடு (Thallium(III) hydroxide) என்பது Tl(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். தாலிக்கு ஐதராக்சைடு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. தாலியம் தனிமத்தின் ஐதராக்சைடு உப்பான இது வெண்மை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. தாலியம்(III) ஐதராக்சைடு மிகவும் பலவீனமான ஒரு காரமாகும். தாலியம்(III) அயனி, Tl3+ ஆக பிரிகையடைகிறது. தயாரிப்பு தாலியம்(III) குளோரைடுடன் சோடியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் தாலியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது. அல்லது மின்வேதியியல் ஆக்சிசனேற்ற முறையில் கார நிபந்தனைகளில் Tl+ அயனியுடன் ஐதராக்சைடு அயனி சேர்க்கப்பட்டும் தாலியம்(III) ஐதராக்சைடு தயாரிக்கப்படுகிறது. மேற்கோள்கள் தாலியம் சேர்மங்கள் ஐதராக்சைடுகள்
593638
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
திரிபுரா சமையல்
திரிபுரா சமையல் (Tripuri cuisine) அல்லது திரிபுரா உணவு முறை என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுராவில் நடைமுறையில் உள்ள உணவு வகையாகும். திரிபுரிகள் அடிப்படையில் அசைவ உணவு உண்பவர்கள், எனவே இவர்களின் முக்கிய உணவுகள் முக்கியமாக இறைச்சியைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் காய்கறிகளும் சேர்க்கப்படுகின்றன. திரிபுரா உணவு வகைகளில் மீன்களின் அதிகப் பயன்பாட்டிற்காக அறியப்படுகிறது. திரிபுரா மாநிலத்தில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளிலிருந்து மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இவை புகையிடல், உலர்த்தப்படல் அல்லது வெவ்வேறு மசாலா மற்றும் மூலிகைப் பொருட்கள் மூலம் பல்வேறு வழிகளில் சமைக்கப்படுகிறது. சில பிரபலமான திரிபுரா உணவுகளில் முய் போரோக் (புகையிடல் மீன் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட ஒரு பாரம்பரிய திரிபுரா உணவு), சக்-ஹாவ் கீர் (கருப்பு அரிசி புட்டு) மற்றும் மூங்கில் பொரியல் ஆகியவை அடங்கும். இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் திரிபுரா உணவின் சுவையில் அதிக காரமானதாக இல்லை. மேலும் திரிபுரா உணவு வகைகளில் வாழைப்பூ, இலைகள் மற்றும் தண்டின் பயன்படுத்துவதாலும் அறியப்படுகிறது. சுவாக் மோசுடெங் மேலும் பார்க்கவும் திப்ரா மக்கள் மேற்கோள்கள் சாஹ்மங் போரோக் (போரோக் மக்களின் உணவுகள்), நரேந்திர டெபர்மா, KOHM. திரிபுரா சமையல்
593639
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D
சுவாக்
சுவாக் (Chuak) என்பது பாரம்பரிய திரிபுரி அரிசி-பீர் ஆகும், இது வடகிழக்கு இந்தியாவில் பிரபலமானது. அரிசியைத் தண்ணீரில் புளிக்கவைத்து சுவாக் தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக ஒரு சடங்காக எந்த திரிபுரி விழாவின் சமூக நிகழ்வுகளிலும் குடிக்கப்படுகிறது. பாரம்பரிய திரிபுரி குடும்பத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அல்லது கொண்டாட்டத்திலும் கிராம பெரியவர்களுக்கு சுவாக் வழங்கப்படுகிறது. மேலும் காண்க திரிபுரா சமையல் மேற்கோள்கள் திரிபுரா திரிபுரா சமையல்
593640
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சபாட்டியரைட்டு
சபாட்டியரைட்டு (Sabatierite) என்பது Cu6TlSe4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் சபாட்டியரைட்டை Sab என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. செக் குடியரசு நாட்டில் இக்கனிமம் கிடைக்கிறது. கனிமத்தில் Cu4TlSe3 என்ற சேர்மம் அதிக அளவில் ஒரு கூறாக இருக்க வாய்ப்புள்ளது வேதியியல் மற்றும் படிகவியல் ரீதியாக சபாட்டியரைட்டு படிகங்கள் நாற்கோணக படிகச்சமச்சீர் தன்மையைக் கொண்டுள்ளன. 1923 ஆம் ஆண்டில் பிறந்த பிரெஞ்சு கனிமவியலாளர் செருமைன் சபாட்டியர் நினைவாக கனிமத்திற்கு சபாட்டியரைட்டு என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும் காண்க குரூக்கிசைட்டு கனிமங்களின் பட்டியல் மேற்கோள்கள் தாலியம் கனிமங்கள் செப்புக் கனிமங்கள் செலீனைடு கனிமங்கள் நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள் கனிமங்கள்
593641
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D
மோசுடெங்
மோசுடெங் (Mosdeng) என்பது திரிபுரி உணவாகும். இது மிளகாயினைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. மிளகாயினை பொதுவாக நெருப்பில் சிறிது எரித்து மிளகாய் புகையின் மூலம் சுவையூட்டித் தயாரிக்கப்படுகிறது. மொசுடெங் என்பது புதிய வறுத்த மிளகாய், உப்பு மற்றும் பெர்மா (புளிக்கவைக்கப்பட்ட) பொறித்து உலர்ந்த மற்றும் எண்ணெய் தோய்க்கப்பட்ட மீனைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் துணை உணவாகும் சில நேரங்களில் காய்கறிகளும் இதில் சேர்க்கப்படுகின்றன. மேற்கோள்கள் திரிபுரா திரிபுரா சமையல்
593642
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%28%E0%AE%B5%E0%AE%9F%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
கஞ்சி (வட இந்தியா)
கஞ்சி (Kanji) என்பது ஒரு புளிக்கவைக்கப்பட்ட பானம் ஆகும். இது இந்தியத் துணைக் கண்டத்தில் உருவானது. ஹோலி பண்டிகைக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. கஞ்சி தண்ணீர், மஞ்சள் முள்ளங்கி, பீட்ரூட், கடுகு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் மேல் பூந்தி தூவி பரிமாறலாம். ஊட்டச்சத்து, கஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. நலநுண்ணுயிரி பாக்டீரியாவின் பதினொரு விகாரங்கள் கஞ்சியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பீடியோகாக்கசு அசிடிலாக்டிசி என்ற விகாரம் அதிக வளர்ச்சித் திறனுடன் மரபணு ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து மாறுபட்ட பொருட்களைக் கொண்டு பானமாகத் தயாரிக்கப்படும் கஞ்சி இந்தியாவின் தென்மாநிலங்களில் பிரபலம். மேலும் பார்க்கவும் கஞ்சி மேற்கோள்கள் பானங்கள்
593643
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
தாக்குரான் ஆறு
தாக்குரான் ஆறு (Thakuran River) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் பாய்கிறது. சுந்தரவனக் காடுகளிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் பாய்ந்து ஒரு பரந்த முகத்துவாரத்தை உருவாக்குகிறது. இயாமிரா ஆறு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. செயநகர் மச்சில்பூருக்கு அருகில் தாக்குரான் ஆறு உருவாகிறது சப்தமுகி ஆற்ருடன் பல இடங்களில் இது இணைகிறது. மதுராபூருக்கும் செயநகருக்கும் இடையில் இது எல்லையை உருவாக்குகிறது. தாக்குரான் ஆற்றின் அமைப்பு கடல் முகத்திற்கு அருகில் மிகவும் அகலமானதாகும். மேற்குப் பகுதியில் உள்ள தாக்குரான் அமைப்பின் முக்கிய கிளைகளாக கத்ரகாலி கல், டம்டமா கல், மோனி நதி, புக்சரா, ரைதிகி, சிபுவா கேங், பக்ரலி கால் மற்றும் ராசு கிரீக் ஆகியவை ஓடுகின்றன. கிழக்குப் பகுதியில் உள்ள இணைப்புக் கால்வாய் பெரும்பாலும் பைஞ்சாபி கல், குரா கால், கைகால்மாரி-அச்மல்மாரி-சுயா நதி, துலிபசானி காங்கு மற்றும் சுல்காட்டி காங்கு போன்ற கால்வாய் வளைவுகள் ஆகும். இந்த சுழல்கள் தங்களுக்குள் அலை கால்வாய்களின் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. தாக்குரானைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன. அவை இயற்கையான சதுப்புநில வாழ்விடத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. தாக்குரானுக்குக் கிழக்கே உள்ள பகுதி சுந்தரவனப் புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியின் கீழ் வருகிறது - இது பொதுவாக பறவைகள் பார்வையாளர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகல் அனுமதிக்கப்படாத பகுதியாகும். சில பகுதிகளில் தாக்குரானைச் சுற்றியுள்ள பகுதிகள் கரைகளால் பாதுகாக்கப்படுகின்றன, அவை சில சமயங்களில் அலைகளின் வெள்ளத்தால் உடைக்கப்படுகின்றன. மேற்கோள்கள் மேற்கு வங்க ஆறுகள் இந்திய ஆறுகள் மேற்கு வங்காளப் புவியியல்
593644
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF
தங்கா தோரணி
தங்கா தோரணி (Tanka torani)(ஒடியா:ଟଙ୍କ ତୋରାଣି-taṅka torāṇi) என்பது சமைத்து ஒரு நாள் ஆன சாதத்திலிருந்து தயாரிக்கப்படும் பானம் ஆகும். இது ஜெகந்நாதருக்கு வழங்கப்படும் மகாபிரசாதத்தின் ஒரு பகுதியாகும். இது புரி ஜெகன்நாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் கிடைக்கும். கோடையில் இப்பிரசாதம் சிறப்பாக ருசிக்கப்படுகிறது. செய்முறை தங்க தோராணி பின்வரும் பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது: சாதம் தயிர் தண்ணீர் இஞ்சி மாங்காய் இஞ்சி பச்சை மிளகாய் உப்பு வறுத்த சீரகப் பொடி எலுமிச்சை இலைகள் கறிவேப்பிலை துளசி இலைகள் எலுமிச்சை சமைத்து ஒரு நாள் ஆன சாதத்தினை தண்ணீருடன் எடுத்துக் கொண்டு அரிசியைப் பிசைந்து, அதில் தண்ணீர் மற்றும் தயிர் சேர்த்து அருந்தும் வகையில் பானத்தின் நிலைத்தன்மைக்குக் கொண்டுவரவேண்டும். பின்னர் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து மசாலாப் பொருட்களும் சேர்க்கப்பட்டு நன்கு கலக்கப்படவேண்டும். பின்னர் இக்கலவையினை 2-3 மணி நேரம் ஊற வைத்து குளிர்ச்சியாகப் பரிமாறப்படுகிறது. இது பாரம்பரியமாக மண் பானைகளில் செய்யப்படுகிறது. இதனால் தங்கா தோரணி குளிர்ச்சியாக இருக்கும். மேலும் பார்க்கவும் கஞ்சி மேற்கோள்கள் ஒடியா உணவுகள்
593646
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
மடகாசுகர் குயிற்பாறு
{{Taxobox | name = மடகாசுகர் குயிற்பாறு (Madagascar cuckoo-hawk)(அவிசெடா மடகாசுகாரியென்சிசு), மடகாசுகர் வல்லூறு அல்லது மடகாசுகன் குயில் வல்லூறு என்றும் அழைக்கப்படுகிறது. இது அசிபிட்ரிடே குடும்பத்தில் உள்ள கொன்றுண்ணிப் பறவை சிற்றினமாகும். இது மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். விளக்கம் முதிர்ச்சியடைந்த மடகாசுகர் குயிற்பாறு அடர் பழுப்பு நிற மேல் பகுதிகளுடன் காணப்படும். இவற்றின் தலை வெளிர் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். மார்பகத்தின் அடிப்பகுதி வெண்மையானது மற்றும் மேல் மார்பகம் மற்றும் கீழ் மார்பகத்தின் பக்கங்களில் பழுப்பு நிற கோடுகள் உள்ளன. இந்த கோடுகள் பக்கவாட்டில் நன்றாக இருக்கும். வால் இரண்டு குறுகிய, வெளிர் பட்டைகளுடன் ஒரு வெளிர் முனையினைக் கொண்டுள்ளது. பறக்கப் பயன்படும் இறகுகளின் அடிப்பகுதியில் அகன்ற இருண்ட பட்டைகளைக் கொண்டிருக்கும் அதே வேளையில், கீழ் இறக்கைகளில் மறைப்புகள் பழுப்பு நிறத்தில் பட்டைகளாகக் காணப்படும். இளம் வயதுப் பறவைகள் கருமையானவை. ஆண் மற்றும் பெண் பறவைகள் நீளத்துடன் ஒரே அளவில் காணப்படும். இவற்றின் இறக்கை நீட்டம் ஆகும். பரவல் மடகாசுகர் குயிற்பாறு மடகாசுகர் தீவில் மட்டுமே காணக்கூடியது. இது இத்தீவின் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்றது. இருப்பினும், இது தெற்கிலும் மத்திய பீடபூமியிலும் மிகவும் அரிதாகக் காணப்படும். வாழ்விடம் மடகாசுகரில் உள்ளத் தென்னை மற்றும் பிற பனைகளின் வணிகத் தோட்டங்கள் உட்பட பெரும்பாலான காடுகளில் இந்த இனம் காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து உயரம் வரை பதிவாகியுள்ளது. பெரும்பாலான அவதானிப்புகள் காடுகளின் விளிம்புகளிலோ அல்லது வெட்டவெளிகளிலோ செய்யப்பட்டுள்ளன. இது நகரங்களிலும் காணப்படுகிறது. பழக்கவழக்கங்கள் மடகாசுகர் குயிற்பாறு, பூச்சிகள் மற்றும் பல்லிகள் உள்ளிட்ட சிறிய முதுகெலும்பிகளைத் தேடி நாள் முழுவதும் கிளைகளில் தங்கியிருந்து வேட்டையாடும். பச்சோந்திகள் மற்றும் தரைப்பல்லி இதன் உணவில் பெரும்பகுதியை வகிக்கின்கின்றன. ஆனால் இது கூடுகளில் உள்ள குஞ்சுகள் மற்றும் வெட்டுக்கிளிகள் போன்ற பெரிய பூச்சிகளையும் எடுத்துக்கொள்கிறது. இது விடியற்காலை மற்றும் அந்தி வேளையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இது பெரும்பாலும் மரங்களின் திட்டுகளுக்கு இடையில் பறப்பதைக் காணலாம். நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் 14 மீட்டர் உயரமுள்ள மரத்தின் உச்சியில் கூடுகள் அமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன. சதுப்புநிலத்தை ஒட்டிய பாழடைந்த காடுகளில் இனப்பெருக்கம் செய்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தி ஹாக் கன்சர்வேன்சி டிரஸ்ட். மடகாஸ்கர் குக்கூ பால்கன் குயிற்பாறுகள் மடகாசுக்கர் உயிரினங்கள்
593647
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE
நித்யானந்த மகாபத்ரா
நித்யானந்தா மகாபத்ரா (Nityananda Mahapatra) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1912 ஆம் ஆன்டு சூன் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கவிஞர் மற்றும் பத்திரிகையாளராகவும் இவர் அறியப்படுகிறார். அரசியல் வாழ்க்கை தேசியவாத நடவடிக்கைகளுக்காக 1930 மற்றும் 1942 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நித்யானந்த மகாபத்ரா பிரித்தானிய அரசாங்கத்தால் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார். ஒடியா இதழான டகராவின் ஆசிரியராகவும், சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு சிறுகதை எழுத்தாளராகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றார். அரசியல் வாழ்க்கையில் மகாபத்ரா 1957 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகவும் 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை வழங்கல் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான மாநில அமைச்சராகவும் பணியாற்றினார். இறப்பு 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதியன்று சுமார் 9:45 மணிக்கு நித்யானந்த மகாபத்ரா இறந்தார். ஒடிசாவின் புவனேசுவரில் உள்ள காரவேலாநகரில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் காரணமாக ஆதித்யா கேர் மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்தார். தனது 100 ஆவது பிறந்தநாளுக்கு மூன்று மாதங்கள் குறைவாக இருந்தபோதுதான் இவர் இறந்தார். இலக்கிய விருதுகள் மகாபத்ரா 1974 ஆம் ஆண்டு ஒடிசா சாகித்ய அகாடமி விருதையும் 1987 ஆம் ஆண்டில் கேந்திர சாகித்ய அகாடமி விருதையும் தனது காராதிகா நாவலுக்காகப் பெற்றார். மேற்கோள்கள் 2012 இறப்புகள் 1912 பிறப்புகள் ஒடிசா அரசியல்வாதிகள் ஒடிசா கவிஞர்கள் இந்திய அரசியல்வாதிகள்
593648
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சிம்னா சட்டமன்றத் தொகுதி
சிம்னா சட்டமன்றத் தொகுதி (Simna Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2023 2018 மேலும் பார்க்கவும் திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல் திரிபுரா சட்டமன்றம் மேற்கோள்கள் மேற்கு திரிப்புரா மாவட்டம் திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள்
593654
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
மஞ்சு பாரத் ராம்
மஞ்சு பாரத் ராம் (Manju Bharat Ram; 29 டிசம்பர் 1945 - 12 டிசம்பர் 2012 ) ஒரு இந்திய கல்வியாளர் ஆவார். புது தில்லியிலுள்ள ஸ்ரீராம் பள்ளிகள் குழுமத்தின் நிறுவனரான இவர், அதன் நிர்வாகக் குழுவின் தலைவராகவும், அறங்காவலர் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். இந்தப் பள்ளி, 2008, 2009 2011 இல் எஜுகேஷன் வேர்ல்ட் ஸ்கூல்ஸ் மூலம் இந்தியாவின் நம்பர். 1 நாள் பள்ளியாக தரவரிசைப்படுத்தப்பட்டது. இவர் பிரபல தொழிலதிபரும் எஸ்ஆர்எப் நிறுவனத்தின் தலைவருமான அருண் பரத் ராமின் மனைவி ஆவார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை, எம். பி. குப்தா ஒரு தொழிலதிபர். அம்மா உஷா குப்தாவின் பெயரால் இப்போது பிரபலமான எஃப்எம்சிஜி பிராண்ட் உஷா என்று பெயரிடப்பட்டது. கல்வித் துறைகளில் பல பரோபகார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இவர், ஸ்ரீ ராம் பள்ளிகள் மூலம், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்குவதன் மூலம் உள்ளடக்கியதன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இந்த குழந்தைகளின் குறைபாடுகளை சமாளிக்க சிறப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதையும், பின்னர் வழக்கமான வகுப்புகளில் குழந்தைகள் முக்கிய பாடங்கள் படிப்பதையும் இவர் உறுதி செய்தார். பள்ளி சிங்கப்பூரில் இருந்தும் ஐக்கிய அமெரிக்க நாடுகள்; இங்கிலாந்து; சீனா; சர்வதேச அளவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்வதற்காக ஜெர்மனி, பிரான்சு போன்ற பல சர்வதேச தொடர்புடைய பள்ளிகளுடன் இணைந்து செயல்படுகிறது. இவரது கவ்விப் பணிக்காக 2013 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. சான்றுகள் வெளி இணைப்புகள் About Shri Ram School The Shri Ram School SRF Foundation Shrieducare About Manju Bharat Ram Zemu Education – The Shri Ram School Blog About SRF Foundation The Shri Early Years – A message from the Chairperson of The Shri Ram School CareerMitra – About Shri Ram School Confluence World School and Shri Educare Limited About Sarvepalli Radhakrishnan School, Bhiwani A visit to The Shri Ram School, Vasant Vihar SRF Foundation – The Shri Ram Schools Afaqa – The Shri Ram School to offer International Baccalaureate (IB) Educationist Manju Bharat Ram Dead Founder of Shri Ram Schools Dies The Indian Express: The Shri Ram School Founder Manju Bharat Ram Dies ExpressIndia – The Shri Ram School founder Manju Bharat Ram dies Educationist Manju Bharat Ram passes away at 66 பத்மசிறீ விருது பெற்ற சமூகப்பணியாளர்கள் 2012 இறப்புகள் 1945 பிறப்புகள்
593656
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
டொராண்டோ பிரகடனம்
டொராண்டோ பிரகடனம்: எந்திரக் கற்றல் அமைப்புகளில் சமத்துவம், பாகுபாடற உரிமைகளைப் பாதுகாத்தல் என்பது எந்திர கற்றல் பயிற்சியாளர்களுக்கும் ஆளும் அமைப்புகளுக்குமான பொறுப்பான நடைமுறைகளை ஆதரிக்கும் ஒரு பிரகடனமாகும். இது மனித உரிமைகள் கண்காணிப்பகம, விக்கிமீடியா அறக்கட்டளை உள்ளிட்ட பிற குறிப்பிடத்தக்க கையொப்பமிட்டவர்களுடன் அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் அக்சஸ் நவ் உள்ளிட்ட குழுக்களால் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையாகும். இது ரைட்ஸ்கான் இதழில் 2018 மே 16 அன்று வெளியிடப்பட்டது. இந்த பிரகடனம் நெறிநிரல்களின் சார்பு பற்றிய கவலைகள், மக்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய பயன்பாடுகளில் எந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் எழும் பாகுபாடு பற்றிய சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்துகிறது. ஆவணத்தின் இரண்டாம் நிலை கவலை தகவல் தனியுரிமையை மீறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகும். இந்தப் பிரகடனத்தின் குறிக்கோள் " மாநிலங்கள், தனியார் துறைக்கான உறுதியான, செயல்படக்கூடிய செந்தரங்களைக் கோடிட்டுக் காட்டுவதாகும். இந்த பிரகடனம் நெறிநிரல் பாகுபாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்குவது போன்ற உறுதியான தீர்வுகளைக் கோருகிறது. உள்ளடக்கங்கள் டொராண்டோ பிரகடனத்தில் , பன்னாட்டு மனித உரிமைகள் சட்டம் , மாநில அரசுகளின் கடமைகள் , தனியார் துறைச் செயல்பாட்டாள்ர்களின் பொறுப்புகள், ஒரு பயனுள்ள தீர்வுக்கான உரிமை ஆகியவற்றைக் குறித்து ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட 59 சட்ட விதிமுறைகள் உள்ளன. முன்னுரை " எந்திர கற்றல் முறைகளின் உலகில் மனித உரிமைகளுக்கு தீங்கு விளைவிப்பதற்கு யார் பொறுப்பேற்பார்கள் " என்ற கேள்வியைக் கேட்பதன் மூலம் ஆவணம் தொடங்குகிறது. பொதுத் துறையிலோ அல்லது தனியார் துறையிலோ உள்ள அனைத்து பயிற்சியாளர்களும் மனித உரிமைகளுக்கான இடர்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் , தற்போதுள்ள பன்னாட்டுச் சட்டங்களின் செந்தரங்கள், கொள்கைகளை மனதில் கொண்டு மனித உரிமைகளுக்கான தங்கள் பணியை அணுக வேண்டும் என்றும் அது வாதிடுகிறது. இந்த ஆவணம் மனித உரிமைகளை " தனியுரிமை, தரவு பாதுகாப்பு உரிமை, கருத்துத் தற்சார்பு, பண்பாட்டு வாழ்க்கையில் பங்கேற்பதற்கான உரிமை, சட்டத்தின் முன் சமத்துவம், பயனுள்ள அறநிலைத் தீர்வுக்கான அணுகல் " ஆகியவற்றை உள்ளடக்கியது என்று வரையறுக்கிறது , ஆனால் பிரகடனம் சமத்துவம், பாகுபாடு காட்டாமை குறித்து மிகவும் அக்கறை கொண்டுள்ளது என்று அது கூறுகிறது. பன்னாட்டு மனித உரிமைகள் சட்டத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்துதல் பன்னாட்டு மனித உரிமைகள் சட்டத்தின் கட்டமைப்பு பல்வேறு உரிமைகளை பட்டியலிடுகிறது - மீறுபவர்களை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. மேலும் மீறப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பதை உறுதி செய்கிறது. " பாகுபாடு என்பது எந்தவொரு அடிப்படையையும் அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு வேறுபாடு, விலக்கு, கட்டுப்பாடு அல்லது விருப்பம் [ இதில் அடங்கும்; ஆனால் அவை மட்டும் அல்ல ] மதம், அரசியல் அல்லது தேசிய அல்லது சமூக தோற்றவழி பிற கருத்து, சொத்து, பிறப்பு அல்லது பிற அந்தஸது ஆகியவை அனைத்து நபர்களின் அனைத்து உரிமைகள், தற்சார்புகளின் சமமான அடிப்படையில் ஏற்றலைத். நீக்கம் செய்யும் அல்லது கெடுக்கும் நோக்கம் அல்லது விளைவைக் கொண்டுள்ளது ".எனும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் பாகுபாடு பற்றிய வரையறையை இந்த ஆவணம் மேற்கோள் காட்டுகிறது. அரசுகள் முன்கூட்டியே பிணைகாப்பு நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்க கொள்கைகளை உருவாக்க வேண்டும். முதன்மையான தரவுகளுக்கான பாதுகாப்புகள் , குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான பாதுகாப்புகள் ஆகியவை நடவடிக்கைகளில் அடங்கும். வடிவமைப்பில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்க பல்வேறு சமூகங்களுடன் இணைந்து அமைப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும். மாநில அரசுகளின் கடமைகள்: மனித உரிமைகளும் கடமைகளும் இன்று அரசுகள் எந்திரக் கற்றல் முறைகளை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயன்படுத்துகின்றன. அத்தகைய மூன்றாம் தரப்பினருடன் வளர்ச்சி ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் கூட , மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தங்கள் கடமையை அரசுகள் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். செயல்படுத்துவதற்கு முன்னும் பின்னும் தொடர்ச்சியான அடிப்படையில் அவர்கள் இடர்களைக் கண்டறிந்து வழக்கமான தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் , பின்னர் இந்த இடர்களைத் தணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். எந்திரக் கற்றல் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, தருக்கத்தை எளிதில் விளக்க முடியாத கருப்பு பெட்டி அமைப்புகளைத் தவிர்ப்பது குறித்து அவை வெளிப்படையாக இருக்க வேண்டும். அமைப்புகளும் பல்வேறு உட்குழுக்களும் தற்சார்பான நீதித்துறை அதிகாரிகளின் கடுமையான மேற்பார்வைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அரசுகள் தனியார் நிறுவனங்களின் பாகுப்பாடுகளில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். தவறுதலான கவனக் குறைவோடு, பாகுபாடு காட்டல், தரவு பாதுகாப்பு, தனி வதிவு உரிமை ஆகியவற்றுக்கு எதிராக கட்டுத்தும் பிணைமுறிச் சட்டங்களை இயற்றுதல் வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட தனியர்களுக்கு விளைவுறு ஈடுகட்டும் தீர்வு காணவேண்டும்.. மேலும், தேசிய, மாஇல அரசுகள் பன்னாட்டுச் சட்டத்தினை விரிவுபடுத்திச் சுழலுக்கேற்ப செயலாக்கநடவடிக்கை எடுத்தல் மிகவும் இன்றியமையாத்ஹதாகும். தனியார் துறை செயல்பாட்டாளர்களின் பொறுப்புகள்: மனித உரிமைகளுக்கான உரிய விடாமுயற்சி மனித உரிமைகள் குறித்த விடாமுயற்சியை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனங்கள் பொறுப்பாகும். அரசாங்கங்களைப் போலவே , தனியார் நிறுவனங்களும் பொதுவான இடர்களைக் கருத்தில் கொண்டு , மனித உரிமைகள், சமத்துவம், பாகுபாடற்ற சுயாதீனமான மனித உரிமைகள், எந்திரக் கற்றல் வல்லுனர்கள் குறித்து செயல்படும் பாதிக்கப்பட்ட குழுக்கள் உள்ளிட்ட பங்குதாரர்களைக் கலந்தாலோசித்து வளர்ச்சிக்கு முன் ஏற்படும் இடர்களை அடையாளம் காண வேண்டும். வழக்கமான தணிக்கைக்கு உட்பட்டு ,ஈடர் நிறைந்த பொருண்மைகளை குறைக்கும் அமைப்புகளை அவர்கள் வடிவமைக்க வேண்டும் , மேலும் பேரிடர்களைக் கொண்ட திட்டங்களைக் கைவிட வேண்டும். தேவைப்படும் இடங்களில் தொழில்நுட்ப செயலாக்கத்தின் விவரங்கள் உட்பட கருதப்படும் இடர்கள் குறித்து அவர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் , மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்களைப் பாதிக்கும் எந்தவொரு முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்க ஒரு பொறிமுறையை வழங்க வேண்டும். விளைவுறு சரிபடுத்தலுக்கான அறநிலை உரிமை " நீதிக்கான உரிமை என்பது பன்னாட்டு மனித உரிமைகள் சட்டத்தின் முதன்மைக் கூறாகும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கான அறநிலைத் தீர்வு காண தனியார் நிறுவனங்கள் செயல்முறைகளை உருவாக்க வேண்டும் , மேலும் இந்த செயல்முறைகளை யார் மேற்பார்வையிடுவார்கள் என்பதற்கான பாத்திரங்களை அவர்களதமர்த்த வேண்டும். நீதித்துறையில் எந்திர கற்றல் முறைகளைப் பயன்படுத்தும்போது அரசாங்கங்கள் குறிப்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், அறநிலைத் தீர்வு உதவக்கூடும். மேலும் காண்க செயற்கை நுண்ணறிவின் அறநெறிகள் செயற்கை அறிதிறன் மேற்கோள்கள் சமூகம் கற்றல் முறைகள் எந்திரக் கற்றல் அறவியல் தகவல் அறிவியல் கொள்கை அறிக்கைகள்
593660
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
நசீர் அமினுதீன் தாகர்
உஸ்தாத் நசீர் அமினுதின் தாகர் (Nasir Aminuddin Dagar; 20 அக்டோபர் 1923, இந்தியாவின் இந்தோர் – 28 டிசம்பர் 2000 கொல்கத்தா, இந்தியா ), தாகர் கரானாசைச் சேர்ந்த (இசைப் பள்ளி) ஒரு இந்திய துருபத் பாடகராவார். தாகர்-வாணி பாணியில் துருபத் பாடும் நான்கு சகோதரர்களில் இவர் இரண்டாவது மூத்தவர். இவர் மூத்த தாகர் சகோதரர்களின் பழம்பெரும் ஜுகல்பந்தி அல்லது இரட்டையரில் இளைய சகோதரராகவும் நினைவுகூரப்படுகிறார். இவரும் அவரது மூத்த சகோதரர் உஸ்தாத் நசீர் மொய்னுதீன் தாகரும், தாகர் கரானாவில் தங்கள் தந்தை உஸ்தாத் நசிருதீன் கான் தாகரின் மரணத்திற்குப் பிறகு வீழ்ச்சியடைந்த துருபத் பாரம்பரியத்தை மீட்டெடுத்தனர். உஸ்தாத் நசிருதின் கான் பத்து வருடங்கள் தனது இரு மூத்த மகன்களுக்கு தனது இசை அறிவை வழங்கினார். உஸ்தாத் நசிருதீன் கானின் மறைவுக்குப் பிறகு, சகோதரர்கள் உஸ்தாத் ரியாசுதீன் கான் மற்றும் உஸ்தாத் ஜியாவுதீன் கான் தாகர் ஆகியோரிடம் பயிற்சி பெற்றனர்.[ – விருதுகள் 1986 இல் இந்திய அரசாங்கத்தால் பத்ம பூசண் விருது 1985 இல் சங்கீத நாடக அகாதமி விருது 1979 இல் சுவாமி ஹரிதாஸ் விருது டி.லிட் 1991 இல் இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் வழங்கிய இலக்கிய விருது 1986-89 வரை அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் தயாரிப்பாளராக பணியாற்றியதற்கான விருது சான்றுகள் வெளி இணைப்புகள் Dhrupad.info சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் 2000 இறப்புகள் 1923 பிறப்புகள்
593664
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D
விஞ்சமுரி வெங்கட லட்சுமி நரசிம்ம ராவ்
விஞ்சமுரி வெங்கட லட்சுமி நரசிம்ம ராவ் (Vinjamuri Venkata Lakshmi Narasimha Rao; பிறப்பு 1887, இறந்த தேதி தெரியவில்லை) ஒரு இந்திய மேடை நடிகரும், தெலுங்கு-சமசுகிருத பண்டிதரும், எழுத்தாளருமாவார். பிதாபுரத்த படித்த இவர் மேடை நடிப்பில் ஈர்க்கப்பட்டார். மேலும் தனது 10 வயதில் வில்லியம் சேக்சுபியரின் மெர்ச்சன்ட் ஆப் வெனிஸ் என்ற நாடகத்தில் கிரேசியானா பாத்திரத்தில் நடித்தார். 1913ல் 'காக்கிநாடா அமெச்சூர்ஸ்' என்ற நாடக நிறுவனத்தில் சேர்ந்து கயோபாக்யானத்தில் கயா வேடத்தில் நடித்தார். அதே நாடகத்தின் நாடகப் போட்டிகளில் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவிடம் முதல் பரிசு பெற்றார். பாண்டவ விஜயத்தில் தர்மராஜாவாக நடித்தார். தர்மாவரம் சித்ரநளிநேயத்தில் பாகுகா பாத்திரம் இவருக்கு மிகவும் பிடித்தது. 1918 இல் விக்டோரியா பொது மண்டபத்தில் ராசபுத்திர விஜயம், பிரதாருத்ரியம், சாரங்கதாரா போன்ற நாடகங்களில் தோன்றினார்.. குடும்பம் பெண் எழுத்தாளர்கள் மற்றும் அஜந்தா பாணி விளக்கப்படங்களைக் கொண்ட அனுசூயா என்ற தெலுங்கில் முதல் பெண்கள் இதழைத் தொடங்கி பதிப்பித்த வெங்கடரத்னம்மாவை இவர் மணந்தார். தங்களின் மகளுக்கு அந்தப் பத்திரிகையின் பெயரையேச் சூட்டினர். இவருக்கு வின்ஜமுரி சீதாதேவி மற்றும் வின்ஜமுரி அனுசுயா தேவி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பெண்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை மொழிகளைக் கற்கவும் இலக்கியம் படிக்கவும் ஊக்குவித்தார். தெலுங்கு எழுத்தாளர் தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரி இவருடைய மருமகனாவார். 1967 இல் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது. சான்றுகள் Luminaries of 20th Century, Potti Sreeramulu, Telugu University, 2005. Encyclopaedia Indica, Volume 2, Jagdish Saran Sharma, S. Chand, 1981 பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் இறந்த ஆண்டு குறிப்பிடப்படவில்லை 1887 பிறப்புகள்
593667
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
கயோபாக்யானம்
கயோபாக்யானம் ( Gayopakhyanam ) என்பது 1890 இல் சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம் என்பவர் எழுதிய தெலுங்கு நாடகம். இது பிரசண்ட யாதவம் (யாதவ மன்னன் - கிருட்டிணன் கதை) என்றும் அழைக்கப்படுகிறது. இந்து இதிகாசங்களில் புராணக் கருப்பொருள்களை முன்வைப்பதில் இந்த நாடகம் முன்னோடியாக உள்ளது . கயா என்ற கந்தர்வ மன்னனால் தூண்டப்பட்ட அருச்சுனனின் அவதாரமான நர-நாராயணனுக்கும் கிருட்டிணனுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டது கதை. சிலகமர்த்தி லட்சுமி நரசிம்மம் (1867-1946) சுமார் 22 வயதில் இந்த நாடகத்தை எழுதினார். இது ஏப்ரல் 1890 இல் முதல் முறையாக அரங்கேற்றப்பட்டது. பிரபல அரசியல்வாதி த. பிரகாசம் சித்ரலேகாவாகவும் அர்ச்சுனனாகவும், கயாவாக இவரது ஆசிரியர் இம்மனேனி அனுமந்த ராவ் நாயுடுவும் நடித்தனர். இது பல நாடகக் குழுக்களால் எண்ணற்ற முறை அரங்கேற்றப்பட்டது. இது 1909 இல் நூலாக வெளியிடப்பட்டது. மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையான சாதனைகளை முறியடித்தது. கதை கயா என்ற ஒரு கந்தர்வ மன்னன், தனது தெய்வீக விமானம் மூலம் வானத்தில் பறக்கும் போது, வெற்றிலையை மென்று கீழே துப்பினார். இது சூரிய தேவனை வணங்கிகொண்டிருந்த கிருட்டிணரின் உள்ளங்கையில் விழுந்தது. இதனால் மிகவும் கோபமடைந்த கிருட்டிணன் கயாவைக் கொல்வதாக சபதம் செய்தார். கயா கிருஷ்ணரின் சிறந்த பக்தராக இருந்தும், கிருஷ்ணர் தனது சபதத்தை திரும்பப் பெற முடியவில்லை. நாரதர், அருச்சுனனை அணுகி, தன்னைப் பாதுகாப்பதற்கான உறுதியைப் பெறுமாறு அறிவுறுத்துகிறார். நாரதரின் அறிவுரையின்படி, அர்ச்சுனனின் வாக்குறுதியைப் பெறுகிறான். நாரதர், சுபத்திரை ருக்மணி மற்றும் பிறரின் தலையீடு இருந்தும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கிருட்டிணனும், அர்ச்சுனனும் நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராகும் போது அங்குவந்த, சிவன் அவர்கள் முன் தோன்றி உலகத்திற்கு ஏற்படக்கூடிய பேரழிவைக் கூறி போரைத் தடுக்கிறார். வரவிருக்கும் மகாபாரதப் போருக்கு முன் அர்ச்சுனனுக்கு ஒரு சோதனையாக இந்த சூழ்நிலையை பகவான் கிருட்டிணர் விளக்குகிறார். விமர்சனம் கிருட்டிணன், அர்ச்சுனன் போன்ற பெரிய பாத்திரங்களின் உன்னதத் தன்மையைக் கவிஞர் குறைத்து இதை எழுதினார் என்ற விமர்சனம் எழுந்தது. ஆனாலும், சாமானியர் மீது அதிக அக்கறை கொண்ட, வெளிப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யும் இயல்பான போக்கு கவிஞருக்கு உண்டு என்பதாலும், அன்றாட வாழ்வில் அவருக்குப் பரிச்சயமான பழமொழிகள் மற்றும் பழமொழிகளை நன்கு அறிந்தவர் என்பதாலும் பார்வையாளர்களின் வேர் மட்டத்தில் இவரது நாடகம் வெற்றி பெற்றது. திரைப்படமாக இந்தக் கதை தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரைப்படங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு 1962/1963 இல் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இதை கே.வி.ரெட்டி இயக்கினார். இதில் என். டி. ராமராவ் கிருட்டிணராகவும், அக்கினேனி நாகேஸ்வர ராவ் அர்ச்சுனாகவும், துலிபாலா கயாவாகவும் நடித்திருந்தனர். சான்றுகள் வெளி இணைப்புகள் Gayopakhyanam video at Andhra Natakam.com Gayopakhyanam video at Andhra Natakam.com தெலுங்கு இலக்கியம் இந்திய நாடகங்கள்
593669
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D
சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம்
சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம் (Chilakamarti Lakshmi Narasimham) (26 செப்டம்பர் 1867 - 17 ஜூன் 1946) ஒரு இந்திய நாடக ஆசிரியரும், புதின ஆசிரியரும் சிறுகதை ஆசிரியரும் ஆவார். இவர் தெலுங்கு மொழியில் எழுதினார். தெலுங்கு இலக்கியத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த வீரேசலிங்கம் நிறுவிய பாரம்பரியத்தில் வந்தவர். கயோபாக்யானம் (1909) மற்றும் கணபதி (1920) ஆகியவை இவரது சிறந்த நாடகங்கள். நரசிம்மம் இளமைப் பருவத்திலிருந்தே பார்வைக் குறைபாடுடையவராக இருந்தார். பட்டப்படிப்புக்குப் பிறகு பார்வையற்றவராகிவிட்டார். ஆயினும்கூட, இவர் ராஜமன்றியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தெலுங்கில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார். இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தார். "வெளிநாட்டு துணியை" தவிர்த்து, காதி வேட்டி, சட்டை, கோட் மற்றும் தலைப்பாகை அணிந்திருந்தார். ஆரம்ப கால வாழ்க்கை சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம் 1867 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி ஆராம திராவிடலு பிரிவின் பிராமண குடும்பத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள வீரவாசரம் கிராமத்தில் இவரது தந்தை சிலகமார்த்தி வெங்கண்ணா மற்றும் தாயார் வெங்கடரத்னம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். கர்னல் ஜேம்ஸ் டோட் எழுதிய அன்னல்ஸ் அண்ட் ஆண்டிக்விட்டிஸ் ஆஃப் ராஜஸ்தான் என்ற புத்தகத்தை 1906-07 வாக்கில் ராஜஸ்தானா கதாவலி என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இது இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்ட ராஜஸ்தானின் அரச வம்சங்களின் இருபத்தி நான்கு கதைகளைக் கொண்டிருந்தது. சுயசரிதை தனது நண்பர்களின் வேண்டுகோளின்படி, பார்வையின்மை மற்றும் முதுமை (75 வயது) இருந்தபோதிலும், சிலகமார்த்தி தனது 646 பக்கங்கள் கொண்ட சுயசரிதமு'' என்ற பெயரில் தனது சுயசரிதையை 18 மார்ச் 1942 முதல் 12 ஜூலை 1942 வரை 4 மாதங்கள் மற்றும் 24 நாட்களில் எழுதினார். சான்றுகள் மேற்கு கோதாவரி மாவட்ட நபர்கள் 1946 இறப்புகள் 1867 பிறப்புகள் தெலுங்கு மக்கள்
593670
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%28%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%29
கணபதி (புதினம்)
கணபதி (Ganapati) (1920) என்பது சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம் என்பவர் எழுதிய தெலுங்கு புதினம். இது நவீன தெலுங்கில் எழுதப்பட்ட முதல் தெலுங்கு புதினங்களில் ஒன்றாகும். மேலும்,ம் நவீன தெலுங்கு இலக்கியத்தின் உன்னதமான படைப்புகளில் ஒன்றாகவும் நவீன தெலுங்கு எழுத்தின் முதல் நகைச்சுவை புதினமாகவும் கருதப்படுகிறது. தலைப்பு புதினத்தில் முக்கிய நாயகனின் பெயர் கணபதி. புதினம் கணபதி மற்றும் அவரது முந்தைய இரண்டு தலைமுறைகளின் (தாத்தா மற்றும் அப்பா) வாழ்க்கையை சித்தரிக்கிறது. பின்னணி 1910-1920ல் நடந்த சமூக சூழலின் பின்னணியில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சுற்றி வரும் கதை, கன்யாசுல்கம் (இப்போது கைவிடப்பட்ட/தடைசெய்யப்பட்ட மணமகன் மணமகளின் தந்தைக்கு பணம் கொடுக்கும் பழக்கம்) நடைமுறையை நையாண்டியாக விமர்சிக்கிறது. படிப்பதற்கு நகைச்சுவையாகத் தோன்றினாலும், அடிப்படையான உண்மை பிராமணக் குடும்பங்களில் உள்ள கடுமையான வறுமையை புதினம் பிரதிபலிக்கிறது. கதை கதை சொல்பவர் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு இரவு உணவுக்காகக் காத்திருப்பதில் இருந்து கதை தொடங்குகிறது. ஏற்கனவே வெகுநேரமாகிவிட்டதால், இரசம் பரிமாறப்படும் வரை காத்திருந்து, மயங்கி விழுந்து கனவு காண்கிறார். கனவில் அவர் ஒரு குட்டையான, கொழுத்த மனிதனைக் காண்கிறார். அவர் தனது கதையை விவரிக்கிறார். மேலும், அதை உலகிற்கு வெளிபடுத்துமாறு கதை சொல்பவருக்கு அறிவுறுத்துகிறார். கதை கணபதியின் தாத்தா பாப்பையா சாஸ்திரி வசிக்கும் கிழக்கு கோதாவரியில் உள்ள மண்டப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்குகிறது. பாப்பையா தனது கிராமத்தில் பல சிரமங்களை எதிர்கொள்கிறார், அதனால் அவர் மகாராட்டிடிராவில் உள்ள புனேவுக்குச் சென்று, பேஷ்வாக்களின் இராச்சியத்தில் வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறார். பின்னர், சொந்த ஊருக்கு வந்து கன்யாசுல்கம் செலுத்தி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஒரு மகன் (கங்கதாருடு) பிறந்த பிறகு, பாப்பையா முதுமை காரணமாக இறந்து விடுகிறார். கங்கதாருடு (தெலுங்கு/சமசுகிருதத்தில் 'நீர் சுமப்பவர்' என்று பொருள்) அவரது தாயாருடன் கோதாவரி மாவட்டத்தின் மாவட்டத் தலைமையகமான காக்கிநாடாவுக்கு குடிபெயர்கிறார். இளம் வயதை அடைந்ததும், கங்கதாருடு குளத்தில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகித்து சம்பாதிக்கத் தொடங்குகிறார். நாள் முழுவதும் உழைத்தாலும் குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது. பின்னர் கங்காதாருடுவின் தாய் இறந்துவிடுகிறார். இறுதியில் அவர் திருமணம் செய்து கொள்கிறார். அவரது மகன் கணபதி பிறந்தவுடன் விரைவில் இறந்துவிடுகிறார். அவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால், கணபதியின் தாய் தன் குழந்தையுடன் தன் சகோதரனின் கிராமத்திற்குச் செல்கிறாள். அண்ணன் வீட்டில் அவர்களுக்கு உணவும் தங்குமிடமும் கொடுக்கப்பட்டாலும் அண்ணனின் மனைவியால் கூடுதல் சுமையாகவே நடத்தப்படுகிறார்கள். சிறுவயதிலிருந்தே கணபதி கழுதை சவாரி செய்வது போன்ற வினோதமான மற்றும் நகைச்சுவையான செயல்களால் கிராமம் முழுவதையும் மகிழ்விக்கிறான். ஆரம்ப நிலையிலேயே பள்ளியை விட்டு வெளியேறி விடுகிறான். அவனுடைய செயல்களால் அவன் தன் தாயுடன் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. பின்னர் அவர்கள் மற்றொரு கிராமத்தில் குடியேறுகின்றனர், அங்கு கணபதி குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் திறக்கிறார் (அவர் சரியாகப் படிக்கவில்லை என்றாலும்). கணபதிக்கு பொருத்தமான மணமகளைத் தேடும் கிராமத்து மக்கள் முயல்வதுடன் அடுத்தடுத்த காட்சிகள் நகைச்சுவை நிறைந்தவை. கணபதியின் தாயார் மற்ற ஊர் பெண்களுடன் தொலைதூர ஊர்களுக்கு புனித யாத்திரை சென்று அங்கேயே இறந்து விடுகிறார். கிராமவாசிகளின் நன்கொடையின் உதவியுடன் மணமகளின் தந்தைக்கு (அவர் உண்மையில் பெண்ணின் தந்தை அல்ல) கன்யாசுல்கம் செலுத்தி ஒரு பெண்ணை மணக்கிறார் கணபதி. ஆனால் அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிய வருகிறது. பெண்ணின் முதல் கணவர் கணபதி மீது தான் திருமணம் செய்த பெண்ணின் தந்தையுடன் சேர்ந்து வழக்குப் பதிவு செய்கிறார். கைதை தவிர்க்க அந்த கிராமத்தில் இருந்து கணபதி தப்பி ஓடுகிறார். இந்த புதினம் ஒரு வேடிக்கையான வகையில் முடிவடைகிறது, ஆசிரியர் திருமண விருந்தில் கையில் சூடான ரசத்தை பரிமாருபவர் ஊற்றுவதன் மூலம் தனது கனவிலிருந்து வெளியே வருகிறார். வானொலி தழுவல் ஸ்தானம் நரசிம்ம ராவ் இந்தக் கதையை இதே கணபதி என்ற பெயரில் வானொலி நாடகமாக தயாரித்தார். இது அகில இந்திய வானொலியில் 1960கள் மற்றும் 1970களில் தெலுங்கு மொழியில் ஒலிபரப்பப்பட்டது. இந்த நகைச்சுவை நாடகத்தைக் கேட்பதற்காக வானொலிப் பெட்டிகளுக்கு அருகில் மக்கள் குழுவாகக் கூடியிருந்தது அந்த நாட்களில் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. சான்றுகள் வெளி இணைப்புகள் Complete book of Ganapati (novel) in Internet Archives தெலுங்கு புதினங்கள் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரப் பண்பாடு நூலட்டை விடுபட்ட நூல்கள்
593677
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE
சோனு ஆனந்து சர்மா
சோனு ஆனந்து சர்மா (Sonu Anand Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு காது கேளாத இறகுப்பந்தாட்ட வீரராவார். 1975 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1997 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை காது கேளாதோர் ஒலிம்பிக்கு போட்டியில் சோனு ஆனந்து சர்மா இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். தேசிய அளவிலான துடுப்பாட்ட வீரரான சோமேசு சர்மாவை இவர் திருமணம் செய்து கொண்டார். சோமியா சர்மா மற்றும் சக்சம் சர்மா என்ற இரு குழந்தைகளைப் பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் பன்னாட்டு மகளிர் தினத்துடனும், தற்செயலாக இவரது 46 ஆவது பிறந்தநாளில், நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது. தில்லி அரசு மற்றும் பெண்கள் சமூகத்திற்கான தில்லி ஆணையம் அமைப்புகள் இணைந்து சோனு ஆனந்து சர்மாவுக்கு இந்த கௌரவத்தை வழங்கின. தொடர்புடைய இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற முதல் காதுகேளாத பெண்மணி என்ற பெருமையையும் இவர் பெற்றார். தொழில் சோனு ஆனந்து சர்மா 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியின் போது, காது கேளாதோர் ஒலிம்பிக்கில் அறிமுகமானார். மற்ற முக்கிய வீரர்களான ராசீவ் பாக்கா மற்றும் ரோகித் பாக்கர் ஆகியோரையும் உள்ளடக்கிய கலப்பு குழு போட்டியில் இவர் தங்கப் பதக்கம் வென்றார். 2009 ஆம் ஆண்டு கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கமில்லாமல் போனார். பன்னாட்டு மற்றும் உள்நாட்டு அளவில் பூப்பந்து விளையாடி ஓய்வு பெற்ற பிறகு, காது கேளாதோருக்கான பன்னாட்டு விளையாட்டுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக சேர்ந்தார். 2017 கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இறகுப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராகவும் இவர் பணியாற்றினார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1975 பிறப்புகள் இறகுப்பந்தாட்டம் இந்திய விளையாட்டு வீரர்கள் நாரி சக்தி விருது பெற்றவர்கள்
593679
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE
வேதிகா சர்மா
வேதிகா சர்மா (Vedika Sharma) பிறப்பு 2003) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனையாவார். காதுகேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடும் வீரராக இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2021 ஆம் ஆண்டுக்காக 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக்கு போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனது 19 வயதில் காது கேளாதோர் ஒலிம்பிக்கில் அறிமுகமானார். தொழில் 2021 ஆம் ஆண்டுக்கான கோடைகால காது கேளாதோர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வேதிகா சர்மா இறுதிப் போட்டியில் 207.2 புள்ளிகள் பெற்று பெண்களுக்கான 10 மீ காற்றுத் துப்பாக்கி பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். மேற்கோள்கள் 2003 பிறப்புகள் வாழும் நபர்கள் இந்திய விளையாட்டு வீரர்கள் குறிபார்த்து சுடும் போட்டிகள்
593681
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28I%29%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
தாலியம்(I) குளோரைடு
தாலியம்(I) குளோரைடு (Thallium(I) chloride) என்பது TlCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாலசு குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. நிறமற்ற இந்த உப்பு தாலியத்தை அதன் தாதுக்களில் இருந்து தனிமைப்படுத்தி தயாரிக்கும் செயல்முறையில் ஓர் இடைநிலையாக உருவாகிறது. பொதுவாக, தாலியம்(I) சல்பேட்டின் அமிலக் கரைசலை ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் கரையாத தாலியம்(I) குளோரைடு உருவாகும். இந்த திண்மப் பொருளானது சீசியம் குளோரைடு என்ற சேர்மத்தின் படிக அமைப்பின் மையக்கருவில் படிகமாக்குகிறது. தாலியம்(I) குளோரைடின் குறைந்த கரைதிறன் இரசாயனங்கள் தயாரிக்கும் செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டுடன் உலோக குளோரைடு அணைவுச் சேர்மங்களைச் சேர்த்து சூடுபடுத்தினால் தொடர்புடைய உலோக அறுபாசுப்பேட்டு வழிப்பெறுதிகள் உருவாகின்றன. இதன் விளைவாக வீழ்படிவாகும் தாலியம்(I) குளோரைடு வினை விளைபொருள் கலவையை வடிகட்டுவதன் மூலம் பிரிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்த வினையானது AgPF6 இன் பயன்பாட்டைப் போலவே உள்ளது. தவிர Tl+ இன் ஆக்சிசனேற்றம் இவ்வினையில் குறைவாக உள்ளது. அறை வெப்பநிலையில் தாலியம்(I) குளோரைடின் படிக அமைப்பு கனசதுர சீசியம் குளோரைடு வகை படிக அமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இது குளிர்விக்கப்படும்போது நேர்ச்சாய்சதுர தாலியம் அயோடைடு படிக வகைக்கு மாறுகிறது. இந்த நிலை மாறுதல் வெப்பநிலை கலந்துள்ள அசுத்தங்களால் பாதிக்கப்படலாம். KBr அடி மூலக்கூறுகளில் வளர்க்கப்படும் நானோமீட்டர் அளவிலான மெல்லிய தாலியம்(I) குளோரைடு படலங்கள் ஒரு பாறை உப்பு கட்டமைப்பை வெளிப்படுத்துகின்றன. அதே சமயம் மைக்கா அல்லது சோடியம் குளோரைடு மீது படியும் படலங்கள் வழக்கமான CsCl வகையைச் சேர்ந்தவையாக உள்ளன. மிகவும் அரிதான கனிமமான லாஃபோசைட்டு Tl(Cl,Br), தாலியம்(I) குளோரைடின் இயற்கையாகத் தோன்றும் கனிம வடிவமாகும். அனைத்து தாலியம் சேர்மங்களைப் போலவே தாலியம்(I) குளோரைடும் மிகவும் நச்சுத்தன்மையுடையதாக காணப்படுகிறது. இருப்பினும் இதன் குறைந்த கரைதிறன் நச்சுத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. மேற்கோள்கள் புற இணைப்புகள் தாலியம்(I) சேர்மங்கள் குளோரைடுகள்
593682
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28II%29%20%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
யூரோப்பியம்(II) சல்பேட்டு
யூரோப்பியம்(II) சல்பேட்டு (Europium(II) sulfate) என்பது EuSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். α மற்றும் β வடிவ யூரோப்பியம்(II) சல்பேட்டு பல்லுரு தோற்ற சேர்மங்கள் உருவாகின்றன. β வடிவ யூரோப்பியம்(II) சல்பேட்டு பேரியம் சல்பேட்டின் படிக உருவத்தை ஒத்துள்ளது. எனவே இது தண்ணீரில் கரையாது. கரையக்கூடிய யூரோபியம்(II) உப்புகளுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக யூரோப்பியம்(II) சல்பேட்டு உப்பு உருவாக்கப்படுகிறது. மேற்கோள்கள் யூரோப்பியம் சேர்மங்கள் சல்பேட்டுகள்
593685
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28III%29%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
யூரோப்பியம்(III) செலீனைடு
யூரோப்பியம்(III) செலீனைடு (Europium(III) selenide) என்பது Eu2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியத்தின் செலீனைடு உப்புகளில் இதுவும் ஒன்றாகும். உயர் வெப்பநிலையில் யூரோப்பியமும் செலீனியமும் வினைபுரிவதால் யூரோப்பியம்(III) செலீனைடு உருவாகிறது. யூரோப்பியம்(III) செலீனைடு செருமேனியம் இருசெலீனைடுடன் இணைந்து உருகி Eu2GeSe5 மற்றும் Eu2Ge2Se7 சேர்மங்களை உருவாக்குகிறது. அதிக வெப்பநிலையில் யுரேனியம் மற்றும் [[யுரேனியம் இருசெலீனைடுடன் வினைபுரிந்து EuU2Se5 சேர்மத்தைக் கொடுக்கிறது. மேற்கோள்கள் யூரோப்பியம் சேர்மங்கள் செலீனைடுகள்
593686
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
மோகன்பூர் சட்டமன்ற தொகுதி
மோகன்பூர் சட்டமன்றத் தொகுதி (Mohanpur Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது மற்றும் திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் பகுதியாக உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2023 மேலும் பார்க்கவும் திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல் மேற்கு திரிபுரா மாவட்டம் மேற்கோள்கள் மேற்கு திரிப்புரா மாவட்டம் திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள்
593687
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
தூலியம் செலீனைடு
தூலியம் செலீனைடு (Thulium selenide) என்பது Tm2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அதிக வெப்பநிலையில் தூலியம் மற்றும் செலீனியம் அல்லது தூலியம் ஆக்சைடு மற்றும் ஐதரசன் செலீனைடு ஆகியவற்றை வினைபுரியச் செய்வதன் மூலம் தூலியம் செலீனைடை தயாரிக்கலாம். அல்லது (py)3Tm(SePh)3 சேர்மத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம். ஆண்டிமனி முச்செலீனைடுடன் இருபடிச் சேர்மதிட்டத்தில் இணைந்து TmSb3Se6, Tm6Sb8Se21, TmSbSe3 and Tm8Sb2Se15 ஆகியவற்றை உருவாக்கலாம். மேற்கோள்கள் தூலியம் சேர்மங்கள் செலீனைடுகள்
593689
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
எர்பியம் செலீனைடு
எர்பியம் செலீனைடு (Erbium selenide) என்பது Er2Se3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அதிக வெப்பநிலையில் எர்பியம் மற்றும் செலீனியம் அல்லது எர்பியம் ஆக்சைடு மற்றும் ஐதரசன் செலீனைடு ஆகியவற்றை வினைபுரியச் செய்வதன் மூலம் எர்பியம் செலீனைடை தயாரிக்கலாம். Sc2S3 என்ற சேர்மத்தின் கட்டமைப்பில் Fddd என்ற இடக்குழுவில் நேர்சாய்சதுரப் படிகங்களாக இது உருவாகிறது. 1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது மக்னீசியம் செலீனைடுடன் வினைபுரிந்து MgEr2Se4 சேற்மத்தைக் கொடுக்கிறது. மேற்கோள்கள் மேலும் படிக்க எர்பியம் சேர்மங்கள் செலீனைடுகள்
593692
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
இந்திய கருமுதுகு மரங்கொத்தி
இந்திய கருமுதுகு மரங்கொத்தி (அறிவியல் பெயர்: Chrysocolaptes festivus festivus) என்பது கருமுதுகு மரங்கொத்தியின் துணையினம் ஆகும். இப்பறவையானது நடு, தென்னிந்தியாவில் காணப்படுகிறது. விளக்கம் இந்திய கருமுதுகு மரங்கொத்தியானது புறாவை விடச் சிறியதாக சுமார் 29 செ.மீ. நீளம் இருக்கும். இதன் உச்சந்தலையும் கொண்டையும் ஆழ்ந்த சிவப்பாக இருக்கும். கழுத்தின் இரு பக்கங்களிலும் காணப்படும் வெண்மை முதுகு நோக்கிச் சென்று மேல் முதுகில் இணைந்து V போன்ற தோற்றம் அளிக்கும். கீழ் முதுகும் வாலும் கருப்பாக இருக்கும். இறக்கைகள் பொன்நிறம் தோய்ந்த ஆலிவ் நிறத்தில் இருக்கும். மார்பும் வயிறும் மஞ்சள் தோய்ந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். மார்பின் தூவிகள் கறுப்பு விளிம்பு பெற்று மார்பில் செதில்கள் அமைந்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும். பெண் பறவை தோற்றத்தில் ஆண் பறவையை ஒத்து உச்சந்தலையும் கொண்டையும் மட்டும் பொன்னிற மஞ்சளாக (ஆழ்ந்த சிவப்பிற்கு பதிலாக) இருக்கும். பரவலும் வாழிடமும் இந்திய கருமுதுகு மரங்கொத்தியானது நடு, தென்னிந்தியாவில் காணப்படுகிறது. தென்னிந்தியா முழுவதும் இலையுதிர் காடுகளிலும், புதர்க் காடுகளிலும், மரக் காடுகளிலும் காணப்படுகிறது. நடத்தை இந்திய கருமுதுகு மரங்கொத்தியானது தனித்தோ அல்லது இணையாகவோ மரங்களை அலகால் தட்டியும், தரையிலும் இரை தேடித் திரியும். காட்டுத் தீயால் எரிந்த புல்வெளிகளில் இவை விரும்பித் திரிவது அறியப்பட்டுள்ளது. எறும்புகளையும், மரத்தை துளைக்கும் வண்டுகளையும் இது உணவாகக் கொள்கிறது. பொன்முதுகு மரங்கொத்தியைப் போல சிரிக்கும் குரலில் கிறீச் எனக் கத்தக்கூடியது. இவை நவம்பர் முதல் ஏப்ரல் வரை இனப்பெருகம் செய்கின்றன. மரத்தின் காய்ந்த கிளைகளில் குடைந்த பொந்தில் ஒன்று அல்லது இரண்டு வெள்ளை முட்டைகளை இடும். மேற்கோள்கள் மரங்கொத்திகள் தென்னிந்தியப் பறவைகள்
593698
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
செம்பட்டை பூங்கொத்தி
செம்பட்டை பூங்கொத்தி (Red-banded flowerpecker)(டைகேயம் எக்சிமியம்) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழ்விடம் மிதப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். மேற்கோள்கள் பூங்கொத்தி
593699
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
அல்மகேரா பூங்கொத்தி
அல்மகோரா பூக்கொத்தி (டைகேயம் சைசுடாசெப்சசு) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் உள்ள அல்மகேராவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது சமீபத்தில் புரு பூங்கொத்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது. மேற்கோள்கள் பூங்கொத்தி இந்தோனேசியப் பறவைகள் அகணிய உயிரிகள்
593703
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
கணநாத் பிரதான்
கணநாத் பிரதான் (Gananath Pradhan) இந்திய நாட்டின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1924 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சனதா கட்சியைச் சேர்ந்த இவர் ஒடிசாவில் உள்ள சம்பல்பூர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதியன்று தன்னுடைய 79 ஆவது வயதில் கணநாத் பிரதான் காலமானார். மேற்கோள்கள் புற இணைப்புகள் Profile on Lok Sabha website 1924 பிறப்புகள் 2004 இறப்புகள் இந்திய அரசியல்வாதிகள் ஒடிசா அரசியல்வாதிகள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள்
593704
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
பழுப்புமஞ்சள் புள்ளி பொன்முதுகு மரங்கொத்தி
பழுப்புமஞ்சள் புள்ளி பொன்முதுகு மரங்கொத்தி (Chrysocolaptes lucidus) என்பது பிசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது பிலிப்பீன்சு தீவுகளான போகொல், லெய்டே, சமர், பிலிரான், பனான், மிண்டனாவோ, பாசிலன், சமல் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது சில நேரங்களில் பெரிய பொன்முதுகு மரங்கொத்தியின் துணையினமாகக் கருதப்படுகிறது. விளக்கம் புறாவை விடப் பெரியதான இப்பறவை சுமார் 31 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கொம்பு நிறமான பழுப்பு நிறத்திலும், விழிப்படலத்தின் வெளி வட்டம் சிவப்பாகவும் உள்வட்டம் இளமஞ்சள் கலந்த இளஞ்சிவப்பாக இருக்கும். கால்கள் கருஞ்சாம்பல் தோய்ந்த பசுமையாக இருக்கும். இந்த மரங்கொத்தியின் உச்சந்தலை கொண்டை ஆழ்ந்த சிவப்பாக இருக்கும். பிடரியும், பின் கழுத்தும் வெள்ளையாக இருக்கும். முதுகும் தோள்பட்டையும் பொன்நிறந்தோய்ந்த ஆலிவ் நிறமாக இருக்கும். பிட்டம் ஆழ்ந்த சிவப்பாக இருக்கும். வால் மேல் போர்வை இறகுகளும் வாலும் கறுப்பு நிறமாக இருக்கும். கன்னங்களும் மோவாயும் வெண்மை நிறமாக இருக்கும். கன்னங்களின் மீது இரு கறுப்புக் கோடுகள் தொடங்கி அவை தொண்டையின் பக்கங்களில் சேரும். மோவாய் முன் கழுத்து வழியாக அகன்ற கறுப்புக் கோடு செல்லக் காணலாம். பெண் பறவை தோற்றத்தில் ஆண் பறவையை ஒத்திருக்கும் என்றாலும் உச்சந்தலையும் கொண்டையும் மட்டும் கறுப்பாக வெண்புள்ளிகளோடு காட்சியளிக்கும். பரவலும் வாழிடமும் பழுப்புமஞ்சள் புள்ளி பொன்முதுகு மரங்கொத்தியானது தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் சார்ந்த பகுதிகளில் பசுமை மாறாக் காடுகளிலும், புதர் காடுகளிலும், சிறு காடுகளிலும் காணப்படுகிறது. கடற்கரை ஒட்டிய பகுதிகளில் காணப்படுவதில்லை. நடத்தை பழுப்புமஞ்சள் புள்ளி பொன்முதுகு மரங்கொத்தியானது இணையாக இரைதேடி பறந்து திரியும். மரத்திற்கு மரம் விரைவாக சத்தமிட்டவாறு பறக்கும். கூச்ச சுபாவமுள்ள இது மரங்களில் மறைந்து இருக்கும் என்பதால் இதனைக் காண்பது அரிது. மரங்களின் பின்னால் ஒளிந்து கொண்டு தலையையும், கழுத்தையும் காட்டக்கூடியது. இதன் கன்னங்களில் காணப்படும் வெண்கோடுகளைக் கொண்டு அடையாளம் காண இயலும். பூச்சிகளையும், அவற்றின் முட்டைகளையும் உணவாக கொள்ளும். அலறும் குரலில் சிரிப்பதுபோலக் கத்தக்கூடியது. இவை பொதுவாக திசம்பர் முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. தரையில் இருந்து இரண்டு மீட்டர் முதல் 20 மீட்டர் உயரம் வரையில் மரங்களில் பொந்து அமைக்கும். பொந்தானது எட்டு செ. மீ. விட்டத்தில் நீள் வட்டமாக இருக்கும். பொந்து முதலில் நீளவாக்கில் சென்று பின்னர் கீழ் நோக்கித் திரும்பி சுமார் 30 செ.மீ. ஆழம் கொண்டதாக இருக்கும். பொதுவாக இரு ஒரு வெள்ளை முட்டையை இடும். அரிதாக இரண்டு முட்டைகளை இடுவதும் உண்டு. மேற்கோள்கள் மரங்கொத்திகள் தென்னிந்தியப் பறவைகள்
593705
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
பழுப்பு முதுகு பூங்கொத்தி
Articles with 'species' microformats பழுப்பு முதுகு பூங்கொத்தி (Brown-backed flowerpecker)(டைகேயம் எவெரெட்டி) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இதன் விலங்கியல் பெயர் பிரித்தானியக் காலனித்துவ நிர்வாகி மற்றும் விலங்கியல் சேகரிப்பாளர் ஆல்பிரட் ஹார்ட் எவரெட்டை நினைவுகூருகிறது. பரவல் பழுப்பு முதுகு பூங்கொத்தி புரூணை, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. மேற்கோள்கள் பூங்கொத்தி
593721
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28II%29%20%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
யூரோப்பியம்(II) அயோடைடு
யூரோப்பியம்(II) அயோடைடு (Europium(II) iodide) என்பது EuI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈரிணைதிற யூரோப்பியம் நேர்மின்னயனியின் அயோடைடு உப்பு என்று இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது. தயாரிப்பு யூரோபியம்(II) அயோடைடை தயாரிக்க பல வழிமுறைகள் உள்ளன: யூரோப்பியம்(III) அயோடைடு சேர்மத்துடன் ஐதரசன் வாயுவை 350 °செல்சியசு வெப்பநிலையில் சேர்த்தால் ஒடுக்க வினை நிகழ்ந்து யூரோப்பியம்(II) அயோடைடு உருவாகும்: யூரோப்பியம்(III) அயோடைடு சேர்மத்தை 200 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் வெப்பச்சிதைவு வினை நிகழ்ந்து யூரோப்பியம்(II) அயோடைடு உருவாகும்: யூரோப்பியத்துடன் பாதரச(II) அயோடைடு சேர்த்து வினைபுரியச் செய்தாலும் யூரோப்பியம்(II) அயோடைடு கிடைக்கிறது: யூரோப்பியத்துடன் அமோனியம் அயோடைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் யூரோப்பியம்(II) அயோடைடு உருவாகும்: கட்டமைப்பு யூரோபியம்(II) அயோடைடு பல படிகத் தோற்றங்களைக் கொண்டுள்ளது. P 21/c (எண். 14) என்ற இடக்குழுவில் உள்ள யூரோபியம்(II) அயோடைடு ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பை ஏற்றுக்கொள்கிறது. Pbca (எண். 61) என்ற இடக்குழுவில் உள்ள யூரோபியம்(II) அயோடைடு நேர்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறது. திரவ அம்மோனியாவில் யூரோப்பியம் மற்றும் அம்மோனியம் அயோடைடு ஆகியவை குறைந்த வெப்பநிலையில் (200 கெல்வின்) வெப்பநிலையில் வினைபுரிந்து உருவாகும் யூரோபியம்(II) அயோடைடு Pnma (எண். 62) என்ற இடக்குழுவில் நேர்சாய்சதுரக் கட்டமைப்பை ஏற்கிறது. இது இசுட்ரோன்சியம் அயோடைடை ஒத்த படிகத் தோற்றத்தில் காணப்படுகிறது. மேற்கோள்கள் யூரோப்பியம் சேர்மங்கள் அயோடைடுகள்
593725
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
தங்கப் பிடரி பூங்கொத்தி
Articles with 'species' microformats தங்கப் பிடரி பூங்கொத்தி (Golden-rumped flowerpecker)(டைகேயம் அன்னே) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சிறு சுண்டாத் தீவுகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. அன்னா வெபர்-வான் போசுசின் நினைவாக இந்த சிற்றினம் பெயரிடப்பட்டது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடு ஆகும். மேற்கோள்கள் பூங்கொத்தி அகணிய உயிரிகள்
593726
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
புளோரெசு காகம்
Articles with 'species' microformats புளோரெசு காகம் (கோர்வசு புளோரென்சிசு) என்பது கோர்விடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. மேற்கோள்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம் இந்தோனேசியப் பறவைகள் அகணிய உயிரிகள் காக்கைகள்
593727
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஊதாக் காகம்
ஊதாக காகம் (Violet crow)(கோரசு வயோலாசியசு) என்பது இந்தோனேசியாவில் உள்ள செராம் தீவினைப் பூர்வீகமாகக் கொண்ட கோர்விடே என்ற காகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிற்றினமாகும். இது நீண்ட காலமாக மெலிந்த அலகு காகத்தின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் மரபணு ரீதியாக வேறுபட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. ஊதாக் காகங்கள் அடர் கருப்பு தலை மற்றும் சற்றே நீல கருப்பு உடல் மற்றும் மற்ற காகச் சிற்றினங்களை விடச் சற்று குறுகிய அலகினைக் கொண்டவை. மேற்கோள்கள் http://www.hbw.com/species/violet-crow-corvus-violaceus இந்தோனேசியப் பறவைகள்
593729
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோயில்
சத்திய வரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அரும்பாக்கம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். சத்திய வரதராஜ பெருமாள் கோயிலானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில், என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது. இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது. இக்கோயிலில் மூலவராக சத்திய வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி, பெருந்தாயார், சீதை சமேத இராமர், ஆண்டாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் பிரம்மோற்சவம், சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் GeoHack - அரும்பாக்கம் சத்ய வரதராஜ பெருமாள் கோயில் சென்னை மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்
593730
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மேற்குப் பகுதிகள் குறித்த மகா தாங் பதிவுகள்
மேற்குப் பகுதிகள் குறித்த மகா தாங் பதிவுகள் (Great Tang Records on the Western Regions) என்பவை சீன வரலாற்றுவரைவியலில் நடு சீனாவின் சங்கன் என்ற பகுதியில் இருந்து மேற்குப் பகுதிகளுக்கு யுவான் சுவாங் மேற்கொண்ட 19 ஆண்டு காலப் பயணம் குறித்த ஒரு குறிப்பு ஆகும். வடமேற்கு சீனாவில் தற்போதைய சிஞ்சியாங் அருகில் உள்ள பட்டுப் பாதைகளின் வழியாக இந்தப் பௌத்த அறிஞர் பயணம் மேற்கொண்டார். மேலும் நடு ஆசியா மற்றும் தெற்காசியாவில் இருந்த அண்டை பகுதிகள் வழியாகவும் பயணங்கள் மேற்கொண்டார். இந்த சீன பகுதிகள் தவிர்த்து தெற்கே காஞ்சிபுரம் வரையிலும், இந்தியாவின் வெளிப்புற விளிம்பு வழியாக யுவான் சுவாங் பயணம் மேற்கொண்டார். யுவான் சுவாங்கின் பயணங்கள் சீனா மற்றும் இந்தியாவின் பண்பாட்டுக் கலப்பு ஆய்வுகளில் ஒரு முக்கிய இடத்தை வரையறுத்து காட்டுவதோடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமான பண்பாட்டுக் கலப்பு ஆய்வுகளிலும் எல்லைகளை வரையறுக்கின்றன. யுவான் சுவாங்கின் புனிதப் பயணம் குறித்து மட்டுமல்லாமல் தாங் சீனாவின் சுற்றியிருந்த பட்டணங்கள் மற்றும் மாகாணங்கள் குறித்த இவரது குறிப்புகளையும் குறிப்பிடுகின்றன. இந்நூல் 646ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டது. 626 மற்றும் 645 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இவர் மேற்கொண்ட பயணங்களை விளக்கியது. யுவான் சுவாங்கின் ஒரு சீடரான பியாஞ்சி யுவான் சுவாங்கின் மேற்பார்வையின் கீழ் இந்நூலை ஓர் ஆண்டுக்கும் மேலாக தொகுத்தார். மேற்கோள்கள் பயண நூல்கள் சீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
593731
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
குழாய் காகம்
Articles with 'species' microformats இந்தோனேசியப் பறவைகள் அகணிய உயிரிகள் காக்கைகள் குழாய் காகம் (Piping crow)(கோரவசு தைபிகசு) என்பது கோர்விடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். மேற்கோள்கள்
593735
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
சீசியம் செலீனைடு
சீசியம் செலீனைடு (Caesium selenide) என்பது Cs2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அதிக வெப்பநிலையில் சீசியம் மற்றும் செலீனியம் ஆகியவற்றை வினைபுரியச் செய்வதன் மூலம் சீசியம் செலீனைடைத் தயாரிக்கலாம். என்ற இடக்குழுவில் எதிர் புளோரைட்டு கட்டமைப்பில் சீசியம் செலீனைடு படிகமாகிறது. கட்டமைப்பில் ஓர் அலகு செல்லிற்கு 4 அலகுகள் உள்ளன. இதே குழுவில் உள்ள மற்ற செலீனைடுகளும் ஒரே மாதிரியானவையாகும். மேற்கோள்கள் சீசியம் சேர்மங்கள் செலீனைடுகள்
593743
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பிலிப்பீன்சு சிறிய காகம்
பிலிப்பீன்சு சிறிய காகம் (Small crow)(கோர்வசு சாமாரென்சிசு) என்பது கோர்விடே குடும்பத்தின் கோர்வசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு பாசரின் பறவைச் சிற்றினம் ஆகும். இது முன்பு மெலிந்த காகத்தின் (கோர்வசு என்கா) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் தொகுதி பிறப்புச் சான்றுகள் இரண்டும் தனித்துவமான சிற்றினங்கள் என்பதைக் குறிக்கிறது. மேலும் இது பன்னாட்டு பறவையியலாளர்கள் சங்கத்தால் பிரிக்கப்பட்டது. வாழ்விடம் இது பிலிப்பீன்சு தீவில் மட்டுமே அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலக் காடுகள் ஆகும். துணையினங்கள் சிறிய காகச் சிற்றினம், இரண்டு துணையினங்களைக் கொண்டுள்ளது. ஒன்று வடக்கு பிலிப்பீன்சிலும் மற்றொன்று தெற்கிலும் காணப்படுகிறது. கோ. ச. சையெர்மாத்ரென்சிசு - வடக்கு பிலிப்பீன்சின் லூசோன் தீவு கோ. ச சமரென்சிஸ் - தெற்கு பிலிப்பீன்சில் சமர் மற்றும் மிண்டனாவோ மேற்கோள்கள் காக்கைகள் அகணிய உயிரிகள் பிலிப்பீன்சு பறவைகள்
593744
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பிசுமார்க் காகம்
பிசுமார்க் காகம் (Bismarck crow)(கோர்வசு இன்சுலாரிசு) என்பது பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் காணப்படும் ஒரு காகம் சிற்றினம் ஆகும். இது பல வகைப்பாட்டியலரால் டோரேசியன் காகத்தின் (கோ. ஓர்ரு) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இது ஒரு தனிச் சிற்றினமாகக் கருதப்படுகிறது. விளக்கம் பிசுமார்க் காகம் பெரிய, பெரும்பாலும் வெளிர்-நுனி கொண்ட அலகு மற்றும் வெளிர் நீல நிறக் கண் கொண்ட நடுத்தர அளவிலான முற்றிலும் கருப்பு நிறமுடைய காகம். பெரும்பாலான நேரங்களில் இது காடுகளின் திறந்த பகுதிகள் மற்றும் வன விளிம்பு வாழ்விடங்களில் காணப்படும். நகரங்களைச் சுற்றியும் அடிக்கடி காணப்படும். இதனுடைய குரல் குறுகிய, நாசி கரைவு குறிப்புகளைக் கொண்டுள்ளது. மேற்கோள்கள் காக்கைகள்
593753
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
செயற்கை நுண்ணறிவின் அறநெறிகள்
செயற்கை நுண்ணறிவின் அறநெறிகள் ethics of artificial intelligence) என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்புகளுக்கான அறநெறி ஆகும். இது தொழில்நுட்ப அறநெறிகள் புலத்தின் ஒரு கிளைப்பிரிவாக்ம். இது சில நேரங்களில், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை வடிவமைத்தல், செயலாக்கல், பயன்படுத்தல், கையாளுதல் பற்றிய மனிதர்களின் ஒழுக்க நடத்தை பற்றிய அக்கறையாக கருதப்படுகிறது.மேலும் எந்திர நெறிமுறைகள் எந்திரங்களின் நடத்தை குறித்த அக்கறையாக கொள்ளப்படுகிரது. தனிப்புல அறநெறி அணுகுமுறைகள் எந்திரனுக்கான அறநெறி " எந்திரன் அறவியல் " (சில நேரங்களில் " மனித எந்திர அறவியல் ") என்ற சொல் மனிதர்கள் எந்திரன்களைகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் மற்றும் நடத்துகிறார்கள் என்பதற்கான அறநெறியைக் குறிக்கிறது. எந்திரன் அறநெறி செநு வின் அறநெறியுடன் இடைவெட்டிக் கொள்கின்றன. எந்திரன்கள் அனைத்தும் புறநிலை எந்திரங்களாக மட்டுமே இருக்க,. செநு மென்பொருளாக மட்டுமே இருக்க முடியும். அனைத்து எந்திரன்களும் செநு அமைப்புகள் வழி செயல்படுவதில்லை , மேலும் அனைத்து செநு அமைப்புகளும் எந்திரன்கள் அல்ல. மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கவோ அல்லது பயனளிக்கவோ தனிப்பட தன்னாட்சியிலும் சமூக நீதியிலும் எந்திரன்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை எந்திரன் அறநெறி கருத்தில் கொள்கின்றத். எந்திரத்துக்கான அறநெறி எந்திர அறநெறி என்பது செயற்கை ஒழுக்க முகவர்களை, அதாவது, எந்திரன்களை அல்லது செயற்கை அறிவார்ந்த கணினிகளை வடிவமைப்பதில் அக்கறை கொண்ட ஆராய்ச்சித் துறையாகும். இந்த முகவர்களின் தன்மையைப் புரிந்துகொள்ள , முகமை, பகுத்தறிவு முகமை, அறநெறி முகமை, செயற்கை முகமை ஆகியவற்றின் செந்தரப் பான்மைகள் பற்றிய சில மெய்யியல் எண்ணக்கருக்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இவை அவற்றின் வடிவமைப்பு முறையுடன் தொடர்புடையவை. ஐசக் அசிமோவ் 1950களில் தனது எந்திரன் நடத்தையில் இந்தச் சிக்கலைக் கருத்தில் கொண்டார். அவரது ஆசிரியர் ஜான் டபிள்யூ. காம்ப்பெல் இளவலின் வற்புறுத்தலின் பேரில் , செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை ஆள, எந்திரனியலின் மூன்று விதிகளை முன்மொழிந்தார். அவரது பணியின் பெரும்பகுதி அவரது மூன்று விதிகளின் எல்லைகளைச் சரிபார்ப்பதற்காக செலவிடப்பட்டது , அவை எங்கு உடைக்கும் அல்லது எங்கு முரண்பாடான அல்லது எதிர்பாராத நடத்தையை உருவாக்கும் என்பதைப் பார்க்கவே செலவிடப்பட்டது. எந்தவொரு நிலையான விதிகளும் சாத்தியமான அனைத்து சூழ்நிலைகளையும் போதுமான அளவு எதிர்பார்க்க முடியாது என்று அவரது பணி கூறுகிறது. மிக அண்மையில் கல்வியாளர்களும் பல அரசுகளும் செயற்கை நுண்ணறிவை பொறுப்பேற்க முடியும் என்ற கருத்துக்கு அறைகூவல் ஏற்பட்டுள்ளன. 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தால் கூட்டப்பட்ட ஒரு குழு , செநு என்பது அதன் உற்பத்தியாளர்களின் அல்லது அதன் உரிமையாளரின் / ஆளுபவரின் பொறுப்பு என்பதை தெளிவுபடுத்த அசிமோவின் விதிகளைத் திருத்தியது. 2009 இல் சுவிட்சர்லாந்தின் உலொசான்னேவின் எகோல் பாலிடெக்னிக் பெடரலில் உள்ள நுண்ணறிவு அமைப்புகளின் ஆய்வகத்தில் ஒரு செய்முறையின்போது , எந்திரன்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க திட்டமிடப்பட்டனர். (ஒரு நன்மை பயக்கும் வளத்தைத் தேடுவதிலும் , நச்சுநிலையைத் தவிர்ப்பதிலும்) இறுதியில் நன்மை பயக்கும் சான்றைப் பதுக்குவதற்கான முயற்சியில் ஒருவருக்கொருவர் பொய்சொல்ல கற்றுக்கொண்டனர். சில வல்லுர்களும் கல்வியாளர்களும் படைத்துறை, குறிப்பாக எந்திரன்களுக்கு ஓரளவு தன்னாட்சி செயல்பாடுகள் வழங்கப்படும்போது எந்திரன்களைப் போருக்குப் பயன்படுத்துவது, குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அமெரிக்க கடற்படை ஒரு அறிக்கைக்கு நிதியளித்துள்ளது. இது படைத்துறை எந்திரன்கள் மிகவும் சிக்கலானதாக மாறும்போது , தன்னாட்சி முடிவுகளை எடுக்கும் திறனின் தாக்கங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்திற்கான கழகத்தின் தலைவர் இந்த சிக்கலைக் கணிக்க ஒரு ஆய்வை ஏற்படுத்தியுள்ளார். அவை மனித தொடர்புகளைப் பின்பற்றக்கூடிய மொழியைக் கையகப்படுத்தும் கருவி போன்ற நிரல்களை சுட்டிக்காட்டுகின்றன. சில கணினிகள் மனிதர்களை விட அறிவாளிகளாக இருக்கும் காலம் வரக்கூடும் என்று வெர்னர் விங்கே முன்கணித்தார். அவர் இந்த நிலையை அவர் " ஒருங்குதிறம் " என்று அழைக்கிறார். இது மனிதர்களுக்கு ஓரளவு மிகவும் தீங்கானதாக அமையலாம் என்று அவர் கூறுகிறார். இது ஒருங்குநிலைவாத மெய்யியலால் விவாதிக்கப்படுகிறது. எந்திர நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் " நட்புறு செநு " வை உருவாக்க வேண்டியதன் தேவையைப் பரிந்துரைக்கிறது , அதாவது செநு வுடன் ஏற்கனவே நிகழும் முன்னேற்றங்கள் செநு வை உள்ளார்ந்த நட்பாகவும் மனிதாபிமானமாகவும்றைருக்கும்படி மாற்றுவதற்கான முயற்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. ஒரு செநு அறநெறி முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டதா என்பதைப் பார்க்க செய்முறைகளை உருவாக்குவது குறித்து விவாதங்கள் நடந்து உள்ளன. தூரிங் செய்முறை தவறாக உள்ளது என்றும் , அதில் தேர்ச்சி பெற ஒரு செநு வின் தேவை மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் ஆலன் வின்பீல்டு முடிவாகக் கூறுகிறார். முன்மொழியப்பட்ட மாற்று செய்முறை, அறநெறி தூரிங் செய்முறை என்று அழைக்கப்படுகிறது. அவர் செநுவின் முடிவு அறநெறியுள்ளதா அல்லது அறநெறியற்றதா என்பதை பல மதிப்பீட்டாளர்கள் வழி தீர்மானிப்பது தற்போதைய செய்முறையை மேம்படுத்தும் என்றார். 2009 ஆம் ஆண்டில் , எந்திரன்கள்கள், கணினிகளின் சாத்தியமான தாக்கமும் தன்னிறைவும் பெறலாம் . அதனால் அவை தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க முடியும் என்ற கற்பனையான சாத்தியத்தின் தாக்கம் குறித்து விவாதிக்க செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்திற்கான கழகம் ஏற்பாடு செய்த ஒரு மாநாட்டில் கல்வியாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் கலந்து கொண்டனர். கணினிகளும் எந்திரன்கள் எந்த அளவிற்கு தன்னாட்சி பெற முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகள், எந்த அளவிற்கு அச்சுறுத்தல் அல்லது இடரை ஏற்படுத்தும் திறன்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து அவர்கள் விவாதித்தனர். சில எந்திரன்கள் தாங்களாகவே மின் வாயில்களைக் கண்டறிவது, ஆயுதங்களுடன் தாக்குவதற்கான இலக்குகளைத் தானாகத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான அரைத் தன்னாட்சி முறைகளைப் பெற்றுள்ளன என்று அவர்கள் குறிப்பிட்டனர். சில கணினி தீநிரல்கள் நீக்கப்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் அவை " காக்ரோச் நுண்ணறிவை " அடைந்துள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அறிவியல் புனைகதைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி தன்னுணர்வு சாத்தியமில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர் , ஆனால் பிற சாத்தியமான தீங்குகளும் இடர்களும் இருந்தன. இருப்பினும் , அறநெறித் திறனுடனருள்ள எந்திரன்களை நடப்புக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு சிறப்பு தொழில்நுட்பச் சாத்தியம் உள்ளது. எந்திரன்கள் அறநெறி மதிப்புகளைப் பெறுவது குறித்த ஒரு கட்டுரையில் , நாயெப் அல் - ரோதான் நரம்பியல் சில்லுகளின் வழக்கைக் குறிப்பிடுகிறார். இது மனிதர்களைப் போலவே தகவல்களை நேரியல் அல்லாத முறையிலும் , மில்லியன் கணக்கானவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட செயற்கை நரம்பன்களுடன் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நரம்பியல் தொழில்நுட்பம் உட்பொதித்த எந்திரன்கள் தனித்துவமான மனிதனைப் போன்ற வழியில் அறிவைக் கற்றுக் கொள்ளவும் மேம்படுத்தவும் முடியும். தவிர்க்க முடியாமல் இது போன்ற எந்திரன்கள் உலகத்தைப் பற்றி எந்தச் சூழலில் கற்றுக்கொள்வார்கள் , யாருடைய ஒழுக்கநெறியைப் பெறுவார்கள் அல்லது அவை மனித ' பலவீனங்களை ' வளர்த்துக் கொள்கின்றார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஒழுக்க எந்திரன்கள்: எந்திரன்களுக்கு நல்லது, கெட்டது உணர கற்பித்தல் எனும் வெண்டெல் வால்லாக், கொலின் ஆலன் எழுதிய நூலில் , எந்திரன்களுக்குச் சரியானவற்றையும் தவறானவற்றையும் கற்பிக்கும் முயற்சிகள் , நவீன அறநெறிக் கோட்பாட்டின் இடைவெளிகளை நிரப்ப மனிதர்களை ஊக்குவிப்பதாலும் , செய்முறை ஆய்வுக்கு ஒரு தளத்தை வழங்குவதாலும் மனித அறநெறியைப் பற்றிய புரிதலை மேம்படுத்தும் என்று முடிவு செய்தனர். எடுத்துக்காட்டாக , எந்த குறிப்பிட்ட கற்றல் நெறிநிரல்களை எந்திரங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற விவாதத்துக்குரிய சிக்கலுக்கான அறநெறியை இது அறிமுகப்படுத்தியுள்ளது. நிக் போசுட்டிரோமும், எலியேசர் யுட்கோவ்சுகியும் முடிவெடுப்புத் தரு முறைகளுக்காக (ஐடி3ஐ போன்ற நரம்பியல் வலைபின்னல்கள், மரபணு நெறிநிரல்கள்) வாதிடுகின்றனர் , ஏனெனில் முடிவெடுப்புத் தரு வெளிப்படைத்தன்மை, முன்கணிப்பு போன்ற நவீன சமூக விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிகிறது (எ. கா. தீர்ப்பைப் பாருங்கள் நிரலி), அதே நேரத்தில் கிறிசு சாந்தோசு - லாங் எந்த அகவையினரின் விதிமுறைகளும் மாற இசைவுதர வேண்டும் என்ற அடிப்படையில் எதிர் திசையில் வாதிட்டார். மேலும் இந்தக் குறிப்பிட்ட விதிமுறைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியாத இயற்கையான தோல்வி, மனிதர்கள் குற்றவியல் இணையக் களவாணிகளால் தாக்கப்படுவதைக் குறைப்பதில் சாத்தியமாகிறது. ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் செநு ஆளுகை மையத்தின் 2019 அறிக்கையின்படி , 82% அமெரிக்கர்கள் எந்திரன்கள், செநுவைக் கவனமாக கையாள வேண்டும் என்று நம்புகிறார்கள். கண்காணிப்பு, போலி உள்ளடக்கத்தை இணையத்தில் பரப்புவதில் செநு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட கவலைகள் (அவை செநு உதவியுடன் உருவாக்கப்பட்ட காணொலிகள் பேச்சொலிகள் உள்ளடக்கும்போது ஆழமான போலிகளாக மாறுகின்றன), தரவுத் தனியுரிமை மீறல் சார்புநிலை, தன்னாட்சி ஊர்திகள், உளவு விமானங்கள் பணியமர்த்துதல், மனித கட்டுப்படுத்தல் சார்ந்த சார்புநிலை போன்றன தேவையற்றனவாகும். செயற்கை நுண்ணறிவின் அறநெறிக் கோட்பாடுகள் செநு வுக்கான 84 அறநெறி வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்வதில் 11 கொள்கைகள் காணப்பட்டன. அவை, வெளிப்படைத்தன்மை, நீதி, நேர்மை, பொறுப்பு, தனியுரிமை, நன்மை, தற்சார்பு, தன்னாட்சி, நம்பிக்கை, நிலைத்தன்மை, கண்ணியம், ஒற்றுமை என்பனவாகும் . உலூசியானோ புளோரிடியும் ஜோழ்சு கவுல்சும் உயிர் அறநெறிக்கான நான்கு கொள்கைகளால் அமைக்கப்பட்ட செநு கொள்கை அறநெறிக் கட்டமைப்பை உருவாக்கினர். அவை நன்மை, தீமை, தன்னாட்சி, நீதி என்பனவாகும். மேலும் ஒரு செநு செயல்படுத்தும் கூடுதல் கொள்கையாக விளக்கமுடியாத தன்மை அமைகிறது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், திறந்த வாயில் பில் கிப்பார்டு வாதிடுகிறார் , ஏனெனில் செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள் எதிர்கால மனிதகுலத்தின் பேராளர்கள். எனவே அவர்களின் முயற்சிகளில் வெளிப்படையாக இருக்க வேண்டிய அறநெறிக் கடமை உள்ளது. பென் கோர்ட்செல்லும் டேவிடு கார்ட்டும் ஓப்பன்காகு எனும் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டை திறந்த வாயில் கட்டமைப்பாக உருவாக்கினர். திறந்த செநு என்பது வணிக ஈட்டுதல் நோக்கற்ற செநு ஆராய்ச்சி நிறுவனமாகும் , இது எலோன் மசுக்கு சாம் ஆல்ட்மன்ன் பிறரால் மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் திறந்த வாயில் செநு உருவாக்கப்பட்டது. இன்னும் பல திறந்த வாயில் செநு முன்னேற்றங்கள் உள்ளன. குறிமுறை திறந்த வாயிலாக மாற்றுவது அதை புரிந்துகொள்ளக்கூடியதாக மாற்றாது , இது பல வரையறைகளால் AI குறிமுறைகளால் ஆகியதால் வெளிப்படையானது அல்ல. IEEE செந்தரக் கழகம் தன்னாட்சி அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை குறித்த தொழில்நுட்பச் செந்தரத்தை வெளியிட்டுள்ளது. IEEE 7001 - 2021.செந்தரம் பல்வேறு பங்குதாரர்களுக்கான வெளிப்படைத்தன்மையின் பல அளவுகோல்களை ஐஇஇஇ முயற்சிவழி அடையாளம் காட்டுகிறது. மேலும் , சமகால செயற்கை நுண்ணறிவின் முழுத்திறனையும் சில நிறுவனங்களுக்கு வெளியிடுவது ஒரு பொதுவான கெட்ட செயலாக மாறலாம் , அதாவது நன்மையை விட அதிக அழிவையே அது ஏற்படுத்தும் என்ற கவலை உள்ளது. எடுத்துக்காட்டாக , மைக்ரோசாப்ட் முகம் அதன் ஏற்பு மென்பொருளை உலகளாவிய அணுகலுக்கு இசைவு தருவது குறித்து கவலை தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் இந்த தலைப்பில் ஒரு இயல்பிகந்த வலைப்பதிவை வெளியிட்டது. அது சரியானதைச் செய்ய அரசின் ஒழுங்குமுறையை கேட்கிறது. நிறுவனங்கள் மட்டுமல்லாமல் , பல ஆராய்ச்சியாளர்கள், குடிமக்கள், வழக்கறிஞர்கள் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையாகவும் , அதன் வழி மனித பொறுப்புக்கூறல் மூலமாகவும் அரசின் ஒழுங்குமுறையைப் பேணப் பரிந்துரைக்கின்றனர். இந்தச் செயல்தந்திரம் புதுமைக்கான வேகத்தை குறைக்கும் என்று சிலர் கவலைப்படுவதால் இது விவாதத்துக்குரியதாக நிறுவப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை நீண்ட காலத்திற்கு புதுமைகளை ஆதரிக்கக்கூடிய முறையான நிலைப்புக்கு வழிவகுக்கிறது என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர். OECD, UN, EU, இன்னும் பல நாடுகள் தற்போது செநுவை ஒழுங்குபடுத்துவதற்கும் பொருத்தமான சட்ட கட்டமைப்புகளைக் கண்டுபிடிப்பதற்குமான உத்திகளில் பணியாற்றி வருகின்றன. 2019 ஜூன் 26 அன்று செயற்கை நுண்ணறிவுக்கான ஐரோப்பிய ஆணையத்தின் உயர் மட்ட வல்லுனர் குழு (AI HLEG) அதன் " நம்பகமான செயற்கை நுண்ணறிவு கொள்கையையும் முதலீட்டு பரிந்துரைகளையும் " வெளியிட்டது. " நம்பகமான செநுவு க்கான அறநெறி வழிகாட்டுதல்கள் " 2019, ஏப்பிரல் வெளியீட்டிற்குப் பிறகு AI HLEG இன் இரண்டாவது வழங்கல் இதுவாகும். ஜூன் AI HLEG பரிந்துரைகள் மனிதர்களும் சமூகமும் - ஆராய்ச்சியும் , கல்வித்துறையும் தனியார் துறையும் பொதுத்துறையும். ஐரோப்பிய ஆணையம் ஆகிய நான்கு முதன்மைக் கருப்பொருள்களை உள்ளடக்கியது. , " எச். எல். இ. ஜி. யின் பரிந்துரைகள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், முன்னேற்றம், புத்தாக்கம், அத்துடன் தொடர வாய்ப்புள்ள இடர்கள் ஆகிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கான வாய்ப்புகளின் பரிந்துரைகளைச் சுட்டுகின்றன. மேலும், பன்னாட்டு அளவில் செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் கொள்கைகளை வடிவமைப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறுகிறது. ஒழுங்குமுறைக்கு கூடுதலாக தீங்கு விளைவிப்பதைத் தடுக்க , செநுவைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் நம்பகமான செநுவின் கொள்கைகளுக்கு ஏற்ப நம்பகமான செயற்கை நுண்ணறிவை உருவாக்கி பயன்படுத்துவதில் முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். மேலும் இட்ர்களைத் தணிப்பதற்கான பொறுப்புக்கூற வேண்டும். 2021 ஏப்ரல் 21 அன்று ஐரோப்பிய ஆணையம் செயற்கை நுண்ணறிவு சட்டத்தை முன்மொழிந்தது. அறநெறி அறைகூவல்கள் செநு அமைப்புகளில் உள்ள சார்புநிலை முகம், குரல் உணர்தல் அமைப்புகளில் செநு பேரளவில் உள்ளார்ந்ததாக மாறிவிட்டது. இந்த அமைப்புகள் சில உண்மையான வணிக பயன்பாடுகளைக் கொண்டுள்ளதோடு, அவை மக்களை நேரடியாக பாதிக்கின்றன. இந்த அமைப்புகள் அதன் மனித படைப்பாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சார்புநிலைகளாலும் பிழைகளாலும் பாதிக்கப்படுகின்றன. மேலும் இந்த செநு அமைப்புகளைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படும் தரவுகளும் சார்புநிலைகளைக் கொண்டிருக்கலாம். எடுத்துகாட்டாக , மைக்ரோசாப்ட், ஐபிஎம், ஃபேஸ்++ நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட முக உணர்தல் நெறிநிரல்கள் அனைத்தும் மக்களின் பாலினத்தைக் கண்டறியும் போது சார்புநிலைகளைக் கொண்டிருந்தன. இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளால் கருப்புத் தோல் ஆண்களின் பாலினத்தை விட வெள்ளைத் தோல் ஆண்களின் பாலினத்தை மட்டுமே மிகவும் துல்லியமாக கண்டறிய முடிந்தது. மேலும் , 2020 ஆம் ஆண்டு ஆய்வில் அமேசான், ஆப்பிள், கூகிள், ஐபிஎம், மைக்ரோசாப்ட் ஆகியவற்றின் குரல் உணர்தல் அமைப்புகள் வெள்ளை மக்களை விட கறுப்பின மக்களின் குரல்களை படியெடுப்பதில் அதிக பிழை விகிதங்களைக் கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்தன. மேலும் , அமேசான் செநு பணியமர்த்தலிலும் ஆட்சேர்ப்பிலும் பயன்பாட்டை முன்னிறுத்தியது. ஏனெனில் நெறிநிரல் பெண் வேட்பாளர்களை விட ஆண் வேட்பாளர்களுக்குச் சாதகமாக இருந்தது. ஏனென்றால் , அமேசானின் அமைப்பு 10 ஆண்டு காலப்பகுதியில் திரட்டப்ப்பட்ட தரவுகளை வைத்து பயிற்சி பெற்றது , அவை பெரும்பாலும் ஆண் தரவாளர்களிடமிருந்து வந்தவையாகும்.. சார்புநிலை பல வழிகளில் நெறிநிரல்களில் ஊடுருவலாம். செநு அமைப்புகளின் சார்புநிலை எவ்வாறு அறிமுகமாகிறது என்பதற்கான மிக சரியான பார்வை என்னவென்றால் , இது அமைப்பைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தும் வரலாற்றுத் தரவுகளுக்குள் உட்பொதிந்துள்ளது. எடுத்துகாட்டாக , அமேசானின் செநு வழி இயங்கும் ஆட்சேர்ப்புக் கருவி, பல ஆண்டுகளாக திரட்டப்பட்ட அதன் சொந்த ஆட்சேர்ப்பு தரவுகளுடன் பயிற்சி பெற்றது , அந்த நேரத்தில் வெற்றிகரமாக வேலைபெற்ற தரவாளர்கள் பெரும்பாலும் வெள்ளை ஆண்கள் ஆகும். இதன் விளைவாக, நெறிநிரல்கள் வரலாற்றுத் தரவுகளிலிருந்து (சார்புநிலையுடைய) வடிவத்தைக் கற்றுக்கொண்டன , மேலும் இந்த வகையான தரவாளர்கள் வேலை பெறுவதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று நிகழ்கால / எதிர்காலத்திற்கான கணிப்புகளை உருவாக்கினர். எனவே செயற்கை நுண்ணறிவு முறையால் எடுக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முடிவுகள் பெண், சிறுபான்மை மக்களுகளுக்கு எதிரான பக்கச்சார்பானவை யாகும். பிரீட்மன், நிசென்பாம் ஆகியோர் கணினி அமைப்புகளில் மூன்று வகையான சார்புநிலைகளை அடையாளம் காண்கின்றனர். அவை, தற்போதுள்ள சார்புநிலை, தொழில்நுட்பச் சார்புநிலை, உருவாகும் சார்புநிலை ஆகியன ஆகும். இயற்கையான மொழிச் செயலாக்கத்தில் சிக்கல்கள் உரை பனுவலில் இருந்து எழலாம். வெவ்வேறு சொற்களுக்கு இடையிலான உறவுகளைப் பற்றி அறிய நெரிநிரல் பயன்படுத்தும் மூலச் சொற்பொருளில் இருந்து எழலாம். ஐபிஎம், கூகிள் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்த சார்புநிலைகளை ஆராய்ச்சி செய்து தீர்க்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. செநு அமைப்புகளைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படும் தரவுகளுக்கான ஆவணங்களை உருவாக்குவதே சார்புநிலையை தீர்ப்பதற்கான ஒரு தீர்வாகும். செயல்முறை சுரங்கம் என்பது நிறுவனங்கள் முன்மொழியப்பட்ட செநு விதிமுறைகளுக்கு இணங்குவதை அடைய ஒரு முதன்மையான கருவியாக இருக்கலாம். பிழைகளை அடையாளம் காண்பதால் கண்காணிப்பு செயல்முறைகள், முறையற்ற செயலாக்கம், பிற செயல்பாடுகளுக்குக் காரணமான மூலமுதல் காரணங்களை அடையாளம் காணுதல் இயலும். இயந்திர கற்றலில் சார்புநிலைச் சிக்கல் மிகவும் குறிப்பிடத்தக்கதாக மாறக்கூடும் , ஏனெனில் தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம் போன்ற முதன்மைப் புலங்களுக்கு பரவுகிறது. மேலும் ஆழமான தொழில்நுட்ப புரிதல் இல்லாத பேரளவு மக்கள் இதைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். பல தொழில்துறைகளில் நெறிநிரல் சார்புநிலை ஏற்கனவே பரவலாக உள்ளது என்றும் , அதை அடையாளம் காணவோ சரிசெய்யவோ கிட்டத்தட்ட யாரும் முயற்சி செய்யவில்லை என்றும் சில வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். குடிமைச் சமூகங்களின் சில திறந்த வாயில் கருவிகள் உள்ளன. அவை பக்கச்சார்பான செநுவுக்கு கூர்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகின்றன. எந்திரன் உரிமைகள் மனித உரிமைகள் அல்லது விலங்குகளின் உரிமைகளைப் போலவே மக்கள் தங்கள் எந்திரன்களுக்கும் அறநெறிக் கடமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து எந்திரன் உரிமைகள் ஆகும். எந்திரனின் உரிமைகள் (அதன் சொந்த பணியைச் செய்வதற்கான உரிமை போன்றவை) மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான எந்திரன் கடமையுடன் இணைக்கப்படலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. சமூகத்தின் முன் மனித கடமைகளுடன் மனித உரிமைகளை இணைப்பதற்கு ஒத்ததாகும். வாழ்வதற்கான உரிமை , சுதந்திரம் , சிந்தனை மற்றும் கருத்துச் சுதந்திரம் , சட்டத்தின் முன் சமத்துவம் ஆகியவை இதில் அடங்கும். எதிர்காலத்திற்கான நிறுவனம் இங்கிலாந்து வணிக, தொழில்துறை துறையால் இந்தச் சிக்கல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் குறிப்பிட்ட, விரிவான சட்டங்கள் எவ்வளவு விரைவில் தேவைப்படும் என்பதில் வல்லுனர்கள் உடன்படவில்லை. 2020 ஆம் ஆண்டுக்குள் போதுமான மனித எந்திரன்கள் தோன்றக்கூடும் என்று கிளென் மெக்கீ தெரிவித்தார் , அதே நேரத்தில் ரே குர்சுவெயில் இதை 2029 ஆம் ஆண்டுக்கு மாற்றினார். 2007இல் கூடிய மற்றொரு அறிவியலாளர்கள் குழு , எந்தவொரு போதுமான மேம்பட்ட அமைப்பும் இருப்பதற்கு முன்பு குறைந்தது 50 ஆண்டுகள் கடந்து செல்ல வேண்டும் என்று கருதியது. 2003 லோப்னர் பரிசு போட்டிக்கான விதிக ளை எந்திரன்கள் தங்கள் சொந்த உரிமைகளைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்தன.61. எந்தவொரு ஆண்டிலும் சர்ரே பல்கலைக்கழகம் அல்லது கேம்பிரிட்ஜ் மையம் உள்ளிட்ட பொது மக்கள் அணுகக்கூடிய திறந்த வாயில் நுழைவு வெள்ளிப் பதக்கம் அல்லது தங்கப் பதக்கத்தை வென்றால் , அந்த நுழைவு உருவாக்கத்திற்கு பொறுப்பான அமைப்புக்கு பதக்கமும் காசும் வழங்கப்படும். அத்தகைய அமைப்பு எதுவும் அடையாளம் காண முடியாவிட்டால் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உரிமை கோருபவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தால் , பதக்கமும், காசும் அமெரிக்காவில் அல்லது போட்டியின் இடத்தில் சட்டவியலாக இருக்கும் வரை அறக்கட்டளையில் நடத்தப்படும். அக்டோபர் 2017 இல், எந்திரியான சோஃபியாவுக்கு சவுதி அரேபியாவில் குடியுரிமை வழங்கப்பட்டது. இருப்பினும் சிலர் இதை ஒரு அர்த்தமுள்ள சட்ட அங்கீகாரத்தை விட விளம்பர உத்தி என்று கருதினர். சிலர் இந்த செயலை மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் வெளிப்படையாக இழிவுபடுத்துவதாகக் கருதினர். உணர்வுவாதத்தின் தத்துவம் அனைத்தும் உணர்வுள்ள உயிரினங்களுக்கும் முதன்மையாக மனிதர்களுக்கும் பெரும்பாலான மனிதரல்லாத விலங்குகளுக்கும் அறநெறிக் கருத்தை வழங்குகிறது. செயற்கை அல்லது அயன்மை நுண்ணறிவு உணர்ச்சிவசப்படுவதற்கான சான்றுகளைக் காட்டினால் , இந்த அறநெறி அவர்களுக்கு இரக்கம் காட்டப்பட வேண்டும் என்றும் மற்றும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறது. உரிமைகள் கோரும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவது தவிர்க்கக்கூடியது என்றும் அது செயற்கை நுண்ணறிவு முகவர்களுக்கும் மனித சமூகத்திற்கும் சுமையாக இருக்கும் என்றும் ஜோனா பிரைசன் வாதிட்டார். செயற்கை துன்பம் 2020 ஆம் ஆண்டில் பேராசிரியர் சீமோன் எடெல்மன்ன் , செநு நெறிமுறைகளின் வேகமாக வளர்ந்து வரும் துறையில் ஒரு சிறிய பகுதி மட்டுமே செநு கள் துன்பத்தை நுகர்வதற்ற்கான சாத்தியத்தை தீர்ப்பதாக குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த தகவல் கோட்பாடு போன்ற செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் விழிப்புணர்வுடன் இருக்கக்கூடிய சாத்தியமான வழிகளை நம்பகமான கோட்பாடுகள் கோடிட்டுக் காட்டிய போதிலும் இதற்கொரு விதிவிலக்கு தாமசு மெட்சிங்கர் என்று எடெல்மன்ன் குறிப்பிடுகிறார் , அவர் 2018 ஆம் ஆண்டில் நனவான செநு களை உருவாக்கும் இடரை ஏற்படுத்தும் கூடுதல் பணிகளுக்கு உலகளாவிய தடைக்கு அழைப்பு விடுத்தார். இந்தத் தடை 2050 வரை நடப்பில் இருக்கும் , மேலும் இடர்களை நன்கு புரிந்துகொள்வதிலும் அவற்றை எவ்வாறு குறைப்பது என்பதிலும் முன்னேற்றத்தைப் பொறுத்து அதை நீட்டிக்கலாம் அல்லது முன்கூட்டியே நீக்கம் செய்யலாம். மெட்சிங்கர் 2021 இல் இந்த வாதத்தை மீண்டும் வலியுறுத்தினார் , " செயற்கை துன்பத்தின் வெடிப்பை உருவாக்கும் இடரை எடுத்துக்காட்டுகிறது , ஏனெனில் ஒரு செநு மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத முனைப்பான வழிகளில் பாதிக்கப்படலாம். மாற்று படியாக்கச் செயல்முறைகள் அதிக அளவு செயற்கை நனவான நிகழ்வுகளை உருவாக்கக்கூடும். பல ஆய்வகங்கள் நனவான செநு களை உருவாக்க முயற்சிப்பதாக வெளிப்படையாகக் கூறியுள்ளன. செநுI களுக்கு நெருக்கமான அணுகல் உள்ளவர்களிடமிருந்து தன் விழிப்புணர்வுடன் வெளிப்படையாக இருக்க விரும்பாதவர்கள் ஏற்கனவே தற்செயலாக வெளிப்பட்டிருக்கலாம் என்று அறிக்கைகள் வந்துள்ளன. திறந்த செநு நிறுவனர் இலியா சுட்சுகெவர் 2022 பிப்ரவரியில் இன்றைய பெரிய நரம்பியல் வலைப்பின்னல்களை " சற்று நனவாக " இருக்கலாம் என்று எழுதியபோது இதில் அடங்கும். 2022 நவம்பரில் டேவிடு சால்மர்சு , ஜிபிடி - 3 போன்ற தற்போதைய பெரிய மொழி படிமங்கள் நனவை நுகர்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் , ஆனால் எதிர்காலத்தில் பெரிய மொழி படிமங்கள் நனவாகக்கூடும் என்பதற்கான முனைவான வாய்ப்பு இருப்பதாக அவர் கருதினார் என்றும் வாதிட்டார். மனித கண்ணியத்திற்கு அச்சுறுத்தல் 1976 ஆம் ஆண்டில் ஜோசப் வெய்சன்பாம் , செநு தொழில்நுட்பத்தை தன்மதிப்பு, கவனிப்பு தேவைப்படும் பதவிகளில் உள்ளவர்களை அச்சுறுத்தபயன்படுத்தக்கூடாது என்று வாதிட்டார் ஒரு வாடிக்கையாளர் பணிப் பேராளர் ( செநு தகவல் தொழில்நுட்பம் ஏற்கனவே தொலைபேசி அடிப்படையிலான ஊடாடும் குரல் பதில் அமைப்புகளுக்கு இன்று பயன்படுத்தப்படுகிறது) வயதானவர்களுக்கான ஒரு செவிலியர் (பமீலா மெக்கார்தக் தனது ஐந்தாவது தலைமுறை நூலில் இதை பரிந்துரைத்துள்ளார்) ஒரு படைவீரன் ஒரு நீதிபதி ஒரு காவல் அதிகாரி ஒரு மருத்துவர் ( இது கென்னத் கோல்பியால் 70 களில் முன்மொழியப்பட்டது) இந்த நிலைகளில் உள்ளவர்களிடமிருந்து உண்மையான கழிவிரக்க உணர்வுகள் நமக்குத் தேவை என்று வெய்சென்பாம் விளக்குகிறார். எந்திரன்களை மாற்றியமைக்க , செயற்கை நுண்ணறிவு அமைப்பு கழிவிரக்கத்தை உருவகப்படுத்த முடியாது என்பதால் நாம் காண்போம். செயற்கை நுண்ணறிவு இந்த வழியில் பயன்படுத்தப்பட்டால் மனிதக் கண்ணியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும். இந்த நிலைகளில் எந்திரன்களின் சாத்தியத்தை நாம் பயன்படுத்த இசைவது, நம்மைக் கணினிகளாக நாம் நினைப்பதன் வழி உருவாகும் மனித நனவின் " மனச்சோர்வை " நாம் பட்டரிந்திருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது என்று வெய்சன்பாம் வாதிடுகிறார். பெண்களுக்காகவும் சிறுபான்மையினருக்காகவும் பேசுவதை பமீலா மெக்கார்தக் எதிர்ப்பார்க்கிறார் " தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லாத தானியங்கி நீதிபதிகளையும் காவல்துறையையும் நாங்கள் விரும்புவதற்கான கட்டுத்தளைகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டும் ஒரு பக்கச்சார்பற்ற கணினியுடன் எனது வாய்ப்புகளை நான் பயன்படுத்த விரும்புகிறேன். இருப்பினும் கப்லானும் எய்ன்லெய்னும் செநு அமைப்புகள் தங்களுக்கு பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும் தரவுகளைப் போலவே நுண்ணறிவோடு உள்ளன என்று வலியுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அவற்றின் சாரநிலையில் வியப்பூட்டும் கணித வளைவு பொருத்தும் எந்திரங்களே தவிர வேறொன்றுமில்லை கடந்த காலத் நீதிமன்றத் தீர்ப்புகள் சில குழுக்களுக்கு பக்கச்சார்பைக் காட்டினால் நீதிமன்ற தீர்ப்பை ஆதரிக்க செநுவைப் பயன்படுத்துவது மிகவும் சிக்கலானதாக மாறுகிறது. ஏனெனில் அந்தச் சார்புநிலைகள் முறைப்படுத்தப்பட்டு உட்பொதிக்கப்படுகின்றன , இதனால் அவற்றைக் கண்டறிந்து போராடுவது இன்னும் கடினமாகிறது. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள் (மற்றும் சில மெய்யியலாளர்கள்) மனித மனதை ஒரு கணினி நிரலைத் தவிர வேறொன்றுமில்லை என்று பார்க்க ஆயத்தமாக இருந்தனர் (இப்போது கணக்கீட்டுவாதம் என்று அழைக்கப்படும் ஒரு நிலை). வெய்சன்பாம் இந்தப் புள்ளிகள் சார்ந்த செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மனித வாழ்க்கையை மதிப்பிடுகிறது என்று கூறுகிறார். செநு நிறுவனர் ஜான் மெக்கார்த்தி வெய்சென்பாம் விமர்சனத்தின் ஒழுக்கப்பகுதி தொனியை எதிர்க்கிறார். " ஒழுக்கநெறி என்பது முனைப்பானதாகவும் தெளிவற்றதாகவும் இருக்கும்போது அது தனிவல்லாண்மை அத்துமீறல் பயன்பாட்டை வரவழைக்கிறது " என்று அவர் எழுதுகிறார். பில் கிப்பார்டு , " மனித கண்ணியம் என்பது இருப்பின் தன்மை குறித்த நமது அறியாமையை அகற்ற தேவைப்படும் முயற்சியைக் குறிக்கிறது என்று எழுதுகிறார். தானோட்டிச் சீருந்துகளுக்கான இழப்பீடு தன்னாட்சி ஊர்திகளின் பரவலான பயன்பாடு மிகுந்து வருவதால் , முழுத் தன்னாட்சி ஊர்திகள் எழுப்பப்படும் புதிய அரைகூவல்கள் தீர்க்கப்பட வேண்டும். இந்தச் சீருந்துகள் விபத்துக்களில் சிக்கினால் , பொறுப்பேற்கும் தரப்பினரின் சட்டப் பொறுப்பு குறித்து அண்மையில் விவாதம் நடந்துள்ளது. ஓட்டுநர் இல்லாத கார் ஒரு நடைபாதையினர் மேல் மோதிய ஒரு அறிக்கையில் , ஓட்டுநர் ஊர்திகுள் இருந்தார் , ஆனால் கட்டுப்பாடுகள் முழுமையாக கணினிகளின் கைகளில் இருந்தன. இதனால் விபத்துக்கு யார் காரணம் என்ற குழப்பம் ஏற்பட்டது. 2018 மார்ச் 18 அன்று நடந்த மற்றொரு நிகழ்வில் , அரிசோனாவில் தன்னோட்டுநர் உபெரால் எலைன் கெர்சுபெர்கு தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தானியங்கி ஊர்தி சாலையைத் தன்னிச்சையாக வழிநடத்துவதற்காக கார்களையும் சில தடைகளையும் கண்டறியும் திறனைக் கொண்டிருந்தது , ஆனால் சாலையின் நடுவில் ஒரு நடப்பவர் இருப்பதை எதிர்பார்க்க முடியவில்லை. இது அவரது இறப்பிற்கு கார் நிறுவனத்தையா அல்லது ஓட்டுநரையா அல்லது பாதசாரியையா அல்லது அரசாங்கத்தையா யாரைப் பொறுப்பேற்க வைப்பது என்ற கேள்வியை எழுப்பியது. தற்போது தானோட்டிச் சீருந்துகள் அரைத்தன்னாட்சி ஊர்திகளாக கருதப்படுகின்றன , ஓட்டுநர் கவனம் செலுத்த வேண்டும்; தேவைப்பட்டால் கட்டுப்பாட்டை எடுக்க தயாராக இருக்க வேண்டும். தோல்வியுற்ற, எனவே தன்னாட்சி கூறுகளைப் பெரிதும் நம்பியிருக்கும் ஓட்டுநரை ஒழுங்குபடுத்துவது அரசுகளின் பொறுப்பாகும். அத்துடன் இவை வெறும் தொழில்நுட்பங்கள் என்று அவர்களுக்குக் கற்பித்தல் வசதியானது என்றாலும் அது ஒரு முழுமையான மாற்று அன்று. தன்னாட்சி ஊர்திகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு , இந்த சிக்கல்களை புதிய கொள்கைகள் வழி தீர்க்க வேண்டும். செயற்கை நுண்ணறிவின் ஆயுதமயமாக்கல்போக்கு சில வல்லுனர்களும் கல்வியாளர்களும் குறிப்பாக, எந்திரன்களுக்கு ஓரளவு தன்னாட்சி வழங்கப்படும்போது, போருக்கு எந்திரன்களைப் பயன்படுத்துவது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளனர். இது பற்றி, 2019 அக்டோபர் 31 அன்று, ஐக்கிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு, கண்டுபிடிப்பு வாரியம் ஒரு அறிக்கையின் வரைவை வெளியிட்டது , இது பாதுகாப்புத் துறையால் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான கொள்கைகளைப் பரிந்துரைத்தது , இது ஒரு மனித இயக்குபவர் எப்போதும் ' கருப்பு பெட்டியைப் ' பார்க்க முடியும் என்பதை உறுதி செய்யும். எனினும் , இந்த அறிக்கை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது ஒரு பெரிய கவலையாக உள்ளது. அமெரிக்க கடற்படை ஒரு அறிக்கைக்கு நிதியளித்துள்ளது , இது இராணுவ எந்திரன்கள் மிகவும் சிக்கலானதாக மாறும்போது , தன்னாட்சி முடிவுகளை எடுக்கும் திறனின் தாக்கங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. தன்னாட்சி பெற்ற எந்திரன்கள் மிகவும் திறம்பட முடிவுகளை எடுக்க முடியும் என்பதால் அவை மனிதாபிமானத்துடன் செயல்படக்கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கடந்த பத்தாண்டிற்குள் ஒதுக்கப்பட்ட அறநெறி பொறுப்புகளைப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளும் திறனுடன் தன்னாட்சி அதிகாரத்தில் முன்னைப்பான ஆராய்ச்சி நடந்துள்ளது. " எதிர்கால படைத்டுறை எந்திரன்களை வடிவமைக்கும் போது , எந்திரன்களுக்கு பொறுப்பை ஒதுக்குவதற்கான தேவையற்ற போக்குகளைக் கட்டுப்படுத்த இந்த முடிவுகள் பயன்படுத்தப்படலாம். இதன் விளைவாக எந்திரன்கள் யாரைக் கொல்ல வேண்டும் என்பது குறித்து தங்கள் சொந்த தருக்கவியலான முடிவுகளை எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது , அதனால்தான் AI மீற முடியாத ஒரு அறநெறிக் கட்டமைப்பு இருக்க வேண்டும். மனிதகுலத்தை ரோபோ கையகப்படுத்துவது பற்றிய யோசனைகளை உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு ஆயுதங்களின் பொறியியல் தொடர்பாக அண்மையில் கூக்குரல் எழுந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள் மனிதனால் கட்டுப்படுத்தப்படும் ஆயுதங்களிலிருந்து வேறுபட்ட ஒரு வகையான இடரை முன்வைக்கின்றன. செயற்கை நுண்ணறிவு ஆயுதங்களை உருவாக்குவதற்கான திட்டங்களுக்குப் பல அரசுகள் நிதியளிக்கத் தொடங்கியுள்ளன. முறையே உருசியா, தென் கொரியாவின் ஒத்த அறிவிப்புகளுக்கு இணையாக தன்னாட்சி பறப்பு ஆயுதங்களை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்க கடற்படை அண்மையில் அறிவித்தது. மனிதனால் இயக்கப்படும் ஆயுதங்களை விட செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள் மிகவும் தீகான்வையாக மாறும் சாத்தியம் காரணமாக , சுட்டீவன் ஆக்கிங்கும் மேக்சு தெக்மார்க்கும் செயற்கை நுண்ணறிவுத் ஆயுதங்களைத் தடை செய்வதற்கான " எதிர்கால வாழ்க்கை " கோறல் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டனர்த இருவரும் வெளியிட்ட செய்தியில் செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள் உடனடி கேட்டை ஏற்படுத்துவதாகவும் , எனவே எதிர்காலத்தில் பேரழிவு தரும் விளைவுகளைத் தவிர்க்க நடவடிக்கை தேவை என்றும் கூறுகிறது. " எந்தவொரு பெரிய படைசார் வல்லமையும் செயற்கை நுண்ணறிவு ஆயுத வளர்ச்சியுடன் முன்னேறினால் - ஒரு உலகளாவிய ஆயுதப் போட்டி கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது. இந்த தொழில்நுட்பப் பாதையின் இறுதிப் புள்ளி வெளிப்படையானது - தன்னாட்சி ஆயுதங்கள் நாளைய கலாஷ்னிகோவ் ஆக மாறும் " என்று அந்த விண்ணப்பத்தில் இசுகைப் இணை நிறுவனர் ஜான் தாலினும் எம்ஐடி மொழியியல் பேராசிரியர் நோம் சோம்சுகியும் செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான கூடுதல் ஆதரவாளர்களாக உள்ளனர். இயற்பியலாளரும் வானியலாளருமான ராயல் சர் மார்ட்டின் இரீசு , " ஊமை எந்திரன்கள் முரட்டுத்தனமாக செல்வது அல்லது அதன் சொந்த மனதை உருவாக்கும் ஒரு வலைப்பின்னல் போன்ற பேரழிவு நிகழ்வுகளைக் குறித்து எச்சரித்துள்ளார். கேம்பிரிட்ஜ் இரீசின் இணை ஊழியரான கூ பிரைசும் , செயற்கைநுண்ணறிவு " உயிரியலின் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும்போது " மனிதர்கள் உயிர்வாழ முடியாது என்று எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்த இரண்டு பேராசிரியர்களும் மனித இருப்புக்கான அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நம்பிக்கையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருத்தலியல் இடர் குறித்த ஆய்வுக்கான மையத்தை உருவாக்கினர். மனிதர்களை விட துடியான செயல்பாட்டு அமைப்புகளை படைத்துறையில் போருக்குப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, திறந்த கொடையுதவித் திட்டம், "இந்தச் சூழல்கள், கட்டுப்பாட்டை இழப்பது தொடர்பான இடர்களைப் போலவே, முதன்மையானவையாகத் தோன்றுகின்றன" என எழுதுகிறது. ஆனால் செநுவின் நீண்டகாலச் சமூக தாக்கத்தை ஆராயும் ஆராய்ச்சி இந்த அக்கறை குறித்து ஒப்பீட்டளவில் குறைந்த நேரத்தையே செலவிட்டுள்ளது. " மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் அமைப்புகளான எந்திர நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் (MIRI) மனிதநேயத்தின் எதிர்காலம் (FHI) குறித்த நிறுவனத்துக்கும் இந்த வகைச் சூழல்கள் முதன்மையானவையாக அமையவில்லை என்பது தெளிவாகிறது. மேலும், இச்சூழல்கள் குறித்து மிகவும் குறைவான பகுப்பாய்வும் விவாதமுமே இந்நிறுவனங்களில் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. மழுங்கலான நெறிநிரல்கள் நரம்பியல் வலைப்பின்னல்களுடன் எந்திர கற்றல் போன்ற அணுகுமுறைகளில் கணினிகள் முடிவுகளை எடுப்பதில் ஏற்படுத்தும் விளைவுகளை, அவற்றாலோ அவற்றை நிரல் செய்த மனிதர்களாலோ விளக்க முடியாது. இத்தகைய முடிவுகள் நியாயமானவையா, நம்பகமானவையா என்பதை மக்கள் தீர்மானிப்பதும் கடினம் , இது செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் கண்டறியப்படாமல் பாகுபாடு காட்ட வழிவகுக்கும் அமைப்புகளின் பயன்பாட்டை மக்கள் ஏற்கமாட்டார்கள். இது வாதிடுவதற்கும் சில அதிகார வரம்புகளில் விளக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுக்கான சட்டத் தேவைகளுக்கும் வழிவகுத்துள்ளது. விளக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு நரம்பியல் வலைப்பின்னல் நடத்தையை சுருக்கமாகக் கூறுவது. பயனர் நம்பிக்கையை வளர்ப்பதும் விளக்குவதும் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது , அதே நேரத்தில் விளக்கத்தன்மை என்பது ஒரு படிமம் அல்லது நுட்பம் என்ன செய்துள்ளது அல்லது செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்வது என வரையறுக்கப்படுகிறது. செநு வை கவனக்குறைவாகவோ அல்லது வேண்டுமென்றேயோ தவறாகப் பயன்படுத்துதல் செயற்கை நுண்ணறிவின் விளங்காத தன்மையின் ஒரு சிறப்பு வழக்கு, அது மானுடவியல் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுவதும் , இதன் விளைவாக அதன் அறநெறி நிறுவனம் பற்றிய தவறான கருத்துக்களாலும் ஏற்படுகின்றது. இது மனித க் கவணக் குறைவு அல்லது வேண்டுமென்றேயான குற்றவியல் நடவடிக்கை ஒரு செநு அமைப்பின் வழி உருவாக்கப்பட்ட நெறிமுறையற்ற விளைவுகளுக்கு வழிவகுத்ததா என்பதை மக்கள் கவனிக்காமல் போகக்கூடும். ஐரோப்பிய ஒன்றியத்தின் செநு சட்டம் போன்ற சில அண்மைய டிஜிட்டல் ஆளுகை ஒழுங்குமுறைகள் , சாதாரண தயாரிப்பு பொறுப்பின் கீழ் ஒருவர் எதிர்பார்ப்பது போல் செநு அமைப்புகள் குறைந்த அளவு கவனத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்வதால் இதை சரிசெய்ய அமைக்கப்பட்டுள்ளன. இதில் செநு தணிக்கைகளும் அடங்கும். தன்முனைவுதிறம் பல ஆராய்ச்சியாளர்கள் ஒரு " நுண்ணறிவு வெடிப்பு " மூலம் ஒரு தன மேம்பாட்டு செநு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக மாறக்கூடும் , இதனால் மனிதர்களால் அதன் இலக்குகளை அடைவதைத் தடுக்க முடியாது என்று வாதிட்டனர். " மேம்பட்ட செயற்கை நுண்ணறிவில் அறநெறிச் சிக்கல்கள் " என்ற தனது ஆய்வறிக்கையிலும் , அதைத் தொடர்ந்து வந்த புத்தகமான மீநுண்ணறிவு: வழிமுறைகளும் அச்சுறுத்தல்களும் செயல்நெறிகளும் என்ற புத்தகத்திலும் , மெய்யியலாளர் நிக் போசுட்டிரோம் , செயற்கை நுண்ணறிவு மனித அழிவைக் கொண்டுவரும் திறனைக் கொண்டுள்ளது என்று வாதிடுகிறார். பொது நுண்ணறிவுத் தற்சார்பு முன்முயற்சியும் அதன் சொந்த திட்டங்களை உருவாக்கும் திறனும் கொண்டதாக இருக்கும் என்றும் , எனவே ஒரு தன்னாட்சி முகவராக மிகவும் பொருத்தமாக அதைக் கருதலாம் என்றும் அவர் கூறுகிறார். செயற்கை நுண்ணறிவுகள் நமது மனித ஊக்க போக்குகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை என்பதால் , அதன் மூல உந்துதல்களைக் குறிப்பிடுவது மீ நுண்ணறிவின் வடிவமைப்பாளர்களைப் பொறுத்தது. ஒரு செயற்கை மீநுண்ணறிவு கிட்டத்தட்ட எந்தவொரு சாத்தியமான முடிவையும் கொண்டு வர முடியும்என்பதாலும் அதன் இலக்குகளை செயல்படுத்துவதைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியையும் அதனால் முறியடிக்க முடியும் என்பதாலும் பல கட்டுப்பாடற்ற எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம். இது மற்ற அனைத்து முகவர்களையும் கொல்லலாம். அவர்களின் நடத்தையை மாற்றிக்கொள்ளும்படி அவர்களை வற்புறுத்தலாம் அல்லது தலையிடுவதற்கான அவர்களின் முயற்சிகளைத் தடுக்கலாம். இருப்பினும் , மனித இனத்தை மூழ்கடித்து , நமது அழிவுக்கு வழிவகுப்பதற்குப் பதிலாக , நோய் வறுமை, சுற்றுச்சூழல் அழிவு போன்ற பல கடினமான பிரச்சினைகளைத் தீர்க்கவும் மீநுண்ணறிவு நமக்கு உதவும் என்றும் , நம்மை மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவும் என்றும் போசுட்டிரோம் வலியுறுத்தியுள்ளார். மனித மதிப்பு அமைப்புகளின் சிக்கலானது செநுவின் உந்துதல்களை மனித நட்பாக மாற்ற்வதே. இது மிகவும் கடினமாகிறது. அறநெறிக் கொள்கை ஒன்று நமக்கு ஒரு குறைபாடற்ற நெறிமுறைக் கோட்பாட்டை வழங்காவிட்டால் , ஒரு செநுவின் பயன்பாட்டு செயல்பாடு கொடுக்கப்பட்ட நெறிமுறை கட்டமைப்புடன் ஒத்துப்போகும் பல தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைகளை உருவாக்க முடியும் , ஆனால் " பொதுப்புலன் உணர்வு " . எலியேசர் யுட்கோவ்சுகியின் கூற்றுப்படி , செயற்கை முறையில் வடிவமைக்கப்பட்ட மனம் அத்தகைய தழுவலைக் கொண்டிருக்கும் என்று கருதுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. சுட்டூவர்டு ஜே. இரசல், பில் கிப்பார்டு உரோமன், யாம்போல்சுகி சானான், வல்லோர் சுட்டீவன் அம்பிரெல்லோ, உலூசியானோ புளோரிடி போன்ற செநு ஆராய்ச்சியாளர்கள் நன்மை பயக்கும் எந்திரன்களை உருவாக்குவதற்கான வடிவமைப்பு உத்திகளை முன்மொழிந்துள்ளனர். செநு அறநெறிச் செயல்பாட்டாளர்கள் செயற்கை நுண்ணறிவு அறநெறிகள், கொள்கைகள் வகுப்பதில் பொது, அரசு, பெருநிறுவன , சமூகம் ஆகியவற்றின் அக்கறை மிக்க பல நிறுவனங்கள் நடப்பில் உள்ளன. கூகுள், ஐபிஎம், மைக்ரோசாப்ட் ஆகியவை இலாப நோக்கற்ற நிறுவனமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் சிறந்த நடைமுறைகளை உருவாக்குவதற்கும் , பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவைப் பற்றிய ஒரு தளமாக செயல்படுவதற்கும் மக்கள், சமூகத்திற்கு பயனளிக்கும் செயற்கை நுண்ணறிவின் கூட்டாண்மையை நிறுவியுள்ளன. இதில் ஆப்பிள் ஜனவரி 2017 இல் இணைந்தது. பெருநிறுவன உறுப்பினர்கள் குழுவிற்கு நிதி, ஆராய்ச்சி வளப் பங்களிப்புகளை வழங்குவார்கள் , அதே நேரத்தில் அறிவியல் சமூகத்துடன் இணைந்து கல்வியாளர்களைக் குழுவில் கொண்டு வருவார்கள். தன்னாட்சி, நுண்ணறிவு அமைப்புகளின் அறநெறிகள் குறித்த உலகளாவிய முன்முயற்சியை ஐஇஇஇ ஒன்றாக இணைத்துள்ளது , இது பொது உள்ளீடுகளின் உதவியுடன் வழிகாட்டுதல்களை உருவாக்கி திருத்துகிறது. அதன் அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பல வல்லுனர்களை உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்கிறது. மரபாக , சட்டம், காவல் வழி அறநெறிகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய சமூகங்களால் அரசாங்கம் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய, தேசிய அரசுகளும், நாடுகடந்த அரசும் அரசு சாரா அமைப்புகளும் இப்போது பல முயற்சிகள் மேற்கொள்கின்றன. செநு அறநெறி வேலை தனிப்பட்ட விழுமியங்களாலும் தொழில்முறை கடமைகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. தரவு , நெறிநிரல்வழி சூழல் பொருளை உருவாக்குகிறது. எனவே செயற்கை நுண்ணறிவு நெறிமுறைப் பணிகளுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும். அரசுகளுக்கிடையேயான முன்முயற்சிகள் ஐரோப்பிய ஆணையம் செயற்கை நுண்ணறிவு குறித்த உயர்மட்ட வல்லுனர் குழுவைக் கொண்டுள்ளது. 2019, ஏப்பிரல் 8 அன்று இது அதன் " நம்பகமான செயற்கை நுண்ணறிவுக்கான அறநெறி வழிகாட்டுதல்களை " வெளியிட்டது. ஐரோப்பிய ஆணையத்தில் எந்திரனியல், செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புக்கான சிறப்புப் பிரிவு உள்ளது , இது 2020 பிப்ரவரி 19 அன்று செயற்கை நுண்ணறிவில் சிறந்து விளங்குதலும் நம்பிக்கையும் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. ஐரோப்பிய ஆணையம் செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தையும் முன்மொழிந்தது. OECD ஒரு OECD செநு கொள்கையையும் கண்காணிப்பகத்தையும் நிறுவியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் , செயற்கை நுண்ணறிவின் அறநெறிகள் குறித்த பரிந்துரையை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது - இது செயற்கை நுண்ணறிவுகளின் அறநெறிகள் பற்றிய முதல் உலகளாவிய செந்தரமாகும். அரசு முன்முயற்சிகள் அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகம் செயற்கை நுண்ணறிவு கொள்கைக்கு ஒரு நெடுநோக்கு வரைபடத்தை ஒன்றாக இணைத்தது. ஒபாமா நிர்வாகம் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம், தாக்கம் குறித்த இரண்டு முக்கிய வெள்ளை ஆவணங்களை வெளியிட்டது. 2019 ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகை " அமெரிக்க செநு முன்முயற்சி " என்று அழைக்கப்படும் ஓராள்வியல் குறிப்பு வழி, தேசியச் செந்தரங்கள், தொழில்நுட்ப நிறுவனம்(NIST) செநு செந்தரங்களுக்காக கூட்டாட்சி ஈடுபாட்டில் 2019 பிப்ரவரியில் பணிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தியது. ஜனவரி 2020 இல் அமெரிக்காவில் ட்ரம்ப் மேலாண்மை, பாதீட்டு அலுவலகம் (ஓ. எம். பி.) வெளியிட்ட வரைவு ஆட்சியியல் ஆணையை வெளியிட்டது. இந்த ஆணை செநு பயன்பாடுகளில் முதலீடு செய்வதன் தேவையை வலியுறுத்துகிறது. இது செநு பால் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்தது. செநு பயன்பாட்டிற்கான தடைகளைக் குறைத்தது, மேலும் அமெரிக்கச் செநு தொழில்நுட்பத்தை உலக சந்தையில் போட்டித்தன்மையுடன் வைத்திருக்கச் செய்கிறது. இதில் தனியுரிமைக் கவலைகள் கட்டாயம் என்பதற்கு ஒப்புதல் உள்ளது;, ஆனால், செயலாக்கம் குறித்த கூடுதல் விவரங்கள் இல்லை. இது அமெரிக்கச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் கவனம், முன்னுரிமையாகத் தெரிகிறது. கூட்டாட்சி நிறுவனங்கள் எந்தவொரு மாநிலச் சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் சுற்றில்விட இந்த ஆணையைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன. ஒரு சந்தையில் இவற்றை நிறைவேற்றல் மிகவும் கடினமாக இருக்கும். கணிப்புக் குமுகாயக் கூட்டமைப்பு (சி. சி. சி) 100 பக்கங்களுக்கும் மேற்பட்ட வரைவை அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கான 20 ஆண்டு சமூக நெடுநோக்கு வரைபடம் எனும் தன் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டது பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையம் , செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு, தாக்கங்கள் குறித்து அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்குகிறது. மனிதநேயமற்ற கட்சி நியூ சவுத் வேல்சில் தேர்தலுக்கு போட்டியிடுகிறது , எந்திரன்வகை விலங்குகள், பொதுவாக மனிதநேயமில்லாத நிறுவனங்களுக்கு உரிமைகள் வழங்குதல் பற்றிய கொள்கைகளை உளவுத்துறை கவனிக்கவில்லை. உருசியாவில் , வணிகத்திற்கான செயற்கை நுண்ணறிவின் அறநெறிகளின் முதல் உருசிய " விதிமுறைகள் " 2021 இல் கையெழுத்தானது. இது உருசியக் கூட்டமைப்பின் அரசுக்கான பகுப்பாய்வு மையத்தால் முதன்மை வணிக, கல்வி நிறுவனங்களான செர்பங்க் யாண்டெக்சு உரோசாட்டம் பொருளாதார உயர் பள்ளி, மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனம், ITMO பல்கலைக்கழகம், நானோசெமண்டிக்சு, உரோசுடெலெகாம், சீயான்(CIAN) இன்னும் பிறவற்றால் இயக்கப்பட்டது. கல்விசார் முன்முயற்சிகள் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன , அவை செநு அறநெறிகளில் மையமாக கவனம் செலுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவின் ஆளுகை ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தும் மனிதநேய நிறுவனத்தின் எதிர்காலம். ஜான் தாசுயுலாசு இயக்கிய செநுவில் உள்ள அறநெறிகளுக்கான நிறுவனம் , அதன் முதன்மை குறிக்கோள் பிறவற்றுடன் தொடர்புடைய பயன்பாட்டு அறநெறித் துறைகளுடன் ஒப்பிடுகையில் செநு அறநெறிகளைச் சரியான ஒரு துறையாக ஊக்குவிப்பதாகும். உலூசியானோ புளோரிடியால் இயக்கப்பட்ட ஆக்சுபோர்டு இணைய நிறுவனம் , குறுகிய கால செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பங்களின் அறநெறிகளில் கவனம் செலுத்துகிறது. பெர்லினில் உள்ள கெர்டி பள்ளியில் உள்ள கணினி ஆளுகை மையம் , அறநெறிகள், தொழில்நுட்பம் குறித்த கேள்விகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஜோனா பிரைசனால் இணைந்து நிறுவப்பட்டது. நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உள்ள இக்காலச் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் செயற்கை நுண்ணறிவின் சமூகத் தாக்கங்களை ஆய்வு செய்யும் ஒருராய்ச்சி நிறுவனமாகும். அதன் இடைநிலை ஆராய்ச்சி சார்புநிலை, உள்ளடக்கம், தொழிலாளர், தன்னியக்கமாக்க உரிமைகள், தற்சார்புச் சிக்கல்கள், பாதுகாப்பு, குடிமை உள்கட்டமைப்பு ஆகிய கருப்பொருள்களில் கவனம் செலுத்துகிறது. வளரும் தொழில்நுட்ப அறவியலுக்கான (ஐ. இ. இ. டி.) வேலையின்மையிலும் கொள்கையிலும் செயற்கை நுண்ணறிவின் விளைவுகளை ஆராய்ச்சி செய்கிறது. கிறித்துப் இலாட்ஜ் இயக்கிய முனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவுக்கான அறநெறி நிறுவனம் (ஐ. இ. ஏ. ஐ.) இயக்கம் , வேலைவாய்ப்பு , நலவாழ்வு, நிலைப்பு போன்ற பல்வேறு களங்களில் ஆராய்ச்சியை நடத்துகிறது. ஆர்வர்டு ஜான் ஏ. பால்சன் பொறியியல், பயன்பாட்டு அறிவியல் பள்ளியில் இயற்கை அறிவியலின் இக்கின்சு பேராசிரியரான பார்பரா ஜே. குரோசு, ஆர்வர்டின் கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் உட்பொதிக்கப்பட்ட அறவியல் பாடத்தைத் தொடங்கினார் , இது எதிர்கால தலைமுறை கணினி அறிவியலாளர்களை உலக கண்ணோட்டத்துடன் உருவாக்க முயல்கிறது , இது அவர்களின் தொழில், சமூக தாக்கத்தையுக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்முயற்சிகள் எதிர்கால வாழ்க்கை நிறுவனம் என்ற பன்னாட்டு ஈட்டுதல் நோக்கற்ற அமைப்பு 2017 ஆம் ஆண்டில் அசிலோமரில் " நலந்தரும் செயற்கை நுண்ணறிவு " என்ற தலைப்பில் 5 நாள் மாநாட்டை நடத்தியது , இதன் விளைவாக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியின் எதிர்காலத்திற்கான 23 வழிகாட்டும் கொள்கைகளின் தொகுப்பு உருவாகியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள், சிந்தனைத் தலைவர்களுக்கிடையே பகிரப்பட்ட பார்வை வழி , இந்த மாநாடு செயற்கை நுண்ணறிவு ஆளுகை அதிபர்களுக்கு ஆராய்ச்சி சிக்கல்கல், நெறிமுறைகள், மதிப்புகள், நீண்டகால சிக்கல்களைத் தீர்ப்பதில் செல்வாக்கு மிக்க அடித்தளத்தை அமைத்தது. தனியார் நிறுவனங்கள் நெறிநிரல் நீதிக் குழு(அல்காரிதம் ஜஸ்டிஸ் லீக்) AI இல் கருப்ப்பர் கருப்பர் வாழ்க்கைகளின் தரவு AI இல் வியன்முரண்(குயர்) புனைகதையின் பங்கும் தாக்கமும் அறநெறிகள் தொடர்பான செயற்கை நுண்ணறிவு புனைகதைகளின் பங்கு சிக்கலான ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு, எந்திரனியல் வளர்ச்சியில் புனைகதை ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்திய மூன்று மட்டங்களை ஒருவர் வேறுபடுத்தி அறியலாம்: வரலாற்று வழியாக, புனைகதை செயற்கை நுண்ணறிவுக்கான இலக்குகளிலும் தரிசனங்களிலும் செல்வாக்கு செலுத்தியது மட்டுமல்லாமல், அறநெறி கேள்விகள் அதனுடன் தொடர்புடைய பொதுவான அச்சங்களைக் கோடிட்டுக் காட்டியது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி , இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், பரவிய பண்பாடு, குறிப்பாக திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், கானொலி விளையாட்டுகள்,செயற்கை நுண்ணறிவு, எந்திரனியல் தொடர்பான அறநெறிக் கேள்விகளைப் பற்றிய நாட்டமும் அச்சநிலைக் கணிப்புகளும் அடிக்கடி எதிரொலித்தன. அண்மையில், இந்த கருப்பொருள்கள் அறிவியல் புனைகதைகளின் எல்லைக்கு அப்பால் இலக்கியத்திலும் பேரளவில் கையாளப்படுகின்றன. மேலும், கேடலோனியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் எந்திரனியல், தொழிலக் கணிப்பியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி பேராசிரியரான கார் மே தோராசு குறிப்பிடுவது போல், உயர் கல்வியில், அறிவியல் புனைகதைகள் தொழில்நுட்பம் தொடர்பான கற்பித்தலில் தொழில்நுட்பப் பட்டங்களில் அறநெறிச் சிக்கல்கள்.கூடுதலாகப் பயன்படுத்தப்படுகின்றன. வரலாறு. வரலாற்று வழியாகச் சொல்வதென்றால் , சிந்திக்கும் எந்திரங்களின் அறநெறித் தாக்கங்கள் பற்றிய உசாவல் குறைந்தது அறிவொளி காலத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறது. லீப்னிட்சு ஏற்கனவே நுண்ணறிவை ஒரு உணர்ச்சிமிக்க தனியரைப் போல செயல்படும் ஒரு பொறிமுறையுடன் நாம் தொடர்புபடுத்த முடியுமா என்ற கேள்வியை முன்வைத்தார் , அதேபோல் தூரிங் செய்முறையின் தொடக்கநிலையைத் தெ கார்த்தே விவரிக்கிறார். வியன்புனைவுக் காலம் பலமுறை செயற்கை உயிரினங்களைக் கற்பனை செய்துள்ளது , அவை அவற்றின் படைப்பாளரின் கட்டுப்பாட்டில் இருந்து கடுமையான விளைவுகளுடன் தப்பிக்கின்றன - மிகவும் செல்வாக்குள்ள மேரி செல்லியின் பிராங்கன்சுட்டைனில். 19ஆம், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொழில்மயமாக்கல், எந்திரமயமாக்கலில் பரவலான ஈடுபாடு இருந்ததால் , தொழில்நுட்ப வளர்ச்சிகளின் அறநெறித் தாக்கங்கள் கற்பனையின் முன்னணியில் கொண்டு வரப்பட்டன. உரோசுமின் பன்முகப்பொது எந்திரன்கள், காரல் குபெக்கின் உணர்ச்சியும் அடிமை உழைப்பும் செய்யும் எந்திரனின்( ரோபோ எனும் ஆங்கிலச் சொல் கட்டாய உழைப்புக்கான செக்மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது) விளையாட்டு அகியற்றைக் கூறலாம். ஆனால் இவை 1921 இல் திரையிடப்பட்ட பின்னர் அது ஒரு பன்னாட்டு வெற்றியாகவும் மாறியது. 1921 இல் வெளியிடப்பட்ட ஜார்ஜ் பெர்னார்டுசாவின் நாடகம் முன்வைத்த மெத்துசெலாவுக்கு மீளுதல் ஒரு கட்டத்தில் மனிதர்களைப் போல செயல்படும் சிந்தனை எந்திரங்களின் செல்லுபடியாகும் கேள்விகளும், பிரிட்சு லாங்கின் 1927 ஆம் ஆண்டு திரைப்படமான மெட்ரோபோலிசு ஒரு தொழில்நுட்ப சமூகத்தின் ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராக சுரண்டப்பட்ட மக்கள்திரளின் எழுச்சியை வழிநடத்தும் ஓர் ஆந்திராய்டுமமதிர்வலைகளைச் சமூகத்தில் ஏற்படுத்தின. தொழில்நுட்ப வளர்ச்சி மீதான தாக்கம் வெல்லமுடியாத தொழில்நுட்பத்தால் ஆதிக்கம் செலுத்தக்கூடிய எதிர்காலத்தின் எதிர்பார்ப்பு எழுத்தாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்களின் கற்பனையை நீண்ட காலமாக தூண்டியிருந்தாலும் , ஒரு கேள்வி அடிக்கடி பகுப்பாய்வு செய்யப்படவில்லை. அதாவது தொழில்நுட்ப வளர்ச்சிக்கடூந்துதல் அளிப்பதில் புனைகதை எந்த அளவிற்கு பங்கு வகித்துள்ளது. உதாரணமாக , இளம் ஆலன் தூரிங் 1933 ஆம் ஆண்டில் மேற்கூறிய இழ்சாவின் நாடகத்தை பார்த்ததாகவும் , பாராட்டியதாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இலக்கவியல் கணினிக்கான அடித்தளத்தை அமைத்த அவரது முதல் ஆரம்ப கட்டுரை வெளியிடப்படுவதற்குக் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு முன்பே, அவர் இதை அறிந்திருப்பார் ஆர். யு. ஆர். போன்ற நாடகங்கள் இது ஒரு பன்னாட்டு வெற்றியாக இருந்ததோடு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் கோட்பாடுகள் அறநெறித் தாக்கங்களை நிறுவுவதில் அறிவியல் புனைகதை எந்த பங்கு வகித்தது என்ற கேள்வியையும் ஒருவர் கேட்கலாம். ஐசக் அசிமோவ் 1942 ஆம் ஆண்டு சிறுகதை தொகுப்பின் ஒரு பகுதியான ரோபோ ஆர்தர் சி. கிளார்க்கின் சிறுகதையான தி சென்டினெல் என்ற சிறுகதையில் எந்திரனியலின் மூன்று விதிகளை கருத்தியலாக உருவகம் செய்தார். இது சுட்டான்லி குப்ரிக்கின் 2001 ஆண்டைய: ஓர் விண்வெளி ஒடிசி திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது , இது 1948 இல் எழுதப்பட்டு 1952 இல் வெளியிடப்பட்டது. மற்றொரு எடுத்துகாட்டு பிலிப் கே. திக்கின் ஏராளமான சிறுகதைகளும் புதினங்களும் ஆகும். குறிப்பாக, மின் ஆடு பற்றிய எந்திரன் கனவு 1968 இல் வெளியிடப்பட்டது. மனிதர்களிடமிருந்து பிரித்தறிய முடியாத எந்திரன்களின்களின் உணர்ச்சிகரத் துலங்கல்களை அளவிட தூரிங் செய்முறை, வெற்றிடத்தை ஆய்வுசெய், கள ஆய்வின் சொந்தப் பதிப்பைக் கொண்டுள்ளது. இந்தப் பின்னர் இரிட்லி சுக்காட்டு இயக்கிய 1982 ஆம் ஆண்டின் செல்வாக்குமிக்க திரைப்படமான பிளேட் ரன்னரின் அடிப்படையாக மாறியது. அறிவியல் புனைகதை பல பத்தாண்டுகளாக செயற்கை நுண்ணறிவு முன்னேற்றங்களின் அறநெறித் தாக்கங்களுடன் போராடி வருகிறது , இதனால் பொது செயற்கை நுண்ணறிவுக்கு ஒத்த ஒன்றை அடைந்தவுடன் வெளிவரக்கூடிய அறநெறிச் சிக்கல்களுக்கான ஒரு வரைபடத்தை வழங்கியது. ஸ்பைக் ஜான்சின் 2013 திரைப்படம் ஒரு பயனர் தனது துடிப்பான அலைபேசியின் இயக்க முறைமையின் கவர்ச்சியான குரலைக் காதலித்தால் என்ன நடக்கும் என்பதைக் காட்டுகிறது. எக்சு மெசினா திரைப்படம் மறுபுறம் மிகவும் கடினமான கேள்வியைக் கேட்கிறது. ஒரு முகம், ஒரு கழிவிரக்க, சிற்றின்ப குரலால் மனிதனைப் போலவே உருவாக்கிய ஒரு தெளிவாக அடையாளம் காணக்கூடிய எந்திரனை எதிர்கொண்டால் , நாம் இன்னும் ஒரு உணர்ச்சிகரமான தொடர்பை ஏற்படுத்த முடியுமா ? என்ற கேள்வியை எழுப்புகிறது. (இ. டி. ஏ. காப்மேன் எழுதிய 1817 ஆம் ஆண்டு சிறுகதையான தி செண்ட்மன் திரைப்படம் ஏற்கனவே இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட ஒரு கருப்பொருளை எதிரொலிக்கிறது.) செயற்கை உணர்வுள்ள உயிரினங்களுடன் இணைவாழ்வுக் கருப்பொருளும் அண்மைய இரண்டு புதினங்களின் கருப்பொருளாகும். இயன் மெக்ஈவான் எழுதிய என்னைப் போன்ற எந்திரங்கள் 2019 இல் வெளியிடப்பட்டது , இதில் பல தகவல்களுடன் ஒரு செயற்கை தனியர் ஒரு மனித இணையரை உள்ளடக்கிய காதல் - முக்கோணம் அமைகிறது. 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நோபல் பரிசு வென்ற கசுவோ இழ்சிகுரோவின் கிளாரா அண்ட் தி சன் என்பது கிளாரா அன் ' ஏ. எஃப் ' (செயற்கை நண்பர்) இன் முதல் நபர் கணக்கு , அவர் மரபனியலாக ' உயர்த்தப்பட்ட ' பிறகு (அதாவது மரபனியல் மேம்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு) உடன் வாழும் பெண்ணுக்கு உதவ தனது சொந்த வழியில் முயல்கிறார். தொலைக்காட்சி தொடர் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய அறநெறி கேள்விகள் பல பத்தாண்டுகளாக அறிவியல் புனைகதை இலக்கியத்திலும் திரைப்படங்களிலும் இடம்பெற்றிருந்தாலும் , மிகநீண்ட, மிகவும் சிக்கலான கதை வரிகளும் கதைமாந்தர் வளர்ச்சியை விவரிக்கும் ஒரு வகையாக தொலைக்காட்சி தொடரின் தோற்றம் தொழில்நுட்பத்தின் அறநெறித் தாக்கங்களைக் கையாளும் சில குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு வழிவகுத்தது. சுவீடியத் தொடரான இயல் மாந்தர் (2012 - 2013) சமூகத்தில் செயற்கை உணர்வுள்ள உயிரினங்களின் ஒருங்கிணைப்புடன் தொடர்புடைய சிக்கலான அறநெறி, சமூக விளைவுகளைக் கையாண்டது. பிரித்தனிய அச்சந்தரும் அறிவியல் புனைகதை தொகுப்பு தொடர் பிளாக் மிர்ரர் (2013 - 2019) பல்வேறு வகையான அண்மையத் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணைக்கப்பட்ட அச்சந்தரும் கற்பனையான முன்னேற்றங்களை ஆய்வுசெய்ததில் குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சுத் தொடரான <i id="mwAs8">ஓசுமோசிசு</i> (2020), பிரித்தானியத் தொடரான தி ஒன் ஆகிய இரண்டும் தொழில்நுட்பம் <i id="mwAtE">ஒரு</i> தனியருக்கு சிறந்த கூட்டாளரைக் கண்டுபிடிக்க முயற்சித்தால் என்ன நடக்கும் என்ற கேள்வியைக் கையாள்கின்றன. நெட்பிக்சு தொடரான காதல்+ சாவு எந்திரன்களின் பல அத்தியாயங்கள் எந்திரன்களும் மனிதர்களும் இணைந்து ஒன்றாக வாழும் காட்சிகளை கற்பனை செய்துள்ளன. அவற்றில் மிகவும் முழுமைமிக்க ஒன்று S02 E01 ஆகும் , இது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்திரன்களை அதிகமாக நம்பியிருந்தால் எந்திரன்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும்போது ஏற்படும் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது. புனைகதையிலும் விளையாட்டுகளிலும் எதிர்காலக் கண்ணோட்டங்கள் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக கணினி கேம் கன்சோல்களால் உணர்ச்சிவசப்பட்ட மக்களுடன் உருவகப்படுத்தப்பட்ட உலகங்கள் உருவாக்கப்படும் எதிர்காலத்தை பதின்மூன்றாவது மாடி திரைப்படம் முன்வைக்கிறது. தி மேட்ரிக்ஸ் திரைப்படம் புவியில் ஆளுகை செலுத்தும் உயிரினங்கள் உணர்ச்சி எந்திரங்களாக இருக்கும் எதிர்காலத்தை விளக்குகிறது. மேலும் இதில் மனிதகுலம் மிகுந்த இனவாதத்துடன் நடத்தப்படுகிறது. சிறுகதை " தி பிளாங்க் டைவ் " மனிதகுலம் தன்னைத் தானே மென்பொருளாக மாற்றிக் கொண்ட ஓர் எதிர்காலத்தை முன்வைக்கிறது. இது நகலெடுக்கப்பட்டு உகந்ததாக்க முடிவதாக இருக்கும். மேலும் மென்பொருள் வகைகளுக்கு இடையிலான பொருத்தமான வேறுபாடு உணர்திறன் உள்ளதும் உணர்திறன் இல்லாததுமாகப் பகுக்கப்படுகிறது. இதே கருத்தை விண்கல்ப் பயண நெர்க்கடி மருத்துவ பருவரைவில் காணலாம் , இது அதன் படைப்பாளரான டாக்டர் சிம்மர்மனின் நனவில் குறைக்கப்பட்ட துணைக்குழுவின் வெளிப்படையான உணர்திறன் படி ஆகும் , அவர் சிறந்த நோக்கங்களுக்காக நெருக்கடி காலங்களில் மருத்துவ உதவி வழங்குவதற்கான அமைப்பை உருவாக்கியுள்ளார். இருநூற்றாண்டு மனிதன், இன்னும்பிற செயற்கை நுண்ணறிவுத். திரைப்படங்கள் விரும்பக்க்கூடிய உணர்ச்சிமிக்க எந்திரன்களின் சாத்தியக்கூறுகளைக் கையாள்கின்றன. மேலும், இது அசிமோவின் மூன்று எந்திரன் விதிகளின் சில கூறுபாடுகளை ஆராய்ந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் உணர்திறன் கொண்ட கணினிகளை உருவாக்குவதன் அறநெறியற்ற விளைவுகளை முன்கூட்டியே கணிக்க முயல்கின்றன. உயிரியல் நிரலைச் சேர்ந்த மக்கள்திரள் விளைவு தொடர் விளையாட்டுகளில் செயற்கை நுண்ணறிவின் அறநெறிகள் பல முதன்மைக் கருப்பொருள்களில் ஒன்றாகும். உலகளாவிய நரம்பியல் வலைப்பின்னல்வழி கணக்கீட்டுத் திறனை விரைவாக கூட்டுவதன் வழியாக தற்செயலாக செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் ஒரு நாகரிகத்தின் காட்சியை இது ஆராய்கிறது. இந்த நிகழ்வு புதிதாக உணர்த்தப்பட்ட கெத் மீது கரிம உரிமைகளை வழங்குவது பொருத்தமானது என்று உணர்ந்தவர்களுக்கும் , அவற்றை செலவழிப்பு எந்திரங்களாக தொடர்ந்து பார்த்து அவற்றை அழிக்க போராடியவர்களுக்கும் இடையே ஓர் அறநெறிப் பிளவை ஏற்படுத்தியது. தொடக்கநிலை மோதலுக்கு அப்பால் - எந்திரங்களுக்கும் அவற்றின் படைப்பாளர்களுக்கும் இடையிலான உறவின் சிக்கலானது கதை முழுவதும் தொடர்ந்து நடைபெறும் மற்றொரு கருப்பொருளாக மாறுகிறது. டெட்ராய்டு மனிதனாக மாறுங்கள் என்பது அண்மையில் செயற்கை நுண்ணறிவின் அறநெறிகளைப் பற்றி விவாதிக்கும் மிகவும் பரவலான காணொலி விளயாட்டாகும். குவாண்டிக் ட்ரீம் நிறுவனம் விளையாட்டாளர்களுக்கு மிகவும் ஆழமான ஆட்டப் பட்டரிவை வழங்க ஊடாடும் கதைக்களங்களைப் பயன்படுத்தி விளையாட்டின் அத்தியாயங்களை வடிவமைத்தது. பயோனிக் குழுவின் மனிதப் பார்வையை மாற்றும் நோக்கத்தை அடைய வெவ்வேறு தேர்வுகளை செய்ய வெவ்வேறு நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மூன்று வெவ்வேறு விழித்தெழுந்த உயிரனியல் தனியர்களை வீரர்கள் கையாளுகிறார்கள் , மேலும் வெவ்வேறு தேர்வுகள் வெவ்வேறு முடிவுகளுக்கு வழிவகுக்கும். உண்மையான செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்டவுடன் எந்திரன்களின் உரிமைகளும் நலன்களும் நன்கு கருத்தில் கொள்ள இசைவுதரும் உயிரனியல் கண்ணோட்டத்தில் வீரர்களை வைக்கும் சில விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். காலப்போக்கில் விவாதங்கள் கியூகோ தெ காரிசு கெவின் வார்விக் ஆகியோரால் தொடங்கப்பட்ட " காஸ்மிஸ்டா " , " டெரான் " விவாதங்களில் வலியுறுத்தப்பட்டபடி , சாத்தியக்கூறுகளிலும் விரும்பத்தக்க தன்மையிலும் குறைவாகவே கவனம் செலுத்துகின்றன. கியூகோ தெ காரிசு கூற்றுப்படி, ஓர் அண்டவியலாளர் உண்மையில் மனித இனங்களை விட அதிக நுண்னறிவு மிக்க வாரிசுகளை உருவாக்க முயல்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் , செயற்கை நுண்ணறிவு என்பது புனைகதை, புனைகதை அல்லாதவற்றில் அதன் இடர்கள், நன்மைகள் பற்றிய உணர்வுகளைச் சிதைக்கும் வழிகளில் இனப்பாகுபாட்டுடன் வெள்ளை நிறமாக சித்தரிக்கப்படுகிறது என்று வாதிட்டனர். மேலும் காண்க குறிப்புகள் அறவியல் மெய்யியல் தொழினுட்பம்
593755
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
புனைகதை உருவாக்க உணர்வு
உருவாக்க உணர்வு (Simulated consciousness) அல்லது செயற்கை நனவு (synthetic consciousness) போன்றவை அறிவியல் புனைகதைகளில் பல படைப்புகளின் கருப்பொருளாகும். இதன் கருப்பொருள் " ஒரு வாதில் மூளை " என்ற கருத்தாக்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு படிமமாகும் , இதில் உணரப்பட்ட வெறும் நிலவல் மட்டுமல்ல , மூளையும் அதன் நனவும் உருவகப்படுத்தப்படுகின்றன.. சுட்டானிசுலா இலெமின் பேராசிரியர் கோர்கொரான் (1961 இல் இலெம் வெளியிட்ட அவரது விண்மீன்களுக்கு இடையேயான பயணத்தின் போது ஐஜோன் டிச்சியைச் சந்தித்தார்) உருவகப்படுத்தப்பட்ட நனவான முகவர்கள் (உண்மையில் யதார்த்தத்தின் உருவகப்படுத்துதல் கருதுகோளின் நம்பகத்தன்மையை சோதிக்க நபர்கள்) அதாவது சொலிசிசம் பற்றிய யோசனை. 1954 ஆம் ஆண்டு கதையான பிரடெரிக் போல் எழுதிய உலகத்தின் அடியில் ஒரு நிலவறை (தி டன்னல் அண்டர் தி வேர்ல்ட்) விளம்பர பரப்புரைகளின் செயல்திறனை ஓர்தலுக்காக ஒரு முழு நகரமும் உருவகப்படுத்தப்பட்டது மற்றும் ஒவ்வொரு நாளும் ஜூன் 15 என்று ஒருவர் திடீரென்று கவனிக்கும் கட்டத்தில் இருந்து சதி உருவாகிறது. போல் சிந்தனை விரிவாக தானியல் எப். கலோயின் கள்ள உலகச் சந்தை(சிமுலாக்ரான் - 3 (1964)) புதினத்தில் விளக்கப்பட்டது இது சந்தை ஆராய்ச்சி நோக்கங்களுக்காக கணினி உருவகப்படுத்துதலாக உருவாக்கப்பட்ட ஒரு மெய்நிகர் நகரத்தின் கதையைச் சொல்கிறது. இந்த நகரத்தில் உருவகப்படுத்தப்பட்ட குடியிருப்பாளர்கள் செயற்கை நனவைக் கொண்டுள்ளனர் - குடியிருப்பாளர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் அவர்களின் உலகின் உண்மையான தன்மை தெரியாது. மேலும் , கிரெக் ஈகனின் பல்வேறு புதினங்கள்கள் , அதாவது சேர்மான நகரம்(பெர்முடேஷன் சிட்டி) (1994), புலம்பெயர்ந்தவர்(டயஸ்போரா) (1997) ,சுசைல்டுவின் ஏணி(}சுசைல்ட்சின் லேடர்) (2002) ஆகியவை உருவகப்படுத்தப்பட்ட நனவு குறித்த கருத்தை ஆராய்கின்றன. மேலும் காண்க செயற்கை உணர்வு மேற்கோள்கள் நனவு அறிவியல் செயற்கை நுண்ணறிவு